புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 25, 2026)

உலகமும் மாம்சமும்....

அப்போஸ்தலர் 4:12

நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்.


இந்த வருடத்தின் ஆரம்பத்திலிருந்து நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலராகிய பிலிப்பியருக்கு எழுதின நிரூபத்தை மையமாக வைத்து தியானித்து வருகின்றோம். ஆரம்பதிலே குறிப்பிட்டது போல, தேவ ஊழியராகிய பவுல், ரோமாபுரியியிலுள்ள சிறையிலிருந்து இந்த நிரூபத்தை எழுதியிருக்கின்றார். அவர் சிறையிலே இரு ந்ததன் காரணம் என்ன? இயேசு தான் கிறிஸ்து, அவரே மனிதகுலத்தை மீட்டு இரட்சிக்கின்றவர். அவராலே மட்டுமே நித்திய ஜீவன் உண்டு என்ற நற்செய்தியை அறிவித்ததினாலே அவரை சிறையிலிட்டார்கள். இந்த நிரூபத்தை எழுதும் போது, அவர் எருசலேமிலே இல்லை. கிறிஸ்துவினிமித்தம் உண்டாகும் உபத்திரவங்கள் அவருக்கு உண்டான தகமைகளைவிட மேன்மையாக கருதினார். தனக்கு உலகத்தால் உண்டான மேன்மையைக் குறித்து அவர் கூறும் போது. ஏழு காரியங்களை குறிப்பிட்டிருக்கின்றார். 1. நான் எட்டாம் நாளில் விருத்தசேதனமடைந்தவன், 2. இஸ்ரவேல் வம்ச த்தான், 3. பென்யமீன் கோத்திரத்தான், 4. எபிரெயரில் பிறந்த எபிரெ யன், 5. நியாயப்பிரமாணத்தின்படி பரிசேயன்;, 6. பக்திவைராக்கிய த்தி ன்படி சபையைத் துன்பப்படுத்தினவன், 7. நியாயப்பிரமாணத்திற்குரிய நீதியின்படி குற்றஞ்சாட்டப்படாதவன். இவை யாவும், அவருடைய ஜனங்கள் மத்தியிலே மிகவும் மேன்மையும், கனமுமான தகமைகளாக இருந்து வந்தது. அது மாத்திரமல்ல, அந்நாட்களிலே, ரோமன் அல்லது ரோம பிரஜாஉரிமையை பெற்றிருப்பது, அன்றைய உலகத்தார் மத்தியிலே பெரிதான அந்தஸ்தாக இருந்தது. தன்னுடைய மதவைராக்கியத்தை யும், உலகத்தினால் உண்டான எல்லா மேன்மைகளையும் ஒன்றாக சேர்த்துக் கொண்டாலும், தன்னுடைய பாவங்களுக்கு பரிகாரம் கிடைக்காது. இவைகள் ஒன்றாலும் மனிதனுக்கு இரட்சிப்பு உண்டாகாது என்று திட் டமாக அறிந்து கொண்டார். அது மாத்திரமல்ல, இவைகள் யாவும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறிவதற்கு தடைகளும், அவரோடு வாழ்வதற்கு இடையூரானவைகளும் என்று உணர்ந்து கொண்டதினாலே, மதவைராக்கியத்தினாலும், பிறப்பினாலும், தன்னுடைய பிரயாசத்தினாலும் தனக்குண்டான உலக மேன்மைகள் யாவையும், ஒன்றுக்கும் உத வாத கழிவாக எண்ணிக் கொண்டார். இரட்சிப்பானது, கிரியைகளினாலே அல்ல, கிருபையினாலே விசுவாசிகத்தைக் கொண்டு உண்டாகின்றது.

ஜெபம்:

அன்பின் பரம பிதாவே, உலக போக்கும், மாம்சமும் பிசாசக்கு உட்பட்டிருக்கின்றது என்பதை அறிந்து உணர்ந்து சத்திய வழியிலே நடக்க தூய ஆவியானவரின் பெலனை தந்த வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எபேசியர் 2:8-9