புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 22, 2026)

உறுதியாய் தரித்திருங்கள்

மத்தேயு 28:20

இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன் என்றார். ஆமென்.


ஆண்டவராகிய இயேசுதாமே தாம் காட்டிக் கொடுக்கப்பட்ட அந்த இராத்திரியிலே, தம்முடைய சீஷர்களை நோக்கி: நான் பிதாவினிடத்திலி ருந்து புறப்பட்டு உலகத்திலே வந்தேன்; மறுபடியும் உலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகிறேன் என்றார். அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: இதோ, இப்பொழுது நீர் உவமையாய்ப் பேசாமல், வெளிப்படையாய்ப் பேசுகிறீர். நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர் என்றும், ஒருவன் உம்மை வினாவவேண்டுவ தில்லையென்றும், இப்பொழுது அறி ந்திருக்கிறோம்; இதினாலே நீர் தேவனிடத்திலிருந்து வந்தீரென்று விசுவாசிக்கிறோம் என்றார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இப்பொழுது நீங்கள் விசுவாசிக்கிறீர்கள். இதோ, நீங்கள் சிதறுண்டு, அவனவன் தன்தன் இடத்துக்குப் போய், என்னைத் தனியே விட்டுவிடுங்காலம் வரும்; அது இப்பொழுது வந்திரு க்கிறது. ஆனாலும் நான் தனித்திரேன், பிதா என்னுடனேகூட இருக்கி றார். என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொரு ட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார். அந்தப் பிரகாரமாகவே, ஆண்டவராகிய இயே சுவை பிடிக்கும்படி மத்தலைவர்களும், போர்வீரரும் வந்தபோது, அவரை விசுவசிக்கின்றோம் என்று கூறிய யாரும் சிதறுண்டு போனார்கள். தங்கள் எஜமானனை கைவிட்டோம் என்று அவர்கள் துக்கத்தின்மேல் துக்க மடையாமல் இருக்கும்படி, பிதாவாகிய தேவன் தன்னோடு இருக்கின்றார் என்றும், தான் உலகத்திலே மாண்டுபோகும்படியல்ல, பிதாவா கிய தேவனின் சித்தத்தை நிறைவேற்றுவதால், உலகத்தை ஜெயங்கொண்டேன் என்று அவர்களை தேற்றினார். பிரியமானவர்களே, விசுவாச வாழ்க்கையிலே மற்றய மனிதர்களுடைய பெலவீனங்களால், துன்பங்கள், துயரங்கள் உண்டாகலாம். தனித்து விடப்பட்டது போல தோன்ற லாம். அந்த வேளையிலே, நாங்கள் அறிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், நாங்கள் தனித்து விடப்படுவதில்லை. துணையாளராகிய தேவ ஆவியானவர் கூட இருந்து உங்களை நடத்தி செல்கின்றார். எனவே, நாங்கள் சுயஅனுதாபங்களைவிட்டு, முறுமுறுப்புக்களைவிட்டு, தேவ னுக்கு தங்களை ஒப்புத்த சீஷர்களைப் போல நாமும் மற்றவர்க ளைத் தேற்றுகின்றவர்களாக மாறவேண்டும்.

ஜெபம்:

பரலோக தேவனே, ஒழுங்கில்லாதவர்களுக்குப் புத்திசொல்லி, திடனற்றவர்களைத் தேற்றி, பலவீனரைத் தாங்கி, எல்லாரிடத்திலும் நீடிய சாந்தமாயிருக்க எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 தெச 5:14