புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 20, 2025)

கனி கொடுக்கும் ஏற்ற வேளை

எரேமியா 17:8

மழைத்தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித்தப்பாமல் கனிகொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பான்.


ஒரு கிராமத்திலே வாழ்ந்து வந்த விவாசாயினொருவன், தன் தோட்ட த்திலே, தரமான திராட்சைசெடியை நட்டு, அதை நன்றாக பராமரித்து வந்தான். அது கனிகொடுக்கும் நாட்கள் வந்தபோது, அதில் கனியை காணவில்லை. ஒருவேளை அடுத்த பருவத்திலே கனி கொடுக்கும் என்ற நம்பிக்கையுடன், அதற்கு இன் னும் எருபோட்டு, தொடர்ந்தும் பரா மரித்து வந்தான். அடுத்து பருவத் திலே அது கனி கொடுத்தது. ஆனால், கனியை ருசிக்கும் நாட்கள் வந்தபோது, அதன் கனிகள் மிகவும் புள்ளிப்புள்ளதாக இருந்தது. கிறி ஸ்துவுக்குள் பிரியமான சகோதர சகோதரிகளே, ஏற்ற காலத்தில் கனி கொடுப்து என்பதன் கருப் பொருள் என்ன? திராட்சை செடியை பற்றிய கேள்வியல்ல, இது தேவனுடைய பிள்ளைகளைக் குறித்த கேள்வி! ஒரு வாலிபனானவன், சிறு வயதிலிருந்து தவறாமல் ஆலயத்திற்கு சென்று, வேதபாடங்களை கற்று, உதவி ஊழியங்களை செய்து வந்தான். தேவ னைப் பற்றி அறியும் அறிவுக்கு வந்தபோது, விசுவசித்து ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டான். அவன் இருபது வயதையடையும் போது, ஒரு நாள் மாலை, அவனுடைய நண்பர்களில் சிலர், அவனை இரவு களி யாட்ட விடுதிக்கு வரும்படி அழைத்தார்கள். இவ்வளவுகாலமும் தவறா மல் ஆலயத்திற்கு சென்று வந்தாயே, ஒருநாள் இன்று எங்களுக்காக எங்களுடன் வந்து, உல்லாசமாக இருந்தால் என்ன என்று வருந்திக் கேட்டுக் கொண்டார்கள். அந்த வாலிபனோ அவர்களை நோக்கி: இரு பது வருடங்களாக வளர்க்கப்பட்ட மரம், இன்று இப்போது கனி கொடுக்கின்ற வேளை என்று அவர்களுக்கு கூறிவிட்டு, தன் வீட்டிற்கு சென்று விட்டான். அந்த வாலிபனின் வாழ்க்கையைப் பாருங்கள்! வாழ்நாட் களிலே ஒருநாள், இந்தநாள் மட்டும் என்று இன்று பலர் கனிகொடுக்க வேண்டிய வேளைகளில் கனி கொடுக்காமலும், வேறு சிலர், மிகவும் புளிப்பான கனிகள், அதாவது, தங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி, வேத வார்த்தைகளை சுட்டிக்காட்டி, தங்கள் தவறான வழிகளை நியாய ப்படுத்த முயற்சிக்கின்றார்கள். நீங்களோ, கனி கொடுக்கும் வேளை களை தவறவிட்டுவிடாதிருங்கள். தனிப்பட்ட வாழ்வில், கும்பத்தில், உறவுகள் மத்தியில், பாடசாலையில், நண்பர்கள் மத்தியில், வேலை செய்யும் இடங்களில், சபையில் கனி கொடுக்கும் வேளை இன்னதெ ன்பதை அறிந்து சுவையான கனிகளை கொடுங்கள்.

ஜெபம்:

அன்பின் பிதாவே, திராட்சைnடியாகிய கிறிஸ்து இயேசுவிலே நிலைத்திருக்கும் கிளையாக, நல்ல கனிகளை, ஏற்ற வேiயிலே கொடுக்கும்படிக்கு, உம்முடைய வார்த்தையின் வெளிசத்திலே என்னை வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எரேமியா 2:21