புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 08, 2026)

விவேகமுள்ள ஊழியக்காரன்

மத்தேயு 24:45

ஏற்றவேளையிலே தன் வேலைக்காரருக்குப் போஜனங் கொடுத்து அவர்களை விசாரிக்கும்படி எஜமான் வைத்த உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரன் யாவன்?


நீங்கள் கிறிஸ்துவிலிருந்த சிந்தையைத் தரித்து, ஒன்றையும் வாதினாலாவது வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள். அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக என்பதைக் குறித்த கடந்த மாதங்களிலே பிலிப்பியர் 2ம் அதிகாரத்திலே தியானித்து வந்தோம். தேவனுக்கு ஊழியம் செய்கின்றவன், தன்னுடைய பொறுப்புக் களை நிறைவேற்றி, எஜமானன் இல்லாத நேரத்திலும், தன் எஜமான னுக்கு பயபக்தியுள்ளவனாக இருந்து, தன் பண்ணையிலே வேலை செய்யும் ஊழியர்களை விசாரிக்க வேண்டும். அதாவது, அவர்கள் செய் யும் அநியாயத்தை நியாயம் என்று கூற வேண்டும் அல்லது அநீதிகளை பராமுகமாக விட்டுவிட வேண்டும் என்பது பொருள் அல்ல. மாறாக, உண்மையுள்ள இருதயத்தோடு, அவர்களை நல்வழியிலே நடத்தி, அவர்கள்மேல் கரிசணையுள்ள வர்களாக காணப்படவேண்டும். இதைக் குறித்து கர்த்தராகிய இயேசு கூறும் போது: 'ஏற்றவேளையிலே தன் வேலைக்காரருக்குப் போஜனங் கொடுத்து அவர்களை விசாரிக்கும்படி எஜமான் வைத்த உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரன் யாவன்? எஜமான் வரும்போது அப்படிச் செய்கிறவனாகக் காணப்படுகிற ஊழியக்காரனே பாக்கியவான். தன் ஆஸ்திகள் எல்லாவற்றின் மேலும் அவனை விசாரணைக்காரனாக வைப்பானென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். அந்த ஊழியக்காரனோ பொல்லாதவனாயிருந்து: என் ஆண்டவன் வர நாள் செல்லும் என்று தன் உள்ளத்திலே சொல்லிக்கொண்டு, தன் உடன்வே லைக்காரரை அடிக்கத் தொடங்கி, வெறியரோடே புசிக்கவும் குடிக்கவும் தலைப்பட்டால், அந்த ஊழியக்காரன் நினையாத நாளிலும், அறியாத நாழிகையிலும், அவனுடைய எஜமான் வந்து, அவனைக் கடினமாய்த் தண்டித்து, மாயக்காரரோடே அவனுக்குப் பங்கை நியமிப்பான்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.' எனவே கர்த்தர் வெளி ப்படும் நாளிலே, நாம் பாக்கியம் பெற்றவர்களாக காணப்படும்படிக்கு, இந்நாட்களிலே நாம் அவர் வருகையின் நாளுக்கென்று எப்போதும் ஆதயத்தப்படுகின்றவர்களாகவும், உள்ளத்திலே உண்மையும் உத்தமமு ள்ளவர்களாக நடந்து கொள்ள வேண்டும்.

ஜெபம்:

அநாதி தீர்மானித்தின்படி என்னை அழைத்த தேவனே, உம்மிடம் பெற்றுக் கொண்ட பொறுப்புக்களை நல்மனதோடு நிறைவேற்றி முடிக்க, எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - பிலி 2:3-4