தியானம் (வைகாசி 10, 2026)
வஞ்சகத்திற்குட்படாதிருங்கள்
2 கொரிந்தியர் 11:3
ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன்.
ஒரு மனிதனானவன், மாலை நேரம் தன் வேலையை முடித்த பின்பு, தெரு வோரமாக பஸ் வண்டிக்காக காத்துக் கொண்டிருந்தான். அந்த வேளை யிலே, அவ்வழியாக வந்த வாலிபனொருவன், ஒரு விலையுயர்ந்த கை கடிகாரத்தை அந்த மனிதனுக்கு காட்டி, அதை; குறைந்த விலைக்கு விற்க போவதாக கூறினான். அதன் விலையை நிரூபிக்கும்படிக்கு அதன் பற்றுச்சீட்டையும் காண்பித்தான். அந்த வாலிபனானவன் பார் வைக்கு மிகவும் ஒழுக்கமுள்ள வனும், பேச்சிலே சாந்தமுள்ள வனாகவும் இருந்தான். அந்த கைகடிகாரத்தின் பட்டி தங்கம் பூசப்பட்டது என்று கூறினான். அந்த கைகடிகாரமும் பார்வை க்கு மிகவும் அழகாக காட்சிய ளித்தது. அதனால், அந்த மனித னானவன், சந்தோஷத்தோடு அக் கைகடிகாரத்தை விலை கொடுத்து வாங்கினான். வீடு சென்ற பின்பு, அந்த கைகடிகாரம் பழுதடைந்ததென்றும், போலியான தங்கம் என்றும் அறிந்து கொண்டான். இந்த உலகிலே போலியானவை களை உண்மையானவைகளாக காண்பித்து மற்றவர்களை ஏமாற்றுகி ன்றவர்கள் இருக்கின்றார்கள். ஒருவன் போலியாதை உண்மையானது என்று மற்றவர்களை வஞ்சிப்பதற்கு உண்மையானதைக் குறித்த தரவு களை அறிந்திருக்க வேண்டும். விசுவாசிகளை தங்கள் சுய இலாபத் திற்காக வஞ்சிக்கின்றவர்கள் அன்றும் சபைகளிலே இருந்தார்கள். இன் றும் இருக்கின்றார்கள். இவர்கள் ஒரு கால கட்டத்திலே விசுவாசிகளாக இருந்து, தங்கள் மாம்ச இச்சைககளுக்கு இடங்கொடுத்து பின்மாற்ற மான வாழ்க்கைக்கு திரும்பினவர்களாக இருக்கலாம் அல்லது ஆரம்பத்திலிருந்தே விசுவாசியைப் போல தங்களை காண்பிக்கின்றவர்களாக இருக்கலாம். பொதுவாக இவர்கள் நன்மை செய்கின்றவர்களாகவும், பாவத்திலே விழுந்தவர்காக வழக்காடுகின்றவர்களாகவும் தங்களைக் காண்பித்துக் கொள்வார்கள். பொதுவாக இவர்கள், தீமையான வித்து க்களை விசுவாசிகளின் மனதிலே விதைக்கின்றவர்களாக காணப்படு வார்கள். அதை பார்த்தால் என்ன குற்றம்? அங்கே போனால் பரிசுத்தம் குறைந்து விடுமோ? இதை கேட்டால் என்ன? என்று உலக போக்கோடு ஒத்துப் போகின்றவர்களாகக் காணப்படுவார்கள். ஆதியிலே சர்ப்பமா னது ஏவாளை வஞ்சித்தது போல, உங்களையும் வஞ்சிக்காதபடி பொல் லாத வேலையாட்களுக்கு எச்சரிக்கையாக இருங்கள்.
ஜெபம்:
சத்திய வழியிலே என்னை நடத்தும் தேவனே, உம்முடைய சத்தி ய வார்த்தையிலே நிலைநின்று, இந்த உலகிலே கிரியை செய்து வரும் வஞ்சகத்தின் ஆவிகளை நிதானிதறிய எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - யோவான் 16:13