தியானம் (ஐப்பசி 06, 2025)
ஆவியானவரின் வழிடத்துதல் தேவை
அப்போஸ்தலர் 8:29
ஆவியானவர்: நீ போய், அந்த இரதத்துடனே சேர்ந்துகொள் என்று பிலிப்புடனே சொன்னார்.
ஆகையால் நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள் என்று ஆண்டவராகிய இயேசு தாமே தம்முடைய சீஷர்களுக்கு கட்டளையிட்டார். பிதாவாகிய தேவன் முன் குறித்த பெந்தேகோஸ்தே என்னும் நாளிலே பரிசுத்த ஆவியானவர் வந்தார். சீஷர்கள் யாவரும் வெளியரங்கமான அடையாளங்க ளோடு, பரிசுத்த ஆவியானவரை பெற்றுக் கொண்டார்கள். அதனால், அவர்கள் தங்கள் இஷ;டப்படி, பிர யா ணப்பட்டுப்போய், நற்செய்தியை அறிவித்தார்களா? இல்லை! பெற் றுக் கொண்ட ஆவியானவரின் வழி நடத்துதலின்படியே அவர்கள் நற்செ ய்தியை அறிவித்தார்கள். ஆண்டவ ராகிய இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்கும்படி, அதிகமாக பிரயாசப்பட்ட தேவ ஊழியராகிய பவுல், ஒரு சமயம், இன்னும் சிலரோடுகூடி, 'பிரிகியா கலாத்தியா நாடுகளைக் கடந்துபோனபோது, ஆசியாவிலே வசனத்தைச் சொல்லாதபடிக்குப் பரிசுத்தஆவியினாலே தடைபண்ணப்பட்டு, மீசியா தேசமட்டும் வந்து, பித்தினியா நாட்டுக்குப் போகப் பிரயத்தனம்பண்ணினார்கள்; ஆவியானவரோ அவர்களைப் போகவொட்டாதிருந்தார்.' (அப் 16:4-7). இன்னுமொரு சந்தர்ப்பத்திலே, பிலிப்பு என்னும் ஊழியனை, ஆவியானவர் வழிநடத்தினார். எத்தியோபாவிலிருந்து வந்த மந்தரியை சந்ததிக்கும்படி அவனை கூடிப்கொணட்டு போய், அந்த மந்திரியானவர் சென்றுகொண்டிருந்த இரதத்துடனே சேர்ந்துகொள் என்று அவனுக்கு சொன்னார். அவனும் அந்த மந்திரியை சந்தித்து, நற்செய்தியை கூறி, அவருக்கு அன்றய தினமே ஞானஸ்நானம் கொடுத்தான். அவர்கள் தண்ணீரிலிருந்து கரையேறினபொழுது, கர்த்தருடைய ஆவியானவர் பிலிப்பைக் கொண் டுபோய்விட்டார். மந்திரி அப்புறம் அவனைக் காணாமல், சந்தோஷத் தோடே தன் வழியே போனான். பிலிப்பு ஆசோத்திலே காணப்பட்டு, அவ்விடத்திலிருந்து பிரயாணம் பண்ணி செசரியாவுக்கு வருகிறவ ரையில் சகல பட்டணங்களிலும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்துக்கொண்டு வந்தான். இந்த சம்பவத்தை அப்போஸ்தல நடபடிககள் 8ம் அதிகாரம் 26ல் இருந்து 40ம் வசனம் வரை வாசிக்கலாம். எனவே சகல சத்திய த்திலும் நம்மை வழிநடத்தும் சத்திய ஆவியானவருடைய சத்தத்திற்கு செவி கொடுங்கள். தேவன் குறித்த காலத்திற்கு முன்னதாகவே, தேவ காரியங்களை செய்ய முற்படாதிருங்கள்.
ஜெபம்:
நான் செய்ய வேண்டியவைகளை எனக்கு போதிக்கும் தேவனே, நான் உம்முடைய சத்தத்திற்கு செவி கொடுத்து, உம்முடைய வழியிலே நடக்க எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - அப் 10:22