புதிய நாளுக்குள்..

தியானம் (தை 14, 2026)

சத்தியத்திற்கு கீழ்படியுங்கள்

ரோமர் 6:22

இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப் பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடை க்கும் பலன், முடிவோ நித் தியஜீவன்


இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவ கிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகதிகமாக விருத்தியடைந்தார் என்று லூக்கா எழுதின சுவிசேஷத்திலே இரண்டாம் அதிகாரத்தின் முடிவிலே வாசிக்கின்றோம். நாம் யாவரும் தேவ கிருபையிலே வளர வேண்டும். தேவ கிருபை இன்தென்று அறிய வேண்டும். தேவ கிருபைக்கு நாம் பாத்திரர் அல்ல என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும். அதனால் என்ன, எல்லாம் தேவ கிருபை என்று சொல் லிவிட்டு, விசுவாசிகள் தங்கள் கண்போன போக்கிலே வாழ முடியுமா? பிலிப்பியருக்கு எழுத்தின நிரூபத்திலே, அப்போஸ்தலராகிய பவுல், கிருபையும் சமாதானமும் உண்டாவதாக என்று வாழ்த்தி இருக்கின்றார். தேவ கிருபை இருந்தால் மாத்திரம் போதுமென்றால், ஏன் பிலிபியருடைய குறைகளை குறித்து அவர் எழுதினார்? ஏனெனில் அவர்கள் சத் தியத்தைவிட்டு விலகிச் செல்வதற்கு ஏதுவான காரியங்கள் அவர்கள் மத்தியிலே காணப்பட்டது. தேவ கிருபையை அறிந்து கொள்கின்றவர்கள், சத்திய வார்த்தைகளின்படி வாழ தங்களை ஒப்புவிப்பார்கள் என்பதைக் குறித்து கடந்த நாட்களிலே தியானம் செய்தோம். பிலிப்பி சபையோரிடத்திலே, பெருமை இருந்தது. அதைக் குறித்து பின்வரும் நாட்களிலே நாம் ஆராய்நது அறிந்து கொள்ளலாம். எனவே, தேவ ஊழியராகிய பவுல் தாமே, கிறிஸ்துவின் சிந்தையை தரித்து கொள்ளும்படி அவர்களுக்கு அறிவுரை கூறியிருக்கின்றார். அதாவது, மனத்தாழ்மையோடும், கீழ்படிவோடும் தேவ சித்தத்தை நிறைவேற்ற வேண்டும். அதற்காகவே தேவன் தாமே அனுதினமும் நமக்கு புது கிருபையை தருகி ன்றார். நாம் செய்ய முடியாததை செய்து முடிக்கும்படிக்கு தேவ கிருபையானது நம்மை பெலப்படுத்துகின்றது. மேற்கொள்ளமுடியாத பெலவீனங்களை மேற்கொள்ளும்படி நம்மை பெலப்படுத்துகின்றது. பிரியமானவர்களே, இன்று சிலர் கிருபை, கிருபை என்று கூறிக் கொண்டு, தங்கள் சுய இஷ்டப்படி பாவத்திலே வாழ்ந்து வருகின்றார்கள். இவர்கள் சத்தியத்தை மறுதலிக்கின்றர்கள். சத்தியத்தை அறிய மனதில்லாதவர்கள். தங்களுக்குள் இருக்கும் சத்திய ஆவியாவனர், தங்களை சகல சத்தியத்திலும் வழிடத்த இடங் கொடுக்காதவர்கள். நீங்கள் அவ்வணமாக வாழாமல், உங்கள் சுத்த மனசாட்சி சூடுண்டு போகாமல், உணர்வுள்ள இருயத்தைதோடு சத்தியத்திற்கு கீழ்படியுங்கள்.

ஜெபம்:

தாழ்மையுள்ளவர்களுக்கு கிபையை அளிக்கின்ற தேவனே, நீர் தந்திருக்கும் கிருபையின் நாட்களை நான் வீணாக்காதபடிக்கு, சத்தியத்திலே நடக்க எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்தி செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபிரெயர் 10:26