புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 20, 2025)

இடுக்கமான வழியை விசாலமாக்குகின்றவர்கள்

வெளி 3:8

உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத் தைக் கைக்கொண்டபடியி னாலே,


'இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது. அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.' ஏன்ற வார்த்தைகளை குறித்து கடந்த கிழமைகளிலே தியானித் தோம். இந்த வார்த்தைகளை நம் முடைய ஆண்டவராகிய இயேசு கூறிய பின்பு, அடுத்ததாக எந்த வார்த்தையை கூறியிருக்கின்றார் என்பதை கவனித்துப் பார்த்தீர் களா? நித்திய ஜீவனை கொடுக் கும் இடுக்கமான வாசலை பற்றி கூறிய பின்பு, கள்ளத்தீர்க்கதரிசிகளு க்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக் கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக் கிற ஓநாய்கள் என்று கூறியிருக்கின்றார். ஏனெனில், போலியான தீர்க்க தரிகள், கள்ளப் போதனைகளை செய்கின்றவர்கள், ஆண்டவர் இயேசு இந்த உலகத்திற்கு வந்து பரலோகம் சென்றதிலிருந்து, கூறப்படாததும், மனிதர்கள் மனதை கவர்ந்து கொள்ளும், புதிய வேதப்புரட்டான வெளி ப்பாடுகளையும், இலகுவான வழிகளையும் குறித்து இனிமையாக பேசு வார்கள். பிசாசானவன், நம்முடைய ஆண்டவராகிய இயேசுவை சோதி த்த போது, வேத வார் த்தைகளை குறிப்பிட்ட பிரகாரமாக, இவர்களும் வேத வார்த்தைகளை தவறான நோக்கத்துடன் சுட்டிக் காட்டுவார்கள். இடுக்கமென்று ஆண்டவர் இயேசு கூறிய வாசலை, இவர்கள் விசால மாக்கி அநேகரை தங் கள் வசமாக இழுத்துக் கொள்கின்றார்கள். வேத த்தின் கடைசிப் புத்தகமான வெளிப்படுத்ததிலே மூன்றாம் அதிகாரத் திலே கூறப்பட்ட லவோதிக்கேயா சபையைப் போல, 'நீ நிர்ப்பாக்கிய முள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர் வாணியுமாயிருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவானென்றும், திரவி யசம்பன்னனென்றும், எனக்கு ஒரு குறைவுமில்லையென்றும் சொல் லுகிறாய்' என்ற பிரகாரம் இந்த உலத்தின் செல்வ செழிப்புக்களை தேவ ஆசீர்வாதத்தின் அளவுகோலாய் வைத்திருப்பார்கள். பிரியமான வர்களே, நீங்களோ போலியான போதனைகளுக்கு இடங் கொடாமல், தேவனுக்கு பிரியமான பிலதெல்பியா சபையோரைப் போல, கொடுக் கப்பட்ட பொறுப்பிலே உண்மையாயிருங்கள். இயேசுவின் நாமத்தை அறிக்கையிட்டு, அவருடைய நல் சாட்சிகளாக வாழுங்கள். அவர் யாவையும் நிறைவாக்கி உங்களை நடத்திச் செல்வார்.

ஜெபம்:

பரலோக தேவனே, சீர்கேடும் பிரயோஜனமுமற்ற பேச்சுமாயிரு க்கிற விதண்டாவாதங்களுக்கு விலகி, தேவபக்திக்கேது வானவைகளை பின்பற்றி, கிறிஸ்துவின் சாயலிலே வளர எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 தீமோ 4:1