தியானம் (மாசி 05, 2026)
தேவ சித்தம் நிறைவேற வேண்டும்...
2 கொரிந்தியர் 11:28
எல்லாச் சபைகளைக்குறித்தும் உண்டாயிருக்கிற கவலை என்னை நாள்தோறும் நெருக்குகிறது.
'அதிகமாய் அடிபட்டவன், அதிகமாய்க் காவல்களில் வைக்கப்பட்டவன், அநேகந்தரம் மரண அவதியில் அகப்பட்டவன். யூதர்களால் ஒன்று குறைய நாற்பதடியாக ஐந்துதரம் அடிபட்டேன்;. மூன்றுதரம் மிலாறு களால் அடிபட்டேன், ஒருதரம் கல்லெறியுண்டேன், மூன்றுதரம் கப்பற் சேத த்தில் இருந்தேன், கடலிலே ஒரு இராப்பகல் முழுவதும் போக்கி னேன். அநேகந்தரம் பிரயாணம்பண்ணி னேன்; ஆறுகளால் வந்த மோசங்க ளிலும், கள்ளரால் வந்த மோசங்க ளிலும், என் சுயஜனங்களால் வந்த மோசங்களிலும், அந்நிய ஜனங்க ளால் வந்த மோசங்களிலும், பட்ட ணங்களில் உண்டான மோசங்களி லும், வனாந்தரத்தில் உண்டான மோசங்களிலும், சமுத்திரத்தில் உண்டான மோசங்களிலும், கள்ளச்ச கோதரரிடத்தில் உண்டான மோசங்களிலும்; பிரயாசத்திலும், வருத்தத்தி லும், அநேகமுறை கண்விழிப்புகளிலும், பசியிலும் தாகத்திலும், அநேக முறை உபவாசங்களிலும், குளிரிலும், நிர்வாணத்திலும் இருந்தேன் என்று தன்னுடைய ஊழியத்திலே தனக்கு நேர்ந்த துன்பங்களைக் குறி த்து தேவ ஊழியராகிய பவுல் 2 கொரிந்தியர் 11ம் அதிகாரத்திலே சுரு க்கமாக குறிப்பிட்டிருக்கின்றதை காணலாம். இதை எதற்காக அவர் கூறியிருக்கின்றார்? மற்றவர்களிடம் இருந்து அனுதாபத்தையும், உபத் திரவத்தையும் பெற்றுக் கொள்ளும்படிக்காகவா?இல்லை! இவைகளை குறித்து மேன்மைபாராட்டாமல், மரணமானாலும், ஜீவனானாலும், ஆண் டவர் இயேசுவினால் உண்டான நற்செய்தியை யாவருக்கும் அறிவிக்க வேண்டும் என்பதும், சத்தியத்தை அறிந்தவர்கள் வஞ்சிக்ப்பட்டடு போகாமல், தேவனுடைய வார்த்தையிலே ஊன்றி கட்டப்பட வேண்டும் என்ப தற்காகவுமே அவர் பிரயாசப்பட்டார். தான் சிறையிலே போட்டப்பட்டிரு ப்பது, ஆண்டவர் இயேசுவின் சுவிசேஷத்திற்காகவே என்பதை அவர் ஐயம் ஏதும் இல்லாமல் அறிந்திருந்தார். ஆனால், அதை அறியாது சில ஊழியர்களும், விசுவாசிகளும் அவரைக் குறித்து இடறலடைந்தார்கள். அவர்கள் அவ்வண்ணமாக இடறல் அடையக் கூடாது என்பதற்காக, 'சகோதரரே, எனக்குச் சம்பவித்தவைகள் சுவிசேஷம் பிரபலமாகும்ப டிக்கு ஏதுவாயிற்றென்று நீங்கள் அறிய மனதாயிருக்கிறேன்.' பிலிப்பி சபையிலுள்ளவர்களை திடப்படுதினார். எனவே, நன்மை செய்து பாடநுபவவிக்கின்றவர்களை குறித்து இடறலடையாமல், நாம் நித்திய ஜீவனுக்கென்று அழைக்கப்பட்டிருக்கின்றோம் என்பதை அறிந்து அந்த நோக்கம் நிறைவேற வேண்டும் முன்னேறிச் செல்லுவோமாக.
ஜெபம்:
நித்திய ஜீவனுக்கென்று என்னை அழைத்த தேவனே, நீர் அழைத்த நோக்கம் என் மனதிலே எப்போதும் இருக்கும்படிக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து உம்முடைய வார்த்தையின் வழியிலே நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - பிலிப்பியர் 1:12-14