புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 02, 2026)

தானதர்மம் செய்யும் மனம் பெருகவேண்டும்

2 கொரிந்தியர் 8:7

மற்றெல்லாக் காரியங்களிலும், நீங்கள் பெருகியிருக்கிறதுபோல, இந்தத் தர்மகாரியத்திலும் பெருக வேண்டும்.


விசுவாசிகள் வளர வேண்டிய இடங்களை அல்லது மாற வேண்டிய இடங்களை சுட்டிக் காட்டுதலை வேதத்திலே ஆரம்பத்திலிருந்து காணலாம். பழைய ஏற்பாட்டின் காலத்திலே விசுவாசிகள் என்ற பதத்தை பயன்படுத்தாமல், தேவ ஜனங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தான தர்ம காரியமானது கிறிஸ்த வாழ்விலே இன்றியமையாததொன்றாக இருக்கின்றது என்பதை வேத வார்த் தைகள் வழியாக நாம் அறிந்து கொள்ளலாம். அக்காலத்திலே மக்கெதோ னியா நாட்டை சேர்ந்தவர்கள் இந்த தானதர்ம காரியத்திலே தேவ கிருபை பெற்றவர்களாக இருந்தார்கள். பிலிப்பி சபையானது மக்கெதோனியா நாட்டிலே இருந்தது குறிப்பிடத்தக்கது. அதாவது, சட்டப்படி ஒரு பகுதியை தானதர்மத்திற்கு கொடுத்தேன் என் கடமை தீர்ந்தது என்று எண் ணாமல், விசுவாசிகளுடைய மனமானது பெற்றுக் கொள்வதைப் பார்க் கிலும் கொடுப்பது மேன்மை என்பதிலே வளர வேண்டும். சிலர் போதிப்பிலும், மற்ற எல்லாக்காரியத்திலும் வளர்ந்திருந்தாலும், தானதர்ம விஷயத்திலே ஒரு நிலையிலே நின்று விடுகின்றார்கள். தேவ ஊழிய ராகிய பவுல், கொரிந்து பட்டணத்திலுள்ள சபைக்கு எழுதும் போது, 'அன்றியும் சகோதரரே, மக்கெதோனியா நாட்டுச் சபைகளுக்கு தேவன் அளித்த கிருபையை உங்களுக்கு அறிவிக்கிறோம். அவர்கள் மிகுந்த உபத்திரவத்தினாலே சோதிக்கப்படுகையில், கொடிய தரித்திரமுடையவர்களாயிருந்தும், தங்கள் பரிபூரண சந்தோஷத்தினாலே மிகுந்த உதா ரத்துவமாய்க் கொடுத்தார்கள். மேலும் அவர்கள் தங்கள் திராணிக்குத் தக்கதாகவும், தங்கள் திராணிக்கு மிஞ்சியும் கொடுக்க, தாங்களே மனதுள்ளவர்களாயிருந்தார்களென்பதற்கு, நான் சாட்சியாயிருக்கிறேன். தங்கள் உபகாரத்தையும், பரிசுத்தவான்களுக்குச் செய்யப்படும் தர்ம ஊழியத்தின் பங்கையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளும்படி அவர்கள் எங் களை மிகவும் வேண்டிக்கொண்டார்கள். அல்லாமலும், விசுவாசத்திலும், போதிப்பிலும், அறிவிலும், எல்லாவித ஜாக்கிரதையிலும், எங்கள் மேலுள்ள உங்கள் அன்பிலும், மற்றெல்லாக் காரியங்களிலும், நீங்கள் பெருகியிருக்கிறதுபோல, இந்தத் தர்மகாரியத்திலும் பெருக வேண்டும். இதை நான் கட்டளையாகச் சொல்லாமல், மற்றவர்களுடைய ஜாக்கிர தையைக்கொண்டு, உங்கள் அன்பின் உண்மையைச் சோதிக்கும் பொருட்டே சொல்லுகிறேன்; என்று கூறியிருக்கின்றார். தர்ம காரியங்கள் அன்பின் உண்மையை சோதித்தறிய உதவி செய்யும்.

ஜெபம்:

பரலோக தேவனே, நான் இவ்வளவு செய்தேன், சட்டப்படி செய் தேன் என்ற மனத்தைவிட்டு, மனதார தானதர்மங்களிலே எப்பொழுதும் வளர்ந்து பெருகும்படிக்கு நீர் என்னில் செய்கையும் விருப்பத்தையும் உண்டாக்குவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 4:10