புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 28, 2025)

பூரண அர்பணிப்பு

லூக்கா 1:38

அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள்.


சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக, கபிரியேல் என்னும் தேவ தூதன், இஸ்ரவேலில், கலிலேயாவிலுள்ள நாசரேத்தென்னும் ஊரில், தாவீதின் வம்சத்தானாகிய யோசேப்பு என்கிற நாமமுள்ள புருஷனுக்கு நியமிக்கப்பட்டிருந்த ஒரு கன்னிகையினிடத்திற்கு தேவ னாலே அனுப்பப்பட்டான். அந்தக் கன்னிகையின் பேர் மரியாள். அவள் இருந்த வீட்டில் தேவ தூதன் பிரவேசித்து: கிருபை பெற்றவளே வாழ்;க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், ஸ்திரிகளுக்குள் நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றான். அவளோ அவனைக் கண்டு, அவன் வார்த்தையினால் கலங்கி, இந்த வாழ்த்துதல் எப்படிப்பட் டதோ என்று சிந்தித்துக்கொண்டி ருந்தாள். தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே; நீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய். இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக. அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றெ ன்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது என் றான். அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: இது எப்படியாகும்? புருஷனை அறியேனே என்றாள். தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தர மாக: பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும். இதோ, உனக்கு இனத்தாளா யிருக்கிற எலிசபெத்தும் தன் முதிர்வயதிலே ஒரு புத்திரனைக் கர்ப்ப ந்தரித்திருக்கிறாள்; மலடியென்னப்பட்ட அவளுக்கு இது ஆறாம் மாதம். தேவனாலே கூடாதகாரியம் ஒன்றுமில்லை என்றான். அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தை யின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள். அப்பொழுது தேவதூதன் அவளி டத்திலிருந்து போய்விட்டான். ஆம் பிரியமானவர்களே, இனிநடக்க போவது இன்னது என்று அறியாதிருந்த மரியாள், எப்படியாக தேவ சித்தம் நிறைவேற, முற்றாக தன்னை ஒப்புக் கொடுத்தாளோ, அது போலவே நாமும் பெரிய காரியமானாலும், சிறிய காரியமானாலும், தேவ சித்தம் செய்ய நம்மை நாம் ஒப்புக்கொடுக்க வேண்டும்;. தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமி ல்லை.

ஜெபம்:

பரலோத்திலிருக்கின்ற தேவனாகிய கர்த்தாவே, நான் மரியா ளைப் போல, நிபந்தனையற்ற அர்பணிப்போடு உம்முடைய சித்தத்திற்கு என்னை ஒப்புக் கொடுக்க என்னை உம் கிருபையால் பெலப்படுத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யாக்கோபு 4:7-10