புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 17, 2026)

பலன் தராத மேன்மைகள்

எபிரெயர் 4:14

நாம் பண்ணின அறிக்கையை உறுதியாய்ப் பற்றிக் கொண்டிருக்கக்கடவோம்.


'நான் யார் என்று அவனுக்கு தெரியாது போல' 'எங்களுடைய குடும்ப பின்ணனியை அறியாமல் இவன் பேசுகின்றான்' 'அந்த மனிததன் பழைய பாடதிட்டதின்படி, அக்காலத்திலே அதி உயர் கல்வித் தகமையை பெற் றிருந்தார்' இப்படியான தொனிகளை குடும்ப உறவுகள் மத்தியில் மாத்திரம் அல்ல சபையிலும் சில விசுவாசிகள், ஊழியர்கள் குறிப்பிடுவதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். அதாவது, சபையிலே சில குழப்பங்கள், கருத்து முரண்பாடுகள் ஏற்படும் போது, வேத வார்த்தைக்கு கீழ்படிந்து, தாழ்மையுள்ள இருதயத்திதோடு ஆவிக்குரிய போராட்டம் செய் வதற்கு பதிலாக, தங்கள் பழைய வாழ்க்கையின் அல்லது பழைய வாழ்க்கையிலிருந்து இன்னும் விட்டுவிடாமல், இருதயத்திலே வைத்திருக்கும் காரியங்களை அறிக்கையிடுகின்றார்கள். வேதத்தைக் குறித்து பேசும்போது அல்லது ஜெபிக்கும் போது, நான் கிறிஸ் துவின் சிலுவைiயும், தேவ கிருபையையுமே மேன்மைபாராட்டுவேன் என்று ஆணித்தரமாக சிலர் அறிக்கையிடுவார்கள். ஆனால், மற்றவர்களோடு பிரச்சனைகள் வரும்போது, தங்கள் வாழ்விலுள்ள உலக மேன்மைகளை கூறிவிடுகின்றார்கள். எடுத்துகாட்டாக, ஒரு ஊழியர் தவறும்போது, அவருடைய கல்வித் தகமை என்னதென்று உனக்கு தெரியுமா என்று அவருடைய ஆதரவாளர்கள் கூறிக் கொண்டார்கள். பிரியமானவர்களே, கல்வித் தகமைகள் ஒருவனுக்கும் இரட்சிப்பை உண்டு பண்ணினதுமில்லை உண்டு பண்ணுவதுமில்லை. ஒருவன் பாவம் செய்தால், அவன் விசுவாசியாக இருந்தாலும், அல்லதுமேல் மட்டத்திலே இருக்கும் பெரிய ஊழியக்காரனாக இருந்தாலும், தன்னுடைய விட்டு வந்த, பலனற்ற உலக தகமைகளினால் தன்னை நியாயப்படுத்த முயற்சி செய்யாமல், நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக் கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப் போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார் என்று அறிந்து, இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங் கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேர வேண்டும். 'நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.'

ஜெபம்:

அன்பின் தேவனே, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைக்குரிய பழைய மனுஷனை நான் களைந்துபோட்டு, உள்ளத்திலே புதிதான ஆவியுள்வானாக புதிய மனுஷனை தரித்துக் கொள்ள கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 3:4-8