புதிய நாளுக்குள்..

தியானம் (தை 28, 2026)

வார்த்தையிலும் செய்கையிலும்

1 கொரிந்தியர் 4:16

ஆகையால், என்னைப் பின்பற்றுகிறவர்களாகுங்களென்று உங்களுக்குப் புத்திசொல்லுறேன்.


சில மனிதர்கள், காலை, மதிய, மாலை வந்தனைகளை பெயரவிலே கூறிக் கொள்வதை கவனித்திருப்பீ;ர்கள். எடுத்துக்காட்டாக, ஒருவர் காலை வந்தனத்தை உங்களுக்கு கூறும் போது, நீங்கள் மறுஉத்தரவாக காலை வந்தனத்தை கூறும் முன்னதாக அந்த நபர் உங்களைவிட்டு கடந்து சென்று விடுவார். அதாவது, இன்றைய நாட்களிலே, பல இட ங்களிலே வாழ்த்துதல்கள் கருத்தி ழந்து, பேச்சளவிலும், முகஸ்துதி யுமாகவே இருக்கின்றதை காண க்கூடியதாக இருக்கின்றது. விசு வாசமார்க்தத்தார் மத்தியிலும், பிரியமானவர்களே என்ற சொல் லு, எவ்வளவு கருத்துள்ளதாக இருக்கின்றது என்பதை நீங்கள் சற்று சிந்தித்துப் பாருங்கள். ஒரு கூட்டதிலுள்ளவர்களை பார்த்து, பிரியமானவர்களே என்று வாழ்த்துதல் சொல்லும் போது, அந்தக் கூட்டத்திற்குள்ளே வாழ்த்துதல் சொல்பவருக்கு பிரிமற்றவர்களும் இரு ப்பார்கள். ஆனால், அப்போஸ்தலராகிய பவுலோ, பிலிப்பி சபையோ ருக்கு எழுதும் போது, தன்னுடைய வாழ்த்துதல், பெயரளவில் அல்ல என்பதை உறுதிப்படுத்தும்படி, தேவனை சாட்சியாக நிறுத்துகின்றார். ஏனெனில், இருதயங்களை ஆராய்ந்தறிகின்ற தேவன் சிந்தையை அறி ந்திருக்கின்றார். மேலும், கொரிந்து சபையோருக்கு எழுதும் போது, 'உங்களை வெட்கப்படுத்தும்படிக்கு நான் இவைகளை எழுதவில்லை, நீங்கள் எனக்குப் பிரியமான பிள்ளைகளென்று உங்களுக்குப் புத்தி சொல்லுகிறேன். கிறிஸ்துவுக்குள் பதினாயிரம் உபாத்தியாயர்கள் உங் களுக்கு இருந்தாலும், தகப்பன்மார் அநேகர் உங்களுக்கு இல்லையே; கிறிஸ்து இயேசுவுக்குள் சுவிசேஷத்தினால் நான் உங்களைப் பெற் றேன்.' என்று தகப்பன் ஸ்தானத்தையுடையவராக அவர்களுக்கு கடிந்து கொண்டு புத்தி சொல்கின்றார். கிறிஸ்துவின் நாளிலே யாரும் கறைதிறையற்றவர்களாக கர்த்தர் முன்னிலையிலே காணப்படவேண் டும் என்பதே அவருடைய செய்தியின் கருப்பொருளாக இருக்கின்றது. ஒரு தகப்பனுக்கு தன் பிள்ளை தவறிப் போவானோ என்ற பயம் இருக்கின்றது போல, சாத்தானாவன் விசுவாசிகளை வஞ்சித்துப் போடு வானோ என்று அவர்களை குறித்து கரிசனை யுள்ளவராக இருந்தார். அவ்வண்ணமாகவே, நாமும், வார்த்தையிலும், செய்கையிரும் உண் மையுள்ளவர்களாக இருக்க வேண்டும். அந்த வளர்ச்சியானது எங்க ளிலே பெருக வேண்டும். தேவ ஆவியானவர் தாமே சத்தியத்திலே வழி நடத்திச் செல்வாராக.

ஜெபம்:

பரலோக தேவனே, நான் அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருந்து, ஆவியிலே அனலாயிருந்து, உமக்கு ஊழியம் செய்யவும், சகோதர சிநேகத்திலே உண்மையாய் நிலைத்திருக்வும் எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ரோமர் 12:10