தியானம் (மார்கழி 01, 2025)
தேவனுக்கேற்ற கிரியைகள்
சங்கீதம் 19:14
என் கன்மலையும் என் மீட்பருமாகிய கர்த்தாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்தில் பிரீ தியாயிருப்பதாக.
இந்த வருட ஆரம்பத்திலிருந்து ஆண்டவராகிய இயேசுவின் மலைப் பிரசங்கத்தை தியானித்து வருகின்றோம். அந்தப் பிரசங்கத்தின் கடைசி வார்த்தைகளை நாம் கடந்த சில நாட்களாக தியானித்து வருகின்றோம். யார் பரலோத்திற்கு போக முடியும் என்பதை திட்டமாகவும் தெளிவா கும் ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார். அந்நாட்களிலே வாழ் ந்த மதத்தலைவர்களில் அநேகரும், அவர்களைப் பின்பற்றயவர்களும், தங்களுக்கென்று ஒரு நீதியை ஏற் படுத்தியிருந்தார்கள். தேவனாகிய கர்த்தரை தங்கள் கிரியைகளி னாலே திருப்திபடுத்துவோம் என்ற எண்ணமுடையவர்களாக, வெளிய ரங்கமான கிரியைகளை நடப்பித்து வந்தார்கள். அவர்கள் வெளியர ங்கமாக நடப்பித்து கிரியைகளில் அதிகமானவைகள் நற்கிரியைகளாவே காணப்பட்டது. அதாவது, அவ ர்கள் வாரத்திலே இரண்டுதரம் உபவாசித்து வந்தார்கள். இன்று யாரால் இதை ஒழுங்காக கடைப்பிடிக்க முடியும்? பலருக்கு இது மிகவும் கடி னமாக செயல். அவர்கள் இப்படியான கிரியைகளை வெளியரங்கமாக செய்து வந்தபோதும், அவர்கள் இருதயமானது தேவனுக்கு தூரமா னதாகவே இருந்து வந்தது. வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள் புற ம்பே அலங்காரமாய்க் காணப்படும், உள்ளேயோ மரித்தவர்களின் எலும் புகளினாலும் சகல அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும். அப்படியாகவே அவர்கள் உள்ளம் இருக்கின்றது என்று ஆண்டவராகிய இயேசு மத் தேயு 23ம் அதிகாரத்திலே அவர்களை குறித்து கண்டித்து கூறியிருக் கின்றார். எனவே, மலைப்பிரசங்கத்தின் கருப்பொருளாவது, நாம் நம க்கு பிரியமான கிரியைகளை செய்து, தேவனாகிய கர்த்தரை பிரியப் படுத்த முயற்சி செய்யாமல், தேவன் விரும்பும், தேவ ராஜ்யத்திற்குரிய கிரியைகளை, அவருடைய சித்தப்படி நடப்பிக்க வேண்டும். வெளிய ரங்கமாக நற்கிரியைகள் இருதயத்தின் ஆழத்திலிருந்து புறப்பட்டு வரவேண்டும். தேவனுக்கு முன்பாக இருதயம் உண்மையாக இருக்க வேண்டும் என்பதை ஆண்டவராகிய இயேசு மிகவும் தெளிவாகவும், யாவரும் விளங்கிக் கொள்ளகூடிய விதத்திலும் கூறியிருக்கின்றார். எனவே, மீட்பராகிய இயேசுவின் முதலாம் வருகையை நினைவுகூரும் இம்மாதத்திலே, நாம் தொடர்ந்து தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பி க்கும்படி உணர்வுள்ள இருதயத்தோடு முன்னேறிச் செல்வோமாக.
ஜெபம்:
இந்த உலகம் கெட்டுப்போகமல் நித்திய ஜீவனை அடைய வேண்டும் என்று உம்முடைய திருக்குமாரனை இவ்வுலகிற்கு அனுப்பிய தேவனேஇ நான் உணர்வுள்ள வாழ்க்கை வாழ எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - மத்தேயு 7:24-29