புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 08, 2025)

தேவனுக்கு ஏற்ற இருதயம்

1 சாமுவேல் 13:14

கர்த்தர் தம்முடைய இருதயத்திற்கு ஏற்ற ஒரு மனுஷனைத் தமக்குத் தேடி, அவனைக் கர்த்தர் தம்முடைய ஜனங்கள்மேல் தலைவனாயிருக்கக் கட்டளையிட்டார்;


தேவனுடைய வார்த்தையை கேட்டும், அதை கைகொள்ள மனதில்லாமல் இருந்த சவுல் ராஜா, தன் இஷ்டப்படி நடந்து கொண்டததைக் குறி த்து கடந்த நாட்களிலே தியானம் செய்தோம். அதனால், தேவனாகிய கர்த்தர்தாமே, தம்முடைய இருதயத்திற்கு ஏற்ற மனுஷனாகிய தாவீதை தெரிந்தெடுத்தார். 'தம்முடைய இருதயத்திற்கு ஏற்றவன்' என்பதன் கருத்து என்ன? அவன் முற்றிலும் பரிசுத்தமான மனுஷனா? ஒருபோதும் தேவனுடைய வார்த்தையை கேட்க தவறாமல் இருந்து பாவம் செய் யாத மனுஷனா? இல்லை. தாவீது ராஜா தன் வாழ்க்கையிலே தவறிப் போன இடங்கள் உண்டு. ஆனால், தேவனுடைய தீர்க்கதரிசி வழியாக, தேவ வார்த்தையை கேட்கும் போது, மனதிலே குத்துண்டு, மனம் திரும்பி, மனம் வருந்தி, தேவனை அண்டை சேருக்கின்ற மனிதனாக வாழ்ந்து வந்தார். தேவனோடு வாழ்வதன் பாக்கியத்தை நன்றாக அறிந் திருந்தான். ஒரு சமயம், பாவத்திலே அகப்பட்டுக் கொண்ட போது, தன் னுடைய நிலைமைக் குறித்து சங்கீதம் 51ம் அதிகாரத்திலே கூறியிரு க்கின்றார். அந்த சங்கீதத்திலே குறிப்பிட்டப்பட்;;ட சில வார்த்தைகளா வன: 'என் பாவங்களைப் பாராதபடிக்கு நீர் உமது முகத்தை மறைத்து, என் அக்கிரமங்களையெல்லாம் நீக்கியருளும். தேவனே, சுத்த இருத யத்தை என்னிலே சிருஷ;டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத் திலே புதுப்பியும். உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும். உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து, உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும். அப்பொ ழுது பாதகருக்கு உமது வழிகளை உபதேசிப்பேன்; பாவிகள் உம்மிட த்தில் மனந்திரும்புவார்கள்.' பிரியமான சகோதர சகோதரிகளே, தேவ னுடைய வார்த்தையை கேட்டு அதன்படி நடப்பது என்பது, பாவமற்ற முற்றிலும் பரிசுத்தமான வாழ்வு என்பது பொருளல்ல. மாறாக, பரிசுத்த மாகுதலை நாம் தேவ பயத்தோடு காத்துக் கொள்ள வேண்டும். சவுல் ராஜாவைப் போல குற்றங்கள் மறைத்து, குறைகளை நியாயப்படுத்த முயற்சி செய்யாமல், குற்றங்கள் குறைகளை குறித்து பிரசங்கிக் கப்படும்போது, தாவீது ராஜாவைப் போல, நம்மைத் தாழ்த்தி அதை ஏற்றுக் கொண்டு, மனம் வருந்தி, மனந்திரும்பும் மனதுடையவர்களாக வாழ வேண்டும்.

ஜெபம்:

இருதயங்களை ஆராய்ந்து அறிகின்ற பரலோக தேவனேஇ என் இருதயம் உமக்கு முன்பாக உண்மையுள்ளதாகவும்இ உமக்கு ஏற்றதாகவும் இருக்கும்படி என்னை உணர்வுள்ளவனாக மாற்றுவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - அப்போஸ்தலர் 13:22