தியானம் (மார்கழி 06, 2025)
திருவசனத்தை கைகொள்ளுங்கள்
யாக்கோபு 1:22
அல்லாமலும், நீங்கள் உங்க ளை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கி றவர்களாயும் இருங்கள்.
பென்யமீன் கோத்திரத்தாரில் கீஸ் என்னும் பேருள்ள மகா பராக்கிர மசாலியான ஒரு மனுஷன் இருந்தான்;. அவனுக்குச் சவுல் என்னும் பேருள்ள சவுந்தரியமான வாலிபனாகிய ஒரு குமாரன் இருந்தான்;. அந்த வாலிபனை தேவனாகிய கர்த்தர்தாமே தெரிந்தெடுத்து, சமஸ்தல இஸ்ர வேலுக்கும் முதலாவது ராஜாவாக ஏற்படுத்தினான். ராஜாவாகிய சவுல் வழியாக கர்த்தர் இஸ்ரவேலு க்கு இரட்சிப்பை அருளினார். அவனுடைய ராஜ்யபாரம் ஸ்தி ரப்பட்டது. சவுல் ராஜ்யபாரம் பண்ணி, ஒரு வருஷமாயிற்று. அவன் இஸ்ரவேலை இரண் டாம் வருஷம் அரசாண்ட போது, அவனுடைய ஆளுகை முறைமையிலே மாற்றங்கள் ஏற்பட ஆரம்;பித்தது. முன்பு கர்த்தருடைய வார்த்தையைக் கேட்டு, அத ன்படி செய்து வந்த சவுல் ராஜா, பின்பு கர்த்தருடைய வார்த்தையை கேட்டு, அது கர்த்தருடைய வார்த்தை என்று அறிந்திருந்தும், அந்த வார் த்தையை அசட்டை பண்ண ஆரம்பித்தான். கர்த்தர் கூறிய காரியங்க ளைக்கு கவனம் செலுத்தாமல், தன் மனவிருப்பப்படி காரியங்களை செய்தான். அப்படியாக தன் விருப்பத்தை செய்து வந்தது மாத்திரம ல்ல, அவனுடைய தவறுகளை கர்த்தருடைய தீர்க்கதரியானவர் சுட்டிக் காட்டும் போது, தன் தவறுகளை ஏற்றுக் கொள்வதற்கு பதிலாக, அவைகளை நியாயப்படுத்த வழிகளை தேடினான். கர்த்தருடைய தீர்க்கதரியாகிய சாமுவேல் சவுலைப் பார்த்து: புத்தியீனமாய்ச் செய்தீர்; உம்முடைய தேவனாகிய கர்த்தர் உமக்கு விதித்த கட்டளையைக் கைக் கொள்ளாமற்போனீர்; மற்றப்படி கர்த்தர் இஸ்ரவேலின்மேல் உம்முடைய ராஜ்யபாரத்தை என்றைக்கும் ஸ்திரப்படுத்துவார். இப்போதோ உம்மு டைய ராஜ்யபாரம் நிலைநிற்காது; கர்த்தர் தம்முடைய இருதயத்திற்கு ஏற்ற ஒரு மனுஷனைத் தமக்குத் தேடி, அவனைக் கர்த்தர் தம்முடைய ஜனங்கள்மேல் தலைவனாயிருக்கக் கட்டளையிட்டார்; கர்த்தர் உமக்கு விதித்த கட்டளையை நீர் கைக்கொள்ளவில்லையே என்று சொன்னார். பிரியமான சகோதர சகோதரிகளே, வாரந்தோறும் கர்த்தருடைய வார்த் தையை கேட்டுவிட்டு, அபிஷேகம் பண்ணப்பட்ட சவுல் ராஜா தேவ வார்த்தையை அசட்டை செய்தது போல நீங்களும் அசட்டை செய்து உங்களுக்கு பிரியமா னதை செய்யாமல், தேவனுக்கு பிரியமான வைகளை உங்கள் வாழ்க் கையிலே நடப்பியுங்கள்.
ஜெபம்:
உண்மையுள்ள தேவனே, நான் ஒருபோதும் உம்முடைய வார்த்தையை அசட்டை பண்ணி, என் மனவிருப்பத்தின்படி கிரியைகளை நடப்பிக்காமல், உம்முடைங வார்த்தையின் வழியிலே வாழ எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - மாற்கு 7:13