தியானம் (வைகாசி 30, 2025)
உண்மையாய் கூப்பிடுகின்றவர்கள்...
சங்கீதம் 145:8
தம்மை நோக்கிக் கூப்பிடு கிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.
கடந்த சில நாட்களாக ஜெபத்தைக் குறித்து நாம் தியானித்து வருகி ன்றோம். எப்படியாக ஜெபிக்க வேண்டும் என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாமே தம்மை பின்பற்றுகின்றவர்களுக்கு கற்றுக் கொடுத்தார். இந்த ஜெபத்தை கர்த்தர் கற்பித்த ஜெபம் என்று நாம் அழை க்கின்றோம். பரலாக இந்த ஜெபத்தை அநேகர் ஒவ்வொரு நாளும் கூறிக் கொள்வார்கள். இன்னும் சில ரோ, காலை, மாலை, வேளையும் என்று, இந்த ஜெபத்தை தங்கள் சங்கிலி ஜெபத்தின் ஒரு பகுதியான ஒரு நாளிலே பலதடவைகள் கூறிக் கொள்கின்றார்கள். இந்த ஜெபம் மாத் திரமல்ல, கர்த்தர் கூறிய எந்தக் காரி யத்தையும் கருத்தில்லாமல் ஒரு மந் திரம் போலவோ அல்லது அர்த்தமி ல்லாமல் ஒயாமல், மீண்டும் மீண்டும் கூறுறிக் கொண்டிருத்தல் தேவனுக்கு பிரியமான காரியமாக இருக்கின்றது. அதாவது, இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகின்றார்கள்: அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது என்று, ஏசாயா தீர்க்கதரிசி நன்றாய்ச் சொல் லியிருக்கின்றான் என்று கர்த்தர்தாமே, மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கின் றார்கள் என்பதை சுட்டிக் காட்டினார். அருமையான சகோதர சகோதரி களே, கர்த்தர் கற்பித்துக் கொடுத்த மாதிரி ஜெபத்திலே, ஒரு விசுவா சியின் ஆவிக்குரிய தேவைகளைக் குறித்தும், இந்த உலகத்தில் வாழ் வதற்கு தேவையானவைகளைக் குறித்தும் அழகாக குறிப்பிட ப்பட்டு ள்ளது. அந்த ஜெபத்தை நாம் கருத்தோடு ஏறெடுக்கும் போது நம்மு டைய வாழ்க்கையில் அந்த ஜெபம் பலனுள்ளதாக இருக்கும். கர்த்தர் கற்பித்த ஜெபம் என்று கூறும் போது, அது வேதத்திலே குறிப்பிட்பட்ட மற்ற ஜெபங்களைவிட மேன்மையானதென்றோ அல்லது கர்த்தர் கூறிய மற்றய காரியங்களைவிட தரம் குறைந்ததோ என்று பொருளல்ல. நாம் ஏறெடுக்கும் ஜெபமானது, ஒருவேளை உலகில் வாழும் கோடிக்கண க்கான மனிதர்களுக்கும், நமக்கும் மிகவும் ஏற்புடையதாக இருக்கலாம் ஆனால், அந்த ஜெபமானது தேவனுக்கு பிரியமில்லாத தாக இருந் தால், அதனால் உண்டாகும் பலன் என்ன? எனவே, இருதய ங்களை ஆராய்ந்து மனிதர்களுடைய சிந்தையை அறிகின்ற தேவன் முன்னி லையிலே, உண்மையுள்ள இருதயத்தோடு ஜெபம் செய்வோமாக.
ஜெபம்:
இருதயங்களை ஆராய்ந்து மனிதர்களுடைய சிந்தையை இருக்கின்றவைகளை அறிகின்ற தேவனே, ஆவியோடும் உண்மையோடும் ஜெபம் செய்ய எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - எசே 36:26