தியானம் (ஆனி 04, 2025)
நல்வழிப்படுத்தும் நம் பரலோக தந்தை
எபிரெயர் 12:7
நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார்; தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ?
'அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள். நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சிகொடுக்கிறார். நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே. தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே. கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்ப டும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும். ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பி டத்தக்கவைகள் அல்லவென்று எண் ணுகிறேன்.' என்று பரிசுத்த வேதாகமத்திலே வாசிக்கின்றோம். எனவே நமக்கு உண்டாகும் பாடுகள், உப த்திரவங்கள் மத்தியிலே தளர்ந்து போகாமல் அவரையே உறுதியாய் பற்றிக் கொள்ள வேண்டும். இந்த உலக்திலே உள்ள நல்ல தகப்பன்மார் தங்கள் பிள்ளைகளுக்கு உச்சிதமானவைகளை கொடுக்கும்படி அதிகமாய் பிரயாசப்படுகின்றார்கள். ஒரு தகப்பனானவன் ஊரிலுள்ள அயலவர்களுடைய பிள்ளைகள் தவறு செய்யும் போது, ஒருவேளை அவர்களுக்கு புத்திமதிகளையும் ஆலோசனைகயும் வழங்க முயற்சி செய்வார்கள். அவர்களை தண்டித்து, கண்டிக்க அந்த தகப்பனானவனுக்கு அதிகாரமில்லை. ஏனெனில் அயலிலுள்ளவர்கள் அவனுடைய சொந்தப் பிள்ளைகள் அல்ல. ஆனால், தன்னுடைய மகனானவன், தவறு செய்யும் போது, அவனை கண்டிக்க வேண்டிய இடத்திலே கண்டித்து, தண்டிக்கப்பட வேண்டிய இடத்திலே அவனை தண்டிக்கின்றார். அது போலவே, நாம் நன்மைகளின் ஊற்றாகிய பரம பிதாவுக்கு பிள்ளைகளாக இருப்பதால், அவர் தம்முடையவர்களை சிட்சித்து நடத்துகின் றார். அன்றியும், நம்முடைய சரீரத்தின் தகப்பன்மார்கள் நம்மைச் சிட்சிக்கும்போது, அவர்களுக்கு நாம் அஞ்சி நடந்திருக்க, நாம் பிழைக்கத்தக்கதாக ஆவிகளின் பிதாவுக்கு வெகு அதிகமாய் அடங்கி நடக்கவே ண்டுமல்லவா? அவர்கள் தங்களுக்கு நலமென்று தோன்றினபடி கொஞ்சக்காலம் சிட்சித்தார்கள்; இவரோ தம்முடைய பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும்பொருட்டு நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார். எனவே, கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே.
ஜெபம்:
அன்புகூர்ந்து தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கின்ற என் பரலோக பிதாவே, உம்முடைய சிட்சையை அற்பமாய் எண்ணாமலிருக்க எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - எபேசியர் 5:20