புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 16, 2025)

வெளியரங்கமான பலன்

மத்தேயு 6:4

அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதாதாமே உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்.


'நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலது கை செய்கிறதை உன் இடது கை அறியாதிருக்கக்கடவது.' என்று எப்படியாக ஒரு விசுவாசியின் தானதர்மங்கள் இருக்க வேண்டும் என்பதை ஆண்டவராகிய இயேசு கூறுயிருக்கின்றார். அப்படியானால், நாம் செய்யும் நற்கிரியைகள் ஒவ்வொன்றும் மிக இரகசிய மாக செய்யப்பட வேண்டுமா? நாம் செய்தவைகள் வேறு வழி யால் வெளிப்பட்டால், அதன் பலன் அடைந்தாயிற்றோ? என்ற கேள்விகள் மனதிலே எழலாம். காரியத்தின் கருப்பொருளானது இன்னதென்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அதாவது, தான தர்மமானது நம்முடைய பெயரும் புகழுக்காவும் செய்யப்படாமல், ஏழை எளியவர்கள் பலனடைய வேண்டும். அவர்கள் வாழ்வு மேம்பட வேண் டும் என்ற நோக்கத்திற்காக செய்யப்பட வேண்டும். ஆண்டவராகிய இயேசுவின் நாட்களிலே, ஒரு சமயம், கொன்னைவாயுடைய ஒரு செவி டனை அவரிடத்தில் கொண்டு வந்து, அவர் தமது கையை அவன்மேல் வைக்கும்படி வேண்டிக்கொ ண்டார்கள். அப்பொழுது, அவர் அவனை ஜனக்கூட்டத்தை விட்டுத் தனியே அழைத்துக்கொண்டுபோய், தம்முடைய விரல்களை அவன் காதுகளில் வைத்து, உமிழ்ந்து, அவனுடைய நாவைத் தொட்டு, வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சுவிட்டு: எப்பத்தா என்றார்; அதற்குத் திறக்கப்படுவாயாக என்று அர்த்தமாம். உடனே அவனுடைய செவிகள் திறக்கப்பட்டு, அவனுடைய நாவின் கட் டும் அவிழ்ந்து, அவன் செவ்வையாய்ப் பேசினான். அதை ஒருவருக்கும் சொல்லவேண்டாமென்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்; ஆகிலும் எவ்வளவு அதிகமாய் அவர் களுக்குக் கட்டளையிட்டாரோ, அவ்வளவு அதிகமாய் அவர்கள் அதைப் பிரசித்தம்பண்ணினான். (மாற்கு 7:32-36) அதுபோலவே, ஒரு விசுவாசியானவன் ஏழை எளியவர்களுக்கு உதவி செய்யும் போது, அதை யாருக்கும் கூற வேண்டாம் என்று திட்டமாக கூறிக் கொண்டான். ஆனால், அந்த உதவியை செய்ய ஏழையொரு வன், தனக்கு கிடைத்த நன்மையினால் மிகவும் மகிழ்ச்சியடைந்து, ஊர் முழுவதுமாக சென்று தனக்கு கிடைத்த நன்மையை அறிவித்தான். அதை யாரும் கட்டுப்படுத்த முடியாது. அவ்வண்ணமாக மனிதர்கள் உங்களை புகழும் போது, தேவன் முன்னிலையிலே உங்களை தாழ்த்தி, நாங்கள் அப்பிரயோஜனமான மனிதர்கள், செய்யவேண்டிய கடமை யைமாத்திரம் செய்தோம் என்று அறிக்கையிடுங்கள்.

ஜெபம்:

எல்லாவற்றையும் அறிந்து தேவனே, எந்த விதமான பெருமையின் வித்தும் எனக்குள்ளே வளர நான் இடங் கொடுங்காமல், உம் சமுகத்திலே என்னை தாழ்த்தி, உம்முடைய சித்தத்தை நிறைவேற்ற கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - லூக்கா 17:7-10