புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 23, 2026)

செய்கைளுக்குரிய பலன் உண்டு!

ரோமர் 2:6

தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார்.


அன்றியும், சகோதரரே, உங்களுக்குள்ளே பிரயாசப்பட்டு, கர்த்தருக்குள் உங்களை விசாரணைசெய்கிறவர்களாயிருந்து, உங்களுக்குப் புத்திசொல்லுகிறவர்களை நீங்கள் மதித்து, அவர்களுடைய கிரியையினிமித்தம் அவர்களை மிகவும் அன்பாய் எண்ணிக்கொள்ளும்படி உங்களை வேண் டிக்கொள்ளுகிறோம். உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள் என்று தெசலோனிக்கேய சபையோருக்கு தேவ ஊழியராகிய பவுல் வேண்டு கோள் விடுத்திருப்பதை 1 தெச 5ம் அதி காரத்திலே 12ம் 13ம் வசனங்களில் வாசிக்கலாம். இந்த 5ம் அதிகாரம் முழுவதையும் நீங்கள் அவ்வப்போது வாசித்து தியானிப்பது உங்கள் பக் திவிருத்திக்கு நன்மையாக இருக்கும். முதலாவதாக நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது என்வென்றால், ஒருவேளை கிறிஸ்துவுக்காக பிரயாசப்பட்டவனை நீங்கள் மதித்து நடந் தாலும், நடக்காவிட்டாலும், அவன் தன் பிரயாசத்திற்குரிய பலனை அடைந்து கொள்வான். அவனவனுக்குரிய பலனை ஆண்டவர் இயேசு நிச்சயமாக கொடுப்பார். சில நேரங்களிலே, உங்களுக்கு நன்மை நினைத்த ஒருவரை நீங்கள் சத்துருவாக எண்ணி, அவரை மனநோகப்பண்ணியும், அவர் தன் நற்கிரியைகளிருந்து சோர்ந்து போகாமல், கிறிஸ்துவினிமித்தம் தொடர்ந்து நன்மை செய்து வரும் போது, அவருக்கு பரலோகிலே கைமாறு மிகுதியாக இருக்கும். அவர் தன் கிரியைகளுக்கு தக்கப லனை தேவன் கொடுப்பார். நீங்களும் உங்கள் சுயநீதியின் கிரியைகளுக்குதக்க பலனை அடைந்து கொள்வீர்கள். தேவனிடத்தில் பட்சபதமில்லை. (ரோமர் 2:11). ஆனால், சூழ்நிலைகள் எதுவாக இருந்தாலும், சம்பவங்கள் கார்மேகங்கள் சூழ்ந்ததைப் போல தெளிவற்றதாக இருந் தாலும், கர்த்தருடைய நேரத்திலே வெளிச்சம் உதிக்கும் வரைக்கும் கர்த்தருடைய வார்த்தையினிமித்தம், நீங்கள் உங்களுக்காக உண்மை யாக பிரயாசப்படுகின்றவர்களை மதித்து கனமாக எண்ணி, நீடிய பொறு மையுள்ளவர்களாக இருக்கும் போது, நீங்கள் தேவ சாயலிலே வளர்ந்து பெருகின்றவர்களாக இருப்பீர்கள். அதுமட்டுமல்லாமல், உங் கள் நற்கிரியைகளுக்குரிய பலனை அடைந்து கொள்வீர்கள். பிலிப்பியர் இரண் டாம் அதிகாரத்தின் முடிவிலே, எப்பாப்பிரோதீத்து கிறிஸ்துவின் ஊழியத்தின் நிமித்தம் மரணத்திற்கு சமீபமாக இருந்தான் என்பதை காண்கி ன்றோம். கிறிஸ்துவினிமித்தம் உங்களுக்காக பிரயாசப்படுகின் றவர்களை கனப்படுத்துங்கள். அவர்கள் குறையிலே நீங்கள் அவர்களை விசாரிக்கின்றவர்களாக இருங்கள்.

ஜெபம்:

பரலோக தேவனே, என்னுடைய நலனுக்காக நற்கிரியைகளை நடப்பிக்கின்றவர்களை மதித்து, அவர்களுக்கு நன்றியயிதலுள்ளவனாக இருக்க எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபி 11:6