தியானம் (மார்கழி 15, 2025)
கிறிஸ்துவினிமித்தம் வரும் பாடுகள்
1 பேதுரு 4:14
நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள்;
பிரியமானவர்களே, உங்களைச் சோதிக்கும்படி உங்கள் நடுவில் பற்றியெரிகிற அக்கினியைக்குறித்து ஏதோ புதுமையென்று திகையாமல், கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழும்படியாக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள். நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்ப ட்டால் பாக்கியவான்கள்; ஏனென்றால் தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார்; அவர்களாலே தூஷிக்கப்படுகிறார்; உங்க ளாலே மகிமைப்படுகிறார். ஆதலால் உங்களில் ஒருவனும் கொலை பாதகனாயாவது, திருடனாயாவது, பொல்லாங்கு செய்தவனாயாவது, அந்நிய காரியங்களில் தலையிட்டுக் கொண்டவனாயாவது பாடுபடுகிறவனாயிருக்கக்கூடாது. ஒருவன் கிறிஸ்தவனாயிருப்பதினால் பாடுபட்டால் வெட்கப்படாமலிருந்து, அதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்தக்கடவன். நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது. முந்தி நம்மிடத்திலே அது துவக்கினால் தேவனுடைய சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களின் முடிவு என்னமாயிருக்கும்? நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால், பக்தியில்லாதவனும் பாவியும் எங்கே நிற்பான்? ஆகையால் தேவனுடைய சித்தத்தின்படி பாடநுபவிக்கிறவர்கள் நன்மைசெய்கிறவர்களாய்த் தங்கள் ஆத்துமாக்களை உண் மையுள்ள சிருஷ்டிகர்த்தாவாகிய அவருக்கு ஒப்புக்கொடுக்கக்கடவர்கள் என்று ஆண்டவராகிய இயேசுவின் பிரதான சீஷனும், அப்போஸ் தலரு மாகிய பேதுரு எழுதின முதலாம் நிரூபம் 4ம் அதிகாரம் 12ம் வசனத்தி லிருந்து 19ம் வசனம் வரை வாசிக்கின்றோம். அன்று மட்டுமல்ல, இன்றும் நம் மத்தியிலே, புயல்கள் நம் வீட்டிலும் மோதும் என்றும், அஸ்திபாரங்கள் அசைக்கப்படும் என்றும் ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார். அதாவது, நாம் தேவனிலே நிலைத்திருக்கும் வாழ்க்கையை குறித்து இங்கே ஆண்டவராகிய இயேசு ஒப்பனையாக கூறியிருக்கின்றார். தேவ வார்த்தையின்படி தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாதவர்கள், அஸ்திபாரம் இல்லாமல் தங்கள் வீட்டை கட்டினவர்களுக்கு ஒப்பாயிருக்கின்றார்கள். கன்மலையாகிய கிறிஸ்துவின் அஸ்திபாரம் போட்டப்பட்ட நீங்களோ, வாழ்வு தரும் சத்திய வார்த்தைகளை விட்டு ஒரு போதும் விலகிப் போகாதபடிக்கு, எச்சரிக்கையுள்ளவர்களாக இருங்கள்.
ஜெபம்:
துன்மார்க்க உளையில் நின்று என்மை மீட்டெடுத்த தேவனே, நான் உம்முடைய வார்த்தையைவிட்டு விலகி, மறுபடியும் பாவ சேற்றில் விழுந்து விடாதபடிக்கு என்னை காத்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - மத்தேயு 7:26