புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 26, 2025)

அவர் வழியிலே நடவுங்கள், நடத்துங்கள்...

சங்கீதம் 128:1

கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்.


தேவனுடைய கற்பனைகளை யார் போதிக்கின்றார்கள்? வீடுகளிலே பெற்றோர்கள் மூத்தவர்கள் போதிக்கின்றார்கள். சில பாடசாலைகளிலே ஆசிரியர்களும், சில வேலை ஸ்தலங்களிலே அங்கு பணிபுரிவோர் களில் சிலர் தியானங்களை நடத்துகின்றார்கள். பெண்கள் கூடுகை, வாலிபர் கூட்டங்களிலே, ஞாயிறு ஒய்வுநாள் பாடசாலைகளிலே வேத த்தை போதிக்கின்றார்கள். இப்படியாக நாம் பார்க்கும்போது, சபை யின் மேய்பர்கள் மாத்திரமல்ல, ஏறத்தாழ யாவருமே, தேவனுடைய கற்பனைகளை போதித்து வருகின்றார்கள். சிலர் அந்த ஊழியத்திற் கென்று பிரத்தியேமாக பிரித்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள். தேவனுடைய கற்பனைகளை யார் போதித்தாலும், அவற்றை கைகொண்டு போதிக்கிறவர்கள்மேல் தேவன் பிரியமாயிருக்கின்றார். இன்று மனிதர்கள், சிறுவர்களாக இருந்தாலும், பெரியவர்களாக இருந்தாலும், தங் கள் வாழ்வில், அவர்கள் நித்திரை செய்யும் நேரம் தவிர, பெரும்ப குதியை, பாடசாலைகளிலோ, வேலை ஸ்தலங்களிலோ, நண்பர்களுடனோ செலவு செய்கின்றார்கள். அதன் பின்னர், கிடைக்கும் நேரங்களின் அதிகமாக வீட்டிலே இருக்கின்றார்கள். கடைசியாக வாரத்திற்கு ஒரு சில மணி நேரங்களை சபையிலே செலவீடுகின்றார்கள். எனவே, பிள்ளைகள் கைகொண்டு, போதிப்பதை சிறந்த முறையில் கற்றுக் கொள்ளும் இடம் அவர்கள் குடும்பமாக இருக்கின்றது. குடும்பங்களிலே, பிள்ளைகள் சிறுவர்களாக இருக்கும்போது, தங்கள் பெற்றோர் கூறு வதை, கூறுகின்றபடி ஏற்றுக் கொள்கின்றார்கள். ஏனெனில், அவர்களு டைய உலகமானது பெற்றோராகவே இருக்கின்றது. அதுமட்டுமல்ல, சில நாடுகளிலே, சில குடும்பங்களிலே, பெற்றோர் சொல்வதற்கு செவி கொடுத்து கீழ்படியாவிடில், கடும் தண்டனைகளை சந்திக்க நேரிடுவ தால், பயத்தினாலே, பிள்ளைகள் வாலிப பருவத்திலும், வேறு தெரிவு கள் இல்லாதபடியினாலே பெற்றோர் சொல்வதை கேட்டுக் கொள்கி ன்றார்கள். ஆனால், அவர்கள் எந்த தேசத்திலே இருந்தாலும், வளர்ந்து தங்கள் அறிவிக்கு வரும் போது, பெற்றோர்கள் எப்படிப்பட்ட போத னையைக் கூறினாலும், அதை பெற்றோர்கள் செய்கின்றார்களா? இல் லையா? என்பதை பிள்ளைகள் நன்றாக அறிந்து கொள்கின்றார்கள். அவர்களுடைய காலம் வரும்போது, பெற்றோர்கள் கைகொண்டு போதித்தார்களா என்பதை தங்கள் பெற்றோர்களுக்கு தெரிவிப்பார்கள். எனவே கர்த்தருக்கு பயந்து அவர் வழியிலே நடவுங்கள், பின்னர் பிள்ளை களையும் அவ்வழியிலே நடத்துங்கள்.

ஜெபம்:

கற்றுத் தந்து நடத்துகின்ற தேவனே, நான் போதிப்பவைகளை கைகொண்டு போதிக்கும்படிக்கு, என் சுத்த மனசாட்சியானது சூடுண்டு போய்விடாதபடிக்கு எனக்கு பிரகாசமுள்ள மனக்கண்களை தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - தீத்து 2:6