புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 08, 2025)

இயேசுவின் நாமத்திலே ஜெபிக்கின்றோம்

யோவான் 16:23

நீங்கள் என் நாமத்தினாலே பிதாவினிடத்தில் கேட்டுக்கொள்வதெதுவோ அதை அவர் உங்களுக்குத் தருவார்.


உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக. தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள். என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு. அப்படியில்லாதிருந்தால், நான் உங்க ளுக்குச் சொல்லியிருப்பேன்;. ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்போகிறேன். நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத் தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங் களை என்னிடத்தில் சேர்த்துக் கொள்ளுவேன். நான் போகிற இடத்தை அறிந்திருக்கிறீர்கள், வழியையும் அறிந்திருக்கிறீர்கள் என்றார்.தோமா அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் போகிற இட த்தை அறியோமே, வழியை நாங் கள் எப்படி அறிவோம் என்றான். அதற்கு இயேசு: நானே வழியும் சத் தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதா வினிடத்தில் வரான். என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறி ந்திருப்பீர்கள்; இதுமுதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரைக் கண்டும் இருக்கிறீர்கள் என்றார். பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும் என்றான். அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண் டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப் படி சொல்லுகிறாய்? நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங் களை என் சுயமாய்ச் சொல்லவில்லை. என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார். நான் பிதாவி லும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்;. அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள். நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும் படியாக, அதைச் செய்வேன். என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கே ட்டாலும் அதை நான் செய்வேன். ஆம் பிரியமான சகோதர சகோத ரிகளே, பரலோகத்திற்கு பகைஞராக இருந்த நம்மை, ஆண்டவராகிய இயேசு வழியாக தம்மோடு ஒப்புரவாக்கினார். ஆதலால், நாம் மீட்பராகிய இயேசுவின் நாமத்திலே, பரலோக தந்தையை நோக்கி ஜெபிக்கும் தகுதியை பெற்றிருக்கின்றோம்.

ஜெபம்:

ஒன்றுக்கும் அருகதையற்றவனாக இருந்த என்னை உம்முடைய பிள்ளையாகும்படிக்கு தகுதிப்படுத்தின தேவனே, உம்மை நோக்கி பார்க்க எனக்கு கிடைத்த விபரிக்க முடியாத இந்த பெரிதான சிலாக்கியத்திற்காக நன்றி. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 15:5