தியானம் (புரட்டாசி 16, 2026)
கிறிஸ்துவை ஆதயப்படுத்துங்கள்
எபிரெயர் 11:26
இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்துஇ எகிப்தி லுள்ள பொக்கிஷங்களி லும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணி னான்.
தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட ஜனங்கள் எகிப்திலே வாழ்ந்து வந்தார்கள். காலங்கள் கடந்து சென்ற பின்பு, யோசேப்பை அறியாத புதிய ராஜன் ஒருவன் எகிப்தில் தோன்றினான். தேவ ஜனங்களின் பெருக்கத்தையும், பெலனையும் கண்டு, அவர்களை குறித்து உபாயம் பண்ணி, அவர்களை அடிமைகளா க்கி, கொடுமையாய் வேலைவாங்கி னார்கள். அந்த அடிமைத்தனத்தின் ஆண்டுகள் நிறைவேறும் நாட்கள் சமீத்தபோது, அக்காலத்திலே மோசே பிறந்து, திவ்விய சவுந்தரியமுள்ளவ னாயிருந்து, மூன்று மாதமளவும் தன் தகப்பன் வீட்டிலே வளர்க்கப்பட்டான். அவன் வெளியே போட்டுவிடப்பட்ட போது, பார்வோனுடைய குமாரத்தி அவனை எடுத்துத் தனக்குப் பிள்ளை யாக வளர்த்தாள். மோசே எகிப்தியருடைய சகல சாஸ்திரங்களிலும் கற்பிக்கப்பட்டு, வாக்கிலும் செய்கையிலும் வல்லவனானான். அவனு க்கு நாற்பது வயதானபோது, இஸ்ரவேல் புத்திரராகிய தன்னுடைய சகோதரரைக் கண்டு சந்திக்கும்படி அவனுடைய இருதயத்தில் எண்ணமுண்டாயிற்று. எகிப்திலே அவனுக்கு அந்தஸ்து இருந்தது. சகல கலைகளிலும் கற்று தேர்ந்தவனாக இருந்தான். உலகத்திலே மேன்மை என்று கருதப்படும் நிறைவான சுகபோகமான வாழ்க்கை அவனுக்கு உண்டாயிற்று. ஆனால், மோசே தான் பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்னப்படுவதை வெறுத்து, அநித்தியமான பாவசந்தோஷங்களை அநுபவிப்பதைப்பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அநுபவிப்பதையே தெரிந்துகொண்டான். அதாவது, இந்த உலகத்தால் உண்டான நிறைவை அவன் தனக்குண்டான குறைவாக கருதினான். அவன் அந்நிய தேசத்திலே கற்றுக் கொண்ட கலைகளால், தேவ சித்தத்தை நிறைவேற்ற முடியவில்லை. அவன் எண்பது வயதானபோது, இனி என்னால் ஒன்றும் கூடாதது என்ற நிலைமையிலே, தேவனாகிய கர்த்தர் அவனை அழைத்தார், பார்வோனுக்கு தேவனாக அவனை உயர்த்தினார், தேவ ஜனங்களின் தலைவனான். ஒருவன் தன் சிநேகி தனோடே பேசுவதுபோல, கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்ப் பேசி னார்;. பிரியமானவர்களே, தேவனால் கூடாத காரியம் ஒன்றுமி ல்லை என்பதை நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள். அவர் நினைத்த காரியம் தடைபடாது. எனவே, தேவனை சார்ந்து அவருடைய ஆலோச னையின் வழியிலே நடவுங்கள்.
ஜெபம்:
பரலோக தேவனே, இந்த உலகத்தினால் உண்டாகும் நிறைவைவிட, கிறிஸ்துவை ஆதயப்படுத்திக கொள்வதே என் பாக்கியம் என்று உணர்ந்து கிரியைகளை நடப்பிக்க என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - அப் 7:20-23