புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 06, 2026)

தேவனால் கூடாதது ஒன்றுமில்லை

மத்தேயு 24:33

அப்படியே இவைகளையெல்லாம் நீங்கள் காணும்போது, அவர் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள்.


தேவ ராஜ்யத்தினுடைய இரட்சிப்பின் நற்செய்தியானது பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும் என்று நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்து கூறியி ருக்கின்றார். அது எப்படியாகும், காடுகளிலேயும், நாடுகளிலே இருக்கி ன்றவர்கள் அதை எப்படி அறிவார்கள் என்று சிலர் தங்களை மனதி லே குழப்பம் அடைகின்றார்கள். அருமையான விசுவாசிகளே, தேவ னால் கூடாதது ஒன்றுமில்லை. எனவே, இரட்சிப்பின் நற்செய் தியை ஏற்றுக் கொண்டிருக்கும் நீங்கள், ஜாக்கிரதையுள்ளவர்க ளாக விழித்திருங்கள். உங்களிடம் ஒப்புக் கொடுத்தவைகளை தேவ சித்தத்தின்படி நீங்கள் நிறைவே ற்றி முடிக்கும்படி உங்கள் இருதயத்தை எல்லாக் காவலோடும் காத் துக் கொள்ளுங்கள். கடைசி நாட்களுக்குரிய தீர்க்கதரிசனங்கள் முன்னு ரைக்கப்பட்டிருக்கின்றது. அதைக் குறித்து நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் கூறியிருப்பதை மத்தேயு 24ம் அதிகாரத்திலே வாசிக்கலாம். நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களையும், இனி நடக்க இருக்கும் கொடிதான அக்கிரமங்களையும் குறித்து நொந்து கொள்ளா மல், அழைப்பையும் தெரிந்து கொள்ளுதலையுமு; உறுதி செய்தவர்க ளாக, தேவ வார்த்தையிலே நீங்கள் நிலைத்திருங்கள். 'அந்நாட்கள் குறைக்கப்படாதிருந்தால், ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை; தெரிந்து கொள்ளப்பட்டவர்களினிமித்தமோ அந்த நாட்கள் குறைக்கப்படும். அப் பொழுது, இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ அங்கே இருக் கின்றார் என்று எவனாகிலும் சொன்னால் நம்பாதேயுங்கள். ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடை யாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். இதோ, முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன். ஆகையால்: அதோ, வனாந்தரத்தில் இருக்கிறார் என்று சொல்வார்களானால், புறப்படாதி ருங்கள்; இதோ, அறைவீட்டிற்குள் இருக்கிறார் என்று சொல்வார்க ளானால் நம்பாதிரு ங்கள். மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்குவ ரைக்கும் பிரகாசிக் கிறதுபோல, மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும். மனுஷகுமார னுடைய அடையாளம் வானத்திலே தோன்றும். தம்முடையவர்களை கூட்டிச் சேர்க்க வலுவாய் தொனிக்கும் எக்காளத்தோடே அவர் தம்மு டைய தூதர்களை அனுப்புவார்.

ஜெபம்:

பரலோக தேவனே, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகின்ற நாளை நோக்கி நான் வஞ்சையுள்ளவனாக காணப்பட உணர்வுள்ள இருதயத்தை தந்தருள் வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எபிரெயர் 13:14