புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 19, 2026)

உத்தம குணமுடையவர்கள்...

பிலிப்பியர் 2:22

தகப்பனுக்குப் பிள்ளை ஊழியஞ்செய்வதுபோல, அவன் என்னுடனேகூட சுவிசேஷத்தினிமித்தம் ஊழியஞ்செய்தானென்று அவனுடைய உத்த மகுணத்தை அறிந்திருக்கிறீர்கள்.


சில வேளைகளிலே, பாடசாலைகளிலே, வேலை செய்யும் இடங்களிலே, தானதர்மங்களுக்கென்று ஆரம்பிக்கப்பட்ட ஸ்தாபனங்களிலே நடைபெறும் சம்பவங்களை செய்திகள் கேள்விப்படும்போது மனிதர்களுடைய மனங்கள் சோர்ந்து போய்விடுகின்றது. எடுத்துக்காட்டாக, குறிப்பிட்ட சில ஆசிரியர்களின் தகாத நடவடிக்கைகளால், இனி ஆசிரியர்களை எவரையும் நம்ப முடியாது எனவே பாடசாலைகள் தேவை யில்லை என்று கூறிவிட முடியுமா? அப்படி கூற முடியாது. ஏனெனில் எங்களில் அநேகருக்கு, நல்ல ஆசிரியர்களை குறித்த சாட்சிகள் உண்டு. எப்படியாக, அவர்கள் மாணவர்களின் வாழ்க்கையை நன்மைகேதுவாக மாற்றினார்கள். பணத்தை குறித்த ஆசையில்லாமல் எத்தனை தியாகங்களை செய்து, மாணவர்களின் கல்வி ஆளுமைகளை வளர்த்தார்கள் என்பதை அறிந்திக்கின்றோம். அவ்வண்ணமாகவே, ஆதி அப்போஸ்தலர்கள் ஊழியங்களை நடப்பிக்கும் போதும், சில உண்மையற்ற ஊழியர்கள் இருந்தார்கள். அதனால், தேவனுடைய ஊழியம் தடைபட்டுப் போகவில்லை. அவ ர்கள் மத்தியிலே உண்மையும் உத்தமமுமாக ஊழியங்களை செய்பவர்கள் இருந்தார்கள். தேவ ஊழியராகிய பவுல் தன்னுடனே இருந்த ஒரு சில ஊழியர்களைக் குறித்து சாட்சியாக கூறும் போது: தீமோத்தேயு, தகப்பனுக்குப் பிள்ளை ஊழியஞ்செய்வதுபோல, அவன் என்னுடனே கூட சுவிசேஷத்தினிமித்தம் ஊழியஞ்செய்தானென்று அவனுடைய உத்த மகுணத்தை அறிந்திருக்கிறீர்கள். ஆகையால் என் காரியங்கள் இன்ன படி நடக்கும் என்று நான் அறிந்தவுடனே அவனை அனுப்ப லாமென்று நினைத்திருக்கிறேன் என்று கூறியிருக்கின்றார். அன்று மட்டுமல்ல இன்றும் கோணலும் மாறுபாடுமான சந்தததியின் நடுவிலே, பொருளாசை யில்லாமல், உண்மையும் உத்தமமுமாக ஊழியங்களை செய்கின்றவர்களை கர்த்தர் தனக்காக வேறு பிரித்து வைத்திருக்கின்றார். பிரியமான வர்களே, சத்திய வேதத்தை வாசித்து தியானியுங்கள். சத்திய ஆவியானவரின் துணையை நாடுங்கள். வேதனை உண்டாக்கும் வழிகள் உண்டோ என்று உங்கள் இருதயத்தை தேவ வசனத்தின் வெளிச்சத்திலே ஆராய்ந்து பாருங்கள். உங்கள் குடும்பத்தை ஆராய்ந்து பாருங்கள். வெளியிடங்களிலே நடக்கும் அநியாயங்கள் அக்கிரமங்களினால் நீங்கள் சத்தியத்தைவிட்டு விலகிச் செல்லாமல், தேவ வசனத்தை பிடித்துக் கொண்டு சுடர்விடுங்கள்.

ஜெபம்:

நித்திய ஜீவனுக்கென்று என்னை அழைத்த தேவனே, உலகத்திலே நடக்கும் அநியாயங்களை கண்டு, நான் சோர்ந்து போய் சத்தியத்தைவிட்டு விலகிப்போகாதபடிக்கு நீர் என்னை காத்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - வெளி 22:11