தியானம் (வைகாசி 08, 2026)
சுயாதீனத்திலே நிலைத்திருங்கள்
கலாத்தியர் 5:1
கிறிஸ்து நமக்கு உண்டா க்கின சுயாதீன நிலைமையிலே நிலைகொண்டிருங்கள்.
ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த மனிதனொருவன், சூழ்நிலைகள் காரண மாக, தன் வாலிப வயதிலிருந்து துன்மார்க்க வழியிலே வாழ்ந்து வந் தான். ஒன்றின் பின் ஒன்றாக, அவன் குற்றங்களை செய்து தப்பிக் கொண்டான் ஆனால், ஒரு நாள், அவன் கையும் மெய்யமாக பெருங் குற்றத்திலே அகப்பட்டதால், அநேக ஆண்டுகளுக்கு சிறைத் தண்ட னையை பெற்றுக் கொண்டான். அந்த தண்டனை மிகவும் கடுமையாக இருந்தது. சில ஆண்டுகளுக்கு பின் னர், நாட்டின் சுதந்திர தினத்தன்று, நாட்டின் ஜனாதிபதி, அவனுக்கு பொது மன்னிப்பை கொடுத்து, எந்த அபராத மும் இன்றி, அவனை விடுதலை செய் தார். அவன் பெற்றுக் கொண்ட விடு தலையை அவனுக்கே நம்ப முடி யாமல் இருந்தது. 'இதற்கு பரிகார மாக நான் என்ன செய்ய வேண்டும்' என்று கேட்டான். நீ இந்த விடு தலைக்கென மேற்கொண்டு ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. நாட்டின் நல்ல குடிமகனாய் இரு. ஆனால், இனிமேல் குற்றம் செய்யாதபடிக்கு, எச்சரிக்கையாயிரு என கூறினா ர்கள். அவனோ, தன் ஊருக்கு சென்று, தான் செய்த குற்றத்திற்கு தான் ஏதாவது பரிகாரம் செய்ய வேண்டும் என்று தன் உடலை வருத் தினான். இன்னும் பற்பல கஷ;டங்களுக்குள் தன்னை உட்படுத்திக் நாட்களையும் நேரங்களையும் விரயப்படுத்தி வந் தான். இலவசமாக கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு நீதிமான் களாக்கப்பட்ட சகோதர சகோதரிகளே, மேற்கூறிய சம்பவத்திலே அந்த மனிதனுடைய கிரியைகளைக் குறித்து நீங்கள் என்ன கூறுவீர்கள்? அதுபோலவே, அந்நாட்களிலே, ஆண்டவராகிய இயேசுவினால் உண் டான இரட்சிப்பை பெற்றவர்கள், மறுபடியும் தங்கள் உடலை வருத்த வேண்டும், விட்டு வந்த மதக்கிரியைகளை செய்ய வேண்டும் என்று சிலரால் நிர்பந்திக்கப்பட்டார்கள். எடுத்துக்காட்டாக, இரட்சிப்படைந்தவர் கள், யூதமதத் தின் முறைமையின்படி, தேவன் முன்னிலையிலே ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு, மறுபடியும் சரீரத்திலே விருத்தசேதனம் செய்ய வேண்டும் என்று தவறாக போதித்து வந்தார்கள். இப்படிப்பட்ட பொய் யான போதகர்கள் ஆண்டவர் இயேசுவின் சிலுவை மரணத்தை அற் பமாக எண்ணுகின்றவர்களாகவும், தாங்கள் விட்டுவிட்ட பழைய வாழ்க்கை முறைமைக்கு மற்றவர்களை திரும்பப் பண்ணுகின்றவர்களாகவும் இருந் தார்;கள். இன்றும் இருக்கின்றார்கள். அவர்களுடைய போத னைகளை குறித்து விசுவாசிகள் எச்சரிக்கையுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
ஜெபம்:
விலைமதிக்க முடியாத இயேசுவின் இரதத்தினாலே எனக்கு மீட்பு உண்டாக்கிலே தேவனே, நான் மறுபடியும் பலனற்ற பழைய மதக்கிரியைகளுக்கு திரும்பாமல், தூய வாழ்வு வாழ கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - 1 தீமோ 4:1