புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 17, 2026)

நீதிமானின் கடிந்து கொள்ளுதல்

நீதிமொழிகள் 15:31

ஜீவனுக்கேதுவான கடிந்து கொள்ளுதலை ஏற்றுக்கொள்ளும் காது ஞானிகளிடத்தே தங்கும்.


'என்னிடத்தில் நான் யாதொரு குற்றத்தையும் அறியேன்; ஆகிலும் அதினாலே நான் நீதிமானாகிறதில்லை. என்னை நியாயம் விசாரிக்கிறவர் கர்த்தரே. ஆனதால், கர்த்தர் வருமளவும் நீங்கள் காலத்துக்குமுன்னே யாதொன்றைக்குறித்தும் தீர்ப்புச்சொல்லாதிருங்கள்;. இருளில் மறைந்திருக்கிறவைகளை அவர் வெளியரங்கமாக்கி, இருதயங்களின் யோச னைகளையும் வெளிப்படுத்துவார்; அப்பொழுது அவனவனுக்குரிய புகழ்ச்சி தேவனால் உண்டாகும்.' என்று தேவ ஊழியக்காரனாகிய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய 1ம் நிரு பத்தில் 4ம் அதிகாரத்திலே கூறியிருக்கின்றார். எனவே, எவரையும் நியாந்தீர்ப்பது விசுவாசிகளுக்குரியதல்ல. ஆனால், கண்டிப்பு, கடிந்து கொள்ளுதல், சீர்திருத்தங்கள் போன்றவை ஒரு மனுஷனை நியாயந்தீர்க்கும் காரியமல்ல. எடுத்துக்காட்டாக, கிழக்கு திசையிலுள்ள ஊருக்கு போகின்றேன் என்று கூறிக்ககொண்டு, எதிராக மேற்குப் பக்கமாக வண்டிலிலே பயணம் செய்கின்ற ஒரு மனுஷனைப் பார்த்து, நீ பயணிக்கும் திசையை மாற்ற வேண்டும் என்று கூறுவது, நியாயந்தீர்ப்பு அல்ல. ஒன்றும் ஒன்றும் ஐந்து என்று சிறு பையனானவன் கூறும் போது, அந்த பதில் தவறு, உண்மையான பதில் இரண்டு என்று திருத்துவது, அந்த சிறு பையனை நியாயந்தீர்பபது அல்ல. மாறாக அவனுக்கு கற்றுக் கொடுப்பதாகும். விசுவாசிகளாகிய நாம், ஒழுங்கில்லாதவர்களுக்குப் புத்தி சொல்ல வேண்டும், திடனற்றவர் களைத் தேற்ற வேண்டும், பலவீனரைத் தாங்க வேண்டும். எல்லாரிட த்திலும் நீடிய சாந்தமாயிருக்க வேண்டும் என்று பரிசுத்த வேதாகம த்திலே வாசிக்கின்றோம். யாருக்கு நீங்கள் புத்தி சொல்ல வேண்டும்? யாரைத் வேத வார்த்தைகளால் தேற்ற முடியும்? எந்த சூழ்நிலை யிலும், வேத வார்த்தைகளை கேட்கும் போது, அதற்கு கீழ்படியமனது ள்ளவர்கள், எனக்கு எல்லாம் தெரியும் என்று கூறாமல் மனத்தாழ்மை யோடு கற்றுக்கொள்ள மனதுள்ளவர்கள், நீதிமான்களின் கடிந்து கொள் ளுதலை விரும்புகின்றவர்கள், கடிந்து கொள்ளும்போது தங்கள் பிட ரியை கடினப்படுத்தாதவர்கள். இப்படிப்பட்டவர்களுக்கு நீங்கள் ஆலோ சனைகளையும், புத்திமதிகளையும் கூறுவது பிரயோஜனமுள்ளதாக இருக்கும். நம்முடைய ஆண்டவராகிய இயேசுவும், ஆலோசனைகளைக் கூறும் போது, கேட்கச் செவியுள்ளவன் கேட்கக்கடவன் என்று கூறியிரு க்கின்றார். வழியை விட்டு விலகுகிறவனுக்குப் புத்திமதி விசனமாயி ருக்கும்;.

ஜெபம்:

உன்னதமான தேவனே, ஜீவனுக்கேதுவான கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளும் செவிகளை எனக்கு தந்து, உம்முடைய சத்திய வார்த்தைகளுக்கு கீழ்படியும் உள்ளத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 96:13