புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 18, 2026)

தந்தையின் உறவிலே வளருங்கள்!

யோவான் 17:3

ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.


ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள் (காலத்தியர் 6:2). நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்க ளையும் பண்ணவேண்டும்;. (1 தீமோத்தேயு 2:1) சகோதரரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள். (1 தெச 5:25). அவனவன் தனக்கான வைகளையல்ல, பிறருக்கானவைக ளையும் நோக்குவானாக. (பிலிப் பியர் 2:4). இப்படியாக ஒருவர் பாரத்தை ஒருவர் சுமப்பது, யாவருக்காகவும் வேண்டுதல் செய்வது, மற்றவர்களுக்காக பரிந்தி பேசி ஜெபிப்பது போன்ற குணாதியங்கள் விசுவாசிகளின் அடிப்படைப் பண்புக ளாக இருக்க வேண்டும். அதே நேரத்திலே மற்றவர்கள் எப்போதும் எங்களுக்காக ஜெபிக்க வேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டு இருக்காமல் நாமும் மற்றவர்களுக்காக ஜெபிக்க வேண்டும். ஜெப வாழ்க்கையிலே வளர வேண்டும். குழந்தைகளைப்போல நாம் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் ஆனால் எப்போதும் குழந்தைத்தனமுள்ளவர்களாக இருக்க கூடாது. பிதாவாகிய தேவனை அறிகின்ற அறிவிலே வளரவேண்டும். ஒரு தகப் பனோடுள்ள உறவிலே எப்படி ஒரு பிள்ளை வளர்கிறது போல, நாமும் அந்த உறவிலே வளர வேண்டும். ஏன் ஒரு பிள்ளையானவன், தன் தகப்பனித்திலே கேட்பதற்கு, பேசுவதற்கு தயங்க வேண்டும்? ஒரே மத்தியஸ்தராகிய அவருடைய குமாரனாகிய இயேசு வழியாக நாம் ஒப்புரவாக்கப்பட்டிருக்கின்றோம். எனவே, வேறு மத்தியஸ்தர்களை நாம் ஏற்படுத்தக் கூடாது. பரிசுத்த வாழ்க்கை வாழ்ந்து இந்தப் பூமியைவிட்டு கடந்து சென்ற பரிசுத்தவான்களிடம் வேண்டுதல் செய்யக் கூடாது. தேவ ஊழியராகிய பவுல், பிலிப்பி சiயோரை நேரில் கண்டு, அவர்களை திடப்படுத்த விருப்பமுள்ளவராக இருந்தார். எனினும், நான் வந்து உங்களைக் கண்டாலும், நான் வராமலிருந்தாலும், நீங்கள் ஒரே ஆவியிலே உறுதியாய் நின்று, ஒரே ஆத்துமாவினாலே சுவிசேஷத்தின் விசுவாச த் திற்காகக் கூடப்போராடி, எதிர்க்கிறவர்களால் ஒன்றிலும் மருளாதிரு க்கிறீர்களென்று உங்களைக்குறித்து நான் கேள்விப்படும்படி, எவ்வித த்திலும் நீங்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குப் பாத்திரராகமாத்திரம் நடந்துகொள்ளுங்கள் என்று அறிவுரை கூறியிருக்கின்றார்.

ஜெபம்:

என்ளை பலப்படுத்துகின்ற தேவனே, இந்த உலகத்தினால் உண்டாகும் அழுத்தங்களினால் நான் மருளாமலிருந்து பெற்றுக் கொண்ட சுவிசேஷத்திற்கு பாத்திரராய் நடக்கும்படி எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 1 கொரி 14:20