தியானம் (கார்த்திகை 23, 2025)
பிதாவானவர் விரும்பும் கிரியைகள்
மத்தேயு 7:21
பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல்,
ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த ஒரு வியாபாரிக்கு இரண்டு குமார்கள் இருந்தார்கள். அந்த முதலாளியானவன், எந்த பட்சபாதமுமில்லாமல், இரு வரையும் வியார அலுவல்களை கவனித்து வரும்படி, அவனவனுக்கு சில வேலைகளை பகிர்ந்து கொடுத்து வந்தான். மூத்த குமாரனோ, தன் தகப்பனானவர், தனக்கு கூறியதை செய்து முடிப்பதில் மிகவும் கருத் துள்ளனாக இருந்து வந்தான். தகப் பனானவர் தனக்கு கொடுத்ததை அவர் கூறிய பிரகாரமாக செய்து முடிக்கும் வரைக்கும், மற்றய அலுவல்களில் தன் நேரத்தை விரயப்படுத்தாதபடி க்கு கவனமுள்ளவனாக இருந்தான். இளையவனோ, சில வேளைகளிலே, தன் தகப்பனானவர் செய்து முடிக்கு ம்படி கூறிய சில வேலைகளை அப் படியே விட்டுவிட்டு, வியாபாரத்திலே தனக்கு பிடித்ததும், தனக்கடுத்த முமான அலுவல்களை செய்து முடிப்பதில் ஆசையுள்ளவனாக இருந் தான். நாட்கள் கடந்து சென்ற பின்பு, தகப்பனானவர், தன்னுடைய குமா ர்களுக்கு கொடுத்த பொறுப்புக்களை ஆராய்து பார்த்த போது, இளை வனுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகள் அரைகுறையாக செய்து முடி த்திருப்பதை கண்டு, அவனை அழைத்து, அவனுக்கு ஆலோசனை கூறி னார். அவனோ, தகப்பனானவர் கூறியவைகளை கேட்க மனதில்லாத வனாய், இது யுகம், நவீன உலகம், காரியங்களை இப்படித்தான் நடத்த ப்பட வேண்டும் என்று தன் தகப்பனானவருக்கு ஆலோசனை கூறிவிட்டு தன் வழியே சென்று விட்டான். இவர்களில், எவனைக்கு குறித்து தப்பனானவர் சந்தோஷமடைவார்? தன்னுடைய சொல்லைக் கேட்டு, அதன்படி காரியங்களை செய்கின்ற மூத்த குமாரனிடத்திலே பிரியமாக இருப்பரல்லவா! நித்திய ஜீவனுக்கென்று அழைப்பை பெற்ற அருமை யான சகோதர சகோதரிகளே, இன்றைய நாட்களிலே, அநேகர் அந்த இளைய குமாரனுக்கு ஒப்பாக இருக்கின்றார்கள். ஆண்டவர் இயேசுக்கு ஆலோசனை கூறுபவர்களைப் போல நடந்து கொள்கின்றார்கள். பிதா வாகிய தேவனுடைய சித்தத்தை தங்கள் வாழ்வில் நிறைவேற்ற மன தில்லாமல், தங்களுக்கு பிடித்த பற்பல காரியங்களிலே தங்களுக்கு கொடுப்பபட்ட தலாந்துகளையும், நேரங்களையும் விரயப்படுத்தி வருகி ன்றார்கள். நீங்களோ உங்கள் அழைப்பையும் தெரிந்து கொள்ளுதலை யும் உறுதிப்படுத்திக் கொண்டு, எதற்காக அழைக்கப்பட்டீர்களோ, அதை அடையும்படி விசுவாசத்திலே நல்ல போராட்டத்தை போராடு ங்கள். நித்திய ஜீவனை பற்றிக் கொள்ளுங்கள்.
ஜெபம்:
நித்திய ஜீவனுக்கென்று என்னை அழைத்த தேவனே, நான் விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடி, நித்தியஜீவனைப் பற்றிக் கொள்ளுக்படிக்கு உணர்வுள்ள இருயத்தை தந்து எங்ளை வழிடநத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - 1 தீமோ 6:12