தியானம் (பங்குனி 15, 2026)
கிறிஸ்துவுக்காய் இழந்தவர்கள்
மாற்கு 9:41
நீங்கள் கிறிஸ்துவினுடை யவர்களாயிருக்கிறபடியினாலே, என் நாமத்தினிமித்தம் உங்களுக்கு ஒரு கலசம் தண்ணீர் குடிக்கக் கொடுக்கிறவன் தன் பலனை அடையாமற்போவதில்லை என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த விசுவாசியானவன், கர்த்தருடைய நாமத் திலே, பற்பல தானதர்மங்களை செய்து வந்தான். தானதர்மங்களை செய் யாமல் இருப்பதற்கு காரணங்களை தேடி நேரத்தை விரயப்படுத்தாமல், எப்போதும் உதவி செய்ய ஆயத்தமுள்ளவனாக இருந்தான். இந்த செயற்பாடுகள் அவனுடைய ஜெபத்திலும் வேண்டுதலிலும் இருந்து வந்தது. ஆண்டுகள் கடந்து செல்லும் போது, ஒரு சிலர் அவன் செய்த உதவிகளை துஷ்பிரயோகம் செய் தார்கள் என்பதை அறிந்து கொண்டான். வேறு சிலர், பொய்களை கூறி உதவிகளை பெற்றிருந்தார்கள் என்று கேள்விப்பட்டான். இன்னும் சிலர், பெற்ற உதவிகளை குறித்து நன்றியற்றவர்களாக இருப்பதை கண்டு கொண்டான். ஆனால், உதவிகளை பெற்றவர்களில் கணிசமானவர்களு டைய வாழ்க்கை மாற்றப்பட்டத்தை யும், அவர்கள் தேவ பயத்தோடு வாழ்ந்து வருகின்றார்கள் என்பதை யும் அறிந்து கொண்டான். ஆனால், கர்த்தருடைய நாமத்திலே உதவிகளை செய்வதே அந்த விசுவாசியா வனுடைய செயற்பாடுகளின் கருபொருளாக இருந்தது. தேவ இரக்க த்தை பெற்ற பிரியமான சகோதர சகோதரிகளே, 'கிறிஸ்துவுக்காய் இழந்தவர்கள் எவரும் தரித்திரராவதில்லை. ராஜ்ய மேன்மைக்காய் கஷ;டப் பட்டோர் நஷ்டப்பட்டதில்லை' என்று ஒரு அழகான பாடலின் வரிகள் அமைக்கப்பட்டுள்ளது. பரலோகராஜ்யம் தன் நிலத்தில் நல்ல விதையை விதைத்த மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது. மனுஷர் நித்திரைபண்ணுகையில் அவனுடைய சத்துரு வந்து, கோதுமைக்குள் களைகளை விதை த்துவிட்டுப் போனான் என்று ஆண்டவர் இயேசு கூறிய உவமையை அறிந்திருக்கின்றீர்கள். கோதுமைக்குள் களைகள் விதைக்கப்பட்டதால், கோதுமைக்கு தண்ணீரும் பசளையும் போடாமல், அவற்றை பராமரிக் காமல் விட்டுவிடுவது சரியாகுமோ? கோதுமையை பராமரிக்கும் போது, களைகளும் தண்ணீரையும் பசளையையும் பெற்றுக் கொள்ளும் அல்லவோ? எனவே, உங்கள் நன்மையான நல்மனதை துஷ;பிரயோகம் செய்கின்றவர்களின் நிமித்தம் சோர்ந்து போகாமல், நன்மையை செய்யுங்கள். பரலோகத்திலே பலன் மிகுதியாயிருக்கும்.
ஜெபம்:
நன்மையின் ஊற்றாகிய என் தேவனே, நன்மைகள் செய்வதில் நான் ஒருபோதும் இளைப்படைந்து போகாதபடிக்கு, உம்முடைய கிருபையை எனக்கு தந்து என்னை பெலப்படுத்தி நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - 2 கொரி 11:26-27