தியானம் (தை 21, 2026)
தேவன் ஒருவருக்கே பயப்படவேண்டும்
2 தீமோத்தேயு 3:16
தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக,
மக்கெதோனியா தேசத்து நாடுகளில் ஒன்றிற்குத் தலைமையானதும் ரோமர் குடியேறினதுமான பிலிப்பி பட்டணத்திலே தேவ ஊழியர்க ளாகிய பவுலும் சீலாவும் தங்கியிருந்த நாட்களிலே, ஒரு சமயம், 'ஜன ங்கள் கூட்டங்கூடி, அவர்களுக்கு விரோதமாய் எழும்பினார்கள். அதிகா ரிகள் அவர்கள் வஸ்திரங்களைக் கிழித்துப்போடவும், அவர்களை அடிக் கவும் சொல்லி, அவர்களை அநேக அடி அடித்தபின்பு, சிறைச்சாலை யிலே வைத்து அவர்களைப் பத்திர மாய்க் காக்கும்படி சிறைச்சாலைக் காரனுக்குக் கட்டளையிட்டார்கள். அவன் இப்படிப்பட்ட கட்டளையைப் பெற்று, அவர்களை உட்காவலறை யிலே அடைத்து, அவர்கள் கால்க ளைத் தொழுமரத்தில் மாட்டிவை த்தான். நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப் பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். சடிதியிலே சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசை யும்படியாக பூமி மிகவும் அதிர்ந்தது. உடனே கதவுகளெல்லாம் திறவுண் டது. எல்லாருடைய கட்டுகளும் கழன்றுபோயிற்று.' இந்த சம்பவத்தை குறித்து நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நம்புகின்றேன். இதைக் குறித்து விளக்கமாக அப்போஸ்தல நடபடிகள் 16ம் அதிகாரத்திலே காணலாம். இப்படியான பாடுகள் வழியாகத்தான் பிலிப்பி பட்டணத்திலே சுவிசே ஷம் அறிவிக்கப்பட்டது. அந்த பட்டணத்திலே தேவ ஊழியர்களாகிய பவுலும் சீலாவும் சில நாட்களே தங்கிருந்தார்கள். அவர் ஆரம்பித்த அந்த அற்பமான ஆரம்பத்தை, தேவன் பெருகப் பண்ணினார். தேவ ஊழியர் கள் அந்த இடத்தைவிட்டு சென்றபின்பும், அங்கிருந்த ஒரு சில விசுவா சிகள், சுவிசேஷத்தின் நற்கிரியைகளை, மனிதர்களுக்கு பயப்படாமல், உபத்திரவங்களுக்கு அஞ்சாமல், தேவ பயத்தோடு செய்து வந்தார்கள். சுவிசேஷம் அவர்களுக்கு அறிவிக்கப்பட்ட நாள்முதல அத ற்கு உடன் பட்டவர்களானார்கள். தேவ கிருபையை பெற்ற அருமையான சகோதர சகோதரிகளே, நீங்கள் ஆரம்பத்திலே அறிந்த சுவிசேஷத்தில் அசையா மல் நிலைத்திருந்து, உங்கள் சரீரங்களை மாத்திரம் கொல்ல வல்லவர்க ளுக்கு பயப்படாமல், சரீரத் தோடுகூட ஆத்துமாவையும் நரகத்தில் தள்ள வல்லவராகிய தேவனாகிய கர்த்தர் ஒருவருக்கே பயந்தவர்களாக தேவ னுக்கேற்ற நற்கிரியைகளிலே நாளுக்கு நாள் வளர்ந்து பெருகுவோ மாக. தேவ ஆவியானவர் உங்களை வழிநடத்திச் செல்வராக.
ஜெபம்:
பராக்கிரமுமுள்ள தேவனாகிய கர்த்தாவே, உயர்விலும் தாழ்வி லும் எல்லா சூழ்நிலைகளிலும், மனிதர்கள் முன்னிலையில், நான் உம க்கு சாட்சியாக வாழ நீர் எனக்கு பெலன் தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - அப் 16:25-26