புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 11, 2026)

நன்மை செய்ய நாடுங்கள்

1 கொரிந்தியர் 10:24

ஒவ்வொருவனும் தன் சுயபிரயோஜனத்தைத் தேடாமல், பிறனுடைய பிரயோஜனத்தைத் தேடக்கடவன்.


என்னுடைய பிள்ளை அதி விசேஷ சித்தி மட்டும் பெற்றால் போதாது, இந்த ஊரிலுள்ள எல்லா மாணவ மாணவர்களைவிட அதிக புள்ளியை எடுக்கும்வரைக்கும், அவனை இரண்டல்ல, மூன்று டியூஷன் வகுப்புக்கு அனுப்பி வைப்பேன் என்று ஒரு விசுவாசி கூறிக் கொண்டான். என்னுடைய பிள்ளை பாடசாலைக்கு சென்று நன்றாக படிக்கின்றான். நல்ல புள்ளிகளை எடுக்கின்றான். தெருவின் எதிர் பக்கத்திலே இருக்கும் பிள்ளைகள், பாடசாலைக்கு தேவையான புத்தகங்கள், ஆடைகள் இல்லாமல் இருக்கின்றார்கள். எனவே, அவர்களுக்கு கொஞ்சம் உதவி செய்வோம் என்று ஊரிலுள்ள மனிதனொருவன் கூறிக் கொண்டான். அந்த விசுவாசியினதும், இந்த மனிதனுடையதுமான மனநிலையை சற்று ஆராய்ந்து பாருங்கள். இந்த இரண்டு பேர்களிலும் நீங்கள் யார் நல்மனதுடையவன் என்று கூறிக் கொள்வீர்கள்? இவர்களில் எவன்மேல் தேவனாகிய கர்த்தர் பிரியமாக இருப்பார்? சற்று தரித்திருந்து சிந்தித்துப் பாருங்கள். உங்களுக்கு கடமைகள் உண்டு! பொறுப்புக்கள் உண்டு! அதிலே எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. 'ஒரு மனுஷன் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகையில் கள்ளர் கையில் அகப்ப ட்டான்; அவர்கள் அவன் வஸ்திரங்களை உரிந்துகொண்டு, அவனைக் காயப்படுத்தி, குற்றுயிராக விட்டுப் போனார்கள். அப்பொழுது தற்செயலாய் ஒரு ஆசாரியன் அந்த வழியே வந்து, அவனைக் கண்டு, பக்கமாய் விலகிப்போனான். அந்தப்படியே ஒரு லேவியனும் அந்த இட த்துக்கு வந்து, அவனைக் கண்டு, பக்கமாய் விலகிப்போனான்.' இந்த சம்பத்திலே, அவ்வழியாக சென்ற ஆசாரியனுக்கும், லேவியனுக்கும், ஆலயத்திலே செய்ய வேண்டிய கடமைகள் உண்டு. பொறுப்புக்கள் உண்டு. அதுமட்டும் தான் அந்த ஆசாரியனதும், லேவியனதும் பொறு ப்பு என்று கூற முடியுமா? பின்பு அந்த வழியாக வந்த சமாரியன் வேறு அலுவல் இல்லாமல், அந்த வழியாய் சென்றானோ? இல்லை! அவன் தன் அலுவல்களை முடித்து திரும்ப வரும்போது, மிகுதியான பணத்தை கொடுப்பேன் என்று அவனை பராமரிக்கும்படி கூறிய சத்திரத்தின் சொந்தக் காரனுக்கு கூறிச் சென்றான். பிரியமானவர்களே, நீங்கள் பூமிக்கு உப்பாகவும், உலகத்திற்கு வெளிச்சமாகவும் ஏற்படுத்த ப்பட்டிருக்கின்றீர்கள் என்பதை மறந்து போய்விடாதிருங்கள். எப்போதும் நன்மை செய்ய நாடுங்கள்.

ஜெபம்:

நித்திய ஜீவனுக்கென்று என்னை அழைத்த தேவனே, நான் எப்போதும் ஜீவ வார்த்தைகளின் கருப்பொருளை உணரந்து, உம்முடைய சித்தத்தை நிறைவேற்றி முடிக்க பிரகாசமுள்ள கண்களை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யாக்கோபு 4:17