தியானம் (சித்திரை 21, 2026)
அழைப்பின் நோக்கம்
பிலிப்பியர் 2:28
ஆகையால் நீங்கள் அவனை மறுபடியும் கண்டு சந்தோஷப்படவும், என் துக்கங் குறையவும், அவனை அதிசீக்கிரமாய் அனுப்பினேன்.
உண்மையும் உத்தமமுமாய் ஊழியம் செய்து வந்த எப்பாப்பிரோதீத்து வியாதிப்பட்டு மரணத்திற்கு சமீபமாக இருந்தான் என்பதை நேற்றய நாளின் தியானத்திலே குறிப்பிட்டிருந்தோம். அதனால், தேவ ஊழியராகிய பவுலும், பிலிப்பிய சபையிலுள்ளோரும் துக்கமடைந்திருந்தார் கள். ஆனாலும், அவன் சுகமடைந்ததை பிலிப்பிய சபையோர் அறியா திருந்தார்கள். அவர்களுகடைய துக்கம் சந்தோஷமாக மாறும்படிக்கு, தேவ ஊழியராகிய பவுல் எப்பாப்பிரோதீத்துவை பிலிப்பிய சபைக்கு அதிசீக்கரமாக அனுப்பிவைத்தார். கிறிஸ்துவுக்குள் பிரியமான சகோதர சகோதரி களே, எங்களோடுகூட இருக்கும் விசுவாசிகள் மற்றும் ஊழியம் செய்பவர்கள் வியாதியடையும் போது எங்கள் இருதயங்கள் உடைந்து போக்கின்றது அல்லவா? இன்றையா நாட்களிலே சபையோர் ஜெபிப்பது போல, அன்றைய நாட்களிலும் பவுலும் அவரை சார்ந்தவர்களும் தேவனை நோக்கி வேண்டுதல் செய்திருப்பார்கள். ஆனால் அவர்கள் வாயிலே முறுமுறுப்புக்கள் இருந்ததில்லை. அவர்கள் தங்கள் அழைப்பின் நோக்கத்தை மறந்து போகவில்லை. இப்படியாக முன்னோடிகளாக இருந்த விசுவாச மார்க்கத்தாரில் பலர், ஊழியப் பாதையிலே வியாதிப்பட்டிருந்தார்கள். அவர்களில் சிலருக்கு தெய்வீக சுகம் கிடைக்கவில்லை. அதனால், அவர்கள் தேவனைப் பற்றும் விசுவாசத்திலே இருந்து சற்றும் தளர்ந்து போனதில்லை. தங்கள் வியாதியின் நேரத்திலும் மற்றவர்க ளுடைய சந்தோஷத்தையே சிந்தித்துக் கொண்டிருந்தார்கள். சற்று தரித்திருந்து சிந்தித்துக் பாருங்கள். சுவிசேஷத்தினிமித்தம், சிலர், கல்லெறிந்து கொல்லப்பட்டார்கள், வேறு சிலர் பட்டயத்திற்கு இரையானார்கள், இன்னும் சிலர் சிலுவையிலே அறையப்பட்டார்கள். இப்படியப்பட்ட மரணமானது, வியாதியடைந்து மரிப்பதிலும் மிகவும் கொடூரமானதாய் இருக்கும். அப்படிப்பட்ட மரணத்திலும், தேவ ஊழியர்கள், முறுமுறுக்காமல், தங்களை தேவ சித்தத்திற்கென்று ஒப்புக்கொடுத்தார்கள். மிகுதியாய் உயிரோடிந்தவர்களுக்கு துக்கம் உண்டாயிருந்தாலும், அவர்கள் தங்கள் அழைப்பின் நோக்கத்தை மறந்து போகவில்லை. எதற்காக அவர்கள் பிடிக்கப்பட்டார்களோ, அந்த நோக்கத்தின்மேல் கண்நோக்கமாய் இருந்து, அதை நிறைவேற்றி முடிக்க வேண்டும் என்ற வாஞ்சையுடைய வர்களாக இருந்தார்கள். தேவ ஆவியானவர் அவர்களை பெலப்படுத்தி தேவசித்தத்தை அவர்கள் வாழ்விலே நிறைவேற்ற உதவி செய்தார்.
ஜெபம்:
அன்பின் தேவனே, நான் உபத்திரவங்களை சகிக்க நேர்ந்தாலும், நீர் அழைத்த அழைப்பின் நோக்கத்தை மறந்து பின்னிட்டு திரும்பமால், துன்ப வேளையிலும் கிறிஸ்துவின் சிந்தையைத் தரித்தவனாக வாழ கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - பிலிப்பியர் 3:13-14