தியானம் (பங்குனி 01, 2026)
நீங்கள் தனித்து விடப்படுவதில்லை!
ரோமர் 8:26
அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார்.
இந்த உலகத்திலே மனப் போராட்டங்கள் இல்லை என்று எந்த மனி தனால் கூற முடியும்? நாளாந்த வாழ்க்கையிலே மனிதர்கள் ஒன்றின்பின் ஒன்றாக பல சவால்களுக்கு முகங்கொடுக்கின்றார்கள். சிலர் அது வாழ்க்கையின் நியதி என்றும், வேறு சிலர் பலவிதமான கருத்து க்களைக் கூறிக் கொள்வார்கள். கருப்பொருளாவது, வாழ்க்கை யிலே போராட்டங்கள் உண்டு. ஆனால், உலகத்திலுள்ள மனிதர் கள் அதை மேற்கொள்ளுவதற்கு அல்லது அதை கடந்து செல்வதற்கு பற்பல வழிமுறைகளை கையாளு கின்றார்கள். அவைகளில் சில உலக போக்கிலே வாழ்பவர்களுக்கு நீதியாக தோன்றுகின்றது. ஆனால், விசுவாசிகளாகிய நாம் இந்த உலக போக்கின்படி போராட்டகளை நடத்த முடியாது. மாம்ச சிந்தையானது தேவனுக்கு விரோதமான பகையாக இருக்கின்றது. எனவே விசுவாசி களாகிய, ஒருவேளை சில அணுகு முறைகள், இந்த உலக போக்கிற்கு நீதியாக எண்ணப்பட்டாலும், நாம் மாம்சத்திலே போராடாமல், ஆவிக் குரிய யுத்தத்தை நடத்த வேண்டும் என்பதைக் குறித்து கடந்து நாட் களிலே தியானித்தோம். அன்று பிலிப்பி சபையிலே இருந்தவர்களுக்கு போராட்டங்கள் இருந்தது. அதைக் குறித்து தேவ ஊழியராகிய பவுல் அவர்களுக்கு எழுதும் போது, முதலாம் அதிகாரத்தின் முடிவில்: 'ஏனெ னில் கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்குமாத்திரமல்ல, அவர்நிமித்த மாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது. நீங்கள் என்னிடத்திலே கண்டதும் எனக்கு உண்டென்று இப்பொழுது கேள்விப்ப டுகிறதுமான போராட்டமே உங்களுக்கும் உண்டு.' கூறியிருக்கின்றார். அப்படியானால், முடிவில்லாத போராட்டங்களை எப்படி மேற்கொள் வது? தனித்திருந்து ஆவிக்குரிய யுத்தத்தை நடத்த வேண்டுமோ? ஆறுதல் அடைய வழியில்லையோ? நெருக்கங்களின் மத்தியிலே நம்மி டத்தில் பட்சமாக நடப்பதற்கு யாருமில்லையா? பிரியமானவர்களே, கிறிஸ்தவ வாழ்க்கையானது தனித்து வாழும் வாழ்க்கையல்ல. நமக்கு மேலான தெய்வீக ஐக்கியம் உண்டு. அந்த மேலான ஐக்கியத்தின் வழியாக சபை ஐக்கியம் உண்டு. இவைகளை தேவ ஆவியானவர் தாமே நமக்குள் நடப்பிக்கின்றார். 'அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக் கொள்ளவேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியான வர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார்.'
ஜெபம்:
போராட்டங்களிலே என்னோடு கூட இருந்து என்னை வழிநடத்தும் தேவனே, நான் உபத்திரவங்களிலே சோர்ந்து போகாமல் உம் வார்த்தையை பற்றிக் கொண்டிருக்க எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - பிலிப்பியர் 2:1-2