புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 15, 2025)

வெளிவேடமான போதனைகள்

மத்தேயு 7:16

அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில் திராட்சப்பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா?


இன்று சிலருக்கு ஆண்டவர் இயேசுவைப் போல அற்புதங்கள் செய்ய விருப்பம் உண்டு ஆனால் அவைகளுக்கு ஒரு விலையை வைத்து பொருளாதார ஆதாயத்தை தேடுகின்றார்கள். ஆண்டவர் இயேசுவைப் போல பிரசங்கிக்க விருப்பம் ஆனால் அவர் கூறியவைகளை தங்கள் வாழ்வில் நடைமுறைப்படுத்த விருப்பமில்லை. ஆண்டவர் இயேசுவைப் போல ஊர் ஊராக சென்று நற்செ ய்தியை அறிவிக்க ஆசை ஆனால், எளிமையான வாழ்க்கை வாழ விரு ப்பமில்லை. சிலர் ஆண்டவர் இயே சுவின் ஊழியர்கள், சீஷர்கள், விசுவா சிகள் என்று சொல்லிக் கொள்ள ஆசை ஆனால், அவருடைய வார்த் தையின்படி வாழ்வதைப் போல தங் களை காண்பித்துக் கொள்வார்கள். ஆனால், உண்மையிலேயே அவர் கள் சொல்லும், செயலும், சிந்தனையும் அவர்களுக்குள் வேறுபட்டதாக இருக்கும். இப்படிப்பட்டவர்கள் வெளிவேடமான வாழ்க்கை வாழ்கி ன்றவர்களாக இருக்கின்றார்கள். இவர்கள் வெளி உலகத்திற்கு தங் களை பரிசுத்தவர்களாக காண்பித்துக் கொண்டு, இருதயத்திலே வேறு தனிப்பட்ட இலாபங்களுக்காக கிரியைகளை நடப்பிக்கின்றவர்களாக இருக்கின்றார்கள். ஆனால் வெளிப்படாமல் மறைந்திருப்பது ஒன்று மில்லை என்ற பிரகாரமாக இவர்களுடைய வேஷங்கள் யாவும் களை ந்து, இவர்கள் யார் என்று வெளிப்படும் நாட்கள் உண்டு. தோட்டத்தி லுள்ள மரங்கள் செழித்து வளருமாபோல், இவர்கள் யாவரும் ஆண்ட வருடைய திருநாமத்தை கூறிக் கொண்டு, பல்வேறு கிரியைகளை நட ப்பிக்கின்றார்கள். தோட்டத்திலுள்ள மரங்கள் கனிகொடுக்கின்ற காலம் வரும் போது, அந்த மரங்களின் பிரயோஜனம் வெளிப்படுவது போல, இவர்களின் பலன்கள் இன்னவென்று அவர்கள் வாழ்விலே அவர்கள் வெளிக்காட்டும் கனிகள் உறுதிப்படுத்தும். எனவே கள்ளத் தீர்க்கத ரிகளை குறித்து எச்சரிக்கையாயிருங்கள். அதாவது, நீங்கள் காண்கின்ற யாவரும் கனி கொடுக்கும்வரை காத்திருப்பேன் என்று எல்லோரையும் சந்தேக கண்ணோடு பார்க்க வேண்டும் என்பது பொருளல்ல. மாறாக, ஊர் பேர், இடம், துறை தெரியாதவர்கள், கர்த்தரின் நாமத்தை சொல்லி கொண்டு, உங்களிடத்தில் வரும் போது, எச்சரிக்கையுள்ளவர்களாக இரு ங்கள். அவர்களுடைய வாழ்க்கையின் பின்ணணியை அறிந்து செயற் படுங்கள். தேவ ஆவியானவரின் வழிநடத்துதலுக்காக பொறுயோடு ஜெபம் செய்யுங்கள். அவர் உங்களை சகல சத்தியத்திலும் வழிநடத்துவார்.

ஜெபம்:

சகல சத்தியத்திலும் என்னை வழிடத்தும் தேவனே, கோணலும் மாறுபாடுமான இந்த உலகத்திலே, கண்ணிகளில் சிக்கி வஞ்சிக்கப்பட்டு போகாதபடிக்கு, உம்முடைய வார்த்தையின் நிலைத்திருக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 23:15