புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 05, 2026)

முடிவு பரியந்தம் நிலைநிற்பவர்கள்

மத்தேயு 24:13

முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.


பரலோகத்திலிருந்து நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்து வெளிப்பட காத்திருக்கும் அருமையான விசுவாசிகளே, வெளிப்பட இருக்கும் இரட்சகர், ஒரு சமயம் தம்முடைய சீஷரை நோக்கி: 'என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன். ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆய த்தம்பண்ணப்போகிறேன். நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணினபின்பு, நான் இருக்கிற இட த்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னி டத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.' என்று வாக்குரைத்திருக்கின்றார். இவை கள் எப்பொழுது சம்பவிக்கும்? அவருடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? என்று அவருடைய சீஷர்கள் அவரிடம் கேட்டிருந்தார்கள். அதற்கு அவர் மறுமொழியாக முதலாவது கூறியதா வது: ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்;. ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள். யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்ச ரிக்கையாயிருங்கள்; இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே. ஆனா லும், முடிவு உடனே வராது. ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்ய த்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளை நோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும். இவைக ளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம். அப்பொழுது, உங்களை உபத் திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலைசெய்வார்கள்; என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள். அப்பொழுது, அநேகர் இடறலடைந்து, ஒருவரையொருவர் காட்டிக்கொ டுத்து, ஒருவரையொருவர் பகைப்பார்கள். அநேகங் கள்ளத்தீர்க்கதரி சிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள். அக்கிரமம் மிகுதியாவதி னால் அநேகருடைய அன்பு தணிந்துபோம். முடிவுபரியந்தம் நிலைநிற் பவனே இரட்சிக்கப்படுவான் என்றார். எனவே, உங்கள் வாழ்க்கை நீங்கள் எதிர்நோக்கும் சம்பவங்களையும், உலகத்திலே நடக்கும் மேற்கூறிய சம்பவங்களைக் குறித்து, ஆச்சரியப்பட்டு, சோர்ந்து போய், பின்வாங்கிப் போகாமலும் இருக்கும்படிக்கு பரிசுத்த வேதாகமத்தை வாசியுங்கள், தியானியுங்கள், அனுதினமும் ஊக்கத்தோடே ஜெபியு ங்கள், சத்திய ஆவியானவர்தாமே சத்திய வார்த்தையிலே உங்களை வழிடத்த இடங் கொடுங்கள்.

ஜெபம்:

அன்பின் தேவனே, அக்கிரமம் மிகுதியாவதினால் என்னுடைய அன்பு தணிந்துபோகாமல், என் ஆயுள்நாட்கள் முடியும்வரை உம்முடைய வார்த்தையிலே நான் நிலைநிற்கும்படிக்கு என்னை பெலப்படுத்தி நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - யோவான் 14:6