தியானம் (மாசி 06, 2026)
போராட்டங்கள் உண்டு!
1 பேதுரு 4:16
ஒருவன் கிறிஸ்தவனாயிருப்பதினால் பாடுபட்டால் வெட்கப்படாமலிருந்து, அதினிமித் தம் தேவனை மகிமைப்படு த்தக்கடவன்.
சில விசுவாசிகள் மற்றய விசுவாசிகளுடைய வாழ்விலே உண்டாகும் உபத்திரவங்களை கண்டு சோர்ந்து போய்விடுகின்றார்கள். ஆண்டவர் இயேசு எங்களோடிருந்தால், ஏன் இப்படியெல்லாம் நடக்க வேண்டும் என்று சில வேளைகளிலே நொந்து கொள்கின்றார்கள். இவர்கள் சத்தியத்தை அறிய வேண்டிய பிரகாரமாக அறியாததினாலே, தப்பான எண்ணங் கொள்கின்றார்கள். இந்த உல கத்திலே உபத்திரவங்கள் உண்டு. 'பிரியமானவர்களே, உங்களைச் சோதிக்கும்படி உங்கள் நடுவில் பற்றியெரிகிற அக்கினியைக்குறித்து ஏதோ புதுமையென்று திகையாமல், கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழும்படியாக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள். நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள்; ஏனென்றால் தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார்; அவர்களாலே தூஷிக்கப்படுகிறார்; உங்களாலே மகிமைப்படுகிறார். ஆதலால் உங்களில் ஒருவனும் கொலை பாதகனாயாவது, திருடனாயாவது, பொல்லாங்கு செய்தவனாயாவது, அந்நிய காரியங்களில் தலையிட்டுக்கொண்டவனாயாவது பாடுபடுகிறவனாயிருக்கக்கூடாது. ஒருவன் கிறிஸ்தவனாயிருப்பதினால் பாடுபட்டால் வெட்கப்படாமலிருந்து, அதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்தக்கடவன்.' என்று பேதுரு எழுதின 1ம் நிரூபத்திலே 4ம் அதிகாரம் 12ல் இருந்து 16ம் வசனம் வரை வாசிக்கின்றோம். இன்று செழிப்பின் உபதேசம் மலிந்து கொண்டிருப்பதினால், கிறிஸ்தவர்கள் என்று தங்களை சொல்லிக் கொண்டு, இந்த உலகத்திலே சுகபோகமாக வாழ்கின்றவர்களை கண்டு உண்மையான மனதுடன் போராட்டங்கள் மத்தியிலே வாழும் விசுவாசிகளும் மனச்சோர்வு அடைந்து விடுகின்றார்க்ள. நாம் இன்னும் இந்த அநித்திய மான உலகத்திலே இருப்பதினாலே, ஆவிக்குரிய போராட்டம் உண்டு. அதன் மத்தியிலும் நாம் கிறிஸ்துவுக்குள் மகிழ்ச்சியாய் இருக்கும்படிக்கு அவர் மகிமையின் நம்பியாக நமக் குள்ள வாசம் பண்ணுகின்றார். அவர் எப்படி இந்த உலகதை ஜெயித்தாரோ, அப்படியே நாமும், ஜெயிக்கும்படிக்கு தம்முடைய வார்த்தை யின் வழியிலே நம்மை வழிநடத்திச் செல்கின்றார். எனவே கிறிஸ்துவை தரித்திருக்கும் நாம் சோர்ந்து போகால் முன்னேறிச் செல்வோமாக.
ஜெபம்:
பரலோக பிதாவே, சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் நாடித் தேடி, நீர் அருளும் நித்தியஜீவனை பெற்றுக் கொள்ளும்படிக்கு எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - பிலிப்பியர் 1:20