தியானம் (சித்திரை 07, 2026)
தண்டனைக்குரியவர்கள்
எபேசியர் 4:31
சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களை விட்டு நீங்கக்கடவது.
கடந்த சில வாரங்களாக, அநேக விசுவாசிகள், பற்பல ஒறுத்தல்கள், தியா கங்கள், தானதர்மங்கள், உபவாசங்கள் மற்றும் நீண்ட நேர ஜெபங்களை நடத்தி வந்தார்கள். சிலருடைய வாழ்க்கையிலே அத்தகைய செய ல்கள், உயிர்த்த ஞாயிறு நினைவுகூருதலுடன் முடிவடைந்து விடுகின் றது. அவர்களில் சிலர், மறுபடியும் உலக போக்கின் வாழ்க்கைக்கு திரும்பிவிடுகின்றார்கள். தங்கள் ஆத்தமாவை விடுவிக்க தன் ஜீவனை கொடுத்த இயேசுவை மறந்து போய்விடுகின்றார்கள். குறிப்பாக சிலர், அந்நாட்கள் முடிந்த பின்புன், தொடர்ந்தும் பயபக்தியோடு, தேவ காரியங்களிலே ஈடுபட்டு வருகின்றார்கள். நீங்கள் அவர்களில் ஒரு வராக இருந்தால், உங்கள் வாழ்க்கையை சற்று ஆராய்ந்து பாருங்கள். இன்னும் உங்கள் மனதிலே யாரையாவது குறித்து கசப்பு இருக்கின்றதா? நீதியான கசப்பு, நியா யமான வெறுப்பு என்ற பதங்கள் கிறிஸ்துவின் சிந்தையை தரித்த வர்களுக்கு இருக்க முடியாது. கடந்த சில நாட்களாக, கிறிஸ்துவின் சிந்தையை தரித்திருப்பதைக் குறித்து நாங்கள் தியானித்து வருகின்றோம். உங்களுக்கு எதிராக ஒருவன் குற் றம் ஒன்றை செய்து விட்டான் என்று வைத்துக் கொள்வோம். அந்த குற்றும் உலக நீதி நியாயத்தின்படியும், வேதத்தின் நியமனங்களின்படியும் தண்டிக்கப்படகூடிய குற்றம். அந்த மனிதனை தண்டிப்பதற்கு, உங்க ளிடம் பெலலும் செல்வாக்கும் உண்டு. நீங்கள் அந்த மனிதனை தண்டித்தால், உங்களை குற்றம் பிடிக்க யாரும் முன்வர மாட்டார்கள். அப் படி நீங்கள் அந்த மனிதனை தண்டித்தால், பலர் முன்னிலையில் நீங்கள் நீதியை நடப்பித்தீர்கள் என்று உங்களை பாராட்ட மனிதர்கள் இருக்கின்றார்கள். நீங்கள் என்ன செய்வீர்கள்? ஆண்டவராகிய இயேசுதாமே, சர்வ வல்லமையுள்ள தேவனுக்கு சமமாயிருப்பதை கொள்ளையாடிய பொருளாக எண்ணாமல், நீதி நியாயத்தின்படி நித்திய ஆக்கினைக்கு பாத்திரராகிய என்னையும் உங்களை இரட்சிக்க தம்மை தாழ்த்தினார். ஒருவேளை கசப்பை உடனடியாக விட்டுவிட முடியாமல் இருக்கலாம். எப்படி சமாதானத்தை ஏற்படுத்துவது என்று வழி தெரியாதிருக்கலாம். முதலாவதாக, கசப்பு என் வாழ்விற்கு ஆகாதது, பிரிவினை எனக்குரிதல்ல என்பதை உங்கள் மனதிலே ஏற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது சத்திய ஆவியானவர்தாமே நீங்கள் செய்ய வேண்டிய காரியங்களை நட ப்பிக்க வேண்டிய பெலனைத் தருவார். போக்கை உண்டு பண்ணுவார்.
ஜெபம்:
பிதாவாகிய என் தேவனே, நான்இருளிலே இருந்து இருளிலே நடக்கின்றவனாக இருக்காதபடிக்கும், பகைமையை குறித்து மேன்மை பாரா ட்டாதபடிக்கும், உம்முடைய வழியிலே நடக்க உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - கலா 5:19-22