புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 30, 2026)

பொறுமையோடு காத்திருங்கள்

மத்தேயு 25:13

மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்.


வேறுவிதமாக சிந்தித்து, வீண் வார்த்தைகளை பேசுகின்றவர்கள், அன்பு என்ற போர்வையிலே, தேவனுடைய பரிசுத்தத்தை அசட்டை பண்ணு கின்றார்கள். தங்கள் ஐக்கியங்களை பெருக்கும்படி, அசுத்தங்களை துணி கரமாக நடப்பிக்கிறவர்களை கடிந்து கொள்வதில்லை. எனவே, விசுவா சிகளின் கூட்டத்திலே ஒரு சாரார், ஆயத்தமற்றவர்களாகவே காண ப்படுகின்றார்கள். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துதாமே, மணவாளன் வர எதிர்பார்த்து, காத்துக் கொண்டி ருந்த 10 கன்னிகைகளைப் குறித்து உவமையை கூறும் போது. அவர்க ளில் ஐந்து பேர் புத்தியுள்ளவர்களும், ஐந்துபேர் புத்தியில்லாதவர்களுமா யிருந்தார்கள். புத்தியில்லாதவர்கள் தங்கள் தீவட்டிகளை எடுத்துக்கொ ண்டுபோனார்கள், எண்ணெயையோ கூடக்கொண்டுபோகவில்லை. புத்தி யுள்ளவர்கள் தங்கள் தீவட்டிகளோடுங்கூடத் தங்கள் பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டுபோனார்கள். மணவாளன் வரத் தாமதித்த போது, அவர்கள் எல்லாரும் நித்திரைமயக்கமடைந்து தூங்கிவிட் டார் கள். அதவாது, அந்த 10 கன்னிகைகளும் விசுவாசிகள். தங்களுடைய குடியிருப்பு பரலோகத்திலிருக்கிறது, என்று அறிந்தவர்கள். அங்கிரு ந்து தங்கள் மணவாளனாகிய, கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருந்தவர்கள். பத்து பேரும் களைப்படைந்து தூங்கிவிட்டார்கள். மணவாளன் வரத் தாமதித்தபோது, அவர்கள் எல்லாரும் நித்திரைமயக்கமடைந்து தூங்கிவிட்டார்கள். ஆனால், அவர்களில் 5 பேர், தங்கள் மணவாளன் இயேசுகிறிஸ்துவை சந்திக்கும்படி தங்கள் வாழ்க்கையிலே எப்போதும் ஆயத்தமுள்ளவர்க ளாக இருந்தார்கள். மற்ற 5 பேர் ஆயத்தமற்றவர்களாக காணப்பட் டார்கள். இன்று கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு இரட்சிக்கப்பட்ட அனைவரும். ஒரே சத்திய ஆவியை பெற்றிருக்கின்றார்கள். அவர்களுக்கு பரிசுத்த வேதா கமம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. அவர்கள் அந்த வேதத்தை தினமும் வாசித்து தியானிக்க வழி உண்டு. அவைகளை கைகொள்ள சத்திய ஆவியாவர் உதவி செய்கின்றார். அனுதினமும் ஊக்கத்தோடு ஜெபிக்க முடியும். அதற்கு எந்த தடையும் இல்லை. ஆனால், சிலர் இவைகளை அசட்டை செய்தால், அவர்கள் ஆயத்தமுள்ளவர்களாக இருக்க முடி யாது. நீங்களோ, அவர் வரத்தாமதித்தாலும், சோர்ந்து போகாமல், இல க்கை நோக்கி தொடருங்கள். பொறுமையோடு காத்திருங்கள்.

ஜெபம்:

பரலோக தேவனே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வர தாமதிக்கின்றார் என்று நான் சோர்ந்து பின்னிட்டுபோய்விடாதபடிக்கு, எப் போதும் விழிப்புள்ளவனாக காணப்படும்படிக்கு என்னை வழிநடத்தி செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 3:21