புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 28, 2025)

நிச்சயமாக பதில் உண்டு

சங்கீதம் 33:20

நம்முடைய ஆத்துமா கர்த்தருக்குக் காத்திருக்கிறது; அவரே நமக்குத் துணையும் நமக்குக் கேடகமுமானவர்.


'பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் அரசாண்ட மூன்றாம் வருஷத்திலே பெல்தெஷாத்சார் என்று பெயரிடப்பட்ட தானியேலுக்கு ஒரு காரியம் வெளியாக்கப்பட்டது; அந்தக் காரியம் சத்தியமும் நீடிய யுத்தத்துக்கு அடுத்ததுமாயிருக்கிறது; அந்தக் காரியத்தை அவன் கவனித்து, தரிச னத்தின் பொருளை அறிந்துகொண்டான். அந்த நாட்களில் தானியே லாகிய நான் மூன்று வாரமுழுவதும் துக்கித்துக்கொண்டிருந்தேன். அந்த மூன்று வாரங்களாகிய நாட்கள் நிறை வேறுமட்டும் ருசிகரமான அப்பத்தை நான் புசிக்கவுமில்லை, இறைச்சியும் திராட்சரசமும் என் வாய்க்குள் போக வுமில்லை, நான் பரிமளதைலம் பூசி க்கொள்ளவுமில்லை. முதலாம் மாதம் இருபத்து நாலாந்தேதியிலே தானியேல் இதெக்கேல் என்னும் பெரிய ஆற்றங்கரையில் இருந்து, அவன் தன் கண்களை ஏறெடுக்கையில், ஜெபத்திற்கு பதில் வந்தது. தேவ தூதன் அவனை நோக்கி: பிரியமான புருஷனாகிய தானியேலே, நான் இப்போது உன்னிடத்திற்கு அனுப்பப் பட்டு வந்தேன்; ஆதலால், நான் உனக்குச் சொல்லும் வார்த்தைகளின் பேரில் நீ கவனமாயிருந்து, கால் ஊன்றி நில் என்றான்; இந்த வார்த் தையை அவன் என்னிடத்தில் சொல்லுகையில் நடுக்கத்தோடே எழுந்து நின்றேன். அப்பொழுது அவன் என்னை நோக்கி: தானியேலே, பயப் படாதே. நீ அறிவை அடைகிறதற்கும், உன்னை உன்னுடைய தேவ னுக்கு முன்பாகச் சிறுமைப்படுத்துகிறதற்கும், உன் மனதைச் செலுத் தின முதல்நாள் துவக்கி உன் வார்த்தைகள் கேட்கப்பட்டது; உன் வார்த் தைகளினிமித்தம் நான் வந்தேன். பெர்சியா ராஜ்யத்தின் அதிபதி இரு பத்தொரு நாள்மட்டும் என்னோடு எதிர்த்து நின்றான்; ஆனாலும் பிரதான அதிபதிகளில் ஒருவனாகிய மிகாவேல் எனக்கு உதவியாக வந்தான்; ஆதலால் நான் அங்கே பெர்சியாவின் ராஜாக்களிடத்தில் தரித்திருந் தேன் என்று கூறி, தானியேல் செய்ய வேண்டியவைகiளா அவன் தானி யேலுக்கு வெளிப்படுத்தினான். ஆம் பிரிமான சகோதர சகோதரிகளே, கிரியைகளை நடப்பிப்தற்கு கர்த்தருடைய கரங்கள் குறுகிப் போகவி ல்லை, நம்டைய வேண்டுதலை கேட்பதற்கு அவருடைய செவி மந்தமா கமில்லை. எனவே, தானியேலைப் போல, செய்தி வரும்வரைக்கும், தவறான தீர்மானங்களை எடுக்காமல், நீடிய பொறுமையோடு, ஜெபத்திலும், வேதத்தின் தியானத்திலும் தரித்திருங்கள். கர்த்தர் குறித்த நேரத்தில் பதிலை அனுப்பி வைப்பார்.

ஜெபம்:

உம்முடைய வார்த்தையை அனுப்பி என்னை விடுதலையா க்கின்ற தேவனே, நீர் முன்குறித்தவைகள் நிறைவேறும்படிக்கு நான் உமக்காக காத்திருக்கும் பெலனை எனக்கு தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ஏசாயா 59:1-2