புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 29, 2025)

தேவனோடுள்ள உறவு அவசியமானது

1 பேதுரு 3:12

தீமைசெய்கிறவர்களுக்கோ கர்த்தருடைய முகம் விரோதமாயிருக்கிறது.


ஆதி அப்போஸ்தலர்களின் நாட்களிலே, எபேசு பட்டணத்திலே, தேவனாகிய கர்த்தர்தாமே தம்முடைய சீஷனாகிய பவுல் ஊடாக விசேஷpத்த அற்புதங்களை செய்தருளினார். அப்பொழுது, தேசாந்தரிகளாய்த் திரிகிற மந்திரவாதிகளாகிய யுதரில் சிலர்பொல்லாத ஆவிகள் பிடித்த வர்கள்மேல் கர்த்தராகிய இயேசு வின் நாமத்தை சொல்லத் துணிந்து: பவுல் பிரசங்கிக்கிற இயேசுவின் பேரில் ஆணையிட்டு உங்களுக்குக் கட்டளையிடுகிறோம் என்றார்கள். பிரதான ஆசாரியனாகிய ஸ்கேவா என்னும் ஓர் யுதனுடைய குமாரர் ஏழு பேர் இப்படிச் செய்தார்கள். பொல்லாத ஆவி அவர்களை நோக்கி: இயேசுவை அறிவேன், பவுலை அறி வேன், நீங்கள் யார் என்று சொல்லி, பொல்லாத ஆவியையுடைய மனுஷன் அவர்கள்மேல் பாய்ந்து, பலாத்காரம் பண்ணி, அவர்களை மேற்கொள்ள? அவர்கள் நிர்வாணி களும் காயப்பட்டவர்களுமாகி அந்த வீட்டை விட்டு ஓடிப் போனார்கள். (அப் 19:13-16). அருமையான சகோதர சகோதரிகளே, பிதாவாகிய தேவன் தாமே, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழா னோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய அவரு க்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறி க்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலாக இயேசுவின் நாம த்தை தந்தருளினார். (பிலி 2:10-11). பேய்கள் நடுநடுங்குகின்ற நாமம் இயேசுவின் நாமம். ஆனாலும், ஒருவன் தான் இரட்சிப்படைய வேண் டும் என்ற எண்ணம் ஏதும் இல்லாமல், தன் கண்போன வழியிலே வாழ் ந்து கொண்டிருக்கும் சில மனிதர்கள், தங்கள் பெயர், புகழ், ஆதய த்திற்காக இயேசுவின் நாமத்தை கூறும் போது, அதனால் அவர்களுக்கு பலன் இல்லை. அதனால், ஆண்டவர் இயேசுவின் நாமம் வலுவிழந்து போவதில்லை, மாறாக, அந்த நாமத்தை கூறுபவனுக்கும், அவனுடைய சொந்த வாழ்க்கைக்கும் எந்த தொடர்பும் இல்லை. அக்கிரம சிந்ஐ தயோடு ஜெபிக்கின்றவர்களுடைய ஜெபத்திற்கு தேவன் செவிகொ டார். தேவனை கண்டடையமாட்டார்கள். ஆண்டவர் இயேசுவே மீட்டு இரட்சிக்கின்றவர் என்று ஒருவன் தன் இருதயத்திலே விசுவாசித்து, அதை தன் வாயினால் உண்மையாக அறிக்கையிடுவானாக இருந்தால், இயேசுவின் நாமம் அவன் வாழ்க்கையிலே பலனுள்ளதாக இருக்கும். இதுபோலவே, இயேசுவின் நாமத்தில், தேவனிடத்தில் ஜெபி க்கின்ற வர்கள், பலனடைவதற்கு, கருத்தோடு தேவ உறவிலே காண்ப்படு கின்றவர்களாக இருக்க வேண்டும்.

ஜெபம்:

உம்மை உண்மையாகத் தேடுகின்ற யாவருக்கும் அருகில் உள்ள தேவனே, நான் உண்மையுள்ள மனதோடு, உம்மை சேவிக்கும்படிக்கு உணர்வுள்ள இருதயத்தை எனக்குத் தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ரோமர் 10:8-9