தியானம் (ஆனி 12, 2025)
கர்த்தரிடத்தில் மன்னிப்பு உண்டு
ஏசாயா 55:7
துன்மார்க்கன் தன் வழியையும், அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும் விட்டு, கர்த்தரிடத்தில் திரும்பக்கட வன்; அவர் அவன்மேல் மனதுருகுவார்;
'நாம் தேவனுக்கேற்ற பரிசுத்தர்களாக இருக்க வேண்டும்' என்று கூறுவதினால், பறிகாரர், அநியாயக்காரர், விபசாரகாரர், பாவிகள் போன்றவர்கள் தேவனை நோக்கி ஜெபம் செய்ய முடியாதா? அவர்கள் ஜெபம் செய்தால் தேவன் அதை கேட்க மாட்டாரா? நீதிமான் என்று தன்னை கருதிக் கொண்ட பரிசேயனும், பாவிகள் என்று சமுதாயத்தி னால் தள்ளிவிடப்பட்ட ஆயக்கா ரர் குழுவை சேர்ந்த ஒரு மனுஷனும் ஜெபம் செய்யும்படி தேவ ஆலய த்திற்கு சென்றார்கள். ஆனால், வீடு திரும்பும் போது, பாவியென்று கரு தப்பட்ட ஆயக்காரனின் ஜெபமே தேவனுக்கு பிரியமுள்ள ஜெபமாக இருந்தது. அவன் பரிசுத்தவானாக வாழவில்லை. அதனால், அவன் ஆல யத்திற்கு கிட்டே செல்ல பெலனி ல்லாதவனாய், தூரத்திலே நின்று, தன் குற்றங்களினிமித்தம் தன் கண் களை வானத்திற்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித் துக் கொண்டு: தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்று வேண்டிக் கொண்டான். பிரியமான சகோதர சகோதரிகளே, மனந்திரும் புகின்ற எந்த பாவியையும் தேவன் அணைத்து தம்மிடம் சேர்த்துக் கொள்கின்றார். மனந்திரும்பின பாவி, மறுபடியம் பாவ செயல்களிலே போக்கும் வரத்துமாக இருக்க மாட்டான். ஒருவேளை அவன் பாவம் செய்தால், அவன் தன் பாவங்களை அறிக்கை செய்து விட்டுவிட வேண் டும். நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நம க்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப் பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கின்றார். (1 யோவான் 1:9). ஆனால் இன்று ஒளியிலே வாழ்கின்றேன் என்று கூறும் சிலர், இருளின் அதிகாரத்திற்குள் சிறைப்பட்டிருக்கின்றவர்களோடு ஐக்கியமாக இருந்து வருகின்றார்கள். தங்களை நீதிமான் என்று கூறிக் கொள்பவர்கள், அநீதி செய்பவர்களோடு கைகோத்து சம்பந்தம் கலக்கின்றார்கள். தேவனுடைய வீட்டிற்குள் விக்கிரகங்களை கொண்டு வருவதைக் குறித்து நியாயப்படுத்த எத்தனிக்கின்றார்கள். இப்படியாக தேவனை அறிந்தும் துணிகரமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு வரும் ஒருவன், பரமண்டத்திலிருக்கின்ற பிதாவை நோக்கி: உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக என்று கூறும் போது, அந்த அறிக்கையிலே பரம பிதா பிரியப்படுவாரோ? இல்லை. முதலாவதாக அவன் தன் பொல்லாத விட்டுவிட தீர்மானம் செய்து கொள்ள வேண்டும்.
ஜெபம்:
ஒருவரும் கெட்டுபோகாமல் நித்திய ஜீவனை அடைய வேண்டும் என்றும் விரும்பும் தேவனே, நான் எப்போதும் உமக்கு முன்பாக உண்மையுள்ளவனாக காணப்படும்படிக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - எசேக்கியல் 33:11