புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 19, 2025)

ஜெபத்திலே தரித்திருக்க வேண்டும்

எபேசியர் 6:18

எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அத ன்பொருட்டு மிகுந்த மனஉ றுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்து க்கொண்டிருங்கள்.


'அன்றியும் நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள். அவர்க ளைப்போல நீங்கள் செய்யாதிருங்கள்; உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.' (மத்தேயு 6:7-8) என்று ஆண்டவராகிய இயேசு கூறிய அறிவுரைகளை சிலர் தவ றான முறையிலே விளங்கிக் கொண்டு, நீண்ட ஜெபங்களிலே தேவன் பிரியமாயிரார் எனவே, நான் சுருக்கமாக, மட்டாக ஜெபம் பண்ணினால் போதும் என்று காலையில் எழுந்தவுடன் சீக்கிரமாக இரண்டொரு வார்த்தைகளை பேசிவிட்டு, தங்கள் வழமையான காரியங்களுக்கு சென்று விடுகின்றார்கள். இப்படிப்பட்டவர்கள், ஒருவேளை உண்மையாக கர்த்தரின் வார்த்தையின் கருப்பொருளை அறியாமல் இருக்கலாம் அல்லது தங்கள் மாம்சத்தின் சோர்வினால், கர்த்தருடைய வார்த்தையை தங்கள் வழிகளை நியாயப்படுத்த பயன்படுத்துகின்றவர்களாக இருக்கலாம். எவை எப்படியாக இருந்தாலும், கருப்பொருளாவது. அர்த்தமற்றதும், உண்மையற்றதுமான வார்த்தைகளிலே தேவன் பிரியமாக இரார். ஆண்டவராகிய இயேசு இந்த உலகிலே இருந்த நாட்களிலே, 'அவர் ஜெபம்பண்ணும்படி ஒரு மலை யின்மேல் ஏறி, இராமுழுதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக் கொண்டிருந்தார். பொழுது விடிந்தபோது, அவர் தம்முடைய சீஷர்களை வரவழைத்து, அவர்களில் பன்னிரண்டுபேரைத் தெரிந்துகொண்டு, அவர்களுக்கு அப்போஸ்தலர் என்று பேரிட்டார்.' (லூக்கா 6:12-13). நாம் சுருக்கமாக ஜெபம் செய்யும் நேரம் உண்டு. அதுபோலவே நாம் ஜெபத் திலே தரித்திருக்க வேண்டி வேளைகளும் உண்டு. தேவனிடத்தில் ஏறெடுக்கின்ற எந்த ஜெபத்திலும், நயவசனிப்போடு நாம் செல்லாமல், நம் இருதயத்தை தேவனுடைய சமுகத்திலே ஊற்றிவிட வேண்டும். அதிகமாக செய்வதினால், தேவனுடைய கவனத்தை நம்மிடம் திருப்பி கொள்ளலாம் என்ற எண்ணத்தை களைந்துவிட்டு, தேவ சித்தம் நிறைவேறம்படி நாம் ஜெபம் செய்யக்கடவோம்.

ஜெபம்:

எங்கள் மத்தியிலே வாசம் செய்யும் தேவனே, சகலவித விண்ணப்பங்களோடும் வேண்டுதல்களோடும் கருத்தோடு ஜெபத்திலே தரித்திருக்கும்படி, உற்சாகமுள்ள ஆவியை எனக்கு தந்து என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 1 தெச 5:17

Category Tags: