தியானம் (மார்கழி 16, 2025)
வாழ்வடையும் வழி...
உபாகமம் 30:15
இதோ, ஜீவனையும் நன்மையையும், மரணத்தையும் தீமையையும் இன்று உனக்கு முன்னே வைத்தேன்.
மலைப்பிரசங்கத்திலே, நம்முடைய ஆண்டவராகிய இயேசுதாமே, வெற்றி வாழ்க்கை வாழ்வதற்கான வழிமுறையை கூறியிருக்கின்றார். கிறிஸ்தவ வாழ்வின் அடிபடையான அம்சங்கள் யாவையும் அதற்கு ள்ளே அடங்கியிருப்பதை நாம் இந்த வருட ஆரம்பத்திலிருந்து பார்த்து வருகின்றோம். ஆனாலும், அதன் முடிவிலே, இது ஒவ்வொரு விசுவாசியின் தனிப்பட்ட தெரிவு என்பதை ஆண்டவர் இயேசு தாமே தெளிவாக வெளிப்படுதியு ள்ளார். பழைய ஏற்பாட்டின் காலத்திலே, சீனாய் மலையிலே நியாயப்பிரமாணமானது கொடு க்கப்பட்ட போது, மோசே தேவனாகிய கர்த்தருடைய வார்த்தைகளை ஜனங்களுக்கு கூறினான். நீயோ மனந்திரும்பி, கர்த்தரின் சத்தத்திற்குச் செவிகொடுத்து, நான் இன்று உனக்குக் கற்பிக்கிற அவருடைய எல் லாக் கற்பனைகளின்படியும் செய்வாய். அப்பொழுது உனக்கு நன்மை உண்டாகும்படி உன் தேவனாகிய கர்த்தர் உன் கைகள் செய்யும் எல்லா வேலைகளிலும், உன் கர்ப்பத்தின் கனியிலும், உன் மிருகஜீவனின் பல னிலும், உன் நிலத்தின் கனியிலும் உனக்குப் பரிபூரணமுண்டாகச் செய் வார். நான் இன்று உனக்கு விதிக்கிற கட்டளை உனக்கு மறைபொ ருளும் அல்ல, அது உனக்குத் தூரமானதும் அல்ல. நாங்கள் அதைக் கேட்டு, அதின்படி செய்யும்பொருட்டு, எங்கள்நிமித்தம் வானத்துக்கு ஏறி, அதை எங்களுக்குக் கொண்டுவருகிறவன் யாரென்று நீ சொல்ல த்தக்கதாக, அது வானத்திலுள்ளதும் அல்ல. நாங்கள் அதைக் கேட்டு, அதின்படி செய்யும்பொருட்டு, எங்கள்நிமித்தம் சமுத்திரத்தைக் கடந்து, அதைக் கொண்டுவருகிறவன் யார் என்று நீ சொல்லத்தக்கதாக, அது சமுத்திரத்திற்கு அப்புறத்திலுள்ளதும் அல்ல. நீ அந்த வார்த்தையின் படியே செய்யும்பொருட்டு, அது உனக்கு மிகவும் சமீபமாய் உன் வாயி லும் உன் இருதயத்திலும் இருக்கிறது. நான் ஜீவனையும் மரணத் தையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் உனக்கு முன் வைத்தேன் என்று உங்கள்மேல் வானத்தையும் பூமியையும் இன்று சாட்சிவைக் கிறேன்; ஆகையால், நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படிக்கு, நீ ஜீவ னைத் தெரிந்துகொண்டு அவரைப் பற்றிக் கொள்வாயாக என்று கூறி னான். அதே பிரகாரமாக மலைப் பிரசங்கத்தின் முடிவிலே வாழ்விற்கும் அழிவிற்கும் உரிய தெரிவானது விசுவாசிகளாகிய நம்முடைய கரங்களிலே உண்டு என்பதை ஆண்டவர் இயேசு கூறியிருக்கின்றார்.
ஜெபம்:
நித்திய ஜீவனுக்காக என்னை அழைத்த தேவனே, நான் வாழ்வடையும்படிக்கு இந்த பூமியிலே வாழும் நாட்களிலே உம்முடைய வார்த்தையை கேட்டு அதன்படி நடந்து, உம்மை பற்றிக் கொள்ள எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - யோவான் 14:6