தியானம் (வைகாசி 30, 2026)
கிறிஸ்துவை ஆயதப்படுத்திக்கொள்ளுங்கள்
பிலிப்பியர் 3:11
அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன்.
கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக்கொள்ள வேண்டும். சட்டதிட்டங்கள், மதச்சடங்குகள், மனித முறைமைகளிhல் உண்;டாகும் நீதியை களைந்து போட வேண்டும். அவைகளை முற்றாக விட்டுவிட்டு, கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினால் வருகிறதும் விசுவாசமூலமாய் தேவனால் உண்டாயிருக்கிறதுமான நீதியை உடையவர்களாக இருந்து, அத்தோடு, கிறிஸ்துவுக்குள் ஜீவிக்கின்றோம் என்று காணப்பட வேண்டும். அத ற்காக ஒவ்வொரு விசுவாசியும் என்ன செய்ய வேண்டும்? ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவையும், 1. அவரு டைய உயிர்த்தெழுதலின் வல்லமை யையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகின்ற அறிவிலே வளரவேண்டும். 2. கிறிஸ்துவுடன் மரணமதின் சாயலிலே இணைந்து கொள்ள வேண்டும். 3. நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திரு ப்பதற்குத் தகுதியாக வேண்டும். எனவே, இந்த காரியங்களுக்கு தடை யாக எவைகள் வருகின்றதோ, அவைகள் யாவும் அழிவுக்குரியவை களும், அழிந்து போகின்றவைகளுமாயிருப்பதால், கிறிஸ்துவுக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்றுவிட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன் எண்ணுகின்றேன் என்று தேவ ஊழயிராகிய பவுல் பிலிப்பியருக்கு எழுதின நிருபத்திலே 3ம் அதிகாரத்திலே கூறியிருக்கின்றார். அதாவது, கிறிஸ்து இயேசுவைப் போல, நாமும், இரத்தம் சிந்தி, சிலுவையிலே தொங்கி மரிக்க வேண்டும் என்பது பொருளல்ல. கடினமானவைகள் யாவற்றையும் அவர்தாமே நமக்காக நிறைவேற்றி முடித்திருக்கின்றார். 'அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷ ரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரண பரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். புதிதும், ஜீவனுமான வழியை உண்டாக்கியிருக்கின்றார். அதிலே நாம் பிரவே சித்து, வலது புறமுமோ, இடது புறமோ சாயாமல் நடப்பதற்கு, சத்திய ஆவியானவரை கொடுத்திருக்கின்றார். எனவே, உலக கவலை கள், ஜீவனத்தின் பெருமைகள் ஒன்றும் உங்களை மேற்கொள்ளாத படிக்கு விழிப்புள்ளவர்களாக இருந்து, உலகத்தினாலும் உண்டாகும் பாரமான அழுத்தத்தினால், சோர்ந்து போகாமல், விசுவாசத்தை தொடக் கின்றவ ரும் முடிக்கின்றவருமான ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நோக்கி முன்னேறுங்கள்.
ஜெபம்:
நித்திய ஜீவனுக்கென்று என்னை அழைத்த தேவனே, நீர் ஏற்படு த்தின செம்மையான வழியை நான் அற்பமாக எண்ணி, நஷ்டமடையாதபடிக்கு எனக்கு பிரகாசமுள்ள மனக்கண்களை தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - சங்கீதம் 91:16