தியானம் (ஆடி 30, 2026)
உங்கள் ஆலோசகர் யார்?
2 கொரிந்தியர் 6:15
அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது?
ஒரு ஐக்கியத்திலுள்ள இரண்டு விசுவாசிகளுக்கிடையிலே குறிப்பிட்ட காரியத்தைக் குறித்து கருத்து முரண்பாடு, நாளடையிலே பிரிவினையை உண்டாயிற்று. அவர்களில் முதலாவது விசுவாசியாவன், தனக்கு ஆதாரமும், நியாயமும் கிடைக்க வேண்டும் என்று அவிசுவாசியாக இருந்த தன்னுடைய உறவினரிடம் சென்று, சபை ஐக்கியத்தில் நடந்த சம்பவங்களை யாவையும் விளக்கமாக கூறினான். உறவினராக இருந்த அவிசுவாசி, மிகவும் மூர்க்கம் கொண்டு, நீ பயப்படாதே, அடுத்த முறை நான் அந்த மனிதனை சந்திக்கும் போது, இதற்கு ஒரு முடியவை காணச்செய்வேன் என்றான். மற்றய விசுவாசி யானவனோ, மனமுடைந்தவனாய், சபையைக் குறித்த பாரமும், விசுவாசிகளின் ஐக்கியம் தங்கள் பிரச்சனையினால் பாதிக்கப்பட்டிருகின்றது என்று துக்கமடைந்தான். தன் மனதிலுள்ளவைகள் யாவவையும் தன் தியான வேளையிலே, தேவனுடைய பாதத்திலே இறக்கி வைத்தான். ஆவியானவருடைய வழிடத்துதலை நாடினான். தேவனுடைய நாமத்தின் மகிமைக்கென்று வேறுபிரிக்கப்பட்ட சகோதர சகோதரிகளே, கிறிஸ்துவுக்குள்ளே, விசுவாசிகள் யாவரும் ஒரே வீட்டாரும், ஒரே சரீரமாயும் அழைக்கப்பட்டடிருக்கின்றோம் என்பதை அறிந்திருக்கின்றீர்கள். அநித்தியமான இந்த வாழ்க்கையின் வழக்குகளை தீர்க்கும்படி யாரிடம் ஆலோசனைகளை நாடுகின்றீர்கள்? அவசிவாகிகள் உங்கள் ஆலோசகராக இருந்தால், அவர்களுடைய ஆலோசனை யாரிடம் இருந்து வருகின்றது? மாம்சத்திற்குரியதா? ஆவிக்குரியதா? நீங்கள் பயப்படும் நாளிலே யாரை நம்புவீர்கள்? தேவன், 'எவர்களை முன்குறி த்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார். இவைகளைக்குறித்து நாம் என்ன சொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்? தம்முடைய சொந்தக்குமார னென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி? தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர். ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர்; நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே'
ஜெபம்:
உம்முடைய பிள்ளையாக என்னை அழைத்த தேவனே, சகோத சிநேகம் என்னில் நிலைத்திருக்கவும், நான் நிதானமற்றுப் போகும் வேளையிலே பாவம் செய்யாதபடிக்கு என்னை கரம்பிடித்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - ரோமர் 8:35-39