தியானம் (ஆடி 04, 2026)
'இரட்சிப்பு'
எபிரெயர் 2:4
இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப் பித்துக்கொள்ளுவோம்.
இந்தப் பூமியிலே வாழும் மனிதர்கள், நித்திய வாழ்வு தரும் இரட்சிப் பின் செய்தியை அசட்டை செய்து, மேலானவைகளைத் தேடாமல் பூமிக் குரியவைகளை நாடுகின்றார்கள். இன்னும் சிலர், இரட்சிப்பின் செய் தியை அறிவிப்;பர்களை துன்புறுத்துகின்றார்கள். ஆனால் இன்னும் சில ரோ, உன்னதமான அழைப்பை ஏற்று, இரட்சிப்பின் வஸ்திரத்தை பெற்ற பின்னும், விலைமதிக்க முடியாத அந்த இரட்சிப்பை குறித்து கவனமற்ற வர்களாக வாழ்ந்து விடுகின்றார்கள். இதைக் குறித்து ஆண்டவராகிய இயேசு ஒரு உவமையைக் கூறினார். பரலோகராஜ்யம் தன் குமாரனுக்குக் கலியாணஞ்செய்த ஒரு ராஜாவுக்கு ஒப்பாயிருக்கிறது. அழைக்கப்பட்டவ ர்களைக் கலியாணத்திற்கு வரச்சொ ல்லும்படி அவன் தன் ஊழியக்கா ரரை அனுப்பினான்; அவர்களோ வர மனதில்லாதிருந்தார்கள். ராஜாவின் ஆயத்தம் பண்ணின விருந்தை அசட்டை பண்ணி, தங்கள் நாளாந்த அலுவல்களை செய்வதற்கு போய் விட்டார்கள். வேறு சிலரோ: ராஜாவின் ஊழியக்காரரை அற்பமாக எண்ணி, அவர்களை பிடித்து, அவமானப்படுத்தி, கொலைசெய்தார்கள். ராஜா அதைக் கேள்விப்பட்டு, கோபமடைந்து, தன் சேனைகளை அனுப்பி, அந் தக் கொலைபாதகரை அழித்து, அவர்கள் பட்டணத்தையும் சுட்டெரித் தான். அப்பொழுது, அவன் தன் ஊழியக்காரரை நோக்கி: கலியாண விருந்து ஆயத்தமாயிருக்கிறது, அழைக்கப்பட்டவர்களோ அதற்கு அபா த்திரராய்ப் போனார்கள். ஆகையால், நீங்கள் வழிச்சந்திகளிலே போய், காணப்படுகிற யாவரையும் கலியாணத்திற்கு அழைத்துக் கொண்டு வாருங்கள் என்றான். அந்த ஊழியக்காரர் புறப்பட்டு, வழிகளிலே போய், தாங்கள் கண்ட நல்லார் பொல்லார் யாவரையும் கூட்டிக் கொண்டு வந்தார்கள்; கலியாணசாலை விருந்தாளிகளால் நிறைந்தது. விருந்தாளி களைப் பார்க்கும்படி ராஜா உள்ளே பிரவேசித்தபோது, கலியாண வஸ் திரம் தரித்திராத ஒரு மனுஷனை அங்கே கண்டு: சிநே கிதனே, நீ கலி யாண வஸ்திரமில்லாதவனாய் இங்கே எப்படி வந்தாய் என்று கேட்டார்; அதற்கு அவன் பேசாமலிருந்தான். அப்பொழுது, ராஜா பணிவிடைக் காரரை நோக்கி: இவனைக் கையுங்காலும் கட்டிக் கொண்டுபோய், அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கிற புறம்பான இருளிலே போடுங்கள் என்றான். அந்தப்படியே, அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார். நீங்களோ பெற்ற இரட்சிப்புக்கு பாத்திரராக நடந்து கொள்ளுங்கள்.
ஜெபம்:
அநாதி தீர்மானத்தின்படி என்னை அழைத்த தேவனே, நீர் தாமே சாட்சிகொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பை குறித்து நான் கவனமற்று போகாதாபடிக்கு, உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - மத்தேயு 24:38-39