தியானம் (ஆனி 26, 2025)
என்னுடைய வாழ்க்கையில் தேவ சித்தம்
சங்கீதம் 115:3
நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார்; தமக்குச் சித்தமான யாவையும் செய்கிறார்.
நம்முடைய பிதாவாகிய தேவன் பரமண்டலத்திலே இருக்கின்றார். அங்கே அவருடைய சித்தம் சம்பூரணமாக செய்யப்படுகின்றது. அதா வது, இதை செய், இதை செய்யாதே என்று அங்கே கூறுப்படுவ தில்லை. பரம பிதாவின் பூரண ஆளுகை அங்கே இருக்கின்றது. அங்கே வாசமாக இருக்கும் தேவ தூதர்களும், வல்லமையுள்ள சிருஷ;டிகளும், தேவ சித்தத்தை கட்டளையாக வோ, கடமையாகவோ செய்வதி ல்லை. தேவசித்தத்தை செய்வது அவர்களுடைய சுபாமாக இருக்கி ன்றது. அவ்வண்ணமாக அவரு டைய சித்தமானது இந்த பூவுல கிலும் செய்யப்பட வேண்டும் என் பது நம்முடைய ஜெபத்தின் முக் கிய அம்சமாக இருக்க வேண்டும் என்பதை ஆண்டவராகிய இயேசு கற்றுக் கொடுத்திருக்கின்றார். 'பரமண்டலத்திலே உம்முடைய சித்தம் செய்யப்படுவது போல, இந்த பூமியிலேயும் செய்யப்படுவதாக' என்று ஜெபத்திலே கூறிவிட்டு நம் வழியே சென்று விடுவது கடினமான காரிய மல்ல. அவருடைய சித்தமானது இந்தப் பூமியிலே செய்யப்படுவதாக என்று கூறும் போது, நாம் எதை அறிக்கை செய்கின்றோம். உலகதிலே இருக்கும் தேசங்களிலே, அதிகாரிகள் மத்தியில் அவை நடத்தப்பட வேண்டும் என்பதா? அல்லது நாம் வாழும் சமுகத்திலே, பாடசாலை களிலே, வேலை செய்யும் இடங்களிலே, சபை ஐக்கியங்களிலே, கடைத் தெருக்களிலே செய்யப்பட வேண்டும் என்பதா? அல்லது அவரவர் குடும்பத்திலும் உறவுகள் நண்பர்கள் மத்தியிலே தேவ சித்தம் நிறைவேற வேண்டும் என்பதா அல்லது என் வாழ்விலே தேவ சித்தம் நிறைவேற வேண்டும் என்பதா? ஆம் பிரியமான சகோதர சகோத ரிகளே, முதலாவதாக, ஒவ்வொருவரும் தன் தன் வாழ்வில் தேவன் கூறியவற்றை செய்வதற்கு இடங்கொடுக்க வேண்டும். ராஜ்யங்க ளையும், ராஜாக்களையும், அதிகாரிகளையும், மற்றவர்களை யும் ஒப்புக் கொடுபது மிக இலகுவான காரியம். ஆனால், அவரவர் தன் தன் மாம்ச எண்ணங்களை நிறைவேற்றாமல், பிதாவாகிய தேவனுடைய சித்தம் இந்த பூமியிலே நிறைவேறும்படிக்கு, முதலாவதாக, தன்னை ஒப்புக் கொடுக்க வேண்டும். கர்த்தர் கற்பித்த ஜெபத்தை கூறுவதோடு நிறுத்தி விடாமல், ராஜக்களுக்கும், ஆளுகின்ற அதிகாரிகளுக்காகவும் ஊக்க மாக ஜெபிக்கின்றவர்களாகவும், சபை ஜக்கியங்களிலே ஒருமனதோடு ஒன்றையே சிந்தித்து, தேவ சித்தம் ஒன்றையே நிறைவேற்றும்படி பிரயாசப்பட வேண்டும்.
ஜெபம்:
பரமண்டலங்களிலே இருக்கின்ற பிதாவே, உம்முடைய சித்த மானது பரலோகத்திலே செய்யப்படுவது போல, என் வாழ்வில் செய்யப்ப டும்படிக்கு, எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - மத்தேயு 6:10