புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 16, 2026)

வஞ்சிக்கின்றவர்களின் வஞ்சகம்

பிலிப்பியர் 3:18

அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞரென்று உங் களுக்கு அநேகந்தரம் சொன்னேன்,


'வேறு விதமாய் நடக்கின்றவர்களை' குறித்து விசுவாசிகள் அறிந்தி ருக்க வேண்டும். இவர்கள் விசுவாசிகளை வஞ்சிக்கின்றவர்கள். வஞ்சிக் கின்றவர்களை இனங்கண்டு கொள்வது இலகுவான காரியமல்ல. சில வேளைகளிலே, சிலர் விசுவாசத்தைவிட்டு வழிவிலகி போன பின்னரே நாங்கள் வஞ்சிக்கப்பட்டோம் என்று அறிந்து கொள்கின்றார்கள். கார ணம் என்ன? வஞ்சிக்கின்றவர்களு டைய தந்திரமா? அல்லது விசுவா சிகள் விழிப்புணர்வுள்ளவர்களாக இருக்காமல் அசதியாக இருப்பதா? முதலாவதாக, தேவ ஊழியராகிய பவுல், வஞ்சிக்கப்படுதலைக் குறி த்து கொரிந்தி பட்டணத்திலுள்ள சபையோருக்கு எழுதும் போது, 'ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சி த்ததுபோல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன்.' என்று கூறியி ருக்கின்றார். ஏனெனில், வஞ்சிக்கின்றவர்கள், உங்களுக்கு தீமை செய் கின்றவர்களாக தங்களை காட்டிக் கொள்ளாமல், உங்களுக்கு நன்மை செய்கின்றவர்ளாக காண்பித்துக் கொள்வார்கள். சில வேளைகளிலே, மிகவும் சாந்தமாக உங்களோடு பேசுவார்கள். நீங்கள் தவறும் போது, அபாயம் உண்டு என்று எச்சிப்பை வழங்காமல், மிகவும் அன்பாக உங் களுடன் நடந்து கொள்வார்கள். இவர்களுடை பேச்சினாலேயோ, அவர் நடத்தும் கிரியைகளினாலேயோ அவர்களை அறிந்து கொள்வது மிக வும் கடினம். இவர்கள் கேட்டுக்குப் போகிற விரிவான வாசலை வைத் திருப்பார்கள். அதி விசாலமாக இருப்பதினால், அநேகர் அதின் வழி யாக பிரவேசிப்பார்கள். பரிசுத்தத்தில் சமசரசம் செய்வதே அவர்களு டைய வஞ்சனை. பாவிகளை இயேசு நேசிக்கின்றார் என்று எல்லோரை யும் அன்போடு அழைத்து கொள்வார்கள். ஆனால், பாவத்தை இயேசு வெறுக்கின்றார். எனவே பாவத்தில் வாழாமல் மனந்திரும்ப வேண்டும் என்று உறதியாக கூற மாட்டார்கள். இவர்களுக்கு ஜனத்தொகை அவ சியம். ஏனnனில் இவர்களுடைய தேவன் வயிறு. துங்கள் இலிவான ஆதயத்திற்காக அநேகருடைய ஆத்துமா கெட்டுப்போவதைக் குறித்து அவர்கள் கவலையடைவதில்லை. இவ்கள் கிறிஸ்துவின் சிலுவைக்கு பகைஞரென்று தேவ ஊழியராக பவுல் அநேகந்தரம் விசுவாசிகளுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கின்றார். எனவே வஞ்சிக்கின்றவர்களை குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.

ஜெபம்:

பரிசுத்த வாழ்வு வாழும்படியாக என்னை அழைத்த தேவனே, சாத்தானின் தூதரின் வஞ்ச வலைக்குள் நான் சிக்கிக் கொள்ளாதபடிக்கு என் கால்களை கண்ணி விலக்கி என்னை காத்து வழிநடத்துவீராக. இரட்ச கர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 கொரி 11:1-3