தியானம் (மார்கழி 21, 2025)
புத்தியுள்ள மனுஷன்
ஏசாயா 32:2
அவர் காற்றுக்கு ஒதுக்காகவும், பெருவெள்ளத்துக்குப் புகலிடமாகவும், வறண்ட நிலத்துக்கு நீர்க்கால்களாகவும், விடாய்த்த பூமிக்குப் பெருங்கன்மலையின் நிழலாகவும் இருப்பார்.
தேவனுடைய வார்த்தையை கேட்டு, அதை தன் வாழ்விலே இரவும் பகலும் தியானம் செய்து, அதன்படி வாழ்கின்றவனின் வாயின் வார்த் தைகள் தேவனுக்கு ஏற்புடையதாகவும், இருதயத்தின் நினைவுகளின் தோற்றும் நன்மையானதாகவும் இருக்கும். தேவனுடைய வார்த்தையை கேட்டும், அவைகளை அற்பமாக எண்ணி, தன் இஷ்டபடி பேசுகின்ற வனின் இருதயத்தின் நினைவுகளின் தோற்றும் தேவனுக்கு ஏற்புடைய தாக இல்லாததினாலே, முடிவிலே அவைகள் பொல்லாப்புக்குரியதாகவே மாறிவிடும். அக்காலத்திலே நோவா என்னும் ஒரு தேவ பக்தன் வாழ்ந்து வந்தான். அன்றிருந்த உல கிலே, அவனும் அவனுடைய குடும்பத்தார் மாத்திரமே தேவனுக்கு பிரியமாக வாழ்ந்து வந்தான். அக்கி ரமம் மலிந்து போயிருந்து உலகிலே நீதியைப் பிரசங்கித்தி வந்தான். ஆனால், மற்றவர்கள் யாவரும், தேவனுடைய வார்த்தையைக் கேட்டும் அதை அசட்டை செய்து, ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள்வரைக்கும், ஜனங்கள் புசித் தும் குடித்தும், பெண்கொண்டும் பெண்கொடுத்தும், ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகுமட்டும் உணராதிருந்தார்கள். அதாவது தங்கள் கண்போன வழிகளிலே வாழ்ந்து தங்களுக்கு இஷ்டமாக வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள். நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் மறுபடி வரும் கால த்திலும் நடக்கும் என்று ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார். நோவாவின் பேழைக்கு ஒப்பாக தேவனாகிய கர்த்தரே நம்முடைய புக லிடமா இருக்கின்றார். தேவ வார்த்தையில் நிலைத்திருப்பது இந்த உல கத்திற்குரியது மட்டுமல்ல. முதன்மையாக அது நித்திய ஜீவனுக்குரியது. ஒருவேளை தேவனுடைய வார்த்தையை கேட்டு அதன்படி உண்மையும் உத்தமுமாக வாழ்கின்றார்கள் உபத்திரவங்களை சந்திக்க நேரிடலாம். பூமியிலே ஏற்படும் வெள்ளம் அவர்களை வாரிக்கொண்டு சென்றாலும், தேவனுடைய வார்த்தையை கேட்டு, அவைகளின்படி செய்கின்ற எவனோ, அவன் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனாக இருக்கின்றார். இந்த உலகத்திலே ஏற்படும் மரணம் அவ னுக்கு தீமைக்குரியதல்ல. மாறாக அது நித்திய ஜீவனுக்குரியதாகவே இருக்கின்றது.
ஜெபம்:
பரலோக தேவனே, நான் இந்த உலகத்திலே வாழ்ந்தாலும், கட ந்து சென்றாலும் நீரே என்னுடைய நித்திய புகலிடம் என்று நம்பிக்கை என்னைவிட்டு நீங்காதபடிக்கு, எனக்கு பிரகாசமுள்ள மனக்கண்களை தந்து வழிடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - யோவான் 11:25-26