தியானம் (வைகாசி 16, 2026)
விசுவாசத்தின் பூரண நிச்சயம்
எபிரெயர் 10:22
உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்.
அநேக நூற்றாண்டுகளாக பழமையான, பாரம்பரியங்கள் நிறைந்த ஒரு தேசம் இருந்தது. அந்த தேசத்தின் ராஜாக்களும், அதன் குடிகளும், அவர்களுடைய மரபு, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களைக் குறித்து பெருமைபாராட்டி வந்தார்கள். உண்மையிலே அந்த பாரம்பரியங்கள் அநேக காலங்களாக இருந்து வந்தது. ஆனாலும், ஜனங்கள் அந்த தேசத்திலிருந்து, வேறு ஒரு தேசத்திற்கு இடம்பெயர ஆரம்பித்தார்கள். தாங்கள் வசிக்கும் பழமைவாய்ந்து தேசத் திலே தங்களுக்கும், தங்கள் பிள் ளைகளுக்கும் எதிர்காலம் இல்லை என்று அறிந்து கொண்டார்கள். இப்படியாக குறிப்பிட்ட செழி ப்புள்ள தேசத்திற்கு இடம்பெயர்ந்த ஒரு குடும்பத்தினர். தாங்கள் கிண ற்று தவளைகளைப் போல பல ஆண்டுகள் இருந்து விட்டோம் என்றும் உணர்ந்து கொண்டார்கள். புதிய தேசத்திலே புதிய வாழ்வு உண்டாயிற்று. விடுதலை உண்டாயிற்று. வாழ்க்கையிலே முன்னேற்றங்கள் உண்டாக ஆரம்பித்தது. பிள்ளைகள் சந்தோஷமாக இருந்தார்கள். பல ஆண்டுகள் கடந்து சென்றதும். தாங்கள் விட்டுவிட்ட பாரம்பரியத்தை யும், கலாச்சாரத்தையும் குறித்த நினைவு அக்குடும்பத்தினருக்கு உண்டாயிற்று. இப்பொழுது நாங்கள் நன்றாக இருக்கின்றறோம். அத்தோடு, எங்களுடைய பழைய பராம்பரியங்களையும், கலாச்சாரத்தின் கிரியைகளையும் நடப்பித்தால், இன்னும் அதிக மேன்மையாக இருக்கும் என்று எண்ணி, பழமையான காரியங்களை, இந்த புதிய வாழ்வோடு சேர்க்க ஆரம்பித்தார்கள். அநேக நூற்றாண்டுகளாக விட்டுவந்த தேசத்தில் இருந்த அவர்களுடைய பாரம்பரியங்களின் முடிவை அறிந்திருந்தார்கள். பின்னடைவுகளை அறிந்திருந்தும், அவைகளை தங்கள் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார்கள். மறுபடியும் அவர்களுடைய பிள்ளைகள் பழைய பாரம்பரியத்தை புதிய வாழ்க்கையோடு சேர்த்துக் கொண் டால், காலப்போக்கில் பிள்ளைகளின் முடிவு என்னவாக இருக்கும்? 'புது திராட்சரசத்தைப் பழந்துருத்திகளில் வார்த்துவைக்கிறதும் இல்லை. வார்த்துவைத்தால், துருத்திகள் கிழிந்துபோம், இரசமும் சிந்திப்போம், துருத்திகளும் கெட்டுப்போம்; புது ரசத்தைப் புது துருத்திகளில் வார் த்துவைப்பார்கள்; அப்பொழுது இரண்டும் பத்திரப்பட்டிருக்கும்' என்று ஆண்டவர் இயேசு கூறியிருக்கின்றார். எனவே உங்கள் கிரியைகள் யாவும், துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயத்திலே, சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரத்தோடு, ஜீவனுள்ள புதிய மார்க்கத்தை உண்டாக்கிய கிறிஸ்து இயேசுவுக்குள் நடப்பிக்கபட வேண்டும்.
ஜெபம்:
பரலாக பிதாவே, இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தின் வழியாக நான் பிரவேசித்து, அந்த வழியிலே உறுதியாய் நிலைத்திருக்க எனக்கு பெலன் தந்தருள்விராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - மத்தேயு 9:16-17