புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 22, 2026)

திவ்விய சுபாவத்தின் பங்காளிகள்

2 பேதுரு 1:4

இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு


இந்த உலகத்தின் போக்கில் வாழும் கல்விமான்கள், இந்த உலத் தின்படி சிந்திக்கின்றார்கள். பூமிக்கடுத்தவைகளை சிந்தித்து. உலக ஞானத்தை நாடுகின்றார்கள். நாங்களோ, இயேசுகிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி, வேறொன்றையும் குறித்து மேன்மை பாராட்டுவதில்லை என்று தேவ ஊழியராகிய பவுல்தாமே கொரிந்தியருக்கு எழுதிய நிரூபத்திலே கூறியிருக்கின்றார். சிலுவையில் அறையப்பட்ட இயேசுகிறிஸ்துவை மேன்மை பாராட்டுகின்றவர்கள், இந்த பூமிக்குரியவைகளை தேடாமல், மேலானவைகளை நாடித் தேடுகின்றார்கள். அவர் கள் உலக ஞானத்தையல்ல, தேவ ஞானத்தை வாஞ்சிக்கின்றார்கள். அவர் மேலும் குறிப்பிடுகையில்: தேறினவர்க ளுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இப்பிரபஞ்சத்தின் ஞானத்தையல்ல, அழிந்துபோகிற வர்களாகிய இப்பிரபஞ்சத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல, உலகத் தோற்றத்திற்கு முன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம். அதை இப்பிரபஞ்சத்துப் பிரபுக் களில் ஒருவனும் அறியவில்லை. அறிந்தார்களானால், மகிமையின் கர்த்தரை அவர்கள் சிலுவையில் அறையமாட்டார்களே. எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண்காணவுமில்லை, காதுகேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை. நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்திருக்கிறார்.' ( 1 கொரி 2:6-10) இந்த உலக ஞானத்தை கொண்டவர்கள், இந்த உலகத்தின் வேஷத்தை தரித்து, இந்த உலகத்திலுண்டானதும், அற்ப பிரயோஜனமுள்ளதும், அழிந்து போகிறதுமான மேன்மைகளை குறி த்து பெருமையடைகின்றார்கள். தேவ ஞானத்தை பெற்றவர்கள், தேறின சிந்iயுடையவர்களாக இருக்கின்றார்கள். ஒருவேளை அவர்கள் இந்த உலகத்திலே மேன்மையானவைகள் என்று கருதப்படுபவைகளை கொண் டிருந்தாலும், இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு, உலத்திலுள்ளவைகளைக் குறித்து மேன்மைபாராட்டாமலும், பூமிக்குரியவைகளை சிந்திக்காமல், பரலோகத்திற்குரியவைகளையே தியானமாக கொண்டிருக்கின்றார்கள்.

ஜெபம்:

தூய ஆவியை எனக்கு அருளின தேவனே, நான் இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு, பரலோகத்திற்குரியவைகளை பற்றிக் கொள்ள கிருபை செய்வீராக. இட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 கொரி 7:31