தியானம் (வைகாசி 12, 2026)
சோதித்தறியுங்கள்!
1 யோவான் 4:1
நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனாலுண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்.
பொல்லாத வேலையாட்களுக்கு ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? அவர்கள் பொல்லாதவர்கள் என்றால், விசுவாசிகள் அவர்களோடு ஐக்கியமாக இருக்க மாட்டார்கள். அவர்களை தங்கள் எல்லைக்குள் வர இடம் கொடுக்க மாட்டார்கள். அவர்களிடம் தங்கள் தனிப்பட்ட பிரச் சனைகளை கூறி அவர்களிடம் ஆலோசனை கேட்க மாட்டார்கள். தங் கள் பிள்ளைகளை அவர்களோடு எந்த விதத்திலும் இடைப்பட விட மாட்டார்கள். அப்படியானால் ஏன்; பொல்லாத வேலையாட்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில், அவர்கள் தங்களை தேவ னுடைய சித்தத்திற்கு விரோதமானவர்கள் என்று காண்பிப்பதில்லை. பொதுவாக, அப்படிப்பட்டவர்கள் வேதத்தை அறிந்திருப்பார்கள், அழகாக தொகுத்து பேசுவார்கள், வெளியரங்கமான செயற்திட்டங்களை நடப்பிப்பார்கள் ஆனால் அவையொன்றையும் தங்கள் சொந்த வாழ்விலே நடப்பிப்பதில்லை. ஒரு சமயம் ஆண்டவராகிய இயேசு தம்முடைய சீஷர்களையும் நோக்கி: வேதபார்கரும் பரிசயேரும் மோசேயின் ஆசனத்தில் உட்காரர்ந்திருக்கின்றார்கள்.; ஆகையால், நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்;களுக்குச் சொல் லுகிற யாவற்றையும் கைக்கொண்டு செய்யுங்கள்; அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிhயுங்கள்; ஏனெனில் அவர்கள் சொல்லிகிறார்கள் சொல்லியும் செய்யாதிருக்கின்றார்கள். என்று கூறினார். மேலும் அவர் கூறுகையில்: மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, ஒருவேளை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியைiயும் சுற்றித்திரிகிறீர்கள். அவன் உங்கள் மார்கத்தானானபோது அவனை உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள் என்றார். இன்றைய நாட்களிலும், இப்படிப்பட்டவர்கள் அநேகராயிருக்கின்றார்கள். தொழிநுட்ப இன்ரநெற் வளர்சியானது, பொல்லாதவர்கள் தங்களை நல்லவர்கள் என்று காண்பித்து, மற்றவர்களுடை இருதயங்களை கவர்ந்து கொள்ள வழிவகுக்கின்றது. இப்படிப்பட்டவர்கள், முதலாவதாக தேவன் சொன்னதை தங்கள் வாழ்க்கையில் செய்யாமல், தேவன் சொல்லாத கிரியைகளை செய்யும்படி தங்களை பின்பற்றுகிறவர்களிடம் கூறுவார்கள். எனவே, வேதத்தை வாசியுங்கள், தியானியுங் கள், சத்திய ஆவியானவரின் வழிநடத்துதலுக்காக, உங்களை தாழ்த்தி ஜெபம் செய்யுங்கள். சத்திய ஆவியானவர்தாமே சகல சத்தியத்திலும் உங்களை வழிநடத்திச் செல்வார்.
ஜெபம்:
பரிசுத்த வாழ்க்கை வாழ என்னை வேறு பிரித்த தேவனே, இந்த உலகத்தில் தற்போது கிரியை செய்து வரும் வஞ்சகத்தின் ஆவிகளை நிதானித்தறிந்து, சத்திய வழியிலே நடக்க எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - மத்தேயு 10:16