தியானம் (மார்கழி 18, 2025)
காரணமில்லாத மனக்குழப்பங்கள்
மத்தேயு 5:44
உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.
ஒரு ஊரிலே உத்தமாக வாழ்ந்து வந்த விசுவாசியானவன், அந்த ஊரிலுள்ள மனிதர்கள் மத்தியிலே நற்சாட்சி பெற்றிருந்தான். ஒரு நாள், அந்த ஊரில், அயலிலே வாழ்ந்த மனிதனொருவன், காரணமின்றி இந்த விசுவாசியாவனை குற்றம்சாட்டி, அவன் குடும்பத்தாரை பரியாசம் பண்ணி அவனுக்கு பெருந் துன்பத்தை ஏற்படுத்தினான். அந்த விசுவாசி யானவனோ மறுபேச்சு எதையும் கூறாமல், தன் வழியே போய்விட்டார். ஊரில் வாழ்ந்த சில மனிதர்கள், அந்த விசுவாசியாவனை நோக்கி: ஏன் அந்த துன்மார் க்கனை அப்படியே விட்டுவிட்டாய்? அவனுக்கு உணர்வு வரு ம்படிக்கு சில வார்த்தைகளை நீ சொல்லி இருக்க வேண்டும். அவனுக்கெதிராக நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும் என்றார்கள். அவனோ, பழிவாங்குதல் எனக்குரியதல்ல, அவனை தேவன் பார்த்துக் கொள்வார் என்று கூறி, முன்பு போலவே தன் வாழ்க்கை வாழ்ந்து வந்தான். ஆனாலும், மாதங்கள் பல கடந்து சென்றபின்கும், அந்த சம்பவம் நடந்த நாளிலிருந்து அவன் மனதிலே நிம்மதியில்லை. அந்த துன்மார்க்கனை காணும் போதெல்லாம், அவன் தன் குடுத்பத் தாரைக் குறித்த கூறிய நிந்தையான வசனங்களை ஞாபகத்திற்கு வந்ததால், அவன் மனதிலே கோபமடைந்தான். ஆம் பிரியமான சகோதர சகோதரிகளே, அந்த விசுவாசியானவன் மட்டுமல்ல, அநேக விசுவாசி கள் தங்கள் வாழ்நாட் களிலே இப்படியான பல சூழ்நிலைக்குள் தள்ளப் பட்டு, காரணமில்லாத மனக் காயங்களோடு, மனச் சமாதானத்தை இழந்து வாழ்ந்து வருகின்றார்கள். ஆண்டவராகிய இயேசு தாமே மலைப்பிரசங்கத்திலே இவ்வாறாக கூறியுள்ளார்: 'நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர் வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.' இதுவே மனக் கசப்பு நீங்கி, சமாதானமான வாழ்வடைவதற்கு, மனப்புண்களை ஆற்றும் அருமருந் தாக இருக்கின்றது. இது மனித பெலனத்தினால் கூடாதது. ஆனால், நமக்குள் வாழும் துணையாளராகிய சத்திய ஆவியானவர், இதை செய்வதற்கு நமக்கு பெலன் தந்து நடத்துகின்றவராய் இருக்கின்றார். அவருடைய வார்த்தையின்மேல் தன் வாழ்வை அமைத்துக் கொண்ட வன் இவை யாவற்றையும் மேற்கொள்ளுகின்றவனாக இருக்கின்றான்.
ஜெபம்:
அன்பின் தேவனே, என்னுடைய சுத்த மனசாட்சி உணர்வற்றுப் போய்விடாதபடிக்கு, உம்முடைய ஒவ்வொரு வார்த்தைகளையும் தகுந்த வேளையிலே தியானித்து நடைமுறைப்படுத்த எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - எபேசியர் 4:31