தியானம் (புரட்டாசி 03, 2026)
மனக்கண்களை பிரகாசமடையச் செய்வார்
பிலிப்பியர் 4:18
எல்லாம் எனக்குக் கிடைத்தது, பரிபூரணமும் உண்டாயிருக்கிறது;
தேவ ஊழியராகிய புவலினுடைய ஊழியம் தேவனால் உண்டானது என்றும், அவர் சுவிசேஷத்தை ஒரு மனுஷனால் பெற்றதுமில்லை, மனு ஷனால் கற்றதுமில்லை, இயேசுகிறிஸ்துவே அதை அவருக்கு வெளி ப்படுத்தினார் என்றும், பவுல் வழியாக, பரிசுத்த வேதாகமத்தின், புதிய ஏற்பாட்டில் அநேக புத்தகங்களை ஆவியானவர் திருவளம்பற்றினதை யும் நாம் இன்று திட்டமாக அறி ந்திருக்கின்றோம். அவரை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால், அந்நாட்களிலே, 'மனுஷராலுமல்ல, மனுஷன் மூலமாயுமல்ல, இயேசுகி றிஸ்துவினாலும், அவரை மரித்தோ ரிலிருந்தெழுப்பின பிதாவாகிய தேவனாலும், அப்போஸ்தலனாயிருக்கின்றேன்' என்று தேவ ஊழிய ராகிய பவுல், சில சபை விசுவாசிகளுக்கு அழுதிக் கூறியிருந்தார். ஏனெனில், சிலர் அவருடைய அழைப்பைக் அசட்டை பண்ணியிருந் தார்கள். உடன் ஊழியர்கள் அவரைவிட்டு தங்களை தூரப்படுத்திக் கொண்டார்கள். ஆனால், அப்படிப்பட்ட சூழ்நிலைகள் நிலவியபோதும் பிலிப்பிய சபையோர் தேவ ஊழியராகிய பவுலை நேசித்தார்கள். அவர் களைக் குறித்து பவுல் எழுதும் போது, மேலும், பிலிப்பியரே, சுவி சேஷத்தின் ஆரம்பத்திலே நான் மக்கெதோனியாவிலிருந்து புறப்பட்ட போது, கொடுக்கல் வாங்கல் காரியத்தில் நீங்கள்மாத்திரம் எனக்கு உடன்பட்டதேயல்லாமல், வேறொரு சபையும் உடன்படவில்லை என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். நான் தெசலோனிக்கேயிலிருந்தபோதும், என் குறைச்சலை நீக்கும்படி நீங்கள் இரண்டொருதரம் அனுப்பினீர்கள். உபகாரத்தை நான் நாடாமல், உங்கள் கணக்குக்குப் பலன் பெருகும் படியே நாடுகிறேன். எல்லாம் எனக்குக் கிடைத்தது, பரிபூரணமும் உண்டாயிருக்கிறது. உங்களால் அனுப்பப்பட்டவைகளைச் சுகந்தவாச னையும் தேவனுக்குப் பிரியமான உகந்த பலியுமாக எப்பாப்பி ரோதீத்துவின் கையில் வரப்பற்றிக்கொண்டபடியால் நான் திருப்திய டைந்திருக்கிறேன். என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறை வாக்குவார். நம்முடைய பிதாவாகிய தேவனானவருக்கு என்றென் றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்' என்று எழுதியிருக்கின்றார். தேவனாகிய கர்த்தர்தாமே அவர்கள் மனக் கண்களை திறந்து, செய் கையும் விருப்பத்தையும் உண்டு பண்ணினது போல, தேவ காரிய ங்களை அறிந்து கொள்ளும்படிக்கு உங்கள் மனக் கணக்களையும் திறந்தருள்வாராக.
ஜெபம்:
செய்கையையும் விருப்பத்தையும் என்னில் உண்டாக்குகின்ற தேவனே, உம்முடைய சித்தம் இன்னதேன்றும், உம்முடைய தாசர்கள் இன்னாரென்றும் அறிந்து கொள்ளும்படி எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - எபேசியர் 1:18