புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 12, 2026)

ஆலோசனை தரும் தேவன்

சங்கீதம் 32:8

நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.


பாடசாலை நாட்களிலே, தமிழ் பாடத்தை கற்றுக் கொள்ளும்போது, உயர் வகுப்புகளிலே நாட்டார் பாடல்கள் என்னும் புத்தகத்தை கற்று கொண்டிருப்பீர்கள். அதிலே, பெற்றோர், பெரியோர், தங்கள் சிந்தனை யிலே வரும் மிகப் பெரிதான நன்மைகளை சொல்லி, தங்கள் பிள்ளை களை வாழ்த்திப்பாடுவதை கேட்டிருப்பீர்கள். அதாவது, உலகத்திலே பெரிதாகவும், உயர்வாகவும் தோன்றும் காரியங்களை தங்கள் பிள்ளைகளுக்கு உண்டாக வேண் டும் என்று வாழ்த்துவார்கள். அது போலவே, இந்நாட்களிலும், குழ ந்தை பிறந்து தனது அறிவுக்கு வரும் நாட்களுக்கு முன்பதா கவே, இவன் ஒரு வைத்தியனாக வரவேண்டும் அல்லது பெரிய பொறியிலாளராக வரவேண்டும் என்று சொல்லிக் கொள்வார்கள். சிறு வயதிலே இருந்து அந்தப் பிள்ளைக்கு அப்படியே சொல்லி வருவதால், அந்தப் பிள்ளையின் மனதிலே அந்த எண்ணம் பதிந்து விடுகின்றது. அந்தப் பிள்ளை அதற்குரியவனா என்பதை பெற்றோரோ, பிள்ளைகளோ சிந்திப்பதில்லை. தாங்கள் நினைத்தது நிறைவேறாத இடத்து ஏமாற்றம் அடைந்து போய்விடுகின்றார்கள். அந்த ஆசீர்வாதம் தங்களுக்கு கிடைக்கவில்லை என்று எண்ணிக் கொள்வார்கள். சில வேளைகளிலே அது தங்கள் வாழ்விலே ஏற்பட்ட குறைவு என்ற சிந்தையோடு வாழ்நாட்களை கழிக்கின்றார்கள். தங்கள் எண்ணங்கள் கைகூடிவராமல் போனதற்கு, இன்னார் காரணம் என்று மற்றவர்களை குறை சொல்லிக் கொள்வார்கள். இவைகள் உண்மையிலேயே அவர்கள் வாழ்வின் குறைவுகளா என்பதைக் கூட சிந்திக்க இடங் கொடுப்பதில்லை. பிரியமான சகோதர சகோதரிகளே, எங்கள் வாழ்வின் ஒவ்வொரு பருவத்திலும், ஒவ்வொரு பகுதியிலும் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று வழிநடத்தும் தேவ ஆவியானவர் எங்களோடு இருக்கின்றார். சிறிய காரியமோ, பெரிய காரியமோ எல்லாவற்றிலும் அவர் எங்களை வழிநடத்தி செல்ல வல்லமையுள்ளவராக இருக்கின்றார். எனவே, நாங்கள் சிந்திப்பதெல்லாம எங்கள் வாழ்விலே நடக்க வேண்டும் என்ற எண்ணத்தை விட்டுவிட்டு, வாழ்வின் தேவை என்ன, அவசியம் என்ன என்பதை அறிந்து அந்தவழியிலே முன்னேறிச் செல்வோமாக.

ஜெபம்:

தாயின் கருவினிலே என்னை முன்னறிந்த தேவனே, உம்மு டைய ஆலோசனைகளை கேட்டு அதன் வழியிலே நடக்க எனக்கு பிரகாசமுள்ள மனக் கண்களை தந்து வழிடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 37:5