புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 17, 2026)

தேவனுடைய வீட்டார்!

எபிரெயர் 3:5

மோசே பணிவிடைக்காரனாய், அவருடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாயிருந்தான்.


'நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி' என்று எஜமானான் தன்னுடைய உண்மையும் உத்தமமுமுள்ள ஊழியனுக்கு கூறியதைப் போல, ஒருநாள் ஆண்டவர் இயேசுவும் உண்மையும் உத்த மமுள்ளவர்களை அழைத்துக் கொள்வார். 'என் தாசனாகிய மோசேயோ அப்படிப்பட்டவன் அல்ல, என் வீட்டில் எங்கும் அவன் உண்மையுள்ளவன்.' என்று தேவனாகிய கர்த்தர் மோசேயைக் குறித்து சாட்சி பகர்ந்தார். இன்றைய நாட்களிலே யார் உண்மையுள்ளவர்களாக இருக்கின்றார்கள்? ஒருவேளை சிலர், தங்க ளை உண்மையுள்ளவர்கள் போல காண்பித்துக் கொள்ளலாம். வேறு சிலர், தங்கள் பேச்சினாலே உண்மையுள்ளவர்கள் போல காணப்படுவார்கள். ஆனால், உண்மையாய் தேவ னுடைய வீட்டை விசாரிக்கின்றவன் யார்? அவனவன் தன்தை தேவ வார்த்தையின் வெளிச்சத்திலே ஆராய்ந்து பார்தால், அவன் தேவனுடைய நாளிலே பிரயோஜனமற்றவனாக காணப்படாமல், அவர் முன்னிலையிலே உண்மையுள்ளவனாக காணப்படுவான். அன்றைய நாட்க ளிலே தேவ ஊழியராகிய பவுலோடு வேறு சில ஊழியர்களும் தங்களை ஊழயிர்கள் போல காண்பித்துக் கொள்பவர்களும் இருந்திரு க்கலாம். ஏனெனில், பிலியப்பியருக்கு எழுத் தின நிரூபத்தின் ஆரம் பத்திலே, 'சிலர் பொறாமையினாலும் விரோதத்தினாலும், சிலர் நல்ம னதினாலும் கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறார்கள். சிலர் என் கட்டுகளோடே உபத்திரவத்தையுங்கூட்ட நினைத்து, சுத்தமனதோடே கிறிஸ்துவை அறிவியாமல், விரோதத்தினாலே அறிவிக்கிறார்கள்.' என்று கூறியிருக்கின்றார். ஆனால், தன்னோடிருந்த தீமோத்தேயு என்னும் வாலிபன், உண்மையுள்ளவனாக இருப்பதை கண்டு கொண்டார். ஜெபம் பண்ணும்படியாக தேவ ஆலயத்திற்கு சென்ற பரிசேயனையும் ஆயக்கார னையும் குறித்து அறிந்திருப்பீர்கள். பரிசேயன் தான் நீதிமான் என்று தனக்குள்ள எண்ணிக் கொண்டான். ஆனால், அவனுடைய இருதயமோ தேவனுக்கு முன்பாக நீதியாக காணப்படவில்லை. உங்கள் இருதயம் தேவனுக்கு முன்பாக எப்படியிருக்கின்றது? 'சொல்லப்படப்போகிற காரி யங்களுக்குச் சாட்சியாக, மோசே பணிவிடைக்காரனாய், அவருடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாயிருந்தான். நாமும் உண்மையுள்ள வர்களாக இருந்தால், தேவனுடைய வீட்டாராய் காணப்படுவோம்.

ஜெபம்:

இருதயங்களை ஆராய்ந்தறிகிற தேவனே, என் இருதயம் உமக்கு முன்பாக, உண்மையும் உத்தமமுமான விசுவாசியாக உமக்கு முன்பாக காணப்பட எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 25:23