தியானம் (சித்திரை 28, 2026)
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள்
1 பேதுரு 5:8
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங் கள்;
இன்று சிலர் குறைவுகளை பேசாமல், நிறைவுகளையே பேசுங்கள் என்று சொல்லிக் கொள்கின்றார்கள். ஆனால், நாம் நிறைவடையும் நோக் கத்தோடு, தேவ பயத்தோடு குறைவுகளும்; சுட்டிக் காட்டப்பட வேண் டும். எடுத்துக்காட்டாக, பிலிப்பியருக்கு அப்போஸ்தலராகிய பவுலும், தீமோத்தேயுவும் எழுதிய நிரூபத்திலுள்ள வசனங்களை, ஆரம்பத்திலி ருந்து, ஒவ்வொன்றாக வாசித்துப் பாருங்கள். எத்தனைன வசனங்கள் அவர்களுடைய நிறைவையும், எத்த னை வசனங்கள் அவர்களுடைய குறை களையும், எத்தனை வசனங்கள் அவர் கள் எதைக் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதையும் குறித்து கூறுகின்றது என்று ஆராய்ந்து பாருங்கள். ஒரு பிள்ளையானது பாடசாலைக்கு செல்ல ஆரம்பிக்கும் போது, அதன் பெற்றோர், பாடசாலைக்கு சென்று நன்றாக படிக்க வேண்டும். நல்ல பழக்கவழங்கங்களை கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறுகின்றார்கள். அத்துடன் அவர்கள் அதை நிறுத்திவிடுகின்றார் களா? ஆசிரியர்களுக்கு கீழ்படிய வேண்டும். சக மாணவர்கள் சண்டை க்கு வந்தால் என்ன செய்ய வேண்டும். தெருவிலே அறிமுகமாகதவர்க ளோடு பேச வேண்டாம் என்று பற்பல காரியங்களைக் குறித்து எச்சரி ப்பை வழங்குவார்கள். அதைத் திரும்ப திரும்ப ஞாபகப்படுத்துவார்கள். இந்நாட்களிலே, பாடசாலை நேரத்திலே, ஆபத்தான வேளைகள், அவசரகால நிலைமைகள் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? என்ன செய் யக்கூடாது என்று மாணவர்களுக்கு பயிற்சி அழிக்கின்றார்கள். என்ன செய்ய வேண்டும் என்று மாத்திரம் சொல்லிக் கொடுத்தால் போதாதா? கோணலும் மாறுபாடுமான உலகிலே வஞ்சிக்கும் ஆவிகள் உண்டு. அவைகள் மனிதர்கள் வழியாகவே செயற்பட்டு வருகின்றது. எனவே, வெற்றியுள்ள ஆவிக்குரிய வாழ்க்கை வாழ்வதற்கு, நாம் என்னத்தை செய்ய வேண்டும் என்பது மட்டும் போதாது. என்னததை செய்யக்கூடாது என்பதையும் அறிந்திருக்க வேண்டும். ஆதியிலே தேவனாகிய கர்த்தர் ஆதாம் ஏவாளை சிருஷ;டித்தபோது, புசிப்புக்குரிய மரத்தின் கனிகளை மாத்திரம் கூறாமல், புசிக்கக்கூடாத மரத்தின் கனியையும் காண்பித்தார். எச்சரிப்பை வழங்கினார். எனவே, நாமும் தெளிந்த புத்தியுள்ளவர்களாக சிந்திக்க வேண்டும். வஞ்சனைகளிலே அகப்படாதபடிக்கு, எப்போதும் விழிப்புள்ளவர்களாக காணப்பட வேண்டும். எதிராளி யானவனை ஜெயிக்கும்படிக்கு, கீழ்படிவோடு கர்த்தருடைய பலத்த கரத்திற்குள் அடங்கியிருங்கள்.
ஜெபம்:
பரலோக தேவனே, உம்முடைய எச்சரிப்பின் வசனங்களைக் குறித்து மனம் சலித்துப் போய்விடாதபடிக்கு, உம்முடைய வார்த்தையின் வழியிலே நான் வாழ எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - ரோமர் 8:27