புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 04, 2026)

நாளை என்ன நடக்கும்?

யோவான் 14:1

உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்.


'எல்லாம் முடிந்தது' என்று மீட்பராகிய இயேசுதாமே சொல்லி, தன் தலையைச் சாய்த்து, தன் ஆவியை பிதாவாகிய தேவனிடத்தில் ஒப்புக் கொடுத்தார். இந்த வார்த்தைகளின் கருப்பொருள் இன்னதென்பதை அவருடைய சீஷர்கள் அறியாதிருந்தார்கள். அவர்களோ, தங்கள் வாழ்விலே ஏற்பட்டிருக்கும் நெருக்கத்தினாலே இனி என்ன நடக்குமோ பய ந்து ஒளித்திருந்தார்கள். அவர்கள் இனி தங்கள் வாழ்விலே இருந்த நம் பிக்கை போய்விட்டது என்று துக்கமடைந்திருந்தார்கள். (லூக்கா 24:13-21). தங்கள் எஜ மானனாகிய இயேசு, 'இஸ்ர வேலை மீட்டிரட்சிப்பவர் என்று நாங்கள் நம்பியிருந்தோம். இவைகள் சம்பவித்து இன்று மூன்று நாளாகிறது.' என்று எதிர் காலத்தைக் குறித்த நம்பிக்கையற்றவர்களாக இருந்தார்கள். சிலவேளைகளிலே, விசுவாசிகளுடைய வாழ்விலும், நம்பிக்கை இழந்து போகின்ற நிலைமைகள் உண்டாகிவிடுகின்றது. அவர்கள் தங்கள் வேலை செய்யும் இடத்திலே, வீட்டிலே, நம்பியிருந்தவர்கள் கைவிடும் போது நிர்கதியான நிலையை அடைகின்றார்கள். இனி என்ன என் வாழ்விலே எல்லாம் முடிந்தது என்று சொல்லிக் கொள்வார்கள். எதிர்காலத்தைக் குறித்த நம்பிக்கையற்றவர்களாக, இனி என்ன செய்வோம்? இனி என்ன நடக்கும் என்று ஏங்கி தவிக்கின்றார்கள். இந்த நிலைமைக்கு தள்ளப்படுவதற்கு அடிப்படை காரணம் என்ன? ஒரு விசுவாசியின் வாழ்க்கையானது விசுவாசம் என்னும் அத்திரவாரத்திலே கட்டப்பட்டிருக்கின்றது. அதை ஒரு விசுவாசி மறந்து தங்கள் வாழ்விலே நடக்கும் சம்பவங்களை ஆவிக்குரிய மனக்கண்களால் பார்க்காமல், மாம்ச கண்களால் பார்க்கும் போது, பயமும் திகிலும் அவர்களை பற்றிக் கொள்கின்றது. அக்காலத்திலே இருந்த சீஷர்களும், தீர்க்கதரிசிகள் சொன்ன யாவையும் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களாயிருந்தார்கள். மீட்பராகிய இயேசு மனித குலம் இரட்சிப்படையும்படிக்கு, அவர் பிதாவாகிய தேவனுடைய சித்த ப்படி செய்யவேண்டிய யாவற்றையும் செய்து முடித்து, எல்லாம் முடி ந்தது என்று கூறினார். எனவே, நம்பிக்கையற்ற நிலைமைகள் உங்கள் வாழ்விலே உண்டாகும் போது, வேத வாக்கியங்களை தியானியுங்கள். தேவனாகிய கர்த்தருடைய வாக்குத்தத்தங்களை பற்றிக் கொள்ளுங்கள். அவைளை அறிக்கை செய்யுங்கள். விசுவாசிகளாயிருங்கள்!

ஜெபம்:

பெலனற்ற வேளைகளிலே எனக்கு கிருபையை பொலியும் தேவனே, நம்பிக்கையற்ற நிலைகள் வாழ்விலே உண்டாகும் போது, நான் உம் வார்த்தையிலே நிலைத்திருக்க எனக்கு பெலன் தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோபு 42:2