புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 15, 2024)

கிறிஸ்துவுள்குள் ஜெயங்கொள்ளுகின்றவர்கள்

வெளிப்படுத்தல் 3:21

ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடே கூட உட்காரும்படிக்கு அருள் செய்வேன்


பரிசுத்த வேதாகமத்திலுள்ள கடைசி நூலாகிய வெளிப்படுத்தின விசேஷத்திலே, சபைகளின் நிலைமைகளையும், அவர்கள் செய்ய வேண்டிய காரியங்களையும் குறித்து ஆண்டவராகிய இயேசு கூறியவற்றை இந்நாட்களிலே தியானித்து வருகின்றோம். அந்த ஆலோனைகள் இன்று நமக்குரியதாக இருக்கின்றது. லவோதிக்கேயா சபையோர் உலக அளவுகோலின்படி ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்ற பெயரை உடையவர்களாகவும், கிறிஸ்துவினுடையவர்கள் என்று காண்பிக்கும் உல கத்தினால் உண்டான விலையுயர்ந்த வஸ்திரங்களுடையவர்களாவும், மாம்ச கண்கள் தெளிவுடையவர்களாவும் தெளிவுள்ளவர்களாவும் காணப்பட்டார்கள் என்பதை கட ந்து நாளிலே பார்த்தோம். இவைகளில் ஒன்றும் ஒரு சபையின் ஆவிக்குரிய வளர்ச்சியை காண்பிப்பதில்லை. ஆண்டவராகிய இயேசு அவர்களை நோக்கி: 'நீ ஐசுவரியவானாகும்படிக்கு நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும், உன் நிர்வாணமாகிய அவலட்சணம் தோன்றாதபடிக்கு நீ உடுத்திக்கொள்வதற்கு வெண்வஸ்திரங்களையும் என்னிடத்திலே வாங்கிக்கொள்ளவும், நீ பார்வையடையும்படிக்கு உன் கண்களுக்குக் கலிக்கம்போடவும் வேண்டுமென்று உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன் என்றார். 'அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்.' என்று பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது. அந்த சபையோர், பொன்னைப் பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்ற விசுவாசத்திலே வளர வேண்டியதாயிருந்தது. உலகத்தினால் உண்டான விலையுயர்ந்த வஸ்திரங்களினால், மதப்பற்றுள்ளவர்கள் என்று தங்களை அலங்கரித்து உலகத்திற்கு காண்பிப்பதைவிட, இரட்சகர் இயேசுவின் இரத்தத்தினால் கழுவப்பட்ட வெண் வஸ்திரத்தை தரித்தவர்களாக காணப்பட வேண்டும். மாம்ச கண்கள் தெளிவாக இருப்பதைவிட, தேவ சித்தத்தை உணர்ந்து, அவர் வழியிலே நடப்பதற்கு பிரகாசமுள்ள மனக் கண்கள் வேண்டும். அந்த சபையோருக்கு மட்டுமல்ல, நாமும் இந்த உலக ஆசீர்வாதங்களினாலும், வெளித்தோற்றத்தின்படி மாத்திரம் நாம் கிறிஸ்தவர்களாக இருக்காதபடிக்கு, கிறிஸ்துவுக்குள் இந்த உலகத்தை ஜெயங்கொள்ளின்றவர்களாக முன்னேறிச் செல்வோமாக.

ஜெபம்:

பரலோக தேவனே, விசுவாசித்தில் வளர்ந்தவர்களாவும். கறைபடாத வெண்வஸ்திரம் தரித்தவர்களாவும், வஞ்சிகப்பட்டுபோதபடி பிரகாசமுள்ள மனக்கண்களையுடையவர்காளவும் வாழ கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எபே 1:17