தியானம் (ஆடி 14, 2026)
வழியை காத்துக் கொள்ளுங்கள்
நீதிமொழிகள் 22:5
மாறுபாடுள்ளவனுடைய வழியிலே முள்ளுகளும் கண்ணிகளுமுண்டு;
ஒரு ஊரிலே வாழ்ந்த பெற்றோர் தங்கள் மகனானவனை கருத்தோடு தகுந்த முறையிலே வளர்த்து வந்தார்கள். அந்த அயலிலே வாழ்ந்து வந்த மாணவனொருவன், அவர்களுடைய மகனாவனுக்கு, பல ஆண்டுகளாக உற்ற நண்பனாக இருந்து வந்தான். வாலிப பருவத்தை அடையும் நாட்களிலே, தங்கள் மனகனானவனின் உற்ற நண்பனின் வழிகள் தவறிப்போவதை பெற்றோரானவர்கள் கண்டு கொண்டார்கள். ஒருநாள் அவனை அழைத்து அவனோடு தயவாக பேசி, அவனை நல்வழிப்படுத்தும்படி நல் ஆலோசனைகளை வழங்கினார்கள். நாட்கள் கடந்து சென்ற பின்பும், அவர்களுடைய அயலிலே வாழ்ந்து வந்த அந்த மாணவ னானவன், தன் வழியை சீர்படுத்தாமல், தகாத நட்புக்களை ஏற்படுத்திக் கொண்டான். பல தடவைகள் அவனை நல்வழிப்படுத்த எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. எனவே, தங்கள் மகனானவனும் வழிதவறிப் போகாதபடிக்கு, சில நடவடிக்கைகளை எடுத்தார்கள். வழிதவறிப்போன மாணவனோடு சேர்வதை நிறுத்தினார்கள். அது அவர்களுக்கும், அவர்களுடைய மகனானவனுக்கும் இனிதான அனுபவமாக இருக்க வில்லை. அந்த மாணவனாவன், இவர்களுடைய மகனானவனுக்கு நன்மைகள் செய்திருந்தான். அந்த நன்றி உணர்வும், அவனைக் குறித்த கரிசணையும் இவர்களுக்கு இருந்தது. ஆனாலும், இவர்கள் தங்களுடையதை பாதுகாக்கும்படி தற்போது சில எல்லைகளை போட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள். நித்திய ஜீவனுக்கென்று அழைப்பை பெற்ற அருமையான விசுவாசிகளே, நாம் ஒரே சிந்தையாய் இருப்பதைக் குறித்து தியானித்து வருகின்றோம். அந்த ஒரே சிந்தையானது நம்முடைய பெரிதான அழைப்பைக் குறித்தது. அந்த அழைப்பின் வழி கிறிஸ்து. இந்த பாதையிலே நாம் நடந்து செல்லும் போது, சிலர் பெலவீனமடைந்து விழுந்து போகின்றார்கள். அதனால், அவர்களை நாம் தள்ளிவிடுவதில்லை. அவர்களை குறித்த கரிசணை மனதிலே இருக்க வேண்டும். அவர்களுக்கு முடிந்த அளவிற்கு உதவி செய்ய வேண்டும். அவர்களுக்கு ஆலோசனை கூற வேண்டும். அவர்களுக்காக ஜெபிக்க வேண்டும். ஆனால், அவர்கள் விழுந்து கண்ணியிலே நாமும் விழாதபடிக்கு நம்முடைய எல்லைகளை ஸ்திரப்படுத்த வேண்டும். மாறுபாடு ள்ளவனுடைய வழியிலே முள்ளுகளும் கண்ணிகளுமுண்டு. தன் ஆத்துமாவைக் காக்கிறவன் அவைகளுக்குத் தூரமாய் விலகிப்போவான்.
ஜெபம்:
அன்பின் பரலோக தேவனே, நித்திய ஜீவனுக்கென்று அழைக்கப் பட்ட நான், தேவ வசனத்தால் என் வழியை நான் காத்துக் கொள்ளும்படி, உணர்வுள்ள இருதயத்தையும் தந்து என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - ஏசாயா 40:29