தியானம் (மாசி 22, 2026)
'விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்'
1 கொரிந்தியர் 10:12
இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்.
தேவனாலே தெரிந்து கொள்ளப்பட்ட ஜனங்கள், அந்நாட்களிலே, மேகத்துக்குக் கீழாயிருந்தார்கள், எல்லாரும் சமுத்திரத்தின் வழியாய் நடந்துவந்தார்கள். எல்லாரும் மோசேக்குள்ளாக மேகத்தினாலும் சமுத்திரத்தினாலும் ஞானஸ்நானம்பண்ணப்பட்டார்கள். வனாந்திரத்திலே, எல்லாரும் ஒரே ஞானபோஜனத்தைப் புசித்தார்கள். எல்லாரும் ஒரே ஞானபானத்தைக் குடித்தார்கள். எப்படியெனில், அவர்களோடேகூடச் சென்ற ஞானக்கன்மலையின் தண்ணீ ரைக் குடித்தார்கள்; அந்தக் கன்மலை கிறிஸ்துவே. அதாவது, அவர்கள் தேவனுடைய வியக்கத்தக அற்புத அதிசங்யங்களை கண்ணார கண்டார்கள். அவருடைய சத்திய வார்த்தைகளை கேட்டார்கள். அப்படியிருந்தும், அவர்களில் அதிகமானபேர்களிடத்தில் தேவன் பிரியமாயிருந்ததில்லை. ஏன்? அவர்களில் சிலர் அல்ல அநேகர் காதாரக் கேட்டும் உணராமலும், கண்ணாரக்கண்டும் அறியாமலும் இருந்தார்கள். தேவனுயடைய அழைப்பின் மேன்மையை உணராமல், தங்களுக்கு உண்டான கிருபையை போக்கடித்தார்கள். ஆதலால் வனாந்தரத்திலே அவர்கள் அழிக்கப்பட்டார்கள். மிகுதியாக நிலைத்திருந்தவர்கள், மற்றவர்கள் அழிந்து போனதைக் குறித்து மேன்மை பாராட்டினார்களா? இல்லை, அவர்களுக்காக பரிதபிக்கும் உள்ளம் உடையவர்களாக இருந்தார்கள். இன்றைய நாட்களிலும், ஆரம்பத்திலே நன்றாக ஓடினவர்கள் பாதி வழியிலே நின்று தூங்குகின்றவர்களை போலனார்கள். சிலர், வழி விலகிப் போய்விடுகின்றார்கள். நாம் இந்த உலகத்தின் போக்கிற்கும், அதின் அழுத்தங்களுக்கும் மருளாமல், விசுவாசத்திலே நிலை நிற்கின்றோம் என்று கருதினால், தேவ கிருபைக்காக அவருக்கு நன்றி செலுத்த வேண்டும். உபத்திரவங்களிலே நாம் சோரந்து போகக்கூடாது. 'இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதப டிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன். மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக் கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங் கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்.' 'நீங்கள் மருளாதிருக்கிறது தேவனை எதிர்த்து நிற்கின்றவர்கள் கெட்டுப்போகிறதற்கும், நீங்கள் இரட்சிக்கப் படுகிறதற்கும் அத்தாட்சியாயிருக்கிறது. இதுவும் தேவனுடைய செயலே.'
ஜெபம்:
அன்பின் தேவனே, நான் நிற்பதும் நிர்மூலமாகாதிருப்பதும் உம்முடைய சுத்த கிருபை என்று அறிந்து உணர்ந்து, மற்றவர்களுக்காக பரிந்து பேசுகின்றவனாக இருக்க எனக்கு உணர்வுள்ள இருயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - பிலிப்பியர் 2:13