தியானம் (சித்திரை 06, 2026)
விசுவாசியாயிருங்கள்
யோவான் 20:29
நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார்.
விசுவாச வாழ்க்கையிலே அற்புதங்கள், அடையாளங்கள் நடப்பது உண்மையும் அவசியமானதொன்றாக இருக்கின்றது. ஆனால், அது விசுவாச வாழ்க்கையின் முழுமையல்ல, அது விசுவாச வாழ்க்கையின் ஒரு முக்கிய பகுதியாக இருக்கின்றது. 'இந்தப் புஸ்தகத்தில் எழுதியிராத வேறு அநேக அற்புதங்களையும் இயேசு தமது சீஷருக்கு முன்பாகச் செய்தார். இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங் கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்ப டியாகவும், இவைகள் எழுதப்பட்டி ருக்கிறது.' என்று யோவான் 20ம் அதிகாரம் 30,31ம் வசனங்களிலே வாசிக்கின்றோம். ஆண்டவராகிய இயேசு இந்த பூமியிலே வாழ்ந்த நாட்களிலே, எத்தனையோ முறை படவிலே கடலை கடந்து சென்றார். ஆனால், எத்தனை முறை அவர் கடலின்மேல் நடந்து சென்றார்? அவர் நினைத்த நேரமெல்லாம், அவர் கடலிலே நடந்து செல்ல முடியும். ஒரு ஊரில் இருந்து இன்னுமொரு ஊருக்கு செல்வதற்கு, அவர் பிரயாணப்பட வேண்டியதில்லை. அவர் நினைத்தவுடன் அவர் வேண்டிய இடத்திற்கு ஒரு நொடிப் பொழுதில் சென்றிருக்க முடியும். ஆனால், சீஷர்கள் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவர்தான் வாக்களிக்கப்பட்ட மீட்பர் என்று விசுவாசிக்கும்படி, காற்றும், கடலும், இயற்கை யாவும் அவருக்கு கீழ்படிகின்றது என்பதை காண்பிக்கும்படி கடலையும், காற்றையும் அதட்டினார். கடல்மேல் நடந்து வந்தார். ஆனால், இன்று தங்களை விசுவாசிகள் என்று கூறிக் கொள்ளும் சிலர், தங்கள் வாழ்வில் கண்ட அற்புதங்களை மறந்து, தாங்கள் வேண்டிக் கொள்ளும் நேரம் எல்லாம் அற்புதங்கள், அடையாளங்கள் நடைபெறாதவிடத்து, ஆண்ட வர் இயேவுவை விட்டு செல்ல ஆயத்தமுள்ளவர்களாக இருக்கின்றார். வேத வார்த்தைகள் ஆராய்ந்து அதன் கருப்பொருளை அறியாத, ஆண்டவர் இயேசுவின் சீஷனாகிய தோமோ, அவரைகண்டால் மட்டும் போ தாது, அவர் கைகளில் ஆணிகளினாலுண்டான காயத்தை நான் கண்டு, அந்தக் காயத்திலே என் விரலையிட்டு, என் கையை அவருடைய விலாவிலே போட்டாலொழிய விசுவாசிக்கமாட்டேன் என்றான். உயிர் தெழுந்த ஆண்டவராகிய இயேசு அவனை மறுபடியும் சந்தித்த போது, அவனுடைய மனத்திருப்திக்காக தன் கைகளையும் விலாவையும் அவ ருக்கு காண்பித்து, அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு என்றார்.
ஜெபம்:
ஜெபம்: அதிசயமாய் என்னை நடத்துகின்ற தேவனே, பாவ சாபத்திலிருந்து என்னை மீட்டு, உம்முடைய ஆவியை எனக்கு தந்த பெரிதான அற்புதத்தை நான் ஒரு போதும் மறந்து போய்விடால் இருக்க எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - யோவான் 15:7