தியானம் (ஆவணி 25, 2026)
போதுமென்கிற மனம்
1 தீமோத்தேயு 6:6
போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.
அன்றும் இன்றும் தேவனால் உண்டான ஆத்தும இரட்சிப்பையும், கிறிஸ்துவுக்குள் வாழும் வாழ்க்கையையும், உலகத்தின் போக்கின்படி அளவிடுகின்றார்கள். ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்பதற்கு இந்த உலக கல்வி, செல்வம், அந்தஸ்து சார்ந்த விளக்கங்களை கொடுத்து வருகின்றார்கள். இவைகள் எல்லாம், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை அறியாதவர்களிடத்தில் இன்னமும் தாரளமாக இருக்கின்றது. இவைகள் உங்களுக்கு உண்டாகி பெரு கினால்;, அவை தேவனால் உங்க ளுக்கு உண்டானது என்பதை நீங்கள் உறுதி செய்து கொண்டு, அதன் வழியாக பிதாவாகிய தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுங்கள். உங்கள் ஆத்துமா மண்ணோடு ஒட்டிக் கொள்ளாதபடிக்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள். தேவ ஊழியராகிய பவுல், இந்தக் காரியங்களைக்குறித்து பிலிப்பியருக்கு எழுதியிருப்பதை நாங்கள் இந்த வருட ஆரம்பத்திலிருந்து தியானித்து வருகின்றோம். கருப்பொருளாவது, நம்முடைய கண்கள் இலக்கை நோக்கி இருக்க வேண்டும். கண்கள் இலக்கை நோக்கி இருப்பதற்கு, நித்திய ஜீவனானது இருதயத்தின் பொக்கிஷமாக இருக்க வேண்டும். கிறிஸ்துவின் அறிவை அறியும் மேன்மைக்காக இந்த உலகத்திலுள்ளவைகள் எவைகளை விட்டுவிட நேர்ந்தாலும், அவைகளை விட்டுவிடும் மனதையுடையவர்களாக இருக்க வேண்டும். 'போதுமென்கிற மனது டனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம். உலகத்திலே நாம் ஒன் றும் கொண்டுவந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டு போவதுமில்லை என்பது நிச்சயம். உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக்கடவோம். ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள். பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேரா யிருக்கிறது. சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள். நீயோ, தேவனுடைய மனுஷனே, இவைகளை விட்டோடி நீதியையும் தேவப க்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடு என்று தீமோத்தேயு என்னும் ஊழிய ருக்கு பவுல் அறிவுரை கூறியிருக்கின்றார். அந்தப்படியயே நாமும், கிறிஸ்துவுக்குள் மனரம்யமுள்ளவர்களாக, பரலோகதிற்குரிய மேலான வைகளை நாடித் தேடுங்கள்.
ஜெபம்:
மேலான இலக்கிற்கு என்னை அழைத்த தேவனே, விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடவும், நித்தியஜீவனைப் பற்றிக்கொள்ளும் இருதயமுடையவனாகவும் இருக்க எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - சங்கீதம் 62:10