புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 24, 2026)

சோர்ந்து போக வல்ல கிரியை

பிலிப்பியர் 4:11

என் குறைச்சலினால் நான் இப்படிச் சொல்லுகிறதில்லை; ஏனெனில் நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயி ருக்கக் கற்றுக்கொண்டேன்.


தேவ ஊழியராகிய பவுல், பிலிப்பிய சபையோருக்கு எழுதும் போது, அவர்களுடைய உதாரத்துவத்தை குறித்து பாராட்டினார். எனிலும், கிறிஸ்துவின் நற்செய்தியின் நிமித்தம், அவர் யாரிடம் இருந்தும் எந்த உதவிகள் இன்றி, உபத்திரவங்களை சகித்த சந்தர்பங்கள் பல உண்டு. அதைக் குறித்து அவர் கொரிந்து சபையோருக்கு கூறும் போது: 'நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டவன், அதிகமாய் அடிபட்டவன், அதி கமாய்க் காவல்களில் வைக்கப் பட்டவன், அநேகந்தரம் மரண அவதியில் அகப்பட்டவன். யூதர்களால் ஒன்றுகுறைய நாற்பத டியாக ஐந்துதரம் அடிபட்டேன்;. மூன்றுதரம் மிலாறுகளால் அடி பட்டேன், ஒருதரம் கல்லெறியு ண்டேன், மூன்றுதரம் கப்பற்சேதத்தில் இருந்தேன், கடலிலே ஒரு இராப்பகல் முழுவதும் போக்கினேன். அநேகந்தரம் பிரயாணம்பண்ணி னேன்; ஆறுகளால் வந்த மோசங்களிலும், கள்ளரால் வந்த மோசங்களிலும், என் சுயஜனங்களால் வந்த மோசங்களிலும், அந்நிய ஜனங்களால் வந்த மோசங்களிலும், பட்டணங்களில் உண்டான மோசங்களிலும், வனாந்தரத்தில் உண்டான மோசங்களிலும், சமுத்திரத்தில் உண்டான மோசங்களிலும், கள்ளச்சகோதரரிடத்தில் உண்டான மோசங்களிலும்; பிரயாசத்திலும், வருத்தத்திலும், அநேகமுறை கண்விழிப்புகளிலும், பசியிலும் தாகத்திலும், அநேகமுறை உபவாசங்களிலும், குளிரிலும், நிர்வாணத்திலும் இருந்தேன்.' என்று கூறியிருக்கின்றார். அவர் இவை களை குறித்து மேன்மை பாராட்டவில்லை. இவைகளை சாட்சியாக கூறி, தனக்கு பொருளாதார ஆதயம் உண்டாகும்படி, யாரிடும் கோரிக்கைவிடவில்லை. அவர் உபகாரத்தை நாடவில்லை. மாறாக, தன் வாழ்வில் ஏற்பட்ட குறைவிலும், நிறைவிலும், உயர்விலும், தாழ்விலும் கிறிஸ்துவுக்குள் மனரம்யமாயிருக்க கற்றுக் கொண்டார். இன்று விசுவாசிகள் மற்றும் ஊழியர்கள் தங்கள் வாழ்விலே எதைக் குறித்து முறுமுறுக்கின்றார்கள்? எதைக் குறித்து நொந்து கொள்கின்றார்கள்? தங்கள் வாழ்விலே குறைவுகள் ஏற்படும் போது, தங்களுக்கு ஏற்படும் மனஅழுத்தங்கள் யார்மேல் காண்பிக்கின்றார்கள்? தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார். சோர் ந்துபோகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார்.

ஜெபம்:

பரலோக தேவனே, எல்லா சூழ்நிலைகளிலும், உபத்திவத்திலும், பாடுகளிலும், மனிதர்கள் உண்டாகும் வசைச் சொற்களிலும், நான் சோர்ந்து போகாமல் அழைப்பின் நோக்கத்தை நிறைவேற்ற கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ரோமர் 2:7