தியானம் (சித்திரை 01, 2026)
கிறிஸ்துவைப் போல வாழவேண்டும்
மத்தேயு 11:29
நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்று க்கொண்டு, என்னிடத்தில் கற் றுக்கொள்ளுங்கள்;
கிறிஸ்துவைப் போல வாழ வேண்டும்! கிறிஸ்துவின் சாயலிலே வளர வேண்டும் அல்லது கிறிஸ்தவனாக வாழ வேண்டும்! என்று கூறும் போதும் உங்கள் மனதில் உண்டாகும் தோற்றங்கள் என்ன? அற்புத அடையாளங்களை செய்வதா? நன்மை செய்கிறவர்களாய் வாழ்வதா? எளிமையான வாழ்க்கை முறையை தெரிந்து கொள்வதா? பாவிகளை தேடிச் சென்று பணிபுரிவதா? நன்மை செய்து மற்றவர்களுக் காக பாடுகள் துன்பங்களை சகி ப்தா? இப்படியாக பற்பல காரி யங்களை நாம் பட்டியல் படுத்திக் கொள்ளலாம். முதலாவதாக, இவ ற்றுள் எதை இயேசு கிறிஸ்து விடம் இருந்து நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நீங்கள் எண்ணிக் கொள்கின்றீர்கள். மேற்கூறியவைகள் யாவும் நன்மையான வைகள். ஒரு விசுவாசியின் வாழ்க்கையிலே காணப்பட வேண்டியவை கள். இன்று பொதுவாக விசுவாசிகளும் ஊழியர்களும் எதனாலே ஈர்க ப்பட்டுப் போகின்றார்கள்? எங்கே அதிகமானவர்கள் கூடி வருகின் றார்கள். அற்புத அடையாளங்களை பார்க்கும்படி அதிகதிகமாய் கூடி வருகி ன்றார்கள் அல்லவா? ஆனால், கிறிஸ்துவைப் போல மற்ற வர்களை மன்னிக் வேண்டும் என்று ஒரு தேவ ஊழியர் ஒருவர் பிரசங்கிக்கும் இடத்தில் எத்தனை பேர் ஆவலோடு கூடி வருவார்கள்? நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; என்று ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார். அவர் தம்தை அனு ப்பிய பிதாவாகிய தேவனிற்கு முற்றிலும் கீழ்படிவுள்ளவராக, அவருடைய விருப்பம் தன்னில் நிறைவேற இடம் கொடுத்தார். அதாவது, அவர் அற்புதம் செய்யும் வேளைகள் இருந்தது. அவர் உபதேசித்து, பிரசங்கித்து வேளைகள் இருந்தது. ஏழை எளியவர்களுக்கு உதவி செய்த நேரங்கள் இருந்தது. அவர் இந்த பூவுலகிற்கு வந்த நோக் கத்தின் வேளை வந்தபோது, அவர் எப்போதும் இருந்தது போல, என் னுடைய விருப்பத்தின்படியல்ல உம்முடைய விருப்பப்படி எனக்கு ஆக க்கடவது என்று கூறினார். 'அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை. அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்.
ஜெபம்:
நான் இரட்சிபடையும்படி உம்முடைய குமாரனை எனக்காக அனுப்பிய தேவனே, நான் திருக்குமாரனாகிய இயேசு கிறிஸ்துவைப் போல வாழ எனக்கு பிரகாசமுள்ள மனக்கண்களை தந்து வழிநடத் துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - ஏசாயா 53:10