தியானம் (வைகாசி 04, 2026)
விசுவாசிகளின் பெலன்
ரோமர் 12:12
நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்.
'அல்லாமலும், நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம்; வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே.' என்று எபிரெயர் 10ம் அதிகாரம் 23ம் வசனத்தில் வாசிக்கின்றோம். எப்படிப்பட்ட சூழ்நிலைகளில் நீங்கள் கர்த்தர்மேல் கொண்ட நம்பிக்கையிலே உறுதியாய் இருப்பீர்கள்? உபத் திரவங்கள், இழப்புக்கள், நிந்தனைகள், துன்பங்கள், வேதனைகள் போன்ற சூழ்நிலைகளிலே, அழைத்தவர் உண்மையுள்ளவர் என்ற நம்பிக்கையிலே நாம் உறுதியாக தரித்திருக்க இருக்க வேண்டும். அப்படியானால், வாழ்க்கையிலே போராட்டங்கள் தலைதூக்கும் போதும், சோதனைகளை மேற்கொ ள்ள பெலனற்றுப் போகும் வேளை களிலும், குற்றம் செய்து மனம்நொந்து ஒடுங்கிப்போயிருக்கும் சந்தர்பங்களிலும் என்ன செய்வீர்கள்? பாவம் உங்களை மேற்கொள்ளும்படிக்கு துக்கத்திலேயே மூழ்கியிருப்பீர்களா? சத்திய வேததத்தை வாசிக்கும் போது, பாவத்தைக் குறித்து மனதிலே குத்துண்டு, மனதில் தோன்றும் குற்ற உணர்வுகள் உங்கள் வாழ்க்கையை மேற்கொள்ளும்படிக்கு சோர்ந்து போய், வாழ்விழந்தவர்களை போல இருப்பீர்களா? குற்ற உணர்வு, மனம் வருந்தி, மனம் திரும்புதலுக்கேதுவான துக்கம் நல்லது. 'தேவனுக்கேற்ற துக்கம் பின்பு மனஸ்தாபப்படுகிறதற்கு இடமில்லாமல் இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை உண்டாக்குகிறது. லௌகிக துக்கமோ மரணத்தை உண்டாக்கு கிறது.' ஆனால், ஒரு விசுவாசியானவன், துக்கமானது தன் வாழ்க்கையை மேற்கொள்ளும்படி இடங் கொடுக்கும்போது, அவன் தன் நம்பிக்கையின் அறிக்கையிலே உறுதியற்றவனாக மாறிவிடுகின்றான். அந்த வேளைகளிலே, மேலும் தவறான தீர்மானங்கள் எடுக்கக்கூடிய சந்தர்ப்பம் உண்டாகி விடுகின்றது. பாவங்களை அறிக்கை பண்ணும்போது, இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவன், அதை மன்னித்து மறந்து விடுவார் என்ற நம்பிக்கையை இழந்து விடக்கூடாது. 'நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநி யாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.' எனவே அழைத்தவர் உண்மையுள்ளவர் என்ற நம்பிக்கையிலே சோர்ந்து போகாமல், கர்த்தருக்குள் சந்தோஷமாக இருங்கள். அவரைக் குறித்த சந்தோஷம் விசுவாசியின் பெலனாக இருக்கின்றது.
ஜெபம்:
என் பெலனாகிய கர்த்தாவே, உம்மைக் குறித்த நம்பிக்கையிலே நான் தளர்ந்து போகமல், அசைவில்லாமல் உறுதியாய் இருக்க எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - நெகேமியா 8:10