புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 07, 2026)

மனத்திருப்தி அருளுகின்றார்

சங்கீதம் 4:8

சமாதானத்தோடே படுத்துக் கொண்டு நித்திரைசெய்வேன்; கர்த்தாவே, நீர் ஒருவரே என் னைச் சுகமாய்த் தங்கப்பண் ணுகிறீர்.


மனிதனுடைய வாழ்விலே அவன் ஆத்துமாவிற்று எதனால் மனத்திரு ப்தியும் சந்தோஷமும் உண்டாகின்றது? எல்லா சூழ்நிலைகளிலும் அவன் எதனால் மனரம்யமாகவும், களிகூரத்தக்கதாகவும் இருக்கின்றது? ஒரு சமயம் ஆண்டவரரிய இயேசு தாமே தம்மைப் பின்பற்றி வந்தோருக்கு ஒரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: ஐசுவரியமுள்ள ஒருவ னுடைய நிலம் நன்றாய் விளைந்தது. அப்பொழுது அவன்: நான் என்ன செய்வேன்? என் தானியங்களைச் சேர்த்துவைக்கிறதற்கு இடமில் லையே. நான் ஒன்று செய்வேன், என் களஞ்சியங்களை இடித்து, பெரிதாகக் கட்டி, எனக்கு விளைந்த தானியத்தையும் என் பொருள்க ளையும் அங்கே சேர்த்துவைத்து, பின்பு: ஆத்துமாவே, உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறது. நீ இளைப்பாறி, புசி த்துக் குடித்து, பூரிப்பாயிரு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்டான். தேவனோ அவனை நோக்கி: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக்கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரி த்தவைகள் யாருடையதாகும் என்றார். (லூக்கா 12:16-20). உலகத்தி னால் உண்டாகும் ஐசுவரியத்தினால் ஆத்துமாவுக்கு மனத்திருப்தியும், சந்தோஷமும் உண்டாகும் என்று அதை நாடித் தேடி, பல கண்ணி களுக்குள் சிக்கி விடுகின்றார்கள். தேவனாகிய கர்த்தரை உண்மையாக பின்பற்றி சென்ற முன்னோடிகளாகிய பரிசுத்தவான்கள் எதனால் திருப்தியடைந்தார்கள்? ஒன்றுமில்லாததிருந்தும் எப்படி மனரம்யமாக இருந்தார்கள்? அவர்களுடைய ஆத்துமா எப்படி களிகூர்ந்தது? அது தேவனாகிய கர்த்தரால் உண்டாயிற்று. 'அவர்களுக்குத் தானியமும் திரா ட்சரசமும் பெருகியிருக்கிறகாலத்தின் சந்தோஷத்தைப்பார்க்கிலும், அதிக சந்தோஷத்தை என் இருதயத்தில் தந்தீர்.' (சங்கீதம் 4:7) 'திர ளான செல்வத்தில் களிகூருவதுபோல, நான் உமது சாட்சிகளின் வழி யில் களிகூருகிறேன்.' (சங்கீதம் 119:14). பிரியமானவர்களே, இந்த உல கத்தினால் உண்டானவைகள் தரும் திருப்தி அற்பமானவைகள். அவை நீடித்து நிலைத்திருப்பதில்லை. கர்த்தருக்கு பயந்து அவர் வழியிலே நடந்து, அவரை நம்பி நன்மை செய்வோருக்கு, ஒருபோதும் எந்த நன்மையும் குறைவுபடாது. அவரே தம்முடையவர்களுக்கு மனத்திருப்தி யையும் சந்தோஷத்தையும் அருளுகின்றவர்.

ஜெபம்:

மனச் சமாதானத்தை எனக்கு தரும் தேவனே, அநேகமாயிரம் பொன் வெள்ளியைப் பார்க்கிலும் நீர் திருவிளம்பற்றய திவ்விய வார்த்தைகளே எனக்கு நன்மையானது என்பதை உணர்ந்து வாழ எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 42:1-2