புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 02, 2026)

நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்

மத்தேயு 7:14

ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.


உலகத்தின் போக்கு மாறிக் கொண்டு போகின்றது. காலத்திற்கு காலம் புதிய யுகங்கள் உண்டாகின்றது. நவீன தொழிலநுட்ப முன்னேற்றங்க ளைக் குறித்து மனிதகுலமானது பெருமைபாராட்டிக் கொள்கின்றது. வாழ்கை முறைமையும், மனித ர்களுடைய நடை உடை பாவ னைகளும் மாறிக் கொண்டே போகின்றது. பாடசாலைக்கு செல்லும் மாணவர்களின் கல்வி முறைமைகயும் பாடத்தி ட்டங்களும் யுகத்திற்கு யுகம் மாற்றமடைகின்றது. பாடசாலை களிலே சட்ட திட்டங்களும், ஒழுங்கு முறைகளும் மாற்றியமைக்கப்ப டுகின்றது. மனிதர்களுடைய வாழ்க்கைக்கேற்ப தேவனாகிய கர்த்தரு டைய பரிசுத்தத்தை மாற்றிவிட கூடுமோ? இல்லை. ஆனால், கள்ளப் போதகர்கள் என்று பரிசுத்த வேதாகமம் கூறும் மனிதர்கள், பரிசுத்த வேதாகமத்திற்கு புதிய விளங்கங்களை கூறி, தேவனாகிய கர்த்தரு டைய பரிசுத்தத்தை தங்கள் வாழ்க்கை முறைக்கு ஏற்றபடி மாற்றிவிட பிரயாசப்படுகின்றார்கள். இதைக் குறித்து, தேவனுடைய ஊழியக்கா ரனாகிய பேதுரு கூறும் போது, 'கள்ளத்தீர்க்கதரிசிகளும் ஜனங்களுக் குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போத கர்கள் இருப்பார்கள்; அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண் டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக் கொள்ளுவார்கள். அவர்களுடைய கெட்ட நடக்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள்; அவர்கள்நிமித்தம் சத்தியமார்க்கம் தூஷpக்கப்படும். பொருளாசையுடையவர்களாய், தந்திரமான வார்த்தைகளால் உங்க ளைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுவார்கள்; பூர்வகா லமுதல் அவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆக்கினை அயர்ந்திராது, அவர்க ளுடைய அழிவு உறங்காது.' என்று கூறியிருக்கின்றார். பிரியமான வர்களே, தேவனாகிய கர்த்தர், இருக்கின்றவராய் இருக்கின்றவர். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். எனவே உலகபோக்கை பின்பற் றாமல், சத்திய வார்த்தையிலே நிலைத்திருங்கள். நவீன போதனை களை குறித்து எச்சரிக்கையுள்ளவர்களாக இருங்கள். மேலானவை களை நாடித் தேடுங்கள். இந்தப் பூமிக்குரியவைகள் அநித்தியமான வைகள். கேட்டுக்கு செல்லம்; விசாலமாக தோன்றும், இலகுவான வாசல் வழியாக நுழையாமல், இடுக்கமான வாசல் வழியலே உட்பிர வேசியுங்கள்.

ஜெபம்:

நித்திய ஜீவனுக்கென்று என்னை வேறு பிரித்த தேவனே, அந்த மகிமையான அழைப்பின் மேன்மையை உணர்ந்து, உம்முடைய சத்திய வழியிலே நடக்க எனக்கு பிரகாசமுள்ள மனக்கண்களை தந்தருள் வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எபிரெயர் 10:20