தியானம் (வைகாசி 13, 2026)
தாழ்மையோடு சேவியுங்கள்!
லூக்கா 18:14
ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.
மனந்திரும்புதல், மன்னிப்பை கேட்டுக் பெற்றுக்கொள்ளுதல், மன்னி ப்பை வழங்குதல், மனம் மறுரூபம் ஆகுதல், வேறு பிரிந்த வாழ்க்கை வாழுதல், மனமாற்றம் கனிகளால் வெளிப்படுத்த படுதல் போன்றவை தங்கள் வாழ்விலே நடைபெற வேண்டும் என்று, தாழ்மையுள்ள இரு தயத்தோடு, வேதத்தை கற்றுக் கொள்கின்றவர்கள், ஊக்கமாக ஜெபி க்கின்றவர்கள், உபவாசிக்கின்றவர் கள், தானதர்மங்களை, சுவிசேஷம் சொல்கின்றவர்கள் இருக்கின்றார் கள். இவைகளினாலே ஆத்துமாவு க்கு பலன் உண்டு. ஆனால், மனந்தி ரும்புதல், மன்னிப்பை கேட்டுக் பெற் றுக்கொள்ளுதல், மன்னிப்பை வழங் குதல், மனம் மறுரூபம் ஆகுதல், வேறு பிரிந்த வாழ்க்கை வாழுதல், மனமாற்றம் கனிகளால் வெளிப்படு த்தபடுதல் போன்றவைகளுக்கு தங் கள் சொந்த வாழ்விலே இடமளிக்காமலும், அதைக் குறித்து எண்ணமி ல்லாதவர்களாவும், வேதத்தை படித்து பட்டம் பெறுகின்றவர்கள், உப வாசித்து ஜெபிக்கின்றவர்கள், தானதர்மங்களை செய்கின்றவர்கள், சுவிசேஷத்தை அறிவிக்கின்றவர்களும் இருக்கின்றார்கள். இப்படிப் பட்டவர்கள், தங்கள் மாம்ச கிரியைகளை நிறைவேற்றும்படி, மதக்கிரி யைகளை நடப்பிக்கின்றவர்களாக காண்படுவார்கள். பிலிப்பியருக்கு எழுதின நிரூபத்தின் ஆரம்பத்திலே, தவறான நோக்கங்களுக்காக சுவிசேஷத்தை அறிவிக்கின்றவர்களை குறித்து தேவ ஊழியராகிய பவுல் கூறியிருக்கின்றார். ஒரு சமயம் ஆண்டவராகிய இயேசு தேவால யத்திற்கு ஜெபிக்கும்படி சென்ற பரிசேயனையும், ஆயக்காரனைக் குறித்து ஒரு உவமையைக் கூறினார். பரிசேயன் தான் செய்து வரும் நற்கிரியைகளை பற்றி கூறினான். பாவிகளை கண்டித்தான். வாரத்திலே இரண்டு முறை உபவாசித்து வந்தான். எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுக்கின்றேன் என்று கூறினான். இவைகள் யாவும் ஒரு விசுவாசி யின் வாழ்க்கையிலே செய்யப்பட வேண்டிய நன்மையான காரியங் கள். ஆனால், இவைகளால் மாத்திரம் ஒருவனும் நீதிமானாக்கப் படு வதில்லை. பெருமையுள்ளவனுக்கு தேவன் எதிர்த்து நிற்கும்போது, அவன் செய்யும் நற்கிரியைகளினாலே அவனுக்கு பலன் என்ன? யார் தேவனை எதிர்த்து வெற்றி வாழ்க்கை வாழ முடியும்? எனவே தேவ வார்த்தைக்கு கீழ்படியாமல் இவைகளை செய்யும்படி போதிக்கின்றவர் களைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையுள்ளவர்களாக இருங்கள்.
ஜெபம்:
தாழ்மையுள்ளவர்களுக்கு கிருபை அளிக்கும் தேவனே, மதக்கிரி யைகளினாலே உம்மை திருப்தியாக்க முயற்சிக்காமல், உம்முடைய சித்தம் செய்ய வேண்டும் என்னும் என்னில் பெருகும்படி கிருபை செய்வீ ராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - யோவான் 15:4