புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 01, 2026)

வாக்குத்தத்தம்பண்ணினவர்

எபிரெயர் 10:23

வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே.


இந்த வருடத்தின் ஐந்து மாதங்களை கடந்து வந்திருக்கின்றோம். வாக்குரைத்த தேவனாகிய கர்த்தர்தாமே தம் வாக்கிலே உண்மையுள்ள வராக இருந்து நம்மை வழிநடத்தி வருகின்றார். உங்கள் வாழ்க்கையிலே நீங்கள் எதிர்பார்த்திருக்கும் சில காரியங்களை தாமாகின்றது என்று சோர்ந்து போய்விடாதிருங்கள். கிறிஸ்து இயேசுவை பற்றும் விசுவாசத்திலே நிலைத்திருங்கள். நித்திய ஜீவனை அடைந்து கொள்வதே விசுவாசிக ளின் இலக்கு என்பதை மறந்து போய்விடாதிருங்கள். கடந்த ஐந்து மாதங்களாக பிலிப்பியருக்கு எழுதிய நிரூபத்தை மையமாக வைத்து தியானித்து வருகின் றோம். முதல் இரண்டு அதிகாரங்களிலும், நன்றியறிதலும், வாழ்த்துக்களும், சபையோரின் நிறைவுகள், கிறிஸ்துவின் நற்செய்தியை அறி விப்தே நோக்கம், எச்சரிப்புக்கள், சபையோரின் குறைவுகள், இந்த உல கத்திலே இருந்தாலும், கடந்து சென்றாலும், கிறிஸ்துவோடு வாழ்வதன் மேன்மை, கிறிஸ்துவுக்காக பாடுகளை சகித்தல், மனத்தாழ்மையோடு ஐக்கியமாக இருத்தல், கிறிஸ்துவின் சிந்தையை தரித்திருத்தல், கோண லும் மாறுபாடுமான இருளான உலகிலே ஒளி வீசுதல், ஊழியர்களின் மனப்பான்மை போன்ற தலைப்புக்களின் கீழே முதல் இரண்டு அதிகா ரங்களையும் தியானித்தோம், மூன்றாம் அதிகாரத்தின் ஆரம்பத்திலே, கர்த்தருக்குள் சந்தோஷமாயிருத்தல், பின்மாற்றக்காரருக்கு எச்சரிக்கையாக இருத்தல், மேன்மை பாராட்டுதல், கிறிஸ்துவை அறியும் அறிவிலே வளருதல், விசுவாசத்திலே நிலைத்திருத்தல் போன்றவற்றைக் குறித்து கடந்த நாட்களிலே தியானித்து வந்தோம். இந்நாட்களிலே, நம்முடைய இலக்கை நோக்கி முன்னேற வேண்டும் என்பதைக் குறித்து தியனம் செய்ய இருக்கின்றோம். நித்திய ஜீவனுக்கென்று அழைக்கப்பட்ட நாம், கொஞ்சக் காலம், யாத்திரிகளாக இந்த உலத்தைக் கடந்து கொண்டிருக்கின்றோம். வாழ்விலே குறைவுகள், நிறைவுகள் ஏற்பட்டிருக்கின்றது. சோதனைகள் வேதனைகள் இருந்தது. உயர்வுகள் தாழ்வுகள் தவிர்க்க முடியாதவைகள். தவறிப்போகும் நேரங்கள் உண்டு. நாட்கள் கொடியதாக மாறிக் கொண்டிருக்கின்றது. அவைகள் மத்தியிலே சோர்ந்து போகதிருங்கள். கிறிஸ்துவைப் பற்றுpம் விசுவாசத்தைவிட்டு தளர்ந்து போகாமல், ஆதியிலே கொண்டிருந்த வைராக்கியத்தை புதுப்பித்தவர்ளாக நிறைவை நோக்கி முன்னேறு ங்கள். அழைத்தவர் உண்மையுள்ளவர். முடிவு பரியந்தம் வழிநடத்திச் செல்வார்.

ஜெபம்:

வாக்குமாறாத தேவனே, கடந்து வந்த பாதைகளிலே நீர் எனக்கு காட்டிய இரக்கத்திற்காக நன்றி, முடிவுபரியந்தம் நான் உம்மிலே நிலைத் திருக்க உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிலிப்பயிர் 3:12