புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 25, 2026)

கிரியைகளிலே காண்பியுங்கள்

பிலிப்பியர் 2:12

அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட் சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்.


ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த மனிதனொருவன், அந்த தேசத்தின் அரசா ங்கத்தின், சுகாதார அமைச்சினால் நடத்தப்படும், சுகாதார நிபுணரு க்கான பயிற்சியிலும், பரீட்சையிலும் தேர்ச்சியடைந்து, உத்தியோ கபூர்வமான சுகாதர நிபுணர் என்னும் பட்டத்தை பெற்றுக் கொண்டான். அவன் தன் ஊருக்கு திரும்பிய போது, அவனுடைய வாழ்க்கை முறையானது மாற்றமடைந்துது. மனி தர்கள் முன் ஒரு வேஷம், வீட்டிலே இன்னுமொரு வேஷம் என்ற பிரகா ரமாக வாழாமல், தான் கற்றுக் கொண்டவைகளை, தன் வாழ்விலும், தன் குடும்பத்திலும் உண்மையி லேயே கடைபிடித்து வந்தான். அவ னுடைய பேச்சுக்கும் வாழ்க்கைமு றைக்னும் சம்பந்தம் இருந்ததால், அந்த ஊரிலே வாழ்ந்த பெரியவர்க ளும், சிறியவர்களும் அவனை கனப்படுத்தி, அவன் உண்மையிலே ஒரு சுகாதார நிபுணர் என்பதை ஏற்றுக் கொண்டார்கள். இந்த சம்பவத்தை மனதில் வைத்தவர்களாக, பின்வரும் கருத்துக்களை சிந்துப் பாருங்கள். நீங்கள் கிறிஸ்து இயேசுவின் வழியான உண்டான இரட்சிப்பை பெற்றுக் கொண்டீர்களா? நீங்கள் தேவனாகிய கர்த்தருடைய விசுவா சிகளா? ஆண்டவர் இயேசுவின் சீஷர்களாக? பிதாவாகிய தேவனுடைய பிள்ளைகளா? அப்படியானால், நீங்கள் பெற்ற இரடசிப்பானது உங்கள் நடை, உடை, பாவனையிலே வெளிப்படத்தப்படுகின்றதா? கிருஐபiயி னாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிப்பை பெற்றுக் கொண்ட அருமையான சகோதர சகோதரிகளே, வீட்டிலும், சபையிலும், ஊரிலும், இரட்சிப்பின் தெய்வீக சுபாங்களை மனதார வெளிப்படுத்துறீர்களாக? இரட்சிப்பு அடைந்த நாட்களுக்கு முன் இரு ந்து மாம்ச இச்சைகள் இன்னும் அந்தப்படியே இருக்கின்றதா? சிறை யிலிருந்த தேவ ஊழிய ராகிய பவுல் பிலிப்பு சபையோருக்கு எழுதும் போது, நீங்கள் ஐக்கிய முள்ளவர்களாக இருந்தால், பிறரை குறித்து நோக்கமுள்ளவர்களாக இருந்தால், நீங்கள் உண்மையிலே கிறிஸ்து வின் சிந்தையை தரித்தி ருந்தால், தேவ பயத்தோடு, பயபக்தியுள்ளவர்களாக, கீழ்படிவோடு கூட, உங்கள் இரட்சிப்பை உறுதி செய்யும் கனிகள் உங்கள் வாழ் க்கையிலே வெளிப்படட்டும் என்று கூறியி ருக்கின்றார். அந்த தெய்வீக கனிகள் வெளிப்படுமம்படி, கிறிஸ்துவின் சிந்தையை தரித்தவர்களாக, கிறிஸ்துவுக்குள் பிரயாசப்பட வேண்டும். உங்கள் சிந்தனையும், சொல்லும், செயலும், தேவனுக்கு பிரியமுள்ளதாக இருப்பதாக. வாழ்க்கையானது நாளுக்கு நாள் புதிதாக்கப்படுவதாக.

ஜெபம்:

கிருபையினாலே என்னை தாங்கி வழிநடத்தும் தேவனே, நான் பெற்றுக் கொண்ட இரடச்சிப்பானது என் வாழ்க்கையில் பிரதிபலிக்கும்படிக்கு உண்மையும் உணர்வும் உள்ள இருதயத்தை தந்த வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ரோமர் 2:7