தியானம் (தை 20, 2026)
நற்கிரியைகளை உங்களில் ஆரம்பித்தவர்....
பிலிப்பியர் 1:5
உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று நம்பி,
தேவ ஊழியராகிய பவுல், பிலிப்பி பட்டணத்திலுள்ள விசுவாசிகளுக்கு எழுதும் போது: 'தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும்படி இயே சுகிறிஸ்துவினால் வருகிற நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாகி, நீங் கள் கிறிஸ்துவின் நாளுக்கென்று துப்புரவானவர்களும் இடறலற்ற வர்களுமாயிருக்கவும் வேண்டுதல் செய்கிறேன் என்று கூறியருப்பதை பிலிப்பியர் 1ம் அதிகாரத்திலே காண லாம். இதுவே நம்முடைய வாழ்வின் முதன்மையான இலக்காக காணப் பட வேண்டும். அவர்கள் கிருபையி னால் விசுவாசத்தைக் கொண்டு இர ட்சிக்கப்பட்டது சத்தியம். அதில் எந்த மாறுதலும் இல்லை. இப்பொழுது தேவகிருபையினாலே, நற்கிரியைகள் நடத்தப்பட வேண்டும். அவை வெளியரங்கமாக நடத்தப்படும் தானதர்மங்கள் மட்டுமல்ல, இருதயத் திலே சுத்தமுள்ளவர்களாகவும், இடறலற்றவர்களுமாக காணப்பட வேண் டும். நம் வாழ்வின் வழியாக தேவனுடைய நாமம் உடன் சகோதர்கள், அயல வர்கள், சொந்தக்கள், நண்பர்கள், சக வேலையாட்கள், சக மாணவ ர்கள் மத்தியிலே மகிமைப்படும்படி, ஆண்டவர் இயேசுவினால் வருகி ன்ற நீதியின் கனிகளால் நாம் நிறைந்தவர்களாகும்படி நாளுக்கு நாள் உள்ளான மனுஷன் புதிதாக்கப்பட வேண்டும். எப்படி ஒரு விசுவாசியானவன் கனி கொடுக்க முடியும்? 'நானே திராட்சச்செடி, நீங் கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது. ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடியைப்போல அவன் எறியுண்டு உலர்ந்து போவான்; அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து, அக்கினியிலே போடுகி றார்கள்; அவைகள் எரிந்துபோம். நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும். நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதி னால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள்' என்று ஆண்டவராகிய இயேசு கூறியதை யோவான் 15ம் அதிகாரத்திலே வாசிக்கலாம். எனவே, உங்கள் சாட்சியான வாழ்க்கையைக் குறித்து மற்றவர்கள் சாட்சி கூறட்டும். 'மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.'
ஜெபம்:
மகிமையின் தேவனே, ஆண்வராகிய இயேசு வெளிப்படும் போது நான் கறைதிறையற்றவனாக காணப்படும்படிக்கு, நீர் எனக்கு உணர்வுள்ள இருதயத்தைத் தந்து கிருபையினாலே வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - மத்தேயு 5:14-16