தியானம் (மாசி 07, 2026)
பெற்றுக் கொண்ட பணி எது?
பிலிப்பியர் 1:18
எப்படியாவது, கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார்; அதனால் சந்தோஷப்படுகிறேன், இன்னமும் சந்தோஷப்படுவேன்.
ஒரு கிராமத்திலே வாழ்ந்து வந்த முதலாளியொருவன், பலசரக்கு கடையொன்றை ஆரம்பித்து அதை நன்றாக நடத்தி வந்தான். அவனுடைய வியாபாரம், கிராம மக்களுக்கு பிரயோஜனமும், அவனுடைய வாழ் விற்கு நல்ல ஆதராமாகவும் இருந்து வந்தது. சில ஆண்டுகளுக்கு பின் அதே கிராமத்திலே வசித்து வந்த மனிதனொருவன், இந்த கிராமத்திலே வாழ்பவர்களும், இந்த கிராமத்தை கடந்து செல்லும் அந்நியர்களும், இளைபாறி தாகம் தீர்க்க ஒரு இடம் இல்லை என்று கண்டு, ஒரு தேநீர் சிற்றுண்டு கடையை ஆரம்பித்தான். அது மிகவும் நன்றாக வளரந்து வருவதை கண்ட, பலசரக்கு கடை முதலாளியானவன் எரிச்சல் அடைந் தான். தன் கடைக்கு பக்கத்திலே ஒரு சிறிய கொட்டிலைப் போட்டு, தானும் ஒரு தேநீர் சிற்றுண்டி சாலையை ஆரம்பித்தான். தன் கடைக்கு பலசர க்கு வாங்கும்படி வரும் மனிதர்களை, மற்றய தேநீர் கடைக்கு போகவே ண்டாம்;, என்னுடைய தேநீர் சலை யிலே எல்லாம் குறைந்த விலைக்கு பெற்றுக் கொள்ளலாம் என்று மனிதர்களை குழப்பிக் கொண்டிருந்தான். நாளடைவிலே தன் கடையை பார்ப்பதா, தன் தேநீர் சாலையைப் பார்ப்பதா அல்லது மற்றய மனிதன் அவனுடைய தேநீர் கடையிலே என்ன செய்கின்றான் என்று பார்ப்பதா என்று அவனும் குழப்படைந்து போனான். நித்திய ஜீவனுக்கென்று அழைக்கப்பட்ட சகோதர சகோதரிகளே, இன்று சில சபைகளுடைய நிலையும் அந்த பலசரக்கு கடை முதலாளியின் நிலையைப் போலே மாறிவிடுகின்றது. பெற்றுக் கொண்ட தாலாந்தின்படி தேவனுடைய சித்தத்ததை நிறைவேற்றுவதைவிட, கடைக்கு வரும் வாடிக்கையாளர் களை எப்படியாவது தக்க வைக்க வேண்டும் என்பதே பிரதான நோக்கமாக மாறிவிடுகின்றது. தேவ ஊழியராகிய பவுலின் நாட்களிலும், சகோதரரில் அநேகர், அவருடைய சிறையிருப்பானது கிறிஸ்துவின் நிமித்தம் உண்டானது என்று அறிந்து போது, அவருடைய கட்டுக ளாலே கர்த்தருக்குள் திடன்கொண்டு பயமில்லாமல் திருவசனத்தைச் சொல்லும்படி அதிகமாய்த் துணிந்திருந்தார்கள். சிலர் பொறாமையி னாலும் விரோதத்தினாலும், சிலர் நல்மனதினாலும் கிறிஸ்துவைப் பிரசங்கித்தார்கள். அதைக் கேள்விப்பட்ட ஊழியராகிய பவுலோ, எரிச்சலடையல்லை, மாறாக கிறிஸ்துவின் சுவிசேஷம் அறிவிக்கப்படு வதை குறித்து சந்தோஷமடைந்தார். நீங்களும் குழப்பமடையாமல், நீங்கள் பெற்ற பொறுப்பை நிறைவேற்றுங்கள்.
ஜெபம்:
அன்பின் பரலோக பிதாவே, நான் பெற்றுக் கொண்ட பொறுப்பை நல் மனதோடும், உண்மையோடும் செய்து முடிக்கும்படிக்கு நீர் எனக்கு பெலன் தந்து என்னை உம்முடைய வார்த்தையின்படி நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - ரோமர் 12:3