தியானம் (ஆனி 20, 2025)
எங்களிடம் கொடுக்கப்பட்டவைகள்
லூக்கா 17:21
இதோ, தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே என்றார்.
அங்கே எழுப்புதல் இங்கே எழுப்புதல், இப்போது, கிழக்கிலுள்ள தேசத் திலே இருக்கின்றார், முன்பு மேற்கிலேயுள்ள தேசத்தில் இருந்தார் என்று இன்று மனிதர்கள், மற்றய மார்க்கத்தார் புனித ஸ்தலங்களுக்களை தரிசிப்பதைப்போல, தேவராஜ்யத்தின் கிரியைகளை பார்க்கும்படி பெரு ந்தொகையான பணத்தை செலவழித்து பயணம் செல்கின்றார்கள். கர் த்தருக்கு சித்தமானால், அவர் மனித ர்கள் வழியாக வல்லமையுள்ள கிரி யைகளை நடப்பிப்பார். ஆதி முதல் அப்படியாக அவர் வல்லமையுள்ள கிரி யைகளை நடத்தி வருகின்றார். இன்று உலகத்திலே ஒரு வல்லமையுள்ள அதி சயமான கிரியையை தேவனாகிய கர் த்தர் நடப்பித்தால், அவருடைய நாமத்திற்கு மகிமை உண்டாவதாக! அதனால், கர்த்தர் உங்களை கைவிட்டார் அல்லது உங்களுக்கு கொடு க்கப்பட்ட பொறுப்பு மாறிவிட்டது என்பது பொருளல்ல. எகிப்திலே தம்முடைய ஜனங்களுக்காக, மோசே வழியாக, வியக்கத்தக்க அதிசய ங்களை செய்தார். தம்முடைய வார்த்தைக் கேட்டு அதன்படி நடக்கும் படிக்கு அவர்களுக்கு ஆலோசனை கூறினார். தேவனுடைய கரத்தின் கிரியைகளை பலமுறை கண்டும், ஜனங்கள், தங்கள் இருதயத்தை கடி னப்படுத்திக் கொண்டார்கள். தேவனுடைய வார்த்தையை விசுவாசித்து அவர் சொன்ன காரியங்களை செய்வது அவர்களுக்கு கடினமாக இருந் தது. அதனால், வனாந்திரத்திலே நாற்பது வருடங்கள் அலைந்து திரிந் தார்கள். பிரியமானவர்களே, தேவனுடைய ராஜ்யமானது இதோ, இங்கே என்றும் அதோ, அங்கே என்றும் சொல்லப்படுவதற்கும் ஏதுவிராது, இதோ, தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே என்று கர்த் தராகிய இயேசு கூறியதை நாம் கடந்து நாட்களிலே தியானம் செய் தோம். உங்கள் ஊரிலே பெரும் ஜனக்கூட்டம் திரண்டு வந்திருக்கி ன்றது, நான் அங்கே செல்வேன் என்று ஒரு ஊழியன் தன் வீட்டில் செய் யப்பட வேண்டிய காரியத்தை மறந்து போனால், அவனுடைய எஜமா னனாவன் அவன்மேல் பிரியமாக இருப்பாரோ? ஆவர் உங்களை நம்பி தந்த சிறிய பொறுப்புக்களிலே கண்ணும் கருத்துமாக இருங்கள். சத்திய வேதத்திலே நிலைத்திருங்கள். எனவே, 'நாம் இனி குழந்தை களாயிராமல், மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திர முள்ள போதகமாய் பலவித காற்றினாலே அலைகளைப்போல அடி பட்டு அலைகிறவர்களாகிராமல், அன்புடன் சத்தியத்தைக் கைகொண்டு தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிற வர்களாயிருப்போமாக.'
ஜெபம்:
தேவ ராஜ்யத்தின் புத்திரனாக என்னை ஏற்படுத்திய தேவனே, ஒரு நல்ல உக்கிராணக்காரனாக, நீர் எனக்கு கொடுத்தவைகளை உம்முடைய சித்தப்படி செய்து முடிக்க எனக்கு ஞானமுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - 2 தீமோ 1:14