தியானம் (ஆனி 22, 2025)
நிதானித்து அறியுங்கள்
1 தெச 5:21
எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்.
ஒரு ராஜ்யத்திற்கு ஒரு ராஜா இருப்பார். அவருடைய சிங்காசனம் அவர் வாசம் பண்ணும் இடத்திலே அமைக்கப்பட்டிருக்கும். தேவனு டைய ராஜ்யமானது எங்கள் இருதங்களிலே வந்திருக்கின்றது. ஆண்டவ ராகிய இயேசுதாமே அந்த ராஜ்யத்தின் ராஜாவாக இருக்கின்றார். நம்முடைய இருதயமானது அவருடைய சிங்காசனம் இருக்கும் இடமாக இருக்க வேண்டும். சில வேளைக ளிலே, தங்களை தேவனுடையவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் மனிதர்களுடைய வெளியரங்கமாக கிரியைகளும், அவர்களுடைய பேச்சுக்களும் அவர்களை தேவ பக்தியுடையவர்கள் போல காண்பிக்கலாம். ஆனால், அவர் கள் இருதயமோ தேவனுக்கு தூரமானதாயும், மாம்ச இச்சைகள் நிறைந்த வைகளாகவும் காணப்படும். இந்த வெளி வேடமாக வாழ்க்கை சில வேளைகளிலே, வெளியே இருக்கின்றவர்களுக்கு குறித்த காலம் வரை வெளிப்படாமல் இருக்கலாம். சிலர் தேவ பக்தியின் வேஷத்தை தரித்து அதன் பலனை மறுதலிக்கின்றவர்களாக இருக்கின்றார்கள். இப்படிப்பட்ட இருதயத்தோடு வாழ்கின்றவர்கள், பரமண்டலங்களில் இருக்கின்ற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக, உம்முடைய ராஜ்யம் வருக என்று ஒவ்வொரு நாளும் ஜெபிக்கலாம். ஆனால், அந்த ஜெபமானது அவர்களுடைய வாழ்கையிலே கருத்த ற்றதாக இருக்கும். அவர்கள் இருதயமானது, ராஜாவாகிய ஆண்டவர் இயேசுவின் ஆளுகைக்கு உட்பட்டதல்ல. அவர்களுடைய இருதயம் ராஜாவாகிய இயேசுவின் சிங்காசனத்திற்கு ஏற்புடையதல்ல. தேவ ராஜ்யத்திற்கு என்று அழைக்கப்பட்ட தேவனுடைய பிள்ளைகளே, உங்கள் வாழ்க்கையை ஆராய்ந்து பாருங்கள். இன்று பற்பல விதமான பிரிவுகளுடனும், உலக வாழ்க்கைக்கு ஏற்றபடி பல்வேறுபட்ட உபதேச ங்களுடனும், பலர் எழுந்து வந்து இயேசுவின் நாமத்தை வீணிலே வழங்குகின்றார்கள். பரிசுத்த வேதாகமத்தை கருத் தோடு வாசியுங்கள், அந்த வார்த்தைகளை தியானியுங்கள், தேவ வார்த்தைகளைக் குறித்த விதண்டாவாதங்களுக்கு உங்களை உட்படுத்தாமல், ஊக்கமாக ஜெபம் செய்யுங்கள். உண்மையுள்ள இருதயத்தோடு தேவனை நோக்கி பாரு ங்கள். சத்திய ஆவியானவர்தாமே நீங்கள் போக வேண்டிய வழியை உங்களுக்கு காண்பிப்பார். உங்கள் மனதில் தோன்றும் உணர்வுகளின்படி தீர்மானம் செய்யாமல், எல்லாவற்றையும் தேவ வார்த்தையின் வெளிச்சத்தில் சோதித்தறிந்து, நலமானதைப் பற்றிக் கொள்ளுங்கள். மேலானவைகளை நாடுங்கள்.
ஜெபம்:
சுத்தமனட்சாட்சியை எனக்கு தந்த தேவனே, கோணலும் மாறுபாடுமான இந்த சந்தததியின் நடுவே, உம்முடைய சத்திய மார்க்கத்திலே நான் நடக்க, எனக்கு பிரகாசமுள்ள மனக்கண்களை தந்து வழிநடத்திச் செல்வீராக. இட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - 1 தீமோ 1:18-19