புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 30, 2026)

நற்கிரியைகளை செய்யும் பெலன்

யோவான் 14:12

என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்.


நாம் பாவத்திலிருந்து மீட்படையும் வழி இல்லாதிருந்தது. இரட்சிப்பானது மனிதர்களுடைய பெலத்திற்கு அப்பாற்பட்டதாக இருந்தது. அதனால், எந்த நற்கிரியைகளினாலும் அதை மனித பெலத்தினால் செய்து முடிக்க கூடாதிருந்தது. அதனால், பிதாவாகிய தேவன்தாமே, தம்முடைய ஒரே பேறான குமாரனாகிய இயேசுவை இந்த உலகத்திற்கு அனுப்பினார். அவரோ, நாம் இரட்சிப்படையும்படிக்கு கிரியைகளை நடப்பித்தார். அதை பிதாவாகிய தேவனு டைய சித்தப்படி நடப்பித்து நிறைவேற்றி முடித்தார். அவராலே நமக்கு இரட்சிப்பு அடையும் வழி உண்டாயிற்று. அது தேவனுடைய கிருபை. அவ ருடைய கிருபையினாலே, ஆண்டவராகிய இயேசுவே பாவத்தின் பரிகாரி என்று விசுவாசித்து ஏற்றுக் கொண்டதினாலே நாம் இரட்சிப்பை அடைந்தோம். அப்டியானால், கிருபையினாலே இரட்சிப்பு உண்டானதானால், எப்படி அதை கிரியைகளினாலே நிறைவேற்ற முடியும்? ஆண்டவராகிய இயேசுதாமே, தம்தை விசுவாசிக்கின்ற யாவரும் தம்மைப்போல மாறும்படிக்கு, வழியை உண்டு பண்ணியிருக்கின்றார். அவர்தாமே பரலேகத்திற்கு எழுதருளுவதற்கு முன்னதாக, தம்முடைய சீஷர்களை நோக்கி: 'பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.' என்றார். ஆம், பிரியமான வர்களே, ஆண்டவராகிய இயேசுவினிடத்திலிருந்த அதே ஆவியானவரை, நம்மோடும் இருந்து சத்தியத்திலே நடத்தும், துணையாளராக பெற்றிருக்கின்றோம். தங்கள் கர்த்தர் மரித்தார் என்று அறிந்த சீஷர்கள், பயந்து, திகிலடைந்து ஒழித்துக் கொண்டார்கள். ஆனால், அவர், உயர்த்து, பரலோகத்திற்கு சென்று, பரிசுத்த ஆவியை அவர்களுக்கு அனுபிய பின்பு, உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ, மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும்,உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு அவர்களை பிரிக்க முடியவில்லை. பரிசுத்த ஆவியை பெற்ற யாவரும் இப்படியான பெலனை பெற்றிருக்கின்றார்கள்.

ஜெபம்:

என் தேவனாகிய கர்த்தாவே, நற்கிரியைகளை செய்ய, உம்மு டைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் என்னில் நீர் உண்டாக்குகிறவராயிருக்கின்றபடியால் உமக்கு நன்றி செலுத்துகின்றேன். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ரோமர் 8:26