புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 08, 2026)

மனநிறைவுடனான பணி!

பிலிப்பியர் 2:16

எல்லாவற்றையும் முறுமு றுப்பில்லாமலும் தர்க்கிப் பில்லாமலும் செய்யுங்கள்.


நீங்கள் நேசிக்கின்ற உங்கள் பிள்ளைகள், வீட்டிலே உங்களுக்கு உதவியாக வேலைகளை செய்யும் போது நீங்கள் அவர்களைக் குறித்து பெருமையடைவீர்கள் அல்லவா? ஆம், எந்த பெற்றோருக்கும் அது பெருமையாக இருக்கும். ஆனால், உங்கள் பிள்ளைகளில் ஒருவன், நற்கிரியைகளை நடப்பிக்கும் போது, எப்போது தன் சகோதரர்கள் தன்னைப் போல வேலை செய்யதில்லை. ஆனால், அவர்கள் நான் சாப்பிடுவதைப் போல சாப்பிடுகின் றார்கள். அவர்களை நீங்கள் ஏன் தண்டிக்க முடியாது. நான் என் ஏன் அவர்களுடைய வேலையை செய்ய வேண்டும். என்று ஓயாமல் முறுமு றுத்துக் கொண்டே நற்கிரியைகளை செய்து வந்தால், நாளடைவிலே நீங் கள் அந்தப் பிள்ளைப் பார்த்து என்ன கூறுவீர்கள். மகனே, மகனே, இனி போதும், நீ நன்மை செய்யாமல் இரு ந்தாலே இந்த வீடு சமாதானமாக இருக்கும் என்று கூற மாட்டீர்களா? சற்று சிந்தித்துப் பாருங்கள். சில விசுவாசிகள், அநேக நற்கிரியைகளை செய்து வந்தால், அந்த நற்கிரியைகளின் வாசனையை கெடுத்துப் போடு கின்றார்கள். ஒருவர் சுவையான உணவை சமைத்துக் பரிமாரனனார். அந்த உணவை மற்றவர்கள் வாய்குள் போட்டு, ருசிபார்பதற்கு முன்னரே, சமைத்தவரின் வாயின் பேச்சு, அந்த உணவை வாந்தியாக மாற்றிவிடுகின்றது ஒப்பாகவே சிலரின் நற்கிரியைகளும் இருக்கின்றது. அப்போஸ்தலரா கிய பவுல், பிலிப்பி சபையோருக்கு எழுதும் போது, நீங்கள் ஜீவ வசனத்தை அறிந்திருக்கின்றீர்கள். அதைப் பிடித்துக் கொண்டு உலக த்திலே நீங்கள் சுடர்களை போல பிரகாசிக்கின்றீர்கள். அநீதி நிறைந்த உலகத்திலே நீங்கள் குற்றமற்றவர்களும், கபடற்றவர்களும், மாசில்லாத தேவ பிள்ளைகளாய் இருக்கும்படிக்கு, நீங்கள் நாவை காத்துக் கொள் ளுங்கள் என்று அறிவுரை கூறியிருக்கின்றார். மேலும், நீங்கள் கற்றுக் கொண்டதும், செய்துவருகின்றதுமான கிரியைகள் உங்களுக்கும் மற்ற வர்களுக்கு நற்பலலை தரும்படிக்கு, மற்றவர்களின் குறைவுகளைக் குறித்து முறுமுறுக்காமலும், மற்றவர்களுடைய அசதியைக்குறித்து வாக் குவாதம் செய்யாமலும் இருங்;கள் என்று எச்சரிக்கை விடுத்திருக்கி ன்றார். அப்படி செய்யும் போது, தான் வீணாக ஓடினதும் வீணாகப் பிரயாசப்பட்டதுமில்லையென்கிற மகிழ்ச்சி கிறிஸ்துவின் நாளில் எனக்கு உண்டாயிருக்கும் என்று கூறியிருக்கின்றார். எனவே, கிறிஸ்துவைப் போல மனநிறைவுடன் சேவை செய்யுங்கள்.

ஜெபம்:

நித்திய ஜீவனுக்கொன்று என்னை அழைத்த தேவனே, எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், உமக்கென்று மனப்பூர்வமாய்ச் செய்ய எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்திச செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - கொலோ 3:24