புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 01, 2026)

உத்திரவங்களிளில் வெற்றி

சங்கீதம் 119:72

அநேகமாயிரம் பொன் வெள்ளியைப்பார்க்கிலும், நீர் விளம்பின வேதமே எனக்கு நலம்.


'ஆண்டவரே, தேவரீர் தலைமுறை தலைமுறையாக எங்களுக்கு அடைக்கலமானவர். பர்வதங்கள் தோன்றுமுன்னும், நீர் பூமியையும் உலக த்தையும் உருவாக்குமுன்னும், நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாயிருக்கிறீர்.' என்று சங்கீதம் 90 அதிகாரத்திலே வாசிக்கின்றோம். விசுவாசிகளுக்கு உண்டாகும் துன்பங்கள் தற்காலிகமானவைகள் ஆனால் சகலத்தையும் படைத்த சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரோ அநாதியாய் என்றென்றென்றை க்கும் மாறாதவராயிருக்கின்றார். இந்த உலகத்திலே மனிதர்கள் தங்கள் வாழ்வில் உபத்திரவங்களையும் துன்பங்க ளையும் எதிர்நோக்குகின்றார்கள். விசுவாசிகளும் இதற்கு விதிவிலக்கானவர்கள் அல்ல. இந்த உலகத்திலே உங்களுக்கு உபத்திரவம் உண்டு என்று ஆண்வராகிய இயேசுதாமே தம்முடைய சீஷர்களுக்கு கூறியிருக்கி ன்றார். உபத்திரவமும் துன்பத்தையும் விசுவாசிகள் அநாவசியதாக தேடிக் கொள்கின்றவர்களாக இருக்கக்கூடாது. கிறிஸ்துவின் சீஷர்களாக இருப்பபர்கள் உபத்திரவங்களுக்கு முகங்கொடுக்கும் போது, கற்றுக் கொள்கின்றார்கள். பயிற்சிவிக்கப்படுகின்றவர்கள். 'நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன். அநேகமாயிரம் பொன் வெள்ளியைப்பார்க்கிலும், நீர் விளம்பின வேதமே எனக்கு நலம். உம்முடைய கரங்கள் என்னை உண்டாக்கி, என்னை உருவாக்கிற்று. உம்முடைய கற்பனைகளைக் கற்றுக்கொள்ள என்னை உணர்வுள்ளவனாக்கும்.' என்று சங்கீத க்காரன் 119 சங்கீதத்திலே கூறுவதை காணலாம். சில வேளைகளிலே, விசுவாசிகள் தங்கள் சுய கொள்கைகள், போக்குகளிலே பிடிவாதமாக இருந்து விடுகின்றார்கள். எவ்வளவாய் வேத வசனங்களையும், ஆலோசனைகளும், எச்சரிப்புக்களையும் கேட்டாலும், அதை உள்வாங்கிக் கொள்வதில்லை. அதனால், தங்கள் மேல் உபத்திரவங்களையும் துன்ப ங்களை வரவித்துக் கொள்கின்றார்கள். எடுத்துக்காட்டாக, கெட்டகுமாரனுடைய உவமையைக் குறித்து அறிந்திருக்கின்றீர்கள். அவன் தன்மேல் பல துன்பங்களை வரவித்துக் கொண்டான். காலங்கள் கடந்து சென்றபோது, அவன் தன் பரிதாப நிலைமையை உணர்ந்து கொண்டான் இப்படியாக விசுவாசிகள் தங்கள் நிலைமையைக் குறித்து உணர்வடையும் போது, அவர்கள் மனக்கண்கள் பிரகாசமடைகின்றது. அவர்கள் வாழ்க்கை மறுரூபம் அடைகின்றது.

ஜெபம்:

தலைமுறை தலைமுறையாக எங்களுக்கு அடைக்கலமான தேவனே, என் உபத்திரவத்தின் நாட்களிலே நான் சோர்ந்து போகதபடிக்கு உம்முடைய கிருபையினாலே என்தை பெலப்படுத்தி நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 4:14