God Protects me - என்னைக் காக்கும் கர்த்தர்

Posted on September 29, 2016 18:45:52

INTO A NEW DAY - DAILY DEVOTION - GRACE TABERNACLE APOSTOLIC CHURCH, SCARBOROUGH, ONTARIO, CANADA 

எங்களுக்குரிய ஆகாரங்களை எங்களுக்கு தாரும் என பரம பிதாவிடம் கேட்கும்படி கர்த்தர் கற்பித்தார்.

விசுவாசத்தை விட்டு வழுவாதபடி ஆபிரகாமை தேவன் நடத்தினார். முற்பிதாக்கள் எல்லோருக்கும் ஒரே ஞானபோஜனத்தையும், ஞானபானத்தையும் கொடுத்து வனாந்தரத்திலே  இஸ்ரவேல் ஜனங்களை காத்துக்கொண்டார். ஆனாலும் அவர்களோ தேவனுடைய வழிகளை அறிய மனதில்லாதிருந்தவர்களாய் இருந்ததினால் அநேகரிடத்தில் கர்த்தர் பிரியமாய் இருக்கவில்லை. அவர்கள் வனாந்தரத்திலே அழிந்து போனார்கள்.

பிதாவாகிய தேவனை  நோக்கி பார்க்கிற எங்களையோ அவர் தமது குமாரனாகிய இயேசுவின் ஜீவனைத் தந்து காக்கிறவராயிருக்கிறார். அவருடைய பலத்த கரத்திற்குள் அடங்கியிருப்போம். அவருக்கே துதிகன மகிமையைச் செலுத்துவோம். உலகமானது எல்லா வழிகளிலும் எங்களை நெருக்குகிறது. கர்த்தரை நோக்கி பார்க்கிற எங்களுக்கு அவர் மகா பெலனும் மகா கேடகமுமாயிருந்து எங்கள் தலைகளை உயர்த்துகிறவருமாயிருக்கிறார். அல்லேலூயா!