புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 08, 2024)

பின்னிட்டு விழுந்து போகதபடிக்கு...

2 தீமோத்தேயு 3:14

நீ கற்று நிச்சயித்துக்கொண்டவைகளில் நிலைத்திரு


ஒரு சமயத்திலே தேவ ஊழியர்களாகிய பவுல் மற்றும் லூக்காவோடு சேர்ந்து ஊழியம் செய்து வந்த தேமா என்னும் ஊழியக்காரனானவன், ஊழியராகிய பவுல் பல நெருக்கங்கள் மத்தியிலே இருக்கும் வேளையிலே, அவரை கைவிட்டு விட்டு, சென்று விட்டான். அவன் இந்த உலகத்தின்மேல் ஆசை வைத்ததால் பின்வாங்கிப் போனான். பரலோகத்தின்மேல் வாஞ்சை வைத்து, இந்த உலக ஆசைகளை துறந்து ஊழியத்திற்கு சென்றவன், இப்போது, பரலோகத்தின் மேலுள்ள வாஞ் சையை துறந்து, பிசாசின் பிடியிலிருக்கும் இந்த உலகத்தின் மேல் ஆசை வைத்து பின்வாங்கிப் போனான். இன்றைய நாட்களிலே, சிலர், ஒருமுறை மனந்திரும்பினால் போதும், அதன்பின்பு, என்ன நட ந்தாலும் பரவாயில்லை, உனக்கு நித்திய ஜீவன் கிடைக்கும் என்று பிரசங்கித்து வருகின்றார்கள். ஆதியிலே நல்மனதோடு பரலோகம் நாடிச் சென்ற சிலர், பாதியிலே பின்வாங்கி இந்த உலகத்தின் ஆசையினால் இழுப்புண்டு போய்விடுவதைக் காண்கின்றோம். ஊழியர், விசுவாசிகள் என்று நாம் வகைப்படுத்திப் பேசினாலும், நாம் யாவரும் விசுவாசிகளாகவே இருக்கின்றோம். ஊழியர்கள் என்று அழைக்கப் படுகின்றவர்களும், விசுவாசிகள் என்று அழைக்கப்படுகின்றவர்களும், பின்வாங்கி உலகத்தை பின்பற்றி செல்லுகின்றதை குறித்து அநேக திருஷ்டாந்தங்களை வேதத்தில் காண்கின்றோம். சத்தியத்தை விட்டு விலகி, உலகத்தின் போதனைகளை போதிக்கின்றவர்களை கள்ளப் போதகர்கள் அல்லது கள்ளத் தீர்க்கதரிசிகள் என்று வேதம் வகையறுத்துக் கூறுகின்றது. கள்ளப் போதகர்களாக இருப்பவர்கள் ஆரம்பத்திலிருந்து அப்படியாகவே மனிதர்களை வஞ்சிக்கின்றவர்களாக இருக்கலாம். அல்லது தேமாவைப் போல, பாதி வழியிலே இழுப்புண்டு போயிருக்கலாம். அவர்கள் மனந்திரும்பி, கர்த்தரித்தில் திரும்பாத பட்சத்தில், அவர்கள் கள்ளப் போதகர்களாகவோ அல்லது கள்ளத் தீர்க்கதரிசிகளாவோ இருப்பார்கள். அவர்கள் தண்டனைக்கு தப்பார்கள் என்று அவர்களின் முடிவை குறித்து பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது. பிரியமானவர்களே, கற்றுக் கொண்டவைகளிலே உறுதியாய் நிலைத்திருங்கள். பக்க வழியாய் நுழையும் சிலர், இலகுவான வஞ்சிக்கும் போதனைகளோடு உங்களை வஞ்சிக்கும்படி வருவார்கள். நீங்களோ அந்த கண்ணிக்குள் அகப்படாதபடிக்கு, ஜெபத்திலும், வேதத்தின் தியானத்திலும் தரித்திருங்கள்.

ஜெபம்:

அன்பின் தேவனே, பொருளாசையுடையவர்களாய், தந்திரமான வார்த்தைகளால் நான் சத்திய மார்க்கத்தைவிட்டு விலகி போகாதபடிக்கு, விழிபுள்ளவனாக வாழ எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 2 பேதுரு 2:1-3