தியானம் (ஆனி 02, 2026)
அழைப்பின் பிரதான நோக்கம்...
பிலிப்பியர் 3:12
நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றும் தேறினவனானேன் என்று எண்ணாமல்,
ஒரு குறிப்பிட்ட தேசத்திற்கு எதிராக அயலிலுள்ள நாடு ஒன்று போர் தொடுத்தது. அந்த தேசத்தின் ராஜாவானவன், போரை நடத்தி எதிரிகளை மேற்கொள்ளும்படிக்கு தன்னுடைய தளபதிக்கு கட்டளை கொடுத்திருந்தான். அந்த போர் சில காலமாக நடந்து கொண்டிந்தது. சில நாட்களிலே நடந்த சண்டை யிலே தளபதி எதிரிகளை மேற்கொண்டான். தனக்கு உண்டான சிறு வெற்றிகளிலே சந்தோஷப்பட்டான். வீரர்கள் உற்சாகம் அடைந்தார்கள். ஆனால், அவன் அந்த வெற்றியிலே தரித்து நிற்கவில்லை. ஏனெனில் அவர்கள் போரில் இன் னும் வெற்றி அடையவில்லை. வேறு சில நாட்களிலே அவனுடைய படை சில பின்னடைவுகளை சந்தித்தது. சில இழப்புக்கள் ஏற்பட்டது. அத னால், அவன் பின்னிட்டு திரும்பவில்லை. கடந்த நாட்களைக் குறித்து துக்கித்துக் கொண்டிருக்கவில்லை. ராஜா தனக்கு கொடுத்த கட்ட ளையை நிறைவேற்றும்படி தன் இலக்கிலே மிகவும் கவனமுள்ளவனாக இருந்தான். அதுபோலவே, விசுவாசிகளுடைய வாழ்விலும் அனுதினமும் போராட்டங்கள் உண்டு. அவை ஒன்றின் பின் ஒன்றாக வரலாம். நம் வாழ்விலே நாம் பல தியாகங்களை செய்து பிரயாசப்படுகின்றோம். எனிலும் சில நாட்களிலே பின்னடைவுகள் சந்திக்க நேரிடுகின்றது. மனம் சோர்ந்து போகின்ற நாட்கள் உண்டு. உலகத்திலே எதிர்க்கும் சக்திகள் உண்டு. ஏனெனில், நமக்கு 'மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிக ளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. ஆகையால், தீங்கு நாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.' என்று தேவ ஊழி யராகிய பவுல், எபேசு சபையோருக்கு கூறியிருக்கின்றார். விசுவா சிகள் தங்கள் வாழ்விலே, சில வேளைகளிலே உயர்வுகளை காணும் போது திருப்தியடைந்து அதிலே தரித்து நின்று மேன்மைபாராட்டுகி ன்றார்கள். பின்னடைவுகளை சந்திக்கும் போது, கடந்தவைகளை நினைத்து துக்கிக்கின்றார்கள். நாம் அப்படியிருக்கலாகாது, 'நான் இலக்கயை அடைந்தாயிற்று, அல்லது என் வாழ்விலே நான் முதிர்சியடைந்து முற்றும் தேறினவனானேன் என்று எண்ணாமல், பிரதானமான இலக்கை அடையும்வரைக்கும் இயேசு கிறிஸ்துவை நோக்கி, அவருடைய சாயலிலே வளரும்படிக்கு முன்னேறிச் செல்வோமாக.
ஜெபம்:
உண்மையாய் கூப்பிடுகின்றவர்களின் ஜெபத்தை கேட்கின்ற தேவனே, நீர் என்னுடைய பரம பிதா என்பதின் கருப்பொருளை உணர்ந்து, அன்போடும் விசுவாசத்தோடும் உம்மண்டை வர உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - 2 பேதுரு 1:10