புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 06, 2026)

எந்த அறிவிலே பெருக வேண்டும்?

ரோமர் 6:23

பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.


ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த விசுவாசியானவன், குற்றம் ஒன்றில் அக ப்பட்டதால், அநேகர் முன்னிலையிலே அவமானத்திற்குள்ளானான். அவன் மனதிலே தாங்க முடியாத வேதனை. அவன் செய்த குற்றத்தின் தார்பரியத்தையும், பின்விளைவுகளையும் குறித்து, மற்றவர்கள் அவனுக்கு சொன்னார்கள். அவர்கள் சொ ன்ன வார்த்தைகள் உண்மை. அந்தக் குற்றத்தினால் இனி அவனுக்கு வரவிருக்கும் இழப் புக்களை குறித்து, சம்மந்தப் பட்ட மூப்பர்கள் அவனுக்கு கூறினார்கள். அவர்கள் தங்கள் பொறுப்புக்களை நீதி நியாய ஒழுங்கின்படி செய்தார்கள். இரவு நேரங்களில், நித்திரையற்றவனாக படுக்கையை கண்ணீரால் நனைத்த நாட்கள் உண்டு. தன் குற்றத்தைக் குறித்து அதிககதிகமாக சிந்தித்துக் கொண்டிருந்தான். குற்றத்தின் அககோரம் எவ்வளவு என்ற அறிவிலே பெருகினான். ஒருநாள் அவனுடைய மேய்ப்பனாவர் அவனை சந்தித்துப் பேசினார். அனுப வத்திலே தேறின அவர், அவனை நோக்கி: மகனே, பாவத்தின் அகோ ரம் பெரிது. தேவனுடைய இரக்கம் அதைவிட பெரிது. பாவத்தை அறி யும் அறிவிலே வளர்ந்து பெருகுவதைவிட, தேவனையும், அவருடைய அன்பின் வல்லமையின் அறிவிலும் நீ வளர்ந்து பெருக வேண்டும். பாவத்தினால் உனக்கு உண்டாகக்கூடிய அதி கூடிய தண்டனை; மரணம். அந்த மரணத்தின் கூரை ஆண்டவர் இயேசு உடைத்தார். அவருடைய கிருபையின் அதி உயர்ந்த பலன் மரணத்தினின்று உன்னை விடுவித்து, பரலோகத்திலே நித்திய ஜீவனை உனக்குத் தருவதாகும். குமாரனா கிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். எனவே பாவத்தையும் அதனால் உண்டாகும் தண்டனை யையும் குறித்த அறிவில் வளர்வதைவிட அதிகமாக தேவனையும், அவ ருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து வழியாக உண்டாகும் நித்திய ஜீவனைக் குறித்த அறிவிலே வளர்ந்து பெருகு என்று ஆலோசனை கூறி னார். நித்திய வாழ்விற்கென்று அழைக்கப்பட்ட பிரியமான சகோதர சகோ தரிகளே, உங்கள் வாழ்க்கையின் சூழ்நிலைகளால் உண் டாகும் பயங் கரங்களை கண்டு, மருண்டு போகாதிருங்கள். உங் களை அழைத்த தேவன் சர்வ வல்லமையுள்ளவர். அவருடைய கிருபை என்றுமுள்ளது. பயங்கரங்களை குறித்து தியானிக்காமல், தேவனையும், அவ ருடைய அன்பின் வல்லமையும் குறித்து தியானித்து, அவரிடத்திலே சேருங்கள்.

ஜெபம்:

பரலோக தேவனே, ஒன்றான மெய்தேவனாகிய உம்மையும், நீர் அனுப்பிய உம்முடைய திருக்குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் அறிகின்ற அறிவிலே வளர என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 1 யோவான் 1:7