புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 19, 2026)

எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்

பிலிப்பியர் 4:4

கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள், சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்.


கிறிஸ்துவின் நற்செய்தியின் நிமித்தம் கட்டப்பட்டிருக்கின்ற தேவ ஊழியராகிய பவுல் ரோமாபுரியிலுள்ள சிறையிலிருந்து, பிலிப்பியருக்கு எழுதின நிருபத்தை மையமாக வைத்து, தேவ வார்த்தைகளையுயும், விசுவாசிகளின் வாழ்வின் கருப்பொருளையும் தியானித்து வருகின்றோம். சிறையிலே இருக்கும் அவருக்கு, முறுமுறுபதற்கும், முறையி டுவதற்கும் அவர் வாழ்விலே துன் பங்கள் இருந்தது. பல பாடுகளையும் உபத்திரவங்களையும் கடந்து வந்தார். அந்த நிலைமையிலும், 'கர்த்தருக்குள் சந்தோஷமாயிருங் கள்' என்று விசுவாசிகளை உற்சாகப்படுததுகின்றார். பிலிப்பிய சபையிலுள்ள விசுவாசிகள் மத்தியிலே சில பிரச்சனைகள் இருந்து வந்தது. பிரிவினைகள இருந்தது. பொல் லாத வேலையாட்களும், பின்மாற்றக் காரரும், விட்டு வந்த மதக்கிரியைகளுக்கு திரும்புகின்றவர்களும் இருந்தார்கள். தங்கள் தராதரங்களைக் குறித்து பெருமை பாராட்டுகின்றவர்கள் இருந்தார்கள். கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே எப்படிப்பட்ட மனிதர்கள் விசுவாசிகளை சூழ இருந்தாலும், விசுவாசிகள் முன்னானவைகளை நாடி ஓட வேண்டும். கிறிஸ்துவை ஆதயப்படுத்திக் கொள்ளும்படி, உலக மேன்மைகளை விட்டுவிட வேண்டும். கிறிஸ்துவின் சிந்தையை தரித்தவர்களாக, இரட்சகராயிருக்கின்ற இயேசு கிறிஸ்து வெளிப்பட காத்திருக்கும் விசுவாசிகள், தங்கள் பெயர்கள் ஜீவ புத்தகத்திலே எழுதியிருக்கின்றது என்பதை உணர்ந்தவர்களாக கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருக்க வேண்டும். பிலிப்பியர் 3ம் அதிகாரத்தின் ஆரம்பத்திலே குறிப்பிட்டது போல, மறும்படியும், பிலிப்பியர் 4ம் அதிகாரத்திலே, 'கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்.' என்று வலியுறுத்தி கூறுகின்றார். பிரியமானவர்களே, உங்களுடைய வாழ்க்கை யிலும், சபைக்கு வெளியே உலகத்திலே அநேக காரியங்கள் நடக்கலாம், சபைக்குள்ளே சில முரண்பாடுகள் உண்டாயிருக்கலாம். நீங்களோ, உங்கள் மனதை குழப்பிக் கொள்ளாமல், விசுவாசத்தை அறிக்கை பண்ணுகின்றதிலே உறுதியாய் இருந்து, கிறிஸ்துவின் சிந்தையை தரித்துக் கொள்ளுங்கள். உங்களுடைய நாமங்கள் ஜீவபுஸ்தகத்தில் இரு க்கிறது என்பதினாலே, உங்களை அழுத்தும் உலக பாரங்களினாலே மனம் சோர்ந்து போகாமல், கர்த்தருக்குள் சந்தோஷமாயிருங்கள்.

ஜெபம்:

பரலோக தேவனே, உலக கவலையினாலும் பெருந்திண்டியினாலும் என்னும் மனம் பாராட்பட்டு சோர்ந்து போகாமல், உம்முடைய நாளுக்கென்று ஆயத்தமுள்ளவனாக இருக்க எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - நெகேமியா 8:10