புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 13, 2026)

ஒரே சிந்தையுள்ளவர்களாய்....

பிலிப்பியர் 3:16

ஆகிலும் நாம் எதுவரையில் தேறியிருக்கிறோமோ, அது முதல் ஒரே ஒழுங்காய் நடந் துகொண்டு, ஒரே சிந்தையா யிருப்போமாக.


ஆதலால் கிறிஸ்துவுக்குள் யாதொரு ஆறுதலும், அன்பினாலே யாதொரு தேறுதலும், ஆவியின் யாதொரு ஐக்கியமும், யாதொரு உருக்கமான இரக்கங்களும் உண்டானால், நீங்கள் ஏக சிந்தையும் ஏக அன்புள்ளவர்களாயிருந்து, இசைந்த ஆத்துமாக்களாய் ஒன்றையே சிந்தித்து, என் சந்தோஷத்தை நிறைவாக்குங்கள் தேவ ஊழியராகிய பவுல் பிலிப்பியருக்கு எழுதிய நிரூபத்தின் இரண்டாம் அதிகாரத்திலே குறிப்பிட்டிருப்தை கடந்த மாதங்களிலே தியானித்தோம். மறுபடியும், 3ம் அதிகாரத்திலே, தேறினவர்கள் யாவரும் பந்தையப் பொருளின் மேல் கண்களை பதியவைக்கும் சிந்தையுடையவர்க ளாக இருக்கும்படியாக கூறுகின்றார். சபைகளிலே பிரிவினைக ளும், வாக்குவாதங்களும், கலகங் களும் எதனால் உண்டாகின்றது என்பதை சிந்தித்துப் பாருங்கள். எடுத்துக் காட்டாக, ஒரு விசுவாசியானவன், தன் நடை உடை பாவ னையை சற்று இந்த உலகத்திற்கு ஒத்ததாக மாற்றிக் கொள்ளும் போது, அங்கே குழப்பங்களுக்கு ஏது உண்டாகி விடுகின்றது. இன்று அநேகர், இன்றநெற் ஊடகங்களிலே அநேக காரியங்களை பார்கின்றார்கள், கேட் கின்றார்கள். தங்கள் வாழ்க்கை முறையை தேவ வசனத்திற்கு அமை யும்படி மாற்றுவதற்கு பதிலாக, தங்கள் வாழ்க்கை முறைக்கு ஏற்பபடி உபதேசிக்கின்றவர்களை பின்பற்ற ஆரம்பிக்கின்றார்கள். அவற்றை யார், எங்கிருந்து பிரசங்கிக்கின்றார்கள். அவைகள் வேத வார்த்தைகளுக்கு ஒத்திருக்கின்றதா? அந்த உபதேசங்களின் கருப்பொருள் என்ன? அவை நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகின்றதா என்பiதை சிந்திப்பதில்லை. தற்போது, தங்களுக்டைய வாழ்க்கை முறைக்கு ஏற்புடையதாக இரு ப்பதால், அவர்களை தங்கள் போதகர்களாகிக் கொள்கின்றார்கள். அந்த எண்ணங்களை சபைக்குள் கொண்டு வரம்படி முயற்சி செய்யும் போது, அங்கே குழப்பங்களும், பிரிவினைகளும் உண்டாகி விடுகின்றது. பந் தையப் பொருளாகிய நித்திய ஜீவனை பற்றிக் கொள்கின்வர்கள், அதையே தங்கள் வாழ்விலே முதன்மை ப்படுத்திக் கொள்வதினால், ஏனைய எண்ணங்கள் தங்களுக்குள் கிரியை செய்ய இடம் கொடுப்ப தில்லை. மேலான இலக்கின்மேல் கண்களை பதிய வைக்கின்றவர்கள், வேதத்தை கருத்தோடு வாசித்து, ஊக்கத்தோடு ஜெபிக்கின்றவர் களாக காணப்படுவார்கள். அதுபோலவே நீங்கள் ஏக சிந்தையுள்ளவர்களாக மேன்மையான இலக்கை நோக்கி முன்னேறுங்கள்.

ஜெபம்:

என்றும் மாறாத தேவனே, இந்த உலகத்தின் போக்கின் மேல் கண்களை பதிய வைக்காமல், கிறிஸ்துவை மாதிரியாக கொண்டுஇ அவரைப் பின்பற்றி செல்லும்படிக்கு, எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிலிப்யியர் 2:1-2