இன்று இந்த வீட்டிற்க்கு இரட்சிப்பு

Posted on May 01, 2016 01:27:33

INTO A NEW DAY - DAILY DEVOTION - GRACE TABERNACLE APOSTOLIC CHURCH, SCARBOROUGH, ONTARIO, CANADA 

வாசகம்: லூக்கா 9:1-10, சங்கீதம் 145:18

சகேயு என்னும் ஒரு மனிதன், அவனுடைய வாழ்க்கை முறையினால், சமுதாயத்தினால் ஏற்றுக்கொள்ளப்படாதவனாயிருந்தான். ஒரு நாள் இயேசு அவ்வழியாய் வருகின்றார் என்று அவன் கேள்விப்பட்டு, அவரை பார்க்க ஆசைப்பட்டு, குள்ளனாக இருந்தபடியால்,  ஒரு மரத்தில் ஏறிக்கொண்டான். இயேசு கிட்டே வந்து  சகேயுவே இறங்கி வா நான் உன் வீட்டில் தங்க வேண்டும் என்று சொன்னார். அதைக் கண்ட யாவரும்: இவர் பாவியான மனுஷனிடத்தில் தங்கும்படி போனார் என்று முறுமுறுத்தார்கள்.

சகேயுவோ: ஆண்டவரே  என் ஆஸ்தி களில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன்  நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால்  நாலத்தனை யாகத் திரும்பச் செலுத்துகிறேன் என்றான். இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு இந்த வீட்டிற்க்கு இரட்சிப்பு வந்தது இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.

இன்று எங்கள் வாழ்க்கையில் இருக்கும் எந்தவொரு சவாலிலுமிருந்து இயேசு இரட்சிப்பை தர வல்லவராயிருக்கின்றார். தம்மை உண்மையாய் தேடுகிறவர்களுக்கு அருகில் உள்ள தேவன் அவர்!