புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 15, 2026)

நல் வழிகாட்டிகள்

பிலிப்பியர் 3:17

சகோதரரே, நீங்கள் என்னோடேகூடப் பின்பற்றுகிறவர்களாகி, நாங்கள் உங்களுக்கு வழிகாட்டுகிறபடி நடக்கிறவர்களை மாதிரியாக நோக்குங்கள்.


இந்நாட்களிலே நாம், பிலிப்பியருக்கு எழுதிய நிரூபத்தின் மூன்றாம் அதிகாரத்தை தியானித்து வருகின்றோம். அந்நாட்களிலே, விசுவாசிகள் மத்தியிலே வாழ்ந்து, விசுவாசிகளை வஞ்சிக்ககூடிய வகையில் உப தேசம் பண்ணுகின்றவர்கள் இருந்தார்கள் என்று, பிலிப்பிய நிரூபத்தின் ஆரம்பத்திலிருந்து பார்த்து வருகின் றோம். குறிப்பாக 3ம் அதிகாரத்திலே, உலகத்தால் உண்டான மேன்மைகள் நோக்குகின்றவர்கள், தங்கள் முந்தின வாழ்க்கைக்கு திரும்பினர்கள், இரட் சிப்படைந்து பின்னரும், பழைய மதச் சடங்குகளுக்கு திரும்புகின்றவர்கள், பொல்லாத வழிகளிலே நடக்கின்றவ ர்கள் இருந்தார்கள் என்று பார்த்து வருகின்றோம். இவர்களை குறித்து கூறும் போது, இவர்கள் வேறு சிந்தை யுள்ளவர்கள், வேறு விதமாய் நடக்கின்றவர்கள் என்று கூறியிருக்கின் றார். இப்படியான வேறுவிதமாக நடக்கின்றவர்களை பின்பற்றி நடக் காமல், தேவ ஊழியராகிய பவுல் எப்படியாக கிறிஸ்துவை பின்பற்றி நடந்தாரோ, அவருடைய போதனைகளை கேட்டு, அதை முழுமனதோடு ஏற்றுக் கொண்டு, யாரெல்லாம் நடக்கின்றறார்களோ, அவர்களை மாதி ரியாக கொண்டு, அவர்களைப் போல நடக்கும்படி ஆலோசனை கூறியி ருக்கின்றார். கிறிஸ்துவை அறியும் மேன்மைக்காக தேவ ஊழியராகிய பவுல் தனக்கிருந்த எல்லா உலக மேன்மைகளையும் விட்டுவிட்டு, இல க்கை நோக்கி தொடர்கின்றேன் என்று கூறினார். இவைகளை குறித்து கடந்து இரண்டு கிழமைகளாக தியானித்து வருகின்றோம். எனவே, உங்கள் மனத்திற்கு இதமாக பேசுகின்றவர்களை பின்பற்றாமல், சத்தி யத்தை சுத்தமாக பேசுகின்றவர்களின் வாழ்க்கையை கவனித்து பாரு ங்கள். தேவ ஊழியராகிய பவுல் கூறியதைப் போல இன்னும் ஒருவரும் சம்பூரணர் அல்ல. ஆனால், யார் தேறின சிந்தையுள்ளவர்களாக, தங்க ளுக்குண்டான உலக மேன்மைகளைவிட கிறிஸ்துவை பற்றி வாழ்கி ன்றார்கள் என்று, அவர்களுடைய வாழ்க்கையின் கனிகளினாலே அறி ந்து கொள்ளுங்கள். அவர்களை மாதிரியாக நோக்குங்கள். அவர்கள் உங்களை கண்டிக்கும் போது சோர்ந்து போகாமல், மனக் கசப்படை யாமல், அவர்களுடைய ஆலோசனைகளை ஏற்றுக் கொள்ளுங்கள். கண்களை இலக்கின்மேல் பதிய வைத்து, முன்னேறிச் செல்லுங்கள். தேவ ஆவியானவர்தாமே உங்களை வழிநடத்திச் செல்வாராக.

ஜெபம்:

என்னை கண்டித்து உணர்த்தி நடத்தும் தேவனே, வஞ்சிக்கும் வழிகளிலே நடக்கின்றவர்களை நான் பின்பற்றாதபடிக்கு, உம்முடைய வார்த்தையின் வழியிலே நடக்க எனக்கு பிரசாரமுள்ள மனக்கண்களை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - வெளிப்படுத்தல் 3:19

Category Tags: