புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 22, 2025)

தீபத்தை மறைத்து வைக்காதிருங்கள்

மத்தேயு 5:14

மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது.


ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த குடும்பத்திலே, தாயாளவள் மாலை வேளையிலே விளக்கை கொழுத்து, அதன் புகைபோக்கும், கண்ணாடி கூண்டாகிய சிம்னியினால் எரியும் தீபத்தை மூடி விளக்கை தூக்கி, அறைமுழுவதும் வெளிச்சம் வீசும்படிக்கு, விளக்கு தண்டில்மேல் வைத்தால். தன் நண்பர்களோடு படிக்கச் சென்ற மனானாவன், திரைப் படத்தை பார்த்து, தவறான காரியங்களை செய்து, குறித்த நேரத்திற்கு வீடு திரும்பமாமல், சற்று நேரம் தாழ் த்தி வீடு திரும்பினான். அறைக்குள் வந்தவுடன், தாயாளவன் தன் முகபாவனையை காணாதபடிக்கு, அவன் இரு க்கும் இடத்திலே விளக்கின் வெளி ச்சம் வீசாதபடிக்கு, ஒரு தகரப்பெட்டியை எடுத்து விளக்கின் பக்கமாக வைத்துவிட்டான். இன்று சில விசுவாசிகள், இந்த உகத்த்திலுள்ள அவிசுவாசிகளோடு உறவை ஏற்படுத்தி, அதை பேணிப் பாதுகாத்துக் கொள் வதற்காக, மிகவும் முக்கியமான நேரங்களிலே தங்களில்; எரியும் தீபமானது, அவிசுவாசிகளின் மேல் வீசாதபடிக்கு, அந்த வாலிபனானவன், தகரப்பெட்டியினால் விளக்கை மறைத்தது போல, மறைத்து விடுகின்றார்கள். அதை அன்பென்றும் பண்பென்றும் நினைத்துக் கொண்டு, மெய்யான ஒளியானது நித்திய ஜீவனை பெற்றுக் கொள்ளும்படியாகவே வெளிப்பட்டது என்பதை மறந்து போய் விடுகின்றார்கள். இவர்கள் உறவு வைத்திருக்கும் அவிசுவாசிகளும், இவர்களுக்கும் இடையிலே இந்த உலகத்தின் சில காரியங்களைக்குறித்த ஐக்கியமும் விரும்பமும் இருப்பதினாலே, தங்கள் வெளிச்சத்தை மறைத்துக் கொள்கின்றார்கள். எப்படி அதை மறைத்துக் கொள்கின்றார்கள்? ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிப்பதை நிறுதி விடுகின்றார்கள். அவிசுவாச நண்பர்களை இரட்சிக்க வேண்டும் என்று, தங்கள் குடும்ப ஜெப நேரங்களை மாற்றி அமைக்கின்றார்கள் அல்லது விட்டு விடுகின்றார்கள். ஞாயிறு ஆராதனைகளை விட்டு, அவர்களு டைய திருவிழாக்களிலே பங்கேற்று சிறப்பிக்கின்றார்கள். அந்த இடங்களிலே மெய்யான ஒளியை இவர்கள் வீசுவதில்லை. பிரியமானவர்களே, ஒருவன் இந்த உலகத்திற்கு வந்த மெய்யான ஒளியை நிரகாரித்து, அந்த ஒளியை பெற்ற உங்களை ஏற்றுக் கொண்டு உங்களோடு அந்யோந்நி ஐக்கியமாக இருந்தால், உங்கள் வாழ்க்கையைக் குறித்து வேத வார்த்தையின் வெளிச்சத்திலே ஆராய்ந்து பாருங்கள். உங்கள் அழைத்த ஆண்டவர் இயேசுவின் புண்ணியங்களையும் நீங்கள் அறிக்கின்றீர்களா? அல்லது சமரசம் செய்கின்றீர்களா என்பதை ஆராய்ந்து பாருங்கள்.

ஜெபம்:

திவ்விய ஒளியை எனக்குள் பிரகாசிப்பித்து தேவனே, அந்த ஒளியை நான் இடத்திற்கு இடம் மறைத்து வைக்காமல், அந்த ஒளியின் முதன்மையான நோக்கத்தை வெளிப்படுத்த கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 2 கொரி 4:6