தியானம் (மார்கழி 14, 2025)
போராட்டங்களிலே வெற்றி
யோவான் 16:33
உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்.
ஆதியிலே ஆதாம் ஏவாள் தேவ மகிமையோடு ஏதேனிலே இருந்த போதும் அவர்கள் ஏக மனதுடன் தேவ பிரசன்னத்திலே வாழ்ந்து வந்தா ர்கள். அவர்களை குழப்புவதற்கோ, வேற்றுமையான உபதேசங்களை கூறுவதற்கோ, வேறு மனிதர்கள் யாரும் இருந்ததில்லை. அப்படியி ருந்தும் பிசாசானவன் அவர்களை வஞ்சித்தான். காரியம் அப்படியாக இருந்தால், தேவ மகிமை இழந்த பல கோடிக் கணக்கா மனிதர்கள் வாழும் உலகத்திலே, அநேகர் வஞ் சித்து, பிரிவினைகளை உண்டாக்கு வது இலகுவாக காரியமல்லவா? நாம் தேவனால் உண்டாயிருக்கிறோ மென்றும், உலகமுழுவதும் பொல் லாங்கனுக்குள் கிடக்கிறதென்றும் அறிந்திருக்கிறோம் என்று 1 யோ வான் 5:19 ம் வசனத்திலே வாசிக் கின்றோம். கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது. அதின் வழியாய்ப் பிர வேசிக்கிறவர்கள் அநேகர் என்று ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கி ன்றார். கருப்பொருளாவது, நாம் தேவ ராஜ்யத்தை நோக்கி யாத்திரை செய்து கொண்டிருக்கும் நமக்கு பேராட்டங்கள் உண்டு. மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பி ரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களி லுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. (எபேசியர் 6:12). அப்படியாக போராட்டங்கள் இல்லை செழிப் பான வாழ்வு மட்டும் உண்டு என்று பிரசங்கிக்கின்றவர்களை குறித்து எச்சரிக்ககையாயிருங்கள். வஞ்சிக்கும் ஆவிகள் கிரியை செய்து வருகி ன்றது. போராட்டங்கள் ஒன்றின் பின் ஒன்றாக வரும் ஆனாலும், மலை ப்பிரசங்கததிலே ஆண்டவர் இயேசு கூறிய வார்த்தைகளை அறிந்தவர் கள், தேவனுக்கு பிரியமானவைகள் எவை என்றும், பொல்லாங்கனு டைய தந்திரம் இன்னதென்றும் அறிந்திருக்கின்றார்கள். அறிந்தவர்கள், தங்கள் வாழ்வை அந்த வார்த்தைகளின்படி அமைத்துக் கொள்ளும் போது, எப்படியாக போராட்டங்கள் வந்தாலும், எத்தகைய வஞ்சகங்கள் நம்மை நோக்கி வந்தாலும், அவையொன்றும் நம்மை மேற்கொள்ள முடியாது. எனவே, கோணலும் மாறுபாடுமான சந்ததியிலே வாழும் தேவ பிள்ளைகளே, உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்று ஆண்டவரா கிய இயேசு கூறிய வார்த்தைகளை மறந்து போய்விடாதிருங்கள்.
ஜெபம்:
போராட்டங்களிலே என்னை வெற்றி சிறக்க பண்ணுகின்ற தேவனே, உம்முடைய வார்த்தையின் மேன்மையை உணர்ந்து, உலக த்தை ஜெயம் கொள்ளும்படிக்கு என்னை உம் வழியிலே நடத்திச் செல்வீ ராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - மத்தேயு 15:30