புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 03, 2025)

பரம பிதா பாராட்டின அன்பு!

1 யோவான் 3:1

பிதாவானவர் நமக்குப் பா ராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்


கர்த்தருடைய தூதனானவர் கிதியோனுக்கு தரிசனமாகி: பராக்கிரம சாலியே கர்த்தர் உன்னோடே இருக்கின்றார் என்றார். மீதியானருக்கு பயந்ததால், கோதுமையை அவர்களின் கைக்குத் தப்புவிக்கிறதற்காக, ஆலைக்கு சமீபமாய் அதை போரடித்துக் கொண்டிருந்து கிதியோன், கர்த்தருடைய தூதனை நோக்கி: ஆ என் ஆண்டவனே, கர்த்தர் எங் களோடே இருந்தால், இவையெல் லாம் எங்களுக்கு நேரிடுவானேன்? கர் த்தர் எங்களை எகிப்திலிருந்து கொண் டுவரவில்லையா என்று எங்கள் பிதா க்கள் எங்களுக்கு விவரித்துக் சொன்ன அவருடைய அற்புதங்கள் எங்கே? இப் பொழுது கர்த்தர் எங்களைக் கைவி ட்டு, மீதியானியர் கையில் எங்களை ஒப்புக் கொடுத்தாரே என்றான். (நியா 6:12-13). இப்படிப்பட்ட சத்தங்கள் அன்றும், இன்றும் தேவ ஜனங்களுடைய வாயிலிருந்து வெளிப்படுவதை ஆங்காங்கே காண லாம். கிறிஸ்தவ தேசம் என்று கருதப்பட்ட ஒரு தேசத்திலே, சுமார் இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர், சில மனிதர்களால், பாரிய ஆபத்து இழைக்கப்பட்டது. அதனால், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தார்கள். துன்பம், அவமானமும், நிந்தையும் ஏற்பட்டது. அப்பொழுது அந்த தேசத்திலே வாழ்ந்தவர்களில் சிலர், தேவன் எங்கே? அவர் இருக்கின் றாரா? என்று கேட்டார்கள். தேசத்தின் மட்டத்தில் மாத்திரமல்ல, சமூக மட்டங்களிலும், குடும்பங்களிலும், தனி மனிதர்கள் மத்தியிலும் இத்தகைய சத்தங்கள் ஒலிக்கின்றது. விசுவாசிகளுக்கு ஏற்படும் உபத்தி ரவங்கள் மத்தியிலேல, தேவனை விரோதிக் கின்றவர்களும், அவிசுவா சிகளும், உங்கள் தேவன் எங்கே என்று கேட்கும் போது, விசுவாசிக ளின் தேவபக்தியையும், காத்திருப்பையும் சோதனைக்குட்படுத்தப்ப டுகின்றது. அவர்களுடைய தேவன் இப்பொழுது எங்கே என்று புற ஜாதிகள் சொல்வானேன்? நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார்: தமக்கு சித்தமானவைகள் யாவையும் செய் கின்றார். அவர் நேற்றும் இன்றும் மாறாதவர். அவர் இருந்தவரும், இரு க்கின்றவரும், இனிமேலும் வருகின்றவருமாயிரு;கின்றார். அவர் பட்ச பாதம் அற்றவர். அவரிடத்தில் எந்த வேற்றுமையின் நிழலுமில்லை. அவர் ஒரு வரே நீதியுள்ள நியாயாதிபதி. ஒருவரும் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனையடைய வேண்டும் என்பதற்காக தன் ஒரே பேறான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை இந்த உலகிற்கு அனுப்பி, தம்முடைய திவ்விய அன்பை வெளிப்படுத்தினார். இவரே நாம் ஆராதிக்கும் பரமண்டலத்திலே இருக்கின்ற எங்கள் பிதா!

ஜெபம்:

உன்னதத்திலே வாழ்ந்தாலும், தாழ்மையுள்ளவர்களை நோக்கிப் பார்க்கின்ற தேவனே, அளவிடமுடியாத உம்முடைய திவ்விய அன்பிற்காக ஸ்தோத்திரம். எந்த சூழ்நிலையிலும் நான் உம்மில் நிலைத்திருக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 6:9