தியானம் (கார்த்திகை 25, 2025)
சோர்ந்து போக நற்கிரியைகள்
ரோமர் 2:7
சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார்.
நாம் நம்முடைய நற்கிரியைகளினாலேயல்ல, தேவ கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டடோம். இது தேவனுடைய ஈவு. இதிலே எந்த மாற்றுக் கருத்துமல்ல. ஆனால், இந்த வார்த்தையை தவறாக புரிந்து கொண்ட சிலர், கிரியைகள் அவசியமல்ல, அற்புத அடையாளங்கள் அவசியமல்ல, என்று பிரசங்கித்து வருவதால், தேவ பிள்ளைகள், இந்த உலகத்தின் பிள் ளைகளைப் போல மாறிவிடுகின்றார் கள். தங்கள் கிறிஸ்தவர்கள் என்று கூறிக் கொள்ளும் சிலர், தேவனு டைய உண்மையான சுவிசேஷர்களையும், தீர்க்கதரிசிகளையும் அற் பாக எண்ணி, 'பரலோகத்திலிருக் கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.' என்று ஆண்டவராகிய இயேசு கூறிய வார்த்தைகளை சுட்டிக் காட்டி தங்கள் சுய இஷ;டமான வாழ்க்கையை தெரிந்து கொள்கின்றார்கள். பிரியமான சகோதர சகோதரிகளே, நம்மு டைய ஆண்டவராகிய இயேசு எதற்காக இந்த வார்த்தைகளை கூறினார்? கள்ள தீர்க்கதரிகளுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே அதைக் கூறினார். அதனால், கர்த்தருடைய மெய்யான தீர்க்கதரிகள் இந்த உலகத்திலே இல்லை என்பது பொருளல்ல. தேவ னுடைய மெய்யான தீர்க்கதரிசகளை அற்பமாக எண்ணி அவர்களை தள்ளிவிடுபவர்கள், வஞ்சிக்கப்பட்டுப் போகின்றவர்களாக காணப்படுகி ன்றார்கள். தேவனகிய கர்த்தர் யாருக்கு நத்திய ஜீவனை அளிக்கி ன்றார்? 'தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவ னுக்குப் பலனளிப்பார். சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார்.' என்று ரோமர் 2ம் அதிகாரம் 6ம் 7ம் வசனங்களிலே வாசிக்கின்றோம்.
ஜெபம்:
அன்பின் பரலோக தகப்பனே, நான் சோர்ந்து போகாமல் நற்கிரியைகளை செய்யும்படிக்கு, செய்கையையும் விருப்பத்தையும் என்னில் நீர் ஏற்படுத்தி, கிருபையை பொழிந்து என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - பிலி 2:13