புதிய நாளுக்குள்..

தியானம் (தை 16, 2026)

தேவ கிருபையை அறிந்தவர்கள் யார்?

1 பேதுரு 5:5

பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.


பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார். ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த விசுவாசினயாவன்;, தன் இளைமைக் காலத்திலே கிரமமாக கல்வி கற்று, பட்டப்படிப்பை முடித்து நல்ல வேலையொன்றிலே அமர்ந்து கொண்டான். ஆண்டுகள் கடந்து சென்றதும் அவனுடைய பேச்சுக்களிலே பெருமையும் அகங்காரமும் இருப்பதை, சபையின் மேய்ப்பரானவர் கண்டு கொண்டார். ஒருநாள் அவனைத் தனியே அழைத்து, அவனுடைய நிலைமைகளைக் குறித்து அவ னோடு உரையாடினார். அவனோ: என்னுடைய வாழ்க்கையைப் பாருங்கள், என் முன்னேற்றத்தைப் பாருங்கள்! தேவன் எப்ப டியாக என்னை ஆசீர்வதித்திருக்கின்றார் என்பதை அறிந்திருக்கின் றீர்கள். கல்வியிலும் வேலையிலும் உயர்வுகள். தேவன் என்னோடிருக்கின்றார். தேவ கிருபை என்னோடிக்கின்றது என்று மேய்ப்பருக்கு போதிக்க ஆரம்பித்தான். மேய்ப்பரோ அவனைப் பார்த்து: மகனே, உன் னுடைய கம்பனியில் உனக்குமேல் வேலை செய்யபவர்கள் எல்லாரும், இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டவர்களா? அவர்கள் எல்லாரும் உன்னைவிட அதிகமாக உழைக்கின்றார்கள் அல்லவா? அவர்களுடைய வாழ்க்கை இந்த உலகத்திலே செழித் திருக்கின்றது என்பதை நீ அறிந்திருக்கின்றாய். அப்படியானல், தேவனை அறியாத அவர்கள் உன்னைவிட அதிகமாக ஆசீர்வதிக்கப்பட்டிருக்கின்றார்களா? உலகிலே எத்தனை ஐசுவரியவான்கள் இருக்கின்றார்கள். அவர்களில் பெரும்பான்மையானோர் தேவனை அறியாதவர்கள். தேவ னுடைய இரக்கத்தையும் கிருபையையும் உலக ஐசுவரியத்தினால் அளப்பதில்லை. தேவன் உன்மேல் நீடிய பொறுமையாய் இருப்பது அவரு டைய இரக்கம் என்பதை அறிந்து கொள். முதலாவதாக, தாழ்மையுள் ளவர் கள் மேல் தேவ கிருபை தங்கும் என்ற சத்தியத்தை அறிந்து கொள். தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கின்றார் என்றும் தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையை அளிக்கின்றார் என்ற வேத வார்த்தையை மறந்துபோகாதே. 'தேவதயவு நீ குணப்படும்படி உன்னை ஏவுகிறதென்று அறியாமல், அவருடைய தயவு பொறுமை நீடியசாந்தம் இவைகளின் ஐசுவரியத்தை அசட்டைபண்ணாதே.' மனத்தாழ்மையும், சாந்தத்தையும் ஆண்டவர் இயேசுவிடம் இருந்து கற்றுக் கொள் என்று அறிவுரை கூறினார். பிரியமானவர்களே, நீங்கள் தேவகிருபையை பெற்ற வர்களா? அதை எதனால் அறிந்திருக்கின்றீர்கள்? மனத்தாழ்மையும் கீழ் ப்படியும் உங்களிடம் உண்டா என்று ஆராய்ந்து அறிந்து கொள்ளுங்கள்.

ஜெபம்:

கிருபை நிறைந்து தேவனே, உம்முடைய கிருபையின் மேன் மையையும், கிருபையின் நோக்கத்தையும் நான் அறிந்து உணர்ந்து மனத் ஹதாழ்மையோடும், கீழ்படிவோடும் ஜீவனம் பண்ண என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - மத்தேயு 23:12