புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 01, 2026)

கர்த்தருக்குள் சந்தோஷப்படுங்கள்

பிலிப்பியர் 3:1

மேலும், என் சகோதரரே, கர்த்தருக்குள் சந்தோஷப்படுங்கள்.


வாழ்க்கையிலே போராட்டங்கள் உண்டு. ஒருவேளை அவை ஒன்றின் பின் ஒன்றாக வரலாம். வீட்டிலே, படசாலையிலே, வேலை செய்யும் இடங்களிலே பிரச்சனைகள் உண்டாகலாம். பரிசுத்தவான்கள் சீர்பொரு ந்தும் இடத்திலே கருத்து முரண்பாடுகள், குழப்பங்கள், பிரிவினைகள் அவ்வப்போது உண்டாகலாம். இவைகள் எல்லாவற்றின் மத்தியிலும் கர்த்தருக்குள் சந்தோஷமாயிருங்கள். இந்த செய்தியை தேவ ஊழியரா கிய பவுல், பிலிப்பியருக்கு எழுதிய நிரூபத்திலே வலியுறுத்திக் கூறு வதை காணலாம். அதனால் குறை களை அப்படியே பாராமுகமாக விட்டு விடும்படியாக கூறவில்லை. நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்ப ட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கி றார். அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை, ஏற்ற சமயத்தில் உதவி செய்யும் கிருபை காலை தோறும் புதிதாக இருக்கின்றது. மரத்தன் ஓட்டப்பந்தைய போட்டியிலே ஓடுகின்றவன், வழியிலே இருக்கும் தடைகளை பற்றி பயந்து, நடுங்கி, சோர்ந்து போகாமல், அவைகளை ஒவ்வொன்றாக தாண்டி வெற்றிப் பரிசை பெறும்படி ஓடுகின்றான். அவன் பாதி வழியிலே நின்று துக்கப்படுவதில்லை. அந்த பரிசு நிச்சயம் என்று அதை நோக்கி ஓடுகின்றான். அதுபோலவே, நாமும் அழைத்தவர் உண்மையுள்ளவர் என்ற விசுவாசத்தை தளரவி டாமலும், அவர் பாதி வழியிலே நம்மை கைவிடமாட்டார் என்பதை அறிக்கை செய்கின்றவர்களாவும், விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓட வேண்டும். நாம் செய்ய வேண்டியது இன்னதென்று நமக்கு போதிக்கும் சத்திய ஆவியானவர் நம்மோடு இருக்கின்றார். அவர் கண்டித்துணர்த்தி, நம்மை சகல சத்தியத்திலும் வழிநடத்திச் செல்வார். எனவே, கர்த்தருக்குள் சந்தோஷமாயிருங்கள். கர்த்தருக்குள் சந்தோஷமாக இருப்பது, விசுவாசிகளின் உறுதியான விசுவாசத்தை வெளிப்படுத்தும் கனியாக இருக்கின்றது. இந்த செய் தியை தேவ ஊழியராகிய பவுல் பிலிப்பியருக்கு எழுதின நிரூபத்திலும், மற்றய நிரூபங்களிலும் திரும்ப திரும்ப குறிப்பிடுகின்றார். எனவே நீங்களும் உங்கள் வாழ்க்கையிலே உண்டாகும் பாடுகள், உபத்திரவ ங்கள், சோதனைகள் மத்தியிலே சோர்ந்து போகாமல், கர்த்தருக்குள் சந்தோஷமாயிருங்கள்.

ஜெபம்:

நித்திய வாழ்விற்கென்று என்னை அழைத்த தேவனே, குறைவுகள் மத்தியிலே நான் சோர்ந்து பின்னிட்டு போகமல், உமக்குள் சந்தோஷமாக இருக்க எனக்கு பிரகாரமுள்ள மனக்கண்களை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - யோவான் 16:33