தியானம் (கார்த்திகை 26, 2025)
அற்புத அடையாளங்கள்!
மாற்கு 16:17
விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்க ளாவன: என் நாமத்தினா லே பிசாசுகளைத் துரத்து வார்கள்; நவமான பாஷை களைப் பேசுவார்கள்;
நற்கிரியைகள் அவசியமல்ல என்று தேவன் அவர்களுக்கு கொடுத்த கிருபையை விரயமாக்குகின் றவர்களைக் குறித்து எச்சரிக்கையுள்ளவர் களாக இருங்கள். தேவனுடைய கிருபையை பெறுவதற்கு எவரும் பாத்திரரல்ல. ஆனால் அவருடைய கிருபையில்லாமல் தேவன் விரு ம்பும் கிரியைகளை நடபிக்க முடியாது என்பதை அறிந்த தேவன், அதை பூரணமாக தம்முடைய பிள் ளைகள் மேல் பொழிகின்றார். ஏன் அதைப் பொழிகின்றார், பெலவீனர்க ளாகிய நம்மால் நடப்பிக்க முடியாத பலத்த கிரியைகளை நடப்பிக்கும்படி, அவர் கிருபையை தினமும் பொழி கின்றார். ஆண்டவராகிய இயேசு தாமே, பரலோகத்திற்கு எழுந்தருள முன்னதாக, தம்முடைய சீஷர்களை நோக்கி: 'நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ;டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். விசுவா சமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசு வாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான். விசுவாசிக்கி றவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசா சுகளைத் துரத்துவார்கள்; நவமான பாiஷகளைப் பேசுவார்கள்; சர்ப்ப ங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது. வியாதியஸ்தர்மேல் கைகளை வைப் பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார். இவ்வி தமாய்க் கர்த்தர் அவர்களுடனே பேசினபின்பு, பரலோகத்துக்கு எடுத்து க்கொள்ளப்பட்டு, தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்தார். அவர் கள் புறப்பட்டுப்போய், எங்கும் பிரசங்கம்பண்ணினார்கள். கர்த்தர் அவர் களுடனேகூடக் கிரியையை நடப்பித்து, அவர்களால் நடந்த அடை யாளங்களினாலே வசனத்தை உறுதிப்படுத்தினார். ஆமென்.' இந்த ஜீவ வார்த்தைகளை நாம் மாற்கு கடைசி அதிகாரமாகிய 16ம் அதிகார த்திலே, 15ம் வசனத்திலிருந்து 20ம் வசனங்கள் வரை வாசிக்கலாம். ஆனால், தேவ பிள்ளைகள் சிலவேளைகளிலே இந்த அடையாள ங்களோடு நின்றுவிடுகின்றார்கள். அவர் வாழ்க்கையின் கிரியைகளிலே தேவன் எதிர்பார்க்கும் கனிகளை காண்பது மிகவும் அரிதான காரியமாக இருக்கின்றது. ஒருவன் எத்தனை அடையாளங்களை கண்டும், நடப் பித்தும், கிறிஸ்துவின் சாயலில் தினமும் வளர்ந்து பெருகாவிட்டால் அடையாளங்களினால் அவன் ஆத்துமாவுக்கு பலன் என்ன?
ஜெபம்:
பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்படியாய் வரங்களை கொடுத்த தேவன், சீர்பொருந்துதலின் கனிகள் என் வாழ்வில் வெளிப்பட எனக்கு உணர்வுள்ள இருதயத்தைத் தந்து என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - மத்தேயு 10:1