தியானம் (ஆனி 07, 2026)
கிறிஸ்துவிலே நிலைத்திருக்கும் வாழ்வு
யோவான் 15:5
ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்;
ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த விசுவாசியாவன், அன்றன்றாடம் உழைத்து தன் குடும்பத் தேவைகளை சந்தித்து வந்தான். அவன் வாழ்விலே பொருளாதா நெருக்கடிகள் இருந்தது. எனினும், அவன் தன் நடை களிலே கவனமுள்ளவனாக இருந்தான். அதாவது, எந்த ஒரு வேலை க்கும் கூலி பொருந்த முன்பு, ஆராதனைகள், உபவாச கூட்டங்கள், வாரத்திலே நடைபெறும் ஜெபங்களைக் குறித்து எப்போதும் எண் ணமுள்ளவனாக இருந்தான். சடங்காச்சாரப்படியல்ல, மனதார தன் ஆண் டவராகிய இயேசுவை சேவித்து வந்தான். அதனால், சில சமயங் களிலே, அவனுக்கு பொருளா தார நஷ;டம் உண்டாயிருந்தது. ஆனால், தன் ஆத்துமாவிலே சமாதானம் எதனால் உண்டாகி ன்றதென்பதையும், காலங்கள் கர்த்தருடைய கரதிலே இரு க்கி ன்றதென்பதையும் அவன் திட்டமாக அறிந்திருந்தான். ஆண்டுகள் கடந்து சென்றதும், அவனுடைய வேலைகளிலே விருத்தி உண்டாயிருந்தது. அவனுடைய வேலைத்திறனை கண்ட ஊரார், வீட்டின் திருத்த வேலைகளை அவனே செய்ய வேண்டும் என்று விரும்பினார்கள். அந்த வேளையிலும், அவன் தன் ஆத்துமாவின் ஆகாரம் எதனால் உண்டாகின்றதென்பதிலே எந்த மாற்று கருத்தும் இல்லாதவனாக வாழ்ந்து வந்தான். வாடிக்கையாளர்களுடன் முன்பொருந்திய நாட்களுக்கு அமைய, குறிப்பிட்ட நேரத்திற்குள் பொறுப்பெடுத்த வேலைகளை செய்துவிட்டு, கும்பத்தோடு, ஜெயத்திற்கும், வேதப்படிப்புக்கும் கலந்து கொண்டான். உலக முறைமையின்படி அவன் பெரிதாக கல்வி கற்றுருக்கவில்லை. ஆனாலும், கிறிஸ்துவை அறியும் மேன்மையை குறித்தும், அவருடைய வார்த்தையிலே நிலை த்திருப்பதன் அவசியத்தைக் குறித்தும், அதற்கு ஆதாரமாக இருப்பவைகளைக் குறித்தும் மிகவும் கருத்துள்ளவனாக இருந்தான். பிரியமான சகோதர சகோதரிகளே, இந்த சம்பவத்தை மையமாக வைத்து உங்களுடைய வாழ்க்கையை ஆராய்ந்து பாருங்கள். ஆரம்ப நாட்க ளிலே நீங்கள் எப்படியாக ஆண்டவர் இயேசுவை சேவித்து வந்தீர்கள்? ஆதியிலே எப்படிப்பட்ட வைராக்கியம் உள்ளவர்களாக இருந்தீர்கள்? வாழ்விலே உங்களுக்கு உண்டாயிருக்கும் செழிப்புக்கள் அல்லது உயர்வுகள், உங்களை இன்னுமாய் தேவனோடுள்ள உறவிலே உறுதியாய் சேர்த்திருக்கின்றதா அல்லது, ஞானமாய் நடந்து கொள்ள வேண்டும் என்று கிறிஸ்துவை அறியும் வாழ்விலே சமரசம் ஏற்பட்டிருக் கின்றதா?
ஜெபம்:
பரலோக தேவனே, லௌகீக கவலைகளால் என்னுடைய இருதயம் பாரமடைந்து போகாதபடிக்கு, நெருக்கடியான சூழ்நிலைகளிலும் உம்முடைய வார்த்தையிலே நிலைத்திருக்க எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - மத்தேயு 12:30