நீரே என்னை கட்டுகிறீர்

Posted on April 26, 2016 01:25:03

INTO A NEW DAY - DAILY DEVOTION, GRACE TABERNACLE APOSTOLIC CHURCH, SCARBOROUGH, ONTARIO, CANADA        

வாசகம்: மீகா 7:8

“என் சத்துருவே, எனக்கு விரோதமாய்ச் சந்தோஷப்படாதே நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன்; நான் இருளிலே உட்கார்ந்தால் கர்த்தர் எனக்கு வெளிச்சமாயிருப்பார்.”

கர்த்தர் எங்கள் கிரியைகளை அறிந்திருக்கிறார். அவருடைய கண்கள் பூமியை நோக்கிப் பார்க்கின்றது. அவருக்கு மறைவானது ஒன்றுமில்லை. கர்த்தர் தன்னுடைய பிள்ளைகளை அறிந்தவர். தன்னுடைய பிள்ளைகள் இயேசுவின் பரிசுத்த இரத்தத்தினால் கழுவப்பட்டு, வெண் வஸ்திரம் தரித்து, தன்னோடு நடக்கும்படி விரும்புகிறார். சத்துருவானவன் எங்கள் நீதியின் வஸ்திரத்தை அசுசிப்படுத்தும்படி எங்களுக்கு விரோதமாயிருக்கிறான்.

ஆம் தேவ பிள்ளைகளே, இச்சைகள், ஆசைகள் எங்களை இழுத்து, இழுப்புண்டு போகவைக்கலாம், ஆனால் நாம் அறிக்கையிட்டு, கர்த்தாவே உமக்கு விரோதமாகப் பாவம் செய்தேன் என உண்மையாக மனம் திரும்பும்போது, மகா இரக்கமுள்ள என் கர்த்தர் என்னை இருளில் இருந்து வெளிச்சத்தில் நிறுத்தி, மீண்டும் கட்டுகிறவராயிருக்கிறார். ஆமேன்! நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன், கர்த்தரே என்னைத் தாங்குகிறவர்! அல்லேலூயா!