தியானம் (ஆனி 11, 2026)
தேறின சிந்தையுள்ளவர்கள்
எபேசியர் 4:15
அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு, தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிற வர்களாயிருக்கும்படியாக அப்படிச் செய்தார்.
ஆகையால், நம்மில் தேறினவர்கள் யாவரும், கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகின்ற சிந்தையாயிருக்கக்கடவோம்;. எந்தக் காரியத்திலாவது நீங்கள் வேறே சிந்தையாயிருந்தால், அதையும் தேவன் உங்களுக்கு வெளிப்படுத்துவார். ஆகிலும் நாம் எதுவரையில் தேறி யிருக்கிறோமோ, அதுமுதல் ஒரே ஒழுங்காய் நடந்துகொண்டு, ஒரே சிந்தையாயிருப்போமாக என்று தேவ ஊழியராகிய பவுல் பிலிப்பிய சபையின் விசுவாசிகளுக்கு கூறியிருக்கின்றார். மேலும் ஒரு விசுவாசியின் வளர்ச்சியைக் குறித்து, எபேசி சபையிலுள்ள விசுவாசிகளுக்கு அவர் விளக்கிக் கூறும் போது, 'மேலும் நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரண புருஷராகும்வரைக்கும்,' நாம் அவருடைய வார்த்தையிலே நிலைத்திருக்க வேண் டும். கிறிஸ்து வெளிப்படும் நாளிலே அந்த நிறைவை நாம் அடை வோம். அதுவரைக்கும், கிறிஸ்துவுக்குள் வேறு பிரிக்கப்பட்டவர்களாகயிருக்கிற நாம் சீர்பொருந்தும்பொருட்டு, ஊழியங்களையும் ஊழியர்களையும் ஈவாக கொடுத்திருக்கின்றார். எனவே நாம் பேதமையிலும், அறியாமையிலும் தரித்திருக்காமலும், நம்முடைய மாம்ச எண்ணங்களை நிறைவேற்றும் வஞ்சகமான போதனைகளை நாடித் தேடி அலைந்து இழுப்புண்டு போகாமல், அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு, தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயி ருக்கும்படியாக இவைகளை ஏற்படுத்தியிருக்கின்றார். பிரியமான சகோதர சகோதரிகளே, கிறிஸ்து இயேசுவினால் தெரிந்து கொள்ளப்பட்ட அப்போஸ்தலர்களுடைய போதனைகள் கேளுங்கள். அவர்களுடைய வாழ்க்கை முறைமை பாருங்கள். அவர்களை பின்பற்றுகின்றவர்களாக இருங்கள். இன்று வேறு விதமாய் போதிக்கின்றவர்களின் போதனை களுக்கு செவி கொடுக்காமலும், இப்படியப்பட்டவர்களுpன் வழியை பின்பற்றாமலும், இருங்கள். தேறின சிந்தையுள்ளவர்கள், இந்த உலகத்திலே வாழும் வரைக்கும் சத்தியத்தின்படி நடக்க வேண்டும் என்பதை அறிதிருக்கின்றார்கள்.
ஜெபம்:
அன்பின் தேவனே, நான் மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிற தற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல், எனக்கு தெளிந்த புத்தியை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்
மாலைத் தியானம் - சங்கீதம் 34:18