புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 03, 2026)

'எல்லாம் நிறைவேறிற்று'

மாற்கு 10:45

அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படிவராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார்.


ஆறாம் மணி நேரமுதல் ஒன்பதாம் மணி நேரம் வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று. அதாவது உலகிலே இன்று குறிப்பி டப்படும் நேரப்படி, நண்பகல் 12 மணிதொடக்கம், பிற்பகல் மூன்று மணிவரை, இருளாயிருந்தது. பிதாவின் அநாதி தீர்மானத்தின்படி, மனித குலத்தை இரட்சிக்க இந்தப் பூமிக்கு வந்த தேவ குமாரனாகிய இயேசு, தீர்க்கதரிசிகள் முன்உரைத்த வாக்குகளை நிறைவேற்றி, சிலுவையிலே தொங்கிக் கொண்டிருந்தார். குறித்த வேளை வந்த போது, தாம் செய்ய வேண்டிய யாவையும் செய்து முடித்தேன் என்று மீட்பராகிய இயேசு அறி ந்து கொண்டார். எனினும், அவர் சிலுவையிலே தன் ஆவியை பிதாவவிடம் ஒப்படைக்க முன்பு, இன்னுமொரு வேதவாக்கியம் நிறைவேற வேண்டியதாக இருந்தது. அதன்படிக்கு, 'தாகமாயிருக்கிறேன்' என்றார். காடி நிறைந்த பாத்திரம் அங்கே வைக்கப்பட்டிருந்தது; அவர்கள் கடற்காளானைக் காடியிலே தோய்த்து, ஈசோப்புத்தண்டில் மாட்டி, அவர் வாயினிடத்தில் நீட்டிக் கொடுத்தார்கள். இயேசு காடியை வாங்கினபின்பு, எல்லாம் முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார். மரண தறுவாயிலும், அவர் ஒரு சிறிய வேதவாக்கியத்தைக் கூட விட்டு விடவில்லை. எல்லாவற்றையும் பூரணமாக நிறைவேற்றி முடித்தார். எல்லோராலும் கைவிடப்பட்டு, தனித்துவிடப் பட்ட வேளை மீட்பராகிய இயேசுவுக்கு வந்ததிருந்தது. அவரும் அவரோடு இருந்த சீஷர்கள் சுமார் மூன்றரை வருடங்களாக, பல ஊழியங்களை செய்து வந்தார்கள். ஆனாலும், அவர் தனியாக செய்ய வேண்டிய வேலையிருந்தது. கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத் துக்கு அவர் தனித்து செல்ல வேண்டியதாயிருந்தது. எவரும் அணுகி அவருக்கு உதவி செய்ய முடியாதபடி ரோமருடைய போர்வீரர்கள் அவ ரை அந்த இடத்திற்கு நடத்தி சென்றார்கள். மனிதகுலத்தின் பாவத்தை சுமந்தவராக அவர், அந்த இடத்திற்கு சென்றார். பிதாவாகிய தேவனின் சித்தம் நிறைவேற வேண்டும் என்பதையே எண்ணமாக கொண்டு, தன்னை பார்த்து நகைத்து, பரிகாசம் பண்ணும் எவருக்கும் ஒன்றும் கூறு வில்லை. அந்த வேளையிலும். தம்மை கொடுமைப் படுத்துகின்ற வர்களை மன்னிக்கும்படி வேண்டிக் கொண்டார். நாமும் இந்த சிந் தையை தரித்தவர்களாக முன்னேறிச் செல்வோம்.

ஜெபம்:

என்மீது அன்புகூர்ந்த என் பிதாவாகிய தேவனே, என் ஆத்துமா பாதாளத்தில் இறங்காமல், இரட்சிப்படையும்படி உம்முடைய ஒரே பேறான குமாரனை உலகிற்கு அனுப்பி என்னை மீட்டதிற்காக உமக்கு நன்றி! இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 19:28-30