புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 05, 2026)

உற்சாகமாய் நன்மை செய்யுங்கள்

கலாத்தியர் 6:9

நன்மைசெய்கிறதில் சோர்ந்து போகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்.


ஒரு வாலிபனானவன் குறிப்பிட்ட ஊர் ஒன்றிலே தானதர்மங்களை செய்து வந்தான். ஒரு சில ஆண்டுகளுக்கு பின்னர், அந்த ஊரிலுள்ள உதவிகளை செய்வதற்கு ஒத்தாசையாக இருந்த தொண்டர்கள் சிலர் அநியாயமான காரியங்களை செய்வதை கண்டு கொண்டான். தான் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை இவர்கள் இவ்வளவு அற்பமாய் எண்ணி, எனக்கு நஷ;;டத்தை ஏற் படுத்தியு ள்ளார்கள் என்று மனம் உடைந்து போனான். இவர்கள் யாவரும் அநியாயக்காரர், தானதர்மங்களை செய் வதில் பலன் இல்லை என்று மனதிலே தீர்மானித்து கொண்டான். அவனுக்கு அறிவுரை கூறிவந்த அனுபவமிக்க மேய்ப்பரொருவர், நடந்த சம்பவத்தை கேள்விட்டு, அவனை அழைத்து, அவனை ஆறுதல் படுத்தி, அவனுக்கு நல் ஆலோசனை கூறினார். அவர் கூறும் போது: மகனே, தேவனிடத்தில் இருந்து பெற்றுக் கொண்ட யாவையும், முற்றும் முழுவதுமாக தேவ சித்தத்தின்படியே செலவு செய்தேன். எந்த காரியத்திலும் நான் தவறிப்போக வில்லை என்று யாரால் கூறமுடியும்? சற்று சிந்தித்துப்பார். நமக்கு முன்பாக ஓடி வெற்றிபெற்றவர்கள் எப்படியான தியாகங்களை செய்து நஷ்டத்தை சகித்துக் கொண்டார்கள். கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்காக 'சிலர் நிந்தைகளையும் அடிகளையும் கட்டுகளையும் காவலையும் அநு பவித்தார்கள்;. கல்லெறியுண்டார்கள், வாளால் அறுப்புண்டார்கள், பரீட் சைபார்க்கப்பட்டார்கள், பட்டயத்தினாலே வெட்டப்பட்டு மரித்தார்கள், செம்மறியாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்துக்கொண்டு திரிந்து, குறைவையும் உபத்திரவத்தையும் துன்பத் தையும் அநுபவித்தார்கள்;. உலகம் அவர்களுக்குப் பாத்திரமாயிருக்கவில்லை; அவர்கள் வனாந்தரங்களிலேயும் மலைகளிலேயும் குகைக ளிலேயும் பூமியின் வெடிப்புகளிலேயும் சிதறுண்டு அலைந்தார்கள்.' இவைகளோடு ஒப்பிட்டு பார்க்கும் போது எனக்கும் உனக்கும் வந்த நஷ;டங்கள் என்ன? எனவே, அநியாயங்களை கண்டு, உன்னுடைய நன்மையை அடக்கி வைக்காமல், இன்னும் அதிகமாக பிரயாசப்படு. பணத்தை மாத்திரமல்ல, எங்களுடைய நற்பண்புகளையும் துஷ்பிர யோகம் மனிதர்கள் செய்து வருகின்றார்கள். அதனால், எங்களுடைய நற்பண்புகளை விட்டுவிடலாமா? நஷ்டப்பட மனதில்லாதவர்கள் கிறிஸ்துவின் ஊழியத்தை நிறைவேற்ற முடியாது என்றார். எனவே சோர்ந்து போகாமல் நன்மை செய்யுங்கள்.

ஜெபம்:

என்னை பெலப்படுத்துகின்ற தேவனே, கோணலும் மாறுபா டுமான இந்த உலகிலே, அநியாயங்களை கண்டு சோர்ந்து போகாமல், உற்சாகமுள்ள இருதயத்தோடு, நன்மை செய்யும்படி எனக்கு பெலன் தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ரோமர் 2:7