புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 01, 2026)

உள்ளான மனிதன் புதிதாக்கப்படுவதாக...

2 கொரிந்தியர் 4:16

உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது.


ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த மனிதனொருவன், பல கஷ்டங்கள், துன்பங்கள், பாடுகள் மத்தியிலே தனக்கு கொடுக்கப்பட்ட சேவையை செய்து வந்தான். அந்த மனிதனைப்போல சேவை செய்து வருபவர்களில் சிலர், அந்த மனிதனுக்கு உண்டான துன்பங்கள், அவனாலேயே உண்டாயிற்று என்று அவனைக் கைவிட்டுவிட்டார் கள். அந்த நிலையிலே, நீங்களோ மனமிரங்கி, அந்த மனிதனுக்கு உதவி செய்து தீர்மானித்து உதவி களை அனுப்பி வைத்தீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த மனிதனானவன், அந்த உதவியை ஏற் றுக் கொண்டு, உங்களுடைய உதாரத்துவ குணத்தை கண்டு சந்தோஷப்பட்டான். நீங்கள் செய்த உபகாரத்தைக் குறித்து அவர்களை பாராட்டி கடிதம் ஒன்றை எழுதியிருக்கின்றார். அந்தக் கடிதத்திலே, உங்கள் உதாரத்துவ குணம் மிகவும் பராட்டத்தக்கது, ஆனாலும், நீங்கள் இன்னென்ன காரியத்திலே முன்னேற வேண்டும். சில சுபாவங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று தயவாக கூறியிருந்தால், நீங்கள் என்ன கூறுவீர்கள்? அவனுடைய மனக்கடினத்தையும், அகங்கார த்தையும் பார் என்று கூறுவீர்களா? தயவாக அந்த கடிதத்திலுள்ளவைகளை படித்து, அதன்படிக்கு உங்கள் வாழ்வை ஆராய்ந்து பார்பீர்களா? அந்த மனிதனைப் போலவே, உங்கள் சபையின் மேய்பரானவர், உங்கள் வாழ்க்கையிலே இன்னென்ன மாற்றங்கள் இன்றியமையாதது என்று கூறினால், நீங்கள் என்ன கூறுவீர்கள்? உங்களில் சிலர், இந்தப் மேய்பரானவர் நன்றியில்லாதவர், இவர் இன்னும் அனுபவிக்க வேண் டும் என்று கூறுவீர்கள் அல்லவா? இவர் நியாயப்பிரமாண போதகர் போல இருக்கின்றார், அன்பைக் குறித்து அறியாமல், பரிசுத்தத்தை குறித்தே அதிகம் பேசுகின்றார் என்று இன்னும் சிலர் கூறிக் கொள்வார்கள். இந்த சம்பவத்தை நாம் பிலிப்பிய சபைக்கு எழுத்தின நிரூபத்திற்கு ஒப்பிட முடியும். தேவ ஊழியராகிய பவுல் அவர்களுக்கு எழுதும் போது, உங்கள் கொடுக்கும் மன்பான்மை மெச்சத்தக்கது. அது மாத்திரம் தேவ அன்பு அல்ல. உங்கள் மேலான அழைப்பை அறிந்து கொள்ளுங்கள். எதற்காக பிடிக்கப்பட்டீர்கள் என்பதை புரிந்து கொள் ளுங்கள். தேவ அன்பை அறிந்து அதில் வளரும்படிக்கு, நீங்கள் உங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதை அவர்களுக்கு தயவாக எடுத்துக் கூறுகின்றார். நாமும் கிறிஸ்துவின் நாளுக்கென்று துப்புரவானவர்களும் இடறலற்றவர்களுமாயிருக்க உள்ளா மனிதன் நாளுக்கு நாள் புதிதாக்கப்பட வேண்டும்.

ஜெபம்:

நித்திய ஜீவனுக்கென்று என்னை அழைத்த தேவனே, நான் இந்த உலகத்தால் கறைபடாதபடிக்கு உம்முடைய சத்திய வார்த்தைகளில் நடக்க, எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 4:17