புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 17, 2026)

உண்மையுள்ள ஊழியர்கள்

மத்தேயு 6:21

உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்.


கள்ளப் போதகர்கள் மத்தியிலே பொதுவாக காணப்படும் ஒரு சில குணாதிசயங்கள். இவர்களுடைய உபதேசங்கள் அதிகமதிமாக இந்தப் பூமிக்குரியவைகளாக இருக்கும். பூலோகத்திலே ஐசுவரியம், பூலோக த்திலே சம்பூரண சரீர சுகம் என்பதை வலியுறுத்திக் கூறிக் கொள்வா ர்கள். 'தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பா ர்கள்;. பாவங்களால் நிறைந்து, பற்பல இச்சைகளால் இழுப்பு ண்டு, எப்போதும் கற்றாலும் ஒருபோதும் சத்தியத்தை அறிந்து உணராதவர்களாயிருக்கிற பெண் பிள்ளைகளுடைய வீடுகளில் இப் படிப்பட்டவர்கள் நுழைந்து, அவர்களை வசப்படுத்திக்கொள்ளுகின்றார் கள்'. இவர்கள் கனிகள் வெளிப்படும்போது, இவர்கள் பொருளாசையும், மோக பாவ இச்சையும், மதுபான வெறிகொள்ளுதல் போன்றவை வெளிப்படும். தேவ ஊழியராகிய பவுல், கொலோசேயருக்கு எழுதின நிருபத்தின் 3ம் அதிகாரத்தில்: நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண் டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத் திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள். பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள். ஏனென்றால், நீங்கள் மரித்தீர்கள், உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது. நம் முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது, நீங்களும் அவரோ டேகூட மகிமையிலே வெளிப்படுவீர்கள். ஆகையால், விபசாரம், அசு த்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங் களை அழித்துப்போடுங்கள்.' என்று கூறியிருக்கின்றார். கிறிஸ்துவுக்குள் அருமையான சகோதர சகோதரிகளே, நீங்கள் கள்ளப் போதகர்களிடம் அகப்பட்டு, வாழ்விலே பின்னடைவுகள் ஏற்பட்டிருந்தால், அந்த அனுப வத்தினாலே, கிறிஸ்து இயேசுவினால், அழைக்கப்பட்டு, உண்மையாய் ஊழியம் செய்கின்றவர்களை மறந்து போய்விடாதிருங்கள். பிலிப்பிய சபையிலுள்ள விசுவாசிகள் மத்தியிலே பல பிரச்சனைகள் இருந்த போதும், அவர்கள் பவுல் உண்மையான இயேசு கிறிஸ்துவினுடைய ஊழியக்காரன் என்று அறிந்திருந்தார்கள். அதுபோலவே நீங்களும் இருக்கும்படிக்கு, வேத வார்த்தைகளை அறிந்து கொள்ளுங்கள். இர வும் பகலும் அவைகளை தியானியுங்கள். சத்திய ஆவியானவருக்கு இடம் கொடுக்கும் போது, அவர் உங்களை உண்மையுள்ளவர்களிடத் தில் வழிநடத்திச் செல்வார்.

ஜெபம்:

நித்திய ஜீவனுக்கென்று என்னை அழைத்த தேவனே, உம்முடைய சத்திய வார்த்தைகளை அதுதினமும் தியானித்து, அவைகளை இருதயத்தில் பதித்து வைக்க எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து என் னை வழி நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 1 கொரி 2:15

Category Tags: