புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 13, 2026)

விசுவாசத்திலே நிலைத்திருங்கள்

ரோமர் 8:36

கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்?


அன்றைய நாட்களில் ஆண்டவர் இயேசுவின் சீஷர்கள், பல உபத் திரவங்களை சந்தித்து, இரத்தசாட்சிகளாக மரித்தார்கள். இன்றைய நாட் களிலும், சில நாடுகளிலே, விசுவாசிகள், கிறிஸ்துவின் நிமித்தம் தங்கள் சரீரத்திலே பாடுகளை அனுவத்து வருகின்றார்கள். அவர்களுடைய வாழ் க்கையிலே பொருட்சேதம், உயிர்ச் சேதங்களும் நடைபெறு கின்றது என்பதை செய்திகள் வாயிலாக கேள்விப்படுகின்றோம். ஆனால் எங்களில் அநேகர் அத்தகைய விதமாக சரீரத்திலே பாடு படும்படி யான அழைப்பை பெறாதிருந்தா லும், நாவினால் உண்டாகும் வசைச் சொற்களாலும், நம்பிக்கைத் துரோகங்களினாலும், மறுதலிப்பு களினாலும், ஏமாற்றங்களினாலும், ஏறத்தாழ யாவரும், மனவேதனைய டைந்து உபத்திரவங்களுக்குள் ளாகின்றார்கள். நாவினாலே உண்டாகும் வசைச் சொல்லைவிட, சரீரத்திலே இரண்டு அடிகளை ஏற்றுக் கொள் வது எளிது என்று சிலர் சொல்லிக் கொள்வார்கள். ஆனால், ஒரு வேளை சரீரத்திலே பாடுகளை சந்திக்க நேர்ந்தால் அப்போது அவ ர்கள் என்ன சொல்வார்கள் என்பது தெரியாது. கருபொருளாவது, கிறிஸ்தவ வாழ்க்கiயிலே போராட்டங்களும் பாடுகளும் உண்டு. ஒரு வேளை தற்போது நாம் சரீரத்திலே பாடுகளை அனுபவிக்க நேரிட்டா லும், அந்த பாடுகள் மத்தியிலும் நம்மை பெலப் படுத்தி, பரம வெற்றி யைத் தர வல்லவர் நம்மோடு இருக்கின்றார் என்ற விசுவாச அறிக்கை நம்மில் காணப்பட வேண்டும். உமதுநிமித்தம் எந்நே ரமும் கொல்லப்ப டுகிறோம், அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப் படுகிறோம் என்று எழுதியிருக்கிறபடி நேரிட்டாலும், கிறிஸ்துவின் அன் பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ? இவை யெல்லாவ ற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெய ங்கொள் ளுகிறவர்களாயிருக்கிறோமே. மரணமானாலும், ஜீவனானாலும், தேவ தூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ் காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ் வானாலும், வேறெந்தச் சிருஷ;டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரி க்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன் என்று தேவ ஊழியராகிய பவுல் கூறியதைப் போல, நாமும் விசுவாச அறிக்கையிலே தளர்ந்து போகாமல் உறுதியாய் நிலைநிற்க வேண்டும். அழைத்தவர் உண்மையுள்ளவர்.

ஜெபம்:

பரலோக தேவனே, நீர் என் பட்சத்திலிருந்தால எனக்கு விரோத மாயிருப்பவன் யார் என்ற சத்தியத்திலே நான் உறுதியாய் தரித்திருந்து, உம் சித்தத்தை நிறைவேற்றி முடிக்க எனக்கு கிருபை செய்வீராக. இர ட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 1 பேதுரு 5:9-10