தியானம் (தை 06, 2026)
'இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரன்'
எரேமியா 31:3
ஆம் அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்; ஆதலால் காருணியத்தால் உன்னை இழுத்துக்கொள்ளுகிறேன்.
ஆண்டவர் இயேசுவின் சீஷனாகிய பவுல், பொதுவாக நிருபங்களின் முகவுரையிலே, தேவனுடைய சித்தத்தினாலே, இயேசு கிறிஸ்துவின் ஊழியக்காரனும், அப்போஸ்தலனாகும்படி அழைக்கப்பட்டவன் என் பதை குறிப்பிடுவதை நாம் காண்கின்றோம். அதன் கருப்பொருள் என்ன? அவர் பெற்றுக் கொண்ட அழைப்பு மனுஷராலுமல்ல, மனுஷன் மூலமாயுமல்ல, இயேசுகிறிஸ்துவினாலும், அவரை மரித்தோ ரிலிருந்தெழுப்பின பிதாவாகிய தேவனாலும், உண்டாயிருந் தது. இந்த அழைப்பானது தேவனுடைய நிர்பந்ததினால் உண் டானது அல்ல. மாறாக, மத வைராக்கியத்தினால் அடிமையாக்கப்பட்டிருந்த பவுல், ஆண்டவராகிய இயேசுவின் சீஷரைப் பயமு றுத்திக் கொலைசெய்யும்படி சீறிப் அக்காலத்திலிருந்த மதத் தலைகளின் அனுமதியோடு, விசுவாசமார்க்தத்தாரை சிறைப்பிடிக்கும்படி, தகுஸ்கு பட்டயத்திற்கு செல்லும் வழியிலே, ஆண்டவர் இயேசுவே தேவ குமாரனாகிய வாக்களிக்கப்பட்ட மீட்பர் என்பதை அவன் அறிந்து கொண்ட நாழிகையிலே, 'ஆண்டவரே, நான் என்ன செய்யச் சித்தமாயிருக்கிறீர் என்று தன்னை கிறிஸ்து இயேசுவுக்கு என்றென்றையும் அடி மையாக இருக்கும்படி மனப்பூர்வமாக தன்னை ஒப்புக் கொடுத்தான். ஆதலால் எந்த தயக்கமும் இன்றி 'இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரன்' என்று தன்னை பிலிப்பி பட்டணத்திலுள்ள விசுவாசிகளுக்கு அறிமுகப்படுத்துகின்றார். இந்த நிரூபத்தை இந்த வருடத்திலே நாம் தொடர்ந்து தியானிக்கும் போது, நம்முடைய வாழ்விலும், குருட்டாட்டமுள்ள மதவைராக்கியமும், கருத்தற்ற பிடிவாதங்களும், எப்படியாக தேவ வைராக்கியமாக மாற முடியும் என்பதை, ஆண்டவர் இயேசுவின் ஊழியராகிய பவுலின் வாழ்க்கையிலிருந்து நாம்; கற்றுக் கொள்ளலாம். நம்முடைய அழைப்பும், மனுஷராலுமல்ல, மனுஷன் மூலமாயுமல்ல, பிதாவாகிய தேவனின் அநாதி தீர்மானத்தின்படி ஆண்டவர் இயேசு வழியாக உண்டாயிருக்கின்றது. எனவே நான் ஆண்டவர் இயேசுவின் ஊழியக்காரன் என்று தயங்காமல் அறிக்கை செய்வதற்கு நான் வெட் கப்படுகின்றேனா? என்னுடைய அழைப்பு தேவனால் உண்டாயிருந்தால் இன்று நான் யாரை பிரியப்படுத்தப் பார்கின்றேன்? என் சுயத்தையா? மற்றய மனுஷரையா? அல்லது நான் நித்திய ஜீவன் அடைய வேண்டும் என்று விலை மதிக்க முடியாத தன்னுடைய தூய இரத்தத்தினால என்னை கிரயத்திற்கு கொண்டு ஆண்டவர் இயேசுவையா?
ஜெபம்:
நித்திய பிதாவாகிய தேவனே, கிறிஸ்துவின் சுவிசேஷத்தை க்குறித்து நான் வெட்கப்படேன்; என்னும் வார்த்தை என் சொல்லிலும் செயலிலும் என் வாழ்வில் நிலைவரப்பட்டிருக்க எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - யோவான் 15:8