தியானம் (ஆவணி 20, 2026)
ஒரு நன்மையுங் குறைவுபடாது
சங்கீதம் 34:10
சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறை வுபடாது.
சபை ஐக்கியமொன்றிலே ஒரு சகோதரனோ சகோதரியோ எத்தகைய பதவியிலே இருந்தாலும், அவர் சர்வ வல்லமையுள்ள தேவானகிய கர்த்தரை விசுவசித்து வாழ்கின்ற விசுவாசியாக இருப்பார்கள். நான் விசுவாசியல்ல நான் ஊழியன் என்று பதவியடைப்படியிலே தங்களை அறிமுகப்படுத்துபவர்கள் இருக்கி ன்றார்கள். ஆனால் நாம் யாவரும் விசுவாசிகளாக இருக்கின்றோம். பெதுவாகசபையிலே விசுவாசிகள் என்று அழைக்கப்படுகின்றவ ர்கள், வெளியிடங்களிலே வேலை செய்து உழைக்கின்றார்கள். அவர் களை வேலைக்கமர்த்தியர்வர்கள் அவர்களுக்கு சம்பளம் கொடுக்கி ன்றார்கள். வேலையை உண்டுபண்ணி, அதன் வழியாக பிழைப்பூட்டுகின்றவர் கர்த்தரே. ஒருவேளை வேலை இல்லாமற்போனாலும், கர்த்தரே விசுவாசிகளின் வாழ்வாதரத்திற்கு வழிகளை உண்டு பண்ணுகி ன்றார். சபையிலே ஊழியர்கள் என்று அழைக்கப்படுகின்றவர்கள், பொவாக சபை வழியாக வாழ்வாதாரத்தை பெற்றுக் கொள்வது நல்ல ஒழுங்காக இருக்கின்றது. ஒருவேளை சபையினால், ஒரு ஊழியன் போஷpக்கப்படாவிட்டால், யார் அந்த ஊழியனை பிழைப்பூட்டுகின்றார்? கர்த்தரே வழிகளை உண்டு பண்ணுகின்றவராக இருக்கின்றார். எனவே, சபையின் விசுவாசி என்று அழைக்கப்பட்டாலும், சபையின் ஊழியன் என்று அழைக்கப்பட்டாலும், நான் விசுவாசித்திலே நிலைத்திருந்து ஜீவனம் பண்ணுகின்றவர்களாக இருக்கின்றோம். தேவ ஊழியராகிய பவுல், 'நீங்கள் என்னிடத்தில் கற்றும் அடைந்தும் கேட்டும் கண்டும் இருக்கிறவைகளெவைகளோ, அவைகளையே செய்யுங்கள்; அப்பொழுது சமாதானத்தின் தேவன் உங்களோடிருப்பார்.' என்ற வசனத்தை கடந்த நாட்களிலே தியானித்தோம். ஊழியர்கள் என்றும், விசுவாசிகள் என்றும் அழைக்கப்படுகின்றவர்கள் சமாதானத்தை இழந்து போய் விட்டோம் என்று கூறும் போது, அவர்கள் கற்றும், அடைந்தும், கேட் டும், கண்டும் இருக்கின்றவைகளை தங்கள் வாழ்விலே செயற்படுத்த தவறிவிடுகின்றார்கள். கர்த்தருடைய வேதமானது, போதிப்பவர்கள் போதிப்பதற்கு மாத்திரமல்ல, அவர்கள் போதகத்தை கைகொள்வதற்கும் அருளப்பட்டிருக்கின்றது. 'சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது.'
ஜெபம்:
பரலோக தேவனே, என் வாழ்க்கையில் குறைவுகள் ஏற்படும் போது, முறுமுறுக்காமல், உம்முடைய வார்த்தையை நம்பி, அவைகளை அறிக்கையிட்டு, உம்முடைய நேரத்திற்கு காத்திருக்க எனக்கு பெலன் தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - சங்கீதம் 62:1-2