புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 24, 2026)

ராஜரிக பிரமாணத்தை நிறைவேற்றுங்கள்

யாக்கோபு 2:8

உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று வேதவாக்கியம் சொல்லுகிற ராஜரிக பிரமாணத்தை நீங்கள் நிறைவேற்றினால் நன்மைசெய்வீர்கள்.


சில ஆண்டுகளுக்கு முன், இந்த உலகிலே கொள்ளை நோயானது, கொடிதாக இருந்த நாட்களிலே, 'ஐரோப்பியாவிலே இருந்த குறிப்பிட்ட ஒரு நாட்டிலே, அநேகர் அந்த நோயினால் பீடிக்கப்பட்டு, மரித்துக் கொண்டிருந்தார்கள். அந்நாட்களிலே, மத்திய அமரிக்காவிலிருந்த ஒரு நாட்டிலே, தேவனை அறியாத வைத்தியர்கள், தாதிகள் அடங்கிய குழு வொன்று, தங்கள் உயிரை பொரு ட்படுத்தாமல், ஐரோப்பியாவிலு ள்ள அந்த நாட்டிலுள்ளவர்களு க்கு உதவும்படி கடந்து சென் றார்கள் என்பதை செய்திகள் வாயிலாக கேள்விப்பட்டோம்.' கடந்து சென்றவர்கள் சுகதேகிகள். தாங்கள் வாழ்ந்து வந்த வழமையான வாழ்க்கையை விட்டு, தாங்கள் அறியாத நோயாளிக ளுக்கு உதவும்படி கடந்து சென் றார்கள். நாமும் அந்த மட்டத்திலே தியாக ங்களை செய்ய வேண்டும் என்பது கருப்பொருள் அல்ல. ஆனால், இன்றைய நாட்களிலே விசுவாசிகள் என்று தங்களை சொல் லிக் கொள்பவர்கள், தங்களுக்கு ஆசீர்வாதமான வாழ்க்கை வேண்டும் என்கின்ற மன நிலையுடையவர்களாக இருந்து, தங்கள் வசதிகளை குறித்து மேன்மைபாராட்டி, அதை சாட்சியாக கூறுகின்றவர்களாக இருக்கின்றார்கள். உலகத்திலுள்ள தேவனை அறியாத மனிதர்கள் செய்யும் தியாகத்தின் ஒரு சிறு பகுதியைக்கூட செய்வதற்கு தயக்கமுள்ளவர்களாக இருக்கின்றார்கள். தங்கள், குடும்பம், தங்கள் வீடு, தங்களுடைய கல்வி, தங்களுடைய வேலை, தங்கள் வீட்டிலுள்ள பிறந்த நாள், திருமண நாள் கொண்டாட்டங்கள், உல்லாசப் பயணங்கள், வருங்காலத்திற்கான சேமிப்புகள் என்று, அவையாவும் நிறைவான பின்னதாகவே, மற்றவர்களை குறித்த எண்ணமுடையவர்களாக இருக்கின் றார்கள். கிறிஸ்துவின் சிந்தையைக் குறித்து தியானித்து வரும் இந்த நாட்களிலே, பிலிப்பியருக்கு பவுல் எழுதிய இரண்டாம் நிருபத்தின் கரு ப்பொருளை அறிந்து கொள்ளுங்கள். முதலாவதாக விசுவாசிககள் மத் தியிலே தங்கள் மேலான அழைப்பைப் குறித்ததான ஐக்கியம் இருக்க வேண்டும். விசுவாசிகள் தங்களுக்கானவைகளை மட்டும் நோக்காமல், பிறருக்கானவைகளையும் நோக்க வேண்டும். அவற்றை தேவன் விரும் பும்படி செய்து முடிக்கும்படி, தேவை ஏற்படும் போது, சுகபோகங்கள், வசதிகள், வழமையான வாழ்க்கை முறையைவிட்டு தியாகங்களளை செய்ய ஆயத்தமுள்ளவர்களாக இருக்கவேண்டும்.

ஜெபம்:

அன்பும் இரக்கமுமுள்ள தேவனே, என் வாழ்க்கையிலே நன்மை நடக்க வேண்டும் என்று எண்ணுகின்ற பிரகாரமாக மற்றவர்களுக்கும் நான் நன்மை செய்யும் உள்ளத்தை எனக்கு தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 1:12