தியானம் (புரட்டாசி 15, 2026)
மெய் ஞானம்
யாக்கோபு 3:17
பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளதாயும், இரக்க த்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது.
யாக்கோபு அதிகமாக நேசித்த யோசேப்பு என்னும் அவனுடைய குமாரனாவன், 17 வயதுடையவனாக இருக்கும் போது, அவனுடைய சகோதரர்கள், அவனை இருபது வெள்ளிக் காசுக்கு அடிமையாக விற்றுப் போட்டார்கள். அவன் எகிப்துக்கு கொண்டு போகப்பட்டு, அங்கே அவன் அடிமையாக வேலை செய்து, பல உபத்திரவங்களை சகித்துக் கொண்டான். அவனுடைய வயதையுடைய ராஜ குமாரர்கள், பிரபுக்கள், அதிகாரிகளின் பிள்ளைகள், எகிப்திலே எராளமாக இருந்திருப்பார்கள். மாம்சத்தின்படி அவர்கள் எவருக்கும் இவன் நிகரானவனாக இருக்கவில்லை. அவனுடைய வயதையுடை யோர் பலர், எகித்திலே பிரபல்யமாக இருந்திருப்பார்கள். யோசப்போ, முக மறியாதனாக, செய்யாத குற்றத்திற்காக சிறையிலே போடப்பட்டான். ஆனால், யாரும் அறியாத அதி உன்னதமான மேன்மை யோசேப்புக்கு இருந்தது. கர்த்தர் யோசேப்போடே இருந்து, அவன்மேல் கிருபையை பொழிந்தார் (ஆதியாகமம் 39:3,21). கர்த்தர் முன்குறித்த நாள் வந்தபோது, யோசேப்பை அங்கிருந்த ராஜ குமாரர்கள், பிரபுக்கள், அதிகாரிகளுக்கு மேலாக உயர்த்தினார். இன்று 17 வயதையுடைய விசுவாச மார்கத்தை சேர்ந்த பிள்ளைகள் என்ன செய்கின்றார்கள்? யாரிடம் தங்களுக்கு ஆலோசனைகளை பெற்றுக் கொள்கின்றார்கள்? உலகத்தாரின் பார்வையின்படியும், சொந்த சகோதரர்களின் பார்வையின்படியும், யோசேப்பு குறைவுள்ளவனாக இருந்தான். சதி மோசங்களினாலே அவன் தாழ்த்தப்பட்டுப் போனான். ஆனால் கர்த்தரோ அவனை நிறைவுள்ளவனாக்கினார். யாரிடம் மெய் ஞானம் உண்டு? உலக வழக்கத்தின்படி கல்வி அறிவு இல்லாதவர்கள் ஆனால் கர்த்தருக்கு பயந்து அவர் வழியிலே நடக்கின்றவர்களிடத்தில் உண்டா? அல்லது உலக வழக்கத்தின்படி நன்றாக கற்று தேறினவர்கள் ஆனால் கர்த்தரை அறியாதவர்களிடம் உண்டா? கர்த்தருக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம். சமாதானமும், நற்கனிகளும் நிறைந்த வாழ்வை இந்த உலகத்திலே வாழும்படிக்கு, தேவ ஞானத்தை நாடுங்கள். பொருளாசையில்லாமல், தேவனுக்கு பயந்து நடக்கின்றவர்க ளிடத்திலே ஆலோசனைகளை கேளுங்கள். பரத்திலிருந்து வருகின்ற மெய் ஞானத்தை அவர் தந்து உங்களை வழிநடத்திச் செல்வார்.
ஜெபம்:
நீதிமான்களுக்கென்று மெய்ஞ்ஞானத்தை வைத்துவைத்திருக்கின்ற தேவனே, நான் உமக்கு பயந்து உத்தமமாய் நடக்கும்படிக்கு எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - நீதி 2:7