புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 15, 2025)

யாருடைய குற்றத்தை மன்னிப்பது?

எபேசியர் 4:32

கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்தது போல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.


ஒரு மனிதனாவன், கிராமத்தின் கூட்டுறவு சங்கத்திலே சில கோதுமை மா மூடைகளை களவு செய்யும் போது பிடிக்கப்பட்டு, விசாரிக்கப்படும் படிக்கு மூப்பர் சங்கத்தின் முன் கொண்டு வரப்பட்டான். அந்த சங்கத்திலே இருந்து மூப்பர் ஒருவர், அவன் எவரையும் அடிக்கவோ, காய ப்படுத்தவோ இல்லை, எனவே அவனுக்கு தண்டனை ஏதுமில்லாமல் அவனை விட்டுவிடும்படி அவனுக்காக பரிந்து பேசிக் கொண்டிருந்தார். அந்த இடத்திலே மூப்பர்கள் மத்தியில் கரு த்து முரண்பட்டதால், மூப்பர் சங்கத் திலே பிரிவு ஏற்படுவது நல்லதல்ல என்பதற்காக, மற்றவர்கள் யாவரும் அவனை மன்னித்து விட்டுவிட இணக்கம் தெரிவித்தார்கள். சுமார், ஒரு மாதத்திற்கு பின், களவெடுத்த மனிதனை மன்னித்து விட வேண்டும் என்று வாதாடிய மூப்பரின் பண்ணையிலே, அதே மனிதன் சென்று ஒரு மூடை நெல்லை களவு செய்யும் போது அகப்பட்டுக் கொண்டான். காரியமானது மூப்பர் சங்கத்திற்கு வந்தபோது, முன்பு அவனை மன்னி த்து விட வேண்டும் என்று கூறிய மூப்பனானவர், அவனை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தார். அதைக் அவதானி த்துக் கொண்ட, சிரேஷ;ட மூப்பனானவர், அந்த மூப்பரை நோக்கி: மற்ற வர்களுடைய பொருளை ஒருவன் களவு எடுத்தால், அது மன்னிக்கப்பட வேண்டும் ஆனால் உன்னுடைய சிறிய பொருளை ஒரு வன் களவு எடுத்தால் அவன் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டுமா? முதலாவது, நீ பொது மன்னிப்புக்காக பரிந்துபேசி மற்றவர்கள் முன்னிலையில் உன்னை நீதிமானாக காண்பிக்க முன்பு, நீ உனக்கு எதிராக குற்றம் செய்தவனை மன்னிக்க பழகிக் கொள் என்று கடிந்து கொண்டார். ஆம் பிரியமானவர்களே, இன்று இப்படிப்பட்ட காரியங்களை, விசுவாச மார் கத்தார் மத்தியிலும் காணக்கூடியதாக இருக்கின்றது. சபை, சபையோர் சார்ந்த எந்த குற்றங்களுக்கும் எதிர்த்து நின்று வாதாடும்படி சில விசுவாசிகள் ஊழியர்கள் எப்போதும் ஆயத்தமுள்ளவர்களாகவே இரு க்கின்றார்கள். ஆனால், தங்களுக்கோ தங்களுடையவர்களுக்கோ எதி ராக செய்யப்படும் குற்றங்களுக்கு எந்த இரக்கத்தையும் காண்பிப்ப தில்லை. ஒருவன் வேறொருவனுக்கு எதிராக குற்றம் செய்யும் போது, குற்றம் செய்தவனை காப்பற்றும்படிக்கு, மற்றவனுக்கு செய்யப் பட்ட அநியாயங்களை மூடி மறைப்பது அன்பு அல்ல, அது அநீதி. எனவே, முதலாவதாக, சொந்தக் கணக்கிலே மன்னிக்க பழகிக் கொள்ளுங்கள்.

ஜெபம்:

நீதியும் நியாயமுமுள்ள பரிசுத்தமுள்ள பரலோக தந்தையே, நான் நீதியை நடப்பிக்கவும், முதலாவதாக என்னுடையதிலிருந்து எடுத்து மற்றவர்களுக்கு கொடுக்க எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ஏசாயா 5:20

Category Tags: