புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 26, 2026)

நித்திய கனமகிமை உண்டாகும்

2 கொரிந்தியர் 4:7

மேலும் காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உப த்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது.


இந்த உலகத்தின் போக்கிற்கு தங்களை ஒப்புக் கொடுக்காமல், தேவ னுக்கு பிரியமாக நடக்க தங்களை ஒப்புக் கொடுத்தவர்கள், எப்பக்கத்திலும் நெருக்கப்படுகின்றார்கள். கலகமடையும் சூழ்நிலைகளுக்குள் தள் ளப்படுகின்றார்கள். துன்பங்களை சகித்துக் கொள்கின்றார்கள். ஆனாலும், அவர்கள் ஒடுங்கிப்போகிறதில்லை, மனமுறிவடைகிறதில்லை, கைவிடப்படுகிறதில்லை. கீழே தள் ளப்பட்டும் மடிந்துபோகிறதில்லை. நாம் கடந்த கிழமைகளிலே தியானித்தது போல, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகும்படி தேவ ஊழியராகிய பவுல் கூறியதைப்போல, கர்த்தராகிய இயேசுவினுடைய ஜீவ னும் எங்கள் சரீரத்திலே விளங்கும் படிக்கு, இயேசுவின் மரணத்தை எப் பொழுதும் எங்கள் சரீரத்தில் சுமந்து திரிகிறோம். எப்படியெனில், சாவு க்கினமான எங்கள் மாம்சத்திலே இயேசுவினுடைய ஜீவனும் விளங்கும்படிக்கு உயிரோடிருக்கிற நாங்கள் எப்பொழுதும் இயேசுவினிமித்தம் மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கப்படுகிறோம். கர்த்தராகிய இயேசுவை உயிரோடெழுப்பிய பிதாவாகிய தேவன்தாமே, எங்களையும் இயேசுவைக்கொண்டு எழுப்பி, தமக்குமுன்பாக நிறுத்துவாரென்று அறிந்திருக்கிறோம். எனவே நாம் சோர்ந்துபோகாமல், எங்களுடைய விசுவாச அறிகையிலே உறுதியாய் தரித்திருப்போம் எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது. இவைகளைக் குறித்து தேவனுடைய ஊழியக்காரனாகிய பவுல், 2 கொரிந்தியர் 4ம் அதிகாரத்திலும்;, 1 கொரி ந்தியர் 15ம் அதிகாரத்திலும் விளக்கமாக கூறியிருப்பதை வாசிக்கலாம். இந்த உலகத்திலே வாழும் விசுவாசிகளாகிய நாம், உயிரோடிருக்கும் நாட்களிலே, முற்றிலும் தேறின நிலையை அடைந்து விட முடியாது. ஆனால், நாம் முன்னானவைகளை நாடி ஓடுகின்றோம். உள்ளான மனுஷனானது நாளுக்கு நாள் மறுரூபம் அடைகின்றது. நம்முடைய குடி யிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கி றோம். அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக்கொள்ளத்தக்க தம்முடைய வல்லமையான செயலின்படியே, நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார்

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள தேவனே, காணப்படுகிறவைகள் அநித்திய மானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள் என்பதை உணர்ந்து, நித்திய கனமகிமைக்குரியவைகளை நாடித் தேடும் உள்ளத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 3:21