புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 09, 2026)

நன்மையான ஈவுகள்

யாக்கோபு 1:17

நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை.


குழந்தைகள் தங்கள் கண் கண்டவைகளையெல்லாம் ஆசைப்பட்டு, அவைகளை எடுத்து தங்கள் வாய்குள் போடுவதற்கு முயற்சி செய் வார்கள். குழந்தைகளுடைய பெற்றோரோ, அந்த முயற்சிகளுக்கு இடங் கொடுக்க மாட்டார்கள். குழந்தைகள் சத்தமிட்டு அழுதாலும், அவைகள் தேற்றுவதற்கு வேறு வழிகளை கையாழுவார்கள். குழந்தைகள் வளர் ந்து அறிவடையும் போது, தாங்கள் விரும்பினதெல்லாம் தங்களுக்கு உகந்ததல்ல என்பதையும், அவற்றுள் பல பாதகமானவைகள் என்ப தையும் உணர்ந்து கொள்கின்றார் கள். சில வேளைகளிலே, குழந்தை களைப் போலவே, சில விசுவாசிக ளுடைய மனநிலையும் இருக்கின்றது. தங்கள் தேவைகள் இன்னதென்பதை உணராமல், தங்கள் மனம் விரும்பினதையெல்லாம் செய்யும் படிக்கு நாடுகின்றார்கள். அவைகள் கை கூடிவரவேண்டும் என்று வேண் டுதல் செய்கின்றார்கள். தாங்கள் நாடினது தங்களுக்கு கைகூடாமல் போகும்போது, தேவன்மேல் கோபம் கொள்கின்றார்கள். நித்திய ஜீவனு க்கென்று அழைப்பை பெற்ற அருமையான சகோதர சகோதரிகளே, 'உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக் கேட்டால் அவனு க்குப் பாம்பைக்கொடுப்பானா? ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?' என்று ஆண்டவராகிய இயேசு கூறியிருகின்றார். அவர் நன்மையே அன்றி தீமையை அனுப்பி வைக்க மாட்டார். பிள்ளைகள் தவறான காரியங்களிலே பிடிவதமாக இருக்கும் போது, அவர்களுடைய பெற்றோர், அவர்களை சிட்சிப்பது போல, சிற்சில நேரங்களிலே, தாம் நேசிக்கின்றவர்களை சிட்சிக்கின்றார்கள். விசுவாசிகள் உணர்வடையும் நேரத்திலே, தங்கள் தேவைகள் இன்னதென்பதையும், அறியும் அறிவை அடைகின்றார்கள். தேவன் தாமே, தங்கள் தேவைகள் யாவையும், குறித்த காலத்திலே சந்திக்கி ன்றார் என்பதையும், அவரிடத்திலே இருந்து நன்மையான ஈவுகளே வருகின்றதென்பதையும் அனுபவத்திலே அறிந்து கொள்கின்றார்கள்.

ஜெபம்:

நன்மையான ஈவுகளை பரத்திலிருந்து அருள் செய்கின்ற பிதாவாகிய தேவனே, என்னுடைய தேவைகள் இன்னதென்று உணர்ந்து கொள்ளும் ஞானமுள்ள இருதயத்தை தந்து என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 6:33