புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 28, 2026)

உணர்வுள்ள இருதயம் தேவை!

எபேசியர் 5:16

நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்.


ஆயத்தமுள்ளவர்களாயிருங்கள்! விழிப்புள்ளவர்களாயிருங்கள்! எச்சரிக்கையுள்ளவர்களாய் இருங்கள்! ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள்! காதுள்ளவன் கேட்கக்கடவன்! போன்ற விழிப்புணர்வைத் தரும் வார்த்தைகளை, புதிய ஏற்பாட்டின் நான்கு நற்செய்திகளிலும், அப்போஸ்தல நடபடிகள், நிரூபங்கள் மற்றும் வெளிப்படுத்தின விசேஷத்திலும் திரும்ப திரும்ப கூறியிருப்பதை வாசிக்கலாம். இந்த வார்த்தைகள், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கூறியிருப்பதை நற்செய்திகளிலே காணலாம். பின்பு அவர், பரலோகம் சென்ற பின்பு, யோவானுக்கு வெளி ப்படுத்தின விசேஷம் என்ற வேததத்தின் கடைசிப் புத்தகத்திலே, ஆவி யானவர் சபைகளுக்கு சொல்வதை காதுள்ளவன் கேட்கக்கடவன் என்று எச்சரிப்பை எல்லா சபையோருக்கும் கூறியிருக்கின்றார். அதே ஆவியா னவர்தாமே, ஆண்டவர் இயேசுவின் சீஷர்கள் வழியாக, பரிசுத்த வேதாகமத்திலே இருக்கும், அப்போஸ்தல நடபடிகள் என்ற புத்தகத்திலும், பின்பாக எழுதப்பட்ட 21 நிரூபங்களிலும் குறிப்பிட்டிருப்பதை வாசிக்கலாம். இவைகள் தேவனுடைய வார்த்தைகள்! இவைகளை விரு தாவாக ஆவியானவர் சபையோருக்கு கூறவில்லை. ஆனால், அன்றும் இன்றும், விசுவாசிகளில் சிலர், தேவ வார்த்தைகளைக் குறித்து அசட்டையாகவும், அஜாக்கிரதையாகவும் இருந்து விடுகின்றார்கள். வேறு சிலர், தேவனுடைய எச்சரிப்பானது சபை வழியாக வரும் போது, அதை அற்பாக எண்ணி அவ்விடத்தைவிட்டு அகன்று போய்விடுகின்றார்கள். சத்தியத்தின் வழியிலே நடக்க போதிக்கும் ஆவியானவர், விசுவாசிக ளோடு இருந்து, தேவ வார்த்தைகள் சபை ஊழியர்கள் வழியாக பேசப்படும் போது, சுத்த மனசாட்சியை தந்து, பரிசுத்த குலைச்சலான வழிகளை உணர்த்துகின்றார். ஆனால், சிலரோ, ஆவியானவருடைய வழிநடத்துதலுக்கு இடங்கொடாமல், மாற்று வழிகளை தேடுகின்றார்கள். தங்களுடைய நிரந்திரமான குடியிருப்பு பரலோகம் என்பதை மறந்து அற்பமான சரீரம் வாஞ்சிக்கும் மாம்ச எண்ணங்களுக்கு இடங் கொடுகின்றார்கள். இவர்கள் கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருப்பதில்லை. அப்படியானால் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வெளிப்படும் போது இவர்களுடைய நிலைமை என்னவாக முடியும்? சிந்தியுங்கள், உங்கள் சொந்த வழிகளை ஆராய்;ந்து பார்த்து கர்த்தரிடத்தில் திரும்புங்கள்.

ஜெபம்:

நித்திய குடியிருப்புக்கு என்னை அழைத்த தேவனே, கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர நான் எப்போதும் எதிர்பார்த்திருக்கும் உணர்வுள்ள இருதயத்தை தந்து என்னை வழிநடத்திச் செல்வீராக இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 25:1-13