தியானம் (மார்கழி 22, 2025)
எதற்காக இயேசுவை சேவிக்கின்றோம்?
லூக்கா 10:42
தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார்.
ஒரு சமயம், ஆண்டவரரிய இயேசுவும் அவருடைய சீஷர்களும், பிரயாணமாய்ப் போகையில், அவர் ஒரு கிராமத்தில் பிரவேசித்தார். அங்கே மார்த்தாள் என்னும் பேர்கொண்ட ஒரு ஸ்திரீ அவரைத் தன் வீட்டிலே ஏற்றுக்கொண்டாள். அவளுக்கு மரியாள் என்னப்பட்ட ஒரு சகோதரி இருந்தாள்; அவள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக் கேட்டுக் கொண்டிருந்தாள். மார்த்தாளோ பற் பல வேலைகளைச் செய்வதில் மிக வும் வருத்தமடைந்து, அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, நான் தனியே வேலைசெய்யும்படி என் சகோதரி என்னை விட்டு வந்திருக்கிறதைக் குறித்து உமக்குக் அக்கறையில் லையா? எனக்கு உதவிசெய்யும்படி அவளுக்குச் சொல்லும் என்றாள். இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: மார்த்தாளே, மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக் குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங் கைத் தெரிந்துகொண்டாள் என்றார். பாருங்கள், மார்த்தாள் இயேசுவை தன் வீட்டிலே ஏற்றுக் கொண்டாள். ஆண்டவராகிய இயேசுவே, உலகத்தில் வருகிறவரான தேவகுமாரனாகிய கிறிஸ்து என்பதை அவள் விசுவாசிக்கிருந்தாள் (யோவான் 11:27). தங்கள் வீட்டிற்குள் வந்த மெசியாவை உபசரிக்க வேண்டும் என்று பெரும் பிரயாசப்பட்டாள். ஆண்டவரை உபசரித்து, அவரைக் கனப்படுத்த வேண்டும். அவர் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வேலை செய்தாள். அன்றைய நாளிலே, அவளுக்கு ஒரு இரகசித்தை வெளிப்படுத்தினார். தான் இந்த உலகத்திற்கு மனிதர்களுடைய உபசாரத்தை நாடி வரவில்லை என்பதை தெளிவாக காண்பித்தார். நித்திய ஜீவனை கொடுக்கும் வசனத்தை தம்மை விசுவாசிக்கின்றவர்கள் ஆவலோடு கேட்டு, அந்த வசனத்திலே நிலைத்திருக்க வேண்டும் என்பதை தெளிவு படுத்தினார். தேவனை எதினால் பிரியபடுத்தமுடியும் என்பதை காண்பித்தார். நாம் நல்ல பங்கை தெரிந்து கொண்டு, அதற்படி வாழும் போது, ஆண்டவராகிய இயேசு இந்த உலகத்திற்கு வந்த நோக்கம் நம்மிலே நிறைவேறும். எனவே மீட்பர் இயேவுவின் பிறப்பை நினைவு கூரும் இந்த நாட்களிலே, இம்மைக்காக மாத்திரம் நாம் இந்த உலகிற்கு வந்த மீட்பராகிய இயேசுவை சேவிக்காமல், நித்தியத்திற்காக அவரிலே நாம் நிலைத்திருக்க வேண்டும்.
ஜெபம்:
பரலோக தேவனே, இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாக இராமல், நித்திய ஜீவனுக்காக நான் கிறிஸ்துவை பற்றிக் கொண்டிருக்க உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - 1 கொரி 15:19