தியானம் (புரட்டாசி 20, 2026)
நல்ல பங்களை பற்றிக் கொள்ளுங்கள்
ரோமர் 12:2
நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.
இந்த வருடத்தின் ஆரம்பத்திலிருந்து, 'இயேசு கிறிஸ்துவின் ஊழியராகிய பவுல்' பிலிப்பியருக்கு எழுதிய நிருபத்தை மையமாக வைத்து வசனங்களின் கருப்பொருளை தியானித்து வருகின்றோம். கடந்த பல நாட்களாக பிலிப்பியர் 4ம் அதிகாரத்தின் கடைசிப் பகுதியிலுள்ள குறைவுகளை நிறைவாக்கும் தேவன் என்ற வசனத்தை தியானித்து வருகின் றோம். அதாவது, 'என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறை வாக்குவார்.' உலகத்திலுள்ளவர்கள், தேவானாகிய கர்த்தரை அறியாதவர்கள், அவரை நிராகரித்தவர்கள் உலகத்தின் போக்கின்படி நிறைவை நோக்கி பிரயாசப்படுகின்றார்கள். ஆனால், தேவனை அறிந் தவர்கள் இளைபாறுதல் இல்லா மல், மனஅமைத்தி இழந்தவர்களாய், சமாதானத்தை தொலைத்தவர்களாய், மனதிருப்தியற்றவர்களாக அலைந்து திரிவார்களாக இருந்தால், அவர்கள் தங்கள் வாழ்க்கையை ஆராய்ந்து பார்க்க வேண்டும். இந்த உலகத்திலே உபத்திரவங்கள் உண்டு, வாழ்விலே போராட்டங்கள் வரும். இவைகளை குறித்து ஆண்டவராகிய இயேசு மிகவும் தெளிவாக கூறியிருக்கின்றார். எல்லா உபத்திரவங்கள், போராட்டங்கள் மத்தியிலும், விசுவாசிகள் மனரம்யமான வாழ்வை கிறிஸ்துவுகள் அடைந்து கொள்கின்றார்கள். விசுவாசிகளாக இருந்தும், உலகத்தினால் உண்டாகும் நிறைவை நோக்கி ஓடுகின்றவர்கள், உலகத்தினால் உண்டாகும் சில சுகபோகங்கள் அனுபவித்து வருகின்றார்கள். அவைகள் மத்தியிலே, உண்மையாய் தேவனை பற்றிக் கொண்டு வாழும் விசுவாசிகளை பார்த்து, தேவன் தங்களை ஆசீர்வத்திருக்கின்றார் என்று திட்டமாய் கூறிக் கொள்கின்றார்கள். உணர்வற்றவர்களாக வாழும் இவர்கள் தேவனுடைய இரக்கமே தங்களை இன்னும் தாங்கி நடத்துகின்றது, தேவன் நீடிய பொறுமையுள்ளவராக இருக்கின்றார் என்பதை மறந்து போய்விடுகின்றார்கள். உலகத்தின் கண்ணியிலே சிக்கி கொள்ளும் போது, தங்கள் சுயவழிகளைக்குறித்து ஒருவேளை உணர்வடையவார்கள். விசுவாசிகளாகிய நீங்களோ, தேவையானது இன்னது என்பதை உணர்ந்து, அதையே பற்றிக் கொண்டிருங்கள். உங்களை விட்டு எடுபாடாது நல்ல பங்கை, நீங்கள் அற்பமான உலக ஆசைகளுக்காக விற்றுப் போடாதிருங்கள்.
ஜெபம்:
நித்திய கன மகிமைக்காக என்னை அழைத்த தேவனே, இந்த உலகமும் அதன் வேஷமும் களைந்து போகும் என்ற சத்தியத்தை நான் உணர்ந்து, நித்தியமானவைகளை பற்றிக் கொள்ள எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - லூக்கா 10:42