கர்த்தரை நம்பி நன்மை செய்

Posted on April 12, 2016 18:22:37

INTO A NEW DAY - INNER MAN  TAMIL MAGAZINE - GRACE TABERNACLE APOSTOLIC CHURCH, SCARBOROUGH ONTARIO, CANADA  

வாசகம்: சங்கீதம் 37:1-5, கலாத்தியர் 6:6-10

பொல்லாதவர்களைக் குறித்து எரிச்சலடையாதே நியாயக்கேடு செய்கிறவர்கள்மேல் பொறாமைகொள்ளாதே. அவர்கள் புல்லைப் போல் சீக்கிரமாய் அறுப்புண்டு, பசும்பூண்டைப்போல் வாடிப்போவார்கள். கர்த்தரை நம்பி நன்மை செய்; தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்துகொள். கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார். உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.

நன்மை செய்வதில் சோர்ந்து போகாதிருங்கள், தேவன் உங்களுக்கு தந்த நற்பண்புகளை யாரும் உங்களிடம் இருந்து பறித்துக் கொள் ளாதபடியும், தீமைக்கு தீமை செய்யாமலும், தேவன் எங்களுக்குத் தந்த அளவின் படி நன்மையே செய்வோம். ஏனெனில் எங்கள் கர்த்தராகிய இயேசு என்னையும் உங்களையும் மீட்க தன்னுடைய சிலுவை மரணபரியந்தமும் அப்படியே செய்தார்! எனவே அவருடைய சாயலை அணிய நாங்களும் அவரைப் பின்பற்றுவோம்!

தேவனுடைய நாமத்தின் மகிமைக்காக வாழுவோம்!