புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 20, 2026)

உள்ளத்தில் உண்மையாயிருங்கள்

யாக்கோபு 1:8

இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலைய ற்றவனாயிருக்கிறான்.


நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது. உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்து கொள்ளாதவருமாகிய தேவனிடத் தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும். ஆனாலும் அவன் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன்; சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான். அப்படிப்பட்ட மனுஷன் தான் கர்த்தரிடத்தில் எதையாகிலும் பெறலாமென்று நினையாதிருப்பானாக. இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான் என்று யாக்கோபு முதலாம் அதிகாரத்திலே வாசிக்கின்றோம். யார் இந்த இருமனமுள்ளவர்கள்? எடுத்துக்காட்டாக, தேவ ஞானத்தை அறிந்து, அதன் வழியிலே நடக்க முயற்சி செய்துகொண்டு, உலக ஞானத்தில் கொஞ்சத்தையும் அதனோடு சேர்த்துக் கொள்கின்றவர்கள். 'நாம் தேவனால் உண்டா யிருக்கிறோமென்றும், உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிற தென்றும் அறிந்திருக்கிறோம்.' என்று 1 யோவன் 5ம் அதிகாரம் 19ம் வசனத்திலே வாசிக்கின்றோம். ஒருவன் தேவனால் உண்டாயிருந்தால், அவன் பொல்லாத வழிகளை விட்டு தன்னை விலக்கி கொள்ள வேண்டும். நான் இரட்சிப்படைந்தவன், தவறாமல் ஆலயத்திற்கு செல்கின்ற வன் என்று கூறிக் கொண்டு, உலகத்தின் போக்கில் சிலவற்றை தன் இருதயத்திலே வைத்திருக்கின்றவன், இருமனமுள்ளவனாக இருக்கின்றான். 'வீண் சிந்தனைகளை நான் வெறுத்து, உமது வேதத்தில் பிரியப்படுகிறேன்.' 'பொல்லாதவர்களே, என்னைவிட்டு அகன்றுபோங்கள்; என் தேவனுடைய கற்பனைகளை நான் கைக்கொள்ளுவேன்.' 'என் மறைவிடமும் என் கேடகமும் நீரே உம்முடைய வசனத்துக்குக் காத்திருக்கிறேன்.' என்று சங்கீதக்காரன் கூறியிருக்கின்றார். எனவே, எங்கள் மத்தியிலும் இருக்கும் பொல்லாத வேலையாட்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள். தேவ சபையிலே இருக்கின்றோம் என்று கூறிக்கொண்டு, உலக போக்கை பின்பற்றி நடக்கும் இருமனதுடையவர்களை குறித்து எச்சரிக்கையாயிருங்கள். இவர்கள் தங்கள் வழிகளிலே நிலையற்றவர் கள், அவர்களை பின்பற்றாமல், உங்கள் உள்ளத்திலே தேவ பயமுள்ளவர்களாக, தேவ பிள்ளையாக நடந்து கொள்ளுங்கள்.

ஜெபம்:

நான் என் உள்ளத்தில் உண்மையாக இருக்கு வேண்டும் என்று விரும்புகின்ற தேவனே, உலகபோக்கோடு நான் உறவுகளை வைத்துக் கொள்ளாதபடிக்கு, எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 2 கொரி 6:14