தியானம் (ஆடி 22, 2026)
சபையாகிய சரீரத்துக்குத் தலையானவர்
கொலோசெயர் 1:18
அவரே சபையாகிய சரீரத்துக்குத் தலையானவர்; எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும்படி, அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர்.
யார் அதிகமாகவும், உண்மையாவும் சபையை நேசிக்கின்றார்கள்? நானா? முற்ற விசுவாசிகளா? மேய்ப்பரா? நிர்வார்க குழுவினரா? அல் லது கிறிஸ்துவா? ஓவ்வொரு விசுவாசிகயின் வாழ்க்கையிலும் நடக்கும் சம்பவங்களையும் யார் நன்றாக அறிந்திருக்கின்றார்கள்? இருதங்களை ஆராய்தறிக்கின்றவர் யார்? விசுவாசிகளுடைய சிந்தையை அறிந்தவர் யார்? ஆண்டவராகிய இயேசு கிறி ஸ்து தாமே, தம்முடைய விலை மதிக்க முடியாத இரத்தத்தை சிந்தி, தம்முடைய ஜீவனை கொடுத்தார். எனவே, அவர் யாவற்றையும் அறிந் திருக்கின்றார். ஒவ்வொருவருடைய எண்ணங்களையும் அதன் நோக்கங் களையும் அறிந்திருக்கின்றார். அவருடைய கண்களுக்கு யார் தப்பிக் கொள்ளகூடும்? கிறிஸ்துவின் சிந் தையை தரித்தவர்கள் இதை அதிகமாக உணர்ந்து கொள்ளுவார்கள். எனவே சபையிலே நீதி நியாயங்கள் சமரசம் செய்யப்படுகின்றது என்று நீங்கள் அறிந்து கொள்ளும் போது, கிறிஸ்துவே சபையாகிய சரீரத் துக்குத் தலையானவர்; என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். கிருபையின் நாட்களிலே, அவருடைய நீடிய பொறுமைய அசட்டை செய்கின்ற வர்கள், அவர் முன்குறித்த நாளிலே அதற்குரிய பலனை அடைவார்கள். கிறிஸ்துவின் சிந்தை உறுதியாய் உங்களில் நிலைத்திருக்ககடவதாக. தேவ ஊழியராகிய பவுல், ஆண்டவராகிய இயேசுவை அறிய முன்னதாக சபையோரை துன்பப்படுத்தி, சபையை பாழாக்கிக் கொண்டி ருந்தார். ஆண்டவரரிகிய இயேசு அவரை சந்ததித்த நாளிலே பவுலை நோக்கி: நீ ஏன் என்னை துன்ப படுத்துகின்றாய்? முள்ளிலே உதைப்பது உனக்கு கடினம் என்று கூறினார். 'உங்களுக்குள்ளே யுத்தங்களும் சண்டைகளும் எதினாலே வருகிறது. உங்கள் அவயவங்களில் போர் செய்கிற இச்சைகளினாலல்லவா?' என்று யாக்கோபு எழுதின நிருபம் 4ம் அதிகாரத்திலே வாசிக்கின்றோம். விசுவாசிகளுடைய போராயுதம் மாம்ச பெலன் அல்ல என்பதை உணர்ந்தவர்களாக, ஆவியின் சிந்தையை தரித்து, ஆவிக்குரிய போராட்டத்திலே, நல்ல போராட்டத்தை போராடுங்கள். உங்கள் விசுவாசத்தை காத்துக் கொள்ளுங்கள். உங்களை அழுத்தும் பாரங்களை உதறி தள்ளிவிட்டு, பந்தைய பொருளை நோக்கி முன்னேறுங்கள்.
ஜெபம்:
நித்திய ஜீவனுக்கென்று என்னை அழைத்த தேவனே, எனக்கு மிஞ்சின காரியங்களினாலே என் மனம் பாராப்பட்டு, சோர்ந்து போகாமல், நீர் என்னை அழைத்த நோக்கத்தை நிறைவேற்ற எனக்கு பெலன் தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - கலாத்தியர் 5:16