புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 11, 2025)

தேவனுக்கென்று வேறுபிரிக்கப்பட்டவர்கள்

1 பேதுரு 1:15

உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைக ளெல்லாவற்றிலேயும் பரிசு த்தராயிருங்கள்.


இன்ரநெற் ஊடகங்கள் வழியாக வரும் நெறிகெட்ட வீடியோ பதிவு களை பார்த்து, தகாத வார்த்தைகளை பேசுகின்ற இரண்டு நண்பர்கள், மதுபானத்தை அருந்திய பின்பு, அவர்கள் வாழ்ந்து வரும் வீட்டிற்க ருகே, உத்தமனாக வாழ்ந்து வரும் ஒரு விசுவாசியின் நீதியான வாழ் க்கையைக் குறித்து மேன்மையான பேசிக் கொண்டிருந்தார்கள். அவர் கள் அந்த விசுவாசியின் வாழ்க்கை யைக் குறித்து கூறிய காரியங்கள் உண்மையாக இருந்தபோதிலும், அவர்கள் கூறுகின்ற அந்த உண் மையான வார்த்தைகளால் அவர்க ளுக்கு எந்தப் பலனுமில்லாததும் அவர்கள் வாழ்க்கையிலே அந்த வார்த்தைகள் கருதற்றதுமாக இருந் தது. அதுபோலவே, பரமண்டத்தி லிருக்கின்ற பிதாவை நோக்கி: உம் முடைய நாமம் பரிசுத்தம் என்று எவரும் கூறிக் கொள்ளலாம். அது மாறாத சத்தியம். ஆனால், அந்த வார்த்தையானது, கூறுபவனுக்கு பலனுண்டாக்கும்படிக்கு, அவன் தேவ னாகிய கர்த்தருக்கென்று வேறு பிரிக்கப்பட்டவனாக காணப்பட வேண் டும். கர்த்தருடைய நாமத்தை கூறுகின்றவனெவனும் அநியாயத்தை விட்டு விலகிக் கொள்ள வேண்டும் என்ற வார்த்தையின்படி, நாம் ஜெபம் செய்யும் போது, சகல அநியாயங்களை விட்டு விலக வேண் டும். அக்கிரம சிந்தையோடு ஏறெடுக்கப்படும் ஜெபத்தை தேவன் கேட் கமாட்டார் என்று பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது. நாம் நம்முடைய பிதாவாகிய தேவனுடைய நாமம் பரிசுத்தம் என்று கூறும் போது, நாம் கர்த்தராகய தேவனை நம்முடைய இருதயங்களிலே பரிசுத்தம் பண் ணிக் கொள்ள வேண்டும். அதாவது, நாம் ஒரே நாளிலே முற்றிலும் குற்றமற்ற பூரண பரிசுத்தவானாக மாற வேண்டும் என்பது பொருளல்ல. மாறாக, வெளியரங்கமாக மாத்திமல்ல, இதயபூர்வமாக நாம் வேறு பிரிக்கபட்ட வாழ்க்கைக்கு நம்மை ஒப்புக் கொடுத்து, பரிசுத்தமாகுத லை தேவ பயத்தோடு காத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் முன்னே உங்கள் அறியாமையினாலே கொண்டிருந்த இச்சைகளின்படி இனி நடவாமல், கீழ்படிகிற பிள்ளைகளாயிருந்து, உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறது போல, நீங்களும் உங்கள் நடக்கை களெல் லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள். நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே. (1 பேதுரு 1:14-16). இந்த உலகிலே நாம் பரிசுத்த வாழ்க்கை வாழுபடிக்கு பரிசுத்த ஆவியானவர்தாமே நமக்கு துணை செய்கின்றவராயிருக்கின்றார்.

ஜெபம்:

பரிசுத்த வாழ்வு வாழும்படிக்கு என்னை வேறுபிரித்த தேவனே, இந்த உலகத்திலே என்னை எதிர்க்கும் பொல்லாத சக்திகளோடு, போராடி ஜெயங் கொள்ளும்படிக்கு என்னை உம்முடைய வழியிலே நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 பேதுரு 2:9