புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 13, 2025)

ஆராய்ந்து அறிந்து கொள்ளுங்கள்

ஏசாயா 59:1

உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது.


ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த மனிதனொருவனின் வீட்டின் பின் வள விலே ஒரு மரம் இருந்தது. அவன் வீட்டின் அருகிலே இருந்த காட்டுப் பகுதியிலிருந்துவரும் வனவிலங்குகளுக்கு அந்த மரம் வதிவிடமாக இருந்தது. அதனால், அந்த மனிதனுக்கும், அவனுடைய குடும்பத்தின ருக்கும், அயலிலே வாழ்ந்து வந்த குடும்பங்களுக்கும் பெருந் தொல் லையாக இருந்து வந்தது. வனவிலங்குகளின் கழிவுகளும், குப்பைகளும், பெருகிக் கொண்டே இருந்தது. வருடாவருடம் அந்த மரம் வளர்ந்து பெரும் விருட்சம hகிக் மாறிவிட்டது. வனவில ங்குகளினால் உண்டாகும் ஆபத் துக்களும் பெருகிக் கொண்டிருந் தது. எனினும், அதை தறித்துப் போட மனதில்லாதவனாய், தன் வளவை சுத்தம் செய்வதற்கு பெரு ந்தொகையான பணத்தையும், நேர த்தையும் விரயப்படுத்தி வந்தான். இந்நாட்களிலே சில விசுவாச மார் க்கத்தாரும், அந்த மனிதனுக்கு ஒப்பாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இரட்சிப்படைந்து பல ஆண் டுகள் சென்ற பின்பும், பரிசுத்த ஆவிக்காக, அவருடைய வழிநடத்து தலுக்காக, வாரந்தோறும் ஜெபித்து வருகின்றார்கள். இதை ஆண்டா ண்டு காலமாக செய்து வருகின்றார்கள். ஆனால், தங்கள் வாழ்விலே அடிப்படையாக இருந்து வரும், கீழ்படியாமை மற்றும் வன்மம், பகை, கசப்புக்களை விட்டுவிட மனதில்லாமல், அவற்றை பரா முகமாக விட்டு விட்டு, பரிசுத்த ஆவியின் அபிஷேகம் தேவை என்று ஓயாது ஜெபிக் கின்றார்கள். பிரியமான சகோதர சகோதரிகளே, தேவ ஆவியானவரின் வழிநடத்துதலுக்காக நாம் ஜெபிப்பது மிகவும் நல்லதும், அவசிய மானதொன்றாகவும் இருக்கின்றது. ஆனால், ஒருவன் தன் வாழ்விலே இருக்கும் மாம்ச இச்சைகள்வளர்ந்து கொண்டு போவதை அறிந்து கொண்டு, அதைவிட்டுவதற்குரிய வழியை அறிந்திருந்தும் அதை பின் பற்ற மனதில்லாதவனாக, தொடர்ந்து அதிலே வாழ்ந்து கொண்டு, பர லோகத்திலே இருக்கின்ற பிதாவாகிய தேவனை நோக்கி, நீர் பரிசுத் தமுள்ளவர் என்று கூறிக் கொள்ளவதினாலும், வரங்களை தரும்படி வேண் டிக் கொள்ளவததினாலும் அவனுக்கு பலன் என்ன? உங்கள் வாழ்க் கையை ஆராய்ந்து பார்த்து, தேவனுக்கேற்ற வழியிலே நடவுங்கள்.

ஜெபம்:

இருதங்களை ஆராய்ந்து அறிகின்ற தேவனே, வேதனை உண் டாக்கும் வழிகள் என்னிடத்தில் இருந்தால், அவைகளை விட்டுவிட எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து என்னை வழிநடத்திச் செல்வீ ராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபிரெயர் 10:26