தியானம் (ஆவணி 13, 2026)
கிறிஸ்து வெளிப்பட வேண்டும்
பிலிப்பியர் 4:9
நீங்கள் என்னிடத்தில் கற்றும் அடைந்தும் கேட்டும் கண்டும் இருக்கிறவைகளெவைகளோ, அவைகளையே செய்யுங்கள்;
தேவ ஊழியராகிய பவுல், தான் எப்படியாக கிறிஸ்துவை அறிந்து, அவரை பின்பற்றியது போல, விசுவாசிகள் யாவரும், அவ்வண்ண மாகவே கிறிஸ்துவை பின்பற்றும்படி கூறியதைபற்றி தியானித்து வருகி ன்றோம். 1வது: ஊழியருடைய வாழ்க்கையிவிலிருந்து விசுவாசிகள் தேவ காரியங்களை கற்று கொண்டார்கள். 2வது: அவரிடத்திலிருந்து விசுவாசிகள் தேவ காரியங் களை பெற்றுக் கொண்டார் கள். 3வது: அவரிடத்திலிருந்து தேவ காரியங்களை கேட்டு அறிந்தார்கள். 4வது: அவரு டைய வாழ்க்கையின் சாட்சி வழியாக கிறிஸ்து இயேசு பின்பற்றும் அடிச்சுவடுகளை கண்டு கொண்டார்கள். பிலிப்பிருக்கு எழுதிய நிருபத்திலேயே, அவர் தன்னுடைய சிந்தையிலிருக்கும் காரியங்கள் ஒரு சிலவற்றை கூறியி ருக்கின்றார். அவற்றுள்: உபத்திரவத்திலும் கிறிஸ்துவுக்குள் சந்தோஷ மாய் இருப்பது. மற்றவர்களுக்கு ஆறுதலாக இருப்பது. இலக்கை நோக்கி செல்வது. கிறிஸ்துவுக்காக எதையும் விட்டுவிட ஆயத்தம் போன்றவற்றை குறித்தும் கூறியிருக்கின்றார். இந்நாட்களிலே, விசுவாசி களும், கிறிஸ்துவின் சிந்தையை தரித்துக் கொள்ளும் பாதையிலே, மேலே கூறப்பட்ட நான்கு காரியங்களை பின்பற்றுவதோடு நின்றுவி டாமல், விசுவாசிகளும், தேவ ஊழியராகிய பவுலை போல, 'நான் கிறிஸ்துவை பின்பற்றுவது போல நீங்களும் பின்பற்றுங்கள்' என்று மற்றவர்களுக்கு கூறும்படி, வாழ்க்கையானது மறுரூபமடைய வேண்டும்;. ஒவ்வொரு விசுவாசியின் வாழ்க்கையிலிருந்தும், கிறிஸ்துவுக்குரியவை களை மற்றவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். விசுவாசிகளிடமிருந்து கிறிஸ்துவின் காரியங்களை மற்றவர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும். கிறிஸ்துவின் சத்தியத்தை சுத்தமாக பேசுவதை கேட்க வேண்டும். பிரதானமாக, மற்றவர்கள் கிறிஸ்துவை உங்களில் காண வேண்டும். 'இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசு கிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித் தார்.' உலகத்திலுள்ளவர்கள் விசுவாசிகளின் வாழ்க்கையில் நற்கிரியை களைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற பரம பிதாவை மகிமைப் படுத்தும்படி, அவர்களுக்குள் பிரகாசிக்கப்பட்ட வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கவேண்டும்.
ஜெபம்:
பரலோகத்திலிருக்கின்ற பிதாவாகிய என் தேவனே, எனக்குள் பிரகாசிக்கப்பட்ட தேவ ஒளியை என் பேச்சிலும் நடத்தையிலும் மற்றவர்கள் காணும்படி நீர் என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - மத்தேயு 5:13-15