தியானம் (வைகாசி 31, 2026)
மேன்மையானவைகளை பற்றிக் கொள்!
1 தீமோத்தேயு 6:12
விசுவாசத்தின் நல்ல போரா ட்டத்தைப் போராடு
தேவனுடைய ஊழிக்காரனாகிய பவுல், கிறிஸ்து இயேசுவை அறியும் அறிவின் மேன்மைக்காக, இந்த உலகத்திலே வசதிகளையும், செல்வாக்குகளையும் தரக்கூடிய யாவற்றையும் விட்டுவிட்டார். இந்த உலகத் திலே வாழும் கிறிஸ்து இயேசுவை அறியாத சிலரும் அவ்வண்ணமாக தங்களுக்குண்டான யாவற்றையும் துறந்து துறவியானார்கள் என்பதை கேள்விப்பட்டிருக்கின்றோம். அப்ப டியானால், நம்முடைய மேன்மை என்ன? உலகத்தையும் அதிலுள்ள வைகளையும் விட்டுவிடுவது மேன்மை அல்ல. 'கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினால் வருகிறதும் விசுவாசமூலமாய் தேவனால் உண்டாயிருக்கிறதுமான நீதியை உடையவனாயிருந்து, கிறிஸ்துவுக்குள் இருக்கிறவனென்று காணப்படும்பட வேண்டும்.' கிறிஸ்து இயேசுவை அறியும் அறிவின் மேன்மைக்காக அவரைப் பற்றும் விசுவாசத்திலே நிலைத்திருப்பதே நம்முடைய மேன்மை. ஒருவன் உண்மையாக கிறி ஸ்து இயேசுவிலே நிலைத்திருந்தால், அவருடைய வார்த்தை அவனு க்குள் நிலைத்திருக்கும். அவருடைய வார்த்தையில் அவன் நிலைத் திருப்பதினால், அவன் தன் வாழ்வின் கனிகள் வழியாக கிறிஸ்து இயேசுவை வெளிப்படுத்துவான் சில வேளைகளிலே சில விசுவாசிகள் தங்களிடத்தில் இல்லாதவைகளை குறித்து பேசும் போது, அதிலே தங்களுக்கு நாட்டம் இல்லை என்று ஆணித்தரமாக கூறிக் கொள் வார்கள். எடுத்துக்காட்டாக, ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த விசுவாசி யானவன், அன்றாட மாதாந்தம் தனக்கு கிடைக்கும் சம்பளத்திலே தன் குடும்பத்தின் தேவைகளை சந்தித்து வந்தான். ஐசுவரியத்தைக் குறித்து பேசும் போது, அது அவனித்டதில் இல்லாதிருந்ததால், ஐசுவரியம் மனிதர்களின் மனதை கடினப்படுத்தி, வழிவிலகச் செய்யும் என்று ஆணித்தரமாக பேசிக் கொள்வான். ஆனால், அவனோ கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்திலே நிலைத்திருக்கவில்லை. தேவ வார்த்தையானது அவனுக்குள் இல்லை. அதனால் என்ன பலன்? 'நீயோ, தேவனுடைய மனுஷனே, பண ஆசையை விட்டோடி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடு. விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்;' என்று தேவ ஊழியராகிய பவுல், தீமோத்தேயு என்னும் ஊழியனுக்கு கூறியது போல, நாமும், உலகத்தின் வஞ்சனைக்குள் சிக்கி விழாதபடிக்கு, கிறிஸ்து இயேசுவை பற்றும் மேன்மையானவைகளை நாடித் தேட வேண்டும்.
ஜெபம்:
பரலோக மேன்மைக்காக என்னை அழைத்தவரே, கிறிஸ்து இயே சுவிலே நிலைத்திருந்து, அவரை என் வாழ்விலே வெளிப்படுத்தும், கனி கொடுக்கும் வாழ்க்கை வாழும்படிக்கு என்னை உம்முடைய வழியிலே நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - யோவான் 15:1-5