தியானம் (மார்கழி 11, 2025)
யார் ஆசீர்வதிகக்கப்பட்டவன்?
யோவான் 15:6
ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடியைப்போல அவன் எறியுண்டு உலர்ந்து போவான்;
ஒரு கிராமத்திலே வாழ்ந்து வந்த வாலிபர்கள் சிறு வயதிலிருந்து ஒரே பாடசாலையிலே கல்வி கற்று வந்தார்கள். ஒரே ஆலயத்திற்கு சென்று ஞாயிறு ஓய்வுநாள் பாடசாலையில் கற்று வந்தார்கள். அவர்களில் ஒருவனுக்கு, பட்டணத்திற்கு உயர்தர கல்வியை கற்பதற்காக வாய்பு கிடைத்தது. அது தேவன் தனக்கு கொடுத்த ஆசீர்வாதம் என்று ஆலயத்திலே சாட்சி பகர்ந்தான். பட்டணத்திற்கு சென்று, தேசத்திலே பிரபல்யமான பாடசாலையொ ன்றி உயர்கல்லவியை முடி த்து, பல்கலைகழத்திற்கு சென்று பட்டம் பெற்று, நல்ல வேலையொன்றிலே அமர்ந் தான். வேலையிலே அவனு க்கு முன்னேற்றங்கள் கிடை த்தது. பட்டணத்திலே வீடு டொன்றை கொள்வனவு செய்து, வாகனம் ஒன்றை வாங்கி, பல வசதி களுடன் வாழ்ந்து வந்தான். ஆனால், அவன் பட்டணத்திற்கு சென்ற நாளிலிருந்து ஆலயத்திற்கு செல்லவதை படிப்படியாக குறைத்துவி ட்டான். வருடத்திற்கு ஒருமுறை ஆலயம் செல்லும் கிறிஸ்மஸ் விசுவா சியாக மாறிவிட்டான். பரிசுத்த வேதாகமத்தை வாசித்து தியானிக்க அவனுக்கு நேரம் இல்லை. ஜெப வாழ்க்கை அவனுக்கு துரமாக இருந்தது. ஆனால், கிராமத்தில் வாழ்ந்து வந்த மற்றய நண்பனோ, தவ றாமல் ஆலயத்திற்கு சென்று, தேவனை ஆராதித்து வந்தான். வேதப் படிப்புக்களுக்கு சென்று, வேதத்தின் ஆழங்களை அறிந்து, தேவனை அறியும் அறிவிலே வளர்ந்து வந்தான். தன் தகமைகளுக்கு தக்க ஒரு வேலையை செய்து, செல்லும் இடமெங்கும் தேவனுக்கு சாட்சியாக இருந்து வந்தான். தேவனோடுள்ள உறவிலே அனுதினமும் வளரந்து வந்தான். பிரியமான சகோதர சகோதரிகளே, இவர்களின் எவன் ஆண்ட வராகிய இயேசு சொல்லிய வார்த்தைகளைக் கேட்டு, அவைகளின்படி செய்கிறவனாக இருக்கின்றான்? எவன் கன்மலையின்மேல் தன் வீட் டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனாக இருக்கின்றான்? சற்று சிந்தித்துப் பாருங்கள். இவர்களில் எவனைப் போல உங்கள் பிள்ளைகள் இருக்க வேண்டும் என்று உண்iமாக உங்கள் மனதிலே நினைத்துக் கொள் கின்றீர்கள்? இன்று பலர் உலக ஆசீர்வாதங்களை தேவ ஆசீர்வாதம் என்று எண்ணிக் கொண்டு, தேவனுடைய ராஜ்யத்தையும் அதன் நீதி யையும் தங்கள் வாழ்விலே முதன்மை படுத்துவதில்லை. தேவனுடைய வார்த்தைகள் உங்களிலே நிலைத்திருப்பதாக. அப்பொழுது நீங்கள் நித்திய ஜீவனை சுதந்தரித்துக் கொள்வீர்கள்.
ஜெபம்:
நித்திய ஜீவனை அருளும் தேவனே, நான் உம்மிலும், தேவ வார்த் தைகள் என்னிலும் நிலைத்திருக்கவும், அந்த வார்த்தையைப் பற்றிக் கொண்டு, அதன்படி அனுதினமும் மறுரூபமாகும்படி என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - மத்தேயு 6:33