தியானம் (மார்கழி 28, 2025)
மனத்தாழ்மையை கற்றுக் கொள்ளுவோம்
மீகா 6:8
நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்.
ஒரு சபையிலே அருமையாக உதவி ஊழியங்களை செய்து வந்த வாலிபனொருவன், தவறான காரியமொன்றை செய்து விட்டான். இந்த உலகத்திலே எவரும் செய்யாத குற்றங்களை அல்ல, வழமையாக விசுவாசிகளில் பெரியோர், சிறியோர் என்று தங்களை கருதிக் கொள் ளும், யாவரைப் போலவுமே, ஒரு சந்தர்பத்திலே தவறாக பேசிவி ட்டான். அந்த சபையின் மேய்ப் பர் அவனை தனிப்பட அணுகி, அவனை கண்டித்து, வேத வார்த் தையின்படி நல்ல ஆலோசனை களை வழங்கினார். 'மேய்ப்பரா னவர் தன் நிலைமையை எப்ப டியும் புரித்து, தன் பக்கமாக நின்று, தனக்கு ஆதரவாக இரு ப்பார். தான் கண்ணியமாக செய்து வரும் ஊழியங்களின் நிமித்தம், மேய்ப னானவர் இந்த சூழ்நிலையை சமாளித்துக் கொள்வார்' என்று எதிர்பார் த்திருந்த அந்த வாலிபனுக்கு, மனதிலே பெரிய ஏமாற்றமும், தாக்கமும் உண்டாயிருந்தது. மிகவும் மனவேதனை அடைந்தான். துக்கத்தோடே வீட்டிற்கு திரும்பினான். அதை யாரிடமும் கூறாமல், படுக்கையிலே இரு ந்து கொண்டு, தன் மன வேதனையை தேவனிடம் தெரியப்படுத்தினான். அவன் தேவ வார்த்தைக்கு உண்மையாக கீழ்படிக்கின்ற வாஞ்சையை யுடைய வாலிபனாக இருந்ததினால், சில கிழமைக்குள் அவனுடைய துக்கம் மனந்திரும்புத லுக்கு ஏற்றதாக மாறிவிட்டது. 'ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்' (1 பேதுரு 5:6). என்ற வார்த்தை அவன் மனதிலே கிரியை செய்தது. அந்த வார்த்தைக்கு அவன் தன்னை அர்பணித்தான். பல ஆண்டுகள் கடந்து சென்ற பின்னர், தான் செய்த குற்றத்தின் தார் பரியத்தை உணர்ந்து கொண்டான். எப்படியாக, அந்த மேய்ப்பரானவர், முகதாட்யண்ணமில்லாமல், குறித்து வேளையிலே, வேத வார்த்தை யின்படி தன்னை சிட்சித்தார் என்பதை அறிந்து கொண்டான். ஆனால், இன்று அநேகர் சொந்த குடும்பங்களிலே, சபைகளிலே எப்படியான நடந்து கொள்கின்றார்கள்? வாக்குவாதங்களுக்கும், கலகங்களுக்கும், பிரிவினைகளுக்கும், பின்னடைவுகளுக்கும் உடந்தையாகி விடுகின்றா ர்கள். அதிலிருந்து பின்பு மனந்திரும்புவது நல்லது. ஆனால், அந்த வாலிபனைப் போல மனத்தாழ்மையாடு, கீழ்படிவாக இருந்தால் வாழ் விலே ஏற்படக்கூடிய பல நோவுகளையும், வேண்டப்படாத பின் விளை வுகளையும் தவிர்த்துக் கொள்ளலாம்.
ஜெபம்:
வழிநடத்தும் நல்ல தேவனே, ஓவ்வொரு சந்தர்பப்ங்களிலும் மனத்தாழ்மையோடும், கீழ்படிவோடும் உம்முடைய வார்த்தையை கை கொள்ளும்டிக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து என்னை கரம்பிடித்து நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - பிலிப்பியர் 2:1-3