புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 09, 2025)

பிரசன்னத்தில் மனநிறைவு

ஏசாயா 6:3

சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது


தீர்க்கதரிசியாகிய ஏசாயா, உசியா ராஜா மரணமடைந்த வருஷத்தில், ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கக் கண்டார். அந்த தரிசனத்திலே: சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த் தரின் வஸ்திரத்தொங்கலால் தேவாலயம் நிறைந்திருந்தது. சேராபீன் கள் அவருக்கு மேலாக நின்றார்கள்: அவர்களில் ஒவ்வொருவனுக்கும் அவ்வாறு செட்டைகளிருந்தன: அவனவன் இரண்டு செட்டைகளால் தன் தன் முகத்தை மூடி, இரண்டு செட் டைகளால் தன் தன் கால்களை மூடி, இரண்டு செட்டைகளால் பற ந்து: ஒருவரையொருவர் நோக்கி: சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத் தும் அவருடைய மகிமையால் நிறை ந்திருக்கிறது என்று கூப்பிட்டுச் சொன்னார்கள். (ஏசாயா 6:1-3). அதற்கொத்ததாக, ஆண்டவராகிய இயேசுவின் சீஷனாகிய யோவான், தேவ வசனத்தினிமித்தமும், இயேசு கிறிஸ்துவைபற்றிய சாட்சியினிமி த்தமும் பத்மு என்னும் தீவிலே கைதியாக விடப்பட்டிருந்த போது,கர்த்த ருடைய நாளில் ஆவிக்குள்ளாகி தேவ தரிசனங்களை கண்டார். அவரு டைய தரிசனத்திலே, பரலோகத்திலே இருக்கும் நான்கு ஜீவன்களும்;, இருந்தவரும், இருக்கிறவரும், வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர் என்று இரவும் பக லும் ஓய்வில்லாமல் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். இதை வெளி ப்படுத்தல் நாலாம் (4) அதிகாரத்திலே வாசிக்கலாம். இந்த உலகிலே வாழ்ந்து கொண்டிருக்கும் தேவனுடைய பரிசுத்தவான்களும், தேவாதி தேவனை பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று தங்கள் துதிகளை தூப மாய் நறுமணமாய் ஏறெடுக்கின்றார்கள். அவர்கள் யாவரோடும், ஆவியிலே இணைந்து நாமும், பரலோகத்திலே வீற்றிருக்கின்ற சர்வ வல்லமையுள்ள எங்கள் பிதாவாகிய தேவனை, பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று துதிப்போமாக. அப்படியாக நாம் கருத்தோடு அறிக்கை யிடும் போது, தேவாதி தேவனுடைய மகத்துவம் நிறைந்த நாமத்தை மேன்மைப்படுத்தி, அவருடைய பிரசன்னத்திலே களிகூரும் பாக்கி யத்தை பெற்றுக் கொள்கின்றோம். குறைவற்ற அந்த பரிசுத்தமானது, நம் வாயின் வார்த்தையினால் உண்டானது அல்ல. அந்த சம்பூரணமான பரிசுத்தம் பரலோக பிதாவின் தொடக்கமும் முடிவுமற்ற தன்மையாக இருக்கின்றது. அந்த சத்தியத்தை நம் வாயினால் அறிக்கையிடுவது நமக்கு கிடைத்த மகா பெரிதான சிலாக்கியமாக இருக்கின்றது.

ஜெபம்:

நேற்றும் இன்றும் என்றும் மாறாத பரிசுத்தமுள்ள தேவனே, உம்முடைய நிகரற்ற நாமத்தின் மகத்துவத்தை அறிக்கையிடும் பெரிதான மேன்மையை எனக்கு தந்ததிற்காக உமக்கு நன்றி செலுத்துகின்றேன். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 4:19-20