புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 08, 2025)

வாழ்வுக்குச் செல்லும் ஒரே வழி

2 பேதுரு 3:9

ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறு மையுள்ளவராயிருக்கிறார்.


தேவனாகிய கர்த்தர் பரலோகத்திற்கு செல்லும் வழியை இடுக்கமாக்கினாரோ? இல்லை. தேவன், தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார். (யோவான் 3:16). ஆதியி லிருந்து, மனித குலத்தை பாதாள த்தின் வல்லடிக்கு உட்படுத்துவதே, பிசாசானவனுடைய நோக்கமாக இரு க்கின்றது. தேவனாகிய கர்த்தர் வில க்கிய தீமையான கனியை அவன் நன்மை என்று ஏவாளுக்கு காண்பித்து, அவளை வஞ்சித்தான். அது போலவே, எப்போதும், அவன் அழி வின் வாசலை விரிவாக்கி, அந்ம வழியை நன்மையானதென்றும் விசாலமானதென்றும் காண்பிக்கின்றான். அந்த மாயைமான வழி, பார்வை க்கு இலகுவாகவும், வாழ்வதற்கு உல்லாசமாகவும் தென்படுவதால், அநேகர் அந்த கேட்டின் வழியை தெரிந்து கொள்கின்றார்கள். அந்த கேட்டின் வழியிலிருந்து, மனித குலத்தை மீட்க வேறெந்த வழியும் இல்லாதிருந்ததால், நம்மீது அன்புகூர்ந்த பிதாவாகிய தேவன்தாமே, பரலோகத்திற்கு செல்லும் ஒரே வழியை ஏற்படுத்தும்படிக்கு, தம்முடைய ஏக சுதன் என்றும் பாராமல், திருக்குமாரனாகிய இயேசுவை இந்த உல கிற்கு அனுப்பினார். மீட்பராகிய இயேசுதாமே, மனித குலத்தின்மேல் விழுந்த ஆக்கினைக்குரிய விலையை செலுத்தினார். எந்த மனிதனாலே, உலக செல்வத்தினாலே செய்ய முடியாதிருந்த கடினமாக பாதையை அவர் தெரிந்து கொண்டு, கல்வாரி மலையிலே தம்மை பலியாக ஒப்புக் கொடுத்தார். மீட்பராகி இயேசுதாமே, அந்த இடுக்கமான வழியை தெரிந்து கொண்மு, மரணத்தையும் பாதாளத்தையும் ஜெயம் கொண்டு, நாம் யாவரும் பிதாவாகிய தேவண்டைக்கு தைரியமாக சேரக்கூடிய சிலாக்கியத்தை உண்டு பண்ணினார். ஆனால், உலகமும், அதன் போக்கை ஆளும் பிசாசானவனும், ஆண்டவராகிய இயேசுவை பகைத்து, அவரை துன்பப்படுத்தியது போல, அந்த ஜீவனுள்ள வழியினூடாக செல்கின்றவர்களையும் பகைத்து துன்பப்படுத்துகின்றான். அதனால், அந்த நல்ல வழியானது, உலகத்திற்கு இடுக்கமான வாசலாக இருக்கின்றது. அந்த இடுக்கமாக தோன்றும் ஒரே வாசல் வழியாக உட்பிரவேசித்து, நெருக்கமாக தோன்றும் வழியை தெரிந்து கொள்கின்றவர்களை, தேவன்தாமே விசாலத்திலே கொண்டு வந்து விடுகி ன்றார்.

ஜெபம்:

பிதாவாகிய என் தேவனே, சத்துருவின் வஞ்சகமான திட்டத்திற்குள் நான் சிக்கிக் கொள்ளாதபடிக்கு, எனக்கு பிரகாசமுள்ள மனக்க ண்களை தந்து வழிநடத்திச் செல்வதற்காக உமக்கு நன்றி செலுத்து கின்றேன். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 18:19