தியானம் (சித்திரை 28, 2025)
நன்மைகளை பின்போடாதே
சங்கீதம் 139:2
என் நினைவுகளைத் தூரத் திலிருந்து அறிகிறீர்.
கடந்த நாளிலே நாம் தியானித்தபடி, ஒருவன் தனக்கு நன்மையுண்டா கும் என்று தன் இருதயத்திலே நிச்சயித்தவனாக, உன்னிடம் உதவியை கேட்கும் போது, அந்த உதவியினால், அவனுக்கு பொல்லாப்பு அல்லது தீமை உண்டாகும் என்று நீ நிச்சயமாக அறிந்திருந்தால், அதைக் குறித்து உண்மையுள்ள இருதயத்தோடு நீ அதை அவனுக்கு எடுத்துக் கூற முடியும். ஆனால், எந்த அள வினால் நீ மற்றவனை அளக்கின்றாய் என்பதைக் குறித்து தேவன் முன்னிலையிலே எச்சரிக்கையாய் இருப் பது உனக்கு நல்லது. உனக்கு பின்வரும் உன்னுடைய சந்ததியின் நிலை யை இன்னது என்று உனக்கு தெரியாது. எந்த ஒரு விசுவாசியும் தன்மை ஞானி என்றும், தான் ஒருவனே நாணயமுள்ளவனென்றும், தனக்கே எல்லாம் தெரியும் என்று எண்ணிவிடக் கூடாது. அந்த எண்ணக் கருவானது, அதை கொண்டுள்ளவனுடைய இருதயத்தை கடினப்படுத்தி, நாள டைவிலே இரக்கமற்றதாக மாற்றிவிடும். நாம் தேவன் முன்னிலையில் மனத்தாழ்மையோடு உண்மையுள்ளவர்களாக நடந்து கொண்டால், அவர்தாமே நாம் செய்ய வேண்டியவைகளை நமக்கு போதித்து நடத்திச் செல்வார். அவருடைய போதனைகளை தமது வார்த்தை வழியாக நமக்கு வெளிப்படுத்தியிருக்கின்றார். 'நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதை செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே.உன்னிடத்தில் பொருள் இருக்கையில் உன் அயலானை நோக்கி: நீ போய்த் திரும்பவா, நாளைக்குத் தருவேன் என்று சொல்லாதே. அச்சமின்றி உன்னிடத்தில் வாசம்பண்ணுகிற உன் அயலானுக்கு விரோ தமாக தீங்கு நினையாதே.' (நீதிமொழிகள் 3:27-29). கருப்பொருளாவது, நீ மற்றவனுக்கு இரக்கம் காண்பிக்கும்படி உன்னிடத்தில் நிர்வாகம் இருக்கையில், நீ இரக்கமற்றவனாக மாறிவிடாதே. நன்மை செய்ய தயக்கம் காட்டி, கால தாமதம் செய்யாதே. 'அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.' (2 கொரி 9:7). பிரியமான சகோதர சகோதரிகளே, நம்முடைய இருதயங்களை ஆராய்ந்தறிகின்ற தேவனாகிய கர்த்தர்தாமே நம்முடைய சிந்தை இன்னது என்று அறிந்திருக்கின்றார். அவருக்கு மறைவா னது ஒன்றுமில்லை. எனவே, அவர் முன்னிலையில் நாம் உண்மையு ள்ளவர்களாக இருந்து, அவரையே அசையாத நம்பிக்கையாக கொண்டிருந்தால், அவர் நம்மை தீமைக்கு விளக்கிக் காப்பார்.
ஜெபம்:
இரக்கங்களின் பிதாவாகிய தேவனே, நன்தை செய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதை செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இருக்காதபடிக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - ரோமர் 8:27