புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 09, 2024)

சத்திய மார்க்த்திலே நடவுங்கள்

ரோமர் 2:4

அல்லது தேவதயவு நீ குணப்படும்படி உன்னை ஏவுகிறதென்று அறியாமல், அவருடைய தயவு பொறுமை நீடியசாந்தம் இவைகளின் ஐசுவரியத்தை அசட்டை பண்ணுகிறாயோ?


தேவ பக்தியின் வேஷத்தை தரித்து, தங்கள் பொருளாசையை, தேவ ஆசீர்வாதம் என்று பிரசங்கித்து, விசுவாசிகளை வஞ்சிக்கின்றவர்கள், சத்திய மார்க்கத்தைவிட்டு, பின்வாங்கிப் போய் மறுபடியும் மனந் திரும்பாமல், மனப்பூர்வமாக தங்களை பாவத்திற்கு ஒப்புக் கொடுத்து வாழ்கின்றவர்கள் தண்டனைக்கு தப்பார்கள் என்று பரிசுத்த வேதா கமம் தெளிவாக கூறுகின்றது. நாம் ஏன் இதை இந்நாட்களிலே தியானிக்கி ன்றோம்? பிரியமானவர்களே, நீங் கள் ஒருமுறை மனம்திரும்பினால் போதும், என்றும் அதன்பின்னர் உங் கள் வாழ்வு எப்படியாக இருந்தாலும், உங்களுக்கு நித்திய ஜீவன் நிச்சயம் என்று பிரசங்கித்து வருகின்றவர்கள் பெருகிக்கொண்டிருக் கின்றார்கள். நாம் கற்றுக் கொண்ட சத்தியத்திலே உறுதியாய் தரித்திருக்கும்படிக்கு இந்த மாதத்திலே, நாம் பரிசுத்த வேதாகமத்திலிருந்து சில வார்த்தைகளை இந்நாட்களிலே தியானம் செய்வோம். 'கள்ளத்தீர்க்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங் களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் கேட்டு க்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழைய ப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள். அவர்க ளுடைய கெட்ட நடக்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள்; அவர்கள் நிமித்தம் சத்தியமார்க்கம் தூஷிக்கப்படும். பொருளாசையுடையவர்களாய், தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுவார்கள்; பூர்வகாலமுதல் அவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆக்கினை அயர்ந்திராது, அவர்களுடைய அழிவு உறங்காது என்று பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது. (2 பேதுரு 2:1-3). ஆம் பிரியமா னவர்களே, இப்படிப்பட்டவர்களை அநேகர் பின்பற்றுவார்கள். ஏனெனில், அது விசாலமானதும், இலகுவானதும், உலகத் தோடு ஒத்து வாழ் வதற்கு ஏற்புடைய உபதேசமுமாயிருக்கும். அழிவிலிருந்து மீட்க்கப்பட்ட நாம், மறுபடியும் அழிவுக்குத் திரும்பாமல், நித்திய ஜீவனைக் குறித்து போதிப்பவர்களுடைய வார்த்தையை கேட்போமாக. கொடுக்கப்பட்ட கிருபையின் காலத்திலே, மேலானவைகளை தேடுவோமாக.

ஜெபம்:

பரிசுத்தமுள்ள தேவனே, சத்திய மார்க்கமானது என்னிமித்தம் தூஷிக்கப்படாதபடிக்கு, நான் தந்திரமான பொருளாசை சார்ந்த வேதப்புரட்டலுக்கு இடங்கொடுக்காதபடிக்கு பிரகாசமுள்ள மனக்கண்களை தந்து வழி நடத்தி செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எபிரெயர் 10:25-27