புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 28, 2026)

தேவ வார்த்தையிலே வளருங்கள்

1 பேதுரு 3:17

தீமைசெய்து பாடநுபவிப்பதிலும், தேவனுக்குச் சித்தமானால், நன்மைசெய்து பாடநுபவிப்பதே மேன்மையாயிருக்கும்.


குறிப்பிட்ட ஞாயிற்றுக் கிழமையன்று, பிரசங்கத்திலே, 'தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது.' என்ற வசனமானது குறிப்பிடப்பட்டிருந்தது. சபையிலிருந்த விசுவாசியொருவன், இந்த வசனத்தை நன்றாக அறிந்திருந்தான். அநேகந்தரம் அவன் இந்த வசனத்தை வாசித்திருந்தான், பல வேதப் படிப்புக்களை ஆண்டுகளாக கேட்டிருந்தான். அதைக் குறித்து அவனும் வேதப்படிப்புக்களை எடுத்திருந்தான். எனினும், அந்த வசனம் குறிப்பான அன்று கூறப்பட்டதால், அந்த வசனத்தை தன் மனதிலே வைத்திருந்தான். அந்தக் கிழமை அவனுடைய வேலையிலே ஒரு சம்பவம் நடந்தது. அதனால் அவன் மிகவும் கோபம் கொண்டான். அவ்வேளையிலே அவன் பெருமையோடு நடந்து, தன் திறமையைக் காட்டி மற்ற வர்களை வெட்கப்படுத்தக்கூடிய சந்தர்ப்பம் உண்டாயிருந்தது. திடீரென, சபையிலே பிரசங்கிக்கப்பட்ட வசனமானது அவனுக்கு ஞாபம் வந்தது. அதனால் அவன் பொறுமையுள்ளவனாக தன் வாயை திறக் காமல் இருந்தான். நாட்கள் கடந்து சென்ற போது, எல்லார் முன்னிலையிலும், தேவன் அவனை உயர்த்தினார். அவன் அன்று தன் வாயை திறந்திருந்தால், அவன் அவமானமடைதிருப்பான். கருப்பொருளாவது, அந்த விசுவாசி போதிக்கப்படகூடிய மனநிலையுடைவனாக இருந்தான். தேவ ஊழியராகிய பவுல், பிலிப்பியர் 4ம் அதிகாரம் 10ம் 11ம் வசனங்களிலே எல்லாச் சூழ்நிலைகளிலும் மனரம்யமாக இருக்க கற்றுக் கொண்டார் என்று குறிப்பிடப்பட்டது போல, விசுவாசிகள் ஒவ்வொரு வரும், போதகத்தை ஏற்றுக் கொண்டு கற்றுக் கொள்கின்றவர்களாக இருக்க வேண்டும். சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும் போது, மகிழ்சி யாகவும், சூழ்நிலைகள் பாதகமாக தோன்றும் போது முறுமுறுக்கி ன்றவர்களாகவும் இருக்க கூடாது. சூழ்நிலைகள் சாதாமாகவும், செழிப் பாகவும் இருக்கின்ற வேளைகளிலே, நிதானத்தோடு, தேவ சித்தத்தை செய்கின்றவர்களாக காணப்பட வேண்டும். சூழ்நிலைகள் பாதகமாக தோன்றும் போது, விசுவாசத்திலே நிலைத்திருந்து ஜெயிக்கின்றவர்க ளாகவும், தேவனுடைய சித்தமானால், கிறிஸ்துவுக்காக எதையும் சகிக்க ஆயத்தமுள்ள இருதயமுடையவர்களாகவும் இருக்க வேண்டும். எனவே, விசுவாசிகளாகிய நீங்கள் தேவ வார்த்தையிலே அனுதினமும் வளர்ந்து பெருகும் சிந்தையுள்ளவர்களாக இருங்கள்.

ஜெபம்:

கைவிடாத தேவனே, உயர்விலும்இ தாழ்விலும், சோதனையி லும், வேதனையிலும் நான் உமக்குள் மனமகிழ்சியாக இருக்கும்படி எனக்கு போதித்து நான் நடக்க வேண்டிய வழியை உணரும் உள்ளத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 4:13