தியானம் (ஆவணி 12, 2026)
கிறிஸ்துவின் மாதிரி
1 கொரிந்தியர் 11:1
நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறதுபோல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள்.
மேலான அழைப்பை பெற்ற அருமையான விசுவாசிகளே, நிலையான நகரம் நமக்கு இங்கில்லை. வரப்போகின்ற நித்திய பரம தேசத்தை நாடி ஓடிக் கொண்டிருக்கின்றோம். இந்த ஓட்டத்திலே, தேவனாகிய கர்த்தர் தாமே நம்மை தனித்திருக விடவில்லை. தம்முடைய சத்திய ஆவியானவரை தம்முடையவர்களுக்கு ஈவாக கொடுத்திருக்கின்றார். அந்த சத்திய ஆவியானவர்தாமே, விசுவாசிகளை சகல சத்தியத்தி லும் நடத்திச் செல்ல ஆயத்தமு ள்ளவராக இருக்கின்றார். அதுமட் டுமல்லாமல், மேகம் போன்ற திர ளான சாட்சிகள் விசுவாசிகளை சூழ்ந்திருக்கின்றார்கள். அவர்கள் இன்னார் என்பதை நிதானித்து அறிய சத்திய ஆவியானவர் வழி நடத்து கின்றார். வேததத்திலே காணும் பரிசுத்தவான்கள் நமக்கு முன்பாக ஓடி, கிறிஸ்து உலகத்தை ஜெயித்தது போல, கிறிஸ்துவுக்குள் அவர்களும் இந்த உலகத்தை ஜெயித்திருக்கின்றார்கள். அன்றுமட்டு மல்ல, இன்றும், சத்திய வழியிலே நடந்து, தேவ சித்தத்தை தங்கள் வாழ்வில் நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றவர்கள் இருக்கின்றார்கள். இவர்கள் யாவரும் யாவற்றையும், எந்த தவறும் இல்லாமல், சம்பூரண மாக நிறைவேற்றி முடியத்தார்கள் என்பது கருப்பொருள் அல்ல. மாறாக, அவர்கள் தாங்கள் தவறிப்போன இடங்களையும், சந்தர்பங்க ளையும் உணர்ந்து, மனம்வருந்தி, மனம்திரும்பி, முன்னோக்கி சென் றார்கள். விசுவாசிகள் எதிர்நோக்ககூடிய பாடுகளையும், சவால்களையும் அனுபவரீதியாக அறிந்து, அவைகளை குறித்த முன்னெச்சரிப்பை எழு த்தி வைத்துள்ளார்கள். தாங்கள் கிறிஸ்துவினிடத்தின் பெற்றுக் கொண் டதைக் குறித்து விளக்கமாக கூறியிக்கின்றார்கள். அந்த வரிசையிலே, தேவ ஊழியராகிய பவுல், பிலிப்பிய சபையிலுள்ள விசுவாசிகளுக்கும், தன்னுடைய அனுபவ சாட்சியின் வழியிலே நடக்கும்படி அவர்களுக்கு ஆலோசனை கூறியிருக்கின்றார். அந்த மாதிரியை நாமும் இந்நாட்க ளிலே பின்பற்றிச் செல்ல வேண்டும். அவர் பின்பற்றிய மாதிரி, கிறிஸ்து இயேசுவே. அவர் கொண்டிருந்த சிந்தை கிறிஸ்துவின் சிந்தையே. அவ்வண்ணமாகவே, என்னைப் பின்பற்றுகிறவர்களாகுங்களென்று கொரி ந்துவிலுள்ள சபையோருக்கும்; புத்திமதி கூறியிருக்கின்றார். கிறிஸ் துவை ஆதயப்படுத்திக் கொள்ளும்படிக்கு, தன்னிடத்திலிருந்த உலக மேன்மைகளை குப்பை என்றும் நஷ;டம் என்றும் தள்ளிவிட்டார். அது போலலே நாமும் கிறிஸ்துவை பற்றிக் கொள்வோமாக.
ஜெபம்:
அன்பின் தேவனே, உம்மை உறுதியாக பற்றிக்கொண்டு, எனக்கு முன்பாக ஓடி, இந்த உலக்தை ஜெயித்த உம்முடைய தாசர்களைளின் வழியை அறிந்துணர எனக்கு பிரகாசமுள்ள மனக்கண்களை தந்தருள்வீ ராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - பிலிப்பியர் 4:9