புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 06, 2026)

சகோதரரை ஸ்திரப்படுத்துங்கள்

லூக்கா 22:32

நானோ உன் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்; நீ குணப்பட்டபின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து என்றார்.


பெற்றோர் பலமுறை அறிவுரை கூறிய பின்பும், சைக்கிளை அதி வேகமாக ஓட்டிச் சென்ற வாலிபனொருவன், கட்டுபடுத்த முடியாமல், ஒரு குழியிலே விழுந்துவிட்டான். அதனால், அவனுக்கு சரீரத்திலே சில காயங்கள் ஏற்பட்டுவிட்டது. பெற்றோர் அவனைக் கடிந்து கொள்வதற்கு முன்னதாக, அவனுக்கு காயங்கட்டினார்கள். சரீரத்திலே பெரிதான காயங்கள் இல்லை, அவனுக்கு உயிர் ஆபத்து ஏற்படவில்லை என்பதற்காக தேவனுக்கு நன்றி கூறி னார்கள். சில ஆண்டுகளுக்கு பின்னர், அவனுடைய இளைய சகோதரன் அவ்விதமாக சைக்கிளை ஒட்டிச் சென்று இன்னுமொரு வாக னத்தோடு மோதி அடித்துவிட்டான். அதனால், அவனு க்கு சரீரத்திலே காயங்கள் ஏற்பட்டது. இந்த நிலையிலே, நீங்கள் அவர் களின் பெற்றோராக இருந்தால், அவனுடைய மூத்த சகோதரன் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்பீர்கள்? குறைந்த பட்சம், அவன் தன் தம்பியின் பரிதாபமான நிலையைக் குறித்து உணர்ந்து செயற்பட வேண்டும் என்று எண்ணுவீர்களல்லவா? இவ்விதமாகவே, கிழமைக்கு கிழமை நாம் தேவனுடைய வார்த்தைகளை நாம் கேட்கின்றோம். வார்த்தைகளை ஏற்றுக் கொண்டு தியானிக்கின்றோம். ஆனால், சில வேளைகளிலே, வாழ்க்கையின் நடைமுறை சம்பவங்களிலே எங்களுடைய மதியீனத்தினாலே தவறி விடுகின்றோம். மனம் வருந்தும் போது, தேவன் அதை மன்னிக்கின்றார். சிலர் எங்களுக்காக ஜெபிக்கின்றார்கள். இன்னும் சிலர் நாங்கள் பெலனடைய வேண்டும் என்று உற்சாகப்படுத்துகின்றார்கள். நாளடைவில் நாங்கள் குணமடையின்றோம். இந்த சம்பவங்களின் மத்தியிலே ஒருசிலர், வேதனையை கூட்டும்படி, நகைக்கின்றார்கள். வீண்பேச்சிகளை பேசி தூற்றித் திரிகின்றார்கள். பிரச்சனைகளை பெரிதாக்கிவிட முயற்சிக்கின்றார்கள். இப்படியான சம்பவங்கள் விசுவாசிகளுடைய வாழ்க்கையிலே நடைபெறுகின்றத ல்லவா? நீங்கள் ஆறுதல் அடைந்த பின்பு, நீங்கள் தேற்றப்பற்ற பின்பு, நீங்கள் தவறிய பிரகாரமாக, இன்னுமொருவர் தறவறும் போது, நீங்கள் என்ன செய்யவீர்கள்? பிரியமானவர்களே, நாம் இந்த உலக நீதியை பின்பற்றாமல், நாம் தேவனுக்கேற்ற கனிகளை கொடுக்கின்ற வர்களாக இருக்க வேண்டும். இவ்விதமாய், பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதா மகிமைப்படும்படி, எங்கள் நற்கிரியைகள் காண்பிக்கப்பட வேண்டும்.

ஜெபம்:

மேலானவைகளை நாடும்படிக்காய் என்னை அழைத்த தேவனே, நற்கனிகளைக் அதன் காலத்திலே கொடுக்கும் மரங்களைப்போல நானும் இருக்கும்படி, நீர் என்னை உம்முடைய வழியிலே நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 5:16