தியானம் (ஆனி 05, 2025)
நம்பிக்கையோடு சேருங்கள்
சங்கீதம் 138:6
கர்த்தர் உயர்ந்தவராயிருந்தும், தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார்;
பெரியவர்கள், தலைவர்கள், பிரதானிகள், அதிகாரங்களிலுள்ளவர்களுக்கு கடிதங்கள் எழுதும் போது அல்லது மேடையிலே அவர்களை குறித்து உரையாற்ற செல்லும் போது, கடிதங்களையும், உரைகளையும் ஆரம்பிப்பதற்கு ஒரு ஒழுங்கு முறையுண்டு. அத்தகையவர்களை அழைப்பதற்கு, கனம் பொருந்திய, மதிப்புக்குரிய, வணக்கத்திற்குரிய போன்ற பற்பல வார்த்தைகளை உபயோகிக்கின்றார்கள். அந்த வார் த்தைகளால் பெரியவர்கள், தலை வர்கள், பிரதானிகள், அதிகாரிகள் மக்கள் முன்னிலையிலே கனமடை கின்றார்கள். அத்தகைய கனத்தை செலுத்த தவறுகின்றவர்களுக்கு அசௌகரியமான பின்விளைவுகள் ஏற்படலாம். எனவே, விரும்பியோ விரும்பாமலோ, மக்கள் மதிப்புக் குரிய வார்த்தைகளை கூறி பெரி யோரை அறிமுகப்படுத்துகின்றார்கள். நாமோ அவ்விதமான மனநிலை யோடு சர்வ வல்லமையுள்ள தேவன் அண்டையிலே சேருகின்றவர்கள் அல்ல. பரலோகத்திலே இருக்கின்ற பிதாவே என்று பயபக்தியோடு கூறும் போது, நாம் பிதாவாகிய தேவனை கனப்படுத்துகின்றோம். கன ப்படுத்தும் அந்த வார்த்தைகள் வெறும் வார்த்தைகள் அல்ல. அந்த வார்;த்தைகளிலே ஒரு நம்பிக்கை உண்டு. ஆறுதல் உண்டு. தைரியம் உண்டு. தன் வீட்டிற்கு அருகில், தெருவோரமாக தன் நண்பர்களோடு சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்த சிறு பிள்ளையானது, தனக்கு ஆபத்து ஏற்படப்போகின்து என்று உணரும் போது, எப்படியாக, வேறு எந்த சிந்தனைகளுமின்று, முழு நம்பிக்கையோடு, ஓடிச்சென்று, தன் தந்தையின் அண்டை சேர்ந்து கொள்கின்றானோ, அவ்வண்ணமாகவே நாமும் உன்னதமானவரின் உயர்மறைவிலே சேர்ந்து கொள்ள முடியும். எனவே, நம்முடைய பிதாவாகிய தேவன் இருக்கும் இடத்தை கருத்தற்ற முறையிலே வெறும் வார்த்தைகளாக கூறிக் கொள்ளாமல், கருத்தோடு அவர் அண்டையிலே சேர்ந்து கொள்ள வேண்டும். நான் கர்த்தரை நோக்கி: நீர் என் அடை க்கலம், என் கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன். அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்; அவருடைய சத்தியம் உனக்குப் பரிசையும் கேடகமுமாகும் என்று தேவ பக்தன் கூறியது போல நாமும், மனத் தாழ்மையோடும், முழு நம்பிக் கையோடு பரலோக தேவன் அண்டையிலே தைரியத்தேடு சேர்ந்து கொள்வோம்.
ஜெபம்:
நான் கூப்பிட்ட நாளிலே எனக்கு மறுஉத்தரவு அருளுகின்ற தேவனே, ஆபத்தில் நாளிலே நீர் என்னோடிருந்து, என்னனத் தப்புவித்து, நடத்துவதற்காக உம்மை நன்றியுள்ள இருதத்தோடு ஸ்தோத்தரிக்கின்றேன். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - சங்கீதம் 91:1-16