புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 12, 2026)

தெய்வீக சுபாவங்கள்

புலம்பல் 3:22-23

அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்;


ஒரு காரியலத்திலே பணிபுரிந்து வந்த தாயானவள், மதிய இடை வேளையின் போது, தன் ஒரே மகனானவனுக்கு விளையாட்டு பொருளொன்றை வாங்கும் படி சென்றிருந்தால். சற்று நேரத்திற்கு பின் அவள் காரியாலத்திற்கு திரும்பும் போது, அவள் முகபாவனை வேறுபட்டிருந்தது. அதை சக பணியாளர்கள் வினவியபோது, அவள் அழ ஆரம்பித்தாள். அவள் விளையாட்டு பொருளை வாங்கி வேலை க்கு திரும்பும் போது, தெருவோ ரமாக, இருந்து பிச்சையெடுத்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணின் மடி யிலே இருந்த பிள்ளையை கண்டாள். அந்த பிள்ளை இந்த தாயானவளுடைய பிள்ளையின் வயதிற்கு ஒத்திருந்தது. தன்னால் முடிந்த உதவிளை அந்த தாயானவள் அவர்க ளுக்கு செய்தாள். தெருவிலே இருந்த அந்த பிள்ளையின் தோற்றம், அணிந்திருந்த உடை கண்ட போது, அந்தத் தாயானவளின் மனம் உடை ந்து போயிற்று. அவர்கள் தெருவிலே இருக்கும் காரணம் எதுவாக இருந்தாலும், தன் பிள்ளைக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டால் என்ன செய்வேன் என்று அவள், பிச்சையெடுத்துக் கொண்டிருந்து அந்த பெண்ணிற்காவும், மடியிலிருந்த பிள்ளையின் நிலைமைகாகவும் அழுதாள். இந்த நாளிலே, தெருவிலே இருந்து பிச்சையெடுத்துக் கொண்டிருந்த அந்த பெண்ணைக் குறித்தும், அவள் ஏன்? எதற்கு அந்த இடதிலிருந்து பிச்சையெடுக்கின்றாள் என்பதைக் குறித்த காரணங்களை தேடாமல், காரியாலத்திலே பணிபுரிந்து வந்த அந்த தாயாளவனின் உள்ளத்தை குறித்து சற்று சிந்தித்துப் பாருங்கள். நான் நிற்பதும் நிர்மூலமாகாதிருப்பதும் தேவனுடைய சுத்த கிருபை என்பதை மறந்து போய்விடக்கூடாது. எந்த காரணத்திற்காகவும், தங்கள்; இருதயதம் கடினப்பட்டு போய்விடக்கூடாது என்பதைக் குறித்து ஒவ்வொரு விசுவாசியும் எச்சரிக்கையுள்ளவர்களாக இருக்க வேண்டும். நாங்கள் தவறுப் போகும் ஒவ்வொரு வேளையும், தேவனிடம் சேருகின்றோம். அந்த வேளைகளிலே, தேவனாகிய கர்த்தர் தாமே, காரணத்தை தேடி, மனதுருக்கத்தை காண்பிக்காவிட்டால், எங்கள் நிலைமை எப்படியாக இருக்கும் என்பதை சிந்தித்துப் பாருங்கள். இந்த உலகிலே நடைபெறும் மனிதர்களடையஏமாற்று வேலைகளினாலே நம் இருதயம் கடினப்பட்டுப் போய்விடாதபடிக்கும், தெய்வீக சுபாவங்களை அவித்துப் போடாத ப்படிக்கு, நாம் தேவ வார்த்தையின் வெளிச்சத்திலே அவ்வப்போது நம்மை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

ஜெபம்:

பரலோக தேவனே, இந்த உலகத்திலே மலிந்திருக்கும் தீமைகளினாலே நான் என் இருதயத்தை கடினப்படுத்தி, உம்முடைய வார்த்தையைவிட்டு விலகிப் போகாதபடிக்கு நீர் என்னை காத்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்

மாலைத் தியானம் - யாக்கோபு 1:27