புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 07, 2026)

'ஆயத்தமாயிருங்கள்'

மத்தேயு 24:44

நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்.


பரலோகத்திலிருக்கிற நம்முடைய குடியிருப்பிலிருந்து, கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிற அருமையான விசுவாசிகளே, கிருபையின் நாட்களிலே வசித்து வரும் நாம், இந்த நாட்களை, சாட்டுப்போக்கின் நாட்களாகவும், பிள்ளைகள் பெற்றோரின் வழிகளையும், பெற்றோர் பிள்ளைகளின் வழி களையும் நியாயப்படுத்தும் நாட்களாகவும் விரயம் செய்யாமல், அவருடைய நாளுக்கென ஆயத்தப்படுவ தற்கென பிரயோஜனப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆதயத்தமற்றவர்களாக இருப்பவர்களுக்கு உரைக்கப்பட்டிருக்கும் சத்திய வார்த்தை நிறைவேறும். ஏனெனில், 'அந்த நாளையும் அந்த நாழிகையையும் என் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள். நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனு ஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும். எப்படியெனில், ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள் வரைக்கும், ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண்கொண்டும் பெண் கொடுத்தும், ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டு போகுமட்டும் உணராதிருந்தார்கள்; அப்படியே மனுஷகுமாரன் வருங் காலத்திலும் நடக்கும். அப்பொழுது, இரண்டுபேர் வயலில் இருப்பார்கள்; ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், ஒருவன் கைவிடப்படுவான். இரண்டு ஸ்திரீகள் ஏந்திரம் அரைத்துக்கொண்டிருப்பார்கள் ஒருத்தி ஏற்றுக்கொள் ளப்படுவாள், ஒருத்தி கைவிடப்படுவாள். உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள். திருடன் இன்ன ஜாமத்தில் வருவானென்று வீட்டெஜமான் அறிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டானென்று அறிவீர்கள். நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார் ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்.' என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கூறியிருக்கின்றார். மற்றவர்களை குறித்த கரிசணை அவசியமானது. ஆனால், விசுவாசிகளாயிருக்கின்ற பெற்றோர், பிள்ளைகள், நண்பர்கள், உறவினர்கள், தங்கள் தங்கள் வழிகயை ஆராய்ந்தறிந்து, கர்த்தருடைய நாளுக்கென்று ஆயத்தமுள்ளவர்களாக காணப்பட வேண்டும். வானமும் பூமியும் ஒழிந்துபோம், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளோ ஒழிந்துபோவதி ல்லை. எனவே விழிப்புள்ளவர்களாக காணப்படுவோமாக.

ஜெபம்:

வார்த்தையில் உண்மையுள்ள தேவனே, நீர் தந்திருக்கும் கிருபையின் நாட்களை நான் விருதாவாய் எண்ணாதபடிக்கு, உணர்வுள்ள ஜீவியம் ஜீவிக்க மனக்கண்களை பிரகாசிக்கும்படி வேண்டிக் கொள்கின்றேன். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 1 தெச 5:17-22

Category Tags: