புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 27, 2025)

கர்த்தருடைய வேளை வரும்வரைக்கும்...

சங்கீதம் 27:14

கர்த்தருக்குக் காத்திரு; அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்; திடமனதாயிருந்து, கர்த்தருக்கே காத்திரு.


தேவனாகிய கர்த்தர்தாமே நம்முடைய தேவைகளை அறிந்திருக்கின்றார். அப்படியானால் நாம் ஏன் ஜெபிக்க வேண்டும். ஏன் தேவ சமுகத்திலே தரித்திருக்க வேண்டும் என்று பல உபத்திரங்களை கடந்து சென்ற தேவ பக்தன் பாடல் வழியாக கூறியதாவது: 'எனக்கு இரங்கும், தேவனே, எனக்கு இரங்கும்; உம்மை என் ஆத்துமா அண்டிக்கொள்ளுகிறது. விக்கினங்கள் கடந்து போகுமட்டும் உமது செட்டைகளின் நிழலிலே வந்து அடைவேன். எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற தேவனாகிய உன்னதமான தேவனை நோக்கிக் கூப்பிடுவேன். என்னை விழுங்கப்பார்க்கிறவன் என்னை நிந்திக்கையில், அவர் பரலோகத்திலிருந்து ஒத்தாசை அனுப்பி, என்னை இரட்சிப்பார். தேவன் தமது கிருபையையும் தமது சத்தியத்தையும் அனுப்புவார். என் ஆத்துமா சிங்கங்களின் நடுவிலிருக்கிறது; தீயை இறைக்கிற மனுபுத்திரருக்குள்ளே கிடக்கிறேன்; அவர்கள் பற்கள் ஈட்டிக ளும் அம்புகளும், அவர்கள் நாவு கருக்கான பட்டயமுமாயிருக்கிறது. தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்தருளும்; உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக. என் கால்களுக்குக் கண்ணியை வைத்திருக்கிறார்கள்; என் ஆத்துமா தொய்ந்துபோயிற்று; என க்கு முன்பாகக் குழியை வெட்டி, அதின் நடுவிலே விழுந்தார்கள். என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது, தேவனே, என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது. நான் பாடிக்கீர்த்தனம்பண்ணுவேன்.' (சங்கீதம் 57:1-7). அலைகளும், புயல்களும், வாழ்க்கை படகில் மோதும் போது, பயமும், திகிலும் உண்டாகின்றது. கார்மேகங்கள் சூழந்து, படவு போகவேண்டிய வழி தெரியாது தத்தளிக்கும் போது, அதில் செல்பவர்கள் செயலிழந்து போய்விடுகின்றார்கள். அந்தத் தருணத்திலே, நாம் தேவனுடைய சமுகத்திலே தரித்திருக்க கற்றுக் கொள்ள வேண்டும். 'சோர்ந்துபோ கிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார். இளைஞர் இளைப்படைந்து சோர்ந்துபோவார்கள், வாலிபரும் இடறிவிழுவார்கள். கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போலச் செட்டை களை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.' (ஏசாயா 40:29-31). எனவே தீங்குகிற்கு தப்பி ஆத்துமாவை காத்துக் கொள்ளும்படிக்கு ஜெபத்திலே தரித்திருங்கள்.

ஜெபம்:

என்னைச் சுற்றிலும் இருக்கிற என் சத்துருக்களுக்கு மேலாக என் தலையை உயர்த்துகின்ற தேவனே, உம்முடைய தகுந்த வேளை வரும்வரை நான் தவறான வழியிலே செல்லாதபடிக்கு என்னை காத்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 18:28-29