தியானம் (மாசி 26, 2026)
சத்திய வேதமே வாழ்வின் அடித்தளம்
யோசுவா 1:7
நீ போகும் இடமெல்லாம் புத்திமானாய் நடந்துகொள்ளும்படிக்கு, அதை விட்டு வலது இடதுபுறம் விலகாதிருப்பாயாக.
முற்காலங்களிலே ரயில் வண்டிகளில் தடம்புரண்டு போவதைக் குறித்து கேள்விப்படுவது மிகவும் அரிதானதொன்றாக இருந்து வந்தது. நவீன காலங்களிலே, ரயில் வண்டிகள் அதிகரித்துள்ளது, ரயில் வண்டிகள் போகும் வேகம் அதிகரித்துள்ளது. தண்டவாளங்களை அமைக்கும் காலங்கள் குறுகியதாக இருக்கின்றது. மனிதர்கள் மென்மேலும் தொழில்நுட்பங்களிலே தங்கி வாழ்வதால், தொழில்நுட்ப கோளாறுகள் கரணமாகவும் ரயில் வண்டிகள் தட ம்புரண்டு, மற்ற ரயில் வண்டிகளோடு மோதி பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்திக் கொள்கின்றது. ரயில் வண்டிகள் தடம்புரண்ட பின்பு, அதன் காரணத்தை ஆராய்ந்து அறிகின்றார்கள். சில வேளைகளிலே அது மனிதர்களுடைய தவறாகவோ அல்லது தொழில்நுட்ப கோளாராகவே, அமைக்கப்பட்ட ரயில் அல்லது தண்டவாளத்தின் தரம் போன்றவைளை ரயில் தடம்புரளுவதற்கு காணரமாக இருக்கலாம். எது எப்படியாக இருந்தாலும், ஒரு ரயில் வண்டியானது தடம்புரண்டுவிட்டது என்று எப்போது கூறிக் கொள்கின்றார்கள்? அந்த வண்டியானது, போக வேண்டிய தண்டவாளத்தைவிட்டு, அகன்று போகும் போது, அது தடம்பு ரண்டுவிட்டது என்று கூறிக் கொள்வார்கள். இவ்வண்ணமாகவே, இன்று விசுவாசிகளும் பற்பல காரணங்களால் விசுவாசத்தைவிட்டு தடம்புரண்டு போய்விடுகின்றார்கள். பொதுவாக, அதற்கு சபை, மேய்ப்பர், மூப்பர், மற்றய விசுவாசிகள் என்று மற்றவர்களையே குற்றம் சாட்டிக் கொள்வார்கள். அவர்கள் யாரைக் குற்றம் சாட்டினாலும், அவர்கள் விசுவாச த்தைவிட்டு விலகிவிட்டார்கள். தடம்புரண்டு விட்டார்கள். தாங்கள் செல்ல வேண்டிய தண்டவாளத்தைவிட்டு எப்போதோ அகன்று போய்வி ட்டார்கள். வெளியரங்கமான விளைவோ பின்பு வெளிப்பட்டது. ஒரு கிறிஸ்தவன் அல்லது விசுவாசி என்று அழைப்பப்படுபவன், நிற்க வேண்டி தண்டவாளம் என்ன? கர்த்தருடைய வேதம். தேவனுடைய வார்த்தை கள். இவைகளைவிட்டு ஒரு விசுவாசி விலகிப்போகும் போது, அவன் ஓட வேண்டிய தண்டவாளத்தைவிட்டு அகன்று போகின்றான். அதன் பின் விளைவுகள், முதலில் மனதில் ஆரம்பித்து, வீட்டிலும், சபையிலும், வெளிப்படும். தங்கள வேலையும், கல்வியும் நன்றாக இருக்கின்றது என்று எண்ணிக் கொள்வார்கள். ஆனால், முடிவிலே அவைளும் அவர்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கொடுக்க மாட்டாது. எனவே சத்திய வேதத்திலே நிலைத்திருங்கள்
ஜெபம்:
அன்பின் தேவனே, நான் உம்முடைய திருக்குமாரனாகிய இயேசுவிலும், அவர் வார்த்தை என்னிலும் நிலைத்திருக்கவும், நான் மிகுந்த கனிகளை கொடுக்கும்படிக்கு என்னை கரம்பிடித்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - ஒசியா 4:6