தியானம் (ஆடி 12, 2026)
எதைக்குறித்த சிந்தை?
யோவான் 15:5
நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்;
கர்த்தருக்குள் ஒரே சிந்தையாயிருங்கள் என்பதைக் குறித்து கடந்த நாளிலே தியானம் செய்தோம். எடுத்துக்காட்டாக, என்னுடைய எண்ண மும் நோக்கமும் கிறிஸ்துவிலே நிலைத்திருப்பதாக இருக்க வேண்டும். அதே போல உங்களுடைய எண்ணமும் நோக்கமும் கிறிஸ்துவிலே நிலைத்திருப்பதாக இருக்க வேண்டும். அப்பொழுது அங்கே ஒரு மனமும் ஐக்கியமும் உண்டாயிருக் கும். சிறு பிள்ளைகள் அறியாத வய திலே தவறும் போது, அவனுக்கு அறிவு வரும் நாள்வரைக்கும் சிலர் அவன்மேல் பொறுமையாக இருக்கி ன்றார்கள். ஆனால், அவன் பூரண அறிவை அடைந்த பின்னும், அநியா யக்காரனாக இருந்து, அவன் கிறி ஸ்துவிலே நிலைத்திருக்க மனதில் லாதவனாக இருந்தால், ஒரு விசு வாசி எப்படி அவனோடு ஒரே சிந்தையாக இருக்க முடியும்? உங்கள் சொந்த குடும்பத்தினரோ அல்லது நீங்கள் நேசிக்கும் நண்பர்கள் உறவி னர்களோ, கிறிஸ்துவோடு ஐக்கியமாக இருக்க மனதில்லாதிரு ந்தால், நீங்கள் அவர்களுக்காக தேவ இரக்கத்திற்காக வேண்டுதல் செய்ய முடியும். ஆனால், அநியாயத்தை நியாயம் என்றும், அநீதியை நீதியும் என்றும் கூற முடியாது. அருமையான இரட்சிப்பை பெற்ற பின்னரும், சிலர் உலகத்தின் சுகபோகங்களின்மேல் ஆசை வைத்து பின்வாங்கிப் போகின்றார்கள். சபை ஆராதனைகளில் அவ்வப்போது காணப்பட் டாலும், கிறிஸ்துவின் சிந்தையைக் குறித்த எண்ணம் அவர்களிடத்தில் இல்லை. இவர்களில் சிலர் வேதபுரட்டர்களாய் மாறி, மற்றவர்களையும் தங்கள் வழிகளிலே வஞ்சிக்க முயற்சி செய்வார்கள். இவைகளை குறி த்து 2 பேதுரு 2ம் அதிகாரத்தில், தேவ ஊழியக்காரனாகிய பேதுரு குறிப்பிட்டிருப்பதை வாசிக்கலாம். கருப்பொருளாவது, முதலாவது, நான் கர்த்தருக்குள் ஒரே சிந்தையாக இருக்க கற்றுக் கொள்ள வேண்டும். என்னுடைய சிந்தை கிறிஸ்துவின் சிந்தையிலிருந்து விலகிப் போகும் போது, உள்ளத்திலே கசப்புக்களும், பிரிவினைகளும், வாக்குவாதங் களும் உண்டாகும். ஒருவன் கிறிஸ்துவோடு இருக்க மனதில்லாதவனாக இருப்பானாகில், அவனோடு ஐக்கியமாக இருக்க முடியாது. ஆனால், அவனுக்கு ஆலோசனை கூறி, அவனுக்காக ஜெபிக்க முடியும். ஆனால், நான் கிறிஸ்துவிலே நிலைத்திருந்து கனி கொடுக்க வேணடும். ஆதை ஒருபோதும் மறந்து போய்விடக்கூடாது.
ஜெபம்:
முடிவில்லா வாழ்விற்கென்று என்னை அழைத்த தேவனே, நான் எப்போதும் உம்மிலும் உம்முடைய வார்த்தையிலும் நிலைத்திருக்கின்றவனாக காணப்பட எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - தீத்து 3:10