Our Blog

எங்கள் வலைப்பதிவில்

Salvation come to this house - இன்று இந்த வீட்டிற்க்கு இரட்சிப்பு

Posted on September 29, 2016 18:48:30

INTO A NEW DAY - DAILY DEVOTION - GRACE TABERNACLE APOSTOLIC CHURCH, SCARBOROUGH, ONTARIO, CANADA 

சகேயு என்னும் ஒரு மனிதன், அவனுடைய வாழ்க்கை முறையினால், சமுதாயத்தினால் ஏற்றுக்கொள்ளப்படாதவனாயிருந்தான். ஒரு நாள் இயேசு அவ்வழியாய் வருகின்றார் என்று அவன் கேள்விப்பட்டு, அவரை பார்க்க ஆசைப்பட்டு, குள்ளனாக இருந்தபடியால், ஒரு மரத்தில் ஏறிக்கொண்டான். 


God Protects me - என்னைக் காக்கும் கர்த்தர்

Posted on September 29, 2016 18:45:52

INTO A NEW DAY - DAILY DEVOTION - GRACE TABERNACLE APOSTOLIC CHURCH, SCARBOROUGH, ONTARIO, CANADA 

விசுவாசத்தை விட்டு வழுவாதபடி ஆபிரகாமை தேவன் நடத்தினார். முற்பிதாக்கள் எல்லோருக்கும் ஒரே ஞானபோஜனத்தையும், ஞானபானத்தையும் கொடுத்து வனாந்தரத்திலே  இஸ்ரவேல் ஜனங்களை காத்துக்கொண்டார். ஆனாலும் அவர்களோ தேவனுடைய வழிகளை அறிய மனதில்லாதிருந்தவர்களாய் இருந்ததினால் அநேகரிடத்தில் கர்த்தர் பிரியமாய் இருக்கவில்லை. அவர்கள் வனாந்தரத்திலே அழிந்து போனார்கள்.


இன்று இந்த வீட்டிற்க்கு இரட்சிப்பு

Posted on May 01, 2016 01:27:33

INTO A NEW DAY - DAILY DEVOTION - GRACE TABERNACLE APOSTOLIC CHURCH, SCARBOROUGH, ONTARIO, CANADA 

வாசகம்: லூக்கா 9:1-10, சங்கீதம் 145:18

சகேயு என்னும் ஒரு மனிதன், அவனுடைய வாழ்க்கை முறையினால், சமுதாயத்தினால் ஏற்றுக்கொள்ளப்படாதவனாயிருந்தான். ஒரு நாள் இயேசு அவ்வழியாய் வருகின்றார் என்று அவன் கேள்விப்பட்டு, அவரை பார்க்க ஆசைப்பட்டு, குள்ளனாக இருந்தபடியால்,  ஒரு மரத்தில் ஏறிக்கொண்டான். இயேசு கிட்டே வந்து  சகேயுவே இறங்கி வா நான் உன் வீட்டில் தங்க வேண்டும் என்று சொன்னார். அதைக் கண்ட யாவரும்: இவர் பாவியான மனுஷனிடத்தில் தங்கும்படி போனார் என்று முறுமுறுத்தார்கள்.


என் வாழ்வின் ஆனந்தம்

Posted on May 01, 2016 01:22:09

INTO A NEW DAY - DAILY DEVOTION - GRACE TABERNACLE APOSTOLIC CHURCH, SCARBOROUGH, ONTARIO, CANADA    

வாசகம்: ரோமர் 1:17

“விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறபடி விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்தச் சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது”


நன்றியறிதலுள்ளவர்களாக...

Posted on May 01, 2016 01:20:52

INTO A NEW DAY - DAILY DEVOTION - GRACE TABERNACLE APOSTOLIC CHURCH, SCARBOROUGH, ONTARIO, CANADA   

வாசகம்: சங்கீதம் 103:1-13,  1 நாளாகமம்16:34

செங்கடலை தேவன் பிளந்து இஸ்ரவேலருக்கு இரட்சிப்பைப் கொடுத்த போது, அவர்கள் கெம்பீரித்து பாடினார்கள். நாளடைவில் அதைவிட ஒரு சின்ன பிரச்சனை வந்த போது, தேவன் செய்த நன்மையை மறந்து, முறுமுறுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.


என் தேவனே என் பெலன்

Posted on May 01, 2016 01:19:35

 INTO A NEW DAY - DAILY DEVOTION - GRACE TABERNACLE APOSTOLIC CHURCH, SCARBOROUGH, ONTARIO, CANADA

 வாசகம்: மீகா 7:7

“நானோவென்றால் கர்த்தரை நோக்கிக்கொண்டு, என் இரட்சிப்பின் தேவனுக்குக் காத்திருப்பேன்; என் தேவன் என்னைக் கேட்டருளுவார்.”


பொறுமையோடு ஓடக்கடவோம்

Posted on May 01, 2016 01:17:50

INTO A NEW DAY - DAILY DEVOTION - GRACE TABERNACLE APOSTOLIC CHURCH, SCARBOROUGH, ONTARIO, CANADA

வாசகம்: 2 பேதுரு 3:3-14  2 தீமோத் 4:7-8

கடைசிநாட்களில் பரியாசக்காரர் வந்து, தங்கள் சுயஇச்சைக ளின்படியே நடந்து, இயேசு வருவார் என்று சொல்லுகிற வாக் குத்தத்தம் எங்கே? பிதாக்கள் நித்திரையடைந்தபின்பு சகலமும் சிருஷ்டிப்பின் தோற்றமுதல் இருந்தவிதமாயிருக்கிறதே என்று சொல்லுவார்கள். இந்தப் பரிகாசக்காரரை கண்டு எவ்வளவேனும் மனம் தளர்ந்து போகாதிருங்கள்.


நீரே என்னை கட்டுகிறீர்

Posted on April 26, 2016 01:25:03

INTO A NEW DAY - DAILY DEVOTION, GRACE TABERNACLE APOSTOLIC CHURCH, SCARBOROUGH, ONTARIO, CANADA        

வாசகம்: மீகா 7:8

“என் சத்துருவே, எனக்கு விரோதமாய்ச் சந்தோஷப்படாதே நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன்; நான் இருளிலே உட்கார்ந்தால் கர்த்தர் எனக்கு வெளிச்சமாயிருப்பார்.”

கர்த்தர் எங்கள் கிரியைகளை அறிந்திருக்கிறார். அவருடைய கண்கள் பூமியை நோக்கிப் பார்க்கின்றது. அவருக்கு மறைவானது ஒன்றுமில்லை. கர்த்தர் தன்னுடைய பிள்ளைகளை அறிந்தவர். தன்னுடைய பிள்ளைகள் இயேசுவின் பரிசுத்த இரத்தத்தினால் கழுவப்பட்டு, வெண் வஸ்திரம் தரித்து, தன்னோடு நடக்கும்படி விரும்புகிறார். சத்துருவானவன் எங்கள் நீதியின் வஸ்திரத்தை அசுசிப்படுத்தும்படி எங்களுக்கு விரோதமாயிருக்கிறான்.


நற்கிரியைகளின் பலன்

Posted on April 26, 2016 01:23:16

INTO A NEW DAY - DAILY DEVOTION - GRACE TABERNACLE APOSTOLIC CHURCH, SCARBOROUGH, ONTARIO, CANADA

வாசகம்: வெளி 22:12, ஏசா 43:2, 1 கொரி 10:13, ரோமர் 2:6-7,

 உபத்திரவத்தின் மேல் உபத்திரவம், எப்பக்கமும் நெருக்கப்பட்டிருக் கின்றேன், நடுக்கடலில் கொந்தளிக்கும் அலைகள் நடுவே விடப்பட்ட கப்பலைப் போல என் வாழ்க்கiயின் சூழ்நிலை இருக்கின்றது என சிலர் சொல்லிக் கொள்ளுவார்கள். இவ்வனுபத்தை யாவரும் சில கட்டங்களில் கடக்க நேரிடுகின்றது.


மனப்பாரங்களிலிருந்து விடுதலை

Posted on April 26, 2016 01:21:10

INTO A NEW DAY - DAILY DEVOTION - GRACE TABERNACLE APOSTOLIC CHURCH, SCARBOROUGH, ONTARIO, CANADA

வாசகம்: மத்தேயு 8:25

“அப்பொழுது, அவருடைய சீஷர்கள் வந்து அவரை எழுப்பி: ஆண்டவரே! எங்களை இரட்சியும், மடிந்துபோகிறோம் என்றார்கள்.”

சிருஷ்டிகரோடு இருந்தவர்களே பயந்து நடுங்கினார்கள். காரணம், அற்பவிசுவாசம். அவர்களிடத்தில் பூரண விசுவாசம் காணப்படவில்லை. அமிழ்ந்து போகிறோம் கர்த்தாவே, எனது வாழ்க்கையில் மட்டுமே புயல், எனக்கு மட்டுமே கடன், நோய், தனிமை, நோவு, வழி தெரியவில்லையே என அங்கலாய்க்கிறோம்.


ஒரு நன்மையும் குறைவுபடாது

Posted on April 23, 2016 15:56:33

INTO A NEW DAY - DAILY DEVOTION - GRACE TABERNACLE APOSTOLIC CHURCH, SCARBOROUGH, ONTARIO, CANADA

வாசகம்: சங்கீதம் 37: 7-11 பிலிப்பியர் 4:19

தாவீது என்னும் ராஜா பல இக்கட்டிற்கூடாக கடந்து சென்ற போதிலும், தேவனுடைய சமூகத்திலே நிறைவான மகிழ்ச்சியை கண்டடைந்தார். சோதனை வந்த போதும் அவர் உள்ளத்தில் இருந்த அமைதியை யாரும் மேற்கொள்ள முடியவில்லை. ஈற்றிலே தேவன் எல்லாவற்றிலுமிருந்து அவருக்கு வெற்றியை கொடுத்தார்.


தேவனைத் தொழுதுகொள்வோம்

Posted on April 23, 2016 15:54:01

INTO A NEW DAY - DAILY DEVOTION - GRACE TABERNACLE APOSTOLIC CHURCH, SCARBOROUGH, ONTARIO, CANADA

வாசகம்: யோவான் 4:24, 1 கொரிந்தியர் 2:9-11

“தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.”

பொல்லாதவர்களாக இருந்த எங்களுக்கு பரமபிதா பரிசுத்த ஆவியானவரைத் தந்திருக்கிறார்.


View Older →