புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 10, 2025)

என் ஆத்துமா திருப்தியடையும்

வெளிப்படுத்தல் 1:8

நான் அல்பாவும், ஒமெகாவும் ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்.


மகா பராகிரமமுள்ள ராஜாவொருவன் ஒரு தேசத்தை நல்ஆளுகை செய்து வந்தான். ஒருநாள் அந்த ராஜாவானவன், ஒரு ஊருக்கு சென்ற வேளையிலே, தெருவோரமாக நின்ற அந்த ஊரின் குடிமக்கள், ராஜாவே நீர் வாழ்க என்று வாழ்த்தினார்கள். ஜனக்கூட்டத்தில் நின்ற குடியானவனொருவனின் சின்ன மகனாவன், தன் தகப்பனை நோக்கி: அப்பா, மகா பராக்கிரமம் நிறைந்த ராஜாவானர், நன்றாகவே வாழ்ந்து வருகின்றார் அப்படியானல் நாங்கள் ஏன் ராஜாவை வாழ்த்த வேண்டும் என்று கேட்டேன். அதற்கு தகப்பனா னவர: மகனே, நாங்கள் வாழ்த்தி னாலும், வாழ்த்தாவிட்டாலும், நீ சொன்ன பிரகாரமாக ராஜா சுகத் தோடு வாழ்ந்து நல் ஆட்சி செய்கி ன்றார். ஆனால், நாங்கள் அவரை வாழ்த்தும் போது, அவர் எங்களு டைய ராஜா என்றும், அவருடைய நல்ல ஆளுகையை ஏற்றுக் கொண்டு, அந்த ஆளுகை எங்கள் வாழ்வில் அறிக்கை செய்கின்றோம். அவருடைய நல் ஆளுகையினால் எங்களு க்கு சமாதானமதா வாழ்வு உண்டாயிருயிருக்கின்றது என்று கூறினார். கிறிஸ்து இயேசுவின் இரத்தத்தினாலே, பாவமறக் கழுவப்பட்டு, பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்ட சகோதர சகோதரிகளே, இந்த உலகத்தின் பராக்கிரமமும் ஆளுகையும் காலத்தாலும், பெலத்திலும் மட்டுபபடுத்தப்பட்டவைகள். அவைகளுக்கு ஒரு தொடக்கமும் முடிவும் உண்டு. ஆனால், பரமண்டலத்திலே வீற்றிருக்கின்ற நம்முடைய பிதா வாகிய தேவனுடைய ஆளுகை காலத்தைக் கடந்தது. அவர் இருக் கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர். அவருடைய சர்வவல்லமை நேற்றும் இன்னும் என்றும் மாறாதது. அவரு டைய பரிசுத்தம் அவருடைய சுபாவம். அவருடைய பரிசுத்தத்திற்கு முன் தீமை நிலை நிற்பதில்லை. மனிதர்கள் அவருடைய நாமத்தை பரி சுத்தம் என்று வாழ் த்தினாலும், வாழ்த்தாமல் விட்டாலும், அவருடைய பரிசுத்தம் ஒரு போதும் மாறிப்போவதில்லை. நிகரற்ற தேவன் குறைவு படுவதுமி ல்லை. ஆனால், நாம்; அவருடைய நாமம் பரிசுத்தப்படுவதாக என்று வாழ்த்தும் போது, அவருடைய சர்வ வல்லமை நிறைந்த அவ ரையும், அவருடைய பரிசுத்த ஆளுகையை நாம் நம்முடைய வாழ்க் கையிலே ஏற்றுக் கொண்டு, அறிக்கை செய்கின்றோம். அவருடைய பரிசுத்தத்திற்கும், கர்த்ததுவதிற்கும் முன்பாக எந்த ஆளுகையும், எதிர் க்கும் சக்திகளும் நிலைநிற்பதில்லை. அவருடைய பரிசுத்த பிரசன்ன த்திலே மாத்திரமே நம்முடைய ஆத்துமா திருப்த்தியை கண்டடைகின்றது.

ஜெபம்:

பரமண்டலங்களிலே இருக்கின்ற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய பரிசுத்த பிரசன்னத்திலே மாத்திரமே என் ஆத்துமா நிறைவடையும். உம்மிடத்தில் சேரும்படியான பாக் கித்தை தந்ததிற்காக நன்றி. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 6:9