தியானம் (பங்குனி 05, 2026)
ஏக சிந்தை, ஏக அன்பு
மத்தேயு 6:10
உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய் யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.
'ஏக சிந்தை, ஏக அன்பு , இசைந்த ஆத்துமாக்களாய் ஒன்றையே சிந்தித்தல்', போன்றவை விசுவாசிகள் மத்தியிலே காணப்பட வேண்டும் என்று தேவ ஊழியராகிய பவுல், என்று கூறியிருக்கின்றார். விசுவா சிகள், எதைக் குறித்து ஏக சிந்தையும், ஏக அன்பும், இசைந்த ஆத் துமாக்களுமாக இருக்க வேண்டும்? இன்று குடும்பங்களிலே, சபை களிலே, தரிசனம் என்ற தலைப்பின் கீழ், பற்பல நற்கிரியைகளை காரிய ங்களை நடப்பித்து வருகின்றார்கள். கிறிஸ்துவை அறியாத உலகத்தார் மத்தியிலும், பல ஸ்தாபனங்கள் ஒன் றுபட்டு, அத்தகைய நற்கிரியைகளை பெரும் அளவிலே செய்து வருகின்றார்கள். அவர்கள் தாங்கள் தங்கள் கனவுகளையும், அபிலாiஷகளை யும் பின்பற்றுகின்றோம் என்று சொல்லிக் கொள்வார்கள். இந்த உலகத்திலே வழக்கத்திலுள்ள பழமொழியைப் போல 'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு' என்பதற்கமைய ஒற்றுமையும், ஒருமைப்பாடும் இருக் கும் இடத்திலே செய்யப்படும் காரியமானது வாய்க்கும் என்பதை பொது வாக யாவரும் அறிந்திருக்கின்றார்கள். உலகத்தின் போக்கிலே நட ப்பவர்கள் கூட, கூடிவரும் போது, வாக்குவாதங்கள், விவாதங்களை தவி ர்த்து, தங்கள் கூடுகையின் நோக்கத்திலே கவனம் செலுத்திக் கொள் கின்றார்கள். காரியம் அப்படியானால், தேவ சபையானது கூடி வரும் போது, எவ்வளவு கனத்தோடு நாம் காரியங்களை நடப்பிக்க வேண்டும் என்பதை சிந்தித்து பாருங்கள். ஒரு காரியத்தைக் குறித்த ஒருமை ப்பாடு, ஒற்றுமை நல்லது. நித்திய ஜீவனை சுதந்தரித்துக் கொள்வதே, விசுவாசிகள் நட்பிக்கும் கிரியைகளின் பிரதான இலக்காக காணப்பட வேண்டும். சபையின் எல்லையை விஸ்தரிப்பதால், தேவ சித்தம் நிறை வேறுகின்றது என்று கூறிவிட முடியாது. தங்கள் வாசல்களை வழியை விசாலமாக்கிக் கொள்கின்றவர்களிடத்தில் அநேகர் சேர்ந்து கொள்கின் றார்கள். வசுவாசிகள் மத்தியிலே ஏக சிந்தையும், ஏக அன்பும், ஒன்றையே சிந்திப்பதும் இருக்கும் போது, அவர்கள் தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும்படி இயேசுகிறிஸ்துவினால் வருகிற நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாகி, கிறிஸ்துவின் நாளுக்கென்று துப்புரவானவர்களும் இடறலற்றவர்களுமாயிருக்கும்படிக்கான ஆயத்தம் உண்டாயிருக்க வேண்டும். தேவ சித்தத்தை நிறைவேற்றுவதற்காகவே, விசுவாசிகள் மத்தியிலே ஒருமனமும் ஒற்றுமையும் காணப்பட வேண் டும்.
ஜெபம்:
பரலோக தேவனே, எப்போதும் உம்முடைய சித்தத்தைக் குறித்த சிந்தையுடையவர்ளாக காணப்பட எனக்கு பிரகாசமுள்ள மனக்கண்களை தந்து, உம்முடைய வார்த்தையின் வெளிச்சத்திலே என் னை நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - பிலிப்பியர் 2:5