தியானம் (வைகாசி 08, 2026)
நிதானித்து அறிந்து கொள்ளுங்கள்
1 தெச 5:21
எல்லாவற்றையும் சோதித் துப்பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்.
நாய்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள், பொல்லாத வேலையாட்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள், சுன்னத்துக்காரருக்கு எச்சரிக்கையாயிருங்கள் என்று தேவ ஊழியராகிய பவுல் கூறியிருக்கின்றார். இந்நாட்களிலே பலர் நாய்களை வீட்டின் செல்லப் பிராணியாக வளர்க்கின்றார்கள். புதிய இனங்களை உருவாக்கப்படுகின்றது. வீட்டில் வைத்திருப்பதற்கு பற்பல பயிற்சிகள் அளிக்கப்படுகின்றது. ஆனால், 'அந்நாட்களிலே, நாய் கள், பொதுவாக வனவிலங்குகளாக கருதப்பட்டிருந்தது. மனிதர்களை காணும் போது அவை அவர்களை தாக்குவதற்கும், ஆகாரத்திற்காக கடித்து, சண்டை செய்யும் மிருகமாக வும் இருந்ததாக கூறப்படுகின்றது' 'பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்க்குட்டிகளுக்கு போடுவது நல்லதல்ல' என்றும் ஐசுவரியவான், லாசருவின் சம்பவத்திலே, நாய்கள் வந்து லாசருவின் பருக்களை நக்கிற்று என்று ஆண்டவர் இயேசு கூறியிருக்கின்றார். கருப்பொருளாவது, அந் நாட்களிலே நாய்கள் பொதுவாக மனிதர்களோடு நட்புள்ள பிராணியாக கருதப்படவில்லை என்று கூறப்ப டுகின்றது. இந்த கருத்தானது சரித்திர ஆய்வாளர்களின் தரவுகள் ஆகும். நான் ஒரு சரித்திர ஆய்வாளர் அல்ல. ஆனால், வேததத்திலே நாய்களுக்கு ஒப்பனையானவர்களை குறித்து தெளிவாக கூறப்பட்டிரு க்கின்றது. 'நாய் கக்கினதை தின்னவும் கழுவப்பட்ட பன்றி சேற்றுக்கு திரும்பினது' என்று 2 பேதுரு 2:22லும், 'பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடாதிருங்கள், உங்கள் முத்துக்களை பன்றியின் முன் போடாதேயுங்கள், போட்டால் தங்கள் கால்க ளால் அவைகளை மிதித்து, திரு ம்பிக்கொண்டு உங்களைப் பீறிப்போடும்' (மத்தேயு 7:6) என்றும் வேதம் தெளிவாக கூறுகின்றது. அதாவது, தாங்கள் விட்டுவந்த பழைய மாம்ச சுபாவங்களுக்கு திரும்புகின்றவர்கள், தங்கள் பழைய பராம்பரிய மதக்கிரியைகளை விட்டுவிட மனதில்லாதவர்கள், பரிசுத்தமானதை அற்பமாக எண்ணுகின்ற வர்களை குறித்து எச்சரிக்கையாக இருங்கள் என்று தேவ ஊழியராகிய பவுல் அறிவுரை கூறுகின்றார். அவர்களை அன்பு செய்ய வேண்டும் என்று அவர்களோடு நீங்கள் ஐக்கியப்பட்டால், நாளடைவிலே, உங்களையும் அவர்கள் தேவ காரியங்களிலே சமரசம் செய்யவைப்பார்கள். எனவே, நம்பிக்கையிலே சந்தோஷமாக இருக்கும் நீங்கள், வேதத்திலே கூறப்பட்டிலுக்கும் எச்சரிப்புக்களையும், ஆலோசனைகளையும் அற்பமாக எண்ணாமல் பின்மாற்ற காரரைக் குறித்து எச்சரிக்கையுள்ளவர்களாக இருங்கள்.
ஜெபம்:
வழிநடத்தும் தேவனே, கோணலும் மாறுபாடுமான உலகிலே, சகல காரியங்களையும் ஆராய்ந்து பார்த்து, நலமானவைகளை பற்றிக் கொள்ளும்படி எனக்கு பிரகாசமுள்ள மனக்கண்களை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - 2 கொரி 13:5