தியானம் (வைகாசி 26, 2026)
ஆவியே உயிர்ப்பிக்கிறது...
யோவான் 6:63
ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது;
ஒரு கிராமத்திலே இயங்கி வந்த சபை ஐக்கியமொன்றிற்கு, அவ்வூரி லுள்ளவர்களுக்குள் கல்வியை கற்றிருந்த, மனிதனொருவன் வந்திருந் தான். அவன் கிராம மட்டத்திலுள்ள அரச ஸ்தாபனங்களில் செல்வாக்கு டையவாக இருந்தான். அந்த சபையிலுள்ள சில மூத்த உறுப்பினர்கள், 'அந்த மனிதன் கல்வி கற்றவன், செல்வாக்குடையவன்' எனவே அவ னை எப்படியாவது தங்களுடைய சபை யிலே தக்க வைத்துக் கொள்ள வேண் டும் என்று ஆலோசனை கூறினார்கள். அந்த ஆலோசனை, சபையின் ஊழிய ருக்கும், அங்கிருந்த பலருக்கு நன்மை யானதாக இருந்தால், அந்த மனிதனை ஏற்றுக் கொண்டு, காலதாமதமின்றி நிர்வாக உறுப்பினராக நியமித்தார்கள். அந்த மனிதனுடைய மாம்சத்தின் நற்கிரியைகளினாலே அதிக துன்பம் அந்த சபையோருக்கு ஏற்படுவ தற்கு அநேக நாட்கள் செல்லவில்லை. அந்த சபையிலே, சில கால மாக,சத்திய ஆவியாவவின் வழிநடத்து தலைவிட அந்த மனிதனு டைய குரலே ஓங்கியிருந்தது. அந்த மனிதனும், தன்னுடைய தகமைகளைக் குறித்து மேன்மைபாரட்டுகின்றவனாகவும், உலக முறைமைகளை கிறிஸ் துவின் சபைக்குள் திணிக்கின்றவ னாகவும் காணப்பட்டான். பிரியமான சகோதர சகோதரிகளே, உலக முறைமையின்படி கற்றவனாக இருந்தா லும், கல்வி கற்காதவனாக இருதாலும், ஐசுவரியவானாகவோ அல்லு ஏழையாகவோ இருந்தாலும், செல்வாக்கு நிறைந்தவனாகவோ அல்லது அற்பமாக எண்ணப்பட்டவனாகவோ இருந்தாலும், உலக மேன்மைக ளின்படி வாழ்கின்றவன், மாம்ச எண்ணங்களின்படி வாழ்கின்றவனாக இருக்கின்றான். சிலர், தங்களுடைய உலக மேன்மைகளை விட்டுட்டு, தேவ வார்த்தைக்கு முற்றிலும் கீழ்படிய மனதில்லாமல், அவைகளை நான் தேவனுக்கென்று பயன்படுத்தேன் என்று எண்ணக் கொள்கி ன்றார்கள். தேவனுடைய வார்த்தைக்கு முரணாக செயற்படும் எந்த எண் ணமும் தேவனுக்கு உகந்தவைகள் அல்வவே. தேவ ஊழியராகிய பவு லுக்கு இந்த உலக்தால் உண்டான மேன்மைகளை அநேகமிருந்தது, அவைகள் அவர் கிறிஸ்துவினால் உண்டான மேன்மையோடு, ஒப்பிட்டு பார்க்கத் துணியவில்லை. அவைகள் ஒன்றுக்கும் உதவாது என்று கழித் துவிட்டார். இன்றும் சிலர், தேவனாலே உண்டாகியிருக்கும் மேன்மை களை மறந்து, உலகத்தின் மேன்மைகளால் தேவ ஊழியத்தை நிறை வேற்ற முற்படுகின்றார்கள். அவைகளினாலே வேதனைகளும் துன்பங் களும் பெருகுமேயன்றி, தேவ சித்தம் நிறைவேற்றபட மாட்டாது. எனவே வழிநடத்தும் ஆவியானவருக்கு இடங்கொடுங்கள்.
ஜெபம்:
பரலோக தேவனே, நான் என்னுடைய மாம்சத்தின் எண்ணங்க ளிலே சாராமல் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கின்ற உம்முடைய சத்திய வசனத்தின்படி வாழ எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - சங்கீதம் 19:7