புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 11, 2026)

கர்த்தருக்குள் ஒரே சிந்தையாயிருங்கள்

பிலிப்பியர் 4:2

கர்த்தருக்குள் ஒரே சிந்தையாயிருக்க எயோதியாளுக்கும் சிந்திகேயாளுக்கும் புத்திசொல்லுகிறேன்.


அக்காலத்திலே, பிலிப்பி சபை விசுவாசிகள் மத்தியிலே கருத்து வேற்றுமைகளும், பிரிவினைகளும் உண்டாயிருந்தது. இதைக் குறித்து பிலிப் பியருக்கு எழுதிய நிரூபம் 2ம் அதிகாரத்தின் ஆரம்பத்திலே தேவ ஊழி யக்காரனாகிய பவுல் குறிப்பிடும் போது: ஆதலால் கிறிஸ்துவுக்குள் யாதொரு ஆறுதலும், அன்பினாலே யாதொரு தேறுதலும், ஆவியின் யாதொரு ஐக்கியமும், யாதொரு உருக்கமான பட்சமும் இரக்கங்களும் உண்டானால், நீங்கள் ஏக சிந்தையும் ஏக அப்புள்ளவர்களாயிருந்து, இசைந்த ஆத்துமாக்களாய் ஒன்றையே சிந்தித்து, என் சந்தோஷத்தை நிறைவா க்குங்கள். ஒன்றையும் வாதினாலாவது, வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையயொருவர் தங்க ளிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள் என்று கூறியிருக்கின்றார். சபையிலே நடக்கும் குழப்பங்களை குறித்து நிரூபங்களிலே எழுதும் போது, அவற்றை குறிப்பிட்ட நபர்களுக்கு கூறாமல், பொது வாக எழுதியிருப்பதைக் காணலாம். ஆனால் பிலிப்பி சபையிலே இருந்த இரண்டு விசுவாசிகளுக்கு, அவர்களுடைய பெயர்களைக் குறிப் பிட்டு, கர்த்தருக்குள் ஒரே சிந்தையாக இருக்கும்படி புத்தி சொல்லியிருக்கின்றார். கர்த்தருக்குள் ஒரே சிந்தையாயிருக்க எயோதியாளுக்கும் சிந்திகேயாளுக்கும் புத்திசொல்கிறேன் என்று 4ம் அதிகாரம் 2ம் வசனத்திலே வாசிக்கலாம். இவர்கள் அந்த சபையோர் மத்தியிலே நன்கு அறிமுகமானவர்களாக இருந்திருக்க வேண்டும். இவர்கள் இருவரும் கிறிஸ்துவின் நற்செய்திக்காக பிரயாசப்பட்டவர்கள். அவர்கள் நாமங்கள் ஜீவ புத்தகத்திலே எழுதியிருக்கின்றது என்பதையும் குறிப்பிட்டிருக்கின்றார். ஆனால், பிற்பாடு அவர்களுக்குள் கருத்து முரண்பாடுகள் உண்டாயிருந்து. அதனால், அவர்கள் மத்தியிலே உண்டாயிருக்கும் வேற்றுமைகளை விட்டுவிட்டு, கிறிஸ்துவின் அழைப்பின் நோக்கத்தை குறித்த ஒரே சிந்தையை தரித்திருக்கும்படி அறிவுரை கூறியிருக்கின்றார். அவர்களுக்குள் உண்டான கருத்து முரண்பாட்டினால், அவர்களை தள்ளிவிடாமல், அவர்கள் மறுபடியும் நல்லிணகத்திற்குள் வரும்படி அவர்களுக்கு உதவிபுரியும்படி அங்கிருந்த ஊழியர்களை வேண்டிக் கொண்டார். எங்கள் மத்தியிலும் இத்தகைய நிலைமைகள் உண்டாகலாம். அப்படியான சூழ்நிலைகள் வந்து எங்கள் நோக்கத்தையும் பிரயாசத்தையும் திசைதிருப்பாதபடி, நாங்கள் எப்போதும் கிறிஸ்துவுக்குள் ஒரே சிந்தையாக இருக்க கற்றுக் கொள்ள வேண்டும்.

ஜெபம்:

நித்திய ஜீவனுக்கென்று என்னை அழைத்த தேவனே, ஆண்டுகள் கடந்து சென்றாலும், நான் கர்த்தருக்குள் ஒரே சிந்தையாக இருக்கும்படிக்கு எனக்கு உணர்வுள்ள இருதயத்தைத் தந்து வழிநடத்திச் செல் வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - கொலோ 3:15