புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 10, 2026)

இருதயத்திலிருந்து புறப்படுபவைகள்

கொலோசெயர் 3:15

தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள்.


தேவ சமாதானம் உங்கள் இருதயங்களை ஆளுகை செய்யும்படிக்கு, தேவனாகிய கர்த்தர்தாமே எப்போதும் உதவி செய்ய ஆயத்தமுள்ளவராகவே இருக்கின்றார். ஆனால், விசுவாசிகள் தங்கள் பக்கதிலிருந்து செய்ய வேண்டிய காரியங்கள் உண்டு என்பதைக குறித்தும், விசுவாசிகளை தூரமான இடங்களுக்கு கொண்டு செல்லககூடிய பொல்லாத சிந்தனைகளைக் குறித்து எச்சரிக்கையுள்ளவர்களாக இருக்க வேண்டும். ஆண்டவராகிய இயேசுதாமே இவைகளை குறித்து கூறும் போது: 'மனுஷனுக்குள்ளே இருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும். எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும், களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும். பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும்' என்றார். இவைகள் யாவும், தேவ சமாதானம் உங்கள் இருத யங்களை ஆளாபடிக்கு, உங்களை பழைய வாழ்விற்று வழிநடத்தும் சிந்தனைகளாக இருக்கின்றது. இவைகள் கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகள் அல்ல. இவைகள் மாம்ச இச்சைக்குரியவைகள். விசுவாசிகள் தங்கள் சிந்தையை காத்துக் கொள்ளும்படிக்கு அவர்கள் சிந்திக்க வேண்டிய காரியங்கள் என்ன என்பதைக்குறித்து தேவ ஊழியராகிய பவுல், பிலிப்பியர் 4 அதிகாரம் 8ம் வசனத்திலே இவ்வாறு கூறியிருக்கின்றார். 'கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ள வை களெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள்.' இவைகள் இந்த உலகத்தின் நியதிப் படியல்ல, மாறாக, பரிசுத்த வேதாகமம் கூறுவது போல விசுவாசிகள் தங்கள் வாழ்விலே சிந்திக்க வேண்டும். பிரியமானவர்களே, வீணான சிந்தனைகளுக்கு இடங் கொடுத்து, மனதிலே குழப்பங்களை ஏற்படுத்திக் கொள்ளாமல், தேவனுக்குரியவைகளை சிந்தியுங்கள்.

ஜெபம்:

பரிசுத்தத்தின்கென்று என்ன அழைத்த தேவனே, ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளவும், மனதிலே மாசம்சத்தின் எண்ணங்களுக்கு இடம் கொடாதிருக்கவும், எனக்கு பிரகாசமுள்ள மனக் கண்களை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - கலா 5:19-23