தியானம் (ஆனி 24, 2026)
வாடகை வீடு
சங்கீதம் 23:6
என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்.
ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த குடியானவன், அதிகமாக பிரயாசப்பட்டு உழைத்து வந்தான். தற்போது வாடகை வீட்டிலே வாழ்ந்து வந்த அவ னுக்கு, தன் குடும்பத்தோடு, சொந்த வீட்டிலே வசிக்க வேண்டும் என்று வாஞ்சையாய் இருந்தான். தனக்கு சொந்தமாக ஒரு அளவான வீட்டை கட்ட ஆரம்பித்தான். தன்னுடைய உழைபின் பிரயாசத்தினாலே உண் டாகும் பலனை, வீண் செலவு செய்யாமல், அந்த பணத்தை சொந்த வீட்டை கட்டுவதற்கு முதலீடு செய்து வந்தான். தான் வாழும் வாடகை வீட்டிலே எளி மையாக வாழ்ந்து வந்தான். அவனை கண்ட உற்றார், உறவினர்களில் சிலர், நீ ஏன் இப்படி வாழ்கின்றாய்? கடுமையாக உழை க்கும் நீ, அதன் பலனை அனுபவிக்க வேண்டாமா? பிள்ளைகள் இந்த வயதில் உண்டு குடித்து மகிழ்ந்திருக்காவிட்டால், எந்த வயதில் அதை செய்யப் போகின்றார்கள் என்று கூறிக் கொண்டார்கள். அவனோ, அவர்களுக்கு மறுமொழியாக: நானும் என் குடும்பமும் பட்டினியாக இருக்கவில்லை. பிள்ளைகள், தங்கள் வயதிலே செய்ய வேண்டிய காரியங்களை நிறைவேற்வதற்கான ஒழுங்குகள் யாவும் செய்யப்பட்டிருக்கின்றது. நாங்கள் வசிக்கும் வீட்டில் முதலீடு செய்வதற்கு அது எங்களுக்கு சொந்தமானதல்ல. சில அசௌகரியங்கள் உண்டு. ஆனால், எங்களுடைய நிரந்தர வீடு கட்டப்பட்டபின்பு, நாங்கள் அங்கே சென்று விடுவோம். இப்போதுள்ள பிரச்சனைகள் ஒன்றும் அங்கே இருக்காது என்று தயவாக கூறினான். கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருக்க அழைப்பை பெற்ற அருமைய சகோதர சகோதரிகளே, நாம் வாழும் இந்த உலகம், நமக்கு ஒரு வாடகை வீடு. இது நிரந்தரமான வாசஸ்தலம் அல்ல. 'இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அந்த வார்த்தையினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்க ப்பட்டு, தேவபக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது.' 2 பேதுரு 3:7ல் வாசிக்கின்றோம். எனவே, ஞானமுள்ள பிள்ளைகளைப் போல, அநித்தியமானவைகளிலே உங்கள் காலங்களையும், வளங்களையும் முதலீடு செய்யாமல், நித்திய வீட்டிற்குரியவைகளிலே முதலீடு செய்யுங்கள். இவ்வுலகத்தை அனுபவி க்கிறவர்கள் அதைத் தகாதவிதமாய் அனுபவியாதவர்கள்போலவும் இருக்கவேண்டும்; இவ்வுலகத்தின் வேஷம் கடந்துபோகிறதே. (1 கொரி 7:31)
ஜெபம்:
பரலோக தேவனே, அநித்தியமானவைகளிலே என் நாட்களை நான் விரயப்படுத்தாதபடிக்கு,நித்தியத்திற்குரியவைகளை பற்றுக் கொள்ளும்படிக்கு உணர்வுள்ள இருயதத்தை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - பிலிப்பியர் 3:20