புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 16, 2026)

கர்த்தருடைய கிரியையிலே பெருகுங்கள்

1 கொரிந்தியர் 15:58

கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக.


'தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.' இந்த ஜீவ வார்த்தைகள் வழியாக, இர ட்சகர் இயேசுவின் தூய இரத்தம் எல்லா மனிதர்களுக்காகவும் சிந் தப்பட்டது. ஆனால், எல்லோரும் அவரை ஏற்றுக் கொண்டார்களா? சிலர் அவரை ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள். வேறு சிலர் அவரை அறிந்தும் அலட்சியம் செய்து வருகின்றார்கள். இன்னும் சிலர் தங்கள் மனக்கடினத்தினாலே எப்போதும் அவருக்கு எதிர்த்து நிற்கின்றார்கள். அவரை கொண்டவர்களில் சிலர் பின்வாங்கி போயிருக்கின்றார்கள். அதனால் இரட்சகர் இயேசுவின் சிந்தப்பட்ட இரத்தம் விரயமாயிற்றோ? அவருடைய சிலுவை மரணம் காரணம் இழந்து வீணாய் போயிற்றோ? இல்லை. இரட்சகர் இயேசுவின் இரத்தம் விலையேறப்பெற்ற ஜீவ இரத்தம். 'சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவ பெலனாயிருக்கிறது.' இரசகர் இயேசுதாமே, பிதாவாகிய தேவனுடைய திருச்சித்ததை பூரணமாக நிறைவேற்றி முடித்தார். மரணத்தையும் பாதாளத்தையும் ஜெயித்து, வெற்றி சிறந்தார். அதுபோலவே, ஆண்டவர் இயேசுவின் சிந்தையை தரித்தவர்களுடைய நற்கிரியைகள் வீண் போவதில்லை. ஒருவேளை, சிலர் உங்களுடைய நற்சுபாவங்களை துஷ்பிரயோகம் செய்யலாம், வேறு சிலர், நீங்கள் நன்மை செய்ய நாடும் போது, உங்களுக்கு எதிர்த்து நிற்கலாம். இன்னும் சிலர், நன்றியற்றவர்களாக இருக்கலாம். ஒரு சிறுகுழுவினர் உங்களை ஏற்றுக் கொண்டு, நன்றியறிதலுள்ளவர்களாக இருக்கலாம். ஆனால், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நிமித்தம் நீங்கள் படும் பிரயாசங்கள் ஒருநாளும் வீண் போவதில்லை. எனவே, பிதாவாகிய தேவனுடைய சித்த்ததை செய்வதிலே சோர்ந்து போகாமல் இருங்கள். பிரியமான சகோதரரே, கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக.

ஜெபம்:

பரிசுத்தமுள்ள தேவனே, மனித இதயத்திற்கு செம்மையாக தோன்றும் வழிகளை நான் நோக்காதடிக்கு, நீர் காட்டிய வழியை என் கண்ணிமைகள் செவ்வையாய் பார்க்கும்படிக்கு, பிரசாசமுள்ள மனக்கண்ளை தந்து நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 பேதுரு 3:9