தியானம் (தை 29, 2026)
கவனமாய் நடந்துகொள்ளுங்கள்
எபேசியர் 5:17
ஆகையால், நீங்கள் மதியற்ற வர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள்.
அப்போஸ்தலராகிய பவுல் எழுதிய 13 நிரூபங்களிலே, ஏழு சபைகள் அடங்கியிருக்கின்றது. அவையாவன: ரோமர், கொரிந்தியர், கலாத் தியர், எபேசியர், பிலிப்பியர், கொலோசேயர், மற்றும் தெசலோனி க்கேயர். ஒவ்வொரு சபைக்கும் எழுதும் போது, அவர்கள் வஞ்சிக்கப்பட்டு போகாதபடிக்கு எச்சரிப்பை கொடுத்திருக்கின்றார். இன்று சிலர் இவற்றிற்கு விரோதமாக பிரசங் கித்து, நீங்கள் ஒருமுறை மனந்திரும்பினால் போதும், அதன் பின்பு, மனந்திரும்புதலும் பாவ மன்னிப் பும் அவசியமில்லை என்று பிரசங்கிக்கின்றார்கள். இவர்களும் விசுவாசிகளை வஞ்சிக்க வகை தேடுகின்றவர்களாக இருக்கின்றார்கள். தேவ ஊழியராகிய பவுல், ஒவ்வொரு சபைகளுக்கும் கூறிய வசனங்களில் ஒன்றை இன்று பார்ப்போம். 'இந்த பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷம் தரிக்காமல்' 'ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தி னாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் கிறிஸ்துவை ப்பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன்.' 'புத்தியில்லாத கலாத்தியரே, நீங்கள் சத்தியத் திற்குக் கீழ்ப்படியாமற்போகத்தக்கதாக உங்களை மயக்கினவன் யார்?' 'நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்.' 'நாய்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள், பொல்லாத வேலையாட்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள், சுன்னத்துக்காரருக்கு எச்சரிக்கையாயிருங்கள்.' 'லௌகிக ஞானத்தினாலும், மாயமான தந்திர த்தினாலும், ஒருவனும் உங்களைக் கொள்ளைகொண்டு போகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்;' 'தேவன் நம்மை அசுத்தத்திற்கல்ல பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார். ஆகையால் அசட்டைபண்ணு கிற வன் மனுஷரை அல்ல, தமது பரிசுத்த ஆவியை நமக்குத் தந்தருளின தேவனையே அசட்டைபண்ணுகிறான்.' இப்படியாக இன்றும் தங்கள் சுய ஆதயத்தை கருத்திற் கொண்டு, தங்கள் வயிற்றுகென்று மனிதர் களை ஆதயப்படுத்திக் கொள்ளும் கள்ளப் போதர்கள் தோன்றி யிருக் கின்றார்கள். வஞ்சத்தின் ஆவி அவர்கள் வழியாக கிரியை செய்து வரு கின்றது. நீங்களோ, அந்த வஞ்சக வளைக்குள் அகப்படாதபடிக்கு, ஆவி யிலே ஜெபம் பண்ணுங்கள். சத்திய வார்த்தைகளை தியானியுங்கள். வஞ்சமான வார்த்தைகளை பகுத்தறியும்படி, ஆவியானவருக்கு இடங் கொடுங்கள். அவர் உங்களை சகல சத்தியத்திலும் வழிநடத்திச் செல்வார்.
ஜெபம்:
உன்னதமான தேவனே, உமக்கு பிரியமானது இன்னதென்று நான் சோதித்தறிந்து, கனியற்ற அந்தகாரக் கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடிந்துகொண்டு, சத்தியத்திலே நடக்க எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - 2 தெச 3:6