புதிய நாளுக்குள்..

தியானம் (தை 19, 2026)

கொடுக்கப்பட்ட கிருபையின் ஆவி

எபிரெயர் 10:29

கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பானென்பதை யோசித்துப்பாருங்கள்.


பிரிமானவர்களே, கிருபையின் ஆவியை அசட்டை பண்ணாதிருங்கள். 'ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால், அந்த மார்க்கத்தின்வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தி னாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும், தேவனுடைய வீட்டின்மேல் அதிகாரியான மகா ஆசாரியர் நமக்கு ஒருவர் இருக்கிறபடியினாலும்' நாம் நடத்த வேண்டிய கிரியைகள் உண்டு. நியமிக்கப்பட்ட இந்த ஓட்டத்திலே நாம் தனியாக ஒடுவதில்லை. சத்திய ஆவியாகிய துணையாளர் நம்மோடிருக்கின்றார். எனவே, துர்மனசாட்சி நீங்கின உண்மையுள்ள இருதயமும், சுத்த ஜலத்தால் கழுப்பட்ட சரீரமுள்ளவர்களாகவும், விசுவாசத்தின் பூரண நிச்சய த்தோடும் தேவனிடத்திலே சேர வேண்டும். எந்த சூழ்நிலையிலும் நம் முடைய நம்பிக்கையை நாம் அறிக்கை செய்ய வேண்டும். அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனிக்க வேண்டும். சபை கூடிவருதலைச் விட்டுவிட கூடாது. நாளானது சமீபித்து வருவதால், பக்திவிருத்தியடையும்படிக்கு ஒருவருக்கொருவர் புத்திசொல்லவேண்டும். சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொருபலி இனியிராமல், நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும். மோசேயினுடைய பிரமாணத்தைத் தள் ளுகிறவன் இரக்கம்பெறாமல் இரண்டு மூன்று சாட்சிகளின் வாக்கி னாலே சாகிறானே. தேவனுடைய குமாரனைக் காலின்கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பானென்பதை யோசித்துப்பாரு ங்கள். ஜீவனுள்ள தேவனுடைய கைகளில் விழுகிறது பயங்கரமாயி ருக்குமே என்று எபிரெயர் 10ம் அதிகாரத்திலே தெளிவாக கூறப்பட்டிருக்கின்றது. எனவே, கிருபை, கிருபை என்று கூறிக் கொண்டு, சுய இச்சகைளின்படி நடந்து, பாவத்திலே நிலைநிற்கின்றவன் தனக்கு கொடுக்கப்பட்ட கிருபையின் ஆவியை அசட்டை பண்ணுகின்றன். நீங்களோ, தேவ பயத்தோடு ஜீவனம் பண்ணுங்கள்.

ஜெபம்:

மேன்மையானவைகளுக்காக என்னை அழைத்த தேவனே, நீர் கொடுத்த மிகுந்த பலனுக்கேதுவான தைரியத்தை நான் விட்டுவிடா மல், முடிவு பரியந்தம் சத்தியதில் நிலைத்திருக்க என்னை பெலப்படு த்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - கலாத்தியர் 2:21