புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 07, 2025)

நல்ல பங்கு

லூக்கா 10:42

தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார்.


ஒரு சமயம் ஆண்டவராகிய இயேசு தம்முடைய சீஷர்களோடுகூட பிரயாணமாய்ப் போகையில், அவர் ஒரு கிராமத்தில் பிரவேசித்தார். அங்கே மார்த்தாள் என்னும் பேர்கொண்ட ஒரு ஸ்திரீ அவரைத் தன் வீட்டிலே ஏற்றுக் கொண்டாள். அவளுக்கு மரியாள் எனப்பட்ட சசோதரி இருந்தாள். அவள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக் கேட்டுக் கொண்டிருந்தாள். மார்த்தாளோ பற்பல வேலை களைச் செய்வதில் மிகவும் வருத்த மடைந்து, அவரிடத்தில் வந்து: ஆண் டவரே, நான் தனியே வேலை செய் யும்படி என் சகோதரி என்னை விட்டு வந்திருக்கிறதைக் குறித்து உமக்கு கவலையில்லையா? எனனுக்கு உதவி செய்யும்படிக்கு அவளுக்குச் சொல் லும் என்றாள். இயேசு அவளுக்குப் பிரதி யுத்தாரமாக: மார்த்தாளே, மார்த் தாளே, நீ அநேக காரியங்களைக் குறித்துக் கவலைப் பட்டு கலங்கு கிறாய். தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்து கொண்டாள் என்றார். அருமையான சகோதர சகோதரிகளே, ஆண்டவர் இயேசுதாமே ஒரு ஏழையின் வீட்டிற்குச் செல் வாராகில், அவர்களை இந்த உலத்தின் செல்வந்தர் ஆக்கும்படி விரு ம்புவாரோ அல்லது பரலோக பொக்கிஷங்களால் அவர்களை நிறை க் கும்படி வாஞ்சையாய் இருப்பாரோ? மனிதர்கள் பரலோகத்தின் பொக் கிஷத்தை சேர்த்து வைக்க வேண்டும் என்பதையே அவர் வாஞ் சிக்கி ன்றார். ஒரு மனிதனானவன், ஐக்கிய போஜனத்திலே கலந்து கொள் வதற்காக சபைக்கு சென்று வந்தால், அவனுக்கு உண்டாகும் பலன் என்ன? அவன் தன் வயிற்றுப் பசியை ஆற்றிக் கொள்வான். ஆனால், ஆண்டவராகிய இயேசு சபையை உருவாக்கியதன் பிரதானமான நோக்கம் அவனில் நிறைவேறாது காணப்படும் அல்லவா? ஆகாரம், விருந்தோம்பல், ஐக்கிய போஜனம் இவை யாவும், தேவனுடைய நோக் கம் நம்மில் நிறைவேற்றபடும்படி நடத்தப்பட வேண்டும். எனவே, ஒரு வன் வார்த்தையிலே நிலைத் திருந்தால், அவன் ஆவிக்குரிய காரியங் களில் மட்டுமல்ல, இந்த உலகத் தேவைகளிலும் மனநிறைவை கண்ட டை வான். போதும் என்கின்ற மனதோடு வாழும் வாழ்க்கையை கர்த்த ருக்குள் கண்டடைவான். எனவே, பரலோகத்திலிருக்கும் மேலானவை களை தேடுங்கள். இந்த உலககுமும் அதிலுள்ளவைகள் யாவும் கடந்து போகும், தேவ வார்த் தையில் நிலைத்திருக்கின்றவர்களோ, அழியாத பரலோக ராஜ்யத்தை சுதந்தரித்துக் கொள்வார்கள்.

ஜெபம்:

வார்த்தையை அனுப்பி குணமாக்குகின்ற தேவனே, இந்த பூமி யிலே வெற்றி வாழ்க்கை வாழ அவசியமான உம்முடைய திருவார்த்தையின் மேல் நான் வாஞ்சையாய் இருக்க உணர்வுள்ள இருயத்தைத் தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 16:5-6