புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 24, 2025)

மெய் ஞானத்தை தரும் பரம பிதா

யாக்கோபு 1:17

நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங் கிவருகிறது;


ஆதியிலே ஏவாள், தன் கண்களின் இச்சையினாலே இழுப்புண்டு, தேவனாகிய கர்த்தர் விலக்கிய கனியானது, புசிப்புக்கு நல்லதும், பார்வை க்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்கதும் என்று கண்டு, அதை புசித்து, பிசாசானவனினால் வஞ்சிக்கப்பட்டுப் போனாள். தேவனுடைய கட்டளைகள் எப்போதும் மனிதர்களை நல்வழி ப்படுத்தும். அதை ஒருவன் மீறும் போது, தன் வாழ்விலே தீமைகளை வரவேற்றுக் கொள்கின்றான். அவ்வண்ணமாகவே, நம்முடைய ஆதிப் பெற்றோராகிய ஆதாம் ஏவாள், தேவனுடைய கட்டளையை மீறியதால், நன்மை தீமை அறிவும் அறிவை அடைந் தார்கள். நன்மையை அறிந்திருந்த நாட்களிலேயே அவர்கள் தேவ கட்டளையை கைகொள்ளாமல் தங்கள் மனவிரும்பத்தை நிறைவேற்றினார்கள். அப்படியானால், இப்போது நன்மை தீமை அறியும் அறிவை பெற்றிருக்கும் போது, அவர்கள் தீமையை பற்றிக் கொள்வது அதிக நிச்சயமாக இருக்கும் அல்லவா? அவர்கள் வழி வந்த மனித குலத்திற்கு நன்மை தீமை அறிவும் அறிவு உண்டு. ஆனால், தங்களுடைய வாழ்க்கைக்கு நன்மை யானது எது என்பதை நிதானித்து அறியும் தேவஞானம் அவர்களிடத்தில் இல்லை. ஆதியிலிருந்து இன்று வரை எப்படியாக தீமை இந்த உலகத்திலே மலிந்து கொண்டே போகின்றது என்பது அதற்கு உறுதியான சாட்சியாக இருக்கின்றது. அதெப்படியெனில், என்னிடத்தில், அதாவது, என் மாம்சத்தில், நன்மை வாசமாயிருக்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன், நன்மை செய்யவேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திடத்திலிருக்கிறது, நன்மை செய்வதே என்னிடத்திலில்லை, ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமை யையே செய்கின்றேன். அந்தப்படி நான் விரும்பாததை நான் செய்தால், நான் அல்ல, எனக்குள்ளே வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கி றது. ஆனபடியால் நன்மை செய்ய விரும்புகிற என்னிடத்தல் தீமையுண்டென்கிற ஒரு பிரமாணத்தைக் காண்கிறேன் என்று மனிதனுடைய மனநிலையை குறித்து தேவ ஊழியராகிய பவுல் கூறியிருகின்றார். (ரோமர் 7: 18-24). எனவே, நன்மையை நடப்பிக்க செய்கையையும் விரும்பத்தையும் உண்டுபண்ணுகின்ற தேவனை பற்றிக் கொள்ளுங்கள். தூய ஆவியானவர்தாதே நன்மையானதை நடப்பிக்க உங்களை நடத்திச் செல்வார்.

ஜெபம்:

நன்மையான ஈவுகளையும், பூரணமான வரங்களையும் பரத்திலிருந்து பொழிகின்ற பிதாவே, தீமைகள் மலிந்து கொண்டே செல்லும் இந்த உலகிலே, நன்மையை கண்டடைய மெய் ஞானத்தை தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யாக்கோபு 1:5