புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 13, 2025)

தேவ கிருபை என்றுமுள்ளது

புலம்பல் 3:22

நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை.


'தேவனுடைய உறுதியான அஸ்திபாரம் நிலைத்திருக்கிறது.' அந்த அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களும் எல்லா சூழ்நிலையிலும் அசையாமல் உறுதியாய் நிலைத்திருக்கின்றார்கள். உறுதியாய் இருப்ப வர்கள் வார்த்தையிலே நிலைத்திருக்கின்றார்கள். வார்த்தையின் நிமித்தம், தங்கள் வாழ்விலே இந்த உலகத்தினால் உண்டாகும் உபத்திரவ ங்களினால் இவர்கள் தளர்ந்து போவதில்லை. ஒரே ஆவியிலே உறுதியாய் நின்று, ஒரே ஆத்துமாவினாலே சுவி சேஷத்தின் விசுவாசத்திற்காகக் கூடப்போராடி, எதிர்க்கிறவர்களால் ஒன்றிலும் மருளாதிருக்கிறீர்கள். எவ்விதத்திலும் இவர்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குப் பாத்திரராக நடந்துகொள்கின்றார்கள். இப்படிப்பட்டவர்கள் தங்கள் வாழ்வில் தொடர்சியாக வார்த்தையிலே நிலைத்திருப்பதால், தங்கள் விருப்பப்படி வாழ்க்கையை வாழாமல், கஷ;டங்கள், நஷ;டங்கள் வந் தாலும் தேவனுக்கு பிரியமானவைகளை நடப்பிக்கின்றார்கள். இவர்கள் நன்மை செய்து பாடநுபவிக்க ஆயத்தமாயிருப்பவர்கள். தங்கள் கல்வி, வேலை, வியாபாரம், உறவு, நட்பு, திருமணம் போன்ற எல்லா விவகார ங்களிலும் தேவனை மையமாக வைத்து, தேவனுடைய ராஜ்யத்தை தங்கள் வாழ்விலே முதன்மைப் படுத்துகின்றார்கள். ஆனால், சில விசுவாசிகள் ஞானஸ்நானம் எடுத்த பின்னர், தாங்கள் கிறிஸ்துவினுடையவர்கள் என்று கூறிக் கொண்டு, அவருடைய வார்த்தையின்படி தங்கள் கல்வி, வேலை, வியாபாரம், உறவு, நட்பு, திருமணம் போன்ற எல்லா விவ காரங்களை நடப்பிக்காமல், தங்கள் இஷ்டப்படி செய்து கொள்வதால், வாழ்க்கையிலே புயல் மோதும் போது, பாதகமான பின்விளைவுகளை சந்திக்கின்றார்கள். அந்த வேளையிலே, எங்களுக்கு ஏன் இப்படி நடந் தது என்று கேட்டுக் கொள்வார்கள். அவர்கள் மனந்திரும்பி, வார்த்ஐ தயிலே நிலைத்திருக்க ஒப்புக் கொடுக்கும் பட்சத்திலே, ஆண்டவராகிய இயேசுதாமே அவர்களை மீண்டும் கட்டுகின்றார். இரக்கத்தில் ஐசவ ரியமுள்ள தேவன் குறை குற்றங்களை மன்னித்து, பெலவீன வேளைக ளிலே புதுக் கிருபையை பொழிந்து அவர்களை நடத்துகின்றார். ஆனால், வார்த்தையிலே உறுதியாய் நிலைத்திருக்காமல், குந்திக் குந்தி நடக்கி ன்றவர்கள், பல நோவுகளை தங்களுக்கு தாங்கனே ஏற்படுத்திக் கொள் கின்றார்கள். நீங்களோ அப்படியிராமல், உறுதியாய் வார்த்தையிலே நிலைத்திருங்கள். இனி வரும் கனமகிமை பெரியது.

ஜெபம்:

கிருபை நிறைந்த தேவனே, நீர் கூறிய ஒவ்வொரு வார்த்தைக ளையும் நான் தியானித்து, அதன்படி வாழும்படிக்கு எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து, உம்முடைய கிருபையினாலே நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 1:29-30