புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 16, 2025)

எதற்காக அதிகமாக பிரயாசப்படுகின்றீர்கள்

மத்தேயு 6:33

முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்;


நாம் ஜெபத்திற்கு செல்லும் போது, பரலோக பிதா என்று நம் தேவனை அழைப்பதினாலே ஆறுதல் அடைகின்றோம். அவருடைய நாமம் பரிசுத்தம் என்று அறிக்கை செய்து, அந்த அறிக்கையின்படி வேறுபிரிக்கப்பட்ட வாழ்க்கை வாழ ஒப்புக் கொடுக்கும் போது, நம்முடைய வாழ்விலே பெரிதான விடுதலையும், சமாதானமும் உண்டாகின்றது. கடந்த நாட்களிலே இவைகளை குறித்து தியானித்து வந்தோம். இந்த உல கிலே வாழ்கின்ற மனிதர்கள் தேவனிடத்தில் ஜெபிக்கும் போது அவர்கள் எப்படிப்பட்ட தேவைகள் பொதுவாக கூறிக்கொள்கின்றார்கள்? எதைக் குறித்து கவலையடைகின்றார்கள்? எதற்காக அவர்கள் அதிகமாக பிரயாசப்பகின்றார்கள். பொதுவாக மனிதர்கள் தங்கள் அடிப்ப டைத் தேவைகளாகிய உணவு, உடை, உறையுளை நாடித் தேடுகின்றார்கள். தங்களுடையதும் தங்கள் பிள்ளைகளுடைய எதிர்காலத்தை குறித்த கவலையால் மனிதர்கள் மனம் தொய்ந்து போய்விடுகின்றது. இதனால் அவர்கள் மனச் சமாதானத்தை இழந்து, நோய்வாய்பட்டு போய்விடுகின்றார்கள். இவைகளை அடையும்படிக்கு, இரவு பகலாக கல்வி கற்கின்றார்கள். இன்னும் அதிகமாக பிரயாசப்பட்டு, சற்று சேர்த்து வைத்தால், நாளைக்கு தங்களுடைய பிள்ளைகள் தாங்கள்பட்ட கஷ்டங்களை படமாட்டார்கள் என்று எண்ணி, ஓயாமல் உழைக்கின்றார்கள். கல்விக்காக ஞானத்தை கேட்கின்றார்கள். பணத்திற்காக நல்ல வேலை வேண்டும் என்று ஜெபம் செய்கின்றார்கள். வியாபாரம் பெருகு ம்படிககு ஆசீர்வாதத்தை நாடி நிற்கின்றார்கள். இவை யாவற்றையும் பரமண்டலத்திலே இருக்கின்ற நம்முடைய பரிசுத்தமுள்ள பிதா அறியாதிருக்கின்றாரோ? நம்முடைய தேவைகள் இன்னதென்று அவருக்கு தெரி யதோ? எதிர்காலம் அவருடைய கைகளை விட்டு நழுவி சென்று விட்டதோ? பரியமானவர்களே, நம்முடைய பரம தந்தை எல்லாவற்றையும் அறிந்திருக்கின்றார். அவரை இன்னார் என்று அறியாதவர்களே, இவைகளை நாடித் தேடி, பிரயாசப்பட்டு, தங்கள் நிம்மதியையும், தங்களை சூழ இருக்கின்றவர்களுடைய நிம்மதியையும் குலைத்து விடுகின்றா ர்கள். நீங்களோ, முதலாவது தேவனுடைய ராஜ்யத்தை வாஞ்சையோடு தேடுங்கள். தேவ ராஜ்யத்தின் நீதியை நாடுங்கள். ஜெபிக்க செல்லும் போது, கருத்தோடு அதை அறிக்கையிடுங்கள். மிகுதியான யாவற் றையும் நீங்கள் அடைந்து கொள்வதற்கு, பரலோகத்திலே வீற்றிருக் கின்ற நம்முடைய பரம பிதா வழிகளை உண்டு பண்ணுவார்.

ஜெபம்:

பரலோகத்திலே வீற்றிருக்கின்ற பரம தந்தையே, உம்முடைய ராஜ்யத்தைக் குறித்த வாஞ்சை என்னில் பெருகும்படிக்கு, அதன் மேன் மையை உணர்ந்து கொள்ளும் இருயத்தை தந்து வழிநடத்டதிச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - லூக்கா 11:3