புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 20, 2026)

திடமனதோடு நிலைத்திருங்கள்!

1 பேதுரு 5:9

விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்; உலகத்திலுள்ள உங்கள் சகோதரரிடத்திலே அப்படிப்பட்ட பாடுகள் நிறைவேறிவருகிறதென்று அறிந்திருக்கிறீர்களே.


'எதிர்கின்றவர்களை மேற்கொள்ள முடியாவிட்டால், அவர்களோடு இணைந்து கொள்' என்று மேற்கத்தைய நாடுகளில் வாழும் மனிதர்கள் கூறும் பழமொழியொன்று உண்டு. அதாவது மிகுந்த பலத்தோடும், மேன்மையான யுக்தியோடும் எதிர்த்து வருபவர்களிடம், திரும்பத் திரும்ப தோற்றுப் போய் அவமானப் படாமல், அவர்களோடு இணைந்து அவர்களுடைய யுத்தியும் பலத்தையும் பின்பற்றுவது நல்லது என்று கூறிக்கொள்கின்றார்கள். ஆனால், இந்த பழ மொழியானது ஒரு விசுவாசிக்குரியதல்ல. விசுவாசிகள் விசு வாசத்திலே நிலைத்திருக்கின்றார்கள். ஆனால், ஒருவன் விசு வாசத்தைவிட்டு விலகி செல்லும்போது பயம் அவர்களை மேற் கொண்டு விடுவதால், அவர்கள் சத்துருவாகிய பிசாசானவனுக்கு பய ப்படுகின்றார்கள். சத்திய மார்க்கத்ததைவிட்டு சற்று விலகி, சமரசம் செய்து கொள்கின்றார்கள். ஒரு விசுவவாசியானவனு க்கு எதிர்ப்புக்கள் எப்படி உருவாகின்றது? எங்கே உருவாகின்றது. சில நாடுகளிலே கிறி ஸ்துவின் நாமத்தின் நிமித்தம் துன்புறுத்தப்படுகின்றார்கள் என்பதை நாம் செய்திகள் வாயிலாக அறிந்து கொள்கின்றோம். ஆனால், இன்னும் சில நாடுகளிலே மதச் சுதந்திரம் இருக்கின்றது என்று கூறிக் கொள்கின்றார்கள். அந்த மதத் சுதந்திரத்தின் மத்தியிலும், ஆண்டவர் இயேசு வின் நாமத்தை உச்சரிப்பது, பலருக்கு இடறலாக இருக்கின்றது. வேலை செய்யும் இடங்களிலே, நான் ஞாயிறுதோறும் தேவ ஆலயத்திற்கு சென்று தேவனாகிய கர்த்தரை ஆராதித்து வருகின்றேன் என்று கூறினால், அந்த இடங்களிலே அந்த விசுவாசிக்கு மறைமுகமான எதிர்ப்புக்கள் உருவாகிவிடுகின்றது. 'சென்ற வாழ்நாட் காலத்திலே நாம் புறஜாதிகளுடைய இஷ்டத்தின்படி நடந்துகொண்டது போதும்; அப்பொழுது நாம் காமவிகாரத்தையும் துர்இச்சைகளையும் நடப்பித்து, மதுபானம் பண்ணி, களியாட்டுச்செய்து, வெறிகொண்டு, அருவருப்பான விக்கிரகாராதனையைச் செய்துவந்தோம். அந்தத் துன்மார்க்க உளையிலே அவர்களோடேகூட நீங்கள் விழாமலிருக்கிறதினாலே அவர்கள் ஆச்சரியப்பட்டு, உங்களைத் தூஷிக்கிறார்கள் என்று 1 பேதுரு 4ம் அதி காரம் 3ம் 4ம் வசனங்கிளலே வாசிக்கின்றோம். நீங்களோ, எந்த சூழ்நி லையிலும் ஆண்டவர் இயேசுவிற்கு சாட்சியாக வாழ்வதற்கு பயப்படாதிருங்கள்.

ஜெபம்:

பரலோக தேவனே, இந்த உலகத்திலே இருப்பவனைப் பார்க்கிலும் என்னோடு இருக்கும் நீர் பெரியவர் என்பதைபதை அறிந்து எந்து சூழ்நிலையிலும் மருளாமல் விசுவாசத்தில் நிலைத்திருக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 1:28