தியானம் (ஆனி 18, 2025)
தேவ ராஜ்யம் எங்களுக்குள்
லூக்கா 11:20
நான் தேவனுடைய விரலினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனு டைய ராஜ்யம் உங்களிட த்தில் வந்திருக்கிறதே.
ஒரு ராஜா தன் ராஜ்யத்தை நல் ஆளுகை செய்யும் போது, தீமைக்கு அங்கே இடமிருக்காது. தீமையானது அதை மேற்கொள்ள முடியாது. ஆதிப் பெற்றோர் செய்த பாவத்தினால், தீமையானது இந்த உல கத்திலே உண்டானது. இருளின் ராஜ்யம் மனிதர்களை ஆண்டு வந்தது. அதன் விளைவாக அநீதியும், அநியா யங்களும், அக்கிரமங்களும் பெரு கிற்று. நித்திய மரணம் மனிதர்களை ஆண்கொண்டது. பாதாளம் மனிதர் களை அடக்கிப் போட்டது. தேவனு டைய ராஜ்யம் இந்த பூமிக்கு வரும் போது, முதலாவதாக, மரணத்தின் கூர் உடைத்து, பாதாளத்தை தோற் கடி த்து, இருளின் அதிகாரத்திலிரு ந்து மனிதர்கள் ஆச்சியமான ஒளிக்கு கொண்டு வரப்பட வேண்டும். தேவ ராஜ்யத்தின் ராஜாவாகிய இயேசு கிறிஸ்து, அதை செய்து முடிப்பதற் காக சாந்தமுள்ளவராக இந்தப் பூமிக்கு வந்தார். ஆனால், அக்காலத் திலே வாழ்ந்து வந்த சிறப்பு குடிமக்களாகிய பரிசேயர், தேவ ராஜ்யத் தைக் குறித்து தப்பான எண்ணங் கொண்டிருந்தார்கள். அக்காலத்திலே தங்களை அடக்கி ஆளும் ரோமர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும். நாட் டிற்கு சுதந்திரம் வர வேண்டும். ஆளுகை தங்களிடத்தில் திரும்ப வேண் டும் என்ற எண்ணமுடையவர்களாக இருந்தார்கள். ஆண்டவராகிய இயேசு பரலோக ராஜ்யத்தைக் குறித்து அநேக உவமைகளை கூறியி ருந்தும், அதற்கு செவி கொடுக்க மனதில்லாதவர்களாக, தங்கள் இருத யத்தை கடினப்படுத்திக் கொண்டு ஆண்டவர் இயேசுவை நோக்கி: தேவனுடைய ராஜ்யம் எப்பொழுது வருமென்று கேட்டார்கள். அவர்க ளுக்கு பிரதியுத்தாரமாக, தேவனுடைய ராஜ்யம் பிரதியட்சமாய் வராது. இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும் சொல்லப்படுவதற்கு ஏதுவிராது: இதோ, தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கின் றதே என்றார். ஆம் தேவ ராஜ்யத்திற்கென்று வேறுபிரிக்கப்பட்ட பிரிய மான சகோதர சகோதரிகளே, இருளின் ராஜ்யத்தின் அதிபதியாகிய பிசா சானவன், உங்களை ஆளுகை செய்ய முடியாதபடிக்கு, தேவ ஆவி யானவர் உங்களுக்குள்ளே வாசம் செய்கின்றார். எல்லா நாமத்திற்கும் மேலாக இயேசுவின் நாமத்தினால், நாம் எல்லா அதிகாரங்களையும், துரைத்தனங்களையும் மேற்கொள்ளும், அதிகாரத்தையும், வல்லமையை யும் பெற்றிருக்கின்றோம். அந்த பாக்கியமானது தேவ ராஜ்யத்தின் ஆளு கை. அது வெளியிலேயல்ல, எங்களுக்குள்ளே ஆளுகை செய்கின்றது.
ஜெபம்:
பராக்கிரமமுள்ள பரலோக தேவனே, உம்முடைய ராஜ்யதின் இரகசியத்தை நான் உணர்ந்து கொள்ளும்படிக்கு, உம்முடைய ஞானத்தை எனக்கு தந்து, என்னை வழிநடத்திச் செல்வதற்காக நன்றி கூறுகின்றேன். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - 1 கொரி 2:12