தியானம் (கார்த்திகை 24, 2025)
மெய்யான தேவ ஊழியர்கள்
மத்தேயு 7:21
என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.
தேவனாகிய கர்த்தருடைய மெய்யான தீர்க்கதரிகள் அன்று இருந்தார்கள். அதுபோலவே இன்றும் பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும் பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும், அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவி சேஷகராகவும், சிலரை மேய்ப்பரா கவும், போதகராகவும் ஏற்படுத்தி னார். மெய்யாக தேவனை பின்பற் றிகின்ற தேவ ஊழியர்கள், தேவனு டைய கிரியைகளை இந்த உல கிலே நடப்பித்து வருகின்றார்கள். ஆண்டவராகிய இயேசுவின் நாம த்திலே பிசாசுகளை துரத்துகின்றார் கள், அநேக அற்புதங்களை செய்து வருகின்றார்கள். அதே வேளை யிலே, தாங்களும் நித்திய ஜீவனை அடைய வேண்டும் என்ற பிதா வாகிய தேவனுடைய அநாதி தீர்மானத்தை தங்கள் வாழ்விலே உறு தியாய் பற்றிக் கொண்டு, ஆண்டவர் இயேசுவுக்காக இந்த உலகத் திலுள்ள எல்லாவற்றையும் நஷ;டமென்று விட்டு, அவைகளை குப்பை யுமாக எண்ணுகிக் கொள்கின்றார்கள். தங்கள் பேச்சிலே மாத்திரமல்ல, இவர்களுடைய வாழ்க்கையின் கனிகளின் வழியாக இவர்கள தேவ ஊழியர்கள் என்று மற்றவர் பிதாவாகிய தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்தின்றார்கள். ஆனால், பக்க வழியாக புகுந்த சிலர், சுய இலாபத்திற்காக தங்களை தாங்களே தீர்க்கதரிசிகளாக ஏற்படுத்திக் கொண்டு, உலக நட்சத்திரங்களைப் போல தங்களை காண்பித்துக் கொண்டு, ஆண்டவர் இயேசுவின் நாமத்தை வீணிலே வழங்கி வருகி ன்றார்கள். வேறு சிலர், நன்றாக ஆரம்பித்து, பாதி வழியிலே, தவறாக உபதேசங்களுக்கு இடங்கொடுத்து, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல், தங்கள் கிரியைகளினாலே, தங்களை பரிசுத்தவான்கள் என்று காண் பித்துக் கொள்கின்றார்கள். அநேகர் இவர்களுடைய வஞ்சிக்கும் உபதே சத்திற்கு செவிசாய்த்து, விசுவாசத்தைவிட்டு வழுவிப்போய்விடகின்றா ர்கள். இறுதி நாளிலே, இப்படியாக பின்வாங்கிப் போனவர்களை நோக்கி: நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று ஆண்ட வராகிய இயேசு கூறியிருக்கின்றார். ஆனால், அவருடைய மெய்யான ஊழியர்களை தம்முpடம் சேரத்துக் கொள்வார். இவர்கள் தங்கள் கிரியைகளுக்குரிய பலனை அடைந்து ஆண்டவரோடு என்றும் சுகித்தி ருப்பார்கள்.
ஜெபம்:
பரலோக தேவனே, நான் என் அழைப்பின் நோக்கத்தை பாதிவழி யிலே மறந்து, இந்த உலக சுக போகங்களுக்கு என் மனதை சாய்த்து கொள்ளாமல், உம்மை உறுதியாய் பற்றிக் கொண்டிருக்க எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - கலாத்தியர் 3:1