புதிய நாளுக்குள்..

தியானம் (தை 26, 2026)

சோர்ந்து போகாதிருங்கள்!

ரோமர் 2:7

சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார்.


ஒரு ஊரிலே இருந்த குறிப்பிட்ட மனிதனொருவன், சில ஆண்டுகளுக்கு பின், குறிபிட்ட ஒரு சந்தர்ப்பத்திலே, கோபத்தோடு 'எல்லோரும் கள்வ ர்கள்' என்று தேவ ஊழியர்கள், விசுவாசிகள் யாவரைக் குறித்து ஒரு அறிக்கையை கூறினான். அதை கேட்டிக் கொண்டிருந்த இன்னுமொரு விசுவாசியானவன் கோபமடைந்து, நீதிமானாகிய லோத்தே நீ மட்டும் மீந்திருக்கின்றாய், எப்படி நீ உன் நீதியின் நற்கிரியைகளை காண்பிக்க போகின்றாய் என்பதை பார்ப்போம்' என்று பதிலடி கூறினான். அதனால் அங்கே கலகம் உண்டாயிற்று. ஒரு சாரார் அந்த மனிதனையும், இன்னு மொரு சாரார் மற்ற மனிதனையும் சார்ந்து கொண்டார் கள். ஆனால், தேவ பயத்தோடு வாழும் விசுவாசிகளோ, இரண்டு சாராருடைய நடத்தையினாலே, பிதாவாகிய தேவனுடைய நாமம், மனிதர்கள் மத்தியிலே தூஷpக்கப்படு கின்றது என்று மனவேதனை அடைந்தார்கள். சண்டையின் ஆரம்பம் மதகைத் திறந்து விடுகிறதுபோலிருக்கும்; ஆதலால் விவாதம் எழும்பு முன் அதை விட்டு விடு (நீதி 17:14). தேவனுடைய சபை வழக்குக்கும் வாதுக்கும் உரியதல்ல. ஒருவன் தன் மதியீனத்தினால், துணிகரமாக மதியீனமான வார்த்தைகளை பேசினால், அவன் அதற்கு கணக்கு ஒப்புவிப்பான். 'இதோ, எல்லாருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற் கும், அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் யாவரும் அவபக்தியாய்ச் செய் துவந்த சகல அவபக்தியான கிரியைகளினிமித்தமும், தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடின வார்த்தைகளெல்லாவற்றினிமித்தமும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடு ங்கூட கர்த்தர் வருகிறார் என்று முன்னறிவித்தான். இவர்கள் முறுமுறுக்கிறவர்களும், முறையிடுகிறவர்களும், தங்கள் இச்சைகளின்படி நடக்கிறவர்களுமாயிருக்கிறார்கள்; இவர்களுடைய வாய் இறுமாப்பானவைகளைப் பேசும்; தற்பொழிவுக்காக முகஸ் துதி செய்வார்கள். நீங்களோ பிரியமானவர்களே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலரால் முன் சொல்லப்பட்ட வார்த்தைகளை நினைவுகூருங்கள். கடைசிக்காலத்திலே தங்கள் துன் மார்க்கமான இச்சைகளின்படி நடக்கிற பரியாசக்காரர் தோன்றுவார்கள் என்று உங்களுக்குச் சொன் னார்களே.' தேவ கிருபையைப் பெற்றவர்களே சோர்ந்து போகாமல் நற்கிரியைகளை தொடர்ந்து நடப்பியுங்கள்.

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள தேவனே, எங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் எங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவிக்குள் ஜெபம்பண்ணி, நற்கிரியைகளை நடப்பிக்க எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - தீத்து 3:10