புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 04, 2025)

ஜீவன் தரும் திருவார்த்தை

யாக்கோபு 1:21

உங்கள் உள்ளத்தில் நாட்டப்பட்டதாயும் உங்கள் ஆத்துமாக்களை இரட்சிக்க வல்லமையுள்ளதாயுமிருக்கிற வசனத்தைச் சாந்தமாய் ஏற்றுக்கொள்ளுங்கள்.


'என் பிரியமான சகோதரரே, மோசம்போகாதிருங்கள். நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது. அவரிடத்தில் யாதொரு மாறு தலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை. அவர் சித்தங் கொண்டு தம்முடைய சிருஷ்டிகளில் நாம் முதற்பலன்களாவதற்கு நம்மைச் சத்திய வசனத்தினாலே ஜெநிப்பித்தார். ஆகையால், என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவ ர்கள்;. மனுஷருடைய கோபம் தேவ னுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே. ஆகையால், நீங்கள் எல் லாவித அழுக்கையும் கொடிய துர்க்குணத்தையும் ஒழித்துவிட்டு, உங்கள் உள்ளத்தில் நாட்டப்பட்டதாயும் உங்கள் ஆத்துமாக்களை இரட்சிக்க வல்லமையுள்ளதாயுமிருக்கிற வசனத்தைச் சாந்தமாய் ஏற்றுக்கொள்ளுங்கள். அல்லாமலும், நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர் களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள். என்ன த்தினாலெனில், ஒருவன் திருவசனத்தைக் கேட்டும் அதின்படி செய்யாதவனானால், கண்ணாடியிலே தன் சுபாவ முகத்தைப் பார்க்கிற மனுஷனுக்கு ஒப்பாயிருப்பான்;. அவன் தன்னைத்தானே பார்த்து, அவ்விடம் விட்டுப் போனவுடனே, தன் சாயல் இன்னதென்பதை மறந்துவிடுவான்.' என்று யாக்கோபு எழுதின நிருபத்திலே முதலாம் அதிகாரத்திலே 16ம் வசனத்திலிருந்து 24 வசனம் வரை வாசிக்கிறோம். எனவே, நாம் நித் திய ஜீவன் தரும், சத்திய வசனமாகிய திருவசனத்தை கேட்க வேண்டும். அதை கேட்டு, அதை பிரசங்கிக்ககூடிய திறமையுள்ள விசுவாசிகள் அநேகர் இருக்கின்றார். அத்தோடு நின்று விடாமல், திருவசனத்தை போதிக்கின்றவர்களும், கேட்கின்றவர்களும்,அவைகளை தங்கள் சொந்த வாழ்க்கையில் கைக்கொள்வதில் அனுதினமும் வளர்ந்து பெருக வேண்டும். தேவ வசனத்தை அட்டை செய்கின்றவன் தன் ஆத்து இரட் சிப்பை அற்பமாக்குகின்றவனாக காணப்படுவான். அவன் பற்பல கிரியைகளை செய்தாலும், ஜீவ வசனம் கிரியை செய்வதற்கு அவனிட த்தில் இடமில்லாமல் இருப்பதினால் அவன் தன்னிலே வீண் அலுவற்கா ரனாகவே காணப்படுவான். நீங்களோ, முதலாவதாக திருவசத்தை சாந்தத்தோடு ஏற்று அதன்படி வாழுங்கள்.

ஜெபம்:

உம் வார்த்தையினால் என்னை உருவாக்கி தேவனே, நான் திருவசனத்தைக் கேட்கிறவனாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவனாயும் இருக்க எனக்கு பெலன் தந்து உம் வழியிலே நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 2 யோவான் 1:9