புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 29, 2026)

சீர்திருத்தங்கள்

எபிரெயர் 12:13

முடமாயிருக்கிறது பிசகிப் போகாமல் சொஸ்தமாகும்படிக்கு, உங்கள் பாதங்களுக்கு வழிகளைச் செவ்வைப்படுத்துங்கள்.


மேற்கத்தைய நாடொன்றிலே, சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்காக, ஒரு வாலிபனானவன், முதலாவதாக, பயிற்சி பெற்றுக் கொள்ளுவதற்குரிய தகமையை பெற்றுக் கொள்ளும் பரீட்சையிலே சித்தி பெற வேண்டியிருந்தது. அதை முடித்து பின்பு, வாகனத்தை ஓட்டு வதற்காக பயிற்சியயை பெற்று, ஏறத்தாழ இரண்டு வருடங்களுக்குள், அதிவேக நெடுஞ்சாலைகளிலே வாக னத்தை ஓட்டுவதற்காக முழுமையான சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பெற் றுக் கொண்டான். மூன்று ஆண்டுக ளுக்கு பின்னர், ஒரு நாள், பொலி சார் அவனைப் பின்தொடர்ந்து, அவ னுடைய வாகனத்தை மறித்தார்கள். அனைத்து வழி நிறுத்தும் இடத்திலே ஏன் வாகனத்தை நிறுத்தவில்லை என்று பொலிசார் அவனிடத்திலே கேட்டார்கள். அதற்கு அவன், நான் வாகனத்தை நிறுத்திதான் சென்றேன் என்று பதிலளித்தான். அதற்கு பொலிசார்: நீ வாகனத்தை முழுமையாக நிறுத்தவில்லை என்றார்கள். பிரியமான சகோதர சகோதரிகளே, முதலாவதாக, அவனை நிறுத்திய பொலிசார், நீ இவ்வளவு காலமும் விபத்துக்ள் ஏதும் இல்லாமல் நன் றாய் ஓடினாய்; என்று நன்றி செலுத்தினார்களா? அல்லது எப்போதாவது அவர்கள் சாரதிகளை வழி மறித்து, அவர்களுடை நல்ல ஓட்டத்திற்காக பாராட்டுகின்றார்களா? முழுமையாக நிறுத்தாமல், செல்வது பெருங்குற் றமா? அதனால் அவன் எந்த விவத்திலும் சிக்கிக் கொள்ளவில்லையே? இரண்டு வருடங்கள் படித்து, பயிற்சி பெற்று முழுமையான சாரதி அனு மதினப் பத்திரத்தை பெற்ற பின்பு, ஏன் பொலிசார் சாரதிகளை பின் தொடர வேண்டும்? தெருவிலே இருக்கும் அடையாளங்கள், சாலை விதிகள் மட்டும் போதாதா? ஏன் தண்டனை? ஏன் அபராதம்? ஏன் சில காலத்திற்கு அனுமதிப்பத்திரம் ரத்து செய்யப்படுகின்றது? ஏன் சிலர் சில மாதங்களுக்கு சிறைக்கு செல்கின்றார்கள்? நித்திய ஜீவனுக்கென்று அழைக்கப்பட்ட தேவ பிள்ளைகளே, கண்டித்துணர்த்துதல், சில வேளை களிலே கசப்பான அனுபவத்தை உண்டு பண்ணும். மற்றவர்கள் முன்னி லையிலே அவமானம் அடைந்தது போல இருக்கும். ஆனால், நல்ல சாரதிகள் திருத்தப்படுவதுபோல, ஆவிக்குரிய வாழ்விலும் சீர்திருத்த ங்கள் அவசியமானது. அதிகாரங்களுக்கு எதிர்த்து நிற்காமலும் கலக ங்களை உண்டாக்காமலும் நல்ல மனதோடு அவைகளை ஏற்றுக் கொள் ளுங்கள். உங்கள் விசாரிக்கின்ற தேவனாகிய கர்த்தர் நீதியுள்ளவர்.

ஜெபம்:

அன்பின் பரலோக தேவனே, என்னுடைய வாழ்வு எப்போதும் உம்மிலே நிலையாக இருக்கும்படிக்கு, நீர் எனக்கு உணர்வுள்ள இருதய த்தையும், பிரகாசமுள்ள மனக்கண்களையும் தந்து வழிநடத்திச் செல் வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - நீதி 19:20