புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 08, 2026)

அழைப்பிலே நிலைத்திருங்கள்

1 கொரிந்தியர் 12:4-5

வரங்களில் வித்தியாசங்கள் உண்டு, ஆவியானவர் ஒரு வரே. ஊழியங்களிலேயும் வித்தியாசங்கள் உண்டு கர்த்தர் ஒருவரே.


கண் சம்மந்தமான வியாதியையுடைய மனிதனொருவன், இருதய நோய்க்கு வைத்தியம் செய்யும்படி பாண்டித்தியம் பெற்ற வைத் தியரொருவரிடம் சென்றிருந்தான்.இருதய நோய்க்கு வைத்தியம் செய் யும் வைத்தியர் அவனுக்கு என்ன சொல்வார்? நீ நேரமெடுத்து இங்கு வந்திருக்கின்றாய். எனவே நான் உன் கண்ணுக்கு வைத்தியம் செய் வேன் என்று சொல்வாரா? இல்லை. அவனை கண் வைத்தியரிடம் போகும்படி கூறிவார் அல்லவா? அந்த வைத்தியர் தன்னுடைய அழைப்பை அறிந்து அதன்படி செயற்பட்டு வந்தார். உலகத்திலு ள்ளவர்கள் ஞானமாய் நடந்து கொள்ளும் போது, தங்களை தேவ னுடைய பிள்ளைகள் என்று சொல்லிக் கொள்கின்றவர்கள் எவ் வளவு தேவ ஞானத்தோடு நடந்து கொள்ள வேண்டும். இன்று சில இடங்களிலே தேவ பிள்ளைகள் என்று தங்களை சொல்லிக் கொள்ளும் ஊழியர்களுக்கு இடையிலே போட்டி பொறாமைகள் ஏற்பட்டு வருவது வெளியரங்கமாக இருக்கின்றது. அந்த நச்சுத்தன்மையானது நாளடைவிலே அவர்களை பின்பற்றும் விசுவாசிகளையும் பற்றிக் கொள்கின்றது. இதைக் குறித்து தேவ ஊழியராகிய பவுல் கூறும் போது: 'அல்லாமலும், எனக்கு அருளப்பட்ட கிருபையினாலே நான் சொல்லுகிறதாவது; உங்களில் எவனானாலும் தன்னைக்கு றித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், அவனவனுக்கு தேவன் பகிர்ந்த விசுவாச அளவின்படியே, தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ணவேண்டும். ஏனெனில், நமக்கு ஒரே சரீரத்திலே அநேக அவயவங்களிருந்தும், எல்லா அவயவங்களுக்கும் ஒரே தொழில் இராததுபோல, அநேகராகிய நாமும் கிறிஸ்துவுக்குள் ஒரே சரீரமாயிருக்க, ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறோம். நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியே நாம் வௌ;வேறான வரங்களுள்ளவர்களானபடியினாலே, நம்மில் தீர்க்கதரிசனஞ்சொல்லுகிற வரத்தையுடையவன் விசுவா சப்பிரமாணத்துக்கேற்றதாகச் சொல்லக்கடவன். ஊழியஞ்செய்கிற வன் ஊழியத்திலும், போதிக்கிறவன் போதிக்கிறதிலும், புத்திசொல்லுகிறவன் புத்திசொல்லுகிறதிலும் தரித்திருக்கக்கடவன்; பகிர்ந்து கொடுக்கிறவன் வஞ்சனையில்லாமல் கொடுக்கக்கடவன்; முதலாளியானவன் ஜாக்கிர தையாயிருக்கக்கடவன்; இரக்கஞ்செய்கிறவன் உற்சாகத்துடனே செய் யக்கடவன்' என்று ஆலோசனை கூறியிருக்கின்றார். எனவே, பெற்று அழைப்பிலே நிலைத்திருங்கள்.

ஜெபம்:

என் தேவனாகிய கர்த்தாவே, நீர் உமது சித்தத்தின்படி, அவயவ ங்கள் ஒவ்வொன்றையும் சபையாகிய சரீரத்திலே வைத்திருக்கின்றீர். நான் என்னுடைய பங்கை சிறப்பாய் செய்து முடிக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 1 கொரி 12:27-29