தியானம் (ஆவணி 05, 2026)
மனதின் யோசனைகள்
நீதிமொழிகள் 19:21
மனுஷனுடைய இருதயத் தின் எண்ணங்கள் அநேகம்; ஆனாலும் கர்த்தருடைய யோசனையே நிலைநிற்கும்.
ஒரு ஊரிலே வாழ்ந்த வந்த வயதான பாட்டனார் ஒருவர், வீட்டின் அருகிலுள்ள மரத்தின் நிழலிலே இளைப்பாறும்படி அமர்ந்திருந்தார். அவ்வழியாக வந்த, அந்த அயலிலே வாழ்ந்த மனிதனொருவன், அந்த வயதானவரை பார்த்து: ஐயா, என்ன அதிகமாக யோசிக்கின்றீர்கள்? என்று கேட்டான். அதற்கு அவர் மறுமொழியாக: யோசனையில்லாத மனிதன் யார்தான் இருக்கின்றார்கள் என்று கூறிக் கொண்டார். 'இதயம், மனித இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதிக்கும்' என்று ஒரு கிறிஸ்தவ பாடலின் வரிகள் அமை க்கப்பட்டுள்ளது. மனதில் தோன்றும் எண்ணங்களை கட்டுப்படுவதற்கு, இந்த உலகத்திலே அநேக வழி முறைகளை கூறிக்கொள்கின்றார்கள். அவைகளின் பலன் தற்காலி கமானவைகள். 'மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு. அதின் முடிவோ மரண வழிகள். நகைப்பிலும் மனதுக்குத் துக்க முண்டு. அந்த மகிழ்ச்சியின் முடிவு சஞ்சலம்.' தேவனுடைய பிள்ளை களாகிய நாம், இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷம் தரிக்கக்கூடாது. நம்முடைய யோசனைகள் இந்த உலக ஞானிகளின் ஆலோசனை களின்படியில்லாமல், சர்வ வல்லமையுள்ள தேவனுடைய மெய் ஞானத்தினால் உண்டாகும் ஆலோசனைகளுக்குரியதாக வேண்டும். தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, நம்முடைய மனம் புதிதாகிறதினாலே மறுரூபம டைய வேண்டும் என்று ரோமர் 12ம் அதிகாரத்திலே வாசிக்கின்றோம். பிரியமானவர்களே, 'கர்த்தருக்கு விரோதமான ஞானமுமில்லை, புத்தியுமில்லை, ஆலோசனையுமில்லை.' 'மனுஷனுடைய இருதயம் அவனு டைய வழியை யோசிக்கும்; அவனுடைய நடைகளை உறுதிப்படுத்துகி றவரோ கர்த்தர்.' விசுவாசிகளின் வாயின் வார்த்தைகளும், இருதயதின் தியானங்களுமு; ஒத்திருக்க வேண்டும். அவை யாவும் தேவனுடைய சமுகத்திலே ஏற்புடையதாக இருக்க வேண்டும். எனவே, உங்கள் வாழ்விலே, உயர்விலும், தாழ்விலும், வேதனைகளிலும், சோதனைக ளிலும் கர்த்தருடைய ஜீவ வார்த்தைகளை தியானியுங்கள். அவைகளையே உங்கள் வாயினால் அறிக்கையிடுங்கள். நீடிய பொறுமையு ள்ளவர்களாயிருங்கள். அவைகளை உறுதியாய் பற்றிக் கொண்டி ருங்கள். மனுஷனுடைய இருதயத்தின் எண்ண ங்கள் அநேகம்; ஆனாலும் கர்த்தருடைய யோசனையே நிலைநிற்கும்.
ஜெபம்:
ஆலோசனைகளில் ஆச்சரியமான தேவனே, என்னுடைய சுய யோசனைகள் நிலையற்றவைகள் எனவே, நான் உம்முடைய ஆலோசனைகளின் வழியிலட நடக்க எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிநறன் ஆமேன்.
மாலைத் தியானம் - ரோமர் 12:1-2