புதிய நாளுக்குள்..

தியானம் (தை 30, 2026)

தேவ அன்பை அறியும் அறிவு...

எபேசியர் 1:4

தமக்குமுன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு,


இன்றைய உலகிலே அன்பே பிரதானம் என்பதைக் குறித்து பரவலாக மனிதர்கள் பேசிக் கொள்வார்கள். சில இடங்களிலே அன்பு சகல பாவங்களையும் மூடும் என்ற வார்த்தையை தவறாக புரிந்து கொண்ட சிலர், தேவ நீதி நிறைவேற இடக் கொடுக்காமல், அநியாயங்களையும் அக்கிரமங்களையும் மூடி மறைத்து விடுகின்றார்கள். எடுத்துக்காட்டாக, ஒரு விசுவாசியின் பிள்ளையான வன், சபைக்கு வரும் வேறு பிள் ளைகளுக்கு தீங்கான காரியத்தை செய்து விட்டான். அந்த விசுவா சியோ, தான் தன் பிள்ளையை அன்பு செய்கின்றபடியால், அந்த தீங்கை எப்படியாவது மூடி மறை த்து, தன் பிள்ளையை காப்பாற்றி, மற்றவர்களுடைய பிள்ளைகளுக்கு நீதி செய்யாமல் போய்விட்டால், அந்த அன்பைக் குறித்து நீங்கள் என்ன கூறுவீர்கள். 'தமக்குமுன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிரு ப்பதற்கு, அவர் உலகத்தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம் மைத் தெரிந்துகொண்டார்' பரிசுத்த வேதாகமத்திலே வாசிக்கின்றோம். பிலிப்பியர் முதலாம் அதிகாரம் ஒன்பதாம் வசனத்திலே மேலும், உத்தமமானவைகளை நீங்கள் ஒப்புக்கொள்ளத்தக்கதாக உங்கள் அன் பானது அறிவிலும் எல்லா உணர்விலும் இன்னும் அதிகமதிகமாய்ப் பெருகவேணடும் என்று தேவ ஊழியராகிய பவுல் உதாரண குண முள்ள பிலிப்பி சபையிலுள்ளவர்களுக்கு எழுதியிருக்கின்றார். அதா வது, ஒரு விசுவாசியாவன், பிதாவாகிய தேவன் நம்மேல் கொண்ட அன்பை அறியும் அறிவிலே வளரும் போது, அவன் அன்பிலே வள ர்ந்து பெருகின்றான். அதுமட்டுமல்லமால், தேவ அன்பின் அறிவிலும் எல்லா உணர்விலும் பெருகும் போது, எப்படி பிதாவாகிய தேவன் மற் றவர்களை அன்பு செய்கின்றாரோ, அந்த பிரகாரமாக நாமும் மற்ற வர்களை அன்பு செய்ய ஆரம்பிப்போம். தேவ அன்பின் பண்பை அறி ந்து கொள்ள வேண்டும். இந்த உலகிலே மனிதர்கள் கூறும் அன்பு, அவரவரைப் பற்றியதாக இருக்கும். அதற்குள்ள சுயம் காணப்படும். ஆனால், தேவ அன்போ தனக்கானவைகளை சிந்தியாமல், பிறருக்கான வைகளையும் சிந்திக்க தூண்டும். இந்த தன்னலமற்ற அன்பைக் குறித்து, இன்னும் அதிகமாக நாம் பிலிப்பியர் 2ம் அதிகாரத்தை தியா னிக்கும் போது பார்க்கலாம். நீங்கள், தேவ அன்பை அறியும் அறிவிலே வளருங்கள். தேவனைப் போல மற்றவர்களை அன்பு செய்ய கற்றுக் கொள்ளுங்கள்.

ஜெபம்:

அன்பில் என்னை பரிசுத்தனாக்க சித்தம் கொண்ட என் தேவனே, என் அன்பானது அறிவிலும் எல்லா உணர்விலும் இன்னும் அதிகமாக பெருகும்படி எனக்கு ஞானமுள்ள இருயத்தை தந்து வழிநடத்திச் செல்வீ ராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 1 கொரி 13:1-13

Category Tags: