தியானம் (தை 15, 2026)
வழிநடத்தும் சத்திய ஆவியானவர்!
லூக்கா 1:38
இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள்.
ஆண்டவராகிய இயேசுவின் தாயாகிய மரியாள், கன்னிகையாக இருந்த போது, தனக்கு இன்னபிரகாரமாக காரியங்கள் நடக்கப்போகின்றது என்ற அறியாதிருந்தாள். அன்றிருந்த யூத கலாச்சாரமானது கடும் போக் ககையுடையதாக இருந்ததாகவும், அக்காலத்தின் மதத் தலைவர்கள் கடும் தண்டனைகளை வழங்குகின்றவர்களாக இருந்தார்கள் என்றும், வேதத்தின் வாயிலாக நாம் அறி கின்றோம். காபிரியேல் என்னும் தூதன், மரியாள் இருந்த வீட்டில் பிரவேசித்து: கிருபை பெற்றவளே, வாழ்க, என்று வாழ்த்தினார். அன் றைய கலாச்சாரத்தின்படி செய்ய முடியாததை, ஒரு கன்னிகையால் நிறைவேற்றக் கடினமாக காரியத் தை, செம்மையாய் செய்து முடிக்கும்படியாக தேவ கிருபையானது கன்னியையாக இருந்த மரியாளுக்கு வெளிப்பட்டது. தேவ கிருபை யைப் பெற்றவர்கள், தங்கள் வாழ்வை தேவ சித்தத்திற்கு முற்றும் முழு வதுமாக ஒப்படைக்கும் போதே, அந்தக் கிருபையின் நோக்கத்தின் பலனை தங்கள் வாழ்விலே கண்டடைகின்றார்கள். மரியாளோ: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்று தேவ சமூகத்திலே தன்னைத் தாழ்த்தினாள். தன் பிள்ளையை கொலை செய்யும்படி மத்தலைவர்கள், சிறப்பு குடிமக்கள் வகை தேடுகின்றார்கள் என்று ஒரு தாயானவள், அறிந்து கொள்ளும் போது அந்த வேதனை எப்படிப்பட்டதாக இருக்கும். கொலை செய்ய தேடுகின்றவர்கள் அந்த பிள்ளையின் பெற்றோரை குறித்து என்ன கூறு வார்கள். சிலுவை மரணம் அக்காலத்திலே, மிகவும் நிந்தையுள்ள மரணமாக இருந்தது, ஒரு தாயானவள் எப்படி அதை பார்த்து சகித்து கொள்ள கூடும். இவைகள் யாவும் இன்று இலகுவாக நமக்கு தோன்றலாம், ஆனால், மரியாளோ அவைகள் யாவையும் தன் இருதயத்திலே வைத்து, தேவகிருபையினாலே எல்லாவற்றையும் தேவ சித்தப்படி செய்து முடி த்தாள். பிரியமானவர்களே, தேவ சித்தமானது நம் வாழ்விலே நிறை வேறும்படிக்கே தேவ கிருபையானது நமக்கு கொடுக்கப்படுகின்றது. நாம் சகல சத்தியத்திலும் நடத்தப்படுவதற்கு சத்திய ஆவியானவர் நம்மோடு இருக்கின்றார். தேவ அன்பனது தன்னில் நிலைத்திருக் கின் றது என்று கூறுகின்ற எவனும் தேவனு டைய சத்திய வார்த்தைகளாகிய கற்பனைகளை கைகொள்கின்றான். அவன் விசுவாசத்திலே நிலைத்திரு ப்தினால், உலகத்தின் பேக்கின்படி வாழாமல், இந்த உலகத்தை ஜெயங் கொள்கின்றான்.
ஜெபம்:
வாக்கு மாறாத தேவனே, நான் எப்போதும் உம்முடைய வார்த்தையில் நிலைத்திருந்து, உம்முடைய சித்தத்தை என் வாழ்விலே நிறைவேற்றிமுடிக்க எனக்கு பெலன் தந்து என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - 1 யோவான் 5:1-5