கன்மலையில் மேல் அஸ்திபாரம்

Posted on April 12, 2016 13:47:12

INTO A NEW DAY - INNER MAN  TAMIL MAGAZINE - GRACE TABERNACLE APOSTOLIC CHURCH, SCARBOROUGH ONTARIO, CANADA  

வாசகம்: மத்தேயு 7:24-27

இடாம்பீகமாக இருந்த ஒரு மாடிக் கட்டிடம் ஒன்றின் சுவரிலும், நிலத்திலும் சிறிய வெடிப்புக்கள் ஏற்பட்டன, உள்நாட்டு அரசாங்க விதிமுறைகளை திருப்திப்படுத்துமுகமாக அந்த வெடிப்புக்களுக்கு வெறும் பூச்சுக்கள் பூசப்பட்டனவே அன்றி, அந்த வெடிப்பின் காரணத்தை திருத்தவில்லை. காலப்போக்கில் அந்த பல மாடிக்கட்டிடம் உடைந்து அதில் வேலை  செய்த பலர் மாண்டு போனார்கள்.

எங்கள் வாழ்க்கையிலும் வரும் பிரச்சனைகளின் மூலகாரணியை கண்டுபிடித்து அவைகளை சீர் செய்ய வேண்டுமே அன்றி, அவைகள் பூச்சுப் பூசி பாரா முகமாக விட்டு விடக்கூடாது. நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன். என்று கர்த்தராகிய இயேசு கூறினார்.

தேவனுடைய வார்த்தைகளின்படி எங்கள் வாழ்க்கையை ஆராய்ந்து சீர் செய்ய வேண்டும். அப்படி செய்யும் போது எங்கள் வாழ்க்கையில் எந்தப் புயல் மோதினாலும் நாங்கள் அசைக்கப்பட மாட்டோம். கர்த்தராகிய இயேசு உங்களை ஆசீர்வதிப்பாரக!