புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 25, 2025)

வெளிச்சம் பிரகாசித்தது

ஏசாயா 9:2

இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது.


'உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண் டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்ற தேவனுடைய வார்த்தையானது நிறைவேறும்படிக்கு, வாக்களிக்கப்பட்ட மெசியா இந்த பூமிக்கு வரும் நாளை, தேவ பக்த ர்கள் கால காலமாய் எதிர்பார்த்திருந்தார்கள். தேவ ஜனங்களை அடி மைத்தனதிலிருந்து வாக்களிக்கப்ப ட்ட தேசத்திற்கு வழிநடத்திச் சென்ற தேவனுடைய தாசனாகிய மோசே, ஜனங்களை நோக்கி: உன் தேவ னாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார்; அவருக்குச் செவிகொடுப்பீர்களாக என்றான். நிறைவேற இருக்கும் வாக்குதத்தை குறித்து தீர்க்கதரிசிகள் வழியாக தேவனாகிய கர்த்தர்தாமே முன்னுரைத்தார். 'நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்ன ப்படும்' என்று வரவிருக்கும் வாக்களிப்பட்ட மெசியாவைக் குறித்து ஏசாயா தீர்க்கதரிசி முன்னுரைத்தார். தேவன் முன் குறித்த நாள் வந்த போது, தம்முடைய வாக்குதத்தை நிறைவேற்றினார். தம்முடைய வார்த் தையை நிறைவேற்றும் பொருட்டு, தாவீதின் வம்சத்தானாகிய யோ சேப்பு என்பவரையும் அவருக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த கன்னிகையா கிய மரியாiளாகிய அருமையான இரண்டு பாத்திரங்களை தெரிந்தெ டுத்தார். குறித்த நாள் வந்த போது, தேவ தூதர்கள் அந்த செய்தியை உறுதிப்படுத்தினார்கள். அந்த செய்தியானது விண்ணகதிலிருந்து மந்தை ஆயர்களுக்கு வெளிப்டுத்தப்பட்டது. தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார் என்று கூறி தேவனைத் துதித்தார்கள். ஆண்டவராகிய இயேசுவின் முதலாம் வருகை நிறைவேறியதை இந்த நாளிலே நாம் நினைவு கூர்ந்து, பரம பிதாவை துதிக்கின்றோம். அவருடைய இரண்டாம் வருகையின் நாளை எதிர்பார்த்து அவருடைய வார்த்தையில் கட்டப்பட்டவர்களாக நிலைத்திருப்போமாக.

ஜெபம்:

உம்முடைய வாக்கிலே உண்மையுள்ள தேவனே, என் ஆத்துமாக பாதாளத்திலே அழிந்து போகாதபடிக்ககு உம்முடைய திருக்குமாரனை இவ்வுலகிற்கு அனுப்பியத்தற்காக நன்றி செலுத்துகின்றேன். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - லூக்கா 2:9-11