தியானம் (ஆடி 28, 2026)
இருயதத்திலுள்ளவைகள்
சங்கீதம் 19:14
என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக.
'என் கன்மலையும் என் மீட்பருமாகிய கர்த்தாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக.' என்று 19ம் சங்கீதத்திலே வாசிக்கின்றோம். ஒரு விசுவாசியின் வாயின் வார்த்தைகள் மாத்திரமல்ல, அவனுடைய இருதயத் திலுள்ள எண்ணங்களும் ஏக்கங்களும் தேவனுக்கு பிரியமுள்ளதாக இருக்க வேண்டும். தேவனுக்கு முன்பாக, ஒரு விசுவாசியின் வாயின் வார்த்தைகளும், இருதயத்தின் தியானங்களும் வேறுபட்டதாக காணப்படும் போது, அங்கே வெளிவேடம் காணப்படும். அக்காலத்திலே, ஆண்டவராகிய இயேசுதாமே, சில மதத்தலைவகளின் மாய்மாலமான வாழ்க்கை அறிந்து கொண்ட போது, அவர்களை நோக்கி: மாயக்காரரே, உங்களைக்குறித்து: இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது. மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று, ஏசாயா தீர்க்கதரிசி நன்றாய்ச் சொல்லியிருக்கிறான் என்றார். பிரியமானவர்களே, தேவனாகிய கர்த்தருக்கு மறைவானது ஒன்றுமில்லை. அவர் மனிதர்களுடைய இருதயங்களை ஆராய்ந்து அவர்களுடைய சிந்தையை அறிந்திருக்கின்றார். 'என் உட்காருதலையும் என் எழுந்திருக்குதலையும் நீர் அறிந்திருக்கிறீர்; என் நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிகிறீர். நான் நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னைச் சூழ்ந்திருக்கிறீர்; என் வழிகளெல்லாம் உம க்குத் தெரியும்.என் நாவில் சொல் பிறவாததற்குமுன்னே, இதோ, கர்த்தாவே, அதையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர்.' என்று 139ம் சங்கீதத்திலே சங்கீதக் காரன் பாடியிருக்கின்றார்கள். எனவே, விசுவாசிகளாகிய நாம், நம்முடைய நற்குணங்களை மற்றவர்களுக்கு வெளிக்காட்டும் போது, அவை இருதயத்திலே இருந்து உண்டாக வேண்டும். அவ்வண்ணமாக நம்முடைய சாந்த குணமும், வெளிவேடம் அற்றதாகவும், உண்மையுள்ளதாகவும் மற்றவர்கள் முன்னிலையிலே வெளிப்படுத்தப்பட வேண்டும். வேறுபட்ட எண்ணங்கள் இருதயத்தில் தோன்றும் போது, அவை உங்களை ஆண்டு கொள்ளாதபடிக்கு ஆவியானவரின் துணையை நாடுங்கள். மனம் மறுரூபமாகும்படி அவர் உங்களை வழிந டத்திச் செல்வார்.
ஜெபம்:
என் இருதயத்தின் நினைவுகளை அறிந்த தேவனே, வெளிவே டமான வாழ்க்கையை நான் வாழாதபடிக்கு, உமக்கும் மற்றவர்களுக்கும் முன்னிலையிலே உண்மையுள்ளனாக இருக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - 1 கொரி 6:1-4