புதிய நாளுக்குள்..

தியானம் (தை 27, 2026)

தேவ களஞ்சியத்திற்குரியர்கள்...

சங்கீதம் 23:6

என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்.


கிறிஸ்துவுக்குள் பிரியமான சகோதர சகோதரிகளே, இன்னும் கொஞ்சக் காலம், நாம் கோணலும் மாறுபாடுமான உலகத்திலே வாழ வேண்டும். சத்துருவானன் கோதுமைக்குள் களைகளை விதைத்துவிட்டுப் போனது போல, நம் நடுவிலும் களைகள் உண்டு. அந்தக் களைகளை குறித்து ஆச்சரியப்படாதிருங்கள். இன்று சில விசுவாசிகள் களைகளைப் போன் றவர்களை உற்றுப் பார்த்து, அவை களை ஆராய்ந்து, அவைகளை அக ற்ற வேண்டும் என்பதிலேயே தங்கள்; வாழ்நாட்களை கழிக்கின்றார்கள். அதனால், தேவனாகிய கர்த்தர் தங்க ளுக்கு கொடுத்த பொறுப்பை மறந்து போய் விடுகின்றார்கள். நாம் நமக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை நிறை வேற்றுவதிலேயே நாம் கவனமுள்ள வர்களாக இருக்க வேண்டும். முதலா வதாக களைகள் போய் சேர வேண்டி இடத்தில் சேரும் என்பதை மத்தேயு 13ம் அதிகாரம் 30ம் வசனத்திலே வாசிக்கின்றோம். நாமோ தேவ களஞ்சியத்தில் சேர்க்கப்பட வேண் டிய கோதுமை மணிகளுக்கு ஒப்பாயிருக்கின்றோம். 'நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்; உப்பா னது சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும்? வெளியே கொட் டப்படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப்படுவ தற்குமே ஒழிய வேறொன் றுக்கும் உதவாது. 'நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்தி ருக்கமாட்டாது.விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத் தண்டின்மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும். இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது' என்று ஆண்ட வராகிய இயேசு கூறியிருக்கின்றார். எனவே, தேவ நன்மையை பெற்ற சிலர், தேவ கிருபையை விருதாவாக்கி, சுகபோகமாய் வாழ்வதை கண்டு குழப்பமடையாமல், அழுத்தும் பாரங்களையும் நெருக்கும் பாவங்களை யும் உதறித் தள்ளிவிட்டு, தேவ கிருபையின் நோக்கத்தை அறிந்து, கர்த்தருக்கு உங்கள் வழியை ஒப்புக் கொடுங்கள். ஒப்புக் கொடுத்தபின் அவர்மேல் நம்பிக்கையாயி ருங்கள். சோர்ந்து போகாமல் நன்மையை நடப்பியுங்கள். இந்தப் உலகிலே இன்னும் கொஞ்சக் காலம் தான்! கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நன்மையின் நாட்கள் நிச்சயமாக உண்டு.

ஜெபம்:

நித்திய ஜீவனுக்கென்று என்னை அழைத்த தேவனே, நீர் எனக்கு தந்த பொறுப்புக்களை பொறுமையோடு நடப்பித்து முடிக்கும்படிக்கு எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - தீத்து 3:8