புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 24, 2026)

தீமைக்கு பதிலாக நன்மை செய்யுங்கள்

நீதிமொழிகள் 17:13

நன்மைக்குத் தீமைசெய்கிறவன் எவனோ, அவன் வீட்டைவிட்டுத் தீமை நீங்காது.


ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த மனிதனொவுன், தன் அயலிலே வாழ்ந்து வந்ம குடும்பத்தினருக்கு எதிராக அவதூறு பேசி, அவர்களை அவமான படுத்தினான். அந்த குடும்பத்திலுள்ள பிள்ளைகள், தங்கள் தகப்பனை நோக்கி: அப்பா, அந்த மனிதன் அநியாயமாக எங்களை நிந்திக்கின் றான், நீங்கள் ஏன் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கின்றீர்கள் என்று கூறினார்கள். அதற்கு தகப்பனார்: பிள்ளைகளே, அந்த மனி தனுடைய தப்பனானவர், எங்கள் கஷ்டத்தின் நாட்களிலே எங் களுக்கு நன்மை செய்தார். அவர் நிமித்தம், இவனை நாங் கள் பொறுமையாக சகித்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறினார். அவர் அவிசுவாசிகளாக இருந்தபோதும், மனிதநேயம் என்ற பேரிலே, நன்றியிதலுள்ளவர்களாக இருக்க அறிந்திருந்தார்கள். தீமைக்கு தீமை செய்யாமல், பொறுமையோடு சகித்ததுக் கொண்டார்கள். ஆனால், இந்நாட்களிலே, சில இடங் களிலே, தேவ பிள்ளைகள் மத்தியிலே இப்படிப்பட்ட குணாதிசயங் களை காண்பது அரிதாக இருக்கின்றது. ஒருவனுக்கும் தீமைக்குத் தீமைசெய்யாதிருங்கள்; எல்லா மனுஷருக்குமுன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுங்கள் என்று பரிசுத்த வேதாகமம் கூறுகி ன்றது. 'கண்ணுக்குக் கண், பல்லுக்கு பல் என்று உரைக்கப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமை யோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு. உன் னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ளவேண்டுமென் றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு. ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வரப் பலவந்தம் பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ.' என்று ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார். எனவே, ஒரு விசுவாசியானவன், தீமைக்கு தீமை செய்யாமல் இருப்பது ஒரு காரியம் ஆனால் நன்மைக்கு பதிலாக தீமை நினைக்கும் ஒரு விசுவா சியைக் குறித்து நீங்கள் என்ன கூறுவீர்கள்? எனவே, நன் மைக்கு கைமாறாக தீமை செய்யாதபடிக்கு எச்சரிக்கையுள்ளவர்களாக இருக்க வேண்டும். இந்த பிரபஞ்சத்தின் மக்கள் கூட நன்றியுள்ளவர் களாக இருக்கும் போது, தேவ பிள்ளைகள் எத்தனை அதிகமாய் செயற்பட வேண்டும். சிலர் கடமையுணர்வோடு அப்படி இருக்கின்றார்கள். ஆனால், தேவ பிள்ளைகளாகிய நாமோ, தேவனுக்கும் மனிதர்களுக்கும் முன்பாக உண்மை மனதுடன் காணப்பட வேண்டும்.

ஜெபம்:

இருதயங்களை ஆராய்ந்து சிந்தையை அறிகின்ற தேவனே, கடமையுணர்வோடு மாத்திரமல்ல, உண்மை மனதுடன் கண் கண்ட சகோதரர்களுக்கு நன்றியறிதலுள்ளவனாக இருக்க எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 2:30