தியானம் (பங்குனி 17, 2026)
தேவ சித்தத்தை நிறைவேற்றுகின்றவர்கள்
பிலிப்பியர் 2:7
தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.
ஒரு தகப்பனானவனுக்கு ஐந்து குமார்கள் இருந்தார்கள். அவர்களில் இளையவன் தன் தகப்பனானவரின் ஆலோசனையை தள்ளி, தன் கண்போன வழியிலே வாழ்ந்து தன் வாழ்க்கையை கெடுத்துக் கொண்டிருந்தான். தன் சொந்த வீட்டைவிட்டு தூரத்திலுள்ள ஊரிலே வாழ்ந்து வந்த அவன் தான் வாழ்ந்து வந்த ஊரிலே பலரிடம் கடன்பட்டு, அவைகளில் இருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான். அவனைக் குறித்து துக்கமடைந்த தகப்பனானவர், தன்னுடைய மூத்த குமாரனை நோக்கி: நீ போய் உன் சகோதரனை அவன் கடன்களிலிருந்து விடுவித்து, வீடு வந்து சேரும்படிக்கு, அவனுக்கு வழிகாட்டும்படி கூறி, அவனுடைய தம்பி இருந்த ஊருக்கு அனுப்பி வைத்தார். அவன் தன் இளைய சகோதரன் வாழ்ந்த ஊருக்கு சென்று, அங்கு தன் தம்பியின் வாழ்க்கை முறையை பார்த்தான். அவனோடு பேசினான். தம்பியினுடைய மனநிலையை அறிந்த போது, இவனுக்கு உதவி செய்வதிலும், தெருவிலுள்ள ஒரு ஏழைக்கு உதவி செய்யலாம் என்று கூறி, திரும்பி தன் ஊருக்கு வந்து விட்டான். இந்த சம்பத்திலே, யார் தன் தகப்பனுடைய ஆலோசனையை கேட்டு, மனத்தாழ்மையோடும், கீழ்படிவோடும் அதை நிறைவேற்றினார்கள்? இளையவன் தன் தகப்ப னானவனுடைய ஆலோசனையை தள்ளி, துன்மார்க்கமான வாழ்க்கையை தெரிந்து கொண்டான். மூத்தவனும், தன் தகப்பனானவருடைய ஆலோசனையைத் தள்ளி தன் இருதயத்தை கடினப்படுத்தி, சுய விருப்பத்தின்படி நடந்து கொண்டான். இவர்கள் இருவருக்கும் கிறிஸ்து விலிருந்த சிந்தை இருக்கவில்லை. இன்று சில குடும்பங்களிலே, சில சபைகளிலே ஏற்படும் கலகங்களுக்கு, பிரிவினைகளுக்கு இதுவே அடி ப்படைக் காரணமாக இருக்கின்றது. கிறிஸ்துவின் சிந்தையில்லாதவன், கிறிஸ்தவனாக வாழ முடியாது. கிறிஸ்துவின் பணியை செய்ய முடி யாது. ஆண்டவராகிய இயேசு தாமே, 'தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண் ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரிய ந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.' மீட்புக்கு பாத்திரரல்லாத நாம் தேவனுக்கு உகந்த பாத்திரங்களாக மாற்றும்படிக்கு, தம்மைத் தாழ்த்தினார். அத்தகைய சிந்தையிலே வளர்ந்து பெருகுங்கள்.
ஜெபம்:
பரலோக தேவனே, ஒன்றும் உதவாவதன் என்று என்னைத் தள் ளிவிடாமல், உம்முடைய சாயலிலே வளரும்படி தெரிந்து கொண்டீரே! நான் அந்த உணர்வு என்னில் வளர்ந்து பெருகி கனி கொடுக் கும்படி கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - 1 கொரிந்தியர் 11:1