தியானம் (ஆவணி 18, 2026)
குறைவுகளை நிறைவாக்குங்கள்
எபிரெயர் 13:16
அன்றியும் நன்மைசெய்யவும், தானதர்மம்பண்ணவும் மறவாதிருங்கள்; இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார்.
ஒரு கிராமத்திலே வசித்த வந்த குடும்பத்திலே நான்கு சிறு பிள்ளைகள் இருந்தார்கள். அவர்களுடைய தகப்பனானவர், வெறிகொள்கின்றவனா கவும், தான் உழைப்பதை மதுபானத்திலே அழிக்கின்றவனாகவும், மனைவி பிள்ளைகளைக் குறித்த கவனமற்றவனாகவும் இருந்து வந்தான். அந்த ஊரிலுள்ள குடும்பங்களுக்கு உதவி செய்யும்படி, சில குழுக்கள் அங்கே சென்றிருந்தது. சிலர், மேலே குறிப்பிட்ட குடும்பத்தினரின் நிலைமையை அறிந்து கொண்ட போது, இவர்களுக்கு உதவி செய்தால், அந்த தகப்பனா னவர் பணத்தை எடுத்து துஷ; பிர யோகம் செய்து விடுவான் என்று அடுத்த ஊருக்கு சென்று விட்டார்கள். ஆனால், அங்கு வந்திருந்த புற தேசத்து பெண்மணி, அந்த தாயானவளையும், அவளுடைய நான்கு பிள்ளைகளின் நிர்கதியான நிலைமையையும் கண்டு மனதுருகி, அவர்களுக்கு எப்படியாவது உதவி செய்ய வேண்டும் என்று தீர்மா னித்து, அதற்குரிய வழிகளை தேடினாள். விசுவாசிகளுடைய மனநிலைமையும், அந்தப் பெண்மணியைப் போலவே இருக்க வேண்டும். அதாவது, உதவி செய்யாமல் இருப்பதற்கு காரணங்கள் தேடாமல், உதவி தேவையான இடங்களிலே, எப்படி உதவி செய்யலாம் என்பதை குறித்த எண்ணமுள்ளவர்களாக இருக்க வேண்டும். தேவனாகிய கர்த்தர் உங்கள் வாழ்வில் செய்த நன்மைகளை நினைத்துப் பாருங்கள். அவர் காட்டிய இரக்கங்களை எண்ணிப் பாருங்கள். அவர் உங்களுக்கு கொடுத்த எல்லா காரியங்களிலும், நீங்கள் அவருடைய சம்பூரணமான திட்டப்படி நடந்து கொண்டீர்களா என்று ஆராய்ந்து பாருங்கள். மற்றவர் களுடைய உண்மைத் தன்மையை குறித்து நியாயந்தீர்க்க முன்பு, அவ ரவர் தங்கள் தங்கள் இருதயங்களை வார்த்தையின் வெளிச்சத்திலே ஆராய்ந்து பார்ப்பது நல்லது. 'ஒருவன் நன்மைசெய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற்போனால், அது அவனுக்குப் பாவமாயிருக்கும்.' தேவன் தம்முடையவர்களை போஷிக்க அறிந்திருக்கின்றார். அவர் எலியாவை நோக்கி: அந்த ஆற்றின் தண்ணீரைக் குடிப்பாய்; அங்கே உன்னைப் போஷிக்க, காகங்களுக்குக் கட்டளையிடுவேன் என்றார். அந்நாட்களுக்கு பின்பு, தீர்க்கதரிசியை பாராமரிக்கும்படி சாறிபாத் ஊரிலுள்ள ஒரு விதவைக்குக் கட்டளையிட்டேன் என்றார். ஆனால் விசுவாசிகள் தேவனுடைய திட்டத்திற்குள் இணையும் போது, அது அவர்களுக்கு பெரிதான ஆசீர்வாதமாக இருக்கும்.
ஜெபம்:
இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவனே, சூழ்நிலைகளின் நிமித்தம் எவரையும் நியாயந்தீர்க்காமல், பரிசுத்தவான்களுடைய குறைவிலே அவர்களை விசாரிக்கும்படி, எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிந டத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - ரோமர் 12:13