புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 03, 2026)

கிறிஸ்துவைக் குறித்த மேன்மை

ரோமர் 1:16

கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக்குறித்து நான் வெட்கப்படேன்;


ஒரு கம்பனியிலே வேலை பார்த்து வந்த விசுவாசியாவன், தனக்கு கிடைக்கும் சந்தர்பங்களிளெல்லாம், தான் கிறிஸ்தவன், ஞாயிறுதோறும் சபைக்கு செல்பவன், கிழமைநாட்களிலே ஜெப கூட்டங்களிலே பங்குபற்றுவன் என்பதை உடன் வேலையாட்களுக்கு தெரிவித்து வந்தான். அதனாலே, சிலர் அவனோடு நட்பை ஏற்படுத்திக் கொண்டார்கள், பலரோ அவனுடைய நட்பை விரும்பவில்லை. அதனால், அவனுடைய முன்னேற்றங்களும், பதவியுயர்வுகள் தாம தமாயிருந்தது. எனினும், அவன் அதைக் குறித்து கவலையடையவில்லை. கர்த்தர் ஒருவனை உயர்த்த நினைத்தால், அவனை யாரும் தடை செய்ய முடி யாது. நான் இந்த உயர்ந்த ஆசனங்களிலே இருக்க வேண்டும் என்று கர்த்தர் நிச்சயித்திருந்தால், அதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கும். அவர் அப்படி நிர்ணயித்திருந்தால் அதை ஒருவனும் தடை செய்ய முடியாது என்பதே அவனுடைய விசுவாசமும் அறிக்கையுமாக இருந்தால். ஒருநாள், அவனுடைய சக வேலையாட்களில் ஒருவன் அந்த விசு வாசியை அணுகி, தானும் ஒரு விசுவாசி என்று கூறிக் கொண்டான். ஆனால், அதை தான் மற்றவர்களுக்கு கூற விரும்பவில்லை. எனவே, மற்றவர்கள் எதை சம்பாஷpக்கின்றார்களோ, எந்தப் பாணியில் பேசுகின்றார்களோ அப்படியே பேசிக் கொண்டான். தன்னை ஆண்டவர் இயேசு வின் விசுவாசி என்று கூற தயங்கும் காரணம் என்ன? இப்படிப்பட்டவர்கள் தாங்கள் அடைந்த இரட்சிப்பைக் குறித்து இன்னமும் வெட்முடை யவர்களாக இருக்கின்றார்கள். மற்றவர்க ளுக்கு முன்பாக தாங்கள் கிறிஸ்துவினுடையவர்கள் என்று சொல்லிக் கொள்ள வெட்கமடைகின்றார்கள். தேவ ஊழியராகிய பவுலின் நாட்களிலே, கிறிஸ்துவின் சுவிசே ஷத்தினிமித்தம் அவர், முகாந்திரம் இல்லாமல், பல ஆண்டுகளை சிறையிலே போடபபட்டார். அதாவது, அந்நாட்களிலிருந்த, மத்தத்தலைவர் கள் மற்றும் அதிகாரிகள், கிறிஸ்துவின் சுசேஷம் தங்கள் மார்க்கத்திற்கும், உலக போக்கிலான வாழ்க்கை முறைக்கும் எதிராக இருபப்தி னால், அவரை காவலிலே வைத்திருந்தார்கள். அதைக் கண்ட சில விசுவாசமார்க்கத்தார் அவரை விட்டு தங்களை தூரப்படுத்திக் கொண்டார்கள். அப்படியிருந்தும் அவரோ, தனக் கேற்பட்டிருக்கும் நிந்தையான நிலையிலும், கிறிஸ்துவைக் குறித்து வெட்கம் அடையவில்லை. அப்படியாக நீங்கள் எல்லா சூழ்நிலைகளிலும் கிறிஸ்துவைக் குறித்து மேன் மைபாராட்டுகின்றவர்களாக இருங்கள்.

ஜெபம்:

மேன்மையான அழைப்பை தந்தவரே, இந்த உலகத்திலே பாடுகள் நிந்தைகள் வந்தாலும், அவைகள் யாவற்றின் மத்தியிலும் நான் உம்மைப் பற்றி கொண்டு சாட்சியாக வாழ எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 1:20