புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 12, 2026)

நீங்களே கிறிஸ்துவின் சரீரம்

1 கொரிந்தியர் 12:27

நீங்களே கிறிஸ்துவின் சரீரமாயும், தனித்தனியே அவயவங்களாயுமிருக்கிறீர்கள்.


இரண்டு நாடுகளுக்கிடையே நேரடியாக நடக்கும் போரை குறித்து நாம் யாவரும் அறிந்திருக்கின்றோம். அதேவேளையிலே, சில நாடுகளுக்கி டையே அரசியல் மற்றும் ஆளுகை முறைமைகளில் இருக்கும் வேற்று மைகளின் அடிப்படையில் மறைமுகமாக நடந்து வரும் பனிப்போர் என்னும் பதத்தையும் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகின்றேன். வார் த்தைப் பிரயோகங்கள், மறைமுகமான நடைமுறைகளால் நடைபெறும் பனிப்போர் காலப்போக்கில் நேரடி யான போரை உண்டாக்கிவிடும் அபா யம் உண்டு. அன்றும் இன்றும் விசு வாச மார்கத்தார் மத்தியிலே, சரீர பிரகாரமான சண்டைகள், அடிபாடு கள் நடப்பது மிகவும் அரிது. ஆனா லும், ஒரு சில இடங்களிலே ஆங்கா கங்கே இப்படியான நேரடியான போரைப் போன்ற கைகலப்புக்கள் நடை பெறுகின்றது என்பதை கேள்விப்படும் போது, மிகவும் மன வேத னைக்குரிய காரியமாக இருக்கின்றது. ஆனால், விசுவாசிகள் மத்தி யிலே, பனிப்போரை போன்ற மறைமுகமான போர் நடந்து வருகின்றது. வன்மம், கசப்பு, பிரிவினைகள், வைராக்கியம், சண்டைகள், மார்க்க பேதங்கள் போன்ற மாசத்திற்குரிய சுபாவங்கள் விசுவாசிகள் மத்தி யிலே காணப்படுகின்றது. இப்படிப்பட்ட நிலைமை அன்று பிலிப்பு சபை யிலே இருந்துது, அன்றைய நாட்களிலே இருந்து சபைகளிலே இருந் தது. அதற்காகத்தான், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள் வழியாக, விசுவாசிகள் எச்சரிப்பின் தேவ வார்த்தைகளையும், மாம்ச மான வாழ்விலிருந்து விடுதலையாகி, ஆவிக்குரியவர்களாக எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை உள்ளடக்கிய வழிமுறைகளையும் விசுவாச மார்க்த்தாருக்கு கூறப்பட்டிருக்கின்றது. சகோதரரே, நீங்கள் சுயாதீனத்திற்கு அழைக்கப்பட்டீர்கள், இந்தச் சுயாதீனத்தை நீங்கள் மாம்சத்திற்கேதுவாக அநுசரியாமல், அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்யுங்கள். உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிட த்திலும் அன்புகூருவாயாக, என்கிற இந்த ஒரே வார்த்தையிலே நியா யப்பிரமாணம் முழுவதும் நிறைவேறும். நீங்கள் ஒருவரையொருவர் கடித்துப் பட்சித்தீர்களானால் அழிவீர்கள். அப்படி ஒருவராலொருவர் அழிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். பின்னும் நான் சொல்லு கிறதென்னவென்றால், ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொ ழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள் என்று பரிசுத்த வேதா கமம் நமக்கு அறிவுரை கூறுகின்றது.

ஜெபம்:

அன்பின் பரலோக தேவனே, என் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்து, ஆவியின் கனிகள் என் வாழ்விலே வெளிப்படும்படிக்கு நீர் எனக்கு கற்றுத் தந்து வழிடத்திச் செல் வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்

மாலைத் தியானம் - கலாத்தியர் 5:24-25