புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 08, 2026)

சத்திய வழியிலே நிலைத்திருங்கள்

யோவான் 15:6

ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடியைப்போல அவன் எறியுண்டு உலர்ந்து போவான்;


ஒரு கிராமத்திலே இயங்கி வந்த சிறிய சபையிலே இருந்த ஊழியரும் விசுவாசிகளும் ஜெபத்திலே தரித்திருப்பதிலே உறுதியாய் இருந் தார்கள். தேவைகள் ஏற்படும் போது, அதை தேவனிடத்திலே தெரியப் படுத்தி, காத்திருந்தார்கள். வழிகள் உண்டாகும் போது, அந்த தேவை களை பூர்த்தி செய்தார்கள். சில சமயங்களிலே, பதில் உடனே வந்தது, சில வேளைகளிலே தாமதம் ஏற்பட்டிருந்தது. அந்நாட்களிலே பொறுமை யோடு காத்திருந்தார்கள். ஆண் டுகள் கடந்து சென்றதும், சபையிலே பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டிருந்தது. எனவே, செயற் திட்டங்களை ஒன்றின்பின் ஒன் றாக ஆரம்பித்தார்கள், அவை கள் நிறைவேறும் போது, தேவன் அதை ஆசீர்வதிக்க வேண்டும் என்று சிறிய ஜெபத்தை ஏறெடுத்தார்கள். அதாவது, தங்கள் தேவை களை மட்டுமல்ல, கையிலே பணம் அதிகமாக இருந்ததால், தங்கள் விருப்பங்களையும் செய்ய ஆரம்பித்தார்கள். குழுக்கலாக கூடி கலந்து ரையாடினார்கள். வாக்குவாதங்களும், கருத்து முரண்பாடுகளும் ஏற்ப ட்டது. பெரும்பான்தையானோர் விரும்பியதை செயற்படுத்தினார்கள். ஒரு காலத்திலே ஜெபித்து, பொறுயாக இருந்து பெற்றுக் கொண்டு, தேவைகளை நிறைவேற்றயவர்கள். இப்போது, மனவிருப்பப்டி காரிய ங்களை முன்னெடுத்து, பின்பு தேவ ஆசீர்வாதத்தை வேண்டி நிற்கின்றவர்களாக மாறிவிட்டார்கள். முன்பு ஜெபமே ஜெமாக இருந்தது. இப்போ, ஜெபம் ஒரு சடங்காச்சாரமாக மாறிவிட்டது. பிரியமான சகோதர சகோதரிகளே, இப்படிப்பட்ட நிலைமைகள் சபை ஐக்கிங்களிலே மட்டுமல்ல, தனிப்பட்ட வாழ்விலும் உண்டாகி விடுகின்றது. கிறிஸ்து வோடு வாழாத வாழ்க்iயானது சிதறடிக்கப்பட்ட வாழ்க்கையாக காணப்படும். ஆண்டவர் இயேசு கிறிஸ்துவோடு வாழ்கின்றவர்கள் அவரு டைய வார்த்தையிலே நிலைத்திருக்கின்றார்கள். இவர்கள் காலத்திற்கு காலம் தங்கள் வழிகளை மாற்றிக் கொள்வதில்லை. மறுபடியும் உலகத்தை ஆதயப்படுத்திக் கொள்ள முயற்சிக்காமல், கிறிஸ்துவையே எப்போதும் ஆதாரமாக கொண்டிருக்க வேண்டும். ஆவியிலே ஆரம்பித்து, நன்றாக ஓடி, பாதி வழியிலே உலக போக்கை பின்பற்றி, மாம் சத்திலே முடிக்காகமல், எப்போதும், மெய்யான திராட்சை செடியாகிய இயேசு கிறிஸ்துவிலே ஒட்டப்பட்ட கொடிகளைப் போல காணப்பட வேண்டும்.

ஜெபம்:

பரலோக தேவனே, ஆவியிலே ஆரம்பித்து மாம்சத்திலே முடிக் காமல், எப்போதும் உம்முடைய வார்த்தையிலே நிலைத்திருந்து கனி கொடுக்கும்படிக்கு எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 3:16