புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 18, 2026)

விழிப்புள்ளவர்களாக இருங்கள்!

1 கொரிந்தியர் 16:13

விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள், புருஷராயிருங்கள், திடன் கொள்ளுங்கள்.


வஞ்சிக்கின்றவர்களுடைய தந்திரங்களைப் பற்றி கடந்த இரண்டு நாட்களாக பார்த்தோம். இரண்டாவதாக, விசுவாசிகள் விழிப்புணர்வுள்ளவர்களாக இருக்காமல் அசதியாக இருந்து விடுவதால், வஞ்சகர்களின் கண்ணிகளிலே சிக்கிக் கொள்கின்றார்கள். 'கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது. கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானி யாக்குகிறதுமாயிருக்கிறது.' தேவனுடைய வார்த்தைகளிலே ஒரு விசு வாசியின் கால்களுக்கு தீபமும், செல்லும் பாதைக்கு வெளிச்சமுமாக இரு க்கின்றது. ஒருவன் வெளிச்சத்திலே நடக்கும் போது, இருளின் அதிகாரம் அவனைப் பற்றிக் கொள்ளாது. வெளிச்சத்திலே இருளுக்கு இடமில்லை. ஆனால், ஆண்டவராகிய இயேசு தங்கள் இரட்கராக ஏற்றுக் கொண்டவர்கள், தேறின சிந்தையுள்ளவர்களாய் ஒழுங்காய் நடத்து கொள்ள வேண்டும் என்று தேவ ஊழியராகிய பவுல் பிலிப்பி சபையின் விசுவாசிகளுக்கு கூறினார். ஆனால், ஆண்டவர் இயேசுவை இரட்சராக ஏற்றுக் கொண்டவர்கள், சில வேளைகளிலே, தங்கள் சொந்த வாழ்விலே தனிப்பட வேதத்தை வாசித்து தியானிக்க தவறிவிடுகின்றார்கள். மற்றவர்களுடைய போத னைகளிலேயே எப்போது தங்கி வாழ்கின்றார்கள். தாங்கள் தங்கி வாழ் ந்தவர்கள் சறுக்கும் போது, இவர்களும் அவர்ளோடு விழுந்து விடுகின் றார்கள். ஒவ்வொரு விசுவாசியும், ஒரு ஆவிக்குரிய சபையை தெரிந்து கொள்ள வேண்டும். தங்கள் தங்கள் மனவிரும்பத்தின்படியல்ல, வேத த்தை சுத்தமாக பிரசங்கிக்கும் சபையை தெரிந்துகொள்ள வேண்டும். தங்கள் நட்புக்களை வேதத்தின்படி ஆராய்ந்து அறிந்து ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். மற்றவர்கள் வேதத்தை குறித்து பேசும் காரிய ங்கள், வேதத்திலே குறிப்பிட்டபடி உண்மையாக இருக்கின்றதா என்று அறிந்து கொள்ள வேண்டும். சத்திய ஆவியானவருக்கு இடம் கொடு க்கும் போது, அவர் வேத வார்த்தைகளை புரிந்து கொள்ளும்படி உணர் வுள்ள இருதயத்தையும், பிரகாசமுள்ள மனக்கண்களையும் கொடுக்கின்றார். எனவே, ஒவ்வொரு விசுவாசியும், ஆவிக்குரிய சபை ஐக்கியத்திலே இணைந்து, அங்கு பிரசங்கிக்கப்படும் வார்த்தைகளை கேட்டு கைகொள்ள வேண்டும். அனுதினமும் கருத்தோடு வேததத்தை வாசித்து, ஊக்கத்தோடு ஜெபிக்க வேண்டும். விழிப்புடன் வெற்றி வாழ்க்கை வாழ்வதற்பு இவைகள் இன்றியமையாதவைகள்.

ஜெபம்:

அன்பின் தேவனே, உம்முடைய வார்த்தைகளால் அடியேன் எச்சரிக்கப்படும் போது, அதை அசட்மை செய்யாமல், கைகொள்ளும்படி அதனால் உண்டாகும் மிகுந்த பலனை உணர்ந்து கொள்ளும் இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிரசங்கி 10:8