தியானம் (மார்கழி 12, 2025)
எதைக்குறித்து பெருமைபாராட்டுகின்றீர்கள்?
தானியேல் 12:2
பூமியின் தூளிலே நித்திரை பண்ணுகிறவர்களாகிய அநே கரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள்.
'மனிதர்கள் வெட்கப்பட வேண்டிய காரியங்களை தங்கள் சுதந்திரம் என்று கூறி அதைக் குறித்து பெருமை பாராட்டுகின்றார்கள். பெருமை பாராட்ட வேண்டிய வாழ்வின் அடித்தளமான காரியங்களைக் குறித்து வெட்கமடைகின்றார்கள்.' எடுத்துக்காட்டாக, இன்றைய நாட்களிலே, மது பானம் குடித்து வெறிகொள்ளாத மனிதர்களை சபை சந்திக்கு ஏற்புடை யவர்கள் அல்ல என்றும், இப்படிப் பட்டவர்கள் நாகரீகமறியாதவர்கள், திருமணம் செய்வதற்கு ஏற்புடைய வர்கள் அல்ல என்றும் அவர்களின் நட்பைக் குறித்து வெட்கமடைந்து அவர்களை தவிர்த்துக் கொள்கின் றார்கள். ஆனால், குடித்து வெறி த்து களியாட்டங்களிலே ஈடுபட்டு, தூஷணமான வார்த்தைகளை பேசி கொள்கின்றவர்கள் ஊரோடு ஒத்தோடுகின்றவர்கள் என்று அவர் களைக் குறித்து பெருமை பாராட்டிக் கொள்கின்றார்கள். இப்படியாக தேவனாகிய கர்த்தர் செய்யாதே என்று கூறிய காரியங்கள் சட்டமாக்க ப்படும் போது மனிதர்கள் அதைக் குறித்து பெருமை பாராட்டுகின்றா ர்கள். தேவனாகிய கர்த்தரின் போதனைகளை கேட்டு நடக்கி ன்றவர்க ளை குறித்து பரியாசம் செய்து கொள்கின்றார்கள். மேலும், கடைசி நாட் களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியரா யும், வீம்புக்காரராயும், அகந் தையுள்ளவர்களாயும், தூஷpக்கிறவர்களா யும், தாய்தக ப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாத வர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங் காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடு மையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிக ளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர் களாயும், தேவப் பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள இப்படி ப்பட்டவர்களை நீ விட்டு விலகு' என்று பரிசுத்த வேதாகமம் கூறியிரு க்கின்றது. தேவ வார்த்தைகளை அசட்டை செய்கின்ற மனிதன், வாழ் வின் உறுதியாக அஸ்திபாரத்தை புறக்கணித்து, தன் பார்வைக்கு செம் மையாக தோன்றும் வழிகளை தெரிந்து கொள்கின்றான். ஆனால், அதன் முடிவிலே நித்திய மரணத்தை சுதந்தரித்துக் கொள்கின்றான். நீங்களோ நித்திய ஜீவன் தரும் திரு வார்த்தையை பற்றிக் கொள்ளுங்கள்.
ஜெபம்:
நித்திய ஜீவன் தரும் திருவார்த்தையை எனக்கு தந்த தேவனே, பூமியிலே கிருபையையும் நியாயத்தையும் நீதியையும் செய்கிற உம் மைக் குறித்து மேன்மைபாராட்ட உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - 2 தீமோ 3:14-17