தியானம் (மாசி 24, 2026)
ஆதிமுதல் மாறாத தந்திரங்கள்
2 கொரிந்தியர் 2:11
அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே.
புதிதாக திருமணமாகிய இளம் தம்பதிகள், தங்கள் எதிர்கால வாழ்விற்கென்று இளவயதிலிருந்து கொஞ்ச பணத்தை சேர்த்து வைத்திருந்தார்கள். அவர்கள் திட்டமிட்டு, திருமணத்திற்கு முன்னரே, தங்களு க்கென்று ஒரு வீட்டை வங்கி கடன் மூலமாக கொள்வனவு செய்திருந்தார்கள். அவர்களுடைய திருமண கொண்டாட்டங்கள் யாவும் சிறப்பாக இருந்தது. இப்படியாக ஆரம்ப நாட்கள், யாரும் பார்த்து மெச் சத்தக்கதாக இனிதே நிறைவேறிற்று. அவர்கள் தாங்கள் தங்கள் பெற்றோரைவிட, ஒரு படி மேலாக வாழ்க்கையை ஆரம்பித்திருக்கின்றோம் என்று எண்ணியிருந்தார்கள். அத்தோடு, இது நவீன யுகம், காலங்கள் மாறிவிட்டது, பெற்றோரின் ஆலோசனைகள் அந்தக் காலத்திற்குரியது என்ற மனநிலையுடையவர்களாக இருந்தார்கள். வீடு, வாகனம், வேலை, திருமண கொட்டடங்கள் யாவும் பெற்றோருடைய நாட்களைவிட சிறப்பாக இருந்தது உண்மை. ஏனெனில் பெற்றோர் அவர்கள் முன்னேற்றத்திற்குரிய வழியை ஆய த்தப்படுத்தியிருந்தார்கள். ஆனால், அது வாழ்க்கையல்ல அது வாழ்க்கைக்கு உதவும் ஒரு சிறிய பகுதிய என்பதை உணராதிருந்தார்கள். ஆண்டுகள் கடந்து சென்ற போது, வாழ்க்கைப்படகிலே அலைகள் மோத ஆரம்பித்தது. தென்றல் போல ஆரம்பித்த காற்று, அவ்வப்போது திசை தெரியாது மோதும் புயல் காற்றுபோல பயங்கரமாக இருந்தது. அவர்களுடைய வாழ்க்கையின் கொள்கை கோட்பாடுகள், அவர்கள் போட்டுக்கொண்டு ஒழுங்கு முறைகள் ஒவ்வொன்றும் பரீட்சைக்கு உட்படுத்தப்பட்டது. பல ஆண்டுகள் கடந்து சென்ற பின்னரே, யுகம் மாறிவிட்டது, நவீன தொழில்நுட்பங்கள் வளர்ந்து பெருகி இருக்கின்றது. ஆனால், வாழ்க்கையில் உண்டாகும் போராட்டங்களின் கருப்பொருள் மாறிப்போகவில்லை. புதிய யுகமும், தொழில்நுட்பங்களும், பிரச்கனைகளை பெரிதாக்கி காண்பிக்கின்தேயல்லாமல் அவைகளால் அதை தீர்த்து வைக்க முடிவில்லை என்பதையும் கண்டு கொண்டார்கள். பிரிய மானவர்களே, வேதமே சத்தியம். அதுவே வாழ்க்கையின் அடித்தளம். சத்துருவின் தந்திரங்கள் புதிதானவைகள் அல்ல. உலக போக்கும், அதன் யுகங்களும் அவனுக்குடபட்டிருக்கின்றது. (1 யோவான் 5:19, ரோமர் 12:1-2) ஆதியிலிருந்து அவன் திருடவும் கொல்லவுமேயன்றி வேறொன்றிற்கும் வரான். எனவே, வாழ்வின் போராட்டங்களை கிறஸ்துவுக்குள் ஜெயங் கொண்ட மேகம் போன்ற திரளான சாட்சிகளை பார்த்து கற்றுக் கொள் ளுங்கள்.
ஜெபம்:
பரலோக தேவனே, அநேகமாயிரம் பொன் வெள்ளியைப்பார்க்கிலும், நீர் விளம்பின வேதமே எனக்கு நலம் என்று உம்முடைய வார்த்தைகளை என் இருதயத்திலே காத்துக் கொள்ள எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - பிலிப்பியர் 1:30