தியானம் (ஆவணி 19, 2026)
என் அசையாத நம்பிக்கை!
சங்கீதம் 23:1
கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்.
பிலிப்பிய சபையின் விசுவாசிகளின் உதாரத்துவ குணத்தைக் குறித்து தேவ ஊழியராகிய பவுல் அவர்களை பாராட்டினார். அவர்கள் சமயம் கிடைக்கும் போதெல்லாம், உதவி செய்ய ஆயத்தமுள்ள மனதையு டையவர்கள் என்ற அவர் சாட்சி கொடுத்திருக்கின்றார்கள். இது விசுவா சியகளுக்கு இருக்க வேண்டிய தெய்வீக சுபாவம். அதே வேளையிலே, தேவ ஊழியர்கள் எப்படிப்பட்ட மனநிலையுடையவர்களாக இரு க்க வேண்டும் என்பதை குறி த்து, பவுல், இந்த நிருபத்திலே குறிப்பி ட்டிருக்கின்றார். மறுப டியும், பிலிப்பியர் 4ம் அதிகாரத்திலே, பொருளாதார நிலைமையை குறித்த, பார்வை எப்படியிருக்க வேண்டும் என்பதை விளக்கி கூறுகின் றார்கள். பிலிபிய சபையின் விசுவாசிகள் ஊழியர்களை விசாரிக்கி ன்றவர்களாக இருக்கின்றதால், அவர் கிறிஸ்துவுக்கும் மிகவும் சந்தோஷம் அடைந்தார். தன்னுடைய வயிறு நிறைவடைவதனால் அல்ல, மாறாக, அவர்கள் ஆவியின் கனியை தங்கள் வாழ்வில் செய் கைகள் வாயிலாக காண்பித்ததாலும், அவர்கள் தங்களுக்கானவை களை மாத்திரம் சிந்திகாமல், மற்றவர்களுடைய நலனைக் குறித்த எண்ணமுடையவர்களாக இருப்பதினாலும், அவர் சந்தோஷமடைந்தார். இந்த சுபாவமானது, விசுவாசிகளுக்கு மேன்மையான பரலோக ஆசீர் வாதங்களை கொடுக்கும் என்பதை அவர் அறிந்திருந்தார். எனினும், விசுவாசிகள் தனக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு அவர் ஊழியத்திற்கு தன்னை ஒப்புக் கொடுக்கவுமில்லை, அவர் அப்படியான மனநிலையோடு ஊழியத்தை செய்யவுமில்லை, ஊழிய த்தின் முடிவிலும் அவர் அந்த எண்ணம் கொண்டிருக்கவில்லை. மாறாக, உபகாரத்தை எதிர்பார்த்து ஊழியம் செய்ய வேண்டாம் என்பதை அவர் கிரியைகள் வாயிலாக நடப்பித்து காண்பித்தார். ஊபகார த்தை நாடி கிரியைகளை நடப்பிப்பவர்கள், அவர்கள் விசுவாசிகளாக இருந்தாலும், ஊழியர்களாக இருந்தாலும், அவர்கள் விசுவாச வாழ்க் கையைக் குறித்து தாங்கள் தங்களை வேத வார்த்தைகளின் வெளிச்ச த்திலே ஆராய்ந்து பார்ப்பது அவர்களுக்கு நல்லது. விசுவாசிகளும், ஊழியர்களும் கிறிஸ்துவிலிருந்த சிந்தையைத் தரித்துக் கொள்ள வேண்டும். மனிதர்களுக்கு நன்றியறிதலுள்ளவர்களாக இருக்க வேண் டும். ஆனால், அவர்கள் தேவனே தேவைகளை சந்திப்பவர், அவரே என் நல்ல மேய்ப்பன் என்பதில் உண்மையுள்ள மனதுடையவர்களாக இருக்க வேண்டும்.
ஜெபம்:
அன்பின் தேவனே, எந்த சூழ்நிலையிலும் நீரே தேவைகளை சந்திக்க வல்லவர் என்பதையும், நீரே வனாந்திரத்திலே உம்முடையவர்களை போஷிப்பவர் என்பதையும் உறுதியாய் அறிக்கை செய்ய பெலன் தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - காலத்தியர் 6:9