புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 21, 2026)

அவயவங்களின் தொழில் வேறுபட்டது

ரோமர் 12:5

அநேகராகிய நாமும் கிறிஸ்துவுக்குள் ஒரே சரீரமாயிருக்க, ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறோம்.


ஒரு பாடசாலையிலே கல்விகற்று வந்த மாணவனொருவன், பொதுவாக எல்லா காரியங்களிலேயும் தன் பெற்றோருக்கு கீழ்படிந்து நடக்கின்ற வனாக காணப்பட்டான். ஒரு நாள், பாடசாலையின் அதிபரிடத்திலிருந்து பெற்றோருக்கு அழைப்பு வந்தது. அந்த மாணவனுடைய தகப்ப னானவர், அந்த அதிபரோடு பேசினார். ஆதிபர்: பாடசாலையில் அவர்களுடைய மகனானவனுக்கும் இன்னுமொரு மாணவனுக்கும் இடை யிலே நடந்த சண்டையை குறித்து கூறி, அதைபற்றி பேசுவதற்காக பாடசாலைக்கு வரும்படி கேட்டுக் கொண்டார். ஆன்றிரவு, பெற்றோர் தங்கள் மகனானவனை அழைத்து, அந்த கைகலப்பு எப்படி ஆரம்பத்தது என்று பல தடவைகள் கேட்டார்கள். அவனோ, தான் அதை ஆரம்பிக்கவில்லை, மற்றவனே எனக்கு அடித்தான் என்று உறுதியாய் கூறினான். அவனுடைய நண்பர்களும் சாட்சியாக நின்று அவ்வாறு கூறினார்கள். மறுநாள், பாடாலைக்கு பெற்றோர் சென்று அதிபரோட கலந்துரையாடிய போது, சம்பவத்தின் மற்றய பக்கத்தை அறிந்து கொண்டார்கள். உண்மையிலே மற்ற மாணவனே கைகலப்பை ஆரம்பித்தான். ஆனால், அநேக நாட்களாக, இவர்களுடைய மகனானவன், தன் நண்பர்களோடு சேர்ந்து, அவனை கேலி செய்து, அவனை கோபமூட்டி வந்தார்கள். குற்றமானது, மற்றய மாணவனை சாரும்படி இவர்களுடைய மகனானவன், மற்றவன் சண்டையை ஆரம்பிக்கும்படி காத்திருந்தான். கிறிஸ்துவின் சிந்தையை தரித்திருக்கும்படி அழைப்பை பெற்ற அருமையான விசுவாசிகளே, மேலே கூறப்பட்ட சம்பத்தின் கருபொருளாவது, பொதுவாக, எவரும் தங்கள் குற்றங் குறைகளை பூரணமான கூறுவதில்லை. இதற்கு விசுவாசிகள் விதிவிலக்கானவர்கள் அல்ல. எனவே, குற்றங் குறைகளை காணும் போது, நீங்கள் நியாயா திபதிகளாகி விடாதிருங்கள். நாம் ஒவ்வொருவரும் கிறிஸ்துவுக்குள் ஒரே சரீரமாக இருக்கின்றோம். நமக்கு ஒரே சரீரத்திலே அநேக அவ யவங்களிருந்தும், எல்லா அவயவங்களுக்கும் ஒரே தொழில் இராத துபோல, வௌ;வேறு அவயவங் களாக இருக்கின்றோம். குறைகள் குற்றங்களை காணும்போது, உங்கள் மனதின் ஆதங்கங்களை கர்;த் தரிடத்தில் தெரியப்படுத்துங்கள். அவருக்குள் சந்தோஷமாயிரு ங்கள். பொறுமையாய் இருங்கள். அழைத்த தேவனே நீதியுள்ள நியாயாதிபதியாக இருக்கின்றார்.

ஜெபம்:

ஞானதின் ஆவியை அருளுகின்ற தேவனே, சோதனையின் நாளிலே, என்னுடைய உணர்வுகளின்படி நடவமால், உம்முடைய வார்த்தையின் வழியிலே நடக்க எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 4:4-6