தியானம் (பங்குனி 02, 2026)
சாட்சியின் நற்கிரியைகள் எங்கே?
பிலிப்பியர் 2:2
நீங்கள் ஏக சிந்தையும் ஏக அன்புமுள்ளவர்களாயிருந்து, இசைந்த ஆத்துமாக்களாய் ஒன்றையே சிந்தித்து, என் சந்தோ ஷத்தை நிறைவாக்குங்கள்.
விசுவாச வாழ்க்கையிலே இதுவரைக்கு எத்தனை போராட்டங்களை சந் தித்திருக்கின்றீர்கள்? அவைகள் யாரால் உண்டானது? அவற்றுள் சில உங்களால் உண்டாகவில்லையா? சில வேளைகளிலே நான் தண்ட னைக்கு பாத்திரன் என்று உங் கள் மனசாட்சி கூறவில்லையா? என் தவறான தீர்மாகங்களினா லேயே தோல்விகள் உண்டாயி ருந்தது என்று அறிந்த நாட்கள் உண்டல்லவோ? சற்று சிந்தித்துப் பாருங்கள்! அப்படிப்பட்; சூழ்நி லைகள் மத்தியிலே, எப்படி நம க்கு ஆறுதல் உண்டாகின்றது? எந்த அன்பினாலே நமக்கு தேறுதல் கிடைகின்றது? எந்த ஆவியினாலே ஐக்கியம் உண்டாகின்றது? தண்டனைக்கு தப்பும்படி யாரால் உருக் கமான பட்சமும் இரக்கமும் உண்டாகுகின்றது? ஆதரவற்ற நாட்களிலே கிறிஸ்துவுக்குள் ஆறுதல் உண்டாகவில்லையா? தேவ அன்பு வெளிப் படவில்லையா? ஆவியானவர் வழியாக ஐக்கியம் கட்டப்படவில்லை யா? தேவன் தாமே உங்களுக்கு மனதுருகி, பட்சத்தோடு தன் இரக்கங் களை உங்களுக்கு காட்டினதுண்டோ? தரித்திருந்து சிந்தியுங்கள்! கடந்து வந்த பாதையை சற்று திரும்பிப் பாருங்கள்! இப்படியாக உங்களுக்கு சம்பவித்ததுண்டானால், இவைகள் உங்கள் அனுபவ சாட்சியானதுண்டானதானால், அவற்றை வெளிக்காட்டுங்கள். உங்கள் பேச்சிலும், வாயின் அறிக்கையிலும், மற்றவர்களுக்கு கூறும் உபதே சத்திலும் மாத்திரமல்ல, செய்கையிலே, வாழ்க்கையின் நடைமுறை யிலே, விசுவாசத்தின் கிரியைகளிலே காண்பிக்கப்பட வேண்டும். மேலான தெய்வீன ஐக்கியத்தினால் உண்டானவைகளை, சபை ஐக் கியத்திலே காண்பியுங்கள். பிதாவாகிய தேவனுடைய அநாதி தீர்மானம் நிறைவேற வேண்டும். ஒருவனும் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடைய வேண்டும். எனவே, கிருபையும், இரக்கமும் எனக்கு மட்டும் தான் என்று வாழாமல், சபையிலே, சக விசுவாசிகள் மத்தியிலே உங்க ளுக்கு உண்டான மேன்மையான ஐக்கியத்தை நற்கிரியைகள் வழியாக காண்பியுங்கள். 'ஆதலால் கிறிஸ்துவுக்குள் யாதொரு ஆறுதலும், அன் பினாலே யாதொரு தேறுதலும், ஆவியின் யாதொரு ஐக்கியமும், யாதொரு உருக்கமான பட்சமும் இரக்கங்களும் உண்டானால், நீங்கள் ஏக சிந்தையும் ஏக அன்புமுள்ளவர்களாயிருந்து, இசைந்த ஆத்துமாக்க ளாய் ஒன்றையே சிந்தித்து, என் சந்தோஷத்தை நிறைவாக்குங்கள்.'
ஜெபம்:
சகல விதமான ஆறுதலின் தேவனே, நான் உம்மிடம் பெற்றுக் கொண்ட உருக்கமான இரக்கங்களை என் சாட்சி வழியாக மற்றவர்களுக்கு வெளிப்பட்டும் எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - 2 கொரி 1:3-5