புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 25, 2026)

ஆலோசனைகளை தள்ளிவிடாதிருங்கள்

சங்கீதம் 119:105

உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.


பிறப்பிலிருந்து தங்கள் பிள்ளையின் சுபாவங்களை அறிந்திருந்த பெற்றோர், அந்த பிள்ளை வளர்ந்து வரும் போது, பாடசாலையில் அவனுக்கு வரக்கூடடிய சவால்களை நன்கு அறிந்திருந்தார்கள். அவன் அவைகளிலே மூழ்கிப் போய்விடக்கூடாது என்பதற்காக, அவனுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கி, அவனை நல் வழியிலே நடத்த பல முயற்சிகளை செய்து வந்தார்கள். அவனோ, வாலிப நாட்களின் ஆர ம்பத்திலேயே, 'உங்களுக்கு ஒன் றும் தெரியாது' என்று கூறி தன் வயதுக்கொத்தவர்களின் மதியீன மான வழிகளிலே நடக்க ஆரம் பித்தான். இந்த நிலைமையானது பெற்றோருக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. எவ்வளவு நல்ல ஆலோசனைகளை கூறினாலும், பெற் றோரின் அன்பைவிட வேறே நிகரற்ற அன்பு இந்த உலகத்தின் பார் வையிலே இல்லையென்று அறியாமல், அந்த பிள்ளையானவன் உணர் வற்றவனாக வாழ்ந்து வந்தான். ஆண்டவராகிய இயேசு தாமே இந்த உலக்திலே தன் திருப்பணியை நிறைவேற்றும் நாட்கள் சமீபித்திருக் கையில், தாம் அழைத்த ஜனங்களை பார்த்து: 'கோழி தன் குஞ்சுக ளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளும்வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று.' என்று கூறி னார். அன்று மட்டுமல்ல, இன்றும் அநேகருடைய வாழ்க்கை அப்படி யாகத்தான் இருந்து வருகின்றது. ஒருவேளை மேலே குறிப்பிடப்பட்ட அந்த சம்பத்திலுள்ள பெற்றோர், தங்கள் பரம பிதாவாகிய தேவனின் ஆலோசனைகளை எவ்வளவாக ஏற்று நடந்திருந்தார்கள் என்பதை அவர்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும். இன்று இந்த உலகிலே, வாழ் பவர்கள், முன்பு இருந்த சந்ததியைவிட, கீழ்படியாமையுள்ளவர்களாக வும், நன்றியறிதல் இல்லாதவர்களாவும் மாறிக் கொண்டிருக்கின்றார்கள். இந்த நிலைமை முன்பும் இருந்து வந்தது. ஆனால், இந்த காலத்திலே அவை அதிகமாக பெருகி இருப்பது வெளியரங்கமாக இருக்கின்றது. தங்கள் சிறுமையில் தங்களை நினைத்த மனிதர்கள், சீக்கிரமாக தூக்கி எறிந்து விடுகின்றார்கள். அதாவது, நன்மை செய்தவர்களுக்கு எல்லா வற்றிறும் அடிமைகளாக இருக்க வேண்டும் என்பது பொருளல்ல. ஆனால், அற்ப காரியங்களுக்காக நல்ல ஆலோசனைகளை தள்ளிப் போடுகின்றார்கள். நீங்கள் தேவ ஆலோசனையில் நிலைத்திருங்கள்.

ஜெபம்:

பரலோகத்திலிருக்கின்ற என் பிதாவே, உம்முடைய ஆலோசனைகளின் வழியை நான் ஒருபோதும் விட்டு விலகாதபடிக்கு எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 1 தெச 5:12-13