தியானம் (சித்திரை 30, 2026)
ஜீவனுக்குப் போகிற வாசல்
மத்தேயு 7:14
ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது;
நீங்கள் ஒரு வீட்டிற்கு விருந்தினராக போகும் போது, பொதுவாக, அங்கே நன்மையானவைகளே பேசிக் கொள்வார்கள். நீங்கள் வீட்டுக்காரரையும் அவர் குடும்பத்தினரின் நன்மைகளை பாராட்டுவீர்கள். அவர்களும் உங் களையும் உங்கள் பிள்ளைகளையும் பாராட்டுவார்கள். நீங்கள் விரு ந்துக்கு சென்றிப்பதால், அங்கே சுதந்திரமாக நடந்து கொள்ளாமல், ஜாக்கிரதையோடு காணப்படுவீர் கள். ஒருவேளை உங்கள் பிள்ளை கள் அந்த வீட்டிலே குழப்பம் பண் ணினாலும். விருந்துக்கு உங்களை அழைத்தவர்கள், அதை பாராமுக மாக விட்டுவிடுவார்கள். ஆனால், நீங்கள் சொந்த வீட்டிற்கு திரும்பிய பின்பு, வீட்டிலே விருந்துகள் அத் தனை சுவாரசியமாக இருப்பதில் லை. ஏன்? வீட்டிலே சுதந்திரம் உண்டு அதே வேளையிலே, வீட்டிலே நெறி ப்படுத்தல் உண்டு. சொந்த தகப்பன் தன் பிள்ளைகளையும் அவர்கள் எதிர்காலத்தைக் குறித்தும் கரிசணை யுள்ளவராக இருப்ப தால், அங்கே பாராட்டுகளும், உற்சாகப்படுத்துத லோடும், உண்மை யான கண்டிப்பும், கடிந்து கொள்ளுதலும் இருக்கும். சில சபைகளிலே, ஜனங்களை தக்கவைப்பதற்காக, சில ஊழியர்கள், விசுவாசிகளின் உண்மை நிலைமையை கூறுவதில்லை. அவர்களை பாராட்டி, உற்சாக ப்படுத்தும் வார்த்தைகளை கூறிக் கொள்வார்கள். நல்லது. ஆனால் சீர்திருத்தம் இல்லை. விசுவாசிகள் விருந்தினரைப் போல அங்கு இப்பதினாலலே ஊழியங்களை நடப்பிக்கின்றவர்களுக்கு சில இலாபம் உண்டாகின்றது. அதனால், அங்கே சீர்திருத்ததிற்கு இடமில்லை. இந்த நிலைமையை குறித்து வெளியரங்கமாக பேசுவதும் சிலருக்கு கடின மாக இருக்கலாம். ஆனால், எச்சரிக்கையுள்ளவர்களாக இருங்கள். வேதமே சத்தியம். சத்திய வேதம் முழுமையானது. அரைவாசி சத்தியம் என்பது தேவனுக்குரியது அல்ல. அது வஞ்சனைக்குரியது. சத்தியமா னது, ஜனத்திரளிலும், பணத்தொகையிலும், செயற்திட்டங்களினாலும் அளவிடப்படுவதில்லை. 'இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசி யுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கி றது. அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது. அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர் என்று ஆண்டவராகிய இயேசு கூறியிரு க்கின்றார். கருப்பொருளாவது, உண்மையும் உத்தமமுமாக நட ந்து உங்களை சீர்திருத்தி நல்வழிப்படுத்துகின்ற ஊழியர்களை கனம் பண்ணுங்கள்.
ஜெபம்:
என் நேசிக்கின்ற தேவனே, உமக்கு பயந்து உம் வழியிலே நடப்பவர்களின் ஆலோசனைகளை பினபற்றி கொண்டு, கடிந்து கொள்ளுதல்களை ஏற்றுக் கொள்ளும் உணர்வுள்ள இருதயத்தை எனக்கு தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - 2 தீமோ 3:16-17