தியானம் (சித்திரை 16, 2026)
இயேசுவுக்குரியவைகளைத் தேடுங்கள்
பிலிப்பியர் 2:21
மற்றவர்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குரியவைகளைத் தேடாமல், தங்களுக்குரியவைகளையே தேடுகிறார்கள்.
பிலிப்பு சபையோரின் விவகாரங்களைப் பற்றி அறிவும்படிக்கு தேவ ஊழியராகிய பவுல் ஆவலாக இருந்தார். அதன்பொருட்டு, உண்மையும் உத்தமுமான ஊழியானாகிய தீமோத்தேயுவை அவர்களிடம் அனுப்பும் தீர்மானித்திருந்தார். 'அன்றியும், நானும் உங்கள் செய்திகளை அறிந்து மனத்தேறுதல் அடையும்படிக்குச் சீக் கிரமாய்த் தீமோத்தேயுவை உங்களிடத்தில் அனுப்பலாமென்று கர்த்தரா கிய இயேசுவுக்குள் நம்பியிருக்கி றேன். அதேனென்றால், உங்கள் காரியங்களை உண்மையாய் விசாரிக்கிறதற்கு என் னைப்போல மனதுள்ள வன் அவனையன்றி வேறொருவ னும் என்னிடத்திலில்லை. மற்றவர்க ளெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குரியவைகளைத் தேடாமல், தங்களு க்குரியவைகளையே தேடுகிறார்கள்.' என்று கூறியிருக்கின்றார். தேவ ஊழியராகிய மனமானது, ஆண்டவர் இயேசுவை பற்றியிருந்தது. கிறிஸ்து இயேசுவையே அவர் தன் மாதிரியாக கொண்டிருந்தார். அதே பிரகாரமாக, தன்னோடு ஊழியம் செய்து வந்த தீமோத்தேயுவையும், தன்னைப்போல ஆண்டவர் இயேசுவை பற்றிக் கொள்ளும்படி பயிற்சி வித்தார். அந்நாட்களில் மாத்திரமல்ல, இந்த நாட்களிலும், நன்றாக ஊழியங்களை ஆரம்பிக்கின்றவர்கள், காலங்கள் கடந்து செல்லும் போது, நோக்கத்தை இழந்து போகின்றார்கள். தாங்கள் அடைய வேண் டிய இலக்கை மறந்து, இந்த பிரபஞ்சத்திற்குரியவைகளின்மேல் நாட்டம் கொண்விடுகின்றார்கள். தங்களுக்கானவைகளையும், தங்கள் சந்ததிக்கு தேவையானவைகiளும் சேர்த்து வைக்க முன்படுகின்றார்கள். ஆத லால், தீமோத்தேயுவுக்கு நிரூபத்தை எழுதும் போது, உன்னை உண்மை யுள்ளனென்று கருத்தி, இந்த உழியத்தை உனக்கு தந்தார் என்றும் மற்றவர்கள் இந்த உலகத்தின்மேல் ஆசை வைத்து இழுப்புண்டு போன பிரகாரம் நீயும் இழுப்புண்டு போகாதபடிக்கு எச்சரிக்கையாயிரு என்று வலியுறுத்திக் கூறியிருக்கின்றார். இந்த சம்பத்திலே, நான் மறுபடியும், கிறிஸ்துவின் சிந்தையைக் குறித்து காண்கின்றோம். அந்நாட்களிலே ஊழியம் செய்து வந்த சிலர், உண்மையற்றவர்களாகவும், தங்களுக்கு ரியவைகளை தேடுகின்றவர்களாயும் இருந்தார்கள். ஆனால், தேவ ஊழி யர்களாகிய பவுலும், தீமோத்தேயும், தேவுனுக்குரியவைகளை நாடித் தேடுகின்றவர்களாக இருந்தார்கள். அதே பிரகாரமாக நாமும், தேவனு க்கு முன்பாக உண்மைத்துவம் உள்ளவர்களாக நடந்து கொள்ள வேண் டும்.
ஜெபம்:
உம்முடைய திருக்குமாரனாகிய இயேசுவின் சாயலை அடையும்படி என்னை அழைத்த தேவனே, நான் ஒருபோதும் என் சுயவிருப்பத்தின்மேல் சாயாமல், எப்போதும் உணர்வுள்ளவான இருக்க எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - கொலோ 3:1-2