புதிய நாளுக்குள்..

தியானம் (தை 24, 2026)

பெற்றுக் கொண்ட மனித தயவுகள்

கொலோசெயர் 3:15

நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள்.


ஒரு சபையிலே பல இக்கட்டுகள் துன்பங்கள் மத்தியிலே வாழ்ந்து வந்த விசுவாசியொருவருக்கு, உடன் சகோதரனொருவன் உதவி செய்தான். அந்த உதவி அநேகருடைய பார்வையிலே சிறிதானதாக காண ப்பட்டாலும், அந்த நேரத்திலே, அந்த விசுவாசிக்கு அது மிகவும் பெரி தான ஆதரவாகவும், ஆறுதலாகவும் இருந்தது. பல ஆண்டுகள் சென்ற பின்பு, சில கசப்பான அனுபவங் களால், உதவி பெற்றவருக்கும், உதவி செய்தவருக்கும் இடை யிலே மனநிலைமை வேறுபட்ட தாக மாறிவிட்டது. அத்தருணத் திலே, உதவியை பெற்ற விசுவாசியானவன்: என்னுடைய இக்கட்டடின் நாட்களிலே, அவன் எனக்கு உதவி செய்யாதிருந்தால், ஆண்டவர் வேறொருவனை அனுப்பியி ருப்பார் என்று உதவி செய்தவனுடைய காதுகளில் சென்றடையும்படி கடும் வார்த்தைகளை பேசினான். அதை கேள்விப்பட்ட சபையின் மேய் ப்பரானவர், உதவியை பெற்ற மனிதனுடைய நன்றியற்ற மனதைக் குறித்து மனவேதனை அடைந்தார். ஆம் பிரியமான சகோதர சகோதரிகளே, தேவனாகிய கர்த்தர் ஒவ்வொருவரைக் குறித்தும் நிர்ணயித்த காரியம் நிச்சயமாக நிறைவேறும். அந்த காரியத்திற்கு ஒருவேளை ஒருவர் உடன்படாதிருந்தால், தேவனாகி கர்த்தர்தாமே இன்னுமொருவர் வழியாக அதை நிறைவேற்றி முடிப்பார் என்பது மாறாத சத்தியம். ஆனால் இந்த சத்தியத்தை ஒருவரும் தங்கள் துர்குணத்திற்கு மூடலாக உபயோகிக்க கூடாது. அதாவது, தேவனுடைய வார்த்தைகள் வாதுக்கும், வழ க்குக்கும், சண்டைக்கும், கலகங்களுக்கும் வழங்கப்படவில்லை. அவை நித்திய ஜீவனுக்குரியவைகள். விசுவாசிகள் தங்கள் மாம்ச எண்ண ங்களை நிறைவேற்றும்படிக்கு தேவ வார்த்தைகளை தகாத முறையிலே பயன்படுத்தக்கூடாது. கடைசி நாட்களிலே, மனிதர்கள் நன்றியற்றவர்களாக இருப்பார்கள் என்ற பிரகாரமாக, விசுவாச மார்க்கத்தாரிலும் இந்த நன்றியற்ற தன்மைகள் வளர்ந்து கொண்டே போகின்றது. இந்த சபையில் இல்லாவிட்டால் இன்னுமொரு சபை. இந்த போதகர் இல்லை என்றால் அந்தப் போதகர் என்ற பிரகாரமாக கூறிக் கொள்கின்றார்கள். இவர்கிளடம் பெருமை தங்கியிருப்பதால், தேவ கிருபை இன்தென்று அறியாதிருக்கின்றார்கள். பிரியமானவர்களே, அவரவர் எப்படியாக நட ந்து கொள்ளப் போகின்றார்கள் என்பது அவரவரது தனிப்பட்ட தீர் மானம். ஆனால், நீங்களோ, மனித தயவுகளை மறுதலிக்காமல், நன்றியறிதலுள்ளவர்ளாக வாழ்ந்து முன்னேறுங்கள்.

ஜெபம்:

மனித தயவுகளை ஏற்படுத்தும் தேவனே, பெற்றுக் கொண்ட மனித தயவுகளை முன்னிட்டு, மனிதர்களுக்கும் நன்யறிதலுள்ளவனாக வாழும்படிக்கு எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - மத்தேயு 5:16

Category Tags: