புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 16, 2024)

பரலோகத்திற்குரியவைகளை தேடுங்கள்

கொலோசெயர் 3:2

பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்.


அதிஷ்டம், அதிஷ்டம், அதிஷ்டம் என்று தெருவோருமாக நின்று, ஒரு மனிதனாவனன் அதிஷ்ட இலாப சீட்டை வாங்கும்படிக்கு ஒலிப்பெருக்கி வாயிலாக அவ்விழியாய் போகின்ற யாவரையும் அழைத்தான். நீங்கள் இன்றிரவே செல்வந்தர்கள் ஆவீர்கள், இன்றே உங்கள் அதிஷ்ட நாள் என்று மனிதர்கள் மனத்தை கவ ர்ந்து கொண்டிருந்தான். நூற்றுக் கணக்கானோர் அதை வாங்கினார்கள், ஆனால் ஒரு சிலருக்கே அதிஷ்டம் கிடைத்தது. அதிஷ்டம் கிடைக்காத மற்றவர்கள், மறுநாளிலே அவன்மேல் கோபம் கொண்டார்கள். அதற்கு அவன் அவர்களை நோக்கி: உங்களுக்கு அதி ஷ;டம் இல்லை. திரும்ப முயற்சி செய்யுங்கள் என்று நாள்தோறும் தன் வியாபாரத்தை பெருக்கிக் கொண்டே இருந்தான். நித்திய ஜீவனுக்கென்று அழைக்கப்பட்ட பிரியமான சகோதர சகோதரிகளே, இன்று, சிலர், கர்த்தருடைய அழைப்பையும், தெரிந்து கொள்ளுதலையும் அதிஷ்ட இலாபச் சீட்டு விற்கின்றவர்களைப் போல, விற்கின்றார்கள். உங்க ளுக்கு ஆசீர்வாதம், ஆசீர்வாதம், ஆசீர்வாதம் என்று அழைக்கின்றார்கள். அப்படியாக ஒரு சிலர் காலப்போக்கிலே ஐசுவரியத்தை அடைகின்றார்கள். மிகுதியானவர்கள் அப்படிப்பட்ட போதனைகள் செய்பவர்களை நோக்கி: நாங்களும் உன் வார்த்தையை நம்பி வந்தோமே, ஆனால் எங்களுக்கு ஒன்றும் கிடைக்கவில்லையே என்று கூறினால், அதற்கு பதிலாக: உங்கள் விசுவாசம் இன்னும் போதாது என்று தங்கள் பேச்சினால் சமாளித்து விடுகின்றார்கள். பிரியமானவர்களே, இப்படிப்பட்ட போதனைகளுக்கு எச்சரிக்கையுள்ளவர்களாக இருங்கள். நம்முடைய அழைப்பும் தெரிந்து கொள்ளுதலும் அழிந்து போகின்ற இந்தப் பூமிக்குரியதல்ல. ஒருவேளை, ஒருவனுக்கு கர்த்தர் வரங்களையும், வளங்களையும் கொடுத்தால் அதற்கு காரணங்கள் இருக்கும். ஆனால், அவன் பூமியிலே தனக்கென்று பொக்கிஷத்தை சேர்த்து வைத்து, என் ஆத்துமாவே களிகூரு, உனக்கும் உன் சந்ததிக்கும் வேண்டிய சொத்துக்கள் சேர்த்து வைக்கப்பட்டிருக்கின்றது என்று கூறுபவனாக இருந்தால், அவன் கர்த்தருடைய பார்வையிலே மதிகேடான இருப்பான். கர்த்தர்மேல் தன் நம்பிக்கையை வைத்து வாழ்கின்றவனே பாக்கியவானாக இருக்கின்றான். அவன் ஏழையாக இருந்தாலும், பணக்காரனாக இருந்தாலும், இந்த உலகத்தின் பொக்கிஷங்களை குறித்து ஆசையற்றவனும், அதை கர்த்தருக்காக இழந்து போக ஆயத்தமுள்ளவனுமாக இருப்பான்.

ஜெபம்:

விலைமதிக்கமுடியாத இரட்சிப்பை எனக்கு தந்த தேவனே, உம்முடைய இரட்சிப்பை இம்மைக்குரிய அற்பமான அழிந்து போகின்ற இந்த உலக காரியங்களுக்கு ஒப்பிடாமல் இருக்க உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - மத்தேயு 6:19