தியானம் (புரட்டாசி 02, 2026)
ஊழியர்களும் விசுவாசிகளும்
பிலிப்பியர் 4:14
ஆகிலும் நீங்கள் என் உபத்திரவத்தில் என்னோடே உடன்பட்டது நலமாயிருக்கிறது.
'இது உங்கள் கடமை, நீங்கள் சபையாரால் போஷிக்கப்படுகின்றீர்கள். நீங்கள் இல்லாவிட்டால், தேவன் இன்னுமொருவரை கொண்டு சபையை நடத்துவார்' என்று சில விசுவாசிகள், சபையின் மேய்ப்பருக்கு கூறுவதை அல்லது சகவிசுவாசிகளோடு இதைக் குறித்து வாக்குவாதம் செய்வதைக் கேட்டிருப்பீர்கள். அதே நேரத்திலே, 'நீங்கள் அல்ல, என்னை போஷpப்பவரகள். கர்த்தரே போஷிக் கின்றார். நீங்கள் இல்லையென்றால் என்றால் குடிமூழ்கிப் போவதி ல்லை. தேவன் வேறு வழியிலே என்னை நடத்துவார் என்று சில மேய்ப்பர்கள் அகங்காரத்துடன் கூறுவதை கேட்டிருப்பீர்கள். மேற்குறிப்பிடப்பட்ட இரண்டு சாராரின் கூற்றிலும் உண்மை இருக்கலாம். ஆனால், இவை கிறஸ்துவையு டையவ ர்களுடைய பண்பு அல்ல. இத்தகைய நன்றியற்ற மனநிலை விசுவாச மார்க்கத்தாருக்கு உகந்ததல்ல. பிலிப்பி சபையிலுள்ள விசுவாசிகளும், தேவ ஊழியராகிய பவுலும், விசுவாசிகளுக்கும், மேய்ப்பர்களுக்கும் இடையிலான உறவு மற்றும் மனநிலை எப்படி இருக்க வேண்டும் என்ப தற்கு நல்ல எடுத்துக்காட்டாக இருந்தார்கள். தேவ ஊழியராகிய பவுல், உடன் ஊழியர்களாலும் கைவிடப்பட்டு, தாழ்த்தப்பட்ட வேளையிலும் பிலிப்பிய சபையின் விசுவாசிகள் அவரை தாங்கும்படி முன்வந்தார் கள். மறுபக்கத்திலே, தேவ ஊழியராகிய பவுல், சிறையிலே இருந்த போதும், சபையின் விசுவாசிகளின் மேல் பாரங்களை ஏற்ற விரும்ப வில்லை. 'என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றை யுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு. ஆகிலும் நீங்கள் என் உபத்திரவ த்தில் என்னோடே உடன்பட்டது நலமாயிருக்கிறது. என்று கிறிஸ்துவு க்குள் சபையயோரின் உதாரத்துவ குணத்தின் வளர்ச்சியை குறித்து பாராட்டினார். அவர்களுக்கு தன் மனமார்ந்த நன்றியை தெரிவித்தார். அதே வேளையிலே, அவர் கைவிப்பட்ட வேளைகளும் குறைச்சலுண்டான வேளைகளும் ஏற்பட்டிருந்தது. எந்த நிலையிலும், அவர் உபகாரத்தை நாடாமல், விசுவாசிகளுடைய இரட்சிப்பு பூரணப்பட வேண்டும் என்பதிலேயே கருதுள்ளவராக இருந்தார். அத்தகைய மனநிலையுடையவர்களாகவே விசுவாசிகளாக நாமும் இருக்க வேண்டும். ஒருவேளை காரியங்கள் சாதகமாக இருக்காவிட்டாலும் நாம் நன்றியற்ற, கடும் வார்த்தைகளை பேசக்கூடாது. நம்முடைய வாயின் வார்த்தைகளும் இருதயத்தின் தியானமும் தேவனுடைய சமுகத்திலே ஏற்புடையதாக இருக்க வேண்டும்.
ஜெபம்:
என் இருதயத்தை ஆராய்தறிகின்ற தேவனே, முதலாவதாக கண்கண்ட பிறனுக்கு நன்றியறிதலுள்ளவனாக இருக்க உணர்வுள்ள இருதயத்தை எனக்கு தந்து உம் வார்த்தையின் வழியிலே நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - சங்கீதம் 112:1-10