தியானம் (வைகாசி 23, 2026)
அதிமேன்மையானது என்ன?
1 கொரிந்தியர் 15:19
இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால்எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம்.
தங்கள் கல்வி, தகமை, ஆஸ்தி, அந்தஸ்துகளை துறந்து, ஆண்ட வராகிய இயேசுவுக்கு ஊழியம் செய்யும்படிக்காய் தங்களை ஒப்புக் கொடுத்தவர்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஊழியர்கள் மட்டுல்ல, சில விசுவாசிகளும் உலக மேன்மைகளை அடைந்திருந்தும், அவைகளைக் குறித்து மேன்மைபாராட்டாமல், தங்கள் இருதயத்தை ஆண்ட வராகிய இயேசுக்கு ஒப்புக் கொடு த்தவர்கள் இன்றைய நாட்களிலும் இருக்கின்றார்கள். ஆனால், இன்று விசுவாசிகள் மத்தியிலே ஆசீர்வா தங்கள் என்று எதைக் குறித்து கூறிக் கொள்கின்றார்கள். சற்று தரித்திருந்து சிந்தித்துப் பாருங்கள். பொதுவாக, ஆண்டவர் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்ட பின்பு, கல்வியினால் உண் டாகும் மேன்மை, உத்தியோகங்கள், ஆஸ்திகள், மனிதர்கள் மத்தியிலே உண்டான அந்தஸ்துக்கள், மேன்மக்கள் என்று கருதப்படும் மனிதர்க ளோடும் உண்டான நட்புகளை குறித்து மேன்மைபாராட்டி, தங்களை இரட்சிக்க தம்மைப் பலியாக சிலுவையிலே ஒப்புக் கொடுத்து, விலை மதிக்க முடியாத தம்முடைய இரத்தத்தை சிந்திய ஆண்டவர் இயேசுவை மறந்து, இந்த உலகத்தினால் உண்டான மேன்மைகளையே ஆசீர்வாதங்கள் என்று கருதிக் கொள்கின்றார்கள். 'நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிரு க்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள். பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள். ஏனென்றால், நீங்கள் மரித்தீர்கள், உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது. நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது, நீங்களும் அவரோடேகூட மகிமையிலே வெளிப்படுவீர்கள்.' என்று கொலோசேயர் 3ம் அதிகாரத்திலே வாசிக்கின்றோம். பிரியமானவர்களே, உங்கள் வாழ்விலே இதைவிட மேன்மையானது என்ன? பிதாவாகிய தேவன்தாமே, தம்முடையவர்களை பிழைப்பூட்டுகின்றார். இது சத்தியம்! சில சந்தர்பங்களிலே வாரியிருக்கின்றார். வேறு சில சமயங்களிலே எலியாவின் நாட்களிலே, பஞ்ச காலத்திலே போஷித்ததுபோல, அதிசய விதமாக போஷpக்கின்றார். தம்முடையவர்கள் தங்கள் ஆத்துமாக்களை மண் ணோடு ஒட்டிக் கொள்ளும்படியாக அல்ல, மாறாக, தம்மண்டை சேர்ந்து, தம்மைப் பற்றிக் கொள்ளும்படிக்காள் இவைகளை நடப்பிக்கின்றார். எனவே நீங்கள் உலகத்தின் மேன்மைகளை அல்ல, பரலோக மேன்மை களை நாடித் தேடுங்கள்.
ஜெபம்:
தூரமாக இருந்த என்னை பிரித்தெடுத்து, உம்முடைய பிள்ளை யாக்கின தேவனே, அந்த மேன்மையை நான் ஒருநாளும் மறந்து போய் விடாமல், உம்மை பற்றிக் கொண்டிருக்க எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - பிலிப்பியர் 3:9