புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 14, 2026)

சமானதானத்தில் நிலைத்திருக்கும் வாழ்வு

ரோமர் 8:39

உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்.


'நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்.' என்ற நிச்சயம் தேவ ஊழியராகிய பவுலுடைய வாழ்க்கையிலே இருந்தது. அவர் எவ்விதமாக கர்த்தரின் பிரசன்னமாகுதலை வாஞ்சித்து, தான் பிடிக்கப்பட்ட நோக்கத்தை நிறை வேற்றுபடி, பின்னானவைகளை மறந்து முன்னானவைகளை நாடி ஓடினார். தன்னுடைய ஊழியத்தின் பதையில், வருத்தத்திலும், அநேகமுறை கண்விழிப்புகளிலும், பசியிலும் தாகத்திலும், அநேக முறை உபவாசங்களிலும், குளிரிலும், நிர்வாணத்திலும் இருந்த போதும், அவர் இலக்கின்மேல் கண்வைத்து முன்னேறிச் சென்றார். இன்று நம்முடைய வாழ்விலே வெவ்வேறான பாடுகள் உண்டாயிருக்கலாம். ஆனால், தன்னை கிறிஸ் துவையுடையவன் என்று சொல்லிக் கொள்கின்ற ஒவ்வொரு விசுவாசியின் வாழ்க்கையிலும், கிறிஸ்துவை பிரதிபலிக்கின்றதாக காணப்பட வேண்டும். அவனுடைய சிந்தனையும், சொல்லும், செயலும் தேவனு டைய சமுகத்திலே ஏற்புடையதாக காணப்பட வேண்டும். இது வாழ்க் கையிலே ஒரு நாள் அல்லது வருடத்தில் ஒருமுறை நடப்பதல்ல, ஒவ்வொரு நாளும், எல்லா சந்தர்பங்களிலும் கிறிஸ்துவின் சாயலிலே விருத்தியாகும் தன்மை காணப்பட வேண்டும். கிறிஸ்துவின் சாயலிலே வளருகின்றவன், பிதாவாகிய தேவனோடுள்ள ஐக்கியத்திலே நிலைத்திருக்கின்றான். அப்படியாக அந்த ஐக்கியத்திலே நிலைத்திருக்கின்றவன், அவருடைய சமாதானத்தில் நிலைத்திருக்கின்றான். இந்த உலகத்திலே அவனுக்கு உபத்திரவங்கள் வந்தாலும், உலகத்தை ஜெயித்த கிறிஸ்து அவனோடு இருப்பதினால், அவன் கலகக்கமடையவதில்லை, சோர்ந்து போவதில்லை. கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு எந்தக் காரியமும் பிரிக்கமாட்டாதென்று நிச்சயம் அவனுக்குள் காணப்படும்.

ஜெபம்:

என்னை அழைத்த தேவனாகிய கர்த்தாவே, இந்த பூலக வாழ்க்கையிலே எவ்விதமான சூழ்நிலைகள் ஏற்பட்டாலும், நான் மனம் தளர்ந்து போகாமல், உறுதியாய் உம் வார்த்தையை பற்றிக் கொண்டு வாழ எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 கொரி 11:24-27