புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 22, 2025)

தேவனுக்கு பிரியமான வாழ்வு

2 கொரிந்தியர் 8:11

கொடுக்கவேண்டும் என்கிற விருப்பமுண்டாயிருந்ததுபோல, உங்களுக்கு உள்ளவைகளில் எடுத்து அதை நிறைவேற்றுதலும் உண்டாவதாக


இந்த உலகத்தின் அளவுகோலின்படி கல்வி கற்றவரும், ஆஸ்திகளு டையவருமாகிய மனுஷன் ஒருவர், தம் இளமைக் காலத்திலே, தன் வாழ்வை கர்த்தருக்கென்று அர்பணித்து, தன்னிடமிருந்தவைகளை தேவ ஊழியத்திற்கு கொடுத்து, தனித்திருந்து, மிகவும் எளிமையான வாழ் க்கை வாழ்ந்து, சுமார் ஜம்பது ஆண்டுகளுக்கு மேல் தேவனுக்கென்று ஊழியம் செய்து வந்தார். அவர் தன் ஊழியத்தின் கடைசி கால ங்களிலே, உண்மையான ஊழி யர்கள் எப்படி அறிந்து கொள் வது என்பதைக் குறித்து போதி த்தார். வழிதப்பிப் போகும் ஊழி யர்களை குறித்து கூறும் போது, ஒரு சபை யின் விசுவாசிகளின் சராசரி வாழ்வைவிட மிக அதிக மாக, அந்த சபையின் ஊழியனின், வாழ்கை முறையானது, சுகபோக மாக இருந்தால், அந்த ஊழியனைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள் என்று தம்முடைய ஊழியத்தின் அனுபவத்தின் கருத்தைக் கூறினார். அதவாது, ஒரு சபையானது செல்வந்தர்களால் நிறைந்திருந்தார், அந்த சபையின் ஊழியர் செல்வந்தர்களை போல வாழலாம் என்று அவர் கூறவில்லை. மாறாக, தேவனுடையவர்கள் சுபாவமாகவே எளிமையான வாழ்க்கை தெரிந்து கொள்கின்றார்கள். போதுமென்கிற மனதை உடை யவர்களாக இருப்பார்கள். தங்களிம் மிமையாக இருப்பதை தங்களுக் கென்று சேர்த்து வைக்காமலும், சுய நலத்திற்காக பயன்படுத்தாலும், ஏழை எளியவர்களுக்கு மனதார கொடுத்து விடுகின்றார்கள். 'ஒருவனுக்கு மனவிருப்பமிருந்தால், அவனுக்கு இல்லாததின்படியல்ல, அவனு க்கு உள்ளதின்படியே அங்கிகரிக்கப்படும். மற்றவர்களுக்குச் சகாயமும் உங்களுக்கு வருத்தமும் உண்டாகும்படியல்ல, சமநிலையிருக்கும்படி யாகவே சொல்லுகிறேன். எப்படியெனில், மிகுதியாய்ச் சேர்த்தவனுக்கு அதிகமானதுமில்லை, கொஞ்சமாய்ச் சேர்த்தவனுக்குக் குறைவானதுமில்லை என்று எழுதியிருக்கிறபிரகாரம், சமநிலைப் பிரமாணத்தின்படியே, அவர்களுடைய செல்வம் உங்கள் வறுமைக்கு உதவும்படிக்கு இக்கால த்திலே உங்களுடைய செல்வம் அவர்களுடைய வறுமைக்கு உதவுவ தாக என்று தேவ ஊழியராகிய பவுல் 2 கொரிந்தியர் 8ம் அதிகாரத் திலே கொடுப்பதைக் குறித்து அழகாக வெளிப்படுத்தியிருக்கின்றார். எனவே, இவைகளை குறித்து நீங்கள் ஜெபிக்கும்போது தியானம் செய் யுங்கள். சத்திய ஆவியானர்தாமே உங்களை சகல சத்தியத்திலும் வழி நடத்திச் செல்வாராக.

ஜெபம்:

அன்பின் தேவனே, நான் ஆசீர்வதிக்கப்பட்டவன் என்று சுய நல மான வாழ்க்கை வாழாமல் கிறிஸ்துவின் சிந்தையைத் தரித்தவனாக வாழும்படிக்கு எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்துவழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 தீமோ 6:7