தியானம் (புரட்டாசி 16, 2025)
எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்
பிலிப்பியர் 4:7
அப்பொழுது, எல்லாப் புத் திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.
கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன் எனறு பிலிப்பியர் நாலாம் அதிகாரம், நாலாம் வசனத்திலே வாசிக்கின்றோம். இதன் கருப்பொருள் என்ன? விசுவாசிகள் மனதிலே கவலைகள் இருந்தாலும் எப்போதும் சிரித்து, கவலை என்று காண்பிக்காமல், சந்தோஷமாக இருக்கின்றேன் என்று காண்பிப்பதா? அப்படியானால், உள்ள ஒரு வேஷமும் வெளியே ஒரு வேஷமுமாயிருக்குமே. ஒவ்வொரு விசுவாசியின் வாழ்க்கையில், அவர்கள் குடும்பத்தில், உறவினர், நண்பர்கள், சகவேலையாட்கள் மத்தியிலே கருத்து முரண் பாடுகள் ஏற்படும். இதற்கு விதிவிலக்கானவர்கள் இல்லை. சில வேளைகளிலே கடினமான சூழ்நிலைகளுக்குள் தள்ளப்படலாம். சவால்கள் ஒன்றின்பின் ஒன்றாக வரலாம். கிறிஸ்துவுக்குள் ஏக சிந்தையில்லாமல், வேறு சிந்தையுள்ளவர்களாக தர்கங்களை பிறப்பிக்கலாம். இதனால், மனதிலே கோபம், வன்மம், பகை, ஏமாற்றம் போன்ற கசப்பான எண்ண ங்கள் உண்டாகி, மனக் கவலையுள்ளவர்களாக மாறிவிடுகின்றார்கள். வாதுகள், வன்மங்கள், தர்க்கங்கள், கருத்து முரண்பாடுகள் மத்திலே கிறிஸ்துவினுடையவர்கள், தங்கள் முதிர்ச்சியை காண்பிக்க வேண்டும். ஆவியின் கனியாகிய சாந்த குணம் வெளிப்பட வேண்டும். அதனால் மனதிலே கவலை இல்லை என்று பொருளல்ல. 'நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங் களை ஸ்தோத்திரத்தோடேகூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனு க்குத் தெரியப்படுத்துங்கள்.' இப்படியாக கிறிஸ்துவிலே தங்கி வாழும் வாழ்க்கையிலே விசுவாசிகள் நாளுக்குள் நாள் வளர்ந்து பெருக வேண் டும். நம் மனக்கவலைகளையும், கிலேசங்களையும், தேவனுக்கு தெரியப்படுத்த வேண்டும். நம்மை தேற்றும் ஆவியானவர் நமக்குள்ள இரு ந்து கிரியையை நடப்பிக்க நாம் இடம் கொடுக்க வேண்டும். கர்த்தர் எல்லாவற்றையும் அறிந்தவர். யாவும் அவருடைய கட்டுப்பாட்டிற்குள் இருக்கின்றது என்ற அறிக்கையானது நடைமுறையிலே வெளிப்பட வேண்டும். 'அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசு வுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.' அப்பொழுது எல்லா சூழ்நிலைகளி லும் கர்த்தருக்குள் சந்தோஷமாக இருக்க முடியும்.
ஜெபம்:
எல்லாவற்றிலும் எல்லாமுமாக இருக்கும் சர்வ வல்லமையுள்ள தேவனே, இந்த உலகிலே பதறாமல் உம் வார்த்தையிலே நிலைத்திருந்து நிதானமாக வாழ எனக்கு கற்றுத் தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - 1 தெச 5:16-18