புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 20, 2026)

தனக்கடுத்த காரியங்கள்

ரோமர் 12:8

புத்திசொல்லுகிறவன் புத்திசொல்லுகிறதிலும் தரித்திருக்கக்கடவன்; பகிர்ந்து கொடுக்கிறவன் வஞ்சனையில்லாமல் கொடுக்கக்கடவன்;


இந்த உலகத்திலே உத்தமமாக தங்கள் பொறுப்புக்களை நிறைவேற்றும் நீதிபதிகள் இருக்கின்றார்கள். அதுபோலவே, சட்டதிட்டங்களை எழுதிய நோக்கத்தின்படி கடைப்பிடிக்கின்ற சட்டத்தரணிகள் இருக்கின்றார்கள். ஆனால், எல்லா மனிதர்களும் நீதிபதிகளா? எல்லா மனிதர்களும் சட்டத்தரணிகளா? அயலிலுள்ள மனிதனொருவன் குற்றச் செயலில் அகப் பட்டு, பொலிசாரால் கைது செய்ய ப்பட்டு, அவனுக்கெதிராக வழக்கு தொடுக்க்பட்டால், அவனுக்கோ, அல் லது அவன் குடும்பத்திற்கோ நீங்கள் கூறும் ஆலோசனை என்ன? அல்லது எப்படி ஆதரவாக இருப்பீர்கள்? பொலிசாரோடு சென்று வாக்குவாதம் செய்வீர்களா? நீதிமன்றத்திற்கு சென்று குழப்பம் செய்வீர்களா? இவைகள் மதியீனமாக இருக்கும ல்லவா! காரியங்கள் உங்கள் பெலத்திற்கு மேற்பட்டதாக இருக்கும் போது, அதற்குரியவர்களை நாடும்படி ஆலோசனை கூறுவீர்களல்லவா? பிரிய மானவர்களே, சபை ஐக்கியங்களிலே குழப்பங்களும் கலகங்களும் உண்டாக காரணம் என்ன? பொதுவாக, விசுவாசிகள், தங்கள் அழைப்பை மறந்து,தேவன் பகிர்ந்த விசுவாச அளவின்படியே, தெளிந்த எண் ணமுள்ளவர்களாய் எண்ணாமல், தங்களைக் குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணி, கிறிஸ்துவின் சிந்தையை விட்டு விலகி, தங்கள் கொள்கை கோட்பாடுகளுக்கென்று ஒழு குழுவை ஏற்படுத்துவதால், அங்கே வேற்றுமைகளும், விவாதங்களும், பிரிவினைகளும் உண்டாகின்றது. பிரிமான விசுவாசிகளே, ஒரு விசுவாசி உங்களிடத்தில் வந்து, தன்னை மற்றவர்கள் ஒடுக்குகின்றார்கள் என்று கூறினால், நீங் கள் என்ன செய்வீர்கள்? சற்று சிந்தித்து செயற்படுங்கள். உங்கள் அழை ப்பு இன்னதென்று அறிந்து கொள்ளுங்கள். காரியங்களைஉ ங்கள் கரங்களிலே எடுத்துக் கொள்ளாமல், வேத வசனத்தின் வெளிச்சத்திலே ஆராய்ந்து பாருங்கள். நீங்கள் அறியாதவைகளிலே உங்கள் நியாயங்களை கூறாமல், நிதானமாய் நடக்க சத்திய ஆவியாவரின் உதவியை நாடுங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசிகள் யாவரும் கிருபாசனத்தண்டைக்கு சேரும் பாக்கியத்தை பெற்றிருகின்றறோம். எனவே, உங்கள் கவலைகளை தேவனிடத்தில் தெரியப்படுத்துங்கள். கர்த்தருக்குள் உண்டான சந்தோஷத்தை இழந்து போகாமல், உங்கள் இருதயத்தை எல்லா கவலோடும் காத்துக் கொள்ளுங்கள்.

ஜெபம்:

நீதியின் தேவனே, என்னுடைய மாம்ச உணர்வுகளின்படி நடந்துஇ பிழைப்புக்கடுத்த அலுவல்களில் சிக்கிக்கொள்ளாமல், நிதானமாய் ஜீவனம் பண்ண எனக்கு பிரகாசமுள்ள மனக்கண்களை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 2 தீமோ 2:4