புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 28, 2025)

எங்கே கனி கொடுப்பது?

எபேசியர் 5:11

கனியற்ற அந்தகாரக் கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடிந்து கொள்ளுங்கள்.


தேவனுடையவர்கள் என்று தங்களை கூறிக் கொள்கின்றவர்களை நாம் அவர்களுடைய பேச்சினாலயோ, வரங்களினாலேயோ மட்டும் அறிந்து கொள்ள முயற்சிக்காமல், அவர்களுடைய வாழ்க்கையின் நடைமுறை யிலே வெளிப்படும் கனிகளினாலே அவர்களை அறிந்து கொள்ள வேண்டும் என்று நம்முடைய ஆண்டவராகிய இயேசு நமக்கு கூறியி ருக்கின்ற ஆலோசனையை நாம் கேட்டு அதன்படி நடக்க வேண்டும். அப்படியாக, அவருடைய ஆலோச னையை கேட்களாமல், தங்கள் சொந்த உணர்வுகளின்படியும், அனுப வங்களின்படியும், தங்களை ஊழியர் கள் விசுவாசிகள் என்று அழைப்ப வர்களை நிதானித்தறிய முயற்சிக்கி ன்றவர்கள் பலவிதமான பாதமான பின்னடைவுகளை தங்கள் வாழ்விலே சந்திக்கின்றார்கள். அதனால், விசுவாச வாழ்க்கையைக் குறித்து கசப்படைந்து விடுகின்றார்கள். தேவ ஊழியர் அல்லது விசுவாசி என்று தன்னை அழைத்துக் கொள்பவர்களின் கனிகளை, ஞாயிற்று கிழமை இரண்டு மணித்தியாலங்களுக்குள் மட்டுப்படுத்தி விடக்கூடாது. கனியானது, அனுதின வாழ்விலே வெளிக்காட்டப்பட வேண்டும். அவரவர், வீட்டிலே, வேலை செய்யும் இடத்திலே, பாடசாலையிலே, கடைத் தெருக்கிளிலே, வசிக்கும் அயலிலே, உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் மத்தியிலே வெளிக்காட்டப்பட வேண்டும். வாரந்தோறும் ஞாயிறு ஆராதனைக்கு செல்வதும், கிழமை நாட்களிலே ஜெப கூட்டங்கள் மற்றும் வேதப்படிப்புக்களில் கலந்து கொள்ளுதல், உபவாச ஜெபங்களில் பங்கேற்றல், தசமபாகம் காணிக்கைகளை செலுத்துதல் போன்றவைகள் அவசியமானவைகள். ஆனால், அவைகளை செய்து கொண்டும், தங்கள் இருதயத்திலே பெருமை கொண்டிருந்தால், அப்படிப்பட்ட விசுவாசியின் வாழ்விலே தேவன் விரும்பும் கனிகள் இருக்காது. பிரியமான சகோதர சகோதரிகளே, கனி கொடுக்கும் வாழ்க்கை மிகவும் அவசியமானது. அதையே தேவனாகிய கர்த்தர் விரும்புகின்றார். 'ஆவியின் கனி, சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும். கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்துப்பாருங்கள். கனியற்ற அந்தகாரக் கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடிந்துகொள்ளுங்கள்.' கனிகொடுக்கும் வாழ்வது கடினமானது. முனித பெலத்தால் கூடாதது. ஆனால், நாம் செய்து முடிக்க முடியாதவைகளை செய்யும்படிக்கு தேவ கிருபையை அனுதினமும் பொழிகின்றார்.

ஜெபம்:

அன்பின் தேவனே, நான் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவனாக கவனமாய் நடந்துகொள்ளவும், காலத்தை அறிந்து அதைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளவும் கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ரோமர் 12:1-2