தியானம் (ஆனி 27, 2025)
தேவனால் கூடாதது ஒன்றுமில்லை
பிலிப்பியர் 4:13
என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு.
சிலவேளைகளிலே சில விசுவாச மார்க்கத்தார், தாங்கள் விரும்பியதும், சமூகத்தினால் அங்கீகரிக்கப்பட்டதும், இலகுவாக செய்து முடிக்கக்கூடி யதும் அல்லது தங்களுக்கு ஆதயம் உண்டாகக்கூடியதுமான காரியங் களை தேவனுடைய சித்தம் என்று அவைகளை செய்து முடிக்கின் றார்கள். தங்களுக்கு கடினமானதும், தங்கள் எண்ணகளுக்கு உட்படா ததும், சமூகத்தினால் ஏற்றுக் கொள்ள ப்படாததுமான அல்லது தங்களுக்கு நஷ;டம் ஏற்படக்கூடிய காரியங்களை நிறைவேற்றுவதற்காக எந்தப் பிரயாச மும்படாமல், அவை தேவ சித்தம் இல்லை என்று கூறிவிடுகின்றார்கள். இப்படிப்பட்ட எண்ணமுடையவர்கள், கருத்தில்லாமல் பரலோகத்திலே உம் முடைய சித்தம் செய்யப்படுவதுபோல, பூமியிலேயும் செய்யப்படு வதாக என்று ஜெபம் செய்து கொள்கின்றார்கள். நீங்கள் ஏக சிந்தையு ள்ளவர்களாய், இசைந்த ஆத்துமாக்களாய் தேவ சித்தம் ஒன்றையே சிந்தித்து, அதை நிறைவேற்றி முடிக்கும் பொருட்டு, 'கிறிஸ்துவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்க வேண்டும். அவர் தேவனுடைய ரூபமா யிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைப் கொள்ளையாடின பொரு ளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூப மெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்படிந்த வாராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.' பரம பிதாவுடைய சித்தம் செய் வதற்கு, பலமும், பராக்கிரதும் அவசியமானது அல்ல. பெயரும் புகழும் தேவையில்லை. பணமும், பொருளும் வேண்டியதல்ல. மாறாக, மனத் தாழ்மையும், கீழ்படியும் அவசியமானதாகும். தேவ சித்தத்தை நிறை வேற்றும்படி ஒரு விசுவாசியினிடத்தில் இருக்கும் கீழ்படியும் மனத்தாழ் மையும், சபை ஐக்கியங்களிலே, கண் கண்ட அதிகாரங்களோடு அவ ர்கள் எப்படி நடந்து கொள்கின்றார்கள் என்பதிலிருந்து அறிந்து கொள் ளலாம். ஒருவன் தன் சொந்த அபிப்பிரயாங்களுக்கு இடங்கொடாமல், தேவ சமுத்திலே உண்மையாய் தன்னைத் தாழ்த்தி, தேவ வார்த்தைக்கு கீழ்படியும்படி தன்னை ஒப்புக் கொடுக்கும் போது, பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, தேவ சித்தத்தை நிறைவேற்றி முடிக்க, தேவ ஆவியினாவர்தாமே துணைபுரிவார். எனவே உங்களுடைய விரும்பப்படியல்ல, தேவன் விரும்புகின்ற பிரகாரமாக செயற்பட உங்கள் இருதயங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ளும்படி, மனத்தாழ்மையோடு, தேவ வார்த்தைக்கு கீழ்படியுங்கள்.
ஜெபம்:
அழியாத நித்திய ராஜ்யத்திற்காக என்னை அழைத்த பிதாவான என் தேவனே, உம்முடைய திருக்குமாரனைப் போல, உம்முடைய சித்தம் நிறைவேறும்படிக்கு ஒப்புக் கொடுக்க என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - சகரியா 4:6