தியானம் (ஆனி 25, 2025)
சுய கொள்கைகளின் முடிவு
சங்கீதம் 119:1
கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள்.
இது என்னுடைய வாழ்க்கை. என்னுடைய கனவுகளை நான் அடையும் படிக்கு அவைகளை பின்பற்ற வேண்டும். நான் விரும்பிய துறையிலே, எனக்கு விருப்பான கல்லூரியிலே கல்வி கற்ற வேண்டும். எனக்கு பிடித்தவ நபரை வாழ்க்கைத் துiணாயக கொள்ள வேண்டும். என்று பற்பல கொள்ளை கோட்பாடுகளை மனிதர்கள் கூறுவதை நீங்கள் கேட் டிருப்பபீர்கள். அப்படியாக தங் கள் மனவிரும்பப்பபடி காரியங் களை நடப்பிப்பவர்களின் வாழ் க்கையை சில ஆண்டுகளுக்கு பின்னர் ஆராய்ந்து பாருங்கள். வாழ்க்கையிலே எத்தனை குழப் பங்களையும், கலகங்களையும் ஏற்படுத்திக் கொள்கின்றார்கள். பிரச்சனைகள் கார்மேகங்களைப் போல சூழ்ந்து நிற்கும் போதும், சிலர், நல்ஆலோசனைகளை தள்ளி, என் பிரச்சனைகளை எப்படி தீர்த்துவைப்பது என்று எனக்குத் தெரியும் என்று அகங்காரமாக கூறிக் கொள்வபர்களும் உண்டு. பின்னர் வாழ்வில் ஏற்பட்ட ஒரு பிரச்சனையை தீர்த்துக் கொள்வதற்கு இன்னும் அநேக பிரச்சனைகளை உண்டாக்கி, தங்களுக்கும் தங்கள் சூழ உள்ளவர்க ளுக்கும் பல பாதகமான பின்விளைவுகளை ஏற்படுத்திக் கொள்கின்றா ர்கள். எந்த மனிதன் இக்காரியங்களுக்கு நான் விதிவிலக் கானவன் என்றும், நான் என் சொந்த தீர்மானத்தின்படி செய்தவகள் யாவும் பூரண மானது என்று கூறிக் கொள்ள முடியும்? சிலருடைய வாழ்க்கை வெளிய ரங்கமாக இருக்கின்றது ஆனால் அநேகருடைய காரியங்களை இன்னும் மறைவாகவே இருக்கின்றது. நமக்கு பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது. நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் தேவனை பொய்ய ராக்குகிறவர்களாயிருப்போம். அவருடைய வார்த்தை நமக்குள் இராது. (1 யோவான் 1:8,10) என்று பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது. எனவே, ஒவ்வொரு சூழ்நிலைகளிலும், நாம் யாவரும் தேவ சித்தம் நம் வாழ் விலே நிறைவேற இடங்கொடுக்க பழகிக் கொள்ள வேண்டும். அதை எப்படி அறிந்து கொள்வது? நம்மை சத்திய வழியிலே நடத்தும் வேதத்தை இரவும் பகலும் தியானம் செய்ய வேண்டும். அந்த ஞான வார்த்தைகள் எப்போதும் நம் இருதயத்திலும் இருக்க வேண்டும். அனுதினமும் ஊக்கமாக ஜெபிக்க வேண்டும். தேவ ஆலோசனைகள் கூறும்படி நியமிக்கப்பட்டவரிகளின் ஆலோசனையை கேட்க வேண்டும். அப்போது ஞானமுள்ளவர்களாக நடந்து கொள்ளலாம்.
ஜெபம்:
வாழ்வு தரும் வார்த்தைகளை எனக்கு தந்த தேவனே, உம்முடைய வார்த்தையை கேட்கின்றவனாக மட்டுமல்ல,அவைகளை என் வாழ்வின் சூழ்நிலைகளின் கைகொள்ளும் இருதத்தை தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - நீதி 14:12