புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 03, 2025)

மேன்மையான அழைப்பு!

யோவான் 6:63

நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது.


ஒரு சபையிலே இருந்த வாலிபனொருவன், ஒலிபெருக்கி மற்றும் கம்யூட்டர் சாதனங்களை இயக்குவதில் மிகவும் ஆர்வமுள்ளவனாக இரு ந்தான். அது தன்னுடைய அழைப்பு என்று கூறிக் கொண்டு, அவன் அந்தப் பொறுப்பை எடுத்து, அந்தக் காரியத்திலே மிகவும் கருத்துள் ளவனாக, சிறந்த முறையிலே அவை களை பேணி பராமரித்து, இயக்கி வந்தான். ஆனால், அவன் ஆராத னை வேளையிலே, துதிப்பதில்லை, பிரசங்க நேரத்திலே போதிக்கப்படும் வார்த்தைகளுக்கு செவி கொடுப்பதி ல்லை. அவனுடைய இள வயத்திற்கு எட்டிய அறிவின்படி, அவையெல் லாம் தன் அழைப்பு அல்ல என்று கருத்திக் கொண்டான். நித்திய ஜீவ னுக்கென்று அழைப்பை பெற்ற அருமையான சகோதர சகோதரிகளே, நாம் யாவரும் நித்திய வாழ்விற்கென்று அழைக்கப்பட்டிருக்கின்றோம். சபை கட்டிடங்கள், தளபாடங்கள், கம்யூட்டர் சாதனங்கள் இப்படியாக பற்பல பொருட்கள் இருப்பது நல்லது. ஆனால், அவைகளினாலே ஒருவருக்கும் நித்திய ஜீவன் உண்டாவதல்ல. இன்றைய நாட்களிலும், ஓலைக் கொட்டில்களிலும், மரங்களுக்கு கீழும் இருந்து தேவனை ஆராதித்து வருகின்றார்கள். அந்த வாலிபனைப் போன்ற மனநிலை யுள்ள அநேகரை இந்த நாட்களிலே ஆங்காங்கே காணக்கூடியதாக இருக்கின்றது. நான் சபைக்கு வருவது மேளம் தட்டுவதற்கு, அதற்கு எனக்கு இடமில்லை என்றால், அந்த சபை எனக்கு தேவையில்லை என்று மனநிலைக்கு ஒத்த மனிதர்கள் இருக்கின்றார்கள். பிரதானமாக, நாம் சபைக்கு செல்லும் காரணம் என்ன? நீங்கள் செல்லும் சபையிலே, இசைந்த ஆத்துமாக்களாக நாம் தேவனை முழுமனதோடு ஆராதிக்க வேண்டும். உங்கள் சபையிலே போதிக்கப்படும் தேவ வார்த்தைகளை விழித்திருந்து கேட்டு, அதை தியானித்து, உங்கள் வாழ்வை ஆராய்ந்து பார்த்து, தேவனிடம் இன்னும் கிட்டி சேர வேண்டும். இவைகள் இன்றியமையாதவைகள். வேதத்தை கருத்தோடு வாசித்து அல்லது கேட்டு, தியானித்து, தன் வாழ்விலே நடைமுறைப்படுத்துவது தனக்கு ரியதல்ல என்று எந்த விசுவாசியும் கூறிக் கொள்ள முடியாது. நமக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளை செய்வது நல்லது, அதனால், நான் என் பொறுப்பை செய்கின்றேன் போதனைகள் எனக்கல்ல, மற்றவர்களுக்கு என்று எவரும் சொல்ல முடியாது. ஜீவ வார்த்தையில்லாத வாழ்வு வாழ்வல்ல.

ஜெபம்:

அன்பின் பரலோக பிதாவனே, உம்முடைய அநாதி தீர்மானி த்தின்படி நான் பெற்றுக்கொண்ட மேன்மையான அழைப்பை குறித்து எண்ணமற்ற வாழ்க்கை வாழாதபடிக்கு எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 2 தீமோ 3:16-17