புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 22, 2026)

பரலோக மேன்மைகள்

1 யோவான் 2:17

உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திரு ப்பான்.


'எதைப்பற்றியும் பேசுங்கள் ஆனால் என்னுடைய குடும்பத்தைப்பற்றி மட்டும் பேசினால், என்னை வேறு மனுஷனாகத்தான் பார்ப்பீர்கள்' இப்படியாக சில விசுவாசிகள் ஏதோ ஒரு காரியத்தை தங்கள் வாழ்விலே மேன்மைப்படுத்தி வைத்திருப்பதை நீங்கள் கண்டிருப்பீர்கள். சில வேளைகளிலே ஏதோ ஒரு காரியத்திற்காக தாங்கள் பெற்றுக் கொண்ட இரட்சிப்பையும் அற்பமாக எண்ணிவிடு கின்றார்கள். எதை இழந்து போனாலும், தன்மானத்தை இழந்துபோ கலா மா? குடும்ப கௌரவம் என்ன ஆகின் றது என்று தங்களைத் தாங்கள் மேன்மை படுத்திக் கொள்கின்றவர்கள் இருக்கின்றார்கள். இவர்கள் கிறிஸ்து வை அறியும் மேன்மையை குறித்த உண ராதிருப்பதால், இந்த உலகம் தரும் மேன் மைகளை குறித்து பெருமைபாராட்டிக் கொள்கின்றார்கள். சில சமயங்களிலே நாம் யாவரும் இத்தகைய நிலை மைக்கு தள்ளப்பட்டுப் போக்கின்றோம். அதாவது, அவரவர் தங்களிடம் இருக்கும், தாலாந்துகள், தகமைகளை குறித்து முற்றிலும் பேசக்கூடாது என்பது அல்ல, ஆனால், சிலரோ அவைகளினாலே தங்களை மற்றவர்க ளைவிட மேன்மையாக எண்ணிக் கொள்கின்றார்கள். தங்கள் உலக மேன்மைகளினாலே, சபை ஐக்கியங்களிலே பாகுபாடுகளையும், பிரிவினைக ளையும் உண்டு பண்ணி கொள்கின்றார்கள். அக்காலத்திலே, தேவ ஊழியராகிய பவுலோடு ஊழியம் செய்து வந்த சிலர் இந்த உலகத்தின்மேல் ஆசைவைத்து, தேவனைவிட்டு பிரிந்து போய்விட்டார்கள். இன்றைய நாட்களிலே, சிலர், தாங்கள் தேவனுக்கு ஊழியம் செய்கின்றோம் என்று சத்தியத்தைவிட்டு விலகி, தேவ ஊழியத்தை தங்கள் ஆதாயத் தொழிலாக கொண்டிருக்கின்றார்கள். 'உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்பு கூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள். உலகமும் அதின் இச்சையும் ஒழிந் துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான் என்று 1 யோவான் 2ம் அதிகாரத்திலே வாசிக்கி ன்றோம். எனவே, கிறிஸ்துவை அறியும் மேன்மையை உணர்ந்து மேலானவைகளை பற்றிக் கொள்ளுங்கள்.

ஜெபம்:

நித்திய ஜீவனுக்கென்று என்னை அழைத்த தேவனே, அந்த மேன்மையான அழைப்பை உணர்ந்து உம்மை அறியும் அறிவிலே நான் நாள்தோறும் வளர்ந்து பெருக எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 2 தீமோ 4:7-8