தியானம் (ஆனி 09, 2026)
கிறிஸ்துவின் நாளுக்குரிய ஆயத்தம்
லூக்கா 21:34
நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள்மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்.
உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கு விசுவாசிகள் எச்சரிக்கiயாக இருக்க வேண்டும் என்று ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார். இயேசு கிறிஸ்து வழியாக உண்டான இரட்சிப்பை பெற்றவர்களில் சிலர், அதன் பின்பு எப்படியும் வாழலாம் என்ற சிந்தையுள்ளவர்ளாக மாறிவிடுகின்றார்கள். அப்படியல்ல, விசுவாசிகள் தங்கள் இருதயத்தை எல்லாக் காவலோடும் காத்துக் கொள்ள வேண்டும். இந்த உலகத்தால் ஈர்க்கப்பட்டு, ஆத்துமா மண் ணோடு ஒட்டிக் கொள்ளாதபடிக்கு எப்போதும் விழிப்புள்ளவர்களாக காணப்பட வேண்டும். அக்காலத்தி லிருந்து போல, இன்னும் அதிக மாக இன்றைய நாட்களிலே, விசு வாசிகள் மத்தியிலே அநேக சந்தேகங்களும், கேள்விகளும் உண்டாகி விடுகின்றது. அந்த கேள்விகளின் கருப்பொருளை ஆராய்ந்து பார்ப்பீர்கள் என்றால், பரிசுத்தத்தை விட்டு விலகிச் செல்வதற்கு வேதத்திலே ஆதாரம் தேடும் கேள்விகளாகவே இருக்கும். எடுத்துக்காட்டாக, 'அது பழைய ஏற்பாடு, இது புதிய ஏற்பாடு, இது புது யுகம், இளம் சந்ததி' என்ற சத்தங்கள் அதிகமாக கேட்கின்றதல்லவா? இவைகளின் தார்பரி யம் என்ன? பொதுவாக தங்கள் மாம்ச இச்சைகளை நிறைவேற்றும் படிக்கு வழிகளை தேடுகின்றவர்களே இப்படியாக எண்ணங் கொள்கி ன்றார்கள். கிறிஸ்துவை அறியும் மேன்மைக்காக எதையெல்லாம் விட்டுவிட ஆயத்தமாக இருக்கின்றீர்கள்? கல்வி, வேலை, ஆஸ்தி, அந் தஸ்துக்களை மட்டுமா? மனுஷனை தீட்டுப்படுத்தும் மனதின் யோசனை களை விட்டுவிட ஆயத்தமா? 'எப்படியெனில், இருதயத்திலிருந்து பொல் லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்த னங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்ப ட்டுவரும்.' ஏன்று ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார்கள். கிறிஸ்துவை தங்கள் வாழ்விலே மேன்மைப்படுத்துகின்றவர்கள் தங்கள் மாம்ச இச்சைகளை சிலுவையிலே அறைந்திருப்பதால், அவர்கள் கிறிஸ்துவின் நாளுக்கென்று ஆயத்தமுள்ளவர்களாக இருக்கும்படிக்கு, கறையற்றவர்களும் துப்பரவானவர்களுமாக இருக்கின்றார்கள். அந்த நாள் அவர்களுக்கு ஒரு கண்ணியைப் போல இருக்காது. அந்த நாள் அவர்களுக்கு ஒரு மகிழ்சியின் நாள். ஆனால், கிறிஸ்துவை தங்கள் வாழ்விலே மேன்மைபடுத்தாமல், இந்த உலகத்தின் போக்கிலே வாழ்ப வர்களுக்கு அந்த நாள் மிகவும் பயங்கரமாக இருக்கும்.
ஜெபம்:
நித்திய ஜீவனுக்கென்று என்னை அழைத்த தேவனே, இந்தப் பூமிக்குரிய அலங்காரத்தை நான் மேன்மைப்படுத்தாமல், என் உள்ளத்திலே பரலோக அலங்காரத்தை தரித்தவனாக வாழ எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - 1 பேதுரு 3:3-4