தியானம் (பங்குனி 03, 2026)
நம்பிக்கையிலே உறுதியாயிருங்கள்
2 கொரிந்தியர் 1:20
எங்களால் தேவனுக்கு மகிமையுண்டாகும்படி, தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசு கிறிஸ்துவுக்குள் ஆம் என் றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே.
ரோமருடைய ஆட்சிக் காலத்திலே, தேவ ஊழியராகிய பவுல், ஆசியாவிலே இருந்த நாட்களிலே பெரிதான உபத்திரவம் உண்டாயிற்று. தற்போது துருக்கி நாடு இருக்கும் ஒரு பகுதியானது, ஆசியா என்று அழைக்கப்பட்டது. இப்போது துருக்கி பட்டணமானது, தற்போதுள்ள ஆசியா கண்டத்தின் மேற்கு பகுதியாகவும், ஐரோப்பியா கண்டத்தின் தெற்கு பகுதியாகவும் கருதப்படுகின்றது. உயிர் பிழைப்பார் என்கிற நம்பிக்கை அற்றுப்போகத்தக்கதாக, அவர்கள் பலத்திற்கு மிஞ்சின அதிக பாரமான வருத்தம் பவுலுக்கும் அவரோடு ஊழியம் செய்தவர்களுக்கும் உண்டாயிற்று. அப்பபடிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையிலே, தங்களுக்கு ஆதரவாக இருக்கும் சக ஊழியர்களை தொடர் கொண்டு, தங்களுக்காக வேண்டிக் கொள்ளும்படி கூறுவதற்கு எந்த வாய்ப்பும் இல்லாதிருந்தது. அந்த வேளையிலே, அவர்கள் தங்கள் பலத்தி ன்மேல் நம்பிக்கையாயிராமல், மரித்தோரை எழுப்புகிற தேவன்மேல் நம்பிக்கையாயிருந்தார்கள். இந்த பூவுலகத்தைவிட்டு கடந்து செல்லும் மரணம் வருமென்று அவர்கள் தங்களுக்குள்ளே நிச்சயித்திருக்கத்தக்காக அவர்களுடைய வருத்தம் பயங்கரமாக இருந்தது. அப்படிப்பட்ட மரணத்தினின்றும் தேவனாகிய கர்த்தர்தாமே அவர்களை தப்புவித்தார். ஆதலால், அவர் தன்னுடைய விசுவாசத்தை தைரியத்தோடு அறிக்கை செய்தார். அதாவது, 'எங்களைத் தப்புவித்தார், இப்பொழுதும் தப்புவி க்கிறார், இன்னும் தப்புவிப்பார் என்று அவரை நம்பியிருக்கிறோம்.' என்று திடமனதோடு அறிக்கை செய்தார். பிரியமான சகோதர சகோத ரிகளே, இன்றைய நாட்களிலே, நவீன தொலை தொடர்பு சாதனங்கள் விசுவாசிகளுடைய கரங்களிலே உண்டு. அதன் வழியாக, நினைத்த நேரம், தங்களுக்கு வேண்டிய பிரகாரமாக மற்றவர்களோடு தொடர்பு களை ஏற்படுத்திக் கொள்கின்றார்கள். அப்படியிருந்தும், சில விசுவா சிகள் மனிதர்கள் மேல் நம்பிக்கையாக இருப்பதினாலே;தங்கள் உபத்திர வத்திலே தளர்ந்து போய்விடுகின்றார்கள். நீங்கள் அப்படியிருக்காமல், தேவனுடைய பாதத்திலே ஜெபத்திலே அமர்ந்திருங்கள். மற்றவர்க ளோடு அதிக சம்பாஷணைக்கு இடம் கொடுக்காமல், வேதத்தை வாசி த்து, வாக்குத்தத்தங்களை அறிக்கையிடுங்கள். 'தேவனுடைய வாக்கு த்தத்தங்களெல்லாம் இயேசு கிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக் குள் ஆமென் என்றும் இருக்கிறதே.'
ஜெபம்:
பரலோக தேவனே, உபத்திரவங்களிலும், நோய்களிலும் மனித ர்களின் அறிவையோ, அவர்களுடைய பேச்சையோ நம்பியிருக்காமல், உம்முடைய வார்த்தையிலே நிலைத்திருக்கத்தக்கதாக எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - பிலிப்பியர் 4:4