நான் உன்னைக் குணமாக்குவேன்

Posted on April 12, 2016 13:50:59

INTO A NEW DAY - INNER MAN  TAMIL MAGAZINE - GRACE TABERNACLE APOSTOLIC CHURCH, SCARBOROUGH ONTARIO, CANADA  

வாசகம்: 2 இராஜாக்கள் 20:5

உன் தகப்பனாகிய தாவீதின் தேவனாயிருக்கிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, நான் உன்னைக் குணமாக்குவேன்; மூன்றாம் நாளிலே நீ கர்த்தருடைய ஆலயத்துக்குப் போவாய். என்று எசேக்கியா ராஜாவிற்கு தேவனாகிய கர்த்தர் செய்தி அனுப்பினார்.

தேவனுக்கு பிரியமானவர்களே, எசேக்கியா ராஜா, ஆரம்ப நாட்களிலே தேவனுடைய பார்வையிலே உண்மையும் உத்தமமுமாய் நடந்தார். ராப்சேக் என்பவன் தேவ ஜனங்களை நிந்தித்து பேசின போது,  “கேருபீன்களின் மத்தியில் வாசம்பண்ணுகிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, நீர் ஒருவரே பூமியின் ராஜ்யங்களுக் கெல்லாம் தேவனானவர்; நீர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர் என்று விண்ணப்பம் பண்ணினார்.தேவன் வெற்றி கொடுத்தார். நோயின் கட்டில் இருந்து விடுதலை கொடுத்தார்.  

இன்று நீ குணமடைய விரும்பினால், அற்புத சுகமளிக்கும் இயேசு அண்டை வருகிறாயா? அவர் உன் கண்ணீரைத் துடைத்து, உன் மனப்புண்களை ஆற்றுவார். இயேசு உன்னை அழைக்கிறார்!