புதிய நாளுக்குள்..

தியானம் (தை 12, 2026)

பெலவீன நேரங்களிலே...கிருபை

2 கொரிந்தியர் 12:9

என் கிருபை உனக்குப் போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார்.


நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை யில் ஒவ்வொரு விசுவாசியும் வளர்ந்து பெருக வேண்டும். 'நாம் நிர்மூ லமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே'. சில விசுவாசிகள் தாங் கள் மற்றய விசுவாசிகளுக்கு எதிராக குற்றங் குறைகளை செய்யும் போது, தங்களுக்கு தேவ கிருபை வேண் டும். ஆனால், மற்றய விசுவாசி கள் தங்களுக்கு எதிராக குற்றம் செய்யும் போது அவர்களுக்கு படிப்பினையும், தண்டனையும் தேவை என்ற பிரகாரமாக வாழ் ந்து வருகின்றார்கள். இப்படிப்பட்டவர்கள் தேவ கிருபையை அறிய வேண்டிய பிரகாரமாக இன்னும் அறியவில்லை. நம்முடைய பெலவீன நேரங்களிலே தேவ கிருபையானது நம்மை தாங்கி வழிநடத்துகின்றது. நாம் பெலவீனங்களிலே நிற்கும்படியாக அல்ல, மாறாக எம்மால் செய்ய முடியாதவைகளை, நம்முடைய பெலத்திற்கு அப்பாட்பட்ட காரியங் களை செய்வதற்கு தேவ கிருபையானது நமக்கு அனுதினமும் அருள ப்படுகின்றது. இன்று உங்களால் செய்ய முடியாமல் இருக்கும் காரிய ங்கள் என்ன? எவற்றை செய்து முடிக்க உங்களுக்கு தேவ கிருபை தேவை என்று விசுவாசிகளிடம் கேட்டால், பொதுவாக அவர்கள் கூறும் பதில்கள் என்ன? அற்புதங்கள், அடையாளங்கள் செய்ய முடியவில்லை, கல்வி கற்க முடியவில்லை, வேலையிலே சிறப்பாக காரியங்களை நட த்த முடியவில்லை என்று பற்பல காரியங்களை கூறிக் கொள்வார்கள். எத்தனை பேர், என்னால் என் உடன் சகோதரர்களை மன்னிக்க முடி யவில்லை என்று கூறுகின்றார்கள்? எத்தனை பேர் என்னால் மனக் கசப்பு, பிரிவினைகள், முரட்டு வைராக்கியங்கள் போன்றவற்றை மேற் கொள்ள முடிவில்லை அவை என் பெலத்திற்கு அப்பாற்பட்டது. எனவே, அவைகளை மேற்கொண்டு கிறிஸ்துவுக்குள் வெற்றி வாழ்க்கை வாழ எனக்கு தேவ கிருபை தேவை என்று கூறுகின்றார்கள். இப்படியப்பட்ட பெலவீனங்களை மேற்கொள்ளும்படியாக தேவ கிருபையானது நமக்கு அருளப்படுகின்றது. தேவ சித்தத்திற்கு ஒப்புக் கொடுக்கின்றவர்கள் அவைகளை மேற்கொண்டு சாட்சியாக வாழ்கின்றார்கள். தேவ சித்தத்திற்கு ஒப்புக் கொடுக்கின்றதென்பதன் பொருள் என்ன? ஒரு விசுவாசி தேவனுடைய சத்திய வார்த்தையின்படி தனக்கு ஆகட்டும் என்று தன்னை ஒப்புக் கொடுக்கும் போது, தேவ சித்த்திற்கு தன்னை ஒப்புக் கொடுக்கின்றாரன். தேவ வார்த்தையின்படி மன்னிக்க பழகிக் கொள்கின்றான். தேவ சமாதானத்துடன் வாழ பழகிக் கொள்கின்றான்.

ஜெபம்:

அனுதினமும் புதுக் கிருபையை தந்து வழிநடத்தும் தேவனே, என்னால் செய்யமுடியாமல் இருக்கும் நிறைவான காரியங்களை செய்யும்படிக்கு என்னை நீர் செய்யும்படி உணர்த்தி வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ரோமர் 2:1-8