தியானம் (ஆனி 04, 2026)
பூரண நிறைவு உண்டாகும்!
பிலிப்பியர் 3:13
ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி,
ஒரு குறிப்பிட்ட யுத்தமொன்றிலே வெற்றி பெற்று நாடு திரும்பிய தளபதிக்கு, அந்த தேசத்தின் சக்கரவத்தியானவர், அதிகாரிகள், பிரமுகர்கள் மற்றும் தேசத்தின் குடிமக்கள் முன்னிலையிலே அவனை கௌரவித் தார். அந்த கொண்டாட்டத்தின் நாட்கள் முடிவடைந்தது. ஆனால், அந்த தளபதியானவன், ராஜாவின் தளபதியாக யுத்தங்களை நடத்த வேண் டிய நாட்கள் இன்னும் நிறைவு பெறவில்லை. அந்த வெற்றியிலேயே அவன் திருப்தியடைந்து, தரித்து நிற் பானாக இருந்தால், அவனுடைய எதிரிகள் அவனுடைய படையை மேற்கொண்டு விடுவார்கள். அவன் தனக்குண்டான வெற்றிகளையும், தான் சந்தித்த தோல்விகளையும் திரும்பி பார்த்து, அவற்றில் அவன் பெற்றுக் கொண்ட அனுபவங்களை மாத்திரம் எடுத்துக் கொண்டு, முன்னோக்கி பார்க்கின்றவனாக இருந்தான். பிரியமான சகோதர சகோதரிகளிலே, நாம் கிறிஸ்துவின் சாயலை தரித்துக் கொள்ள அழை க்கப்பட்டிருக்கின்றோம். அதன்பொருட்டு, முதலாவதாக, நான் கிறிஸ்து வின் சாயலிலே வளர்ந்து பெருக வேண்டும் என்ற எண்ணம் உண்டாயி ருக்க வேண்டும். இரண்டாவதாக, அந்த எண்ணம் செயற்படுத்தப்படும் படி, கிறிஸ்துவிலிருந்து சிந்தை உண்டாயிருக்க வேண்டும். கிறிஸ்து வுக்குள் பிரயாசப்படுகின்றவர்களாக காணப்பட வேண்டும். உள்ளான மனுஷன் நாளுக்கு நாள் புதிதாக்க பட வேண்டும். எனினும், ஒரு விசு வாசியாவன் தன் வாழ்நாட்களிலே, முற்றிலும் தேறின பரிபூரண நிலையை அடைய முடியாது. இயேசு கிறிஸ்துவை சந்திக்கும் நாளிலே, மறுரூப மாக்கப்பட்டு அவருடைய பரிபூரண சாயிலிலே விருத்தியடைவோம். அந்த நாள் வரைக்கும், ஒரு ஓட்டப்போட்டிப் பந்தையத்திலே, வெற்றி பெறும்படி எப்பயாக, பின்னிட்டுப் பார்க்காமல், ஒரு வீரன் ஒடுகின் றாபோ, அவ்வண்ணமாகவே, நாம் அழைப்பின் நோக்கத்தை உணரந் தவர்களாக, முன்னோகி செல்ல வேண்டும். ஆதியிலே நன்றாக ஓடி பாதி வழியிலே தூங்குகின்றவர்களாக காணப்படகூடாது. எபப்டியாக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய பிதாவின் சித்தத்தை செய்யும்படி மனத்தாழ்மையும் கீழ்படிவுமுள்ளவராக இருந்தாரோ, அவ்வண்ணமாகவே நாமும் முடிவுவரை காணப்பட வேண்டும். அடைந் தாயிற்று, அல்லது முற்றும் தேறினவனானேன் என்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி மனவிருப்பத்தோடு முன்னோக்கி செல்லுங்கள்.
ஜெபம்:
பரம பந்தைய பொருளுக்காக என்னை அழைத்த தேவனே, எனக்கு எல்லாம் தெரியும் என்ற மனமேட்டிமை எனக்கு உண்டாகத படிக்கு, உணர்வுள்ள இருதயத்தை தந்து என்னை வழியிலே நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - ரோமர் 12:3