புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 09, 2026)

மனமாற்றமும் மறுரூபமும்

பிலிப்பியர் 2:6

அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக.


ஒரு ஊரிலே உத்தமாக வாழ்ந்து வந்த மனிதனாவனொருவன் மேல், அந்த ஊரிலுள்ளவர்களில் சிலர், பாரிய குற்றமொன்றை சுமத்தினார்கள். தான் நிரபராதி என்று நிரூபிப்பது அந்த மனிதனுக்கு மிகவும் இலகு வான காரியமாக இருந்தது. ஆனால், தான் அதை செய்தால், ஊரிலே பாதாகமான பின்விளைவுகள் உண்டாகும். அங்கு நிலவும் பிரிவி னையின் எண்ணங்கள் பெரிதான கலகங்களை ஜனங்கள் மத்தியிலே ஏற்படுத்தும். உண்மையாக குற்ற ங்களை செய்தவர்கள், பெரும் தண் டனைக்கு உள்ளாவார்கள் என்று என்று அறிந்து, அந்த குற்றத்தை தன்மேல் ஏற்றுக் கொண்டார். எனவே, மற்றவர்களை நிரபராதிக ளாக்கும்படிக்கு தண்டனையை தாமே சுமந்து கொண்டார். இவர் தான் எங்கள் கர்த்தரும் இரட்சகருமாகிய ஆண்வராகிய இயேசு கிறிஸ்து. அவருடைய சாயலிலே வளர்ந்து பெருகும்படி அழைக்கப்பட்ட சகோதர சகோதரிகளே, சில சமயங்களிலே உங்கள் குடும்பங்களிலே, சபை யிலே குற்றங்கள் உங்கள் மேல் சுமத்தப்படலாம். ஒருவேளை நீங்கள் நிரபராதியாக இருக்கலாம் அல்லது நீங்கள் தான் நிரபராதி என்று நீங்களே எண்ணிக் கொள்ளலாம். நீங்கள் எடுக்கப்போகும் தீரமானம், குடும்பத்திலேயோ அல்லது சபையிலேயோ சமாதானத்தை அல்லது பிரிவினைகளை உண்டாக்கலாம். சிலர் பின்னமாற்ற வாழ்க்கைக்கு திரும்பிப் போலாம். வேறு சிலர், சத்தியததை சுத்தமாக பேசாதவர்க ளோடு நட்பாகி விடலாம் அதனால் தங்கள் ஆத்துமாக்களை கெடுத்துக் கொள்ளலாம். இந்த நிலைமையிலே நீங்கள் எதைத் தெரிந்து கொள் வீர்கள்? மாம்சதின் போராட்டத்தையா? அல்லது ஆவிக்குரிய போரா ட்டத்தையா? ஊங்களுக்குகானவைகளை நோக்குவீர்களா அல்லது பிற ருக்கானவைகளை சிந்திப்பீர்களா? இப்படிப்பட்ட சூழ்நிலைகள் எனக்கு ஏற்படவில்லை என்று ஒரு விசுவாசி கூறிக் கொள்வானானால், அவன் எங்கே நிற்கின்றான் என்பதை அவன் ஆராய்ந்து பார்க்க வேண்டும். இத்தகைய சூழ்நிலைகளை நாம் யாவரும் ஏதோ ஒரு விதத்திலே சந்தி த்திருக்கின்றோம். இனிமேலும் சந்திக்க நேரிடலாம். பிரியமானவர்களே, தபசு நாட்கள் என்று இன்று பலர், மீட்பர் இயேசுவின் பாடுகளை நினைவுகூரும்படி, பல வெளிப்படையான தானதர்மங்களையும், ஒறுத் தல்க ளையும், தியாகங்களையும் செய்து வருகின்றார்கள். நல்லது! ஆனால், மனமாற்றம் வேண்டாமா? கிறிஸ்துவின் சிந்தை வேண்டாமோ? சிந் தியுங்கள் செயற்படுங்கள். தேவ ஆவியானவர்தாமே உங்களுக்கு துணை செய்வாராக.

ஜெபம்:

நித்தியமானவைகளை தேடுங்கள் என்று கூறிய தேவனே, தவறான உபதேசங்களினாலே நான் வழிதவறிப் போய்விடாதபடிக்கு, உம்முடைய சத்தியத்திலே நிலைத்திருக்க எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ஏசாயா 53:4