புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 29, 2025)

நித்தியமாய் நிலைத்திருப்பவைகள்

மாற்கு 13:31

வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.


இந்த பூமியிலே ஐசுவரியவான்களும், ஏழைகள், பிரபுக்களும், குடிமக் களும் வீடுகளை கட்டுகின்றார்கள். தங்கள் அறிவிக்கும், வசதிக்கும் தக்கதாக அவைகளை அமைத்துக் கொள்கின்றார்கள். அவையொன்றும் பெரும் மழைக்கும், கடும் புயல்களுக்கும் நிலைநிற்பதில்லை. செல்வ செழிப்போடு வாழ்பவர்கள் சிறந்த நவீன தொழில்நுட்பங்களை உப யோகித்து தங்கள் மாளிகை களை கட்டுகின்றார்கள். ஒரு வேளை இந்த பூமியிலே காலநிலைகள் கார ணமாக உண்டாகும் புயல்களுக்கு இவைகள் நிலைநிற்கலாம். தேவ னுடைய வார்த்தை இன்னதென் பதை உணராமல் தங்கள் வீடுகள் கன்மலையின்மேல் கட்டப்பட்ட வீடுகள் என்று எண்ணிக் கொள்கின் றார்கள். 'அவர்கள் நரர் படும் வருத்தத்தில் அகப்படார்கள்; மனுஷர் அடை யும் உபாதியை அடையாததால், அவர்களை பெருமை சரப்பணியைப் போல் அவர்களைச் சுற்றிக்கொள்ளும்; கொடுமை ஆடையைப்போல் அவர்களை மூடிக்கொள்ளும். அவர்கள் கண்கள் கொழுப்பினால் எடுப்பாய்ப் பார்க்கிறது. அவர்கள் இருதயம் விரும்புவதிலும் அதிகமாய் நடந்தேறுகிறது. அவர்கள் சீர்கெட்டுப்போய், அகந்தையாய்க் கொடுமை பேசுகிறார்கள்; இறுமாப்பாய்ப் பேசுகிறார்கள். தங்கள் வாய் வானமட்டும் எட்டப்பேசுகிறார்கள்; அவர்கள் நாவு பூமியெங்கும் உலாவுகிறது.' தங்களுக்கு தங்கள் அறிவும், பிரயாசமும் போதும், ஆனால் வறியவர்களே தேவனை தேட வேண்டும். ஏழைகளுக்கே தேவ பக்தி தேவை என்று கூறிக் கொள்கின்றார்கள். 'இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அந்த வார்த்தையினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது.' (2 பேதுரு 3:7) என்பதை உணராதிருக்கின்றார்கள். பிரியமானவர்களே, ஆண்டவர் இயேசுவ வீடு, கற்களாலும் சீமேந்துதினாலும் கட்டப்படும் வீடுகளைபற்றியதல்ல. மாறாக குடும்பத்தையும், வாழ்க்கைiயும் பற்றியதாகும். ஒருவன் ஆண்டவர் இயேசுவின் வார்த்தையின்படி தன் குடும்ப வாழ்வை அமைத்துக் கொள்ளும்போது, அவன் போடப்ப ட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவின் மேல் தன் வாழ்வை அமைத்துக் கொள்கின்றான். வானமும் பூமியும் ஒழிந்துபோம், ஆண் டவர் இயேசுவின் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை. ஆதலால், அந்த வார்த்தையில் நிலைத்திருக்கின்றவர்களும் அசைக்கப்படுவதி ல்லை.

ஜெபம்:

நித்தியமான தேவனாகிய கர்த்தாவே, நீர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா என்னும் உண்மையை நான் அறிந்து உணர்ந்து தேவ பயத்தோடு, உம் வழிகளில் நடக்க எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 127:1