தியானம் (ஆனி 01, 2025)
எங்கள் பரலோக பிதா!
மத்தேயு 6:9
நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது:
எப்படியாக நாம் ஜெபிக்க வேண்டும் என்பதைக் குறித்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்துதாமே நமக்கு கற்றுக் கொடுத்திருக்கின்றார். கர்த்தர் கற்பித்த ஜெபமானது, நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையை குறி த்தது மட்டுமல்ல, இந்த பூவுல வாழ்க்கைக்கு தேவையானவைகள் குறி த்ததாக இருக்கின்றது. அந்த ஜெபத்தை, கர்த்தர் கற்பித்தபடியே, வார் த்தைக்கு வார்த்தை அதே ஜெப த்தை ஏறெடுப்பவர்கள், தேவ னுக்கு ஏற்புடையதாக காணப் படும்படிக்கு, அந்த வார்த்தை களின் கருப்பொருளை உணர் ந்தவர்களாக, ஆவியோடும் உண்மையோடும் அந்த ஜெபத்தை ஏறெடுக்க வேண்டும். கர்த்தர் கற் பித்துக் கொடுத்த ஜெபத்தின் கருபொருளானது, நாம் ஜெபிக்கும் போது என்ன மனநிலையோடு தேவ சமுகத்திற்கு செல்ல வேண்டும் என்பதைக் குறித்து நமக்கு வெளிப்படுத்துகின்றது. இந்த ஜெபத்தைக் குறித்து சற்று தரித்திருந்து இந்நாட்களிலே நாம் தியானம் செய்வோம். கர்த்தர் கற்பித்துக் கொடுத்த ஜெபத்தலே ஆறு (7) காரியங்களை நாம் காணலாம். 1. பரமண்டலங்களிலே இருக்கிற எங்கள் பிதாவே, 2. உம் முடைய ராஜ்யம் வருவதாக, 3. உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிழதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக. 4. எங்களு க்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்கு தாரும். 5. எங்கள் கட னாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங் களுக்கு மன்னியும். 6. எங்களை சோதனைக்குட்படபண்ணாமல், தீமை யினின்று எங்களை இரட்சித்துக் கொள்ளும், 7. ராஜ்யமும், வல்லமை யும், மகிமைiயும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென் என்பவைகளே. இவற்றுள் முதல் மூன்று வசனகளும், தேனாகிய கர்த்தரையும் அவருடைய ராஜ்யத்தையும் குறித்த வசனங்களாயிருக்கின்றது. அடுத்த மூன்று வசனங்களும் எங்கள் தேவைகளை குறித்த வசனங்களாயிருப்பதை காணலாம். கடைசி வசனம், தேவனாகிய கர்த்தர் ஒருவரே ஆராதனைக்குரியவர் என்பதை கூறுகின்றது. மேலே கூறப் பட்ட ஒழுங்கு வரிசையின்படி ஜெபம் செய்யாவிட்டால் தேவன் அதை கேட்க மாட்டார் என்பது பொருளல்ல. தேவன், தேவ ராஜ்யம், தேவ சித்தம் மூன்றும் நித்தியமானவைகள் அவைகள் நம்முடைய வாழ்விலே எப்போதும் முதன்மைபடுத்தப்பட வேண்டியவைகள். பின்பு நம்முடைய அன்றாட தேவைகளை தெரியப்படுத்தி, அவரே அவைகளை செய்து முடிக்க வல்லவர் என்றும், யாவும் அவருடைய கட்டுப்பாட்டிற்குள் இரு க்கின்றது என்பதை அறிக்கை செய்ய வேண்டும்.
ஜெபம்:
பரலோகத்திலிருக்கின்ற எங்கள் பிதாவாகிய தேவனே, ஜெபத்தின் வழியாக, நான் அனுதினமும் உம்மோடு உறவாடும்படி நீர் எனக்கு கொடுத்த இந்த பெரிதான சிலாக்கியத்திற்காக உமக்கு நன்றி. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - யோவான் 16:23