தியானம் (மாசி 28, 2026)
கிறஸ்துவின் சாயலில் வளருங்கள்
பிலிப்பியர் 1:30
நீங்கள் என்னிடத்திலே கண்டதும் எனக்கு உண்டென்று இப்பொழுது கேள்விப்படுகிறதுமான போராட்டமே உங்களுக்கும் உண்டு.
உங்கள் ஆதரித்து நன்மை செய்கின்றவர்களுக்கு நன்றியறிதலுள்ளவர்களாக இருங்கள். தானதர்மங்கள் செய்து நல்லது, ஆனால் உண்மையான தேவ அன்பிலே வளர்ந்து பெருக வேண்டும். சிலர் தங்கள் சுய இலாபத்திற்காக கிறிஸ்துவை பிரசங்கிக்கலாம், ஆனால் நாமோ, பிதாவாகிய தேவனுடைய அநாதி தீர்மானம் நம் வழியாக மனிதர்கள் மத்தியிலே நிறைவேற வேண்டும் என்ற எண்ணத்தோடு கிறிஸ்துவை பிரசங்கிக்க வேண்டும். நாம் சரீரத்திலே இருந்தாலும், இந்த உலகத்தைவிட்டு கடந்து சென்றாலும், பிதாவாகிய தேவனுடைய நாமம், நம் வழியாக மகிமைப்படும் பொருட்டு, கிறிஸ்துவுக்காக வாழ வேண்டும். கிறிஸ்த வாழ்விலே போராட்டங்கள். போராட்டங்களினாலே சோர்ந்து போகா தபடிக்கு, அவைகள் மத்தியிலும் கிறிஸ்துவின் சாட்சிகளாக நாம் வாழ வேண்டும். மற்றவர்கள் நம்மைப் போல கிறஸ்துவை உண்மைமனதோடு சேவிக்கும்படிக்கு, நாம் மற்றவர்களுக்கு முன்மாதிரகளாக இருக்க வேண்டும். கிறிஸ்துவோடு வாழ்பவர்களுக்கு மரணம் ஆதயம் என்ற உப தலைப்புக்களிலே, இந்த வருட ஆரம்பத்திலிருந்து, அப்போஸ்தலராகிய பவுல், சிறையிலிருந்து, பிலிப்பி சபையோருக்கு எழுதிய நிரூபத்தின் முதலாம் அதிகாரத்தை தியானித்து வந்தோம். குறிப்பாக போராட்டங்களை கண்டு சோர்ந்து போய்விடாதிருங்கள். பரீட்சைக்கு நில்லாதவர்களைப் போல வாழாமல், ஆவிக்குரிய போராட்டங்களின் பின்ணணியை நன்கு அறிந்தவர்களாக. கிறிஸ்துவின் சர்வாயுதவர்கத்தை அணிந்தவர்களாக காணப்பட வேண்டும். எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்க வேண்டும் என்று எண்ணி சுய அனுதாபத்தோடு வாழா மல், மீட்பராகிய இயேசு கிறிஸ்துவை கண்முன் வைத்து நோக்கிப் பாருங்கள். அவருடைய பாதச்சுவடுகளை பின்பற்றி, இந்த உலகத்திலே போராட்டங்களை மேற்கொண்டு, வெற்றி சிறந்த அவருடைய உண் மையான சீஷர்களின் வாழ்க்கையின் போக்கை உற்று நோக்கி பாரு ங்கள். 'மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்து கொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்கு கிறவரும் முடிக் கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமி த்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்;' (எபிரரெயர் 12:1)
ஜெபம்:
இரட்சிப்பின் தேவனே, நான் எப்போதும் ஆவியிலே எளிமையுள்ளவனாக இருந்து, உம்முடைய அழியாத வார்த்தைகளிலே நிலை த்திருக்க எனக்கு உணர்வுள்ள இருயதத்தை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - யோவான் 16:33