தியானம் (தை 03, 2026)
கிருபை முற்றிலும் அற்றுப்போயிற்றோ?
சங்கீதம் 77:12
உம்முடைய கிரியைகளை யெல்லாம் தியானித்து, உம்முடைய செயல்களை யோசிப்பேன் என்றேன்.
'புதிய ஆண்டு, புதிய மாதம், புதிய நாள், ஆனால் பழைய வாழ்வைப் போலவே இருக்கின்றது என்று ஒரு விசுவாசியாவன் தன் இருதயத் திலே சொல்லிக் கொண்டான். ஒரு வருடம் நிறைவு பெறும் போதும், இன்னுமொரு புதிய வருடம் ஆரம்பிக்கும் போதும், விசுவாசிகள் நன்றி ஆரதனைகiளும், உபவாச ஜெப ங்களையும், ஆனந்த துதி முழங் கப்பண்ணும் பாடல்களையும் பாடி அந்த நாட்களை விசேஷpக்கின்றார் கள். ஆனால், சில நாட்கள் கடந்த பின்பு, அந்த பரபரப்புக்கள் யாவும் ஒய்ந்து போய்விடுகின்றது. சிலர் பெருமூச்சோடு வழமைக்கு திரும்புவோம் என்று தங்கள் நாளாந்த வேலைகளுக்கு சலிப்போடு திரும்புகின்றார்கள். இன்னும் சிலர், இரட்சிப்படைந்த பின்னரும், சில அடிமைத்தன கட்டுகளை விட்டுவிட முடியவில்லை, விடுதலையடைய வழியில்லை, மன உளைச்சல்களுக்கு முடிவில்லை என்று, தங்களு க்குள்ளே நொந்து கொண்டு வாழ்ந்து வாழுகின்றார்கள். இப்படியாக நமக்கு முன்சென்ற தேவ பக்தர்களும், தங்கள் இக்கட்டு நாட்களிலே, ஆண்டவர் நித்தியகாலமாய்த் தள்ளிவிடுவாரோ? இனி ஒருபோதும் தயைசெய்யாதிருப்பாரோ? அவருடைய கிருபை முற்றிலும் அற்றுப்போ யிற்றோ? வாக்குத்தத்தமானது தலைமுறை தலைமுறைக்கும் ஒழிந்து போயிற்றோ? தேவன் இரக்கஞ்செய்ய மறந்தாரோ? கோபத்தினாலே தமது உருக்கமான இரக்கங்களை அடைத்துக்கொண்டாரோ? என்று எண்ணிக் கொண்ட சந்தர்பங்கள் உண்டாயிருந்தது. ஆனால், அந்த சிந்தனைகள் யாவும் தங்கள் பெலவீனம் என்று உணர்ந்து கொண்டா ர்கள். அதுபோலவே, இப்படியான சிந்தனைகள் உங்களுக்குள்ளும் தலைதூக்கும் போது அது உங்கள் மாம்ச பெலவீனம் என்பதை அறி ந்து கொள்ளுங்கள். தேவனைவிட்டு தூரமாக போகும் எண்ணத்தை முற்றிலும் அகற்றிவிட்டு. அனுதினமும் வேதத்தை கருத்தோடு வாசியு ங்கள். ஊக்கமாக ஜெபியுங்கள். தேவன் உங்கள் வாழ்க்கையில் செய்த அற்புத கிரியைகளை தியானம் செய்யுங்கள். உன்னதமானவருடைய வலதுகரத்திலுள்ள வருஷங்களை நினைவுகூருங்கள். கர்த்தருடைய செயல்களை நினைவுகூருருங்கள், அவருடைய பூர்வகாலத்து அதிசய ங்களையே நினைவுகூருங்கள். அவருடைய கிரியைகளையெல்லாம் தியானித்து, அவர்களுடைய செயல்களை யோசியுங்கள். தேவனால் எல்லாம் கூடும் என்பதை அறிக்கை செய்து, அவருடைய பலத்த கிரியைகளை இந்த ஆண்டிலும் உங்கள் வாழ்விலே அனுபவியுங்கள்.
ஜெபம்:
என்னுடைய பெலவீன நேரங்களிலே எனக்கு உதவி செய்யும் தேவனே, என் மனச் சாமாதானத்தை குலைத்துப் போடும், பெவீனக்கட்டுகளை மேற்கொள்ள உம் கிருபையை தந்து என்னை நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - எபிரயர் 13:8