தியானம் (ஆனி 23, 2025)
ஒரு தீமையும் நினைக்காத பரம தந்தை
எபிரெயர் 12:10
இவரோ தம்முடைய பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும்பொருட்டு நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார்.
வாலிபனொருவன், தன் நண்பர்களோடு சென்று கடற்கரையோரமாக பந்து விளையாடுவதற்கு, தன் தகப்பனானவரிடம் அனுமதி கேட்டான். வழமையாக, அந்த பாதுகாப்பான இடத்திலே விளையாடுவதற்கு அனுமதி கொடுக்கும் தகப்பனானவர் அந்த நாளிலே நண்பர்களோடு அங்கு செல்வதற்கு அனுமதிகொடுக்காமல், அவனை தடுத்து நிறு த்தினார். மகனானவனோ, மிகவும் கோபம் கொண்டான். தகப்பனான வர் ஏன் இப்படி செய்கின்றார் என்று மனம்நொந்தவனாக தாயாரிடம் முறையிட்டான். அதற்கு அவன் தாயான வள் அவனை நோக்கி: மகனே, இன்னும் சில நாட்களிலே, உன் உயர்கல்விக்கான மிக முக்கியமான நேர்முகத்தேர்வும், அனுமதி பரீட்சையும் நடக்க இருக்கின்றது. அதற்காக நீ உன்னை ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். அதுமட்டும ல்லாமல், இந்நாட்களிலே நீ ஓடி விளையாடி உன்னைக் காயப்படுத்தி, உடலை வருத்திக் கொள்ள கூடாது. உன் எதிர்கால நன்மை கருதியே அப்பா உன்னை தடுத்து நிறுத்தினார் என்று சொன்னார். பிதாவாகிய தேவனுடைய அநாதி சித்தத்தின்படி நித்திய வாழ்விக்கென்று அழை க்கப்பட்ட பிரியமான சகோதர சகோதரிகளே, மேற்கூறப்பட்ட சம்பவத்தின் கருபொருளாவது, வாலிப பிரயாயத்திலிருக்கும் அந்த மகனானவன், இன்றைய நாளுக்குரிய தன் மனவிருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்று பிடிவாதமுள்ளவனாக இருந்தான். ஆனால், அவனுடைய தகப்பனானவரோ, அற்பமான சந்தோஷத்திற்காக அவனுடைய எதிர் கால வாழ்க்கை பாதிக்கப்படகூடாது என்று, அவனுடைய வாழ்விற்கு நன்மையானதை செய்தார். அதுபோலவே, நம்முடைய பரம பிதாவும், நம் வாழ்வில், அழிந்து போகும் இந்த உலகத்திற்குரியவைகள் ஒருவேளை நன்மையானதாகவும், பாதகமற்றதாகவும் நம்முடைய அறிவுக்கு தென்படாலம். ஆனால் எந்தக் காரியமும் நம்முடைய பரம அழைப்பின் பந்தையப் பொருளை இழந்து போகாப் பண்ணாதபடிக்கு, நம்முடைய வாழ்க்கையைக் குறித்து எண்ணமுள்ளவர்ராக இருக்கின்றார். காலங் களை அறிந்த சர்வ வல்லமையுள்ள தேவனானவர், ஒரு தீமையையும் நினைக்காதவரும், உச்சிதமானவைகளை தன்னுடைய பிள்ளைகளுக்கு கொடுக்கின்றத அருமையான நல்ல தந்தையாக இருக்கின்றார். எனவே, அவருடைய சித்தமானது நம்முடைய வாழ்க்கையிலே நிறைவேறும்படிக்கு, நாம் நம்மை ஒப்புக் கொடுப்போமாக.
ஜெபம்:
உம்முடைய குமாரனென்றும் பாராமல், மீட்பர் இயேசுவை எனக்காகவும் கொடுத்த தேவனே, உம்முடைய திருச்சித்தமானது என்னுடைய வாழ்விலே நிறைவேற நான் இடங்கொடுக்க உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - மத்தேயு 7:11