புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 16, 2026)

நல்ல வழிகாட்டிகளாக இருங்கள்

பிலிப்பியர் 1:24

அப்படியிருந்தும், நான் சரீரத்தில் தரித்திருப்பது உங்களுக்கு அதிக அவசியம்.


சிலவேளைகளிலே, வாழ்க்கையிலே நெருக்கங்கள் ஏற்படும் போது, சில விசுவாசிகள் தாங்கள் போகும் வழியைக் குறித்து சந்தேகம் அடை கின்றார்கள். எடுத்துக் காட்டாக, நான் வீணாக பொருளை சேர்க்காமல் விட்டுவிட்டேனோ? என்னை நாடி வந்த இந்த உலகத்தின் சுகபோகங்கள் அநேகமானதை நான் விட்டு விட்டேனனே? என் வயோதிபத்தில் நான் என்ன செய்வேன்? போன்ற பற் பல கேள்விகள் அவர்கள் மனதிலே எழுகின்றது. ஆனால், தேவ ஊழிய ராக பவுலின் வாழ்க்கை ஆராய்ந்து பார்க்கும் போது, அவர் தான் செல் லும் பாதையை குறித்து, அதாவது, கிறிஸ்துவை தரித்துக் கொண்டு வாழ்வதைக் குறித்து மிகவும் திட நம்பிக்கையுடையவராக இருந்தார். அவர் கொரிந்து சபையோருக்கு எழுதும் போது 'நீங்கள் எனக்குப் பிரியமான பிள்ளைகளென்று உங்க ளுக்குப் புத்திசொல்லுகிறேன். கிறிஸ்துவுக்குள் பதினாயிரம் உபாத்தியா யர்கள் உங்களுக்கு இருந்தாலும், தகப்பன்மார் அநேகர் உங்களுக்கு இல்லையே. கிறிஸ்து இயேசுவுக்குள் சுவிசேஷத்தினால் நான் உங்க ளைப் பெற்றேன். ஆகையால், என்னைப் பின்பற்றுகிறவர்களாகுங்க ளென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.' என்று கூறியிருக்கின்றார். கிறிஸ்துவிள் சுவிசேஷத்தை மற்றவர்களுக்கு அறிவித்து, அவர்களுக்கு உபதேசம் செய்வதோடு நின்றுவிடாமல், அவர்கள் தவறும்போது, தன்னிடம் சேரும்படியாக ஒரு நல்ல தகப்பனுடைய உள்ளம் உடைய வராக இருந்து வந்தார். மேலும், தீமோத்தேயுக்கு எழுதும் போது, 'நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாச த்தைக் காத்துக்கொண்டேன். இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந் நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்;.' என்ற திடநம்பிக்கையுடை யவராக இருந்தார். இப்படிப்பட்ட ஊழியர்கள் அன்றுமட்டுமல்ல, இன் றும் காண்பது அரிதாகவே இருக்கின்றது. ஆதலால், தான் எப்படி கிறிஸ்துவை அறிந்து பின்பற்றுகின்றேனோ, அதே மாதிரியை பின்பற்று ம்படியாக பிலிப்பியருக்கு அறிவுரை கூறுகின்றார். விசு வாசிகள் கிறிஸ் துவின் நாளுக்கென்று துப்பரவானவர்களாக ஆயத்த ப்பட வேண்டும். அவர்களுடைய உபத்திரவங்கள் மத்தியிலே விசுவாசம் பெருகும்ப டிக்கு, அவர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்னும் எண்ணமானது எங்களிலும் பெருக வேண்டும். நாங்கள் மற்றவர்களுக்காக இவ்வண்ணமாக வேண்டுதல் செய்ய வேண்டும்.

ஜெபம்:

பரலோகத்திற்கு வழிகாட்டும் தேவனே, நான் கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்திலே உறுதியாய் தரித்திருந்து, மற்றவர்களுக்கு விசுவாசத்தின் வர்த்தனைக்கு ஆதரவாக இருக்கும்படிக்கு கிருபை செய்வீ ராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கி றேன் ஆமென்.

மாலைத் தியானம் - 2 தீமோ 4:6-8