தியானம் (ஆடி 10, 2026)
கர்த்தருக்குள் நிலைத்திருங்கள்
பிலிப்பியர் 4:1
பிரியமானவர்களே, இந்தப்படியே கர்த்தருக்குள் நிலைத்திருங்கள்.
தேவனுடைய ஊழியக்கரனாகிய பவுல், பிலிப்பியருக்கு எழுதின நிரூபத்தின் 3ம் அதிகாரத்தில், கடைசி இரண்டு வசனங்களையும் தியா னித்து வந்தோம். குறிப்பாக நம்முடைய குடியிருப்பு பரலோகத்திலிருக்கின்றது. அங்கிருந்து நம்முடைய இரட்சகராயிருக்கின்ற இயேசு கிறி ஸ்து வெளிப்படும்படி எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம். இதுவே இந்த பூமியிலே ஒரு விசுவாசியின் வாழ்க்கையின் நோக்கத்தின் சார ம்சம். இதுவே இலக்கு. இதை மையமாக வைத்தே மிகுதியான காரியங்கள் யாவும் செயற்படுத்தப்பட வேண்டும். தனிப்பட்ட வாழ்விலே, குடும்பத்திலே, உறவினர் நண்பர்கள் மத்தியிலே, பாடசாலைகளிலே, வேலை செய்யும் இடங்களிலே, ஆளுகை செய்யும் அதிகாரங்களிடமிருந்தும், வெளியிடங்களிலே, அயலவர்கள் மத்தியிலே, அந்நியர்களிடமிருந்தும், எதிரிகளிடமிருந்தும் சவால்களும், நெருக்கங்களும், துன்பங்களும், நம்பி க்கை துரோகங்களும் உண்டாகலாம். அதுமட்டுமல்ல, சபையிலே, ஊழி யங்களிலே, விசுவாசிகள் மத்தியிலே கருத்து முரண்பாடுகளும் நம்பி க்கைத் துரோகங்களும் உண்டாகலாம். ஒருவேளை நன்மை செய்து பாடநுபவிக்க நேரிடலாம். நஷ்டங்கள் உண்டாகலாம். இவை எல்லாவ ற்றின் மத்தியிலும், விசுவாசிகள் தங்கள் நோக்கத்தை மறந்து போய்விட க்கூடாது. அதவாது, நம்முடைய குடியிருப்பு பரலோகத்திலிருக்கின்றது. அங்கிருந்து நம்முடைய இரட்சகராயிருக்கின்ற இயேசுகிறிஸ்து வெளிப்படும்படி எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம். இக்காலத்து பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவே. நாம் வாஞ்சிப்பது நாம் நம் கண்களால் காணும் உலகமல்ல. நாம் காணாத பரலோகத்தை வாஞ்சிக்கின்றோம். 'நாம் காணாததை நம்பினோமாகில், அது வருகிறதற்குப் பொறுமையோடே காத்திருப் போம்.' என்று பரிசுத்த வேதாகமத்திலே ரோமருக்கு எழுதின நிரூப த்திலே தேவ ஊழியராகிய பவுல் குறிப்பிட்டிருப்பதைக் காணலாம். பிலிப்பியர் 4ம் அதிகாரத்தின் ஆரம்பத்திலே, ஆதலால், எனக்குப் பிரிய மும் வஞ்சையுமான சகோதரரே, எனக்குச் சந்தோஷமும் கிரீடமுமான வர்களே, பிரியமானவர்களே, இந்தப்படியே கர்த்தருக்குள் நிலைத்திருங்கள் என்று கூறியிருக்கின்றார். ஆம் அருமையான விசுவாசிகளே, எல்லா சூழ்நிலைகளின் மத்தியிலும், உயர்விலும், தாழ்விலும், மேன்மையான இலக்கை மனகண்முன் வைத்துக் கொண்டு, கர்த்தருக்குள் நிலைத்திருங்கள். அழைத்தவர் உண்மையுள்ளவர்!
ஜெபம்:
பரலோக தேவனே, இவ்வுலக பாடுகளினாலும், சுகபோகங்களினாலும், நான் என்னுடைய மேலான நோக்கத்தை மறந்து போய்விடாமல், உம்முடைய வார்த்தையிலே நிலைத்திருந்து கனிகொடுக்க பெலன் தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - ரோமர் 8:18-27