புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 27, 2026)

போதிக்கப்படக் கூடியவர்கள்

யாக்கோபு 4:10

கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்.


'எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன். தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன்.' என்று தேவ ஊழியராகிய பவுல் கூறியதை கடந்த நாளிலே பார்த்தோம். இந்த வசனங்களிலே, குறிப்பாக இரண்டு காரியங்களை குறித்து ஒவ்வொரு விசுவாசியும் கருத்து ள்ளவர்களாக இருக்க வேண்டும். 'கற் றுக் கொண்டேன்'. ஒரு விசுவாசியானவன் சபையிலே, அல்லது ஊழியத்திலே எந்தப் பதவியிலே இருந்தா லும். கற்றுக் கொள்ளும் எண்ணமுடையவனாகவும், போதிக்கப்படகூடிய வனுமாக காணப்பட வேண்டும். ஒருவேளை ஒரு ஊழிக்காரன் அநேக வருடங்கள் ஊழியம் செய்திருக்கலாம். ஆனால், அந்த ஊழியனும் தேவனிடத்திலிருந்து கற்றுக் கொள்ளும் மனதுடையவனும், போதிக்கப்பட கூடியவனுமாக காணப்பட வேண்டும். 'நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.' என்று கர்த்தருடைய வசனத்தை சங்கீதம் 32ம் அதிகாரம் 8ம் வசனத்திலே வாசிக் கின்றோம். தேவனாகிய கர்த்தர் எப்படி போதிக்கின்றார்? அவர் யார் வழியாக ஆலோசனைகளை வழங்குகின்றார்? எப்படி கற்றுக் கொடுக்கின்றார். அவர் வேதத்தின் வழியாகவும், சொற்பனங்கள், தரிசனங்கள் வழியாகவும் நேரடியாக தம்முடையவர்களோடு பேசிவது உண்மை. ஆனால், பொதுவாக, பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்படி ஊழியங்களையும், ஊழியர்களையும் ஏற்படுத்தியிருப்பதை எபேசியர் 4ம் அதிகாரத்திலே வாசிக்கின்றோம். எனவே, எனக்கு எல்லாம் தெரியும் என்று எண்ணத்தைவிட்டுவிட்டு, 'தேவவசனத்தை உங்களுக்குப் போதித்து உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாய்ச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்.' 'வாரினாலும் கடிவாளத்தினாலும் வாய் கட்டப்பட்டாலொழிய, உன் கிட்டச் சேராத புத்தியில்லாக் குதிரையைப் போலவும் கோவேறு கழுதையைப்போலவும் இருக்கவேண்டாம்.' என்ற பிரகாரமாய் உங்கள் மனதைக் கடினப்படுத்தாதபடிக்கு, கற்கக்கூடிய கூடிய மனநிலையுடையவர்களாகவும், போதகத்தை அசட்டை பண்ணா தவர்களுமாயிருங்கள் இருங்கள்.

ஜெபம்:

பரலோக தேவனே, கற்று அறிந்து கொண்டேன், முற்றிலும் தேறினவனானேன் என்ற மனநிலையுடையவனாக இராமல், உமக்கு முன்பாக தாழ்ந்த சிந்தையுள்ளனாய் நடந்து கொள்ள உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - நீதிமொழிகள் 11:2