தியானம் (கார்த்திகை 26, 2025)
முடியாதவைகளை செய்து முடிக்கும்படி...
பிலிப்பியர் 4:13
என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு.
அநேக ஆண்டு காலமாக நான் வாழ்ந்து வருகின்றேன். உடன் பிறந்த சொந்த சகோதரனையே அன்பு செய்ய முடியாமல் இருக்கின்றது. நீங்கள் என்ன உன் பகைவனை அன்பு செய்ய என்று கூறிகின்றீர்கள். இது எப்படி சாத்தியமாகும்? இது என்னால் முடியாத காரியம் என்று ஒரு வயதான ஐயா கூறிக் கொண்டார். இது மிகவும் உண்மையான கருத்து. மனிதனுடைய பெலனால் ஒன்றும் கூடாது. முதல் பெற்றோ ராகிய ஆதாம் ஏவாளுடைய, முதல் குமாரனாகிய காயீன், தன் சகோதரன் கொடுத்த காணிக்கை யை தேவனாகிய கர்த்தர் ஏற்றுக் கொண்டு, தன்னுடைய காணிக்கை யின் மேல் பிரியமாய் இருக்கவில் லை என்பதற்காக, தன் இளைய சகோதரனாகிய ஆபேலை கொலை செய்து விட்டான். அன்றுமட் டுமல்ல, இன்றும் இப்பப்பபட்ட எண்ணம் மனிதர்களின் உள்ளங்களிலே கிரியை செய்து வருக்கின்றது. உலகதிலுள்ள சட்டங்களினால்; உடனடியாக தண்டனை வரும் என்பறகாக சிலர் பொறுமையயை காத்துக் கொள்கின்றார்கள். தேவன் கூறும் அன்பு, அது நம்முடைய வாழ்விலே வெளிப்படும் கனியாக இருக்கின்றது. பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்படிக்கு தேவனாகிய கர்த்தர்தாமே வரங்களை கொடுத்திக்கின்றார். அந்த வரங்கள் வெற்றி வாழ்விற்கு அசியமானது. ஆனால், அந்த வரங்களினால், விசுவாசிகளிள் வாழ்க்கையிலே சீர்பொருந்துதல் உருவாக வேண்டும். அப்படி உருவாகும் போது, அந்த மாற்றங்கள் வாழ்வின் நற்கிரியைகளாகிய கனிகளினாலே உறுதி செய்யப்படும். சொந்த சகோதனை உண்மையாக நேசிப்பதற்கும், பகைவர்களை அன்பு செய்வதற்கும், தேவ கிருபை வேண்டும். நாம் செய்ய முடியாத காரியங்களை செய்து முடிக்கும்படிக்கே, தேவ கிருபை கொடுக்கப்பட்டிருக்கின்றது. எல்லாம் கிருபையே என்று கனியற்ற வாழ்க்கை வாழ்பவன் தனக்கு கிடைத்த தேவ கிருபையை போக்கடிக்கின்றார்கள். தன் வாழ்விலே அந்தகார கிரியைகளிலிருந்து விடுதலை பெறாமல், தேவ கிருபையினாலே இரட்சிக்ப்பட்டேன் என்று ஒருவன் எப்படி கூற முடியும்? நாம் பாவத்திலே நிலைத்திருந்து கொண்டு, அதைவிட்டுவிட மனதில்லாமல், தேவ கிருபை என்னை குணப்படுத்தும் என்று கூறுவது மதியீனமாக இருக்கும். நீங்களோ, மெய்யான திராட்சை செடியாகிய இயேசு கிறிஸ்துவிலே நிலை த்திருந்து, தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பியுங்கள்.
ஜெபம்:
கனி கொடுக்கும்படி என்னை ஏற்படுத்திய தேவனே, உம்முடைய திருக்குமாரனாகிய இயேசுவில் நிலைத்திருந்து, நீர் விரும்பும் கனிகளை கொடுக்க உம்முடைய கிருபையினாலே என்னை பெலப்படுத்தி வழிநடத் திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - 1 கொரி 1:1-13