புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 27, 2024)

நன்மையாகத் தோன்றும் அடிமைத்தனங்கள்

நீதிமொழிகள் 25:16

தேனைக் கண்டுபிடித்தாயானால் மட்டாய்ச் சாப்பிடு; மிதமிஞ்சிச் சாப்பிட்டால் வாந்திபண்ணுவாய்.


இன்றைய நாட்களிலே, உலகத்திலே நன்மையாகத் தோன்றுகின்ற காரியங்களை சில விசுவாசிகள் தங்கள் வாழ்க்கையிலே நாடித்தேடுவதால், அந்த நன்மையாகத் தோன்றுகின்றவைகளே, அவர்கள் வாழ்க்கையை மேற்கொண்டு விடுகின்றது. இந்த உலகத்திலே நமக்கு தேவைகள் உண்டு. அந்த தேவைகளை சந்திப்பதற்கு இந்த உலகத்திலிருப்பவைகளிலிருந்து தேவையானவைகளை மட்டாக எடுத்துக் கொள்ள வேண் டியது மிகவும் அவசியம்;. உலகத்தி ற்குரியவைகள் அவை எத்தகைய நன்மையானதாக காட்சியளித்தாலும், அவைகள் நம் வாழ்க்கையை மேற்கொள்ளும் போது, நம்மை அறியாமலே நாம் அவைகளுக்கு அடிமைகளாக மாறிவிடுகின்றோம். இன்னுமொரு விதமாக கூறுவோ மென் றால், அவை நம்மை தேவனிடத்திலிருந்து முற்றிலும் பிரித்து விடுகின்ற விக்கிரக ஆராதனையாகவே மாறி விடுகின்றது. தேன் இனிமையானது. நீ அதைக் கண்டுபிடித்தாயானால், அது உன் உடலுக்கு நல்லது, ஆனா லும் அதை மட்டாய்ச் சாப்பிட வேண்டும். மிதமிஞ்சிச்போனால், அதனால் பின்விளைவுகள் உண்டாகும். இந்த உலகத்திலே கல்வி, செல்வம் போன் றவற்றை இன்று பலர் நன்மையானவைகள் என்று அவற்றை பின்தொ டர்கின்றார்கள். இதற்கு சில விசுவாசிகளும் விதிவிலக்கானவர்கள் அல்ல. அவை இரண்டும் இந்த உலகத்திலே சில காரியங்களை நடப்பிப்தற்கு தேவையாக இருக்கின்றது. ஆனால், கல்வியை அதிகமாக கற்று, அதை நாடித்தேடுகின்றவன், இந்த உலகத்தின் ஞானியாக மாறிவிடுகின்றான். அதனால், தேவனுடைய காரியங்கள் அவனுக்கு அற்பமானதாக காணப் படும். இந்த உலக த்தின் தேவைகளை சந்திப்பதற்கு ஒரு பொருளாதார பண்டமாற்றுக் பொருளாக இருக்கின்றது. அதை நாடித் தேடுகின்றவ ர்கள் பொருளாசையாகிய விக்கிரக ஆராதனைக்கு அடிமைகளாக மாறி விடுகின்றார்கள். ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையி லும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள். (1 தீமோ 6:9). பிரியமான சகோதர சகோதரிகளிலே, நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதா வினிடத்திலிருந்து இறங்கிவருகிறது. இந்த உலகத்தினால் உண்டான வைகள் நன்மையானவைகள் அல்ல. இந்த உலகத்திலே வாழும்போது, எல்லாவற்றை யும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் நான் ஒன்றிற்கும் அடிமைப்படமாட்டேன். (1 கொரி 6:12)

ஜெபம்:

பரலோ ராஜ்யத்திற்கென்று என்னை அழைத்த தேவனே, இந்த உலகத்திலுள்ளவைகள் என் வாழ்வை ஆண்டு கொள்ளுவதற்கு இடங் கொடாமல், உம்முடைய வசனத்தின்படி வாழ என்னை நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யாக்கோபு 1:17