புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 09, 2026)

முந்தின சிந்தனைகள் வேண்டாம்

ஏசாயா 43:18

முந்தினவைகளை நினைக்க வேண்டாம்; பூர்வமானவை களைச் சிந்திக்கவேண்டாம்.


ஒரு மாணவனானவன், வாலிப பிரயாத்திலே சில தவறான பழக்கவழக்கமுள்ள சக மாணவர்களுடன் நட்பாயிருந்தான். அவர்கள் அவன் வசி க்கும் வீட்டிற்கு சற்று தொலைவில் இருந்த போதும், அவன் அவ்வ வ்போது போக்கும்வரத்துமாக இருந்து வந்தான். அவனுடைய பெற் றோர் பலமுறை புத்திமதி கூறினார்கள். ஆனாலும், ஏதோ ஒரு வகை யிலே அவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று வந்தான். ஒரு நாள், அவன் அவர்களோடு சேர்ந்து பொல் லாப்பு ஒன்றில் அகப்பட்டுவிட்டான். அவனுடைய தகப்பனானவர், அவ் விடத்திற்கு விரைந்து சென்று, அவ னை காப்பாற்றினார். இனி அங்கு செல்லாதே என்று அவனை கண்டி த்து, அவனுக்கு பல புத்திமதி களை கூறினார். அதனால் உண்டாகக்கூடிய பாதகமான பின்விளைவு களை பற்றி எடுத்துரைத்தார். அப்படியிருந்தும், சில நாட்கள் சென்ற பின்பு அவன் அந்த நண்பர்கள் இருக்கும் இடத்திற்கு சென்றுவிடுவான். இது ஒரு முடியாத தொடர்கதையாக இருந்தது. ஆனால், அது பயங் கரமான முடிவை உண்டு பண்ணும் என்பதை குறித்து அவன் உணர் வற்றவனாக இருந்தான். பொல்லாப்பு விலகி வாழ்வதற்கு அவன் தகப் பனானவர் உதவுவதற்கும், ஆலோசனை கூறுவதற்கும் எப்போதும் ஆய த்தமுள்ளவராக இருந்தார். ஆனால், மகனானவனோ, தன்னுடைய பக்க த்தில் தான் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகளை செய்ய மனதில்லா தவனாக இருந்தான். விடுதலயடைந்து சமாதானமான வாழ்வு வாழ்வ தற்கு இரண்டு சாராரும் ஒன்றாக செயற்பட வேண்டும். அதுபோலவே, ஒரு விசுவாசியின் ஆவிக்குரிய வாழ்விலும், அவன் தன் துக்கங்கள், கவலைகளை தேவனிடம் தெரியப்படுத்தி, அவர் பாதத்திலே பாரங் களை இறக்கி வைக்கின்றான். தேவ சமாதானத்தை பெற்றுக் கொள்கி ன்றான். அதை காத்துக் கொள்வதற்கு, அவன் தன்னுடைய பக்கத்திலே செய்ய வேண்டிய காரியங்கள் உண்டு. அவைகளிலே முக்கியமான தாக, அவன் தன் சிந்தனையில் இருப்பவைகளை குறித்து எச்சரிக்கையு ள்ளவளாக இருக்க வேண்டும். தன்னுடைய சிந்தனையை மறுபடியும், பழைய வாழ்க்கை முறையினால் நிரப்பிக் கொள்ளகூடாது. சமாதான த்தை குழப்பி, பாவத்திற்கு வழிவகுக்கும் சம்பவங்களை கற்பனை செய்யாமல், தேவனுக்குரியவைகளை தியானிக்க பழகிக் கொள்ள வேண்டும். அந்த வாலிபனானவன், தன் பழைய வாழ்க்கைக்கு திரும்ப மனதுள்ளவனாக இருந்ததுபோல, விசுவாசியாவன் தன் சிந்தயை பழைய காரியங்களை, சிந்திப்பதற்கு இடங்கொடுக்கக் கூடாது.

ஜெபம்:

வனாந்தரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குகின்ற தேவனே, பழைய வழிகளுக்கு என்னை நடத்திச் செல்லும் சிந்தனைகளை என்னைவிட்டு அகற்ற எனக்கு கிருபை செய்வீ ராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கின்றேன் ஆமென்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 4:8