புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 26, 2026)

படிப்படியான வளர்ச்சி

பிலிப்பியர் 4:12

தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்;


ஒரு குழந்தைக்கு பசி அல்லது எந்தவொரு அசௌகரியமான நிலை ஏற்படும் போது, சத்தமாக அழுது தனது அசௌகரியத்தை வெளிப்படு த்துகின்றது. அந்தக் குழந்தையின் அழுகையைப் பார்த்து பெற்றோர், அதன் தேவையை அறிந்து கொள்கின்றார்கள். அந்த குழந்தை வள ர்ந்து சிறு பிள்ளையாகும் போது, பல அசௌகரியங்களை தன் பெற் றோரிடம் கூறிக் கொள்வதற்கு கற்றுக் கொள்கின்றார்கள். ஆனாலும், அந்தப் பிள்ளையானது கற்றுக் கொள்ள வேண்டிய காரியங்களை இன்னும் அநேகமுண்டு என்பதை பெற்றோர் அறிந்திருக்கின்றார்கள். ஒரு சிறுபிள்ளையானது அயலுள்ள மற்றய பிள்ளைகளோடு சேர்ந்து ஓடி விளையாடிக் கொண்டிருந்த வேளையிலே, விளையாட்டிலே ஒரு பிள்ளையானவன் தோல்வியுற்ற போது, அவன் அழ ஆரம்பித்துவிட்டான். ஆனால், அவன் வளர்ந்து வாலிபனாகும் போது, ஒவ்வொரு சூழ்நிலைகளிலும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை கற்றுக் கொள்கின்றான். இவ்வண்ண மாகவே, ஆவிக்குரிய வளர்ச்சியும் இருக்கின்றது என்பதை ஒவ்வொரு விசுவாசியும் அறிந்து கொள்ள வேண்டும். பொதுவாக, விசுவாசிகள் தாங்கள் முன்னிருந்த நிலைமையை சீக்கிரத்தில் மறந்து, சக விசுவாசிகளை நியாயந்தீர்க்க முந்திக் கொள்கின்றார்கள். தேவ ஊழியராகிய பவுலின் வாழ்க்கையிலே அவர் கிறிஸ்துவின் சிந்தையைத் தரித்துக் கொள்வதைக் கற்றுக் கொண்டார் என்பதை பல இடங்களிலே குறிப் பிட்டிருக்கின்றார். அதாவது, அவருடைய ஆவிக்குரிய வாழ்க்கையிலே வளர்சியும், மறுரூபமாகுதலும், முதிர்ச்சியும் இருந்தது. இவைகளை குறித்து அவர் கூறும் போது: 'எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன். தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன்.' என்று கூறியிருக்கின்றார். நாம் நம்முடைய வாழ்விலே, தவறுகின்ற ஒவ்வொரு வேளையிலும், தேவ இரக்கத்தை வேண்டி பெற்றுக் கொள்கின்றோம். அதுபோலவே, மற்றவர்களுடை வாழ்க்கையிலும், தேவ இரக்கமானது கொடுக்கப்படுகி ன்றது என்பதை மறந்து போய்விடக்கூடாது. நாம் வளர்சியடைவதைப் போலவே, மற்றவர்களும் வளர்சியடையும்படி, தேவனாகிய கர்த்தர் தாமே, நீடிய பொறுமையுள்ளவராக இருக்கின்றார்.

ஜெபம்:

போதித்து நடத்துகின்ற தேவனாகிய கர்த்தாவே, உள்ளான மனிதன் நாளுக்கு நாள் புதிதாக்கப்படவும், நான் கிறிஸ்துவின் சாயிலே அனுதினமும் பெருகவும், நீர் எனக்கு கற்றுத் தந்து வழிநடத்திச் செல் வீராக. இட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ரோமர் 12:1-2