புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 23, 2026)

நிரந்தர வதிவிடம்

ரோமர் 2:7

சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார்.


இரட்சிப்பை பெற்றபின்பு தங்கள் சுய விருப்பப்படி பழைய வாழ்க் கைக்கு திரும்புகின்றவர்களை குறித்து எச்சரிக்கையாயிருங்கள், பொல் லாத வேலையாட்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள், இரட்சிப்படைந்த பின்பு தாங்கள் விட்டு வந்த மதச்சடங்குகளுக்கு திரும்புகின்றவர்களைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்பதைப் குறித்து தேவனுடைய ஊழியக்காரனாகிய பவுல், பிலிப்பி யர் 3ம் அதிகாரத்தின் ஆரம்பத்தி லே திரும்பம் ஞாபகப்படுத்தியத்தைக் குறித்து நாங்கள் தியானித்து வந் தோம். மேலும், இப்படிப்பட்டவர் கள், பூமிக்குரியவைகளை சிந்தித்து, அவைகளை நாடித் தேடுகின்றார் கள். தங்களுக்கு ஆதயம் உண்டா கும்படி, விசுவாச மார்க்கத்தாரை வஞ் சிக்கும்படி, ஆண்டவர் இயேசு கிறி ஸ்துவின் நாமத்தை துஷ;பிரயோகம் செய்கின்றார்கள் என்று கூறியிரு க்கின்றார். இப்படிப்பட்ட கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடு விலே, முதலாவதாக: விசுவாசிகளாகிய நம்முடைய இருதயமானது பர லோகத்திற்குரியவைகளை வாஞ்சிக்க வேண்டும். ஏனெனில் நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிரு க்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண் டிருக்கிறோம். அந்த நாள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வெளிப்படும் நாள். ஆதலால், இரண்டாவதாக: கிறிஸ்துவின் நாளுக்கென்று துப்புர வானவர்களும் இடறலற்றவர்களுமாயிருக்க வேண்டும். இந்த உலக த்தின் போக்கில் வாழாமல், அநேக தியாகங்களை செய்து வருகின் றீர்கள். கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் அதிகமாக பிரயாசப்பட்டு வருகின்றீர்கள். அந்த இலக்கை அடையாதபடிக்கு, புறம்பேயிருக்கின்ற அவவிசுவாசிகளோ, அல்லது வெளிவேஷம் தரித்து, உள்ளே இருக்கின் றோம் என்று தங்களை விசுவாசிகள் போல காட்டிக் கொள்ளும் கள்ளப் போதகர்களோ உங்கள் பார்வையை திசைதிருப்பி, உங்கள் கண்களை உலகத்திலே பதிக்க வைப்பதற்கு இடங் கொடாதிருங்கள். ஆரம்பதிலே கொண்ட வைராக்கியத்திலே உறுதியாய் நில்லுங்கள். ஜீவவசனத்தைப் பிடித்துக்கொண்டு, உலகத்திலே சுடர்களைப்போலப் பிரகாசிக்கிற நீங்கள், சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தொடர்ந்து நாடித் தேடுங்கள், அப்படியாக உறுதியாய் தரித்திருப்பவர்களுக்கு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாமே நித்திய ஜீவனை அளிப்பார்.

ஜெபம்:

நான் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடைய வேண்டும் என்று என்னை வேறு பிரித்த தேவனே, என்னுடைய கண்களை பரலோக மேன்மையிலே பதியவைத்து ஓட எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 2:12