தியானம் (சித்திரை 26, 2026)
தெளிவான கிணற்றுத் தண்ணீர்?
2 கொரிந்தியர் 7:1
பரிசுத்தமாகுதலை தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்.
ஒரு ஊரிலே இருந்த பொதுக் கிணறானது பல ஆண்டுகளாக இறைத்து சுத்தப்படுத்தப்படவில்லை.ஆனாலும், அந்த ஆழமான கிணற்றிலே தண் ணீர் தெளிவாகவே காணப்பட்டது. ஒரு நாள் அந்தக் கிணற்றுக்குள் ஒரு பாம்பு தவறுதலாக விழுந்து விட்டதால், அந்தப் பாம்பை வெளியே எடுப்பதற்குரிய நடவடிக்கைகளை செய்தார்கள். சில மணிநேரத்திற்குள் பாம்பை வெளியே எடுத்து விட் டார்கள். ஆனால், தண்ணீர் கலக்க ப்பட்டதால், தெளிவாக தெரிந்த தண்ணீருக்கு கீழ் அடங்கியிருந்த சேறும் கழிவுப் பொருட்களும் எவ் வளவு அசுத்தமாக இருந்தது என்று அந்த ஊரிலுள்ளவர்களுக்கு தெரிய வந்தது. பிரியமான சகோதர சகோத ரிகளே, வேத வசனங்களை தியானிக்கும் போதும், பிரசங்கங்கள், வேத ப்படிக்புக்களை கேட்கும் போதும், தீர்க்கதரிசனங்கள் கூறப்படும் போதும், அவை எப்படி இருக்க வேண்டும் என்ற மனநிலை உங்களு க்கு தோன்றுகின்றது. சிலர், எப்போதும் தங்கள் வாழ்வின் நிறைவாய் தோன்றுகின்றவைகளை பற்றியதாகவே இருக்க வேண்டும் என்று எதி ர்பார்க்கின்றார்கள். எனவே, எப்போதும் சபையோரின் காதுகளுக்கு இனி மையானவைகளை உபதேசிக்கும் போதகர்களையும் நாடுகின்றார்கள். அப்படிப்பட்டவர்கள், எப்போதும் மற்றவர்களுக்கு உதவுபவர்களாகவே காணப்படுவார்கள். செயற்திட்டங்கள் அதிகமாக இருக்கும். சுவிசேஷம் அறிவிப்பதில் குறைவுகள் காணப்படாது. சபையிலே ஜனங்கள் திர ளாய் கூடுவார்கள். ஆனால், தங்கள் குறைவுகளை பற்றிய காரியத் தைக் குறித்து மறந்து போய்விடுகின்றார்கள். பிலிப்பியருக்கு எழுதிய நிரூபத்தை மையமாக வைத்து, வேதத்தைத் தியானித்து வருகின்றோம். இரண்டு அதிகாரங்களை நிறைவு செய்துள்ளோம். மேற்கூறப்பட்ட நிலைமைக்கு ஒத்ததாகவே காணப்பட்டது. அவர்களுடைய வாழ்விலே அதிக நன்மைகள் இருந்தது. ஆனாலும், அவர்களுக்குள்ளே இருந்த குறைகள் அவர்களை அழைப்பின் நோக்கத்திலிருந்து விலகச் செய்து விடும் என்று அறிந்த தேவ ஊழியராகிய பவுல், அவர்களுக்கு ஆலோ சனைகளும், அறிவுரைகரைகளையும், பாரட்டுக்களையும், எச்சரிப்புக்க ளையும் வழங்கி இருக்கின்றார். இன்று சில சபைகளிலே, மனந்திரு ம்புதல், பாவ மன்னிப்பு, பரிசுத்தமாகுதல் குறித்த காரியங்களை பிரச ங்கிப்பதை தடை செய்து, அவ்வண்ணமாக உபதேசிக்கும் போதகர் களை தங்கள் சபைகளில், பிரசங்கிக்க அழைப்பதில்லை. இவைகளை குறித்து உங்கள் சுத்த மனசாட்சி உங்களுக்கு கூறுவது என்ன?
ஜெபம்:
பரிசுத்தத்திற்கென்று அழைத்த தேவனே, மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, என்னை சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலை தேவபயத்தோடே பூரணப்படுத்த பெலன் தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - பிலிப்பியர் 2:12