புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 31, 2026)

தேவ கிருபை போதும்

2 கொரிந்தியர் 12:9

அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார்


பரிசுத்த வேதாகமத்தின் புதிய ஏற்பாட்டிலே, தேவ ஊழியராகிய பவுல் ஊடாக, 13 நிருபங்கள் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது. இந்த வருடத்தின் ஆரம்பத்திலிருந்து, அதிலே பிலிப்பியருக்கு எழுதின நிருபத்தை மையமாக வைத்து, வேத வாக்கியங்களை தியானித்து வருகின்றோம். குறிப்பாக தேவ ஊழியராகிய பவுல், ஆவிக்குரிய போராட்டத்தை குறித்தும், தேவ சித்தத்தை நிறைவேற்றும் பணியில் வரும் சவால்களைக் குறித் தும், தன்னுடைய அனுபவ சாட் சியோடு விசுவாசிகளுக்கு எழுதி யிருக்கின்றார். இந்நாட்களிலே, எல்லா சூழ்நிலைகளிலும் மனரம் யமாக இருக்க கற்றுக் கொள்ள வேண்டும் என்பதைக் குறித்து தியானித்து வருகின்றோம். தேவ ஊழியருடைய வாழ்க்கையிலே ஏற்பட்ட ஒரு சவாலைக் குறித்து கொரிந்து பட்டணத்திலுள்ள சபையிலுள்ள விசுவாசிகளுக்கு எழுதும் போது, 'அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினி மித்தம் நான் என்னை உயர்த்தாதபடிக்கு, என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது. என்னை நான் உயர்த்தாதபடிக்கு, அது என் னைக் குட்டும் சாத்தானுடைய தூதனாயிருக்கிறது. அது என்னைவிட்டு நீங்கும்படிக்கு, நான் மூன்றுதரம் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொண்டேன். அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன்.' என்று கூறியிருக்கி ன்றார். உங்களுடைய வாழ்க்கையிலே பலவீனங்கள் ஏற்படும் போது எப்படிப் பட்ட சிந்தையுடையவர்களாக இருக்கின்றீர்கள்? அதை ஒருவருக்கும் தெரியாமல், மனதிலே வைத்துக் கொண்டு, நான் நல்லாக இருக்கின்றேன் என்று சொன்னால் சரியாகுமா? அப்படியல்ல, மாறாக, 'என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ் செய்ய எனக்குப் பெலனுண்டு என்ற அறிக்கை வாயிலே இருக்க வேண்டும். அவருடைய கிருபை எனக்கு போதும் என்பதை வாழ்க் கையின் அனுபவ சாட்சி வழியாக ஒவ்வொரு விசுவாசியும் கற்றுக் கொள்ள வேண்டும். அன்று வேதத்தில் காணும் பாத்திரங்களுக்கு செய்த ஜீவனுள்ள தேவன், இன்றும் எனக்கு செய்ய வல்லவராக இருக்கின்றார் என்பதில் உறுதியாய் நிலைத்திருக்க வேண்டும்.

ஜெபம்:

என்னை பெலப்படுத்ததுகின்ற என் தேவனாகிய கர்த்தாவே, நான் என் பெலவீன நேரங்களிலே, மறுதலிப்பில் வாழாமல், உம்முடைய கிருபையினாலே, சூழ்நிலைகளை மேற்கொள்ள வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - மத்தேயு 19:26