தியானம் (மார்கழி 24, 2025)
தேவ வார்த்தை நிறைவேறட்டும்....
லூக்கா 1:38
அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம் முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள்.
விசுவாசிகள் பிதாவாகிய தேவனை நோக்கி ஜெபிக்கும் போது, தங்கள் தேவைகளை அவரிடத்திலே தெரிப்படுத்துகின்றார்கள். சில வேளைக ளிலே, அந்த தேவைகளை சந்திக்கும் வழியை தங்கள் இருதயத்திலே நிர்ணயம் செய்தவர்களாய், அந்த வழியிலே தங்களுக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கின்றார்கள். எடுத்துக் காட் டாக, பொருளாதார நெருக்கடி யிலிருக்கும் விசுவாசி, பதவி, சம் பள உயர்வுடன் ஒரு குறிப்பிட்ட வேலையை, குறிப்பிட்ட கம்ப னியிலே பெற்றுக் கொள்ள வேண் டும் என்று மன உறுதியுடன் ஜெபி க்கின்றான். ஆனால், அந்த வேளையிலே அது அவனைக் குறித்த தேவனுடைய சித்தமோ இல்லை என்பதைக் குறித்து சிந்திப்ப தில்லை. இந்த சந்தர்பத்திலே மாத்திரமல்ல, வௌ;வேறான பல சூழ்நிலைகளிலும், எனக்கு இப்படித்தான் ஆக வேண்டும் என்று உபவாசித்து கூட ஜெபிக்கின்றார்கள். ஆனால், உம்முடைய சித்தப்படி எனக்கு செய் யும் என்று மனதார அர்பணிப்போடு வேண்டுதல் செய்பவர்கள் எத் தனை பேர்? எத்தனை பேர் என்ன கணக்கைக் குறித்து சிந்திக்காமல், இயேசுவின் பிறப்பை நினைவு கூரும் இந்நாட்களிலே, என்னுடைய மனநிலை இன்று எப்படி இருகின்றது என்பதை ஆராய்ந்து பார்ப்பது நல்லது. விசுவாசிகளாகிய பெற்றோர் தங்கள் பிள்ளைகளை குறித்து வேண்டிக் கொள்ளும் போது, எப்படியாக ஜெபிக்கின்றார்கள்? கல்வியிலே சிறந்து விளங்க வேண்டும். பெரிய உத்தியோகங்கள் செய்ய வேண்டும். கைநிறைய உழைக்க வேண்டும் என்று பல காரியங்க ளுக்காக ஊக்கத்துடன் இடைவிடாமல் ஜெபிக்கின்றார்கள். ஆனால், என்னுடைய பிள்ளை உம்முடைய ஊழியத்தை செய்ய வேண்டும் என்று இன்று எத்தனை பேர் ஜெபிக்கின்றார்கள்? என்னுடைய பிள்ளை தேவ ஊழியனாக வந்தான் கஷ்டப்படுவான். எனவே அவன் தேவ ஊழியனாக வரக்கூடாது என்று எத்தனை பேர் மனதிலே தீர்மானம் செய்து கொள்கின்றார்கள். ஆனால் இயேசுவின் தாயாகிய மரியாளோ, தனக்கு இன்னவிதமாய் நடக்க போகின்றது என்பதை தெளிவாக அறியாதிருந்த போதும், தன்னை தேவ சித்தத்திற்கு பூரணமாக ஒப்புக்கொடுத்தாள். தேவனுடைய வார்த்தையின்படி எனக்கு ஆகட்டும் என்று தன்னை அர்ப ணித்தாள். அதுபோல எங்கள் வாழ்விலும், எங்கள் பிள்ளைகளுடைய வாழ்விலும் தேவனுடைய வார்த்தை நிறைவேற வேண்டும் அர்பணிப்பு எங்கள் வாழ்விலும் பெருகும்படியாக முன்னேறிச் செல்வோமாக.
ஜெபம்:
பரலோக தேவனே, என்னுடைய மாமிச எண்ணங்கள் என்னை மேற்கொள்ளாதபடிக்கு உம்முடைய சத்திய ஆவியானவரின் வழிநட த்துதலுக்கு ஒப்புக் கொடுத்து வாழ எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - மத்தேயு 6:10