புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 25, 2026)

ஆலோசனைகளை கேளுங்கள்!

எபிரெயர் 13:7

அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாய்ச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்.


கிறிஸ்துவுக்குள் பிரியமான சகோதர சகோதரிகளே, அக்காலத்திலே இரு ந்த மதத்தலைவர்கள், பரிசேயர் மற்றும் வேதபாரகர்கள் ஏன் ஆண் டவர் இயேசுவின் மேல் கோபம் கொண்டார்கள்? ஏன் அவரை பகைத்து கொலை செய்ய வேண்டும் என்று தீர்மானித்தார்கள்? முதலாவதாக, அவர்களுடைய உண்மையான பரிதாபமான நிலைமையை ஆண்வர் இயேசு அவர்களுக்கு எடுத்துக் கூறினார். இரண்டாவதாக, அந்த நிலைமையிலிருந்து அவர்கள் விடுதலையடைய வேண் டும் என்று தம்மை யார் என்று அவர் களுக்கு வெளிப்படுத்தினார். தங்கள் நிலையை உணர்ந்து, விடுதலையடையும்படிக்கு ஆண்டவர் இயேசுவை நாடாமல், அவரை சிலுவையில் அறைய வேணடும் என்று தீர்மானம் செய்தார்கள். இன்றைய நாட்களிலே, உங்களைக் குறித்தோ, உங்களுக்கு அன்பானவர்களைக் குறித்தோ, ஒரு குறைவான காரியத்தை வெளிப்படுத்தும் போது, உங்கள் மனநிலை எப்படி இருக்கின்றது? கூறப்படும் காரியத்தை வேத வார்த்தையின் நிழலில் ஆராய்ந்து அறிய வேண்டும் என்ற சிந்தை உண்டாகின்றதா? அல்லது எப்படி அந்த குறையை நியாயப்படுத்த வேண்டும் என்கின்ற சிந்தை உண்டாகின்றதா? அல்லது பரிசேயர் வேதபாரகரைப்போல எதிர்த்து நிற்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாகின்றதா? அக்காத்திலே, ஆண்டவர் இயேசுவை உண்மையாய் பின்பற்றுகின்ற ஊழியர்கள் விசுவாசிகள் மத்தியிலே ஒரு சில கள்ளப்போதர்களும், மாய்மாலம் பண்ணும் அவிசுவாசிகளும் இருந்தார்கள். அதுபோல இக் காலத்திலும் அப்படிப்பட்ட ஒரு சிலர் அங்காங்கே காணப்படலாம். இப்படிப்பட்டவர்களை குறித்து தேவ ஊழியராகிய பவுல் கூறும் போது, 'அநேகர் வேறுவிதமாய் நடக்கிறார்கள்; அவர்கள் கிறிஸ்துவின் சிலுவை க்குப் பகைஞரென்று உங்களுக்கு அநேகந்தரம் சொன்னேன், இப் பொழுது கண்ணீரோடும் சொல்லுகிறேன். அவர்களுடைய முடிவு அழிவு, அவர்களுடைய தேவன் வயிறு, அவர்களுடைய மகிமை அவர்க ளுடைய இலச்சையே, அவர்கள் பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிறார் கள்.' நீங்கள் அப்படிப்பட்டவர்களை நோக்காமல், முதலாவதாக பொருளாசை இல்லாமல் தேவனை சேவிக்கும் உண்மையும் உத்தமமுமான ஊழியர்களை நோக்குங்கள். அற்புத அதிசயங்களையே தங்கள் வாழ்வில் முதன்மைப்படுத்துகின்றவர்களை பின்பற்றிப் போகாமல், நிகரற்ற அதிசயமாகிக இரட்சிப்பை தங்கள் வாழ்க்கையில் உயர்த்தி, தெய்வீக கனிகளை தங்கள் வாழ்க்கையில் வெளிப்படுத்தும் ஊழியர்களை பின்பற்றுங்கள்.

ஜெபம்:

பரிசுத்த வாழ்வு வாழும்படி என்னை வேறு பிரித்த தேவனே, குற்றங் குறைகளை நியாயப்படுத்துகின்றவனாக வாழாமல், மனந்திரும்பி மறுரூபமாகும் இருதயத்தை நீர் எனக்கு தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 3:17