தியானம் (ஆடி 01, 2025)
நம் தேவைகளை சந்திக்கின்றவர்
சங்கீதம் 105:40
வான அப்பத்தினாலும் அவர்க ளைத் திருப்தியாக்கினார்.
தேவ ஜனங்கள் வனாந்திரத்திலே ஆகாரம் இல்லாததினால், தங்கள் நிலைமையை குறித்து முறுமுறுத்தார்கள், முறையிட்டார்கள். தேவனா கிய கர்த்தர் அவர்கள்மேல் கோபம் கொள்ளாமல், அவர்கள் பெலவீன ங்களை உணர்ந்து, 'நான் உங்களுக்கு வானத்திலிருந்து அப்பம் வருஷpக்கப்பண்ணுவேன்: ஜனங்கள் போய், ஒவ்வொரு நாளுக்கு வேண்டி யதை ஒவ்வொரு நாளிலும் சேர் த்துக் கொள்ள வேண்டும்' என்று கூறினார். (யாத்திராகமம் 16). அந்த நாளிலிருந்து, தேவ ஜன ங்கள் வனாந்திர யாத்திரையை முடித்து, யோர்தான் நதியை கடக்கும் நாள்வரைக்கும் அவர்க ளுக்கு அனுதின மன்னாவை பொழிந்தார். (யோசுவா 5:12). அப்படியாக தம்முடைய ஜனங்கள் உயிர் வாழ்வதற்கு அவசியமான சரீர தேவை களை சந்தித்து வந்தார். அன்றுமட்டுமல்ல, இன்றும் சந்தித்து வருகி ன்றார். நம்முடைய பரமபிதா பிழைப்பூட்டுகின்றார். ஆவிக்குரிய ஆகாரத்தை மாத்திரமல்ல, அவர் நம்முடைய சரீரம் உயிர் வாழ்வதற்கு தேவை யானவைகளையும் தம்முடைய பிள்ளைகளுக்கு கொடுக்கின்றார். ஆகை யால், என்னத்தை உண்போம், என்னத்தை குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று கவலைப்படாதிருங்கள் என்று ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார். ஆகாரத்தைப் பார்க்கிலும் ஜீவனும், உடையைப் பார்கிலும் சரீரமும் விசேஷpத்தவைகளாயிருக்கின்றது. அதனால், பரமண்டலத்திலிருக்கின்ற பிதா தாமே, சரீரத்திற்கு வேண்டிய ஆகாரத்தை குறித்து கரிசணையற்றவராக இருப்பாரோ? உங்கள் பிள்ளைகள் பட்டினியாய் இருக்கும் போது, வேதத்தை வாசித்து, உபவாசித்து ஜெபம்பண்ணு என்று கூறுவாரோ? இல்லை, அவர் நம்முடைய வாழ்க்கைக்கு தேவையானவைகள் நமக்கு அனுப்பி வைக்கின்றார். அதனால், நாம் நம்முடைய அனுதின ஆகாரத்தைக் குறித்து கவலையடையத் தேவையில்லை. தேவ அறியாதவார்களே, வல்லரசுகள் வரிகளையும் நிலுவைகளையும் அதிகரித்து விட்டது. பொருளாதார வீழ்ச்சி ஏற்படப் போகின்றது. வேலைகள் இல்லாமற் போகப் போகின்றது. நாங்கள் என்ன செய்வோம் என்று பதற்றமடைந்து, திகலடைகின்றார்கள். ஆனால், பரலோகத்திலே இருக்கின்ற பிதா, இவைகளை அறியாரோ? இந்த பூவுலத்தின் ராஜ்யங்கள் அவருடைய அதிகாரத்திற்கு மேற்பட்டதாயிற்றோ? இல்லை! எல்லாம் அவருடைய ஆளுகைக்கு கட்டுப்பட்டிருக்கின்றது.
ஜெபம்:
சகலமும் அறிந்த சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, நான் என்னுடைய தேவைகளை குறித்து, மனமுடைந்து துக்கமடையா தபடிக்கு, உம்மையே நம்பிருக்கும் இருதயத்தை எனக்கு தந்து நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - மத்தேயு 6:31