தியானம் (தை 22, 2026)
குறைகள் நிறைவாகமாற வேண்டும்
பிலிப்பியர் 1:6
நான் உங்களை நினைக்கிறபொழுதெல்லாம் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.
ஒரு குக்கிராமத்திற்கு சென்ற சமூகத் தொணடர் ஒருவர், அந்த கிராம த்திலே வாழும் பிள்ளைகள் அடிப்படிக் கல்வி, சுகாதாரம் போன்றவற்றை அறியாதிருந்ததால், அந்த கிராமத்திலே, ஒரு சிறி பாடசாலையை ஆரம்பித்தார். அது ஒரு அற்பமான ஆரம்பமாக இருந்தது. சில ஆண்டு கள், அந்த கிராமத்திலே அவர் பணிபுரிந்த பின்பு, பாடசாலையை மேம் படுத்த பலர் முன்வந்தார்கள். சில ஆசிரியர்கள் சேவையாற்றும்படி முன்வந்தார்கள். பாடசாலை விருத்தியடைந்து செல்வதை கண்டு அந்த தொண்டர் மனமகிழ்ச்சியடைந்தார். அந்த சேவையை அவர்களிடம் நல் மனதோடு கையளித்துவிட்டு, அடுத்த கிராமத்தை நோக்கி பயணம் செய்தார். பல ஆண்டுகளுக்கு பின், பெரிதாக வளர்ச்சியடைந்த அந்த பாசாலையிலே, மனவேதனை தரக்கூடிய காரியங்களை நடைபெறுவதை கடிதம் வாயிலாக அறிந்து கொண்டார். அதனால், அவர் அந்த பாடசாலையை தன் வாயினாலே சபிக்காமல், அந்த பாடசாலை ஆரம் பித்த நோக்கம் நிறைவேற வேண்டும் என்று தனக்குள் நிச்சயித்துக் கொண்டு, குறைகள் நிறைவாக வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆலோசனை கூறினார். பாடசாலையை இயக்குகின்றவர்கள், ஒழுங்காக அதை நடத்த வேண்டும் என்று தேவனாகிய கர்த்தரிடத்திலே அனுதி னமும் ஆர்வத்தோடு வேண்டுதல் செய்தார். அவ்வண்ணமாகவே, அப் போஸ்தலராகிய பவுல், பிலிப்பி பட்டணத்திலே தன் வழியாக தேவன் ஆரம்பித்த ஊழியம் வளர்ந்திருப்பதை அறிந்தார். ஆனாலும், அங்கே பெருமையும், பிரிவினைகளும் ஏற்பட்டிருப்பதையும், விசுவாசிகள் நோக்கமிழந்து போகின்றார்கள் என்று அறிந்து போது, அவர்களுடைய அழைப்பின் மேன்மைனயை நிரூபத்தின் வாயிலாக விளக்கிக் கூறினார். அது மாத்திரமல்ல, அவர்கள் உணர்வடைய வேண்டும். நித்திய ஜீவனை பெற்றுக் கொள்ள வேண்டும் என்தற்காக, அவர் பண்ணுகின்ற ஒவ் வொரு விண்ணப்பத்திலும் அவர்களுக்காக சந்தோஷத்தோடே விண்ணப்பம்பண்ணி, அவர்களை நினைக்கிறபொழுதெல்லாம் என் தேவனை ஸ்தோத்தரிக்கின்றேன் என்று கூறினார். அதுபோலவே, நாமும் குறை களை காணும்போது, அதன் ஆராய்வதில் நின்றுவிடாமல், அந்த குறைகள் யாவும் கிறிஸ்துவுக்குள் நிறைவாக வேண்டும் என்ற நல்மனத்துடன், ஊக்கமாக விண்ணப்பம் செய்ய வேண்டும். மற்றவர்களை நினைக்கும் போது உங்கள் மனதிலே தோன்றும் நினைவுகள் என்ன?
ஜெபம்:
உன்னதமான தேவனே, சுவிசேஷத்தைக் குறித்த வாஞ்சையும், குறைவுகளை காணும்போது, அவைகள் நிறைவாக வேண்டும் என்ன உணர்வுள்ள மனத்தையும் எனக்கு தந்து என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - சங்கீதம் 103:10