புதிய நாளுக்குள்..

தியானம் (தை 23, 2026)

கிருபையில் பங்குள்ளவர்களானதால்

பிலிப்பியர் 1:7

நீங்கள் அனைவரும் எனக்கு அளிக்கப்பட்ட கிருபையில் பங்குள்ளவர்களானதால்,


போராட்டம் நிறைந்த வாழ்க்கையிலே, தேவ கிருபை இல்லாமல் விசுவாசிகள் நாளந்தம் எதிர்நோக்கும் சவால்களை மேற்கொள்ள முடியாது. தேவ கிருபையானது பல வழிகளிலே நமக்கு வெளிப்படுத்தப்படுகின்றது. அவைகளிலே மனித தயானவானது ஒரு வழியாக இருக் கின்றது. சில வேளைகளிலே விசுவாசிகள் இதை உணராது போய்வி டுகின்றார்கள். தேவ ஊழியராகிய பவுல் சிறையிலிருந்து பிலிப்பியருக்கு நிரூபத்தை எழுதினார். அவர் சிறையிலே இருப்பதை அறிந்து கொண்ட சிலர், அவரைக் குறித்த வெட்கமடைந்து, அவருக்கு உதவி செய்யாமல் போய்விட்டார்கள். ஆனால், பிலிப்பி பட்டணத்திலே இருந்த விசுவாசிகளோ, எப்போதும் நன்றியறிதலுள்ளவர்களாக இருந்தார்கள். தேவ ஊழியவராகிய பவுல் பல நெருக்கங்கள், கட்டுக்கள் மத் தியிலும் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை திடமாக பிரசங்கித்து வந்தார். அந்த தைரியமானது அவருடைய சொந்த பெலத்தினால் உண்டாகவில்லை, மாறாக அது தேவ கிருபையினால் உண்டானது. தேவ கிரு பையானது அவருக்கு வெளிப்படுவததிலே பிலிப்பி பட்டணத்து விசு வாசிகள் பங்குள்ளவரானார்கள். 'என் கட்டுகளிலும், நான் சுவிசேஷத்திற்காக உத்தரவுசொல்லி அதைத் திடப்படுத்திவருகிறதிலும், நீங்கள் அனைவரும் எனக்கு அளிக்கப்பட்ட கிருபையில் பங்குள்ளவர்களான தால், உங்களை என் இருதயத்தில் தரித்துக்கொண்டிருக்கிறபடியினாலே, உங்களெல்லாரையுங்குறித்து நான் இப்படி நினைக்கிறது என க்குத் தகுதியாயிருக்கிறது.' என்று அப்போஸ்தலராகிய பவுல், தனது நன்றியை பிலிப்பி சபையின் விசுவாசிகளுக்கு தெரியப்படுத்தினார். அவர் அவர்களுடைய உபகாரத்தை நாடி ஊழியம் செய்யவில்லை, தன் பிரயாசத்தின் பலனானவர்களாக பிலிப்பு பட்டணத்தின் விசுவாசிகள் பெற்றுக் கொள்ளவதைப் பார்க்கிலும் கொடுப்பதே நல்லது என்ற திவ்விய சுபாவத்திலே வளர்ந்திருப்பதைக் கண்டு அவர் அவர்களை குறித்து பெரு மகிழ்ச்சியடைந்தார். இந்த சம்பவத்திலே தேவ ஊழியராகிய பவுலின் மனதும், பிலிப்பு சபையானரின் மனங்களும் ஒருமித்து இருந்தது. இரண்டு சாரராரும் நன்றியறிதலுள்ளவர்களாக இருந்தார்கள். அதுபோலவே, நாம் எந்தப் பக்கத்தில் இருந்தாலும், தேவ கிருபை வெளிப்படுதலிலே பங்குள்ளவர்களாக இருக்க வேண்டும். கொடுக்கின் றதிலும், நன்றியறிதலுள்ளவர்களாக இருப்பதிலும் வளர்ந்து பெருகின்றவர்களாக முன்னேறிச் செல்வோமாக.

ஜெபம்:

புது கிருபையை அனுதினமும் எனக்கு பொழியும் தேவனேஇ உம்முடைய கிருபையை மேன்மைபாராட்டுவதோடு நின்றுவிடாமல் அதிலே பங்குள்ளவனாக மாறும்படிக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எபேசியர் 6:18