புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 31, 2026)

பயப்படாதே! திகையாதே!

ஏசாயா 41:10

நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்;


உங்கள் இருதயத்தின் நினைவுகளும், உங்கள் வாயின் வார்த்தைகளும் கர்த்தருக்கு ஏற்புடையதாயிருந்தால் யார் உங்களை எதிர்த்து நின்றாலும் ஏன் நொந்து கொள்கின்றீர்கள்? உங்கள் கிரியைகள் நீதிக்குரியவைகள் சக விசுவாசி தவறிவிட்டான் என்று நீங்கள் கருதி வாக்குவாதங்களையும், கலகங்களையும் ஏற்படுத்ததுகின்றவர்களாயிருந்தால், உங்கள் நீதியின் கிரியைகள் எங்கே? கர்த்தர் சமீபமாயிருக்கின்றார். கர்த்தர் சகலத்தையும் அறிந்திருக்கின் றார். கர்த்தர் விசாரிக்கின்றவராயிருக்கின்றார். கர்த்தர் ராஜரீகம் பண்ணுகின்றார். எனவே உங்கள் வாழ்க் கையிலே, உங்கள் சூழ நடக்கும் காரியங்களை குறித்து கலகமடை யாதிருங்கள். நீங்கள் ஆவிக்குரியவர்கள் என்று கூறி, உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையை, மாம்ச இச்சைகளால் உறுதிப்படுத்த முடியுமா? 'நீங்கள் ஒருவரையொருவர் கடித்துப் பட்சித்தீர்களானால் அழிவீர்கள். அப்படி ஒருவராலொருவர் அழிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். பின்னும் நான் சொல் லுகிறதென்னவென்றால், ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள். மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது; நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது.' கலத்தியார் 5ம் அதிகாரத்திலே தேவ ஊழிக்காரனாகிய பவுல் விசுவாசிகளுக்கு கூறியி ருப்பதைக் காணலாம். சில சந்தர்ப்பங்களிலே, உங்களுக்குள்ளே, மாம் சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் போர் செய்கின்றதை அனுபவித்திருப்பீர்கள். சுயம் என்னில் மகிமைப்பட வேண்டுமோ அல்லது பிதாவாகிய தேவன் என்னில் மகிமைப்பட வேண் டுமோ? 'மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்; கடுஞ் சொற்களோ கோபத்தை எழுப்பும்.' 'கோபக்காரன் சண்டையை எழுப்பு கிறான்; நீடியசாந்தமுள்ளவனோ சண்டையை அமர்த்துகிறான்.' 'மாறுபா டுள்ளவன் சண்டையைக் கிளப்பிவிடுகிறான்; கோள் சொல்லுகிறவன் பிராண சிநேகிதரையும் பிரித்துவிடுகிறான்.' எனவே நீங்கள் பிதாவாகிய தேவனுடைய பிள்ளைகள் என்பதை அறிந்து, உங்கள் பரம தந்தையின் நாமம் உங்களில் மகிமைப்படும்படி நடந்து கொள்ளுங்கள். கிறிஸ் துவுக்குள் பிரியமான சகோதர சகோதரிகளே, உங்கள் சாந்த குணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக. கர்த்தர் சமீபமாயி ருக்கிறார்.

ஜெபம்:

பரிசுத்த ஆவியை எனக்கு தந்த என் பிதவாகிய தேவனே, நான் உம்முடைய பிள்ளை என்று சொல்வதற்கு பாத்திரனாய் நடந்து கொள்ளும்படி என்னை உம்முடைய வழியிலே நடத்தி செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - யோவான் 14:1-2