தியானம் (ஆனி 21, 2025)
பரமபிதா நடாத நாற்றுக்கள்
மத்தேயு 15:13
என் பரமபிதா நடாத நாற்றெல்லாம் வேரோடே பிடுங்கப்படும்.
ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்தரத்தில் பங்கடைவதற்கு, நம்மைத் தகுதியுள்ளவர்களாக்கினவரும், இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்தரிக்கின்றோம். (கொலோ 1:12-13). இந்த உலக்திலே தேவனுடைய ராஜ்யம் மனிதர்கள் மத்தி யிலே கிரியை செய்து வருவது போல, இருளின் ராஜ்யமும் அதன் கிரியை களை நடப்பித்து வருகின்றது. சில வேளைகளிலே இருளின் ராஜ்யத் தின் கிரியைகளை வேறுபடுத்தி அறி ந்து கொள்வது, மிகவும் கடினமான காரியமாயிருக்கும். பரலோகராஜ் யம் நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட நல்ல விதையை விதைத்த மனுஷ னுக்கு ஒப்பாயிருக்கின்றது. மனுஷர் நித்திரை பண்ணுகையில் அவனு டைய சத்துரு வந்த, கோதுமைக்குள் களைகளை விதைத்துவிட்டுப் போனான். பயிரானது வளர்ந்து கதிர் விட்ட போது, களைகளும் காண ப்பட்டது. வீட்டெஜமானுடைய வேலைக்காரர் அவனிடத்தில் வந்து: ஆண்டவனே, நீர் உமது நிலத்தில் நல்ல விதையை விதைத்தீர் அல் லவா? பின்னை அதில் களைகள் எப்படி உண்டானது என்றார்கள். அதற்கு அவன்: சத்துரு அதைச் செய்தான் என்றான். அப்பொழுது வேலைக்காரர்: நாங்கள் போய் அவைகளைப் பிடுங்கிப்போட உமக்குச் சித்தமா? என்று கேட்டார்கள். அதற்கு அவன் வேண்டாம் களைகளைப் பிடுங்கும்போது நீங்கள் கோதுமையையுங்கூட வேரோடே பிடுங்காத படிக்கு இரண்டையும் அறுப்பு மட்டும் வளரவிடுங்கள். அறுப்புக் காலத்தில் நான் அறுக்கின்றவர்களை நோக்கி: முதலாவது களைகளைப் பிடுங்கி, அவைகளைச் சுட்டெரிக்கிறதற்கு கட்டுகளாக கட்டுங்கள்: கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்து வையுங்கள் என்பேன் என்று சொன்னான் என்றார். பிரியமான சகோதர சகோதரிகளே, நம் மத்தியிலே வளர்ந்து வரும் களைகளில் சில, அவை கனிதரும் காலம் மட்டும், அவைகள் பயிர்களைப் போல காணப்படும். ஆனாலும், அவை இருளின் ராஜ்யத்திற்குரியவர்களாக இருப்பதால், அவர்களுடைய கனி யற்ற வாழ்க்கையானது அறுப்புக் காலத்திலே வெளிப்படும். எனவே நீங்கள் கனிகொடுக்கும்படிக்கு, வலது புறமோ, இடது புறமோ சாயாத படிக்கு தேவ வார்த்தையிலே நிலைத்திருங்கள். என் பரமபிதா நடாத நாற்றெல்லாம் வேரோடே பிடுங்கப்படும் என்று ஆண்ட வராகிய இயேசு கூறியிருக்கின்றார்.
ஜெபம்:
பரலோக ராஜ்யத்திற்கென்று என்னை வேறு பிரித்த தேவனே, இந்த உலகத்திலே கிரியையை செய்யும் அந்தார கிரிகைகளுக்கு நான் உடன்படாமல் வெற்றியுள்ள வாழ்க்கை வாழ என்னை வழிநடத்தி செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - யோவான் 15:1-8