புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 01, 2026)

தேவனுக்கு தெரியப்படுத்துங்கள்

எபிரெயர் 13:5

நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.


உங்கள் மேலான அழைப்பை நீங்கள் உறுதி செய்தவர்களாயும், உங் களை அழைத்தவர் சர்வ வல்லமையுள்ள தேவன் என்பதையும், அவர் வார்த்தையில் உண்மையுள்ளவர் என்பதையும் அறிந்தவர்களாயும், விசு வாசத்தை அறிக்கை செய்தில் உறுதியுள்ளவர்களுமாயிருந்து, இலக் கின்மேல் கண்களை வைத்து முன்னேறிச் செல்லுங்கள். ஆதி அப்போ ஸ்தலரின் நாட்களிலே, அவர்கள் மத்தியிலே சோதனையின் அக்கினி பற்றியெரிந்தது. பலவிதமான உபத் திரவங்களையும், நிந்தைகளையும் அனுபவித்தார்கள். கிறிஸ்து வெளி ப்படும் போது, உண்டாகும் மகி மையை விசுவாசக் கண்களால் கண் டவர்களாக, அழைத்தவருடைய நாமித்தினிமித்தம் பாடுகளையும் வேதனைகளையும் சகித்தார்கள். இந்நாட்களிலும், சில தேசங்களிலே அத்தகைய பாடுகளையும் வேத னைகளையும் சிலர் எதிர்நோக்குகின்றார்கள் என்பதை அவ்வப்போது செய்திகள் வாயிலாக அறிந்து கொள்கின்றோம். உங்களுடைய வாழ் விலே, உங்கள் குடும்பத்திலே, உங்கள் வேலையிலே, உங்கள் சபை ஐக்கியத்திலே உங்களை நெருக்குகின்ற காரியங்கள் என்ன? எதைக் குறித்து மனவேதனையடைந்து, கவலையடைகின்றீர்கள்? 'நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள்; ஏனென்றால் தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார்; அவர் களாலே தூஷிக்கப்படுகிறார்; உங் களாலே மகிமைப்படுகிறார். ஆதலால் உங்களில் ஒருவனும் கொலை பாதகனாயாவது, திருடனாயாவது, பொல்லாங்கு செய்தவனாயாவது, அந்நிய காரியங்களில் தலையிட்டுக் கொண்டவனாயாவது பாடுபடுகி றவனாயிருக்கக்கூடாது. ஒருவன் கிறிஸ்தவனாயிருப்பதினால் பாடுபட் டால் வெட்கப்படாமலிருந்து, அதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்த க்கடவன்.' என்று 1 பேதுரு 4ம் அதிகாரத்திலே வாசிக்கின்றோம். எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களை யும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்து க்கொள்ளும்படிக்கு, உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் பெரிய காரி யமோ, சிறிய காரியமோ, எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ண ப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுத லினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அழைத்த தேவன் உண் மையுள்ளவர். அவர் கைவிடமாட்டார். அவர்; உங்களுக்கு சமீபமா யிருக்கின்றார்!

ஜெபம்:

நித்திய கனமகிமைக்கென்று என்னை அழைத்த தேவனே, என் னை நெருக்குகின்ற எந்த காரியத்தாலும் நான் சோர்ந்து பின்னிட்டு போகதபடிக்கு என்னை பெலப்படுத்தி உம் வார்த்தையின் வெளிச்சத்தில் வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எபேசியர் 6:10