புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 03, 2026)

ஒரு கலசம் தண்ணீர்...

மாற்கு 9:41

நீங்கள் கிறிஸ்துவினுடையவ ர்களாகயிருக்கிறபடியால் என் நாமத்தினிமித்தம் உங்களுக்கு ஒரு கலசம் தண்ணீர்குடிக்கக் கொடுக்கிறவன் தன் பலனை அடையாமற்போவதில்லை என்று மெய்யாகவே உங்களு க்குச் சொல்கின்றேன்


'அநேக ஆண்டுகளாக ஊழியங்களுக்கு ஒத்தாசையாக இருந்தேன். சில ஊழியர்களின் பொறுப்பற்ற தன்மையினால் சலித்துப் போய்விட் டேன்' என்று ஒரு விசுவாசியானவன் கூறிக் கொண்டான். 'எத்தனை யோ வருடங்கள் எத்தனையோ பாடுகளையும் துன்பங்களையும் என் குடும்பத்தார் சகித்துக் கொண்டார்கள். தொடர்ச்சியான அழுத்தங்களால் ஊழியத்தின் பாதையிலே இளைத்துப் போய்விட்டேன்.' என்று ஒரு ஊழியர் சொல்லிக் கொண்டார். இப்படியான கூற்றுக்களை சில விசு வாசிகளும், ஊழியர்களும் கூறு வதை நீங்கள் கேள்விப்பட்டிருப் பீர்கள். அந்த வேளைகளிலே அவ ர்களுக்கு உபதேசம் பண்ணும்வது இலவான காரியம். ஆனால், அந்த வழியாக போனவர்கள் இந்தக் கூற்றுக்களின் தார்பரியத்தை நன்கு உணர்ந்து கொள்வார்கள். கிறிஸ் தவ வாழ்விலே நாம் யாவரும் சந்திக்கும் போராட்டங்கள் அநே கம். அதனோடு வரும் வேதனை களும் அதிகம். இவை உண்மைச் சம்பவங்கள். உதவி செய்து ஏமா ற்றம் அடையும் வேளைகள் உண்டு. ஆனால், ஏமாற்றங்களினால் உங் கள் நற்சுபாவங்களை அடக்கி வைக்காதிருங்கள். யாருக்காக இந்த உதவிகளை செய்கின்றறேன்? யாருக்கு ஊழியம் செய்கின்றேன்? எதற்காக ஊழியம் செய்கின்றேன்? பொருளாதார இலாபம் கருதியா அல்லது நஷ;டம் கருதியா தான தர்மங்களை செய்து வருகின்றேன்? நீங்கள் ஊழியராக இருந்தாலும், விசுவாசிகளாக இருந்தாலும், 'நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்துவைச் சேவிக்கிறதினாலே, சுதந்தரமாகிய பலனைக் கர்த்தராலே பெறுவீர்களென்று அறிந்து, எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர் வமாய்ச் செய்யுங்கள். அநியாயஞ்செய்கிறவன் தான் செய்த அநியா யத்துக்கேற்ற பலனை அடைவான்; பட்சபாதமே இல்லை.' என்று பரிசுத்த வேதாகமத்திலே வாசிக்கின்றோம். மேலும் ஆண்டவர் இயேசு கூறுகையில், 'என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது, சகோதரரையா வது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவி யையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனோ, அவன் நூறத்தனையாய் அடைந்து, நித்திய ஜீவனையும் சுதந் தரித்துக்கொள்ளுவான்;' என்றார்.

ஜெபம்:

கிருபை நிறைந்து தேவனே, உலகிலே நடக்கும் அநியாயங்களை கண்டு என்னுடைய மனம் சோர்ந்து போகாமல், தெய்வீக சுபவாங்களை வெளிக்காட்ட எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 10:42