புதிய நாளுக்குள்..

தியானம் (தை 25, 2026)

வேறு பிரிக்கபட்ட தேவ ஜனங்கள்

மத்தேயு 10:42

சீஷன் என்னும் நாமத்தினி மித்தம் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒருகலசம் தண்ணீர் மாத்திரம் குடிக்கக்கொடு க்கிறவனும் தன் பலனை அடையாமற்போகான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.


பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் எல்லாரும் படித்து பட்டம் பெறு வதில்லை. அவர்களில் சிலர் கற்றவைகளின்படி வாழ்வதில்லை. எப்படி யெனில், சுகாதார கல்வியை கற்றுக் கொள்ளும் மாணவர்களில் சிலர் அந்தப் பாடத்தில் எப்படி திறமைச் சித்தி பெறுவது என்பதிலேயே நோக் கமாயிருப்பார்கள். அப்படியாக திறமைச் சித்தி பெற்றவர்கள் எல்லாரும் கற்றவைகளை தங்கள் வாழ்விலே நடைமுறைப்படுத்துவதில்லை. அது போலவே, சுகாதரா கல்வியை கற் றுக் கொடுக்கும் ஒரு குறிப்பிட்ட ஆசிரியர், புகைப்பிடிக்கும் பழக்க முள்ளவராக இருந்தார். காரியம் அப்படியாக இருப்பதால், பாட சாலை அவசியமில்லை, ஆசிரியர் கள் தேவையில்லை. மாணவர்க ளுக்கு கற்றுக் கொடுப்பதில் பல னில்லை என்று பாடசாலைகள் யாவையும் மூடி விடுவோம் என்று கூறலாமோ? இல்லை! அதுபோலவே, விசுவாச மார்க்கத்திலுள்ளவர் களில் சிலர் நன்றியறிதல் இல்லாதவர்களாக மாறிவிடுகின்றார்கள். அங்காங்கே ஊழியர்களிலும் சிலர் ஊழியத்தை ஆதயத் தொழிலாக செய்து வருகின்றார்கள். இவைகள் யாவும் அவரவர் கனிகளால் வெளி கொண்டுவரப்பட்டு, உறுத்திப்படுத்தப்படும். நியாந்தந்தீர்ப்பவர் நம்மு டைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே. ஆனால், கர்த்தர் அன்றும் இன்றும் என்றும் தமக்கென்று ஒரு ஜனத்தை வைத்திருக்கின்றார். இந்த ஜனக்கூட்டத்தில் இடம்பெறும் ஊழியர்கள் தேவ கிருபையினாலே சத்தியத்தை சத்தியமாக சத்தியப்படி உபதேசம் செய்கின்றார்கள். அதை கேட்டும் தேவனுடைய ஜனக்கூட்டத்தில் இடம்பெறும் விசுவாசி கள் தேவ கிருபையினாலே மனத்தாழ்மையோடும் கீழ்படிவோடும் சத்தியத்தின்படி வாழ்க்கின்றார்கள். எனவே சத்தியத்தை மறுதலிக்கும் கூட்டத்தாரைப் பார்த்து சோர்வடைந்து, பின்னிட்டு, சத்திய மார்க்கத்தை விட்டு விலகாமல், பிலிப்பிய சபையோர், கர்த்தர் நிமித்தமாக எப்படி யாக தேவ ஊழியராகிய பவுல் உயர்விலும் தாழ்விலும் தாங்கினார் களோ, நாமும் அப்படியான மனநிலையோடு வாழவேண்டும். அந்தப் பிரகாரமாக, தேவ ஊழியர்களும், அப்போஸ்தலர் பவுலைப் போல ஊழி யத்தை ஆதாயத்தொழிலாக செய்யாமல், கொடுக்கப்பட்ட மந்தை களை அன்போடு நடத்த கற்றுக் கொள்ள வேண்டும். நாம் சத்திய வழி யிலே நடக்க தேவ கிருபையானது நமக்கு கொடுக்கப்பட்டிருக்கின்றது.

ஜெபம்:

பரலோக தேவனே, எந்தக்க காலத்திலும், எல்லா சூழ்நிலைகளிலும் நான் உம்முடைய ஜனம் என்று நீர் அழைக்கும் கூட்டத்திற்குள் இடம்பெற்றிருக்க என்னை உம்முடைய வழியிலே நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ரோமர் 1:7