புதிய நாளுக்குள்..

தியானம் (தை 11, 2026)

கிருபையும் சமாதானமும்

பிலிப்பியர் 1:2

நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபை யும் சமாதானமும் உண்டாவதாக.


பரிசுத்த வேதாகமத்திலே, புதிய ஏற்பாடிலே, எழுததப்பட்டிருக்கும் நிரூ பங்களில், பதின்மூன்று நிரூபங்கள் தேவ ஊழியராகிய பவுல் எழுதியிருக்கின்றார் என்பது அவருடைய நிரூபங்கள் வாயிலாகவே உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. அந்தப் 13 நிரூபங்களை ஆரம்பிக்கும் போது, 'நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.' என்ற வாழ்த்துதல் எல்லா நிரூபங் களிலும் எழுத்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. கிரேக்கர்கள் கிருபையை கூறி வாழ்த்துதல் சொல்வார்கள் என்றும், யூதர்கள் சமாதானம் என்று கூறி வாழ்த்துதல் சொல்வார்கள் என்றும் சில ஆய்வாரள்கள் கூறிக் கொள்கின்றார்கள். இதற்கு வேதத்திலிருந்து எந்த ஆதாரமும் இல்லை. ஆனால், அப்போஸ்தலராகிய பவுல், தன்னுடைய நிரூபங்களில் விசுவாச மார்க்கத்தார் மத்தியிலே ஒருமைப்பாட்டிக்குறி த்தும், சமாதானமான வாழ்வைக் குறித்தும் வலியுறுத்தி கூறியிருப்பதை பல இடங்களிலே காண்கின்றோம். ' நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசு வைப்பற்றும் விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்களே. ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே. யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயா தீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்' என்று கலா த்தியர் 3ம் அதிகாரத்திலே குறிப்பிட்டிருப்பதைக் காணலாம். மேலும் ஒரு விசுவாசிக்கு கிருபையும், இன்னுமொரு விசுவாசிக்கு சமாதானம் என்றும் தேவன் பிரித்து வைக்கின்றவர் அல்ல. தேவ கிருபையில் லாமல் எந்த ஒரு விசுவாசியும் சமாதானமான வாழ்வை வாழ முடியாது. அதனால்தான் அவர் தேவ கிருபைiயும், தேவ சமாதான மும் உண்டா யிருப்பதாக என்று வாழத்துதல் கூறியிருக்கின்றார். அப் போஸ்தல ராகிய பேதுருவும் தன்னுடைய இரண்டாம் நிரூபத்தை முடிக்கும் வேiயிலே, நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ் துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள் அறிவுரை கூறியிருக்கின்றார். எனவே, நாம் தேவ கிருபையை குறித்து நன்றாக அறிந்து, அதிலே வளர வேண்டும். இந்த நாட்களிலே அதைக் குறித்து மனத்தாழ்மையோடும் பொறுமையோடும் தியானம் செய்யுங்கள்.

ஜெபம்:

கிருபையினாலே என்னை இரட்சித்த தேவனே, உம்முடைய கிருபையின் மேன்மையை குறித்து நான் நாளுக்கு நாள் அறிவடையும் படிக்கு உணர்வுள்ள இருதயத்தைத் தந்து என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 1 பேதுரு 1:10

Category Tags: