தியானம் (பங்குனி 26, 2026)
குறித்த நேரம்வரை காத்திருங்கள்!
எபிரெயர் 10:23
வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே.
பொதுவாக விசுவாசிகள் தேவ ஆசீர்வாதங்களை பற்றிப் பேசும் போதும், அவைகளை நாடும் போதும், வேதத்திலுள்ள முற்பிதாங்களையும், முன் னோடிகளாயிருந்து கடந்து சென்ற பரிசுத்தவான்களையும் குறிப்பிட்டு கூறிக் கொள்வார்கள். எடுத்துக்காட்டாக, வேலையிலே உயர்வு வர வேண்டும் என்று விரும்பும் போது, யோசேப்பு, தானியேல் போன்ற பாத் திரங்களை குறித்து பேசிக் கொள்வார்கள். ஆனால், தோத்தான் என்னும் ; இடத்திலுள்ள குழியிருந்து, எகிப்திலுள்ள பார்வோனின் அரண்ம னைக்கு செல்லும்வரை, வாலிபனாகிய யோசேப்பு, மனத்தாழ்மையோடும், கீழ்படிவோடும், எத்தனை ஆண்டுகள் நீடிய பொறுமையுள்ளவனாக இருந்தான் என்பதை சிந்தித் துப் பார்ப்பதில்லை. பெரிதான ஆசீர்வாதங்களுக்கு சுதந்தரவாளியாக இருப்பதற்கு ஆசை! வாக்குத்தத்தங்களை தங்களுடையதாக்கி கொள்ளும் வாஞ்சை! ஆனால், தேவனாகிய கர்த்தர் முன்குறித்த நேரம் வரும் வரைக்கும் பொறுத்திருக்க மனதில்லை. வாக்குரைத்தவர், சொன்தை செய்து முடிப்ப்பார் என்று தங்களை முழுமையாக தாழ்த்தி ஒப்புக் கொடுக்க விரும்பமில்லை. நம்முடைய ஆண்டவராகிய இயேசுவோ, அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமான த்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத் தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார். ஆகையால் நீங்கள் இளைப்பு ள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாதபடிக்கு, தம க்கு விரோதமாய்ப் பாவிகளால் செய்யப்பட்ட இவ்விதமான விபரீதங்களைச் சகித்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்' என்று எபிரெயர் 12ம் அதிகாரம் 2ம் 3ம் வசனங்களிலே வாசிக்கின்றோம். நாம் கர்த்த ருக்குள் படும் பிரயாசம் அனைத்திற்கும் பலன் உண்டு. கிறிஸ்துவுக்க hய் இழந்தவர்கள் தரித்திரராவதில்லை. தேவ ராஜ்யத்தின் மேன்மை க்காக கஷ;டங்களை சகித்தவர்கள் நஷ;டப்பட்டடுப் போவதில்லை. எனவே, மேன்மையான இலக்கை நோக்கி முன்னேறுங்கள். போகும் பாதையிலே உபத்திரவங்கள் உண்டாகலாம். பள்ளத்தாக்குகள் போன்ற அனுபவங்கள் உண்டாகலமாம். 'நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப் பாய்; அக்கினிஜுவாலை உன்பேரில் பற்றாது.' ஏன்று கூறியவர் நம் மோடு இருக்கின்றார். எனவே மனந்தளராமல் முன்னேறிச் செல்லுங்கள்.
ஜெபம்:
நித்திய மேன்மைக்காக என்னை அழைத்த தேவனே, நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கும்படி எனக்கு பெலன் தந்து உம் வார்த்தையின் வழியில் நடத்திச செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - யோவான் 16:33