புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 05, 2025)

பிதாவின் சித்தத்தை செய்கின்றவர்கள்

யோவான் 6:29

அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியையாயிருக்கிறது என்றார்.


'ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது. அந்த வார் த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவரு டைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.' அந்த வார்த்தையானவர் இயேசு, இந்த உலகத்திற்கு வந்த நாளை நாம் இம்மாதத்திலே நினைவுகூருகின்றோம். பிதாவாகிய தேவனுடைய வாக்குத்தத்தம் நிறைவேறியதை அந்நாளிலே கொண்டாடுகின்றோம். ஜீவ வார்த்தையை கேட்க மனதில்லாதவர்கள் பிதாவாகிய தேவனுடைய சித்த்த்தை செய்ய முடியாது. ஒரு சமயம், மதத்ததலைர்கள், ஆண்டவராகிய இயேசுவை சோதிக்கும்படி, அவ ரிடத்தில் வந்து சில கேள்விகளை கேட்டார்கள். அவர்களுக்கோ தேவ னுடைய வார்த்தையை கேட்க மனதில்லை. அவர்கள் உணர்வடையும்படி அவர்களை நோக்கி: உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? ஒருமனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள்; மூத்தவனிடத்தில் அவன் வந்து: மகனே, நீ போய் இன்றைக்கு என் திராட்சத்தோட்டத்தில் வேலைசெய் என்றான். அதற்கு அவன்: மாட்டேன் என்றான்; ஆகிலும், பின்பு அவன் மனஸ்தாபப்பட்டுப் போனான். இளையவனிடத்திலும் அவன் வந்து, அப்படியே சொன்னான்; அதற்கு அவன்: போகிறேன் ஐயா, என்று சொல்லியும், போகவில்லை. இவ்விருவரில் எவன் தகப்பனுடைய சித்தத்தின்படி செய்தவன் என்று கேட்டார்; அதற்கு அவர்கள்: மூத்தவன்தான் என்றார்கள். அப்பொழுது, இயேசு அவர்களை நோக்கி: ஆயக்காரரும் வேசிகளும் உங்களுக்கு முன்னே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். அதென்னவெனில், ஆலயத்திலே பொறுப்பாக இருந்தவர்கள், தேவ வார்த்தையை கேட்டு மனதிரும்ப மனதில்லாத வர்களாக இருந்தார்கள். ஆனால், பாவிகளாக வாழ்ந்தவர்களோ, தங்களை தாழ்த்தி, மனந்திரும்பி, தேவனுடைய வார்த்தைக்கு தங்களை ஒப்புக் கொடுத்தார்கள். அவர்கள் வார்த்தையிலே நிலைத்திருந்தால், தேவனுக்கேற்ற கிரியைகளை செய்தார்கள்.

ஜெபம்:

மெய்யான ஜீவன் தரும் வார்த்தையை எனக்கு தந்த தேவனே, உம்முடைய வார்த்தையைக் கேட்டு, அந்த வார்த்தையிலே நிலைத்திருந்து வாழும்படிக்கு எனக்கு ஞானமுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - மத்தேயு 21:28-32