தியானம் (வைகாசி 15, 2026)
சத்தியம் உங்களை விடுதலையாக்கும்
கலாத்தியர் 3:3
ஆவியினாலே ஆரம்பம்பண்ணின நீங்கள் இப்பொழுது மாம்சத்தினாலே முடிவு பெறப்போகிறீர்களோ?
ஒரு விசுவாசியின் தனிப்பட்ட, குடும்ப, சபை வாழ்க்கையிலே ஏற்படக்கூடிய மனக்குழப்பங்கள், பின்மாற்றங்கள் போன்றவற்றை பிலிப்பியர் நிரூபத்தை மையமாக வைத்து தியானித்து வருகின்றோம். இலக்கு ஒன்றே! முதன்மையானது தேவ ராஜ்யம். அந்த ராஜ்யத்திலே நாம் நித்திய ஜீவனை அடைந்து கொள்ள வேண்டும். ஆதியிலே ஆதாம் ஏவாள் பாவம் செய்து, தேவ மகிமையை இழந்து போனார்கள். இழந்து போன தேவ மகிமையை மனுஷனுடைய எந்த கிரியைகளினாலும் மீளப்பெற முடியாது. அப்படியிருந்தும், மனிதர்கள் பற்பல வழிகளை தங்களுக்கென்று உருவா க்கி, பாவ நிவர்த்தி செய்யும்படி மதக்கிரியைகளையும், பாரம்பரியங்களையும் செய்து வந்தார்கள். அதனால், மனித குலத்திற்கு மீட்பு இல்லை. வரவிருக்கும் மீட்பையும், அந்த மீட்பின் வழியாக உண்டாகும் நித்திய ஜீவனையும் வெளிப்படுத்தும்படி, தேவன்தாமே தமக்கென்று ஒரு ஜனங்கூட்டத்தை பிரித்தெடுத்து, இனி வரவிருக்கும் மேன்மையான காரியங்கயங்களின் நிழலாக அவர்கள் மத்தியிலே கிரியைகளை நடத்தி னார். பிதாவாகிய தேவன் முன்னறிவித்தப நிழலாக இருந்த காரியங்கள் நிஜமாகியது. கிறிஸ்து இயேசுவினாலே, மனித குலத்திற்கு இரட் சிப்பு உண்டானது. ஆனால், சிலரோ, நிஜமாய் இருக்கும் ஆண்டவர் இயேசுவின் வழியாக இரட்சிப்பை இலவசமாக பெற்றுக் கொண்ட பின் பும், நிழலாக இருந்த நியாப்பிரகாரியங்களை பற்றிக் கொண்டு தங்கள் சரீரங்களை ஒடுக்கி, மதக்கிரியைகளுக்கு மறும்படியும் தங்களை ஒப்புக் கொடுத்தார்கள். பிலிப்பிய சபையிலே மட்டுமல்ல, குறிப்பாக அன்றிருந்த கலாத்திய சபையிலும் இத்தகைய வஞ்சிக்கிறவர்கள்; சிலர் இருந்தார்கள். அதனால், தேவ ஊழியராகிய பவுல் கலாத்திய சபையோரை நோக்கி: 'புத்தியில்லாத கலாத்தியரே, நீங்கள் சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமற்போகத்தக்கதாக உங்களை மயக்கினவன் யார்? இயேசுகிறிஸ்து சிலுவையிலறையப்பட்டவராக உங்கள் கண்களுக்குமுன் பிரத்தியட்சமாய் உங்களுக்குள்ளே வெளிப்படுத்தப்பட்டிருந்தாரே. ஒன்றைமாத்திரம் உங்களிடத்தில் அறிய விரும்புகிறேன்; நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலேயோ, விசுவாசக் கேள்வியினாலேயோ, எதினாலே ஆவியைப் பெற்றீர்கள்? ஆவியினாலே ஆரம்பம்பண்ணின நீங்கள் இப்பொ ழுது மாம்சத்தினாலே முடிவுபெறப்போகிறீர்களோ? நீங்கள் இத்தனை புத்தியீனரா?' எனவே மறுபடியும் விட்டு வந்த சடங்குகளுக்கு இடம் கொடாமல், சத்திய ஆவியானவருக்கு இடங் கொடுங்கள்.
ஜெபம்:
பரலோக தேவனே, மதச் சடங்காச்சாரங்களுக்கு நான் மறுபடியும் இடம் கொடாமல், விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறபடி, விசுவாசத்திலே உறுதியாய் நிலைத்திருக்க கிருபை செய்யும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - பிலிப்பியர் 3:1-3