தியானம் (சித்திரை 18, 2026)
'தேவ வசனமே சத்தியம்'
யோவான் 17:17
உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்
உங்களிலுள்ள மூப்பருக்கு உடன்மூப்பனும், கிறிஸ்துவின் பாடுகளுக் குச் சாட்சியும், இனி வெளிப்படும் மகிமைக்குப் பங்காளியுமாயிருக்கிற நான் புத்திசொல்லுகிறதென்னவென்றால்: உங்களிடத்திலுள்ள தேவனு டைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வ மாயும், அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும், சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும், கண்காணிப்புச் செய்யுங்கள். அப்படிச் செய்தால் பிரதான மேய்ப்பர் வெளிப்படும்போது மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெறு வீர்கள் என்று தேவ ஊழியராகிய பேதுரு கூறியிருக்கின்றார். மகிமை யின் கிரீடமானது தேவ ஊழியர்களுக்கு மட்டுமல்ல, பிதாவாகிய தேவ னின் சித்தத்தை நிறைவேற்றும் யாரும் பெற்றுக் அதைப் பெற்றுக் கொள்வார்கள். 'நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திர மல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்த ருளுவார்.' என்று தேவ ஊழியராகிய பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் நிரூபத்தில் கூறியிருக்கின்றார். அவரு டைய பிரசன்னத்தை விரும்புகின்றவர்கள் யாவரும், அவர்கள் ஊழியர்களாக இருந்தாலும், விசுவாசிகளாக இருந்தாலும், அவர்கள் தங்கள் வாழ்க்கையிலே, தேவனுடைய ராஜ்யத்திற்கும் அதன் நீதியை தேடுவதற்கும் முதலிடம் கொடுக்கின்றவர்களாக காணப்படுவார்கள். ஆனால், இன்று, சில விசுவாசி களுடைய வாழ்க்கையிலே கல்வி, வேலை, ஆஸ்திகள் என்று அவைகளையே நாடித் தேடுகின்றார்கள். சில இடங்களிலே, ஆண்டவராகிய இயேசு தம்முடைய ஜீவனைக் கொடுத்து சம்பாதித்த ஆத்துமாக்களைவிட சபைக் கட்டிடங்கள், செயற்திட்டங்கள், இலக்கங்கள் அதிக முக்கியத்துவத்தை பெற்றுவிடுகின்றது. இப்படியாக, ஊழியர்களில் சிலரும், விசுவாசிகளில் சிலரும் தேவனுக்கு முன்பாக தங்கள் வாழ் வின் சாட்சியை இழந்து உண்மையற்றவர்களாக மாறிவிடுகின்றார்கள். சத்தியத்திலே நிலைத்திருக்கின்றவர்கள் தேவனு க்கும் மனுஷருக்கும் முன்பாக பேச்சிலும் செய்கையிலும் உண்மை யுள்ளவர்களாக காணப்படுவார்கள்.
ஜெபம்:
அழிவில்லாத ராஜ்யத்திற்கென்று என்னை அழைத்த தேவனே, சத்திய வேதத்திலே நான் எப்போதும் நிலைத்திருந்து கனிகொடுக்கும் உணர்வுள்ள இருதயத்தை தந்து என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - நீதி 12:17