சமாதான நதி

Posted on April 12, 2016 13:16:47

INTO A NEW DAY - INNER MAN  TAMIL MAGAZINE - GRACE TABERNACLE APOSTOLIC CHURCH, SCARBOROUGH ONTARIO, CANADA               

இன்றைய வாசகம்: மத்தேயு 11:28, ஏசாயா 48:18, யோவான் 14:27

ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த மனிதனின் வாழ்க்கையில் திடிரென்று ஒரு வியாதி ஏற்பட்டு விட்டது. ஊர் மருத்துவரிடம் அந்த வியாதியை மாற்றும் மருந்து இருந்தது, மருத்துவர் இருக்கும் இடத்தையும் அவர் நன்கு அறிந்தவராக இருந்தும், அங்கு செல்ல அந்த மனிதனுக்கு மனதில்லை, அதனால் தன் வியாதியினால் வருந்திக் கொண்டே இருந்தார்.

என்னுடைய வாழ்க்கையில் சமாதானம் இல்லை என்று சொல்லிக் கொள்பவர்கள் உண்டு. சமாதானத்தை அடையும் வழிமுறைகள் தெரிந்தும் அவற்றை பின்பற்ற மனதில்லாததினால், துன்பத்தோடே வாழ்நாட்களை கழித்துக் கொண்டிருக்கின்றார்கள். வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்று இயேசு கூறியிருக்கிறார் அது மட்டுமல்லாமல் அந்த இளைப்பாறுதலை அடையும் வழிமுறைகளையும் கற்றுத் தந்திருக்கின்றார்.