தியானம் (புரட்டாசி 11, 2026)
பிதாவின் சித்தம் செய்யுங்கள்
1 கொரிந்தியர் 12:12
எப்படியெனில், சரீரம் ஒன்று, அதற்கு அவயவங்கள் அநேகம்; ஒரே சரீரத்தின் அவயவங்களெல்லாம் அநேகமாயிருந்தும், சரீரம் ஒன்றாகவேயிருக்கிறது;
குழந்தைப் பருவத்திலே தன் பிள்ளை மற்றப் பிள்ளைகளைப்போல காரியங்களை சீக்கிரமாக கற்றுக் கொள்ள வேண்டும். சிறு பிள்ளையாக பாடசாலைக்கு செல்லும் நாட்களிலே, மற்றய மாணவர்களைப் போல, படிக்கும் பாடங்களிலே சிறந்து விளங்க வேண்டும். வீட்டில், வெளியிலும் அந்தந்த வயதிலுள்ள பிள்ளைகளுக்கு ஒத்தவனாகவோ அல்லது அவர்களிலும் மேன்மையானவனாக இருக்க வேண்டும் என்று பொதுவாக எல்லா பெற்றோரும் ஆசைப்படுவதுண்டு. இந்தப் பட்டிய லுக்கு முடிவில்லை. சில இடங்க ளிலே, சில பெற்றோர், தங்கள் பிள் ளைகளில் வாழ்விலே குறைவுகள் ஏற்படும் போது அல்லது அவர்கள் வயதிலுள்ள பிள்ளைகளைப் போல காரியங்களை செய்யாமல் இருக் கும் போது, தங்கள் பிள்ளைகளு க்கு அழுத்தங்களை கொடுக்கின்றா ர்கள். தங்களுடைய பிள்ளை சிறந்து விளங்க வேண்டும் என்னும் எண்ணம் நல்லது. ஆனால், ஒவ்வொரு பிள்ளைக்கு பிள்ளை நேரமும் காலமும் நோக்கமும் வேறுபட்டது என்பதை மறந்து போய்விடு கின்றார்கள். வரங்களில் வித்தியாசங்கள் உண்டு, ஆவியானவர் ஒரு வரே. ஊழியங்களிலேயும் வித்தியாசங்கள் உண்டு, கர்த்தர் ஒருவரே. கிரியைகளிலேயும் வித்தியாசங்கள் உண்டு, எல்லாருக்குள்ளும் எல்லா வற்றையும் நடப்பிக்கிற தேவன் ஒருவரே. ஆவியினுடைய அநுக்கிரகம் அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது. எப் படியெனில், ஒருவனுக்கு ஆவியினாலே ஞானத்தைப் போதிக்கும் வச னமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே அறிவை உணர்த் தும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே விசுவாச மும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே குணமாக்கும் வரங்க ளும், வேறொருவனுக்கு அற்புதங்களைச் செய்யும் சக்தியும், வேறொ ருவனுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தலும், வேறொருவனுக்கு ஆவிக ளைப் பகுத்தறிதலும், வேறொருவனுக்குப் பற்பல பாஷைகளைப் பேசுத லும், வேறொருவனுக்குப் பாiஷகளை வியாக்கியானம்பண்ணுதலும் அளி க்கப்படுகிறது. இவைகளையெல்லாம் அந்த ஒரே ஆவியானவர் நடப்பித்து, தமது சித்தத்தின்படியே அவனவனுக்குப் பகிர்ந்து கொடு க்கிறார். எனவே, உங்கள் அழைப்பையும் தெரிந்து கொள்ளுத லையும் அறிந்து கொள்ளுங்கள். பிதாவின் சித்தத்தை நிறைவேற்றுங்கள்.
ஜெபம்:
அன்பின் பரலோக பிதாவே, என்னை நீர் அழைத்து நோக்கத்தை நான் அறிந்து, உம்முடைய திருச்சித்தத்தை என் வாழ்விலே நிறைவேற்றும்படி எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - யோவான் 6:40