தியானம் (வைகாசி 22, 2025)
உதவியற்ற நேரங்களில்....
யோனா 2:2
என் நெருக்கத்தில் நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்கு உத்தரவு அருளினார்; நான் பாதாளத்தின் வயி ற்றிலிருந்து கூக்குரலிட்டேன், நீர் என் சத்தத்தைக் கேட்டீர்.
தேவனாகிய கர்த்தர்தாமே யோனா என்ற தீர்க்கதரியை நோக்கி: நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், அதற்கு விரோதமாகப் பிரசங்கி. அவர்களுடைய அக்கிரமம் என் சமுகத்தில் வந்து எட்டினது என்றார். அப்பொழுது யோனா கர்த்தருடைய சமுகத்தினின்று விலகியோட தீர்மானித்தான். இறுதியிலே அவன் மீன் வயிற்றிலே இராப்பகல் மூன்றுநாள் இருந்தான். அந்த மீனின் வயிற்றிலிருந்து, யோனா தன் தேவ னாகிய கர்த்தரை நோக்கி விண்ணப் பம்பண்ணி: 'என் நெருக்கத்தில் நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்கு உத்தரவு அருளினார்; நான் பாதாளத்தின் வயிற்றிலிருந்து கூக்குரலிட்டேன், நீர் என் சத்தத்தைக் கேட்டீர். சமுத்திரத்தின் நடுமையமாகிய ஆழத் திலே நீர் என்னைத் தள்ளிவிட்டீர்; நீரோட்டம் என்னைச் சூழ்ந்து கொண்டது. உம்முடைய வெள்ளங்களும் அலைகளும் எல்லாம் என்மேல் புரண்டது. நான் உமது கண்களுக்கு எதிரே இராதபடிக்குத் தள்ளப்பட்டேன்; ஆகிலும் இன்னமும் உம்முடைய பரிசுத்த ஆலயத்தை நோக்குவேன் என்றேன். தண்ணீர்கள் பிராணபரியந்தம் என்னை நெருக்கினது; ஆழி என்னைச் சூழ்ந்தது. கடற்பாசி என் தலையைச் சுற்றிக்கொண்டது. பர்வதங்களின் அடிவாரங்கள் பரியந்தமும் இறங்கினேன்; பூமியின் தாழ்ப்பாள்கள் என்றென்றைக்கும் என்னை அடைக்கிறதாயிருந்தது. ஆனாலும் என் தேவனாகிய கர்த் தாவே, நீர் என் பிராணனை அழிவுக்குத் தப்புவித்தீர். என் ஆத்துமா என்னில் தொய்ந்துபோகையில் கர்த்தரை நினைத் தேன்; அப்பொழுது என் விண்ணப்பம் உமது பரிசுத்த ஆலயத்திலே உம்மிடத்தில் வந்து சேர்ந்தது. பொய்யான மாயையைப் பற்றிக்கொள் ளுகிறவர்கள் தங்க ளுக்கு வரும் கிருபையைப் போக்கடிக்கிறார்கள். நானோவெனில் துதி யின் சத்தத்தோடே உமக்குப் பலியிடுவேன்; நான் பண்ணின பொரு த்தனையைச் செலுத்துவேன்; இரட்சிப்பு கர்த்தருடை யது என்றான். கர்த்தர் மீனுக்குக் கட்டளையிட்டார், அது யோனாவைக் கரையிலே கக்கிவிட்டது.' (யோனா 2:1-10) நாம் சேவிக்கின்ற தேவன்தாமே, எந்த இடத்திலிருந்தும் கருத்தோடு ஏறெடுக்கும் ஜெபத்தை தேவன் கேட்டு, மனம் இரங்கி அதற்கு பதில் கொடுக்கின்றவராயிருக்கின்றார்.
ஜெபம்:
நொருங்குண்டதும், நருங்குண்டதுமான இருதயத்தை புறக்க ணியாத தேவனே, உம்முடைய சமூகத்திலே நான் எப்போதும் மனத் தாழ்மையோடும், கீழ்படிவோடும் காணப்படும் இருதயத்தை எனக்குத் தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - சங்கீதம் 40:1