தியானம் (ஆனி 27, 2026)
தேவனோடிருப்பவன் யார்?
1 யோவான் 5:19
நாம் தேவனால் உண்டா யிருக்கிறோமென்றும், உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்றும் அறிந்திருக்கிறோம்.
ஐசுவரியவான்களாக இருந்த சிலர், இரட்சிப்பை பெற்ற பின்பு, தங்களுக்கு உண்டானவைகளை விட்டுவிட்டு, தேவனுடைய ராஜ்யத்தினிமித் தம் தரித்திரரானார்கள் என்பதை கேள்விப்பட்டிருப்பீர்கள். அதே வேளை யிலே, ஏழைகளாக இருந்த விசுவாசிகளில் சிலர், ஐசுவரியத்தை அடைந்த பின்பு, அதைப் பற்றிக் கொண்டு, விசுவாசத்தைவிட்டு வழிவிப்போ னதையும் அறிந்திருப்பீர்கள். இந்தப் பூமியிலே வாழும் நாட்களிலே, பற் பலவிதமான மனிதர்களை, விசுவாசி கள் சந்திக்கின்றார்கள். அநேகவிதமான காரியங்கள் அவர்களை தேடி வருகின்றது. ஒருவேளை பொருளா தார நெருக்கடியினால், வறுமை தேடி வரும் போது, அதை சாபம் என்று எண்ணிக் கொள்கின்றார்கள். ஆனால், பொருளாதாரம் வாழ்க்கையிலே பெருகும் போது அதை தேவ ஆசீர் வாதம் என்று கூறிக் கொள்கின்றார்கள். என் பிரியமான சகோதரரரே, கேளுங்கள் தேவன் இவ்வுலகத்தின் தரித்திரரை விசுவாசத்தில் ஐசுவரி யவபன்களாகவும், தம்மிடத்தில் அன்புகூருகிறவர்ளுக்குத் தாம் வாக்குத்தத்தம்பண்ணின ராஜ்யத்தைச் சுதந்தரிக்கிறவர்களாகவும் தெரிந்து கொள் ளவில்லையா? என்று யாக்கோபு 2ம் அதிகாரத்திலே வாசிக்கின்றோம். பிசாசானவன் ஆண்டவர் இயேசு சோதிக்கும் போது: பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையில்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களைளும் அவைகிள் மகிமைiயும் அவருக்கு காண்பித்து: நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்து கொண்டால், இவைகளையெல்லாம் உமக்கும் தருவேன் என்று சொன்னான். மேலும், தேவனு டைய அழைப்பை பெற்ற நாம், தேவனால் உண்டாயிருக்கிறோமென் றும், உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்றும் அறித் திருக்கின்றோம் என்று 1 யோவான் 4ம் அதிகாரத்திலே வாசிக்கின்றாம். இந்த உலகத்திலே வாழும்வரை, வாழ்க்கைக்குரிய தேவைகள் உண்டு. அவைகளை பரமபிதா அறிந்திருக்கின்றார். ஒரு விசுவாசியிடம் செல் வம் இருக்கின்றதோ இல்லையோ என்பதை வைத்து அவன் தேவ னோடு இருக்கின்றானா என்பதை அறிந்து கொள்ள முடியாது. ஆனால், ஒருவன் தேவன்மேல் கொண்ட விசுவாசத்திலே உறுதியாய் இருந்து, எப்போதும் அவரை நம்பி வாழ்பவனாகவும், பொளாசையாகிய விக் கிரக ஆராதனையை செய்யாமல், தேவனாகிய கர்த்தரை ஒருவரையே சேவித்து, அவருக்கு பிரியமான ஆராதனை செய்யும் போது, அவன் தேவனோடு இருப்பவனாக காணப்படுவான்.
ஜெபம்:
பரலோக தேவனே, இந்த உலகத்தினால் உண்டாகும் வசதிகளின்மேல் என் கண்களை பதிய வைக்காமல், உம்மை நம்பி, உம்மை பற்றிக் கொண்டு, உம் வார்த்தையின் வழியிலே வாழ எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - யாகோபு 2:1-7