புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 05, 2025)

மன்னிக்க முடியாத குற்றம் எது?

மத்தேயு 7:2

நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்.


திருமணமாகியிருந்த இளம் தம்பதிகளின் முகங்களிலே சந்தோஷத்தை காணாத அவர்களுடைய மேய்பரானவர், ஒரு நாள் அவர்களை சந் தித்து பேசினார். அந்த வேளையிலே கணவனானவன், மேய்ப்பரை நோக்கி: இவள் எனக்கு துரோகம் செய்தாள் அதனால் நான் இவளை தள்ளி விடப் போகின்றேன் என்றான். காரியம் என்னவென்று மேய்ப் பரானவர் அவனுடைய மனைவியி டத்தில் கேட்டார்: பழைய சக ஊழி யரொவரோடு, தகுதியற்ற முறை யிலே தொலைபேசியூடாக சில வார் த்தைகளை பேசிவிட்டேன் என்று கண்ணீரோடு அறிக்கையிட்டாள். அதைக் குறித்து மனம்வருந்திய அந்த இளம் மனைவியானவள், தன் குற்றத்தை மறைக்காமல் அதை அறிக்கையிட்டு, இனி இப்படியான காரியங்கள் எதுவுமே நடைபெறாது என்றும், தன்னை மன்னித்துவிடும் படியாகவும் தன் கணவ னிடம் வருந்திக் கேட்டாள். அவனோ, வேதம் கூறுகின்றபடி, இவள் தன் உள்ளத்திலே பாவம் செய்தாள் என்று, அவன் தன் மனதை கடினப்படுத்திக் கொண்டிருப்பதை உணர்ந்து கொண்ட மேய்ப்பரானவர், அவனை தனியே அழைத்து: மகனே, நீ வேத வார் த்தையின்படி உன் மனைவியானவள் தன் மனதிலே மோக பாவம் செய் தால் என்றும், அதனால் அவளை நீ விவாகரத்து செய்ய வேண்டும் என்று திட்டமாக கூறுகின்றாய். அவள் செய்த குற்றத்தை அவளே ஏற்றுக் கொண்டாள். அவளை தள்ளிவிட உனக்கு சுயாதீனம் உண்டு. அதற்கு முன்னதாக, நான் கேட்கும் கேள்விக்கு, நீயே உன் இருதயத்தில் பதிலை கூறிக்கொள் என்று கூறி, 'நீ திருமணம் ஆகிய நாளிலிருந்து, வேத வார்த்தையின்படி உன் உள்ளத்திலே சுத்தமாக இருந்து வந் தாயா? ஊடகங்கள் வழியாக வரும் தகுதியற்ற வீடியோ பதிவுகளை பார்த்து நீ உன் மனதிலே இச்சித்து கொள்ளவில்லையா? சிலருடைய மீறுதல்கள் வெளியரங்கமாக இருக்கின்றது, வேறு சிலரின் பாவங்களோ இன்னும் அந்தரங்க மாயிருக்கின்றது. ஆனால் தேவனுக்கு மறைவான காரியம் ஒன்றுமில்லை என்று தேவனுடைய நீடிய பொறுமையை குறி த்து, புத்தியை தெளிவிக்கும் ஆலோசனை கூறினார். பிரியமானவ ர்களே, நாம் நிற்பதும் நிர்மூலமாகாதிருப்பதும் தேவனுடைய சுத்த கிரு பையாயிருக்கின்றது. மன்னிப்பும், ஒப்புரவாகுதலும் கிறிஸ்தவ வாழ்க் கையின் அடித்தளமான அம்சங்கள். எனவே, எந்த அளவினாலே நாம் மற்றவர்களை அளக்கின்றோம் என்பதைக் குறித்து நாம் உணர்வுள்ள வர்களாக இருக்க வேண்டும்.

ஜெபம்:

என் இருதயத்தை அறிந்த தேவனே, கோணலும் மாறுபாடுமான இந்த உலகத்திலே, உம்முடைய வார்த்தைகளின் விளக்கத்தை உணர்ந்து, உம்முடைய திருச்சித்தத்தை என் வாழ்விலே நிறைவேற்ற எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபேசியர் 5:22-26