தியானம் (வைகாசி 18, 2026)
புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்
எபேசியர் 4:24
மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்து க்கொள்ளுங்கள்.
எகிப்திலே நானுற்று முப்பது வருடங்கள் அடிமைகளாக இருந்த தேவ ஜனங்கள் தங்கள் சிறையிருப்பிலிருந்து திரும்பும் போது, வனாந்திர வழியாக, வாக்களிக்கப்பட்ட தேசத்திற்கு வழிநடத்தி செல்லப்பட்டார் கள். எனவே, அவர்கள் யுத்தத்திற்கு பழக்கமில்லாதவர்களாக இருந் தார்கள். அந்நாட்களிலே அமலேக்கியர் வந்து ரெவிதீமிலே இஸ்ரவே லரோடே யுத்தம்பண்ணினார்கள். (யாத்திராகமம் 17:8). இந்த செய்கை யின் நிமித்தம் கர்த்தர் அமலேக்கி யர்மேல் கோபம் கொண்டார். அம லேக்கின் கை கர்த்தருடைய சிங்கா சனத்துக்கு விரோதமாயிருந்தபடி யால், தலைமுறை தலைமுறை தோறும் அவனுக்கு விரோதமாய் கர்த்தரின் யுத்தம் நடக்கும் என்று முன்னறிவிக்கப்பட்டது. பல ஆண்டு களுக்கு பின்னர், இஸ்ரவேல் சந் ததி வாக்களிக்கப்பட்ட தேசத்தை சுதந்தரித்து, தங்களுக்கென்று சவுல் ஒரு ராஜாவை நியமித்தார்கள். அப்பொழுது, சேனைகளின் கர்த்தர் சொல் லுகிறது என்னவென்றால், இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வந்தபோது, அமலேக்கு அவர்களுக்கு வழிமறித்த செய்கையை மனதிலே வைத்திரு க்கிறேன். இப்போதும் நீ போய், அமலேக்கை மடங்கடித்து, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் அழித்துப்போடு என்று சொன்னான். ஆனால், சவுலும் ஜனங்களும் அலேக்கிய ராஜாவையும், ஆடுமாடுக ளில் முதல்தரமானவைகளையும், இரண்டாந்தரமானவைகளையும், ஆட் டுக்குட்டிகளையும், நலமான எல்லாவற்றையும், அழித்துப்போட மனதில் லாமல் தப்பவைத்து, கர்த்தருடைய வார்த்தைக்கு விரோதமாக அவை களை கொண்டு வந்தார்கள். ஏன் இப்படி செய்தாய் என்று கர்த்தர் கேட்ட போது, அவைகளை கர்த்தருக்கு பலியிட கொண்டு வந்தோம் என்று சாட்டு போக்கு கூறினான். அழிக்கப்பட வேண்டியவைகiளா அழி த்துப்போட அவனுக்கு மனதில்லாதவனாயிருந்தான். அது அவனுடைய மாம்ச இச்சையாக இருந்தது. அதுபோலவே, இன்றும் சிலர், கிறிஸ்து வழியாக உண்டான இரட்சிப்பை பெற்ற பின்பும், தங்கள் பழைய தீட் டான வழிகளை விட்டுவிட மனதில்லாமல், அவைகளை கர்த்தருக்கு என்று வைத்திருக்கின்றோம். கர்த்தருக்காக இப்படி செய்கின்றோம். என்று, கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்படியாமல், சடங்காச்சாரக் கிரியைகளை நடப்பிக்கின்றார்கள். பிரியமானவர்களே, பழையவைகளை விட்டு பதிய மனுஷனுக்குரிய சாயலை அணிந்து கொள்ளுங்கள்.
ஜெபம்:
அன்பின் தேவனே, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைக்குரிய பழைய மனுஷனை நான் களைந்துபோட்டு, உள்ளத்திலே புதிதான ஆவியுள்வானாக புதிய மனுஷனை தரித்துக் கொள்ள கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - 1 சாமு 15:22