தியானம் (தை 09, 2026)
கைக்கொண்டு போதிக்கிறவன்
மத்தேயு 5:19
இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவனோ, பரலோக ராஜ்யத்தில் பெரியவன் என்னப்படுவான்.
குடும்பத்திலே பெற்றோர் பிள்ளைகளுக்கு புத்தி சொல்கின்றார்கள். பாடசாலையிலே ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கின் றார்கள். வேலையிலே மேற்பார்வையாளர்கள் தொழிலாளிகளுக்கு சொல்லிக் கொடுகின்றார்கள். சபையிலே மேய்பர்கள் மூப்பர்கள் உப தேசிக்கின்றார்கள். பிள்ளைகளுக்கு கூறும் புத்திமதிகள் தங்கள் வாழ் வில் கைகொள்ளாத பெற்றோர்களை கூறித்து என்ன சொல்வீர்கள்? அவ்வண்ணமாகவே, பாடங்களை கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் அந்த பாடங்களுக்கு தான் விதி விலக்கானவர் என்று சொல்ல முடியுமோ? வேலையைகற்றுக் கொள்ள மனதற்ற மேய்பார்வை யாளர் எப்படி தனக்கு கீழ்பட்ட வனுக்கு வேலையை சொல்லிக் கொடுக்க முடியும்? உபதேசத்தை விரும்பாத மேய்பர்கள் மூப்பர்கள் எப்படி தாழ்மைiயும் கீழ்படிவையும் குறித்து பேச முடியும்? பிரியமான சகோதர சகோதரிகளே, நாம் ஒவ் வொரும் ஏதோ ஒரு சூழ்நிலையிலே மற்றவர்களுக்கு உபதேசிக்கின்ற வர்களாகவே இருக்கின்றோம். ஆனால், ஒருவன் அந்த உபதேசம் தனக்கு அல்ல ஊருக்கு மாத்திரமே என்று சொல்லிக் கொண்டால், அவன் மாயக்காரனாக இருந்து கொண்டு, மேலானவைகளை தேடுகி ன்றவனைப் போல தன்னை காண்பித்துக் கொள்வான். 'வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறை வேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பா கிலும் ஒழிந்துபோகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லு கிறேன். ஆகையால், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதான தொன்றையாகிலும் மீறி, அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லாரிலும் சிறியவன் என்னப்படுவான்; இவை களைக் கைக்கொண்டு போதிக்கிறவனோ, பரலோகராஜ்யத்தில் பெரியவன் என்னப்படுவான்.' என்று ஆண்டவர் இயேசு கூறியிருக்கின்றார். எனவே, பிலிப்பியருக்கு அறிவுரைகளை எழுதும் போது, தேவ ஊழிய ராகிய பவுல், பிலிப்பி பட்டணத்தில் கிறிஸ்து இயேசுவுக்குள்ளான பரிசுத்தவான்கள் அனைவரோடும் கூட, அதிகாரத்திலுள்ளவர்களையும் குறிப்பிட்டிருப்பதை நாம் காணக்கூடியதாக இருக்கின்றது. எனவே, நீங்கள் எந்த நிலையில் இருந்து உபதேசித்தாலும், நீங்கள் அதற்கு விதிவிலக்கானவர்கள் என்று எண்ணக் கூடாது. ஒருவன் தன்னை இயேசு கிறிஸ்துவின் ஊழியக்காரன் என்று கூறினால், அவன் தன் எஜமானானாகிய இயேசு கிறிஸ்துவைப் போலவே தாழ்மையும் கீழ்படிவுமுள்ளவனாக இருக்க வேண்டும்.
ஜெபம்:
பரலோக தேவனே, வாழ்வு தரும் உம்முடைய வார்த்தைகளை நான் மனதார ஏற்றுக் கொண்டு, அவைகளை கைகொண்டு போதிக்கும் உள்ளத்தை எனக்கு தந்து என்னை வழிநடத்தி செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - மத்தேயு 23:3