தியானம் (ஆவணி 01, 2025)
விசுவாசித்தவர்கள் யார்?
மாற்கு 16:16
விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்.
முற்காலத்திலே நாமும் புத்தியீனரும், கீழ்படியாதவர்களும், வழிதப்பி நடக்கிறவர்களும், பலவித இச்சைகளுக்கும் இன்பங்களுக்கும் அடிமை ப்பட்டவர்களும், துர்ககுணத்தோடும், பொறாமையோடும் ஜீவனும் பண் ணுகிறவர்களும், பகைக்கப்படதக்கவர்களும், ஒருவரையொருவர் பகை க்கின்றவர்களாயுமிருந்தோம். நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய தயையும், மனுஷர்மேலுள்ள அன் பும் பிரசன்னமானபோது, நாம் செய்த நீதியின் கிரியைகளின் நிமித்தம் அவர் நம்மை இரட்சிக்கவில்லை. நாம் யாவரும் நித்திய ஆக்கினை க்கு பாத்திரராக இருந்தோம். நாம் அடைய வேண்டிய அந்தத் தண் டனையை, தம்முடைய இரக்கத் தினாலே மன்னித்தார். நீதிமான்கள் என்று அழைக்கப்படுவதற்கும், நித்திய ஜீவனுக்கு தகுதியற்றவர்க ளாகவும் இருந்த நம்மை, தம்முடைய கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு தகுதிப்படுத்தி, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவி யினுடைய புதிதாக்குதலினாலும் இரட்சித்தார். இது தேவனுடைய ஈவு. இதைக் குறித்த வசனங்களை தீத்து மூன்றாம் அதிகாரத்திலும், எபே சியர் இரண்டாம் அதிகாரத்திலும் காணலாம். நம்முடைய ஆன்மீன இரட்சிப்பைப் பற்றி கூறும் பகுதியிலே, தேவனுடைய தயவு, அன்பு, இரக்கம், கிருபையை போன்ற தெய்வீக அம்சங்களை காணலாம். நம்முடைய பகுதியிலிருந்து விசுவாசத்தை நாம் காண்பிக்க வேண்டும். விசுவாசம் என்று கூறும் போது, அதிலே, மனத்தாழ்மை, மனந்திரு ம்புதல், கீழ்படிதல், அர்ப்பணிப்பு போன்றவை களை உள்ளடக்கியதாக இருக்கும். இவைகள் வழியாக நாம் மறுபடியும் பிறந்தவர்கள் அல்லது வேறுபிரிக்கப்பட்டவர்கள் என்று கூறிக்கொள்கின்றோம். அப்படியாக தங் களை தேவனிடத்தில் தங்களை அர்பணித்து, மறுபடியும் பிறந்தவர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்கின்றவர்களுடைய வாழ்க்கையிலே உலகத்திலிருந்து வேறுபிரிக்கபட்டவர்களுக்குரிய சுபாவங்கள் கிரியைகளிலே வெளிப்பட ஆரம்பிக்க வேண்டும். அப்படி வெளிப்படாத விடத்து, அவர்களுடைய மனத்தாழ்மையும், கீழ்படிவும் மனந்திரும்பு தலும், அர்ப்பணிப்பும் எப்படிப்பட்டதோ என்பதைக் குறித்த கேள்வி எழுகின்றது. அவர்கள் உண்மையாகவே மீட்பர் இயேசுவை விசுவாசி த்து ஏற்றுக் கொண்டார்களா அல்லது மற்றவர்கள் செய்கின்றார்கள் எனவே நானும் செய்வேன் என்று சடங்காச்சராமாக மதக்கிரிகைகளை நடப்பித்தார்களா? தேவன் ஒருவரே அதை அறிவார்..
ஜெபம்:
இலவசமாக கிருபையினாலே என்னை இரட்சித்த தேவனே, என்னுடைய வாழ்க்கையிலே வேறு பிரிக்கப்பட்டவர்களுக்குரிய சுபாவங்கள் காணப்படும்படி எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - 2 கொரி 13:5