தியானம் (ஆடி 01, 2026)
வாழ்வின் கருப்பொருள்
மாற்கு 8:36
மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?
இந்த வருட ஆரம்பத்திலிருந்து, தேவ ஊழியக்காரனாகிய பவுல், பிலிப்பியருக்கு எழுதிய நிரூபத்தை மையமாக வைத்து, கருப்பொருளை தியானித்து வருகின்றோம். கடந்து சில நாட்களாக, பிலிப்பியர் 3ம் அதிகாரத்தின் கடைசி இரண்டு வசனங்களை மையமாக வைத்து தியானித்து வருகின்றோம். அந்த வசனங்களின் கருப்பொருள்தான் நம்முடைய வாழ்வின் இலக்கு! அதவாது, நம்முடைய குடியிருப்பு பரலோக்தில் இருக்கின்றது. நம் பாட்டிற்கு அங்கே செல்ல முடி யாது, எனவே, அங்கு நம்மை கூட்டி செல்லும்படியாக, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட் சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். வாழ்வின் கருப்பொருளை குறித்து அதிகமாக பேசினால், இது அதே பிரசங்கம், கீறல் விழுந்து இசைத்தட்டானது, கீறல் விழுந்த இடத்தை கடந்து செல்லாமல், அந்த இடத்திலே தரித்திருந்து, அந்த இடத்திலுள்ள பாடலின் ஒருவரியையே திரும்ப திரும்ப இசைப்பது போல இருக்கின்றது. ஒவ்வொரு கிழமை யும் பழைய கதைதான், செத்த பாம்பை அடிக்கின்றவர்கள் போல பேசு கின்றார்கள் என்று விசுவாச மார்க்கத்தார் சொல்வதை கேட்டிருப்பீர்கள். ஒரு மாணவன், பாடசாலைக்கு சென்று, அநேக வருடங்களாக கல்வி கற்று, இறுதிப் பரீட்சையில் சித்தியடையாமல் போனால் அத்தனை வருடங்களாக அவன்பட்ட பிரயாசத்தின் பலன் என்ன? செழிப்பாக, வளர்ந்து, அழகாக காட்சியளிக்கும் திராட்சை செடியிலே கனிகள் இல்லாதி ருந்தால், அந்த திராட்சைசெடியின் செழிப்பிலும், அழகிலும் பலன் என்ன? தேவன் என்னை ஆசீர்பதித்திருக்கின்றார் என்று ஐசுவரியத்தோடு வாழ் ந்து, குடும்ப வாழ்வு கெட்டுப்போனால் அதனால் இலாபம் என்ன? அது போலவே, பல நன்மையான செயற்பாடுகளை செய்து, தானதர்மங் களை நடப்பித்து, அநேக நாடுகளுக்கு கடந்து சென்று சுவிசேஷம் அறி வித்து, அநேகரை சபைக்கு அழைத்து வந்தும், கனியற்ற வாழ்க்கை வாழ்ந்தால் அதனால் பலன் என்ன? இறுதி நாளிலே, நல்ல கனி கொடாத மரங்கள் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும். அதுபோ வே, ஒரு விசுவாசியானவன், வாழ்நாள் முழுவதும் பிரயாசப்பட்டும், நிரந்தர குடியிருருப்பாகிய பரலோகத்தை அடையாமல் போனால், அதனால் அவனுக்கு பலன் என்ன? எனவே, நம்முடைய குடியிருப்பை குறித்து திரும்ப திரும்ப ஞாபகப்படுத்தி, அதை நோக்கியே முன்னேறுங்கள்.
ஜெபம்:
பரலோக தேவனே, கனியற்ற அந்தகாரக் கிரியைகளுக்கு உடன் படாமல், அவைகளைக் கடிந்துகொண்டு, உமக்கு பிரியமானது இன்ன தென்று நான் சோதித்தறிய ஞானமுள்ள இருயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - மத்தேயு 6:33