தியானம் (சித்திரை 20, 2026)
உத்தம ஊழியம் செய்பவர்கள்
பிலிப்பியர் 2:25
என் குறைச்சலுக்கு உதவி செய்தவனுமான எப்பாப்பிரோதீத்துவை உங்களிடத்தில் அனுப்பவேண்டுமென்று எண்ணினேன்.
அக்காலத்திலே, சுவிசேஷத்திற்காக உண்மையும் உத்தமமுமாக உழைத்த ஊழியர்களின் ஐக்கியத்தை குறித்து இன்று தியானிப்போம். தேவ ஊழியராகிய பவுல், பிலிப்பியருக்கு எழுதிய நிரூபத்தின் இரண்டாம் அதிகாரத்தின் கடைசிப் பகுதியிலே, எப்பாப்பிரோதீத்து என்னும் ஊழிய ரைக்கு குறித்து கூறும் போது: 'மேலும், என் சகோதரனும், உடன்வே லையாளும், உடன்சேவகனும், உங் கள் ஸ்தானாபதியும், என் குறைச்ச லுக்கு உதவிசெய்தவனுமான எப்பாப்பிரோதீத்துவை உங்களிடத்தில் அனுப்பவேண்டுமென்று எண்ணினேன். அவன் உங்கள் எல்லார்மேலும் வாஞ்சையுள்ளவனும், தான் வியாதிப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டதினாலே, மிகவும் வியாகுலப்படுகிறவனுமாயிருந்தான். அவன் வியாதிப்பட்டு மரணத்திற்குச் சமீபமாயிருந்தது மெய்தான். ஆகிலும், தேவன் அவனுக்கு இரங்கினார்; அவனுக்கு இரங்கினதுமல்லாமல், துக்கத்தின்மேல் துக்கம் எனக்கு உண்டாகாதபடிக்கு, எனக்கும் இரங்கினார். எப்பாப்பிரோதீத்து, சகோதர அன் புள்ளவனும், சுவிசேஷ பணியிலே உடன் வேலையாளும், சேவை மனப்பான்மையுடைவனும், சபையோரை விசாரிக்கின்றவனும், தனக்கேற்பட்ட வியாதியினால் மற்றவர்கள் துக்கமடைய கூடாது என்ற மனப்பான்மையுடையவனும், மற்றவர்களுடைய குறைச்சலிலே உதவி செய்கின்றவனுமாக இருந்தான். அந்நாட்களிலே இருந்த சூழ்நிலையின்படி, இவர்கள் செல்வந்தர்கள் அல்ல. இவர்கள் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து தேவ ஊழியத்தை நடப்பித்து வந்தவர்கள். ஆனாலும், மற்றவர்களுடைய குறைவுகளிலே, நிறைவாக்க வேண்டும் என்ற மனதுடையவர்களாக இருந்தார்கள். அன்றிருந்த மதத்தலைவர்களால் இவர்கள் புறக்கணிக்கப்பட்டிருந்தார்கள், சுவிசேஷத்தின் நிமித்தம் சிலர் ரோம அதிகாரிகளால் சிறைப்பிடிக்கப்பட்டிருந்தார்கள். சபையோருக்கு சேவை செய்யவதற்குரிய சாதகமான சூழ்நிலைகள் எதுவும் அவர்களுக்கு இருந்ததில்லை. மீட்பின் நற்செய்தியை அறியாதவர்களுக்கு அந்த நற்செய்தியை அறிவித்து, ஜனக்கூட்டங்களை பெருக்க வேண்டும் என்ற எண்ணமுடையவர்களாக அல்ல, நற்செய்தியை அறிந்து, சபையிலே இருக்கின்றவர்கள், பின்வாங்கிப் போகக்கூடாது, அவர்கள் ஐக்கியமாக இருக்க வேண்டும், கிறிஸ்துவின் சிந்தையை தரித்தவர்களாக இருக்க வேண்டும். உண்மையும் உத்தமமுமாக சேவை செய்ய வேண்டும் என்ற மனதுடையவர்களாக அவர்களுக்கு ஆதரவாக இருந்தது வந்தார்கள்.
ஜெபம்:
அன்பும் இரக்கமுள்ள பரலோக பிதாவே, எனக்கு முன்பாக இருக்கும் மேகம் போன்ற நல்ல சாட்சிகளின் வாழ்க்கைப் பார்த்து, அந்த வழியிலே நடந்து செல்ல, எனக்கு பிரகாசமுள்ள மனக்கண்களை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - பிலிப்பியர் 2:1-2