புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 25, 2025)

தேவனுக்கு மறைவானவைகள் உண்டோ?

மத்தேயு 6:32

இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறா ர்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்.


ஒரு தேசத்திலே அரண்டாண்டு வந்த ராஜாவானவன், நீதியுடனும் நியாயத்துடனும் நல் ஆட்சி செய்து வந்தான். ஒரு நாள், அவன் குறிப்பிட்ட ஊருக்கு சென்றபோது, அங்கே ஒரு விதவையானவளை சந்தித்த போது, அந்த ஊரிலே அவளுக்கும், அவளை ஒத்த மற்ற வர்களுக்கும் செய்யப்படும் நியாயமற்ற செயல்களைக் குறித்து ஆச்சரிப்பட்டான். தன்னுடைய ராஜ் யத்;திலே இப்படிப்பட செயல்களும் நடக்கின்றா என்றும், தேவைகளை சந்திக்க முடியாமல் இப்படியாக சிலர் தவிக்கின்றார்களா என்றும் அதிர்சியடைந்தான். இது இந்த உல கத்திலே மனிதர்களின் நல்லாட்சி யின் கீழ் நடைபெறும் சம்பவங் ளாக இருக்கின்றது. ஆனால், பர லோகத்திலிருக்கின்ற நம்முடைய பரம பிதா சர்வ வல்லமையுள்ளவர். அவருக்கு மறைவான இரகசியங்கள் காரியங்கள் ஒன்றுமில்லை. ஒருவனும் அவரிடத்திலே சென்று நாட்டில் நடக்கும் புதினங்களை சொல்ல வேண்டிய அவசியமில்லை. அவருடைய ஆவிக்கு மறைவான காரியம் ஒன்றுமில்லை. அவருடைய திச்சமுகத்திலே நம்முடைய இருதயத்தை ஊற்றிவற்தற்கு எந்தத் தடையுமில்லை. எந்த செயலா ளரோ, மந்திரியோ நம்மை தடைசெய்ய முடியாது. அவரிடம் நம் வேண் டுதல்களை தெரியப்படுத்தும்படிக்கு, அவர் அலுவலில்லாமல் இருக்கும் நேரத்திற்காக காத்திருக்கத் தேவையில்லை. அவருடைய திருக்கு மாரனாகிய இயேசுவின் நாமத்திலே நாம் அவரிடம் சேரும் பாக்கி யத்தை பெற்றிருக்கின்றோம். ஆதலால் தான், 'ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று கவலைப்படாதிருங்கள். இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித் தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்.' எனவே நீங்கள் ஜெபம்பண்ணும் போது, அஞ்ஞானிகளைப்போல வீண் வார்த்தைகளை அலப்பாதேயு ங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படு மென்று நினைக்கிறார்கள். அவர்களைப்போல நீங்கள் செய்யாதிரு ங்கள்; உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்தி ருக்கிறார்.' எனவே தேவைகளை குறித்து கலங்காமல், தேவனுடைய ராஜ்யத்தையும் அதன் நீதியை தேடுங்கள்.

ஜெபம்:

என் நிலைமையை நன்றாய் அறிந்த தேவனே, என் கடந்த காலமும், நிகழ் காலமும், எதிர்காலமும் உமக்கு மறைவாக இல்லை. எனவே, உம்முடைய சமுக்திலே கருத்தோடு சேரும்படிக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 139:4-12