புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 07, 2025)

புதிய மார்க்கத்தின் வழியாக...

எபிரெயர் 10:20

அந்த மார்க்கத்தின்வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறப டியினாலும்,


அக்காலத்திலே,இஸ்ரவேல் புத்திரர் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட மூன்றாம் மாதம் முதலாம் நாளிலே, சீனாய் வனாந்தரத்தில் சேர்ந் தார்கள். மோசே தேவனிடத்திற்கு ஏறிப்போனான்;. கர்த்தர் மலையி லிருந்து அவனைக் கூப்பிட்டு அவனோடு பேசினார். கர்த்தர் மோசேயை நோக்கி: நீ ஜனங்களிடத்தில் போய், இன்றைக்கும் நாளைக்கும் அவர்க ளைப் பரிசுத்தப்படுத்து. அவர்கள் தங்கள் வஸ்திரங்களைத் தோய்த்து, மூன்றாம் நாளைக்கு ஆயத்தப்பட்டிருக்கக்கடவர்கள்;. மூன்றாம் நாளில் கர்த்தர் சகல ஜனங்களுக்கும் பிரத்தியட்சமாகச் சீனாய்மலையின்மேல் இறங்குவார். ஜனங்களுக்குச் சுற் றிலும் நீ ஒரு எல்லை குறித்து, அவர்கள் மலையில் ஏறாதபடிக் கும், அதின் அடிவாரத்தைத் தொ டாதபடிக்கும் எச்சரிக்கையாய் இருங்கள் என்று அவர்களுக்குச் சொல்;. மலையைத் தொடுகிறவன் எவனும் நிச்சயமாகவே கொல்லப் படுவான். ஒரு கையும் அதைத் தொடலாகாது. தொட்டால், நிச்சயமாகக் கல்லெறியுண்டு, அல்லது ஊடு ருவ எய்யுண்டு சாகவேண்டும்; மிருகமானாலும்சரி, மனிதனானாலும்சரி, உயிரோடே வைக்கப்படலாகாது. எக்காளம் நெடுந்தொனியாய்த் தொனி க்கையில், அவர்கள் மலையின் அடிவாரத்தில் வரக்கடவர்கள் என்றார். மோசே மலையிலிருந்து இறங்கி, ஜனங்களிடத்தில் வந்து, அவர்களைப் பரிசுத்தப்படுத்தினான்; அவர்கள் தங்கள் வஸ்திரங்களைத் தோய்த்தா ர்கள். மூன்றாம் நாளுக்குகென்று எல்லா விதத்திலும் ஆயத்தப்பட் டார்கள். மூன்றாம் நாள் விடியற்காலத்தில் இடிமுழக்கங்களும் மின்னல் களும், மலையின் மேல் கார்மேகமும் மகா பலத்த எக்காளசத்தமும் உண்டாயிற்று. பாளயத்திலிருந்த ஜனங்கள் எல்லாரும் நடுங்கினார்கள். (யாத் 19:1-16). இப்படிபட்டவரே பரமண்டலங்களிலே வீற்றிருக்கின்ற நம்முடைய பிதாவாகிய தேவன். அவரே நித்தியானந்தமுள்ள ஏக சக்க ராதிபதியும், ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தாவும், ஒருவராய், சாவா மையுள்ள வரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷ ரில் ஒரு வரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்;. அவ ருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென். இத்தகைய சர்வ வல்லமையுள்ள தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்தில் பிர வேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால், அவரிடம் சேரத்தக்கதான பெரிதான பாக்கியத்தை பெற்ற சந்ததியாக இருக்கின்றோம்.

ஜெபம்:

பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, நான் துர்மனச் சாட்சியற்ற உண்மையுள்ள இருதயத்தோடும், சுத்த ஜலத்தால் கழுவப் பட்ட சரீரத்தோடும், விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் உம்மிடத்தில் சேர கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 தீமோ 6:15-16