ஊக்கமாக ஜெபம் செய்வோம்

Posted on April 12, 2016 18:17:04

INTO A NEW DAY - INNER MAN  TAMIL MAGAZINE - GRACE TABERNACLE APOSTOLIC CHURCH, SCARBOROUGH ONTARIO, CANADA  

வாசகம்: 1 தெசலோ 5:17-18, யாக்கோபு 5:15 ரோமர் 8:34

தேவைகள், நெருக்கங்கள், மனச் சோர்வுகள் மனிதர்களின் வாழ்வில் சகஜமாக வருகின்ற காரியங்கள். வாழ்க்கையை ஜெயம் கொண்ட பரிசுத்தவான்கள் என்று கூறும் போது, அவர்கள் இந்த உலகத்தில் இருந்த போது அவர்கள் வாழ்க்கையிலே ஒரு கட்டத்திலே எவ்வித துன்பங்களும் வந்ததில்லை என்று பொருள் அல்ல. ஆனால் அவர்கள் எந்த சூழ்நிலையிலும் தேவனுக்குள் மனரம்யமாக இருக்கக் கற்றுக் கொண்டார்கள். தேவனோடுள்ள உறவில் அவர்கள் நாளாந்தம் வளர்ந்து வந்தார்கள்.

அதேபோல இன்று எங்களை நெருக்கும் எந்த சூழ்நிலையையோ, சவாலையோ கண்டு மனம் சோர்ந்து போய்விடாதிருங்கள். தேவனு டைய பாதத்திலே அமர்ந்திருந்து ஜெயம் கொள்ள கற்றுக் கொள்வோம்! எங்கள் விண்ணப்பங்களை தேவனிடம் தெரியப் படுத்துவோம், மற்றவர்களுக்காக பரிந்து பேசி ஊக்கமாக ஜெபிப்போம். இன்று ஜெபிப்போம்! இப்போது ஜெபிப்போம். அப்படிச் செய்தால், எந்த சூழ்நிலையையும் கண்டு நாங்கள் அஞ்ச மாட்டோம்! இயேசு எங்களுக்காக பரிந்து பேசிக்கொண்டே இருக்கிறார்.