புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 21, 2025)

கனிகனை அவதானித்துப் பாருங்கள்

மத்தேயு 7:20

ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.


அக்காலத்திலே தேசங்களிலே சாஸ்திரிகள், ஜோசியர்கள், அஞ்சனக்காரர், சூனியக்கார்கள், மந்திரவாதிகள் இருந்தார்கள். சில சமயங்களிலே இவர்கள் தேசத்தின் ராஜாவினால் அழைக்கப்படுவார்கள். இவர்கள் இனி நடக்கவிருக்கும் சில காரியங்களை குறிசொல்கின்ற ஆவி யினாலே சொல்லி வந்தார்கள். மோசேயின் நாட்களிலே, அவன் எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் முன்னி லையிலே, தேவ வழிநடத்துதலினா லே, அதிசயிக்கத்தக்க அற்புத அடை யாளங்களை செய்தான். அந்த வேளை யிலே, பார்வோன் தன்னுடைய சாஸ் திரிகளையும், சூனியக்காரரையும், தன் தேசத்திலிருந்த மந்திரவாதிகளும் அழைப்பித்தான். அவர்கள் தங்கள் மந்திரவித்தையினால் மோசே செய்த சில அற்புதங்களை செய் தார்கள். தேவ ஊழியராகிய பவுலின் நாட்களிலே, குறிசொல்ல ஏவுகிற ஆவியைக்கொண்டிருந்து, குறிசொல்லுகிறதினால் தன் எஜமான்களுக்கு மிகுந்த ஆதாயத்தை உண்டாக்கின ஒரு பெண் எங்களுக்கு எதிர்ப்ப ட்டாள். அவள் பவுலையும் எங்களையும் பின்தொடர்ந்து வந்து: இந்த மனுஷர் உன்னதமான தேவனுடைய ஊழியக்காரர், இரட்சிப்பின் வழியை நமக்கு அறிவிக்கிறவர்கள் என்று சத்தமிட்டாள். தேவ ஊழியரோ இயேசுவின் நாமத்திலே அந்த ஆவியை அதட்டி அவளைவிட்டு அகன்று போகும்படி கட்டளையிட்டார். இன்றைய நாட்களிலும், குறி சொல்கின்ற ஆவியையுடையவர்கள் இருக்கின்றார்கள். நாம் ஆராதி க்கின்ற தேவனாகிய கர்த்தர் சர்வ வல்லமையுள்ளவர், அவராலே செய்ய முடியாத காரியங்கள் ஒன்றுமில்லை. அந்த சத்தியத்திலே எந்த மாற்றமுல்லை. அப்படியிருந்தும், அவர் ஏன் தம்முடைய ஒரே பேறான குமாரனை இந்த உலகத்திற்கு அனுப்பினார்? அவர் வழியாக தம்மையும், தம்முடைய அன்பையும் வெளிப்படுத்தி, நமக்கு இரட் சிப்பின் வழியை உண்டுபண்ணி, நாம் இந்த உலகத்திலே எப்படி வாழ வேண்டும் என்பதை கற்றுக் கொடுத்தார். அவரிலே நிலைகொண்டவ ர்கள் தேவன் விரும்புகள் கனிகளை தங்கள் வாழ்க்கையிலே வெளிப்ப டுத்துவார்கள். மற்றவர்கள் அதைக் கண்டு சாட்சி சொல்வார்கள். எனவே, கள்ளத் தீர்க்கதரிசிகளையும் போலியான போதனை செய்கின்ற வர்களையும், அவர்களிடமிருக்கும் செல்வத்தினாலே, பொருட்களினா லோ, அவர்கள் பின் செல்லும் ஜனத் திரளினாலோ அல்லது அவர்க ளுடைய வரங்களினாலே அறிந்து கொள்ளாமல், மாறாக, தங்கள் நாளாந்த வாழ்வில் காண்பிக்கும் கனிகளினாலே அறிந்து கொள்ளு ங்கள்.

ஜெபம்:

என்மீது அன்பு கூர்ந்து என் தேவனே, மெய்யான ஞானத்தின் ஆவியை எனக்கு தந்து, உம்முடைய வார்த்தைகளை அறிந்து கொள்ளவும், அவைகளை கைக்கொள்ளவும் எனக்கு பெலன் தந்து என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - லூக்கா 15:15