புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 11, 2026)

இருதயத்தின் நிறைவு

சங்கீதம் 63:6

என் படுக்கையின்மேல் நான் உம்மை நினைக்கும்போது, இராச்சாமங்களில் உம்மைத் தியானிக்கிறேன்.


தேவனாகிய கர்த்தர்தாதே தாம் தெரிந்து கொண்ட ஜனங்களை நோக்கி: 'நீங்கள் என் வார்த்தைகளை உங்கள் இருதயத்திலும் உங்கள் ஆத்து மாவிலும் பதித்து, அவைகளை உங்கள் கையின்மேல் அடையாளமாகக் கட்டி, உங்கள் கண்களின் நடுவே ஞாபகக்குறியாக வைத்து, அவை களை உங்கள் பிள்ளைகளுக்கு உபதேசித்து, நீங்கள் வீட்டில் உட்கா ர்ந்திருக்கிறபோதும், வழியிலே நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிற போதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசுவீர் களாக. அவைகளை உங்கள் வீட்டு நிலைகளிலும் உங்கள் வாசல்க ளிலும் எழுதுவீர்களாக.' என்றார். இதன் கருப்பொருள் என்ன? தேவ னுடைய பிள்ளைகள் எப்பொழு தும், எவ்வேளையும், தேவனு டைய வசனத்தைக் குறித்து எண்ணமுள்ளவர்களாக இருக்க வேண்டும். ஒரு விசுவாசியின் சிந்தனையிலே, கர்த்தருடைய வேதமே, இரவும் பகலும் தியானமாயிருக்க வேண்டும். 'இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும். நல்ல மனுஷன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறான், பொல்லாத மனுஷன் பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான்.' என்ற பிரகாரமாக, இருதயமானது தேவ வார்த்தையினாலே நிறைந் திருக்கும் போது, அவைகளே, அவனுடைய இன்ப நாட்களிலும், துன்ப நாட்களிலும் அவன் வாயிலிருந்து புறப்படும். மனுஷனுடைய மன மானது, இல்லாத ஒரு காரியத்தை ரூபிக்கக்கூடிய ஆற்றல் உள்ளது. ஒரு அற்பமான காரியத்தை சிந்தித்து, அதை மிக பெரிய பாதகமான காரியமாக விபரிக்கக்கூடியது. நன்மையானதும், தீமையானதும் அங்கே உருவேற்றப்படுகின்றது. ஒருவனுக்கு உதவி செய்ய வேண்டும் என்றும், இன்னொருவனுக்கு கெடுதி செய்ய வேண்டும் என்பதும், முதலில் அங்கேயே நிர்ணயம் செய்யப்படுகின்றது. சிலர், சிந்தித்து, திட்டமிட்டு, தீமை செய்ய சந்தர்ப்பத்திற்காக காத்திருப்பார்கள். அதுபோலவே, தேவனுக்கு பயந்து அவர் கற்பனைகளின்படி செய்கின்ற மனுஷன் நன்மையானதை நடப்பிக்கும்படி தன் இருதயத்தை ஆயத்தப்படுத்திக் கொள்கின்றான். தேவனுடைய வார்த்தை விளையும் பண்படுத்தப்பட்ட நல்ல நிலமாகிய இருதயமானது நற்பலனைக் கொடுக்கும். எனவே, நீங்கள் தனித்திருக்கும் வேளைகளிலும், படுக்கையிலும், தேவனுக் கு ஏற்புடையவைகளையே சிந்தியுங்கள்.

ஜெபம்:

பரலோக தேவனே, வீணான காரியங்களை நான் என் இருதயத்திலே பதித்து வைக்காமலும், பூமிக்குரியவைகளை சிந்தியாமலும், உம்முடைய வார்த்தை தங்கும் பண்பட்ட நிலம்போல இருக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 1:1-6