புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 26, 2025)

ஜெபத்தின் மேன்மை

கொலோசெயர் 4:2

இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள், ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள்.


'ஒரு பிரச்சனைக்கு தீர்வு காணுவதற்கு, ஒரு வழியல்ல பல வழிகள் உண்டு.' என்று இந்த உலகத்தின் ஞானிகள் கூறிக் கொள்கின்றார்கள். காய்சலும் தலையிடியும் வரும்போது, இந்த மாத்திரையை மாத்திர மல்ல, அந்த மூலிகை மாத்திரமல்ல, அவைகளை அடக்குவதற்கு இன்னும் பல மருந்துகள் உண்டு என்று கூறிக் கொள்கின்றார்கள். ஆனால், மனிதனால் கண்டுபிடிக்கப்ப ட்டதும், பின்விளைவுகள் ஏதும் இல் லாத எந்த ஒரு பொருளையோ, மரு ந்தையோ யாரால் கூற முடியும். இந்த உலக போக்கின் படி ஒரு பிரச்ச னைக்கு பல வழிகள் உண்டு ஆனால் சம்பூரணமான வழி ஒன்றே. அந்த வழி தேவனாகிய கர்த்தரிடத்திலே உண்டு. நம்முடைய வாழ்க்கையிலே தேவை கள் உண்டாகும் போது, நாம் அவைகளை பிதாவாகிய தேவனித்தில் ஜெப த்திலே தெரியப்படுத் துகின்றோம். தேவனாகிய கர்த்தர்தாமே மனித ர்களுடைய யோசனைக ளை ஆராய்ந்து அறிகின்றார். 'என் நாவில் சொல் பிறவாததற்கு முன்னே, இதோ, கர்த்தாவே, அதையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர்.' (சங்கீதம் 139:4) என்று தாவீது ராஜா தேவனுடைய சர்வ வல்ல மையைக் குறித்து பாடியிருக்கின்றார். உங்கள் பிதாவை நோக்கி நீங் கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார். அப்படியானால், நாம் ஏன் ஜெபிக்க வேண்டும்? நமக்கு தேவைகள் உண்டாகும் போது, தேவை கள் மாத்திரமல்ல, தேவைகளோடு சேர்ந்து, யோசனைகளும், யோச னைகளோடு சேர்ந்து கவலைகளும், கவலைகளோடு சேர்ந்து மன அழுத்தங்களும், மன அழுத்தங்களோடு சேர்ந்து நோய்களும் உண்டாகி விடுகின்றது. அந்த பெலவீனமான வேளைகளிலே, கர்சிக்கின்ற சிங்க த்தைப் போல சாத்தானாவன் யாரை விழுங்கலாம் என்று சுற்றித்திரு க்கின்றான். பொதுவாக, தேவனுடைய பிள்ளைகள், தேவைகளை கர்த்தரிடத்தில் தெரியப்படுத்திய பின், காத்திருப்பதில்லை, விசுவாச த்தை அறிக்கையிடுவதில்லை. தங்களுக்குண்டான பெலவீனத்தினாலே, தங்கள் தேவைகளை சந்திக்க தவறாக தீர்மானங்கள் எடுத்து விடுகின்றார்கள். அதை தவிர்த்துக் கொள்வதற்கும். தேவனுடைய குறித்த நேரம் வரும்வரை, தேவ பெலனை பெற்று விசுவாசத்திலே உறுதியாய் இருக்கும்படிக்கும் ஜெபத்தின் வழியாக ஆவியானவர் தாமே நம்மை பெலப்படுத்துகின்றார். சத்திய வார்த்தைகளை நமக்கு நினைப்பூட்டி, நம் மனக்கண்களை பிரகாசிப்பிக்கின்றார்.

ஜெபம்:

பெலப்படுத்தும் தேவனே, இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதி பதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளையும் ஜெயிக்க எனக்கு கிருபை தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 57:1-3