தியானம் (மாசி 09, 2026)
வாழ்வின் நோக்கம் என்ன?
யோவான் 6:27
அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப் பியுங்கள்;
சில வேளைகளிலே, விதண்டாவதங்களுடனும், போட்டி மனப்பான்மை யுடனும், நன்மையானவைகளை செய்ய முயற்சிப்பவர்களை நீங்கள் சந்தித்து இருக்கலாம் அல்லது சந்திக்க நேரிடலாம். தேவனாகிய கர்த் தர் எதை எனக்கு செய்ய சொல்கின்றார் என்பதைக் குறித்து சிந்திப்ப தைவிட, மற்றவன் அதை செய்ய முதல் நான் செய்ய வேண்டும் என்னும் எண்ணத்துடன் செயற்ப டுகின்றவர்களும் இருக்கின்றா ர்கள். சிலர் சுத்தமனதோடே கிறி ஸ்துவை Nசிக்காமல்;, விரோதத் தினாலே சேவிக்கின்றார்கள். அவ ர்கள் எதை நோக்கமாக கொண் டிருக்கின்றார்களோ, அதற்குரிய பலனை அடைவார்கள். நீங்க ளோ, தேவனாகிய கர்த்தர் உங்க ளுக்கு நியமித்ததை செய்வதிலே உங்கள் மனதை தக்கவைத்துக் கொள்ள வேண்டும். தேவனாகிய கர்த்தரால் நியமிக்கப்பட்டவளைகள் நிலைத்திருக்கும்.இந்த உலகிலே வாழும் மனிதர்களிடம், உங்கள் வாழ் வின் நோக்கம் என்ன என்று கேட்டால், அவர்கள் என்ன கூறுவார்கள்? கல்வி கற்க வேண்டும், கைநிறைய உழைக்க வேண்டும், வீடு நில ங்களை கொள்வனவு செய்ய வேண்டும், திருமணமாக வேண்டும், முதலீடு செய்ய வேண்டும், பின்பு மனிதர்கள் மத்தியிலே நற்பெயரை பெற்றுக் கொள்ள தானதர்மங்கள் செய்ய வேண்டும் என்று பல காரியங்களை நேர்த்தியாக வரிசைப்படுத்தி கூறிக் கொள்வார்கள். பொது வாக அவர்களுடைய குறிக்கோள்களிலே குற்றங்களோ, பாவங்களோ இருப்பதைப் போல தெரியவில்லை. விசுவாசிகளும் அவ்வண்ணமாக செய்து, தேவனாகிய கர்த்தர் தங்களை ஆசீர்வதித்திருக்கின்றார் என்று கூறிக் கொள்கின்றார்கள். நம்முடைய வாழ்வின் குறிக்கோள் அது தானே? தான் ஒரு விசுவாசியின் வாழ்வின் நோக்கம் என்ன? இந்த பூமி யிலே நன்றாக வேர்விட்டு வளர்ந்து நிலைத்திருப்பதா? தேவ சித்தத் தை நடப்பிப்து முழு நேர ஊழியத்திற்கு தங்களை ஒப்பு கொடுத்து வர் களுக்கு மட்டுமா? கல்வி, வேலை, வீடு வாசல், திருமணம், போன்றவை களுக்கு பின்னர் தான் தேவ சித்தத்தை செய்ய வேண்டும் என்பதை குறி த்து சிந்திப்பது சரியாகுமா? வாழ்வின் நோக்கம் என்ன என்பதை சற்று தரித்திருந்து சிந்தித்துப் பாருங்கள். இவ்வளவு காலமாக எவைகளை சாதித்திருக்கின்றோம்;? அவைகளிலே எவை பரலோகம் வரைக்கும் நிலை நிற்பவைகள் என்பதை ஆராய்ந்து அறிந்து செயற்படுங்கள். சத்திய ஆவியானவர்தாமே உங்களுக்கு துணை நின்று நடத்திச் செல்வாராக.
ஜெபம்:
நித்திய வாழ்விற்கென்று என்னை அழைத்த தேவனே, என்னை என்ன நோக்கத்திற்காக வேறு பிரித்திரோ, அந்த நோக்கம் என்னில் நிறைவேறும்படிக்கு நீர் என்னை கரம்பித்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - பிலிப்பியர் 1:20