புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 24, 2026)

சத்திய ஆவியானவர்....

யோவான் 14:17

அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்.


நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவானவர், தாம் காட்டிக் கொடுப்பப்படும் அந்த இராத்திரியிலே, தம்முடைய சீஷர்களை றோக்கி: நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகி றது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன். அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதி யைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்கு றித்தும், உலகத்தைக் கண்டித்து உண ர்த்துவார். அவர்கள் என்னை விசுவா சியாதபடியினாலே பாவத்தைக்குறித் தும், நீங்கள் இனி என்னைக் காணா தபடிக்கு நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினாலே நீதியைக் குறித்தும், இந்த உலகத்தின் அதிபதி நியாயந்தீர்க்கப்பட்டதினாலே நியாயத்தீர்ப்பைக்குறித்தும், கண்டித்து உணர்த்துவார். இன்னும் அநேக ங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள். சத்திய ஆவி யாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத் துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்ட வைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார். அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதி னால் என்னை மகிமைப்படுத்துவார். பிதாவினுடையவைகள் யாவும் என்னுடையவைகள்; அதினாலே அவர் என்னுடையதில் எடுத்து உங்க ளுக்கு அறிவிப்பார் என்றேன் என்றார். ஆம், பிரியமானவர்களே, அவர் நம்முடைய பாவங்களுக்காக மரித்து, உயிர்த்து, பரமேறி, பத்து (10) நாட்களுக்கு பின்னர், அவர் முன்னுரைத்தபடியே, சத்திய ஆவியானவர் இந்த பூமிக்கு அனுப்பப்பட்டார். அந்த வாக்குத்தத்தின் ஆரம்பத்தின் நிறைவை இன்று நாம் நினைவுகூருகின்றோம். அந்த நாள் முடிவு அல்ல ஆரம்பம் என்பதை இன்று பலர் மறந்து போய்விட்டார்கள். விசுவா சமார்கத்தாரில் அநேகர்,'உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணா மலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள் ளமாட்டாது.' என்ற வசனத்தின்படி, ஆவியானவரின், அபிஷேகத்தை யும், வரங்களையும், அற்றபமாக எண்ணி, அவைகள் வெற்றி வாழ்க் கைக்கு இன்றியமையாதது என்பதை மறந்து, அவருடைய வரங்கள் கட்டாயமாக தேவையில்லை (ழுpவழையெட)என்று கருதி, மறுபடியும் தங்கள் மாம்சத்தின் நற்கிரியைகளுக்கு இடங்கொடுத்திருக்கின்றார்கள். நீங்க ளோ சத்திய ஆவியானவருக்கு இடங்கொடுங்கள்.

ஜெபம்:

வழிநடத்தும் சத்திய ஆவியானவரை எனக்கு தந்த தேவனே, நான் ஆவியிலே ஆரம்பித்து மாம்சத்தின்படி கிரியைகளை செய்யாதி ருக்க எனக்பு பிரகாசமுள்ள மனக் கண்களை தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 1 கொரி 12:3