புதிய நாளுக்குள்..

தியானம் (தை 02, 2026)

போதித்து நடத்துகின்ற தேவன்...

சங்கீதம் 32:8

நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உன க்கு ஆலோசனை சொல்லு வேன்.


ஒரு ஊரிலே உண்மையும் உத்தமமுமாக வாழ்ந்து வந்த தகப்பனானவர், தன் பிள்ளைகளை அதிகமாக நேசித்து வந்தார். அவர்க ளுக்கு தயவோடு நல்ல அறிவுரைகளை கூறி, அவர்களை அன்போடு நடத்தி வந்தார். ஆண்டுகள் கடந்து சென்ற போது, அவ னுடைய பிள்ளைகளில் ஒருவன், அவ்வப்போது அவருடைய ஆலோசனைகளை கேளாமல் தன் நண்பர்களின் வழியிலே நடக்க ஆரம்பித்தான். இதைக் கண்ட தகப்பனானவர், அந்த மகனானவனை குறித்து மிகவும் மன வேதனை அடைந்தார். அவன் மதிகேடான வழிகளிலே நடந்து அவன் வாழ்விலே நோவுகளை உண்டு பண்ணிவிடுவான் என்று அவனைக் குறித்து மிகவும் கரிசணையுடையவராக இருந்து வந்தார். அவனை தனியாக அழைத்து புத்திமதிகளை கூறினார். சில வேளைகளிலே, அவனுடைய தவறான வழிகளை கண்டு, அவனைக் கடிந்து கொண்டார். ஆனாலும், அவன் தன் தகப்பனானவருடைய போதகத்தை அசட்டை பண்ணினான். காரியங்கள் கட்டுப்பாட்டை மீறி செல்வதற்கு முன்னதாக, அவன் வாழ்க்கை நெறிப்படுத்தும்படி சில கடும் நடவடிக் கைகளை அவர் எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். அந்த அனு பவம் தற்போது, அந்த மகனானவனுக்கு கசப்பாக இருந்தது. ஆனாலும் அவன் வாழ்வு வளம் பெறுவதற்கு, அவனுக்கு கடிவாளம் போடப்பட வேண்டிய நிலைமை உண்டாயிற்று. தங்கள் பிள்ளைகளை கடிந்து கொண்டு, தண்டிப்பதில் எந்தப் பெற்றோரும் மகிழ்சியடைவதில்லை. ஆனால், நல் வாழ்விற்கு அதுதான் மருந்து என்ற நிலை ஏற்படும் போது, அவர்கள் அந்த மருந்தைக் கொடுக்கின்றார்கள். பிரியமான சகோதர சகோதரிகளே, நம்முடைய பரம பிதாவை விட நம்மை யார் அதிகமாக நேசிக்க முடியும்? 'நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.' என்று அவர் கூறியிருக்கின்றார். அவருடைய போதனையைக் கைக்கொண்டு அவர் காட்டும் வழியிலே நடப்பவனுக்கு வேதனை இல்லை. ஆனால், 'வாரினாலும் கடிவாளத் தினாலும் வாய் கட்டப்பட்டாலொழிய, உன் கிட்டச் சேராத புத்தியில் லாக் குதிரையைப்போலவும் கோவேறு கழுதையைப்போலவும் இருக்க வேண்டாம்.' என்று நமக்கு அறிவுரை கூறியிருக்கின்றார்.

ஜெபம்:

காலங்களை அறிந்த தேவனே, என் எதிர்காலத்தை நீர் ஒருவரே அறிந்திருக்கின்றீர். உம்முடைய ஆலோசனைகளை நான் அசட்டை செய்யாமல், உம்முடைய வார்த்தையின் வழியிலே வாழ கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - நீதி 1:8-9