புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 02, 2025)

தம் பிள்ளைகளுக்கு இரங்குகின்றவர்...

சங்கீதம் 103:13

தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார்.


இந்த உலகிலே வாழும்வரைக்கும் நமக்கு தேவைகள் இருக்கும். அனு தினமும் பலவேறுபட்ட சூழ்நிலைகளுக்குள் தள்ளப்பட்டு, பல சவா ல்களை எதிர்நோக்க நேரிடலாம். சில வேளைகளிலே, நாம் போகும் பாதைகள், தனித்துச் செல்லும் வழிகளாகவும், மிகவும் கடினமா னதாகவும் தோன்றலாம். பிரச்ச னைகள் ஒன்றின்பின் ஒன்றாக அலையலையாக நம் வாழ்க் கைப் படகில் மோதலாம். நடுக்க டலில் செல்லும் படவை, கார்மே கங்கள் சூழ்ந்து, இடிமின்னளோடு வரும் புயலைப் போல, பயங்கர ங்கள் தீடீரென எழுந்துவரலாம். துன்பங்கள் மாத்திரமல்ல, இன்பமான வேளைகளும் நம் வாழ்க்கையிலே வருவதுண்டு. உயர்வோ, தாழ்வோ, இன்பமோ, துன்பமே, மலைகளோ, பள்ளத்தாக்குகளோ இவை யாவற் றின் மத்தியிலும், பரலோகத்திலே இருக்கின்ற சர்வ வல்லமையுள்ள, நிகரற்ற தேவனாகிய கர்த்தரை நோக்கி: என்னுடைய அப்பா பிதாவே என்று கூப்பிடும் பாக்கியத்தை நாம் யாவரும் பெற்றிரு க்கின்றோம். எப்படிப்பட்ட சூழ்நிலைகளின் மத்தியிலும், 'பரலோகத்திலிருக்கின்ற என்னுடைய அப்பா பிதாவே' என்ற ஒரே வசனத்திலேயே நாம் ஆறுதலை கண்டடைகின்றோம். ஒரு தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகின்றது போல, கர்த்தர் தமக்கு பயந்தவர்களுக்கு இரங்குகிறார். (சங்கீதம் 103:13). ஒரு மனிதன் தன் பிள்ளைச் சுமந்துகொண்டு போவதுபோல, தேவ னாகிய கர்த்தர்தாமே தம்முடைய ஜனங்களை சுமக்கின்றவராக இருக்கி ன்றார். (உபாகமம் 1:31). ஊங்கள் தகப்ப னாயிருக்கிற ஒருவனிடத்தில் மகன் அப்பங் கேட்டால், அவனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக் கேட்டால் மீனுக்கு பதிலாக பாம்பைக் கொடுப்பனா? அல்லது முட்டை யைக் கேட்டால், அவனுக்குத் தேளைக் கொடுப்பானா? பொல்லாத வர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடு க்க அறிந்தி ருக்கும்போது, பரம பிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகி றவர்களுக்கு நன்மையான ஈவுகளை அளிப்பது அதிக நிச்சயமல்லவா என்று ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார். கிறிஸ்துவுக்குள் பிரியமான சகோதர சகோதரிகளே, நீங்கள் ஜெபிக்கும் போது, அப்பா பிதாவே என்று சர்வ வல்லமையுள்ள தேவனை நோக்கி கூப்பிடும் மேன்மைய உணர்ந்தவர்களாக, தேவனை நோக்கி கூப்பிடுங்கள். தந்தை தன் பிள்ளைக்கு இரங்காதிருப்பாரோ? அவர் உண்மையுள்ள மனதோடு தம்மை நோக்கி பார்க்கின்ற யாவருடைய வேண்டுதல்களுக்கு பதில் கொடுக்கின்றவராக இருக்கின்றார்.

ஜெபம்:

உண்மையாய் கூப்பிடுகின்றவர்களின் ஜெபத்தை கேட்கின்ற தேவனே, நீர் என்னுடைய பரம பிதா என்பதின் கருப்பொருளை உணர்ந்து, அன்போடும் விசுவாசத்தோடும் உம்மண்டை வர உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 14:13-14