தியானம் (பங்குனி 29, 2026)
கிறிஸ்விலிருந்த சிந்தை
யோவான் 12:13
ஓசன்னா, கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற இஸ்ரவேலின் ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று ஆர்ப்பரித்தார்கள்.
மருத்துவ துறையிலே கல்வி கற்று வந்த மாணவனொருவன், தன் பட்ட படிப்புக்களை முடித்து, மருத்துவ சாலையொன்றிலே மருத்துவராக கடமையாற்றி வந்தான். வசதியாக வாழ்ந்து வந்த அவன், சில ஆண்டுகளுக்கு பின், ஒரு குறிப்பிட்ட தேசத்திலுள்ள கிராமொன்றிற்கு சென்று, ஏழை எளியவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்டான். வறுமைக் கோட் டிற்குள் வாழும் அந்த கிராமத்திலே, நோய்களும், கஷ்டங்களும் அதிகமாயிருந்தது. அதனால், அவனுக்கு கஷ்டங்களும், தொற்று நோய்களினாலே பெரிதான நஷ்டமும் உண்டாகும் என்று அவனுடைய உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் ஆலோசனை கூறினா ர்கள். அவை யாவற்றையும் அறிந்தி ருந்தும், தனக்குண்டான வசதிகளை துறந்து, வறுமை கஷ்டங்களினால் துயருரும், அந்த மக்கள் நடுவே வாழும்படிக்கு, பயணம் செய்தான். இது ஒரு பெரிதான தியாகம் அல்லவா? நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, இந்த பூமியிலே வாழ்ந்த, வாழ்கின்ற, இனிமேலும் பிறக்கப் போகின்ற ஜனங்கள் யாவருக்காவும், பாவ பரிகாரமாக, தம்மை பலியாக ஒப்புக் கொடுக்கும்படி, எருசலேமிற்கு வருகை தந்த நாளை இன்று நினைவு கூருகின்றோம். நாங்கள் மீட்படையும்படி தாம் அடைய வேண்டிய பாடுகள், அவமானம், நிந்தை யாவற்றையும் அவர் அறிந்திருந்தார். 'இயேசு எருசலேமுக்கு வருகிறாரென்று பண்டிகைக்கு வந்த திரளான ஜனங்கள் கேள்விப்பட்டு, குருத்தோலைகளைப் பிடித்து க்கொண்டு, அவருக்கு எதிர்கொண்டுபோகும்படி புறப்பட்டு: ஓசன்னா, கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற இஸ்ரவேலின் ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று ஆர்ப்பரித்தார்கள். அல்லாமலும்: சீயோன் குமாரத்தியே, பயப்படாதே, உன் ராஜா கழுதைக்குட்டியின்மேல் ஏறிவருகிறார் என்று எழுதியிருக்கிற பிரகாரமாக, இயேசு ஒரு கழுதைக்குட்டியைக் கண்டு அதின்மேல் ஏறிப்போனார். இவைகளை அவருடைய சீஷர்கள் துவக்கத்திலே அறியவில்லை. இயேசு மகிமையடைந்த பின்பு, இப்படி அவரைக்குறித்து எழுதியிருக்கிறதையும், தாங்கள் இப்படி அவருக்குச் செய்ததையும் நினைவுகூர்ந்தார்கள்.' ஆதலால், நாமும் இந்த நாளை குருத்தோலை ஞாயிறு என்று நினைவு கூறுகின்றோம். பிரியமானவர்களே, உங்கள் வாழ்விலே தேவ சித்தத்தை நிறைவேற்றும் பாதையிலே, கஷ்டங்கள் நஷ்டங்களை சகிக்க வேண்டி நேர்த்தாலும், கிறிஸ் துவின் சிந்தையை தரித்தவர்களாக இருங்கள்.
ஜெபம்:
அநாதி ஸ்நேகத்தால் என்னை நேசித்து தேவனே, நானும் கஷ்டங்கள் துன்பங்கள் மத்தியிலும் நான் கிறிஸ்துவின் சிந்தையை தரித்தவனாக வாழ எனக்கு உணர்வுள்ள இருயத்தை தந்து வழிநடத்தி செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - மத்தேயு 21:1-10