புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 04, 2026)

எங்கள் பெலன்

நெகேமியா 8:10

கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன்


ஒரு ஊரிலே இயங்கி வந்த கழகத்தின் உதைபந்தாட்ட அணியிலே இருந்த விளையாட்டு வீரனொருவன், உதைப்பட்டாத விளையாட்டிலே மிகவும் சிறந்து விளங்கி வந்தான். அந்த கழகத்தின் குழுவை எதிர்த்து விளையாடும் அணிகள் யாவரும் அவனுடைய திறமையை பார்த்து ஆச்சரியப்பட்டு வந்தார்கள். ஒருநாள் அவன் குடும்பத்திலே நடந்த எதி ர்பாராத சம்பவமொன்றினால், மிகவும் துக்கமடையந்து மனம் சோர்ந்து போனான். அந்நாட்களிலே அவன் கலந்து கொண்ட விiயாட்டு போட் டிகளிலே, அவனுடைய அணி தோற்றுப் போயிற்று. வழமை யாக விளையாடுவது போல, முழு பலத்தோடும், பூரண ஆர்வத்தோடும் அவனுக்கு விளையாட முடியவி ல்லை. அதைப் பார்பவர்கள் யாவரும் கண்டு கொண்டார்கள். அதனால் அவர்களை எதிரிட்டு விளையாடும் அணிகள், இலகுவாக இவர்களை தோற்கடித்தார்கள். ஆம் பிரியமானவர்களே, பொதுவாக மனம் சோர் ந்து போயிருக்கும் நாட்களிலே, மனிதர்கள் வாழ்வின் நோக்கத்தை குறித்த ஆர்வமானது குறைந்து போய்விடுகின்றது. பெலமுள்ள மனிதர் களுடைய பெலனும் குறைந்து போய்விடுகின்றது. இந்த இயற்கை நியதிக்கு விசுவாசிகள் விதிவிலக்கானவர்கள் அல்ல. ஆனால், தேவ னுடைய கிருபையானது அவர்மேல் நம்பிக்கையாக இருக்கின்ற மனு ஷனை உயிர்ப்பிக்கின்றது. இந்த பூவுலக வாழ்க்கையிலே ஆத்துமா வியாகுலப்படும் சந்தர்பங்கள் உண்டு. உலகத்திலே சஞ்சலத்தால் இரு தயம் கரைந்து போகும் நேரங்கள் உண்டு. அவை யாவற்றையின் மத்தி யிலும் நாம் ஆரம்பத்தில் அறிக்கை செய்த விசுவாச வார்த்தையை பற் றிக் கொள்ள வேண்டும். மேலே குறிப்பிட்ட ஒப்பனையின்படி, அந்த விளையாட்டு வீரனுடைய மனச்சோர்வின் நேரத்திலே, எதிர்த்து விளை யாடும் அணிகள் அவனுடைய அணியை மேற்கொண்டது போல, ஒரு விசுவாசியாவன், மனக்கவலை அடைந்து, சோர்ந்து போயிருக்கும் வேளை களிலே, ஆவிக்குரிய வாழ்க்கையிலே, எதிராளியாகிய பிசாசானவன் விசுவாசியனவனின் சோர்வின் வேளைகளிலே அவனை இலகுவாக மேற்கொள்ளும்படி இடங்கொடுக்கின்றான். இக்கட்டு வேளைகளிலும், கர்த்தருடைய வேதத்தை விசுவாசித்து, அவருடைய வேளைக்காக காத் திருக்கின்றவன், அவருக்குள் அவன் ஆத்துமா மனமகிழ்சி யாயிருக்கு ம்படி தன்னை பயிற்சிவித்துக் கொள்கின்றான். கர்த்தருக்குள் மனமகி ழ்சியாய் இருப்பதே விசுவாசியின் பெலன். அப்ப டியாக மனமகிழ்சி யாய் இருக்கின்றவனை எதிராளியானவன் மேற் கொள்ள முடியாது. அவன் என்றென்றும் அசையாமல் அவருக்குள் நிலைத்திருக்கின்றான்.

ஜெபம்:

நித்திய ஜீவனுக்கென்று என்னை அழைத்த தேவனெஇ எல்லா வேளைகளிலும் நான் உம்முடைய வார்த்தையை நம்பிஇ உம்முடைய வேளைக்காக பொறுமையுடன் காத்திருக்கும்படி எனக்கு கிருபை செய்வீ ராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எபேசியர் 6:10