தியானம் (சித்திரை 27, 2026)
நல்ல உபதேசங்கள்
நீதிமொழிகள் 22:6
பிள்ளையானவன் நடக்க வேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.
பிள்ளைகளை கண்டித்து, தண்டித்து வளர்க்க வேண்டும் என்று சில பெற்றோர்கள் கூறிக் கொள்வார்கள். வேறு சிலர், பிள்ளைகளுக்கு அடி க்காமல், அன்புகாட்டி, அரவணைத்து நடத்த வேண்டும் கூறிக் கொள்கின்றார்கள். இப்படியாக இந்த உலகிலே பற்பல அபிப்பிராயங்களோடு பிள்ளைகளை வளர்த்து வருகின்றார்கள். தங்கள் வளர்ப்பு முறையே சிறந்தது என்று அவரவர் பெருமை பாராட்டி கொள்கின்றார்கள். ஆனா லும் இந்த உலகிலே வன்முறைகள் குறைந்து கொண்டு போகின்றதா? அல்லது அதிகரித்துக் கொண்டு போகின்றதா? சில விசுவாசக் குடும்பங்களிலே, பிள்ளைகள் பெலனற்றுப் போகும்படிக்கு அவர்கள் கடுமையாக தண்டித்து, அவர்களுடைய நிலைமையை அறியாமல், முரட்டுத்தனமாக அவர்களை கோபப்படுத்திக் கொள்கின்றார்கள். வேறு சில விசுவாச குடும்பங்களிலே, முற்போக்குவாத கொள்கைகளின்படி தங்கள் பிள்ளைகளை வளர்த்து, அவர் தவறும் போது, அவர்களை கண் டித்துணர்த்தாமல், அவர்கள் வாலிப நாட்களிலே உடுத்திக், குடித்து, சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று கூறிக் கொள்கின்றார்கள். தங்கள் பிள்ளைகளை நேசிக்கின்றவர்கள் அவர்களை கண்டித்து தண்டித்து வளர்கின்றார்கள் என்று பரிசுத்த வேதாமமம் கூறுகின்றது. அதனாலென்ன, அதிகமாக கண்டித்து தண்டி க்கின்றவன் தன் பிள்ளையை அதிகமாக நேசிக்கின்றான் என்று கூற முடியுமா? 'பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நட த்து. அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.' என்று நீதிமொழிகள் 22:6ல் வாசிக்கின்றோம். பிள்ளைகளை அன்புகாட்டி அரவணைக்கும் நேரமுண்டு. அதுபோல அவர்களை குறித்து நேரத்தில் கண்டித்து ணர்த்தி நடத்த வேண்டும். பிள்ளையின் நெஞ்சில் மதியீனம் ஒட்டியிருக்கும்;, அது தானாக மாறிவிடும் என்று அதை பாராமுகமாக விட்டுவிடும் பெற்றோர், அந்தப் பிள்ளையை தவறான வழியிலே நடத்த கின்றவனாக இருக்கின்றான். இவ்வண்ணமாகவே, நல்ல மேய்ப்பனும் இருக்கின்றார். மேய்ப்பனானவன், ஆடுகளை அதின்அதின் போக்குகளுக்கு விட்டுவிடுவதில்லை. அங்கே ஒவ்வொன்றிற்னும் ஒரு நேரமுண்டு, ஒழுங்குகள் உண்டு, பராமரிப்பு உண்டு, மருந்து கொடுக்கும் நேரமுண்டு. இவையெல்லாவற்றையும் மந்தையை காக்கும்படி செய்கின்றான். எனவே, இவைகளை குறித்து அசட்டையாகவும், அசதியாகவும், அற்பமாகவும் எண்ணாமல், உபதேசங்களை கேட்டு அதன் வழியிலே நடக்க கற்றுக் கொள்ளுங்கள்.
ஜெபம்:
உம்முடைய பரிசுத்தத்துக்கு நான் பங்குள்ளவர்களாகும்பொருட்டு என்னுடைய பிரயோஜனத்துக்காகவே என்னை சிட்சித்து நடத்தும் தேவனே, உம்முடைய சிட்சையை ஏற்றுக் கொண்டு நடக்க உணர்வள்ளவனாக்குவீராக. இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - எபிரெயர் 12:6