புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 19, 2026)

உங்கள் குறைவு என்ன?

மத்தேயு 6:33

முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.


ஒரு காரியாலத்திலே விசுவாசியொருவன் நல்ல உத்தியோகத்தை செய்து வந்தான். ஆண்டுகள் கடந்து சென்றபோது, அந்த தொழிற்சாலையின் வருமானம் குறைவுபட்டதால், அதிகாரிகள் வேலையாட்களை குறைத்து கொள்ள வேண்டிய நிர்பந்தற்குள்ளானார்கள். அந்த விசுவாசியாவனுக்கும், மூன்று மாத தவணை கொடுத்திருந்தார்கள். அந்த செய் தியை கேட்ட போது, அந்த விசுவாசியாவன் பதறிப் போனான். 'என் குடும்பத்தை நான் எப்படி கொண்டு செல்லுவேன்? பிள்ளைகளுடைய எதிர்காலம் எப்படியாக முடியும்? அவர்களுடைய கல்வி மற்றும் இதர நிகழ்ச்சிகளுக்கு என்ன செய்வேன்?' என்று மூன்று மாததத்திற்கு பின் நடைபெற விருக்கும் வேலை நீக்கத்தை குறித்து கலக்கமடைந்தான். தன் வாழ்வில் குறைவு ஏற்பட்டுவிட்டது என்று கவலையடைந்தான். தேவ ராஜ்யத்திற்கென்று அழைக்கப்பட்ட அருமையான சகோதர சகோதரிகளே, இன்றைய நாட்களிலே சில விசுவாசிகளுடைய நிலைமை இப்படியாகவே இருக்கின்றது. இந்த சந்ததிக்கும், அடுத்த சந்ததிக்கும் சேர்த்து வைத்தால் தான் தங்கள் வாழ்வில் நிறைவு என்று எண்ணிக்க கொள்கின்றார்கள். அந்த நிலையை அடையாவிட்டால், அது தங்கள் வாழ்விலே குறைவு என்று கூறிக் கொள்கின்றார்கள். 'என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங் கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத் துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகி றேன்; ஆகாரத்தைப் பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா?' என்று ஆண்டவராகிய இயேசு கூறி யிருக்கின்றார். மேலும் அவர் கூறுகையில், 'இவைகளையெல்லாம் அஞ் ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார். முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடு க்கப்படும். ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும்.' என்றார். இன்று உங்களுடைய எதிர்கால திட்டம் என்ன என்பதை ஆராய்ந்து பாருங்கள். எதை நீங்கள் நாடித் தேடுகின்றீர்கள்?

ஜெபம்:

நித்திய ஜீவனுக்கென்று அழைத்த தேவனே, நான் அற்ப விசுவாசி யாக இருக்காமல், என் பரம பிதா என்னைப் பிழைப்பூட்டுகின்றார் என்பதை அறிந்து, விசுவாசத்திலே உறுதியாய் நிலைத்திருக்க எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 121:1-8