புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 14, 2026)

கிறிஸ்துவுக்குள் மேன்மைபாராட்டுங்கள்

பிலிப்பியர் 3:3

ஏனெனில், மாம்சத்தின்மேல் நம்பிக்கையாயிராமல், ஆவி யினாலே தேவனுக்கு ஆராதனைசெய்து, கிறிஸ்து இயேசுவுக்குள் மேன்மைபாராட்டு கிற நாமே விருத்தசேதனமுள்ளவர்கள்.


கிருபையினாலே விசுவாசத்தை கொண்டு இரட்சிக்கப்பட்டோம். இது விசுவாசிகளின் நீதியின் கிரியைகளினாலே உண்டாகவில்லை. ஒருவனும் பெருமை பாராட்டாதபடிக்கு இது தேவனுடைய ஈவு. இப்படியாக ஆரம்பித்த விசுவாசிகளில் சிலர், பாதி வழியிலே தாங்கள் விட்டுவந்த பாரம்பரிய மதக்கிரியைகளுக்கும், தங்கள் குடும்ப அந்தஸ்துக்கும், சமூக செல்வாக்குக்கும் திரும்பி விடுகின்றார்கள். இரட்சிப்படைந்த நாம், எப்படியாக தேவனுக்குள், தேவனுடைய விருப்பப்படி, அவருடைய திட்டத்தின்படி, கிரியைகளை நடப்பிக்க வேண்டும் என்பதை கடந்த மாதங்களிலே தியானித்தோம். ஆனால், சிலரோ, இரட்சிப்படை ந்த பின்பும், தங்கள் எண் ணப்படி, இலவசமாக பெற்றுக் கொண்ட இரட்சிப்பை இன்னும் மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன், தங்கள் வம்ச வழி, கல்வித் தகமைகள், விட்டுவந்த பாரம்பரியக் கிரி யைகளை மறுபடியும் செய்து, என்று பற்பல காரியங்களைக் குறித்து மேன்மைபாராட்ட ஆரம்பித்து விடுகின்றார்கள். ஆலயக் கட்டிடத்தற்கு கோபுரம் வைப்பதைப் போல, இரட்;சிப்பிற்கு தாங்கள் சிகரம் வைக்க முயற்சிசெய்கின்றார்கள். இப்ப டிப்பட்டவர்கள், ஆண்டவர் இயேசுவினால் உண்டான இரட்சிப்பை அறியாமல், இழுப்புண்டு போகின்றவர்களாக இருப்பார்கள். அந்நாட்களிலே, யூதமார்க்கத்தை சேர்ந்த சிலர், கிறிஸ்து இயேசுவினால் உண்டான இரட்சிப்படைந்தால் மட்டும் போதாது, தேவனுக்கு பிரியமாக இருக்கும்படி மோசே வழியாக விதிக்கப்பட்ட மாம்சத்திலுண்டான விருத்தசேதனத்தையும் செய்து கொள்ள வேண்டும் என்று விசுவாசிகளுக்கு உபதேசித்தார்கள். இவர்கள் மாம்சத்திலே நம்பிக்கையுள்ளவர்கள். தங்கள் பழைய மாம்ச கிரியைகளால் தேவனுக்கு பிரியமுண்டாகும்படி போதிக்கின்றவர்கள். 'சுமப்பதற்கரிய பாரமான சுமைகளைக் கட்டி மனுஷர் தோள்களின்மேல் சுமத்துகிறார்கள்; தாங்களோ ஒரு விரலினாலும் அவைகளைத் தொடமாட்டார்கள்.' 'மனுஷர் பிரவேசி யாதபடி பரலோக ராஜ்யத்தைப் பூட்டிப்போட்டு, அவர்களும் அதில் பிர வேசிக்கிறதுமில்லை, பிரவேசிக்கப் போகிறவர்களைப் பிரவேசிக்கவிடுகிறதுமில்லை.' இவர்களைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள். கிரியை களைக் குறித்தல்ல, கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்து மேன்மை பாராட்டுகின்றவர்களாகயிருங்கள்.

ஜெபம்:

பரிசுத்தமுள்ள பிதாவே, கிறிஸ்து வழியாக இரட்சிப்பை பெற்றுக் கொண்ட நான், உம்முயை வார்த்தையின்படி நான் பரிசுத்த வாழ்வு வாழ என்னை அர்பணித்து, ஆவிக்குரிய ஆராதனை செய்யும்படி என்னை வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - காலத்தியர் 3:1