நித்தியத்திற்கே அழைக்கப்பட்டாய்

Posted on April 12, 2016 18:20:31

INTO A NEW DAY - INNER MAN  TAMIL MAGAZINE - GRACE TABERNACLE APOSTOLIC CHURCH, SCARBOROUGH ONTARIO, CANADA  

வாசகம்: வெளிப்படுத்தல் 3:20

இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம் பண்ணுவான்.

தேவன் ஏன் என்னை அழைத்தார்? நித்திய ஜீவனுக்கென்றே என்னை அழைத்தார். ஏனெனில் எங்களுடைய ஜீவன் அவருக்குள் இருக்கின்றது, யாரும் அதைப் பறிக்க முடியாது. இந்த அழைப்பை அநேகர் ஏற்றுக் கொள்வதில்லை. தேவனுடைய அழைப்பைப் பெற்ற வன் அவருடைய இரட்சிப்பில் பங்கு பெற்று, தேவனுடைய குடும்பத்தில் இணைந்திருக்கிறான். இதனாலே தேவ ஆசீர்வாதத்திற்கும் தேவனுடைய கலாச்சாரத்தில் வாழுகிறதிற்கும், பரிசுத்தமாகுதலிலும் பங்கு கொள்கிறான். தன்னுடைய வாழ்வில் சமாதானத்திலும், தேவனுடைய ஒளியிலும் இவன் நிலைத்திருக்கிறான். தேவ சமாதானம் இவனை ஆண்டு கொள்கின்றது.

தேவனை ஏற்றுக் கொண்டால் நீங்களும் அந்த சமாதானத்திற்கு பங்குள்ளவர்களாவீர்கள்.