புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 14, 2025)

அன்பில் பரிசுத்தமுள்ளவர்களாகும்படிக்கு...

எபேசியர் 1:4

தமக்குமுன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு,


ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த தகப்பனானவர், தன் பிள்ளைகளை மிக அதிகமாக நேசித்து வந்தார். பிள்ளைகளும் தங்கள் தகப்பனானவரை மிகவும் அன்பு செய்து வந்தார்கள். ஒரு நாள், அவருடை பிள்ளைகளில் ஒருவன், அவன் கல்வி கற்று வரும் பாடசாலையிலே, தன் நண்பர்களோடு சேர்ந்து, குற்றமொன்றை செய்து விட்டான். இது வேதனைகளு க்கு ஆரம்பம் என்று அறிந்து கொண்ட தகப்பனானவர், குற்றம் செய்த தன் மகனானவன் திருத்தப்பட வேண்டும் என்பதற்காக அவனை தண்டித்து, அவன் செல்ல வேண்டிய வழியை அவனுக்கு காண்பித்தார். தான் மிக வும் நேசிக்கும் மகனை தண்டிப்பது தகப்பனானவருக்கு இலகுவான காரி யமாக இருக்கவில்லை. ஆனால், அவன் திருத்தப்பட வேண்டிய இடத் திலே திருத்தப்படாவிட்டால், எதிர்காலத்திலே பாதகமான தீங்கிற்கென்று அவனை ஆயத்தப்படுத்துகின்றவராக இருப்பேன் என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார். பிரியமான சகோதர சகோதரிகளே, பரலோகத் திலே இருக்கின்ற நம்முடைய பரம பிதா அன்புள்ளவர். அதற்கு மாற்று கருத்து ஏதும் இல்லை. அதே வேளையிலே அவர் பரிசுத்தமுள்ளவர். இன்று சில விசுவாசமார்கத்தார், பிதாவாகிய தேவன் அன்புள்ளவர், கிருபை நிறைந்தவர் என்று கூறி, பிள்ளைகள், சகோதரர்கள், விசுவாசிகள், ஊழியர்கள் தவறும் போது கண்டித்து திருத்தப்பட செய்யப்பட வேண்டிய இடத்திலே அவற்றை பாராமுகமாக விட்டு விடுகின்றார்கள். இவை சிறிய தவறுகள், நாங்கள் அதை விட்டுப்பிடிக்க வேண்டும் என்று அவற்றை மூடி மறைக்க எத்தனிக்கின்றார்கள். இப்படிப்ப ட்டவர்கள், சிறிய குற்றம் செய்தவர்களை, பெரிதான பாதகத்திற்குள் விழுத்தும்படிக்கு, அவர்களை பயிற்சிவிக்கின்றவர்களாக இருக்கின் றார்கள். நம்முடைய பரம பிதாவின் அன்பு தூய்மையுள்ளதாக இரு ப்பதால், அவர் குறித்து காலத்திலே, தான் நேசிக்கின்றவர்களை கடிந்து கொண்டு சிட்சிக்கின்றார். சிட்சையின் வேளையிலே, சிலர் முன்னி லையிலே அவமானமடைய நேரிடலாம். அதை தவிர்த்துக் கொண்டால், ஒரு நாள் வாழும் சமூகத்தின் முன்னிலையில் அல்லது ஊரார் முன்னி லையின் அவமானமும் நிந்தையும் அடைய நேரிடலாம். அதாவது, எல்லா சின்னஞ்சிறிய குற்றங்களும் பகிரங்கமாக கண்டிக்கப்பட வேண் டும் என்பது பொருளல்ல, மாறாக, நீதி எது, அநீதி எது, சரி ஏது, பிழை எது என்று கற்பித்து கொடுக்க வேண்டிய இடத்திலே அவற்றை கற்பித்துக் கொடுக்க வேண்டும்.

ஜெபம்:

அன்பில் என்னை பரிசுத்தனாக்க சித்தம் கொண்ட தேவனே, அன்புக்கு எல்லை இல்லை என்று நான் பாவத்திலே வாழாதபடிக்கு, மனந்திரும்பி, நாளுக்கு நாள் பரிசுத்தமடையும்படி என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபிரெயர் 12:5