புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 16, 2026)

விழிப்புள்ள விசுவாசிகளாயிருங்கள்

1 கொரிந்தியர் 16:13

விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள், புருஷராயிருங்கள், திடன்கொள்ளுங்கள்.


'மேலும், கடைசி நாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய் தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமை யுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்;.' என்று தேவ ஊழியராகிய பவுல் தீமோத்தேயு என்னும் ஊழியனுக்கு எச்சரித்திருப்பதை 2 தீமோத்தேயு 3ம் அதிகாரத்திலே வாசிக்கலாம். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துதாமே, கடைசி நாட்களை குறித்து கூறும் போது: 'அப்பொழுது, அநேகர் இடறலடைந்து, ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்து, ஒருவரை யொருவர் பகைப்பார்கள். அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள். அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம்.' என்று கூறியிருக்கின்றார். அந்த அநேகரு க்குள்ளே நாம் அகப்படாதபடிக்கு, நாம் விசுவாசத்திலே உறுதியாய் நிலைத்திருக்க வேண்டும். தேவ ஊழியராகிய பவுல், கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் நிமித்தம் சிறைப்படுத்தப்பட்ட போது, சில சகோதரர்கள் அவரை கைவிட்டுவிட்டார்கள் என்று குறிப்பிட்டிருக்கின்றார். அதுமட்டுமல்லாமல், விசுவாசிகள் என்று தங்களை கூறிக் கொண்ட சிலர், அவரைப் பகைத்தார்கள். தேவ அன்பு அவர்களிடத்தில் அற்றுப் போயிற்று. இன்றும் சிலர் ஞானமாய் வாழ வேண்டும் என்பதை தங்கள் இச்சைகளுக்கு மூடலாக பயன்படுத்திக் கொள்கின்றார்கள். நாம் சர்பங்களைப் போல வினாவுள்ளவர்களாக மாத்திரம் அல்ல, புறாக்களைப் போல கபடற்றவர்களாகவும் காணப்பட வேண்டும். இருதயத்தில் கபடுள்ளவர்கள், ஞானமாக வாழ வேண்டும் என்பதை தங்களுக்கு ஆதயமாக பயன்படுத்திக் கொள்கின்றார்கள். நீங்களோ, உங்கள் இருதய ங்களை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள் உண்மையுள்ளதாய் காத்துக் கொள்ளுங்கள். விசுவாச வாழ்விலே உறுதியுள்ளவர்களாக இருங்கள்.

ஜெபம்:

பரலோக தேவனே, என் சுயபெலத்திலே சாய்ந்து வாழ்வின் தீர்மானங்களை என் இஷ்டபடி எடுத்துக் கொள்ளாதபடிக்கு, எனக்கு பிரகாசமுள்ள மனக் கண்களை தந்து உம் வார்த்தையிலே நிலைத்திருக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 4:9