தியானம் (சித்திரை 12, 2026)
மனத்தெளிவுள்ளவர்களாக இருங்கள்
2 தீமோத்தேயு 4:5
நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு, தீங்கநுபவி, சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று.
தேவ ஊழியராகிய பவுல், தீமோத்தேயு என்னும் இளவயதுள்ள தேவ ஊழியனுக்கு எழுதும் போது: நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள் ளவனாயிரு, தீங்கநுபவி, சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று. ஏனென்றால், நான் இப்பொழுதே பான பலியாக வார்க்கப்பட்டுப்போகிறேன்; நான் தேகத்தை விட்டுப் பிரியும் காலம் வந்தது. நல்ல போராட் டத்தைப் போராடினேன், ஓட்டத் தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக் கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியா யாதிபதியாகிய கர்த்தர் அந்நா ளிலே அதை எனக்குத் தந்தருளு வார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளு வார் என்று கூறினார். தேவன் நமக்கு தெளிந்து புத்தியுள்ள ஆவியை தந்திருக்கின்றார். நாம் காற்றினால் அடிபட்டு அலைகின்ற அலைகளைப் போல அங்குமிங்குமாக அலைந்து திரியாமலும், நாளுக்கு நாள் மாறும் செழிப்பின் உபதேசங்களை பின்பற்றி, வழிதப்பிப்போய்விடாதபடி க்கும், சகல சத்தியத்திலும் வழிநடத்தும் ஆவியானவரை நமக்கு கொடு த்திருக்கின்றார். வேதப்புரட்டவர்கள் 'ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்கமனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச் சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக் கொண்டு, சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதை களுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்' என்று முன்னறிவித்த தேவ ஊழியரா கிய பவுல், மேற்கூறியதை, தீமோத்தேயுவுக்கு அறிவுரையாக கூறா மல், பிதாவாகிய தேவனுக்கு முன்பாகவும், உயிரோடிருக்கிற வர்க ளையும் மரித்தவர்களையும் நியாயந்தீர்க்கப்போகிற கர்த்தராகிய இயே சுகிறிஸ்துவுக்கு முன்பாகவும், அவருடைய பிரசன்னமாகுதலையும் அவ ருடைய ராஜ்யத்தையும் சாட்சியாக வைத்துக் கட்டளையிட்டு கூறினார். ஆண்டவராகிய இயேசுவும் தம்மை சுகந்த வாசனையான பானபலியாக் பிதாவாகிய தேவனுக்கு ஒப்புக் கொடுத்தார். அது போல, நீங்களும் உங்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புக்களை நீடிய பொறுமையோடி நிறைவேற்றி, உங்களை பிதாவாகிய தேவனுக்கு சுகந்த வாசனையான பலிகளை செலுத்துங்கள். தெளிந்த புத்தியோடு, வேத வார்த்தைகளை தியானித்து, அந்த வார்த்தையின் வழியிலே வாழுங்கள்.
ஜெபம்:
பரலோக தேவனே, மாறிப்போகும் இந்த உலகிலே, நான் உம்மு டைய சத்தியத்தைவிட்டு வழுவிச் செல்லாமல், தெளிந்து புத்தியுள்ளவானாக காரியங்களை நிதானித்தறிய எனக்கு பிரகாசமுள்ள மனக்கண்களை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்
மாலைத் தியானம் - பிலிப்பியர் 2:15-16