தியானம் (வைகாசி 05, 2026)
நல்ல ஒளஷதம்
நீதிமொழிகள் 17:22
மனமகிழ்ச்சி நல்ல ஒளஷதம்; முறிந்த ஆவியோ எலும்புகளை உலரப்பண்ணும்.
ஒரு பாடசாலையிலே கல்வி கற்று வந்த மாணவனொருவன், பாடங் களை ஒழுங்காக கற்றுக் கொடுக்கும் ஆசிரியயொருவருக்கு விரோத மான காரியத்தை செய்து விட்டான். உண்மையான தன்னை நேசித்து, நெறிப்படுத்தும், ஆசிரியருக்கு துரோகம் செய்தேன் என்று வெகுவாய் துக்கமடைந்தான். அவனுடைய நல்ல மனதைக்குறித்து பலரும் மெச் சினார்கள். சுத்தமனசாட்சியிலே உண்டாகும் இந்த உணர்வு அவனு க்கு நல்லது. ஆனால், அடுத்த கட் டமாக அவன் செய்ய வேண்டிய காரியத்தை செய்யாமல், எவ்வளவு காலம் அவன் அந்த துக்க உணர்விலேயே இருக்க வேண்டும்? அவன் அப்படியே இருந்தால், அவன் தன் காலத்தில் கற்ற வேண்டிய பாடங் களிலே பின்னடைவு ஏற்படும் அல்லவா? ஒருவேளை, தன் துக்கத்தை ஆற்ற, தவறான பழக்கங்களுக்குள் சென்று விடக்கூடும் அல்லவா? எனவே துக்கத்திலேயே மூழ்கியிருக்காமல், தன்னை நேசிக்கும் ஆசிரி யரிடம் செல்ல வேண்டும். சென்று தான் செய்த தவறை ஏற்றுக் கொண்டு. மன்னிப்பை பெற்ற கொள்ள வேண்டும். தன்னை ஆசிரியர் தன்னை மன்னித்து, ஒருவேளை கண்டித்து ஏற்றுக் கொள்வார் என்ற நம்பிக்கையிலே உறுதியாய் இருக்க வேண்டும். இது இந்த உலகத் திலே மனிதர்கள் மத்தியிலே நடக்கக்கூடிய நன்மையான காரியமாக இருக்கின்றது. அப்படியானால், நம்முடைய பரம பிதா எத்தனை நல்ல வர் என்று எண்ணிப்பாருங்கள். 'தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோ டேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி? தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர். ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிற வன் யார்? கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர்; நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே.' (ரோமர் 8:32-34) அது மட்டுமல்ல, வானங்களின் வழியாய்ப் பரலோகத்திற்குப்போன தேவகுமாரனாகிய இயேசு என்னும் மகா பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறபடியினால், நாம் பண்ணின அறிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருக்கக்கடவோம். (எபிரெயர் 4:14). எனவே பாதி வழியிலே சோர்ந்து போய்விடாமல், கிருபாசனத்த ண்டையிலே தைரியத்தோடு சேரும் பாக்கியத்தை பெற்றிருப்பதால், கர்த்தருக்குள் சந்தோஷமாயிருங்கள்.
ஜெபம்:
இரக்கங்களின் பரம தகப்பனே, உம்முடைய இரகங்களுக்கு முடிவில்லை என்ற சத்தியத்தை அறிந்து உணர்ந்து, எப்போதும் உம்மை அண்டிக் கொள்ளும்படிக்கு பிரகாசமுள்ள மனக்கண்களை எனக்கு தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - 1 தெச 5:16-18