தியானம் (தை 13, 2026)
உன்னதமான அழைப்பைப் பெற்றவர்கள்
கொலோசெயர் 3:1
நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்.
இன்றைய உலகிலே கலச்சாரம் என்ற போர்லையின் கீழ் பல பாகுபாடுகள் சில சபைகளுக்குள் நுழைந்திருப்பதை காணக்கூடியதாக இருக் கின்றது. விசுவாசமார்க்தத்தார் மத்தியிலே, தேசத்தின் அடிப்படையில், பட்டணங்களுக்கு பட்டணம் வேற்றுமைகளும், சமுகத்திற்கு சமுகம் வேறுபட்ட கொள்கைகளுமுடையவர்களாக காணப்படுகின்றார்கள். எடு த்துக்காட்டாக, வெவ்வேறு நாடுகளிலுள்ள, விசுவாசிகள் வெவ்வேறான உணவுகளை உண்கின்றார்கள். ஆனால், உணவு வகைக ளின் பாகுபாடு இன்றி எந்த ஒரு நபரும் போஜன பிரியனாக இருக்கக்கூடாது நாம் வெவ்வேறான பாiஷகளை பேசினாலும், வம்பும், புதியீனமான வார்த்தைகளும் எந்த விசுவாசிக்கும் ஏற்புடையதல்ல. அதுபோலவே, நாம் வெவ்வேவேறு வகையான உடுத்திக் கொள்ளலாம். ஆனால், விசுவாசிகள் எங்களிருதாலும் தங்கள் நடை உடை பாவனையிலே அடகமுள்ளவர்களாக காணப்பட வேண்டும். பிரியமானவர்களே நீங்கள், 'தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொண்டிருக்கிறீர்களே. அதிலே கிரேக்கனென்றும் யூதனென்றுமில்லை, விருத்தசேதனமுள்ளவ னென்றும் ருத்தசேதனமில்லாதவனென்றுமில்லை, புறஜாதியானென்றும் புறதேசத்தானென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை. கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார். ஆகையால், நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு. ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். இவை எல்லாவற்றின்மேலும், பூரணசற்குணத்தின் கட் டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள். தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள்.' என்று கொலோசேயர் 3ம் அதிகாரத்திலே வாசிக்கின்றோம். எனவே இந்த பூமிக்குரிய கலாச்சாரங்களை உங்கள் வாழ்வில் மேன்மைப்படுத்தாமல், பரலோகத்திற்குரியவைகளை நாடித்து தேடுங்கள். அவைகளையே உங்கள் வாழ்வில் முதன்மைப் படுத்திக் கொள்ளுங்கள்.
ஜெபம்:
பரலோக தேவனே, தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளும்படிக்கு உம்முடைய சத்திய வார்த்தைகளை பற்றிக் கொண்டு, அதன்படி வாழ எனக்கு உணர்வுள்ள இருதத்தை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - கலாத்தியர் 2:21