புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 10, 2026)

நேர்த்தியாகச் செய்திருக்கிறார்

பிரசங்கி 3:11

அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்;


ஒரு சமயம் ஆண்டவராகிய இயேசு தம்முடைய சீஷர்களோடு போகையிலே, பிறவிக்குருடனாகிய ஒரு மனுஷனைக் கண்டார். அப்பொழுது அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: ரபீ, இவன் குருடனாய்ப் பிறந்தது யார் செய்த பாவம், இவன் செய்த பாவமோ, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ என்று கேட்டார்கள். இயேசு பிரதியுத்தரமாக: அது இவன் செய்த பாவமுமல்ல, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமுமல்ல, தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப் படும் பொருட்டு இப்படிப்ப பிறந்தான் என்று கூறி, அவனை பார்வையடைச் செய்தார். அவனுடைய சரீரத்திலுள்ள கண்கள் மாத்திமல்ல, அவனுடைய மனக் கண்களும் பிரகாசமடைந்து, இயேசு தேவனுடைய குமாரன் என்று விசுவாசித்தான். பிறவியிலே குருடனாக இருந்த அந்த மனிதன் வழியாக பிதாவாகிய தேவனுடைய நாமம் மகிமைப்பட்டது. அவனு டைய குறைவு குறித்த நேரத்தில் நிறைவாக மாறியது. நித்திய வாழ்வுக் கென்று அழைப்பை பெற்ற அருமையான சகோதர சகோதரிகளே, உங்கள் குறைவுகளிலே எத்தனை முறை தேவ கிருபை நிறைவாக விளங்கியது. எத்தனை தடவைகள், உங்கள் குறைவிலே, இனி வழியில்லை என்ற வேளைகளிலே, இது ஒருவராலும் ஆகாதது என்று கூறும் நேரங்களிலே, தேவன் உங்களுக்கு நன்மைகள் செய்தார் என்று சாட்சி பகிர்திருக்கின்றீர்கள். என்னுடைய வாழ்வு அவருடைய போல் விறுவிறுப்பாக இல்லை, இவர் எத்தனையோ ஆசீர்வாதங்களை பெற்றிருக்கி ன்றார் என்று மற்றவர்களுடைய வாழ்வை பார்த்து தங்கள் நிலையை குறித்து குழப்பமடைவது பொதுவாக மனிதர்களுடைய இயல்பாக இருக்கின்றது. ஆனால் ஒரு விசுவாசியானவன், தேவனாகிய கர்த்தர் என்னை ஏன்படைத்தார்? எத்தனையோ உயிர்கள் இருந்தும் ஏன் என்னை அழைத்தார்? என்பதை குறித்து சிந்தித்து உணர்வடையும் போது, தேவ நன்மையை தன் வாழ்விலே கண்டடையும்வரை பொறு மையுள்ளனாக இருப்பான். குறைவை நிறைவாக்கின்றவர், பெலவீனத்திலே பெலனை தருகின்றவர் உங்களோடு இருப்பதால், குறைவு களிலே சோர்ந்து போகாமல், நீடிய பொறுமையுடன் தேவனுடைய நேரத்திற்காக காத்திருங்கள். உங்களை அழைத்தவர் உண்மையுள்ளவர். அவர் சர்வ வல்லமையுள்ள தேவன். அவர் உங்களுக்கென்று முன்குறித்தவைகள் நன்மையான வைகள். அதை அவர் நிச்சயமாக நிறைவேற்றி முடிப்பார்.

ஜெபம்:

தாழ்மையிலிருந்த என்னை நித்தியத்திற்கென்று அழைத்த தேவனே, நீர் அழைத்த நோக்கத்தை என் வழியாக நிறைவேற்றுவீர் என்பதில் உறுதியாய் தரித்திருக்க எனக்கு பெலன் தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோபு 42:2