தியானம் (வைகாசி 27, 2026)
கர்த்தரே எங்கள் மேன்மை!
2 கொரிந்தியர் 10:17
மேன்மைபாராட்டுகிறவன் கர்த்தரைக்குறித்தே மேன்மை பாராட்டக்கடவன்.
'ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங் கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்;' என்று எபிரெயர் 12ம் அதிகாரம் 1ம் வசனத்திலே வாசிக்கின்றோம். விசுவாசித்திலே ஆர ம்பித்த நாம் இறக்கிவைத்த பார ங்களை மறுபடியும் தூக்கி சுமக் காமலும், விட்டு வந்த மோசம் போக்கும் மாம்சத்தின் எண்ணங்களையும் முற்றாக களைந்து போய்விட வேண்டும். நம்முடைய ஆண் டவராகிய இயேசு நமக்கு கொடுத்த பெரிதான அழைப்பை சிந்தித்துப் பாருங்கள். 'வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடை க்கும். என் நுகம் மெதுவாயும் என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார்.' கிறிஸ்துவுக்குள் பிரியமான சகோதர சகோதரிகளே, இன் றைய நாளிலே உங்கள் வாழ்க்கையை சற்று ஆராய்ந்து பாருங்கள். நீங்கள் இப்போதும் வருதப்பட்டு பாரங்களை சுமக்கின்றீர்களா? உங்கள் சுமை பாரமாக இருக்கின்றதா? உங்கள் நுகம் கடினமானதாக இருக்கின் றதா? நீங்கள் கடந்து வந்த பாதையை ஆராய்ந்து பாருங்கள். ஆவி யிலே ஆரம்பித்த பின்பு, நீங்கள் உங்கள் வாழ்விலே எடுத்துக் கொண்டு தீர்மானங்களை மீள்ஆய்வு செய்து பாருங்கள். நீங்கள் ஏற்படுத்திக் கொண்ட புதிய உறவுகளை ஆராய்ந்து பாருங்கள். உங்கள் இருதய த்தில் உண்மையாக எதைக் குறித்து மேன்மை பாராட்டுகின்றீர்கள் என்பதை சிந்தித்துப் பாருங்கள்? உங்கள் பிள்ளைகளின் வாழ்விலே எதைக் குறித்து மேன்மையாக எண்ணுகின்றீர்கள்? உலக கல்வி, வேலை, அந்த ஸ்து, ஆஸ்திகள் இவைகள் மேன்மையான ஆசீர்வாதங்களாக தோன்று கின்றதா? உங்கள் வாழ்விலே குழப்பங்கள் ஏற்பட்ட போது, யாரைப் பின்பற்றினீர்கள்? எப்படியாக சவால்களை ஜெயித்தீர்கள்? மாம்சத்தி லோ அல்லது ஆவியின்படியுயோ? எங்களுடைய போராயுதங்கள் மாம்ச பெலன் அல்ல. என்பதை திட்டமாக உணர்ந்து கொண்டு, ஆவியான வருடைய வழிநடத்துதலுக்கு இடங் கொடுங்கள். அவர் உங்களை சகல சத்தியத்தில் வழிடத்திச் செல்வார்.
ஜெபம்:
நித்திய ஜீவனுக்கென்று என்னை அழைத்த தேவனே, ஆவியிலே ஆரம்பித்த நான், மறுபடியும் மாம்சத்தின் எண்ணங்களின்படி நடக்காமல் இருக்க எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - 2 கொரி 10:4