தியானம் (சித்திரை 02, 2026)
எஜமானனும் ஊழியனும்
மாற்கு 10:44
உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் எல்லாருக்கும் ஊழியக்காரனாயிருக்க க்கடவன்.
பஸ்கா பண்டிகைக்கு முன்னே, இயேசு இவ்வுலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகும்படியான தம்முடைய வேளை வந்ததென்று அறிந்து, தாம் இவ்வுலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்புவைத்தபடியே, முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில் அன்புவைத்தார். சீமோனின் குமாரனாகிய யூதாஸ்காரியோத்து அவரைக் காட்டிக்கொடுக்கும்படி பிசாசானவன் அவன் இருதயத்தைத் தூண்டினபின்பு, அவர்கள் போஜனம்பண்ணிக்கொண்டிரு க்கையில்; தம்முடைய கையில் பிதா எல்லாவற்றையும் ஒப்புக் கொடுத்தாரென்பதையும், தாம் தேவனிடத்திலிருந்து வந்ததையும், தேவனிடத் திற்குப் போகிறதையும் இயேசு அறிந்து. போஜனத்தைவிட்டெழுந்து, வஸ்திரங்களைக் கழற்றிவைத்து, ஒரு சீலையை எடுத்து, அரையிலே கட்டிக்கொண்டு, பின்பு பாத்திரத்தில் தண்ணீர் வார்த்து, சீஷருடைய கால்களைக் கழுவவும், தாம் கட்டிக்கொண்டிருந்த சீலையினால் துடை க்கவும் தொடங்கினார். அவர்களுடைய கால்களை அவர் கழுவின பின்பு, தம்முடைய வஸ்திரங்களைத் தரித்துக்கொண்டு, திரும்ப உட்கார்ந்து, அவர்களை நோக்கி: நான் உங்களுக்குச் செய்ததை அறிந்திருக்கிறீர்களா? நீங்கள் என்னைப் போதகரென்றும், ஆண்டவரென்றும் சொல்லுகிறீர்கள். நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர்தான். ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவின துண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக் கடவீர்கள். நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன் என்றார். இன்று சிலர், இந் நாட்களிலே மற்றவர்களுடைய கால்களை கழுவுவதை வழக்கமாக்கி செய்து வருகின்றார்கள். ஆண்டவர் இயேசு செய்த இந்த கிரியையின் கருப்பொருளை உணர்ந்து, உண்மையிலே, மனத்தாழ்மையோடு, அதை செய்ய வேண்டியவர்களுக்கு செய்தால் அதிலே நன்மை உண் டாயிருக்கும். கருப்பொருளை அறிந்து கொள்ளுங்கள். ஆண்டவராகிய இயேசுதாமே சீஷர்களின் எஜமானனாக இருந்தார். இன்றும் என்றெ ன்றும் இருக்கின்றவராய் இருக்கின்றார். நான் தலைவன், நீ சீஷன் என்கின்ற மனநிலை இல்லாமல் பிதவாகிய தேவனுடைய சித்தம் தம்மில் நிறைவேற தம்மை ஒப்புக் கொடுத்தது போல நாமும் எப்போதும், பதவி அந்தஸ்து என்கின்ற மனநிலையற்றவர்களாய் தேவ சித்தத்தை செ;யய எப்போதும் ஆயத்தமுள்ளவர்களாக காணப்பட வேண்டும்.
ஜெபம்:
தாழ்மையுள்ளவர்களுக்கு கிருபை அளிக்கும் தேவனே, நான் எப்போதும் உமக்கு பிரியமான பிள்ளையாக வாழும்படிக்கு, பெருமையை என்னைவிட்டு முற்றிலும் அகற்றிவிட பெலன் தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - யோவான் 13:15