புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 24, 2026)

சாந்தகுணம் வெளிப்படட்டும்

பிலிப்பியர் 4:5

உங்கள் சாந்தகுணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக. கர்த்தர் சமீப மாயிருக்கிறார்.


உங்கள் வாழ்க்கையிலே, உங்கள் குடும்பம், நண்பர்கள், உறவினர்கள் மத்தியிலே, கருத்து முரண்பாடுகள் ஏற்படாத ஒரு பருவத்தை கூறு முடி யுமா? கூடி ஆராதிக்கும் சபை ஐக்கியத்திலே விசுவாசிகள், ஊழியர்கள் மத்தியிலே கருத்து முரண்பாடுகள் இல்லாமல் இருந்த ஆண்டுகளை குறிப்பிட்டு கூற முடியுமா? விசுவாச குடும்பத்தினர் கல்வி கற்றும் இட த்திலே, வேலை செய்யும் இடங்க ளிலே, நண்பர்கள், உறவினர்கள் மத் தியிலே, வெளி இடங்களிலே, சபை ஐக்கியங்களிலே பொதவுhக ஏதோ ஒரு காரியத்தைக் குறித்து கருத்து முரண்பாடுகள் ஏற்படுவது உண்டு. ஒருவேளை அந்தக் காரியங்கள் ஆகா தவைகளும், அற்பமானவைகளுமாக இருக்கலாம். சில வேளைகளிலே சபை ஐக்கியங்களிலே, விசுவாசிகள் மத்தியிலே இப்படியான சம்பாiஷகள் ஏற்படுவதுண்டு. இவைகளளை குறித்து வேதம் கூறுவதாவது: 'சீர்கேடும் கிழவிகள் பேச்சுமாயிருக்கிற கட்டுக்கதைகளுக்கு விலகி, தேவபக்திக்கேதுவாக முயற்சிபண்ணு.' 'கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்.' 'அப்ப டியே வம்பும், புத்தியீனமான பேச்சும், பரியாசமும் தகாதவைகள்; ஸ்தோ த்திரஞ்செய்தலே தகும்.' 'ஆகாத சம்பாஷனைகள் நல்லொழுக்கத்தை கெடுக்கும்' எனவே, இப்படியான காரியங்களிலே கருத்து முரண்பா டுகளும், வாக்குவாதங்களும் உண்டாவது, எந்த விதத்திலும் விசுவாசிக ஏற்புடையதல்ல. ஆனால், சில வேளைகளிலே தேவ காரியங்களைக் குறித்த காரியங்களிலே, விளக்கம் இல்லாத வேளைகளிலே கருத்து முரண்பாடுகளும், வேறுபட்ட சிந்தைகளும் உண்டாக கூடிய சந்தர்ப ங்கள் உண்டாகிய விடுகின்றது. அப்படியாக சந்தர்பங்களிலே, தேவ பிள்ளைகள், நல்லொழுக்கத்தோடும், அமைதலுள்ள ஆவியோடும், காரியங்கள் குறித்து பேச கற்றுக் கொள்ள வேண்டும். வாக்குவாதங் களும், சண்டைகளும், கலகங்களும், பிரிவினைகளும் பரிசுத்தவான்க ளுக்கு ஏற்புடையதல்ல.எனவே, 'யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவர்கள்;. மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப் பிக்கமாட்டாதே.' 'உங்கள் சாந்தகுணம் எல்லா மனுஷருக்கும் தெரிந் திருப்பதாக. கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.'

ஜெபம்:

பரலோக தேவனே, என் உள்ளத்தில் நாட்டப்பட் டதாயும் என் ஆத்துமாவை இரட்சிக்க வல்லமையுள்ளதாயுமிருக்கிற உம் வசனத்தைச் சாந்தமாய் ஏற்றுக்கொண்டு நடக்க உணர்வுள்ள இருதயத்தை தந்தரு ள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - யாக்கோபு 1:21