புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 05, 2026)

அழைப்பின் பிரதான நோக்கம்

2 பேதுரு 1:10

ஆகையால், சகோதரரே, உங்கள் அழைப்பையும் தெரிந்து கொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையா யிருங்கள்;


'அல்லாமலும், எனக்கு அருளப்பட்ட கிருபையினாலே நான் சொல்லுகிறதாவது, உங்களில் எவனானாலும் தன்னைக்குறித்து எண்ணவேண்டி யதற்கு மிஞ்சி எண்ணாமல், அவனவனுக்கு தேவன் பகிர்ந்த விசுவாச அளவின்படியே, தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ணவேண்டும். ஏனெ னில், நமக்கு ஒரே சரீரத்திலே அநேக அவயவங்களிருந்தும், எல்லா அவயவங்களுக்கும் ஒரே தொழில் இராததுபோல, அநேகராகிய நாமும் கிறிஸ்துவுக்குள் ஒரே சரீர மாயிருக்க, ஒருவருக்கொருவர் அவ யவங்களாயிருக்கிறோம். நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியே நாம் வௌ;வேறான வரங்களுள்ள வர்களானபடியினாலே, நம்மில் தீர் க்கதரிசனஞ்சொல்லுகிற வரத்தை யுடையவன் விசுவாசப்பிரமாணத்துக்கேற்றதாகச் சொல்லக்கடவன். ஊழியஞ்செய்கிறவன் ஊழியத்திலும், போதிக்கிறவன் போதிக்கி றதிலும், புத்திசொல்லுகிறவன் புத்திசொல்லுகிறதிலும் தரித்திருக்கக் கடவன்; பகிர்ந்து கொடுக்கிறவன் வஞ்சனையில்லாமல் கொடுக்கக்க டவன்; முதலாளியானவன் ஜாக்கிரதையாயிருக்கக்கடவன்; இரக்கஞ்செய் கிறவன் உற்சாகத்துடனே செய்யக்கடவன்.' என்று பரிசுத்த வேதாகம த்திலே, ரோமருக்கு எழுதிய நிரூபம் 12ம் அதிகாரத்திலே வாசிக்கின் றோம். அதாவது, நம்முடைய அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலும் இன்னதென்று உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். பரலோகத்திலே நித்திய ஜீவனை சுதந்தரித்துக் கொள்வதே நம்முடைய பிரதானமான அழைப்பு. அந்த அழைப்பின் கீழ், கிறிஸ்துவுக்குள் நாம் நிறைவேற்றி வேண்டிய கிரியைகள் உண்டு என்று அறிந்து அவை களைக் குறித்து தெளிந்த எண்ணமுள்ளவர்களாக இருக்க வேண்டும். முற்றிலும் தேறினவனானேன் என்ற எண்ணத்தை களைந்துவிட வேண் டும். ஒருவன் தான் தேவனுக்கு ஊழியம் செய்கின்றேன் என்று கூறி, பிரதானமான அழைப்பைக்குறித்து கவனமாற்றவனாக இருப்பானேயா கில், அவனுடைய ஊழியம் அவனுக்கு விருதாவாக இருக்கும். எனவே, கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேன் என்று உதியாய் அறிந்திருக்க வேண்டும். அதை நான் நிறைவேற்றி முடிக்க வேண்டும் என்ற எண்ணம் தணிந்து போகக்கூடாது. அதை நான் அடை ந்து கொள்வதையே இலக்காக வைத்திருக்க வேண்டும். சத்திய ஆவி யானவர் தாமே நமக்கு பெலன் வழிநடத்திச் செல்வார்.

ஜெபம்:

பரலோக தேவனே, என்னுடைய பிரயாசங்களைக் குறித்து நானே மெச்சிக் கொள்ளாமல், தாழ்மையுள்ள இருதயத்தைதோடு, பெற்ற பொறுப்பை நிறைவேற்றி முடிக்க எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 3:14