பலன் தரும் கொடிகள்

Posted on April 12, 2016 18:24:48

INTO A NEW DAY - INNER MAN  TAMIL MAGAZINE - GRACE TABERNACLE APOSTOLIC CHURCH, SCARBOROUGH ONTARIO, CANADA  

வாசகம்: யோவான் 15:6, 1 யோவான் 1:7,9

“ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடியைப்போல அவன் எறியுண்டு உலர்ந்து போவான்; அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து, அக்கினியிலே போடுகிறார்கள்; அவைகள் எரிந்துபோம்”

வாழ்க்கையில் பலவித போராட்டங்கள், வியாதிகள், வேலையில்லா திண்டாட்டங்கள், தோல்விகள், ஏமாற்றங்கள், நிந்தைகள், அவமானங்கள், கடன் தொல்லைகள், ந~;டங்களால் சோர்ந்து போன நிலையில் இருக்கும் என்னை யார் அணைப்பார்? யார் தேற்றுவார்? அநாதையானேன் என்று புலம்புகிறவர்களை விடுவித்து வாழ்வளிப்பர் ஒருவர் உண்டென்பதை மறந்து போகாதிருங்கள். தம்மிடத்தில் வருகின்ற எந்தப் பாவியையும் புறம்பே தள்ளாதவர் இயேசு.

நொறுங்குண்டதும், நறுங்குண்டதுமான இதயத்தை புறக்கணியாதவர் இயேசு. உங்கள் பாவங்களை மன்னிப்பவர் இயேசு ஒருவரே. தம் தூய இரத்தத்தினால் உங்கள் இருதயங்களை கழுவி உங்களை பரிசுத்தமாக்கிறவரும் அவரே. திராட்ச செடியாகிய அவரில், நீ கொடியாக இணைந்திருந்தால் எறியுண்டு போவதில்லை!