தியானம் (ஆனி 19, 2025)
ராஜ்யத்தின் நல்ல உக்கிராணக்காரன்
1 கொரிந்தியர் 4:1
இப்படியாக, எந்த மனுஷனும் எங்களைக் கிறிஸ்துவின் ஊழியக்காரரென்றும், தேவனுடைய இரகசியங்களின் உக்கிராணக்காரரென்றும் எண்ணிக்கொள்ளக் கடவன்.
ஆண்டவராகிய இயேசு உயிர்தெழுந்து பரலோகத்திற்கு எழுந்தருளும் நாளிலே, தம்முடைய சீஷர்களை நோக்கி: அன்றியும், யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானம் கொடுத்தான் நீங்கள் சில நாளுக்புள்ளே பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள். ஆகையால் நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் என் னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார். அப்பொழுது கூடிவந்திருந்தவர்கள் அவரை நோக்கி: ஆண்டவரே, இக்காலதிலே ராஜ்யத்தை இஸ்ரவே லுக்குத் திரும்பக் கொடுப்பீர் என்று கேட்டார்கள். அதற்கு அவர்: பிதாவா னவர் தம்முடைய ஆதினத்திலே வைத்திருக்கின்ற காலங்களைளும் வேளைகளையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல. பரிசுத்தஆவி உங்களிடத்தல் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார். ஆம் பிரியமான சகோதர சகோதரி களே, தேவனுடைய ராஜ்யமானது தற்போது பிரதியட்சமாக வரமால், நம் இருதங்களிலே வந்திருக்கின்றது. நாம் அந்த ராஜ்யத்தின் புத்திரர்களாக, ராஜ்யத்திற்குரிய வேலையை செய்யும்படிக்கு, வேண்டிய யாவற்றையும் பிதாவாகிய தேவன் தாமே நமக்கு கொடுத்திருக்கின்றார். ராஜ்யத்தின் வேலைக்காக சகல சத்தியத்திலும் நம்மை வழிநடத்த, சத்திய ஆவியாகிய தேற்றரவாளன் நமக்குள்ளே வாசம் பண்ணுகின்றார். கர்த்தருடைய ராஜ்யம் பிரதியட்சமாக வரும் நாள் உண்டு. ஆண்டவராகிய இயேசு தம்முடைய சீஷர்களுக்கு கூறியது போல, அந்த நாளை எப்போது வரும் என்று அதைக் குறித்து விமர்சித்து, உங்களு க்கு கொடுக்கப்பட்ட நாட்களை விரயப்படுத்தாமல், ராஜ்யத்தின் நல்ல புத்திரர்களாக, தற்போது செய்யப்பட வேண்டிய வேலைகளை செய் வதே நமக்கு ஏற்புடையது. ராஜ்யத்தின் புத்திரர்கள் ராஜ்யத்தின் உக்கிராணக்காரர்கள். அவர்கள் ராஜ்யத்தின் பிரதிநிதிகள். எனவே நாம் ராஜாதி ராஜாவின் நல்ல சட்சிகளாக வாழ வேண்டும். தேவ ராஜ்யம் வருவதாக என்று ஜெபிக்கும் போது, இப்படியாக அந்த ராஜ்யத்தின் தன்மைகள் நம்மில் காணப்படும்படிக்கு நாம் நம்மை ஒப்புக் கொடுத்து ஜெபிக்க வேண்டும். ராஜ்யத்திற்கு ஆகாத காரியங்களை நம்மை விட்டு அகற்றி விடவேண்டும்.
ஜெபம்:
பரலோகத்திலே தேவனே, உம்முடைய ராஜ்யத்தின் உக்கிராணக்காராக என்னை தெரிந்து கொண்டபடியினால் உம்மை ஸ்தோத்தரிக்கின்றேன். அந்த ராஜ்யத்தின் நல்ல உக்கிராணக்காரனாக வாழ பிரகாசமுள்ள மனக்கண்களை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - லூக்கா 17:10