புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 21, 2026)

கிறிஸ்துவை அறியும் மேன்மை

பிலிப்பியர் 3:8

அதுமாத்திரமல்ல, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமெ ன்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்


ஒரு சபையிலே இரண்டு சகோதர்களும், அவர்கள் குடும்பங்களும் மிகவும் நட்புள்ளவர்களாக இருந்துவந்தார்கள். அவர்களில் ஒருவன் கல்வி கற்று நல்ல உத்தியோகத்திலே இருந்தான். மற்றவன் தொழிற்சாலை யொன்றிலே வேலை செய்து வந்தான். அவர்கள் மத்தியிலே பொழுது போக்குகளைக் குறித்து பொதுவான விருப்பு வெறுப்புகள் இருந்ததால், அவர்கள் மத்தியிலே கருத்துமுரண்பாடுகள் இல்லாதிருந்தது. ஆண்டுகள் கட ந்து சென்ற பின்பு, சபையிலே நடந்து ஒரு காரியத்தைக் குறித்து அவர்கள் மத்தியிலே கருத்து முரண்பாடுகள் உண்டாகி, அது பிரிவினையாக மாறிவிட் டது. அவர்களுக்கிடையிலே வாக்குவா தங்கள் உண்டாயிற்று. தொழிற்சாலையிலே வேலை புரியும் அந்த சகோதர னுடைய வாயை எப்படியாவது அடக்க வேண்டும் என்று தீர்மானித்த மற்றய சகோதரன், 'அவன் கல்வி அறிவில்லாதவன், தன்னுடைய அறிக்கு ஏற்றபடிதான் நடந்து கொள்ளுவான்' என்று உலகத்தின் கல்வியினால் தான் கண்டு கொண்ட மேன்மையை, தன் சகோதரனை தாக்கும் ஆயதமாக்கிக் கொண்டான். பிரியமானவர்களே, முதலாவதாக விசுவாசிகள் மத்தியிலுள்ள ஐக்கியமானது, பொதுவான விருப்பு வெறுப்புக்களின் அடைபடையில் இருக்கலாகாது. 'எங்க ளுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவோடும் இருக்கிறது.' என்று தேவ ஊழியராகிய யோவான் தன்னுடைய நிரூபத்திலே கூறியிருக்கின்றார். இரண்டாவதாக, தன்னிடம் இருக்கும் உலக மேன்மைகளை குறித்து மேன்மைபாரட்டுகின்றவனிடத்தில் இருமனம் உண்டு. அவன் இன்னும் பழைய வாழ்க்கைக்குரிய மாம்சத்தின் எண்ணங்களுக்கு இடங் கொடுக்கின்றவனாக இருக்கின்றான். இத்தகைய நிலைமைகள் பிலிப்பி சபையிலும் இருந்ததால், மாம்சத்தின்மேல் நம்பிக்கை வைக்கவேண்டுமானால் நானும் வைக்கலாம்; வேறொருவன் மாம்சத்தின்மேல் நம்பிக்கையாயிருக்க நினைத் தால் நான் அதிகமாய் அப்படிச் செய்யலாம் என்று தேவ ஊழியராகிய பவுல் கூறினார். மத முறைமைகளின்படி எல்லாச் சடங்காரச்சாரங்களையும் நிறைவேற்றியிருந்தார். பிறப்பினாலே உண்டான சமூக அந்தஸ்து அவருக்கிருந்தது. மத சட்டதிட்டங்களின்படி குற்றம் சாட்டப்படாதராக இருந்தார். ஆகிலும், தனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ;டமாக எண்ணினார்.

ஜெபம்:

பரலோக தேவனே, இந்த மாயையான உலகம் தரும் மேன்மை களை நான் பற்றிக்கொண்டு, நான் நித்தியமானவைகளை விட்டுவிடாதபடிக்கு, மேலானவைகளை நாடித்தேட எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - கொலோ 3:1-2