புதிய நாளுக்குள்..

தியானம் (தை 08, 2026)

இலவசமாக பெற்ற கிருபை

ரோமர் 6:1

ஆகையால் என்ன சொல்லுவோம்? கிருபை பெருகும்படிக்குப் பாவத்திலே நிலைநிற்கலாம் என்று சொல்லுவோமா? கூடாதே.


சீரும் செழிப்புமுடைய தேசமொன்றின் குடியுரிமையை பெற்றுக் கொள் வதற்கு அநேக தகைமைகள் வேண்டியதாயிருந்தது. அத்தோடு கூட, அந்த உரிமையை பெற்றுக் கொள்ள விரும்புவர்கள், அதிகபடியான பணத்தை கொடுக்க வேண்டியதாயிருந்து. அத்தகைய தேசத்தின் அயலிலுள்ள நாடொன்றிலே, அநேக ஆண்டுகளாக நடந்து வந்த யுத்தம் காரணமாக சமூதாக சீர்குலைவு உண்டாயிருந்தது. பொருளாதார நெருக்கடிகள் காரணமாக அநேகர் தங்கள் வேலையை இழ ந்து வறுமைக் கோட்டிற்குள் வாழ் ந்து வந்தார்கள். அவர்களில் சிலர், தங்கள் நாட்டிடை விட்டோடி, சீரும் செழிபுமுள்ள தேசத் தில் சென்று தஞ்சம் புகுந்து கொண்டார்கள். அந்த தேசத்தின் குடியுரிமையை பெற்றுக் கொள்வதற்கு, அவர் களுக்கு எந்த தகைமைகளோ, பணமோ அவர்களிடம் இல்லை. அப்படி யான சூழ்நிலையிலே, அந்த தேசத்தின் ராஜாவானவன் மனம் இரங்கி, அவர்கள் யாவருக்கும், குடியுரிமையயை இலவசமாக கொடுத்தார். அவர்களும், தங்கள் குடிமக்களைப் போலவே சீரும் சிறப்புமாக வாழ் வார்கள் என்பதே அந்த ராஜாவின் எதிர்பார்ப்பாக இருந்தது. அதற்கு வேண்டி சகல வசதிகளும் அவர்களுக்கு இலவசமாகவே கொடுக்க ப்பட்டது. அப்படியிருந்தும், அவர்களில் சிலர், தாங்கள் விட்டுவிட்ட நாட்டின் சீரற்ற் பழைய வாழ்க்கை முறைமைகள் விட்டுவிட மனதில்லா தவர்களாக இருந்தார்கள். பிரயாசப்பட்டு உழைக்க மனதில்லாதவர் களாக, களவு செய்ய ஆரம்பித்தார்கள். இப்படியாக தங்கள் சீர்கெட்ட வழிகளை விட்டு திரும்ப மனதில்லாத மனிதர்களை பார்த்து, நீங்கள் இந்த தேசத்தின் குடியுரிமையை உடையவர்கள் எனவே நீங்கள் நினைத்தபடி வாழ்ந்து கொள்ளுங்கள் என்று அந்த தேசத்தின் ராஜா அவர்களை அப்படியே விட்டுவிடுவாரோ? இலசசமாக கிருபையினாலே, பரிசுத்தவான்கள் என்ற தகுதியை பெற்ற சகோதர சகோதரி களே, நீங்கள் பெற்ற அழைப்பை குறித்து சற்று சிந்தித்துப் பாருங்கள். சகலவித அநியாயத்தையும் நடத்திச் கொண்டு, உலகத்தரைப் போல மாம்ச இச்சைகளை நிறைவேற்றிக் கொண்டு, தேவ கிருபை என்று முள்ளது என்று சொல்லிக் கொள்ள கூடுமோ? பாவத்துக்கு மரித்த நாம் இனி அதிலே எப்படிப் பிழைப்போம்? நம்முடைய பெலத்திற்கு அப்பாற்பட்ட காரியங்களை செய்து முடிக்க தேவன் தரும் கிருபையை விருதாவாக்காதபடி எச்சரிக்கயுள்ளவர்களாக இருப்பபோமாக.

ஜெபம்:

புதுக் கிருபையை தினமும் தரும் தேவனே, நான் இனிப் பாவத்துக்கு ஊழியஞ்செய்யாதபடிக்கு, ஆண்டவராகிய இயேசுவுக்கு அடிமையாக இருப்பதன் மேன்மைனயை உணரச் செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 18:18