புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 27, 2024)

கண்ணிகளுக்கு தப்புவிப்பார்

சங்கீதம் 91:2

அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளைநோய்க்கும் தப்புவிப்பார்.


ஒரு ஊரின்; தெருவில் இரவு நேரத்திலே வெளிச்சம் இல்லாதிருந்ததி னால், வனவிலங்குகளினாலும், கள்வர்களினாலும் அங்கிருந்த ஜனங் கள் தாக்குதல் செய்யப்பட்டார்கள். ஊரின் மூப்பர் சங்கமானது, கூட்ட ங்கூடி அந்தத் தெருவிலே மின்விளக்குகளை பொருத்தும்படி தீர்மானி த்து, துரிதமாக அதை செய்து முடித்தார்கள். ஜனங்கள் வெளிச் சத்திலே நடந்து செல்லும் போது, அவர்களுக்கு எதிராக இருந்த பயங்கரங்கள் யாவற்றையும் அவர்கள் இலகுவாக, தூரத்தி லேயே கண்டு கொண்டார்கள். நம்முடைய ஆவிக்குரிய வாழ்க் கையிலே, ஏதிரிகளின் சூழ்ச்சிகளை நாம் எப்படி அறிந்து கொள்ளலாம்? எதிரியாகிய பிசாசானவனையும், அவன் செயல்களையும் பற்றி அதி கதிகமாக கற்றுக் கொள்வதி னாலோ? இல்லை, நாம் நம்முடைய ஆண் டவராகிய இயேசு காட்டிய வழியிலே வாழ்ந்து, தேவ வசனத்திலே நிலைத்திருந்து, அனுதினமும் அவர் பாதத்தில் அமர்ந்து ஜெபிக்கின் றவர்களாக இருந்தால், நாம் எதிரியாகிய பிசாசானவனையும் அவன் செயல்களையும் குறித்து, சிந் தித்து, பயந்து, திகிலடையத் தேவையில்லை. நாம் ஜீவ ஒளியிலே நடக்கும் போது, நமக்கு எதிரான தந்திரங்களையும், சூழ்ச்சிகளையும் தெளிவாக அறிந்து கொள்வோம். தீர்க் கதரியாகிய எலிஷhவின் நாட்க ளிலே, எதிரிகள் இஸ்ரவேல் தேசத்திற்கு எதிராக யுத்தத்திற்கு புறப்படு ம்படி திட்;டம் போடுகின்ற வேளையிலே, அந்த திட்டங்கள் யாவையும் தீர்க்கதரியானவன் இஸ்ரவேலின் ராஜாவிற்கு வெளிப்படுத்தி வந்தான். எதிரிகளின் தந்திரமான திட்டங்களை தீர்க்கதரிசியாகிய எலிஷh எப்படி அறிந்து கொண்டான்? எதிரிகளை வேவு பார்க்கும்படி அவன் சென்றிரு ந்தானா? இல்லை, அவன் தேவனாகிய கர்த்தரோடு ஐக்கியமாக இரு ந்தான். தேவனுடைய வழியிலே வாழ்ந்து வந்தான். தேவனாகிய கர்த் தர்தாமே எதிரிகளின் சூழ்ச்சிகளை, தீர்க்கதரியானவனுக்கு தெளிவாக வெளிப்படுத்தினார். அதுபோலவே, நாம் தேவ சத்தத்தை கேட்கும்படி க்கு, அவருடைய சத்தம் இன்னதென்பதை அறிந்து கொள்ள வேண் டும். அனுதினமும் அவரோடு ஜெபத்தினாலே இடைப்பட வேண்டும். அப்பொழுது அவர் நம்மோடு பேசுகின்றதை அறிந்து கொள்வோம். எதிரிகள் நமக்கு மறைவாக கண்ணியையும் கயிறுகளையும் மறைவாய் வைத்தாலும், நம்முடைய கால்கள் இடறாதபடிக்கு கர்த்தம் நம்மை எச்சரித்து நடத்துவார்.

ஜெபம்:

என் தேவனாகிய கர்த்தாவே, என் இரட்சிப்பின் பெலனே, யுத்தநாளில் என் தலையை மூடுகின்றவரே, எதிரிகளின் வலைக் குள் சிக்கிக் கொள்ளாமல் உம் வார்த்தையின் வெளிச்சத்தில் நடக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 141:9-10