தியானம் (வைகாசி 19, 2026)
இருதயத்திலே உண்டாகும் விருத்தசேதனம்
கொலோசெயர் 2:11
கையால் செய்யப்படாத விருத்தசேதனத்தை அவருக்குள் பெற்றீர்கள்.
விசுவாச மார்க்கத்தார் என்று அழைக்கப்படுகின்றவர்களில் பலர், சிலுவை சின்னத்தை, நாடக்களிலே அல்லது சங்கிலிகளிலே கோர்த்து, கழுத்திலே போட்டுக் கொள்கின்றார்கள். கிறிஸ்தவர்கள் என்று தங்களை சொல்லிக் கொள்கின்றவர்களில் ஏறத்தாழ யாவரும், சிலுவை சின்னத்தை வீட்டின் சுவர்களிலே தொடங்க விட்டிருப்பார்கள். இந்த அடையாளத்தை காணும் போது, இவன் கிறிஸ்தவன் என்று மற்ற வர்கள் எண்ணிக் கொள்கின்றார் கள். ஆனால், இன்று சிலுவை சின் னத்தை கழுத்திலே போட்டிருக்கி ன்றவர்கள் மற்றயும் சுவரிலே தொங்; கவிடுகின்றவர்கள் யாவரும், உண்மையாகவே ஆண்டவர் இயேசுவின் சிலுவையைக் குறித்து மேன்மைபாராட்டுகின்றார்கள்; என்று சொல்ல முடியுமா? அல்லது அவர்கள் உண்மையிலே கிறிஸ்துவை பின்பற்றுகின்றவர்கள் என்று கூற முடியுமா? ஒரு அடையாளத்தை கழு த்திலே போட்டுக் கொள்வதினால் ஒருவனுடைய பேச்சு, நடை, உடை, பாவனை கிறிஸ்துக்குரியதாக மாறிவிடுமோ? இல்லை. அது ஒரு வெளிப்படையான அடையாளம். ஆனால், மீட்பர் இயேசுவின் சிலுவை யின் கருப்பொருளை உணர்ந்து, அதை தன் இருதயத்திலே வைத்து வைத்திருக்கின்றவன், தேவனுக்கு பிரியமுள்ளவனாக இருப்பான். இதற் கொத்ததாகவே விருத்தசேதனமும் இருக்கின்றது என்று அப்போஸ்த லராகிய பவுல், பிலிப்பிய நிருபத்தின் மூன்றாம் அதிகாரத்திலே எழுதியிருக்கின்றார். தங்கள் சரீரத்திலே விருத்தசேதனம் செய்தவர்கள் அதைக் குறித்து மேன்மைபாராட்டினார்கள். சரீரத்திலே ஒரு அடையா ளத்தை வைத்திருப்பதினால் மேன்மை என்ன? ஆனால், ஆவியின்படி இருதயத்திலே விருத்தசேதனமே விருத்தசேதனம். அதாவது, தேவ னுடைய கற்பனைகளையும், கட்டளைகளையும், இருதயத்திலே வைத்து, தன் இருதயத்தை தேவ வார்த்தையின்படி காத்துக் கொள்கின்றவனே உண்மையான விருத்தசேதனதை கொண்டிருக்கின்றார். 'உன் தேவ னாகிய கர்த்தரில் நீ உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்து மாவோடும் அன்புகூர்ந்து பிழைக்கும்படி, உன் தேவனாகிய கர்த்தர் உன் இருதயத்தையும் உன் சந்ததியாரின் இருதயத்தையும் விருத்த சேதனம்பண்ணுவேன்' என்று பரிசுத்த வேதாகமத்திலே உபாகமம் என்ற புஸ்தகத்திலே வாசிக்கின்றோம். மனுஷனுடைய கைகளினாலே உண்டா கும் கிரியைகளினாலே வரும் பிரயோஜனம் அற்பமானது, அத னால் ஒரு வனுக்கும் இரட்சிப்பு உண்டாவதில்லை. எனவே உங்கள் உள்ளத்திலே தேவனை மேன்மைப் படுத்துங்கள்.
ஜெபம்:
என் இருதயத்தை ஆராய்ந்து அறிகின்ற தேவனே, என் வெளியரங்கமான கிரியைகளிலே நான் மேன்மைபாராட்டால், உள்ளத்திலே உமக்கு உண்மையாக இருக்க எனக்கு உணர்வுள்ள இருயதத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - எரேமியா 31:33