புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 27, 2026)

சாந்தமுள்ள மனம்

மத்தேயு 11:29

நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக் கொண்டு, என்னிடத்தில் கற்று க்கொள்ளுங்கள்;


ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த குடியானவனின் குடும்பத்திற்கு அவ்வூரி லுள்ள செல்வாக்குள்ள மனிதனொருவன், தீங்கொன்றை செய்துவி ட்டான். அந்த செல்வாக்குள்ள மனிதனை எதிர்த்து பதிலடி கொடுப்ப தற்கு அந்தன் குடியானவனுக்கு பெலனோ நிர்வாகமோ இல்லாதிரு ந்தது. அதனால், அவன் தன் கோபத்தையும் கசப்பையும் தன க்குள் அடக்கி வைத்திருந்தான். தனக்கு நடந்த தீங்கைப் பற்றி யோ, அல்லது தீங்கு செய்த அந்த செல்வாக்குள்ள மனித னைப் பற்றி பேசும்போது, மிக வும் தயவாகவும், அமைதியாக வும் மறுமொழி கொடுத்தான். அதனால், அவன் சாந்த குணமுள்ளவன் என்று சிலர் எண்ணிக் கொண் டார்கள். ஆனால், அவனோ, பழிவாங்குவதற்கு தகுந்த தர்ணம் கிடைக் கும்வரை பொறுமையுள்ளவனாக இருந்தான். இப்படிப்பட்டவர்கள், வெளிப்படையாக தங்கள் கோபத்தை காண்பிக்காமல், மறைமுகமாக தங்கள் கோபத்தை வெளிப்படுத்துபவர்கள். (Passive Aggressive). இது சாந்த குணமல்ல. நிதானமாகவும், அமைதலாகவும் தயவாகவும் பேசிக் கொள்வது, சாந்த குணமுள்ளவர்களின் வெளிப்படையான தன்மைக ளாக இருப்பது உண்மை. ஆனால் வெளிப்படையாக நிதானமாகவும், அமைதலாகவும், தயவாகவும் பேசுகின்ற யாவரும் உள்ளத்திலே சாந்த குணமுள்ளவர்களாக இருப்பார்கள் என்று கூற முடியாது. உண்மை யிலே சாந்த குணமுள்ளவன், தன் சுயபெலத்தில் தங்கி வாழாமல், ஆண்டவராகிய இயேசுவிலே இணைந்திருப்பதால், அவன் ஆவியிலே எளிமையுள்ளவனாக இருப்பான். அவன் தேவ நம்பிக்கையுள்ளவனாக ஆவியிலே எளிமையுள்ளவளாக இருப்பதினால், தன் குறை, குற்றங் களை, மீறுதல்களை குறித்து, துயரப்பட்டு, மனந்திரும்புகின்றவனாக இருப்பான். அப்படியாக வாழ்பவனின் வாழ்விலே, இக்கட்டும் நெரு க்கமும் சூழ்ந்து கொண்டாலும் பிதாவாகிய தேவனின் சித்தம் தன் வாழ்விலே நிறைவேறும்படி, தேவ வார்த்தைக்கு இடம் கொடுப்பான். நன்மைக்கு கைமாறாக மனிதர்கள் அவனுக்கு தீங்கு செய்யும் போது, அவர்களுக்கு பதிலடி கொடுக்க சுய பெலமும், சந்தர்ப்பமும் வாய்தா லும், அவன் தேவனுக்கு பயந்து அவருக்காக காத்திருக்கின்றவனாக இருப்பான். இது கிறிஸ்துவையுடையவர்களுடைய இயற்கை சுபா வமாக மாற வேண்டும். இவைகளை ஆண்டவர் இயேசுவினிடத்திலே கற்றுங் கொள்ளுங்கள்.

ஜெபம்:

அன்பும் இரக்கமுமுள்ள தேவனே, என் இருதயத்திலே உமக்கு வேதனையுண்டாக்கும் வழிகளை வைத்திருக்காமல், உம்முடைய குமாரனாகிய இயேசுவைப் போல வாழ என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - மத்தேயு 5:5