புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 21, 2026)

உலகத்தோடுள்ள நட்பு?

யாக்கோபு 4:7

ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப் போவான்.


சில வேளைகளிலே விசுவாசிகள் என்று தங்களை கூறிக் கொள்கின்றவர்கள் ஏன் தோற்றுப் போகின்றார்கள்? ஏன் அவர்களால் இந்த உல த்திலே தங்களை எதிர்க்கும் சக்திகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் போய்விடுகின்றது? சிறு வயதிலிருந்து ஆண்டவர் இயேசுவனை அறிந் திருந்த வலிபனொருவன், தன் வேலை செய்யும் இடத்திலே புதிய நட்புக்களை தனக்கென ஏற்படுத்திக் கொண்டான். சபையிலே அவனுக்கு ஐக்கியம் இருந்த போதிலும், அவன் ஆண்வர் இயேசு வை அறியாத நண்பனோடே உல்லாசப் பயணங்கள் செய்வதை விரும்பினான். இந்த வாலிபன் அந்த இரட்சிப்படையாத வாலிபானோடு மிகவும் ஐக்கியமாக இருந்தான். அவர்களுடைய ஐக்கியமானது ஆண்டவர் இயேசுவை குறித்தாக இருக்கவில்லை. பல ஆண்டுகள் சென்ற பின்பு, சபைக்கு சென்ற வந்த அந்த வாலிபனானவன், இரட்சிப்படையாத நண்பன் முன்னிலை யிலே, ஆண்டவர் இயேசுவை குறித்து உறுதியோடு பேசுவதற்கு தயங்கினான். சத்தியத்தை உறுதியாக கூறாமல், மற்றவர்களின் மனதை புண்படுத்த கூடாது என்று கூறிக் கொள்வான். ஏன் அந்த வாலிபனானவன் அப்படி நடந்து கொண்டான்? இரட்சிப்படையாத நண்பன் முன்னிலையிலே சாட்சியை இழந்து போனாதால், அவன் மனதிலே பயம் இருந்தது. உல்லாச பயணங்கள் செல்லும் போது, ஞாயிற்று கிழமைகளில் செய்த காரியங்களை குறித்த குற்ற உணர்வு அவன் மனதிலே எப்போதும் அழுத்திக் கொண்டிருந்தது. ஒரு விசுவாசியின் நட் பின் ஐக்கியத்தின் இணை ப்பு ஆண்டவர் இயேசுவாக இருக்காவிடின், அந்த ஐக்கியமானது தேவனுக்குரிதல்ல. பிரியமானவர்களே, தேவனுக்கு கீழ்படியாமல் பிசாசானவனிற்கு எப்படி எதிர்த்து நிற்க முடியும்? ஆதியிலே ஆதாம் ஏவாள், பிசாசானவனுடைய சத்ததிற்கு செவி கொடுத்து கீழ்படிந்ததினால், தேவனுக்கு சத்துருவானார்கள். பரலோகத்திற்கு எதிரியானார்கள். இன்றும் தங்களை கிறிஸ்தவர்கள் என்று கூறிக் கொள்கின்றவர்கள், இந்த உலகத்தோடுள்ள நட்பை மேன்மைபாராட்டு கின்றார்கள். சாலமோன் ராஜாவைப் போல, நாங்கள் ஞானிகள் என்று எண்ணி, சத்தியத்திற்கு விரோதமான நட்புகளை தங்களுக்கென ஏற்ப டுத்திக் கொள்கின்றார்கள். அதனால் பல பின்னடைவுகளை தங்கள் வாழ் விலே ஏற்படுத்திக் கொள்கின்றதை உணராதிருக்கின்றார்கள். நீங்களோ, சத்தியத்திற்கு கீழ்படிந்திருங்கள். பிசாசானவனிற்கு எதிர்த்து நில்லுங்கள்.

ஜெபம்:

என்னை அழைத்த தேவனே, நான் என்னை ஞானி என்று எண்ணி, இந்த உலத்திலே நட்புகளை ஏற்படுத்தி, சத்;தியத்தைவிட்டு விலகிப் போய்விடாதபடிக்கு நீர் என்னை உம் வழியிலே நடத்தி செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - யாக்கோபு 4:4