புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 06, 2026)

முன்னோக்கிய பயணம்!

பிலிப்பியர் 3:15

ஆகையால், நம்மில் தேறினவர்கள் யாவரும் இந்தச் சிந்தையாயிருக்கக்கடவோம்;


கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்காக ரோமாபுரியிலே சிறையிலிருக்கும் தேவ னுடைய ஊழியக்காரனாகிய பவுலுக்கு, குறிப்பாக பிலிப்பி சபையோர் ஆதரவாக இருந்தார்கள். கிறிஸ்துவுக்குள் சகோதரர் என்று கருதப்பட்ட சிலர் அவருடைய சிறையிருப்பினிமித்தம் தங்களை அவரைவிட்டு தூர ப்படுத்திக் கொண்டார்கள். சிலர் அவருடைய கட்டுக்களினாலே திடன் கொண்டு, நல்மனதோடு கிறிஸ்து வின் இரட்சிப்பின் சுவிசேஷத்தை அதிகமாக பிரசங்கிக்க துணிந்தா ர்கள். வேறுசிலரோ, பொறாமையி னாலும் விரோதத்தினாலும் அப் படி செய்தார்கள். விசுவாசிகளை வஞ்சிக்கின்றவர்களும், பின்மாற் றக்காரரும் பிலிப்பி சபையோர் மத்தியிலே இருந்தார்கள். சிலர் தாங் கள் விட்டுவந்த உலக மேன்மைகளை உயர்த்துகின்றவர்களாக காணப் பட்டார்கள். இன்னும் சிலர் பிரிவினைகளை உண்டாக்கின்றவர்களாக இருந்தார்கள். இவைகளை குறித்து சபையோருக்கு ஆலோசனைக ளையும், அறிவுரைகளையும் வழங்கினார். ஆனால், தன்னை குறித்த காரியத்திலே, அவர் மிகவும் தெளிவாக இருந்தார். அதவாது, 'கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்' என்ற அறிக்கையிலே உறுதி யுள்ளவராக இருந்தார். அதே போலவே விசுவாசிகளாகிய எங்கள் மத்த்தியிலும் பற்பல காரியங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. சிலர் தேவ ஆலோசனைகளை கேட்கலாம், வேறு சிலர் அசட்டை செய் யலாம். எவை எப்படியாக இருந்தாலும், எங்களுடைய அறிக்கையிலே நாம் திடமனதாக இருக்க வேண்டும். தீமோத்தேயு என்னும் இள வயதையுடைய ஊழிக்காரனுக்கு அப்போஸ்தலராகிய பவுல் எழுதும் போது: 'ஓ தீமோத்தேயுவே, உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்டதை நீ காத்துக்கொண்டு, சீர்கேடான வீண்பேச்சுகளுக்கும், ஞானமென்று பொய்யாய்ப் பேர்பெற்றிருக்கிற கொள்கையின் விபரீதங்களுக்கும் விலகு. சிலர் அதைப் பாராட்டி, விசுவாசத்தைவிட்டு வழுவிப்போனா ர்கள்'. என்று எச்சரிப்பை வழங்கினார். அதைப்போலவே எங்களிடத்தில் ஒப்புpக்கப்பட்ட மேன்மையான நோக்கத்தை மறந்து, மற்றவர்களுடைய காரியங்களைக் குறித்து நாங்கள் அலட்டிக் கொள்ளாமல், கிறிஸ்துவை நோக்கி பார்க்கும் தேறின சிந்தையுள்ளவர்களாக முன்னேறுகின்றவ ர்களாக இருக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும், அழைப்பின் மேலான நோக்கத்தை மறந்து போகாமல், மேலானவைகளை நாடி முன்னேறுவோமாக.

ஜெபம்:

பரலோக மேன்மைக்காக என்னை அழைத்த தேவனே, என்னை சூழ்ந்து கொள்ளும் பாரங்களையும் நெருக்கங்களையும் கண்டு தயங்காமல் முன்னேறிச் செல்ல எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 தீமோ 6:17-19